Sunday, December 31, 2017

ஆன்மீக அரசியல்

சாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல்.. எனக்கு புரியவில்லை.. எது ஆன்மீகம் மதத்தின் பெயரால் மக்களை சிந்திக்க விடாமல் ஒருவித போதையை தருவது ..அவ்வளவுதான்.. சாதியம் பேசுகிறவனை மதம் பேசுகிறவனை கூட ஒரு பகுதிவரை நம்ப முடியும்.. காரணம் அவன் தன் நிலைபாடு சரியோ தவறோ என்று கூட தெரியாமல் என் அப்பன் பாட்டனிருந்தான் நானுமிருக்கிறேன் என்ற ஒற்றை நிலைபாட்டில்..சிலரின் அலங்கார பேச்சில் தான் மட்டுமே உயர்ந்தவன் என்கிற ஒற்றை தவறை தவிர வேறொன்றும் அவனிடத்தில் குறையில்லை ..ஆனால் சாதி மதமற்ற ஆன்மீகம் என சொல்பவரை நம்பவே முடியாது காரணம் தெளிவற்று குழப்புகிற செயல் அது.. நான் இப்படிதான் என சொல்வதில் உள்ள நேர்மை இதில் இல்லை.. .. மெய்ஞானம் பேசுவோர் .. ஆன்மீகமென திரிவோர் தனிமனித ஒழுக்கம்.. வாழ்வியல் நேர்மை.. சொல் சுத்தம் எந்நிலைக்கும் ஆசைபடாத உயர்நிலை .. இவையெல்லாம் வேண்டும்.. முதலில் எதையாவது நல்லதை செய்து மக்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறாரா.. மக்களின் அன்றாட பிரச்சனைகள் ஏதாவது தெரியுமா எதற்காகவாவது தானே முன்னின்று ..பேசியோ போராடியோ பெற்றுதந்திருக்கிறாரா.. குறைந்தபட்சம் பெற்றுதர முயற்சித்திருக்கிறாரா குளத்தில் இருப்பவர்கள் அறிக்கைகள் விடட்டும் நாம் அமைதியாக இருப்போம் குளத்தில் இறங்கிய பின் பேசலாமென்கிறார்.. முதலில் குளத்தைப்பற்றிய அறிவு போதாமை தெரிகிறது குளத்தில் ஆழம் தெரியவில்லை. முதலில் கரையில் நின்று குளிக்கவேண்டும் பிறகு தெப்பம்கட்டி ஆழபகுதிக்கு செல்ல பழகவேண்டும். குளத்தில் முதலில் நீச்சல் பழக... காற்றடைத்த பலூனை கொண்டு பழகிவிட்டு பிறகு குட்டிகரணம் அடிக்கலாம் .. நேரடியாக குட்டிகரணம் போட்டால் ஒருவேளை ஆழத்தில் ..சிக்கிகொள்ள நேரிடும்.. தண்ணீர் குறைந்து சகதியாக இருந்தால் .. கேட்கவே வேண்டாம்.. குளமல்ல அரசியல் இது ஆழ்கடல்.. முத்தெடுக்க ஆசைபடுவது தெரிகிறது ஆனால் மூச்சடக்க பழகவேண்டும்.. மூர்ச்சையாகி கிடப்பவனிடம் முத்துகுளிக்க ஆசை வந்திருக்கிறது.. .. நேரடியாக சட்டமன்ற தேர்தலில் தான் போட்டி என்கிறார்.. உட்சபட்ச ஜனநாயகம் என அழைக்கப்படுகிற உள்ளாட்சி குறித்து வாய்திறக்க மறுக்கிறார் .. நாடாளுமன்ற தேர்தல் வேண்டாம் ஆனால் சட்டமன்றம் வேண்டும்.. கதிர்கிராமம் நெடுவாசல்.. எங்கள் பெருமை பேசும் கீழடி .. காய்ந்துகிடக்கிற தஞ்சை .. மக்களை பிழிகிற GST இதற்கெல்லாம் குரல் கொடுக்கமாட்டாராம் தன் கல்யாண மண்டபம் இடிக்கபட்டதற்காக வந்கவருக்கும் வாடகை பிரச்சனையில் கூட வாய் திறக்காதவருக்கும் வித்தியாசம் தெரியவில்லை.. .. நேர்மையைப் பற்றி ரஜினி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது இதுவரை தனக்கு எவ்வளவு சம்பளம் அதற்கு முறையாக வரி செலுத்துகிறேன் என்று கூட சொல்ல முடியாத (சினிமாவில் கறுப்புபண புழக்கம் சொல்லவேண்டியதில்லை) ஒருவரிடம் தமிழகமக்கள் நேர்மையை எதிர்பார்க்கிறார்களாம்.. .. கடைசியாக வருவதாக சொன்னதற்கு விமர்சனமா என கேட்போருக்கு நேர்மையாக வருவதாக சொல்லியிருந்தால் வருக என சொல்லி முடித்திருக்கலாம்.. கால அவகாசம் கேட்டு பின்வாங்குவதில் உள்ள சூட்சமம் .. பாஜகவின் ஊதுகுழலாய் வலம் வர தயாரெடுப்பதை பறைசாற்றுகிறது..இங்கே ஒன்றை குறிப்பிட வேண்டும் .. மதத்தை முன்னெடுக்கிற தைரியம் நடிகர் எம்ஜிஆருக்கோ ஜெயலலிதாவிற்கோ இருந்ததில்லை மதமாற்ற தடைசட்டத்தை கொண்டுவந்த ஜெயா .. வந்த வேகத்திலேயே பின்மாறியது அறிந்ததுதான்.. மதம் வேறு ஆன்மீகம் வேறென்பதை ஏற்கமுடியாது குறிப்பாக கீதையை முன்னெடுக்கும் ரஜினியை மக்கள் ஏற்கமறுப்பர்.. காரணம் இது தமிழ்நாடு .. எந்த வடிவில் வந்தாலும் பெரியாரை முன்னெடுக்காத எதுவும் யாரும் வெற்றிபெற முடியாது.. மாத்தணும் மாத்தணும் எல்லாத்தையும் மாத்தணும் என்பதில் 'எ' வை முழுங்குகிறார்.. #ஏமாத்தணும்.. அவ்வளவுதான் ரஜினியின் முகம்.. .. கடைசியாக.. கேரள மக்கள் தங்களுக்கான தலைவனை களத்தில் தேடுகிறார்கள்.. திரையில் அல்ல என்றார் மம்மூட்டி .. தமிழகத்தில் .. ? கேவலமான நிலை.. #புறக்கணிப்போம்.. .. Aalanci Spm

No comments:

Post a Comment