Saturday, January 13, 2018

ஆண்டாள்..

ஆண்டாள் சர்ச்சையில்... பெண் தான் மீண்டும் மீண்டும் பேசு பொருளாக்கப் படுகிறாள். வினையும், எதிர்வினையுமாக பெண்ணே மீண்டும் மீண்டும் இழிவு படுத்தப் படுகிறாள். ஆண்டாள் பேசியது காமம் அல்ல. அது ஜீவாத்மா - பரமாத்மா ஆன்ம பொருளில் வருகிற concept. இந்து ஆன்மீகத்தின் உச்சம். வழிபாட்டு தளங்களான கோவில்களில் காணக் கிடைக்கும் கலவியல் சிற்பங்களும் இதையே உணர்த்துகின்றன. அடிப்படைகள் புரிந்தவர்களுக்கு இதை விளக்க வேண்டிய அவசியம் இல்லை... சமூக ஆர்வலர்..? #பானுகோமஸ். .. வைரமுத்துவின் ஆண்டாள் வேறு ஒரு தளத்திற்கு கொண்டுபோக முயற்சிக்கிறார்கள் அதாவது பெண்ணை இழிவுபடுத்திவிட்டார் என்கிற ரீதியில் பேசுகிறார்.. ஆண்டாளுக்கு போராடுகிறவர்கள் யாரென்று முதலில் கவனிக்கவேண்டும்.. இவர்கள் யாருமே தேவதாசி முறையை ஒழிக்கவேண்டுமென சொன்னவர்கள் அல்ல அதோடு தேவதாசி முறையை கொண்டுவரவேண்டுமென சொல்பவர்கள் அது ஒழுங்குசார்ந்ததென சப்பை கட்டுபவர்கள் தெய்வப்பணியென பேசி திரிந்தவர்கள்.. குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்களே தேவதாசியாய் இருக்கவேண்டுமென சொல்லி திரிந்தவர்கள்..ஆனால் ஆண்டாளுக்காக வருவதன் நோக்கம் தெய்வபக்தியெல்லாம் இ்ல்லை ஆண்டாளை அவர்கள் பிராமணராக கருதுவதால் இந்த போராட்டங்கள் .. சொன்னவர் யாரென்று பார்த்து திராவிட இயக்கத்தை சேர்ந்தவன் கடவுள் மறுப்பாளன் என்பதால் கொந்தளிக்கிறார்கள்.. இவர்களுக்கு தமிழ்மேல் பாசமெல்லாம் இல்லை அப்படி இருந்திருந்தால் தமிழை நீச பாஷையென்ற காஞ்சி காமகோடிக்கெதிராக போராடியிருக்கவேண்டும்.. அப்போது திகுப்பாவை நியாபகம் வரவில்லையா.. இந்து கடவுள் கிரிமினல்கள் என்று சொன்ன சங்கரராமன் கொலைவழக்கில் கைதுசெய்யபட்டு விடுதலையான ஜகத்குரு..? ஜெயேந்திரருக்கு எதிராக போராடியிருக்கவேண்டும்.. இதிலிருந்தே தெரிகிறது வர்ணாசரமம் .. ஆண்டாள் பேசியது காமம் அல்ல என்கிறார்.. காமம் அழுக்கென்றோ கெட்டவிடயமாகமென்றோ.. தீட்டென்றோ நாம் சொன்னோமா... அல்லது வைரமுத்து சொன்னாரா.. அகம் மூழ்கி ஆழ்துளையிட்டு அரும்பி வரும் அன்பின் பெருக்கே காமம்.. அதில் மூழ்குதல் அழகு .. அதில் பரமானந்தம் அடைவது பேரழகு .. பிறகு ஏன் கொச்சை படுத்துகிறீர்.. காமத்தை கெட்டவார்த்தையாக்கியதால் பானு கோமஸ் வகையறாக்காள் அசிங்கம் கெட்டென்கிறது.. கோவில் சிற்பங்கள் உணர்த்துவது இதுதான் என்கும் போது ஏன் வீண் பாய்ச்சல் சொன்னவனை பார்க்கிறீர்.. சொன்னதை அல்ல .. பார்பனர்கள் தெருவில் இறங்கி போராடுகிறார்கள்.. தமிழர்களின் வாழ்வாதார பிரச்சனைக்களுக்கோ.. ஏழை பிராமணன் சங்கரராமன் கொலையுண்ட போதோ..(அப்போது திமுகதான் போராட்டம் செய்தது அதன் விளைவே ஜெயேந்திரர் கைதானார்) இந்து கடவுள்களை கிரிமினல் என ஜெயேந்திரர் சொன்னபோதோ வந்திருக்கிறார்களா.. திருப்பாவைக்காக வரவில்லை ..தமிழ் அவர்களை பொறுத்தவரை நீசபாஷை ..ஆனால் அவர்களை தேவதாசி என்பதா என வெளிவருகிறார்கள்.. மற்றவர்களை சொல்லும் போது என்னானது..?.. .. வைரமுத்துவிற்கு ஆதரவாக ஆசிரியர் தளபதி வைகோ போன்றவர்கள் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்கள் எந்த மதத்தை புண்படுத்துவதல்ல எமது கொள்கை என்கிறார் தளபதி. ஆம் அண்ணா அன்று சொன்ன அதே வாசகம் பிள்ளையாரை உடைக்கவும் மாட்டோம் கும்பிடவும் மாட்டோம்.. ஆனால் .. எதிர்கருத்து சொல்வோரை கொல்லுகிற பாசிசவாதிகளுக்கெதிராக இருப்போம்.. இலக்கியவாதிகளுக்கு ஆதரவாக இருப்போம்.. கருத்திற்கு உடன்படவில்லையெனில் மாற்று கருத்தை சொல்லுங்கள்... யாரையும் புண்படுத்து அல்ல நோக்கமென்ற பிறகும் வரிந்து கட்டுவதை ஏற்கமுடியாது மத ஜாதி கலவரத்திற்கு வித்திடுவதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது .. .. Aalanci Spm

No comments:

Post a Comment