Thursday, January 11, 2018

ஹாசிப் கான் தூரிகை

கார்ட்டூனிஸ்ட்.. கேலிசித்திரங்கள் .. திரு.ஆர்.கே. லட்சுமணன் you said it என்ற தலைப்பில் comman man கேரக்டர் (கதாபாத்திரம்) செய்யாத நையாண்டி இல்லை.. பாரதபிரதமர் தொட்டு யாரையும் விட்டுவைத்ததில்லை ஆனால் நையாண்டியும் எள்ளலும் மிகையாய் இருக்குமே தவிர யாரையும் புண்படுத்துவதாக இருக்காது.. பிரதமர் இந்திரா போன்றவர்கள் என்னை திரும்பி பார்க்கவைக்கும் லட்சுமணனின் தூரிகையென்பார்.. கார்ட்டூனிஸிட் கோபுலு (கும்பகோணம் கோபால்) செய்கிற குறும்புதனங்கள் ரசிக்கும்படியிருக்கும் அவரின் இலங்கை இன பிரச்சனையை தமிழ் சிங்களம் இரண்டையும் ரம்பம் கொண்டு அறுக்கும் கேலிசித்திரம் பிரபலம்.. ஆனந்தவிகடனில் நீண்டகாலம் பணியாற்றிய மதன் கூட கேலிசித்திரம் மூலமே பிரபலமடைந்தவர். நிறைய பேர்களுக்கு முன்னோடியாக இருந்த லட்சுமணன் கார்ட்டூனைப்பற்றி கூறும் போது சொல்லபடும் கருத்துக்களில் பிழை இருக்ககூடாது அதேவேளை சொல்லவந்ததையும் பொட்டில் அறைந்தாற்ப்போல் சொல்லிவிடவேண்டுமென்பார்.. முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி கூறும் போது ஆர்.கே.வின் #பொதுஜனம் common man மக்களின் குரல் என்றார்.. ‍.. இதை ஏன் சொல்கிறேனெனில் திரு.பாலா தூரிகைகள் தொடர்ந்து திராவிட இனத்தை அதன் தலைவர்களை வன்மம் கொண்டு சித்தரிப்பார் அதில் நையாண்டி இருந்ததில்லை மாறாக குரோதமே மேலிட்டது .. கேலிச்சித்திரங்களை எப்படி வரைய கூடாதென்பதற்கு பாலா உதாரணமாக திகழ்கிறார். .. சமகாலங்களில் கார்டூனிஸ்ட்களில் பேசபடுகிறவர் ஹாசீப் கான்.. கேலி சித்திரங்களை ஹாசிப் கான் தந்திருக்கிறார்.. அனிதா மரணத்தை .., ஜெயலலிதா புதைக்கபட்டதை ரசனையோடு கூடிய கோபத்தின் வெளிபாடாய் இருந்தது.. மிக முக்கியமாக கேலுச்சித்திரங்கள் சொல்லவந்ததை பொட்டில் அடித்தாற்ப்போல சொல்ல வேண்டும் ..அது நல்ல கலைஞனுக்கு மட்டுமே வரும் ..இந்த சமூகத்தின் மீது அக்கறையும்.. இயலாமையை வெளிப்படுத்தும் பாமரனின் எண்ணமும் மிக சரியாக கையாளபட வேண்டும்.. .. ஆர்.கே... கோபுலு போன்றவர்களின் கருத்துப்படத்தில் கவனமாக திராவிட சித்தாந்தத்தை ஒதுக்கிவிடுவார்கள்.. அவர்களின் இனத்தின் மீதான மெல்லிய பாசம் அவர்களிடத்திலே வெளிபடும்.. நையாண்டி செய்து அதன் வீரியத்தை குறைப்பார்கள் .. ஆனால் தோழர்.ஹாசீப் எம் இனத்தின் மீதான அழகிய கருத்தியலை கைவிடாது வரைவார்.. அனிதாவை பெரியாரும் காமராஜரும் அண்ணலும் சேர்ந்து சுமப்பதைப் போன்ற கார்ட்டூன் என்னை நீண்ட நேரம் ஏதோ செய்தது.. நமது வலியை இதைவிட சொல்லமுடியாதென சொல்லியது.. எல்லாவிடயங்களிலும் எல்லா நேரத்திலும் எம் சிந்தனையோடு கூடிய வரைதல் எம் இனத்தை சேர்ந்தவன் என்பதை காட்டுகிறது.. எம் இனத்தின் சித்தாந்தத்தை, பண்பை கலாச்சாரத்தை அதன் உணர்வுகளுக்கு காயம் ஏற்படாதவாறு வரைவதில் சிறந்தவர் எங்கும் வன்மமோ .. குரோதமோ தலைகாட்டாதவாறு சொல்லவந்ததை பொட்டில் அடித்தாற்ப்போல சொல்லும் கலையில் வல்லவர்.. #பெரியார் விருதிற்கு தேர்வாகி இருக்கிறார் ஹாசிப்... அவரின் வரைகலை அதற்கான தகுதியை பறைசாற்றும்.. ஹாசீப் கானுக்கு பாராட்டும் வாழ்த்தும்.. #பெரியார்_விருது.. .. Aalanci Spm

No comments:

Post a Comment