Tuesday, October 31, 2017

கிறுக்கர்கள் கையில் நாடு

மழை பெய்தால் நீர் தேங்கதான் செய்யும் ஜெயகுமார்.... மழை நீர் தேங்காதவண்ணம் அமெரிக்கா லண்டனை விட சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எஸ்.பி.வேலுமணி.. .. இரண்டு அமைச்சர்களுமே தான் தோன்றித்தனமாக பேசி மக்களை கேவலபடுத்தியிருக்கிறார்கள் ஒருவர் மிகைப்படுத்தி பேசி அரசு செயல்படுகிறதென்ற தோற்றத்தை உருவாக்க முயற்சித்தும் ஜெயகுமாரோ முடியாதென முன்னெச்சரிக்கையாக சொல்லி தப்பித்துக்கொள்கிறார் .. .. அரசுஇயந்திரம் செயல்பட்டு பல மாதங்களாகிறது அதிகாரிகளோ யார் பேச்சை கேட்பதென தெரியாமல் விழிக்கிறார்கள் .. இவர்களுக்கு(அமைச்சர்கள்) இப்போதைய கவலையெல்லாம் எத்தனை காலம் தாக்குபிடிக்கும் அதுவரை எவ்வளவு சேர்க்கமுடியுமென விரைந்து செயல்படுகிறார் காசொன்றே குறியாய்.. எப்படியும் யாருமே நம்மை திரும்ப சட்டமன்றம் அனுப்ப போவதில்லை ஏன் காரியமாய் செயல்படவேண்டுமென நினைத்து ஆளுக்கொரு கருத்தை சொல்லி திசை திருப்புகிறார்கள்.. .. தமிழகம் விவரகேடுகளின் கையில் சிக்கி தத்தளிக்கிறது ஒருவர் கூட அறிவார்ந்து பேசாவிட்டாலும் யதார்த்த உணர்ந்தாவது பேசலாம் எல்லோரையும் சுழியமாகவே வைத்திருந்த ஜெயலலிதா எண்ணி கோபமே வருகிறது.. எல்லோரையும் அடிமைகளாக குனிய வைத்தே பழக்கியதால் நிமிர்ந்து பார்க்கவே அவர்களால் இயலவில்லை.. தமிழகத்தின் உண்மையான நிலையென்ன .. மக்களின் என்னென்ன அவதிக்குள்ளாகிறார்கள் என்றெல்லாம் சிந்திக்கவே இவர்களால் முடியவில்லை.. .. அமெரிக்காவை விட சாலை வசதிகள் உள்ளதாக மத்திய பிரதேச முதல்வர் சொன்னதும் நாங்களென்ன இலுச்சவாயர்களா என்று நம்ம அமைச்சர்களும் உளற ஆரம்பித்துவிட்டார்கள்.. பொய்யர்களின் அடிமைகளால் உண்மை பேசமுடியாது.. .. #கிறுக்கர்கையில்_நாடு .. Aalanci Spm

Monday, October 30, 2017

ப.சிதம்பரம்..

ப. சிதம்பரம் ஒரு பிரிவினைவாதி, தேசத் துரோகி -- பா ஜ க கடுமையான தாக்குதல் .. இதை எதிர்பார்த்ததுதான்.. பாசீசத்தை விரும்புகிறவர்கள் மத்தியில் இங்கே மற்றவர்கள் தேசதுரோகிகள் தான்.. அப்படி என்ன சொன்னார்.. மிக தெளிவாக எப்படியெல்லாம் சட்டம் மீறபட்டிருக்கிறது.. மரபுகளை மதிக்காமல் தான் தோன்றித்தனமாக செயல்பட்டார்களென சாதாரணமானவர்களும் புரிகிற மாதிரி விளக்கினார்.. மேதாவித்தனமில்லாத எளிய மொழியில் எல்லோரும் விளங்கிக்கொள்ளவேண்டுமென்று தெளிவாக அமைதியாக ஒர் ஆசிரியர் மாணவர்களுக்கு புரிகிறமாதிரி பாடமெடுப்பாரே/சொல்லி தருவாரே அப்படி மோடியின் ஆட்சி அவலங்களை விளக்கியதுதான் இந்த கோபத்திற்கு காரணம்.. .. திடீரென்று ₹500 மற்றும் ₹1000 நோட்டுக்களை திரும்ப பெற வேண்டுமென்ற முடிவு ரிசர்வ் வங்கி மீது திணிக்கப்பட்டது .. சட்டப்படி ரிசர்வ் வங்கி தான் அரசுக்கு பரிந்துரை செய்யவேண்டும் இங்கே எல்லாம் தலைகீழ் .. காபினெட் கூட்டத்தை கூட்டி அனுமதி வாங்கிவிட்டு அமைச்சர்களை வெளியேவர விடாமல் அவர்களது தொலைப்பேசிகளை பிடிங்கிக்கொண்டு பிரதமரை தொலைக்காட்சி உரையை கேட்க வைத்தெல்லாம் புட்டுபுட்டு வைத்து மோடி.. சர்வாதிகாரியைப்போல என்றார்.. மொத்ததில் குரங்கு கையில் பூமாலை.. .. நிச்சயமாக பணமதிப்பிழப்பு தொடர்பாக என்றாவது ஒருநாள் அரசு அதிகாரிகள் அமைச்சர்கள் வங்கி அதிகாரிகள் விசாரிக்கப்படுவார்கள் என்றது அவர்களுக்கு கோபத்தை அதிகமாக்கியிருக்கிறது அதனால் தான் ப.சிதம்பரத்தை தேசவிரோதியென சொல்கிறார்கள் ஒட்டுமொத்த மக்களை நடுத்தெருவில் நிறுத்தி கருப்புபணத்தை ஒழிப்பதாக சொன்னவர்கள்.. கருப்புப்பணம் வெள்ளைபணமானதுதான் மிச்சம்.. சேகர் ரெட்டியிடம் ₹2000 கோடி எப்படி வந்ததென ரிசர்வ் வங்கியாலேயே சொல்லமுடியவில்லையாம்.. சாதாரண குடிமகன் தான் சேமித்த பணத்தை மொத்தமாக எடுக்க ஆதார் அவசியமென சொல்கிற அரசும் வங்கியும் மொத்தமாக சென்றது தெரியாதாம் ..எந்த மையத்திலிருந்து சென்றதென்பதை பணத்தின் சீரியலை வைத்து எளிதாக கண்டுபிடிக்கமுடியும் என்கிற போது சேகர் ரெட்டி சென்றது தெரியாதென்கிற கயமைத்தனத்திற்கு ஊழல் இல்லாமல் வேறென்ன.. மூன்று கண்டெய்னர் பணத்தை ஆவணம் ஏதுமில்லாது வாகன பதிவு தவறாக இருந்தும் நகர்த்த முடிகிறது இதற்கு பெயர் பித்தலாட்டமில்லையா.. மோடி அரசின் அவலத்தை தோலுரிக்க தொடங்கியிருக்கிறது காங்கிரஸ்.. .. ப.சிதம்பரம் தேசதுரோகி என சொல்வோருக்கு ஆங்கிலேயனிடம் வேடிக்கை பார்க்க வந்தேனென மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்த வாஜ்பாயெல்லாம் பாரத ரத்னங்களாக தெரிவார்கள்.. இந்தியாவில் ஆன்டி இந்தியன்கள் அதிகம் துரோகிகளின் கண்களுக்கு தேசத்தை நேசிப்பவர்கள் வேறெப்படி தெரிவார்கள்.. #நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும், வாய்நாடி வாய்ப்பச் செயல்" தெரியாமல் போனதால் வந்த விளைவு.. .. #துரோகத்தின்_கைகளில்_எமது_இந்தியா.. .. Aalanci Spm

Sunday, October 29, 2017

விசமேறிய..

