Monday, January 22, 2018
நவீன ஆண்டாள்கள்
..
நவீன ஆண்டாள்கள் வாய் திறந்தால் ..
காதை பொத்திக்கொள்ளவேண்டும்.. வந்துவிழுகிறது நாற்றம்.. நித்தி கொடும்பாவி எரிதிதவர்கள் நரகத்திற்கு போக .. நரகமே,அவர்களை நோக்கி வர யாகமாம்.. பாவம் அறிவு மழுங்கி சொன்னதை செய்யும் கைபாவைகள்
..
சன்னியாசம் என்பது துறத்தல்..
சன்னியாசத்தில் ஒருவன் சொத்தையெல்லாம் தானம் செய்து விட்டு மொட்டை அடித்துக் கொண்டு வடக்கு நோக்கி எல்லாவற்றையும் துறந்து செல்ல வேண்டும் என்றும்..கிராமத்தில் ஓரிரவும் நகரத்தில் ஐந்து இரவுக்கு மேலும் தங்கக் கூடாது என்றும்; மழைக்காலத்தில் கிராமமோ, நகரமோ எங்கிருந்தாலும் நான்கு மாதம் வரை தங்கலாம்..
இதமான ஆடைகளை அணியகூடாது பழைய ஆடைகளைதான் அணிய வேண்டும் அவன் தினமும் ஒருவேளை மட்டும் அதுவும் ஏழு வீடுகளுக்குள் பிச்சை எடுத்து உண்ண வேண்டும் பிச்சை எடுக்கும் வீடுகளில் உரல், அம்மி சத்தம் நின்றபிறகு, மதியத்திற்கு மேல் சென்று, "பவதி' என்று நிதானமாக உச்சரிக்க வேண்டும். இல்லறத்தான் வீட்டிற்குள் செல்லக்கூடாது. யாராவது புகழ்ந்து பிச்சையிட்டால் அதை உண்ணக்கூடாது..துறவிகள் மூன்று மூங்கில் குச்சிகளைச் சேர்த்துக் கட்டி தண்டமாக கையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரே ஆடையை அணிய வேண்டும். நடந்தே செல்ல வேண்டும். தேன் போன்றவற்றையும் மாமிச உணவுகளையும் உண்ண கூடாது.. அதாவது..
எதிர்மறை Negative வாக வாழவேண்டும்
தன்னையே மறுப்பது என்பது, முன்பு பல காரணங்களினால் சாத்தியமாக இருந்தது. சமுதாயத்தின் அமைப்பு ஒரு காரணம்..
..
சன்யாச கொள்கை, பலவற்றை மறுத்தது. அது குடும்பத்தை மறுத்தது, அது உடலுறவை மறுத்தது, காதலை மறுத்தது.. குறிப்பாக லௌகீக வாழ்க்கை முறையை மறுத்தது..
ஆனால் நித்தியின் சீடர்கள்.. லௌகீக வாழ்க்கையோடு.. காமம்..,ஆசை.., சிற்றின்ப பெருநிலை பேரின்பத்தில் பேராசை.. எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்தவர்கள்...
..
சிறுவர்களை சன்னியாசிகளாக ஆக்க கூடாதென்றும். 18 வயது நிரம்பியிருந்தாலும் கட்டாயபடுத்தி சன்னியாசத்திற்கு கொண்டு செல்லபட்டாரா என ஈசா மையத்தில் இளம்பெண்கள் சேர்க்கபட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது... சிறுவர்களை துறவிகளாகவோ சன்னியாசிகளாகவோ அடைத்துவைப்பது கிரிமினல் குற்றம்.. அரசோ அல்லது நீதிமன்றமோ தாமாக முன்வந்து அந்த குழந்தைகளை மீட்கலாம்..
அவர்களின் பேச்சும் செயலும் மிக கேவலமான செயல்பாடுகளை கண்டு படித்ததை உணர்த்துகிறது.. இளம்வயதில் காமம் பற்றிய தவறான புரிதலும் .. துறவறம் பற்றிய போதிய அறிவில்லாமையும் தெரிகிறது..
ரஞ்சிதாவுடன் தவறான தொடர்பில் இருந்தது நித்தியானந்தா தானென்று தடயவியல் நிபுணர்கள் மூலம் உறுதி செய்யப்பட்ட பின்னரும் இளம்பெண் பக்தைகள்..? மூலமாக மோதுகிறார் என்றால் ஏதாவது முக்கியமான காரணம் இல்லாமல் இருக்காது யாரும் எதுவும் செய்துவிட முடியாது என நினைக்கிறார்கள்.. சாமியார் வேசமென்பது தவறுகளை மறைப்பதற்கும் தட்டிகேட்க முடியாமல் செய்வதற்குமென ஆகிவிட்டது..
..
சிறிய குழந்தைகளை இதுபோன்ற செயல்களில் ஈடுபடுத்துவோர் யாரென்று பார்த்தால் கடவுள் பாசம்/பயம் என காட்டி மூளைச்சலவை செய்து பெற்றோர்களை கொண்டுவந்துவிட செய்வது .. உனது குழநிதைகளில் ஒருவர் இறைப்பணிக்கானவரென நம்பவைப்பது சில ஊக்திகளை கையாண்டு ஏதோவொரு சக்தி இருப்பதாக நம்பவைத்து .. குழந்தைகளை இங்கே கொண்டுவந்து சேர்க்க செய்வது.. இச்சிறுவர்கள் .. பாலியல் ரீதியான துன்புறுத்தல்களில் ஆழ்த்தபட்டு பிறகு அதில் அடிமையாக்கி .. ஒருவித ஈர்ப்போடு செயலாற்ற செய்யும் கூட்டம் இதற்கு குறிப்பாக பெண்குழநிதைகள் அதிகமளவில் பயன்படுத்தபடுகிறார்கள்..
இவர்களையெல்லாம் மீட்டு மன அழுத்ததில் மனபிறழில் இருக்கும் இவர்களுக்கு சரியான பரிசோதனையும் சிகிக்கையும் அளித்து இயல்பு வாழ்க்கைக்கு வரவைக்கவேண்டும்..
..
இன்றைய துறவறவ வாழ்க்கையென்பது காமநெடி வீசும் களியாட்டங்கள் என்றாகிவிட்டது...
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment