Tuesday, October 31, 2017
கிறுக்கர்கள் கையில் நாடு
Monday, October 30, 2017
ப.சிதம்பரம்..
Sunday, October 29, 2017
விசமேறிய..
Saturday, October 28, 2017
கைநாட்டு
Friday, October 27, 2017
சிறுபகையே.. சீண்டாதே..
Thursday, October 26, 2017
கடவுள் நம்பிக்கை
Wednesday, October 25, 2017
ஸ்பெக்டரம்
2ஜி.. இந்திய நீதிமன்ற வரலாற்றில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த வழக்க ாக கருதப்பட்டது.. 1.75 லட்சம் கோடி இழப்பென்றவுடன் நாடே அதிர்ச்சியாகியது மிகைப்படுத்த தொகை என்று ஒரு சிலர் சொல்லியும் நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி அதுவும் மூன்று வருடம் கழித்து தமிழகம் தேர்தலை சந்திக்கும் நேரம் பார்த்து நாடாளுமன்றம் அமளிப்பட்டது.. உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து எங்களை கேட்காமல் சம்பந்தப்பட்டவர்களுக்கு பிணை (ஜாமீன்) வழங்ககூடாதென்றவுடன் ஆஹா பார்த்தாயா திமுகவை துடைத்தெறிந்துவிடலாமென சிலர் கங்ஙனம் கட்டி வேலை செய்தனர்.. அப்போதிலிருந்தே திமுக தரப்பு மிக அமைதியாக ஆனால் உறுதியாக இருந்தது.. நீதிமன்றத்தில் மீது நம்பிக்கை இருப்பதாக சொன்னதோடு வழக்கை அதன் போக்கிலேயே எதிர்க்கொண்டது.. .. இழப்பு அது ஊழல் அல்ல இப்போது பேசுகிற ஊடகங்கள் அப்போது எங்கே அவ்வளவு பணம் போனது .. எத்தனை கண்டெய்னர்கள் எரித்தால் கூட 21 நாட்களாகுமென்றல்லாம் கதை கட்டியது.. உண்மை நீண்டநாள் உறங்காதென்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்ததால் வாய்தா வாங்காமல் ஒவ்வொரு முறையும் நேர்நின்று வழக்கு போகும் போக்கை உன்னிப்பாக கவனித்து திரு.ராசா அவர்கள் இறுதி வாதத்தில் அதிர்ஷ்டம் இருந்தால் வெற்றி பெறட்டும் என சிபிஐ வழக்கறிஞர் சொன்னபோது.. சட்டத்தை நம்பிகிறவன் அதிர்ஷ்டத்தை அல்ல முடிந்தால் ஆதாரங்களை தாருங்களென சொன்னார் .. ஆதாரம் இதுவரை வந்தபாடில்லை.. அதற்கு பிறகு 3ஜி யிலும் 4ஜியிலும் அதைவிட இழப்பை சொன்னபோது நிதியமைச்சர் அருண்ஜெட்லி சிஏஜி அறிக்கையை அரசியலாக்காதீர்களென நாடாளுமன்றத்தில் சொல்கிறார் இதே சிஏஜி அறிக்கையை வைத்து நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல் செய்த பாஜகவினர் இப்போது அரசியலாக்காதீர்களென வசனம் பேசுகிறார்கள்.. .. ஊழல் நடைபெறவில்லை முறைகேடாக ஒதுக்கினார் ராசா என்பதற்கு முன்பு பாஜக செய்த முறையைதான் (அருண்ஷோரி) பின்பற்றியதாகவும் இது காபினெட் முடிவு தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் தமக்கில்லை என்ற பிறகு வழக்கு நிலைகுலைந்து போனது ஆவணங்களை சேர்க்கவேண்டுமென வாய்தா வாங்கிக்கொண்டிருக்கிறார் நீதிபதி ஷைனி அவர்கள்.. குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான் அவகாசம் கேட்கவேண்டுமே தவிர குற்றம் சாட்டிய அரசோ புலனாய்வுத்துறையோ .. ஏன் நீதிபதியோ கேட்க கூடாது.. நவம்பர் 7 முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதவேண்டியிருக்கிறது #நவம்பர்8 மோடியின் தான்தோன்றித்தனமான பணமதிப்பிழப்பை மக்களுக்கு நினைவூட்டும் விதமாக நாடே ஆர்பார்ட்டமென அறிவித்த நிலையில் இதில் சூது இருப்பதாக சந்த்கிக்கவேண்டியிருக்கிறது. .. திரு.ஷைனி கைகளை பிடித்து தீர்ப்பு எழுதபோகிறார்களா.. ஷைனியே எழுதுவாரா என மக்கள் மனதில் இப்போதே சந்தேகநிழலாடுகிறது.. அண்ணல் அம்பேத்கரே .. அரசியல்சாசன சட்டத்தை வடிவமைக்கும் போது எனது கைகளை கொண்டு அவர்கள் எழுதினார்கள் என்றார்.. எதுவும் நடக்கலாம் அதனால் திமுக பாதிப்படைய போவதில்லை .. நிறைய தடைகளை கடந்துதான் திராவிட இயக்கம் வளர்ந்திருக்கிறது. நீதித்துறையில் குமாரசாமிகளும் உண்டு..எனினும் நீதி வெல்லுமென்ற நம்பிக்கை நமக்கிருக்கிறது. .. #ஸ்பெக்ட்ரம்_ராசா .. Aalanci Spm