திண்டுக்கல் சீனிவாசன்.. பாரதபிரதமர் மன்மோகன் சிங்.. என்று கூறி நம் முன் கோமாளியாய் நிற்பதாக தோன்றும்.. பாவம் அவரது அறிவு அவ்வளவுதான்.. சுதா ரகுநாதனை பெயர் மாற்றி சொன்னபோதே புரிந்ததுதான் ஒரு நாள் இல்லையென்றால் மற்றொரு நாள் தன்னையே யாரென்று கேட்பார் திரு.ஸ்டாலின் எழுச்சிப்பயணத்தை அது அவரின் இறுதி பயணம் என்கிறார்.. .. நகைச்சுவையாக கடந்து போக முடியவில்லை வரலாற்றில் நெடுக தன்னை காமடியனாக காட்டிக்கொண்டவர்கள் தான் கொடூரமான செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் ஆம்.. திடீரென துப்பாக்கியால் சுட்டதும் நடந்தது.. தன்னை வெகுளியைப்போல ஏதும் அறியாதவனைப்போல காட்டி நின்றால் அறியாமையை நம்பிவிடுவார்களென செயல்படுகிறார்.. ஆனால் உள்ளக்கிடைக்கில் வன்மம் குடிகொண்டிருப்பதும் அது சட்டென்று எட்டிப்பார்க்கிறது.. அதை கேலியாக எடுத்துக்கொள்ள முடியாது.. .. நிறைய பேர் இதே வன்மத்தோடு அலைகிறார்கள் இது அவர்களின் அரசியலின் இறுதி அத்தியாயம் என அறிந்து இனி எப்போதுமில்லை வருங்காலத்தில் தளபதியை மைய்யபடுத்தியே தமிழக அரசியல் இயங்குமென்பதை புரிந்துக்கொண்டதால் அவர் மீதான கோபம் வார்த்தைகளில் வந்து விழுகிறது.. நேரடியாக தாக்குதல் நடத்தவும் தயங்காத வார்த்தை பிரயோகங்கள் பொதுவெளியில் தெரிகிறது ..இனி கவனத்தோடு செல்லவேண்டும்.. .. சிலர் காமெடியனாக தெரியலாம் உள்ளின் உள்ளில் விசமேறி கிடக்கிறது.. அது வெப்பம் தாங்காமல் வெடித்து சிதறுவதை தான் கடும் வார்த்தைகளில் காண்கிறோம்.. கோபமல்ல ..எச்சரிக்கை இது இனியும் சிலர் வரகூடும் .. .. #கவனம்தேவை .. Aalanci Spm

