Sunday, January 7, 2018

திமுக...

எந்த கொம்பனாலும் தொட்டுபார்க்க முடியாது தளபதி.. .. சிறிய சுணக்கமும் தோல்வியு ம் கண்டவரையும் பேசவைத்திருக்கிறது.. ரஜினி கடைசி அத்தியாயத்தை எழுதுவாராம்.. முதலில் அவரின் கொள்கையை சொல்ல சொல்லுங்கள் பிறகு தேறுவாரா என பார்ப்போம்.. .. நிறைய பேரை கொம்பு வீசி அனுப்பி பார்த்துவிட்டீர்கள் ஆனால் பாருங்கள் எல்லா புயல்மழைக்கு தாக்குபிடிக்கிறது இந்த ஆலமரம் . எப்படியென்று அறிந்ததுண்டா.. மூட்டைப்பூச்சியைப்போல நசுக்குவேனென்ற ராஜாஜியிடமும் 6000 அடி பள்ளத்தில் புதைத்துவிடுவேன் என்ற பக்தவச்சத்தலையிடமும் கேட்டு தெரிந்துக்கொண்டிருக்கலாம்.. பாவம் பொன்னர் என்ன செய்வார் அப்பச்சியை அரை அம்மணமாகவிட்டவனிடமே சொரணையற்று காலடி கிடப்பதால் ஒன்றும் புரியவில்லை.. தோல்விகள் ஒன்றும் புதிதல்ல அது போல் வெற்றியும்.. என்று புரியவில்லை .. எங்களை வடிவமைத்த பேராசான் பெரியாரே ராஜாஜியோடு இணைந்து களம் கண்டு வெற்றிபெற்றவுடன் தந்த முதல் அறிக்கையில்.. நான் தோற்றுவிட்டேன் பார்பான் வெற்றிபெற்றுவிட்டான்.. இதற்குமுன்பு இரண்டுமுறை தோற்கடித்திருக்கிறேன் .. என்னிடம் பொறுப்பை ஒப்படைத்துவிடுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன்.. பார்பானை எப்படி தோற்கடிக்கவேண்டுமென எனக்கு தெரியுமென்றார்.. .. வெற்றி பெற்றவுடன் அண்ணா நேராக பெரியாரைதான் போய் பார்த்தார்.. ராஜாஜியோ என்னை ஏமாற்றிவிட்டீர்கள் என்றபோது காலமெல்லாம் எம் இனத்தை ஏமாற்றி வருகிறீர்களே நான் இரண்டு தினம் உங்களை ஏமாற்ற கூடாதா.. என்றார்.. பேரறிஞர் அண்ணா.. அப்போது பெரியார் ஒன்றை சொன்னார்.. முன்னேற்ற கழகத்திற்கு எதிர்க்கட்சிகளால் ஆபத்துவராது உட்கட்சி பூசலால் தான் வரும்..என்றார் அதைப்போலவே எம்ஜிஆரால் வந்தது.. மாணவர்களுக்கு இந்த அரசுக்கு எந்த கேடும் வராமல் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.. இல்லையென்றால் இந்த ஆட்சி போனால் அடியோடு நிலைமை மாறிவிடும்.. அப்புறம் மனுநீதிபடிதான் ஆட்சி நடக்கும் என்றார்.. எத்தனை தொலைநோக்கு பார்வை.. பெரியார் சொன்னதுதான் நடந்தது.. மகோரா எல்லா நீதிகளையும் மீறினார் மக்கள் கவர்ச்சியை மட்டுமே நம்பினால் போதுமென நம்பவைத்ததால் எத்தனை இழிவு அது இன்றும் தொடர்கிறதே.. ஆனாலும் பெரியாரை மறந்க ஒன்றை (எம்ஜிஆர்) மகோராவாலேயே நடத்த முடியவில்லை காரணம் அடித்தளத்தை மிகபலமான சமூக நீதியால் அமைத்திருந்தார் பெரியார் .. வெற்றிடம் என்ற சொல்லை சமீபகாலமாக ஊடகங்களில் பேச வைக்கபடுகிறது.. மொத்த வாக்காளர்களில் .. மூன்றில் இரண்டு பங்கை அதிமுக திமுக பெறுகிறது.. இவர்களை இல்லாதாக்க போவதாக சொல்வது அவர்களுக்கே வேடிக்கையாக தெரியவில்லை இரு பெரும் கட்சிக்கும் படுதோல்வியையும் மிகப்பெரிய வெற்றியும் பெற்றிருக்கின்றன்..மற்றவர்கள் இரு கட்சிகளை அரவணைக்காமல் போனால் இருக்குமிடமே தெரியாமல் போனதுதான் மிச்சம்.. சாதியும் மதமும் இங்கே எடுபடாது மட்டுமல்ல இருக்கிற இடமே தெரியாமல் அழித்துவிடுமென்பதற்கு பாஜகவும் பாமகவுமெ சான்று .. இன்றைக்கு இருந்த இடம் தெரியாதவனெல்லாம் துள்ளி குதிக்கிறான்.. திமுகவை ஒழிக்கவேண்டுமென கங்கனம் கட்டிக்கொண்டு செயல்படுகிறான்.. ஆரியர் சூழ்ச்சி இரையாகி மகோரா எனும் கெடுதி தொடங்கி வைத்த அலங்கோலங்களை எல்லாம் தனியொருவராய் நின்று இந்த தமிழ் மக்களை காத்துவந்த கலைஞர் .. உடல் நலிவுற்றவுடன் திமுகவை முடிந்தது பாரென எக்காலமிடுகிறார்கள் விவரகேடுகள்.. .. எம் பேராசானின் கைதடி கொண்டு வீறுநடை போடுவோமென அறியாமல் போன அறிவிலிக்கூட்டம்.. ஆசானை மீறிய எதுவும் இங்கே நடக்காது .. மரித்து 44 ஆண்டுகள் ஆகியும் இந்த மண்ணில் பார்பனர்கள் செயலிழந்து நிற்க செய்திருக்கிறானே பெருங்கிழவன்.. அவன் வழியொன்றே எமக்கு போதும்.. .. துவண்டு விழுகிறபோதெல்லாம் எமக்கு புத்துணர்ச்சி தருவதற்கு எம்மை யாமே புதுபித்துக்கொள்ள மாபெரும் கூட்டம் ஒன்று போதும்.. முன்பை விட வேகமான பாய்ச்சலோடு எதிரிகள் குலைநடுங்க வீறுக்கொண்டு வருவோம்.. இதோ அதற்கான ஏற்பாடுகள் தயார். ஈரோட்டு கிழவனில் சொல்படி ஆட .. ஈரோட்டிலே மண்டல மாநாடு ..மாநிலசுயாட்சி சமுக நீதி மத நல்லிணக்கம்.. எல்லாவற்றிக்கும் பதில் கிடைக்கும்.. உளறிக்கொண்டிருப்போருக்கும் உதவாகரைகளுக்கும் .. அங்கே இறுதி அத்தியாயம் எழுதப்படும் .. Aalanci Spm

No comments:

Post a Comment