Saturday, October 28, 2017

கைநாட்டு

#கைநாட்டு.. கைநாட்டுக்களின் மீது அலாதி நம்பிக்கை/ பிரியம் எனக்குண்டு .. காரணம் படிப்பறிவில்லாவிட்டாலும் யாரையும் ஏமாற்ற தெரியாத வெள்ளந்தி மனிதர்கள்.. மிகவும் நம்பிக்கையானவர்கள்..யாரையும் வஞ்சிக்கத்தெரியாத உயர்குணம் கொண்டவர்கள் .. ஜெயலலிதாவின் கைநாட்டு பெரும் சந்தேகத்தை தந்தது.. மேதாவித்தனம் என்ற இமேஜை சுக்குநூறாக்கிய சம்பவம் ஜெயலலிதா சுயநினைவோடு இருந்திருந்தால் கைநாட்டு வைத்திருப்பாரா என்ற சந்தேகம் இருந்தது.. அவர் சுயநினைவோடில்லை என்ற நிலையை மறைத்து 90 சதவிகிதம் குணமடைந்து விட்டதாக சொன்ன சில மணி நேரத்திற்குள்ளாக அவரிடம் கைநாட்டு பெற பட்டதாக மற்றொரு செய்தி இட்லி சாப்பிடுகிறாரென்று சொன்னவர்களின் பொய் இப்போது அம்பலமாக தொடங்கியிருக்கிறது.. ஜெயலலிதாவை வைத்து இவர்கள் களித்த களி ..இப்போது உடைபடுகிறது.. திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் டாக்டர் பாலாஜியை நீதிமன்றத்தில் (ஆஜராக) நேர்நிற்க உத்தரவிட்டது.. .. டாக்டர் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் நேர்நின்று சாட்சியம் அளித்தார் அதில் நிறைய உளறல்கள்.. 20 இடங்களில் தான் கைநாட்டு வாங்கவேண்டும் ஆனால் 28 படிவங்களில் வாங்கியிருக்கிறீர்கள் எட்டு படிவம் என்னானது என்ற கேள்விக்கு பதில் இல்லை.. கைரேகை பற்றி அனுபவம் இருக்கிறதென்கிறீர் உயிரோடு இருப்பவரின் கைரேகையில் உயிரோட்டமிருக்கும் ஆனால் ஜெயலலிதா கைரேகை புள்ளி புள்ளியாக தானே இருந்தது அவர் இறந்தபிறகு எடுக்கபட்டதா என்ற கேள்விக்கும் டாக்டர் பாலாஜியிடம் பதில் இல்லை தமிழக அரசிடம் முறையான அனுமதி பெறபட்டதா என்ற கேள்விக்கு இல்லையென பதில் அளித்தார்.. உங்கள் முன்னால் யார் படிவத்தில் கைநாட்டு வாங்கினார்கள் என்ற திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் வழக்கறிஞரின் கேள்விக்கு வாங்கியது யாரென தெரியாதென்று பதில் சொல்லியிருக்கிறார். மருத்துவமனையில் சென்று கைநாட்டு பெற்றதற்கு ஆதாரமாக வீடியோவோ புகைப்படமோ இல்லை மருத்துவமனை லாக் சீட்டில் பதிவு இல்லை கைநாட்டு பெற்ற படிவத்தை அப்பலோ மருத்துவரிடம் கொடுத்ததற்கான ஆவணமோ அவர்கள் பெற்றுக்கொண்டதற்கு ஆதாரமோ இருக்கிறதா என்ற கேள்விக்கு என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை என்றார் டாக்டர் பாவாஜி... இவையெல்லாம் உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது கூறியவை.. .. மெல்ல வெளிச்சத்திற்கு வருகிறது ஜெயலலிதா வின் மரணம் பற்றிய செய்திகளும் அவரை வைத்து பித்தலாட்டம் ஆடிய கூத்தும்.. இவையெல்லாம் நீண்ட விவாதங்களுக்கு வழிவகுக்கும்..ஆனால் உண்மை வெளிவந்தே தீரும். .. #கைநாட்டு.. .. Aalanci Spm

Friday, October 27, 2017

சிறுபகையே.. சீண்டாதே..

பெரியாரியம் பேசுகிற கறுப்புச்சட்டைகாரர்களும் பொதுவுடமை பேசும் சிவப்பு சட்டைகாரர்களும் பட்டியலினத்தில் இருக்கிறார்கள் ஆனால் நில நிறம் அணிந்த அம்பேத்கரிஸ்ட்கள் பிற்படுத்தவராக. இருக்கிறார்களா..? என்கிறார். பா.ரஞ்சித் .. அம்பேத்கரை முன்னெடுப்பதில் தவறேதுமில்லை ஆனால் பெரியாரியவாதிகளும் காம்ரேட்களும் அம்பேத்கரை மதிக்கவில்லை என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்.. முதலில் அம்பேத்கர் சரியாக படித்துவிட்டு வந்திருக்கலாம்.. பெரியாரை மிகவும் மதித்தவர் மட்டுமல்ல இங்கே பெரியார் போன்ற ஒரு தலைவர் கிடைக்கவில்லையே என வருத்தியவர் .. வடநாட்டில் பெரியாரை போன்ற ஒருவர் பிறந்திருந்தால் இந்த இழிநிலை வடமாநிலங்களில் வந்திருக்காது தலித்கள் மீசை வைத்துக்கொள்ள கூட அனுமதிக்க மறுக்க சமூகபார்வையில் இருக்கிறது இந்திய மாநிலங்கள் தமிழகத்தில் தான் திமிரோடு கூட பேசமுடியும் நான் இந்த திமிரோடு என்ற வார்த்தையை புண்படுத்த பயன்படுத்தவில்லை மாறாக அடங்க மறு அத்துமீறு என உரக்க சொல்லமுடிகிற சூழலை நினைவூட்டுகிறேன்.. நிறைய தலைவர்கள் அண்ணல் அம்பேத்கரை பின்பற்றியிருக்கிறார்கள் இன்னும் சொல்லபோனால் இடைசாதிகாரர்கள் அம்பேத்கரை முன்னெடுத்ததைப்போல பட்டியலின தலைவர்கள் கூட முன்னெடுக்கவில்லை.. .. அம்பேத்கரை முன்னெடுத்தால் மட்டும் மாற்றத்தை தந்திடும் என்றால் வடமாநிலங்களில் பட்டியிலனத்தவர்கள் வாழ்வு மேம்பட்டிருக்கவேண்டும்.. அதனால் அம்பேதேகரிஸம் தேவையில்லை என்பதல்ல பொருள் .. அதிகம் படித்த மேட்டுத்தனம் அம்பேத்கரிடமிருந்ததால் .. எளியவனும் புரிகிற மொழியில் பேச மறந்ததால் பெரியாரை போல அண்ணலால் வெற்றிப்பெற முடியவில்லை..சாமானியனுக்கு உரைக்கிற மாதிரி பேசினார் செயல்பட்டார் #பெரியார் அதனால்தான் அவரால் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவர முடிந்தது.. அங்குதான் அம்பேத்கர் தோற்றுப்போனார் அதனால் அவரின் கருத்துக்கள் தவறென்று பொருளல்ல.. சாமானியனை சென்றடையாத எந்த சீர்திருத்தமும் வெற்றிபெறாது .. .. பெரியாரால் ஒரு பட்டியலனத்தவரை அறநிலையத்துறை அமைச்சராக பரிந்துரைக்க முடிந்தது... பரமேஸ்வரன் என்ற தாழ்த்தப்பட்டவர்(இரட்டைமலை சீனிவாசன்பேரன்) அறநிலைய துறை அமைச்சரான போது.. அம்பேத்கர் சொன்ன வாசகம் ஒன்றே போதும்.. என் சாதியில் பட்டவனை குளிக்கவும் விடமாட்டேன் என்கிறான் குளத்தில் குனிந்து அள்ளி குடிக்கவும் விடமாட்டேன் என்கிறான்.. ஆனால் தமிழகத்தில் அறநிலைய துறை அமைச்சராக்கி கருவரைக்குள்ளே செல்லும் அதிகாரத்தை பெற்று தந்திருக்கிறார் பெரியார் என்றார்.. .. அம்பேத்கரை முன்னெடுப்பாத சொல்லி திராவிடத்தை பொதுவுடமையை குறைச்சொல்ல நினைப்பதிலிருந்தே..புரிகிறது.. எங்கிருந்து இயக்கபடுகிறீர்கள் என்று.. பெரியாரை மீறிய எதுவும் எந்த பயனும் தராது.. நீங்கள் தைரியமாக பேசுகிறீர்களே.. அனிதா நினைவேந்தல் நிகழ்வில் மைக்கை பிடித்து கலாட்டா செய்ய முடிந்ததே இந்த கருத்து சுதந்திரமெல்லாம் நாங்கள் (பெரியாரியவாதிகள்) பெற்று தந்தது.. நீங்கள் சொல்கிற அம்பேத்கரால் வடமாநிலங்களில் பேசும் உரிமையை கூட பெற்றுதர முடியவில்லை.. .. யாரையும் குறைவாக மதிப்பிடும் பழக்கத்தை விடுங்கள் அம்பேத்கர் போன்ற மாமேதைகளை தந்த சமூகம் என்பதில் எப்போதும் மரியாதை உண்டு.. எல்லா சமூகங்களிலும் சில புல்லுறுவிகள் வருவார்கள். ஆனால் அந்த சமூகமே அவர்களை புறந்தள்ளும்.. பா.ரஞ்சித் போன்றவர்கள் இதுபோன்ற பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இரையாமல் இருந்தால் சரி.. இல்லையெனில்.. புறக்கணிக்கபடுவீர்.. .. கொடும்பகைகள் கண்ணுக்கு தெரியும் ஆனால்.. சில சிங்காரித்து வரும் சிறுபகைகள் .. வேரறுக்க முயற்சிக்கும் #எச்சரிக்கை. .. Aalanci Spm

Thursday, October 26, 2017

கடவுள் நம்பிக்கை

தளபதி தலைமையில் .. புதிய தமிழகத்தை உருவாக்குவோம் ... .. நாத்திகம் பகுத்தறிவு ‍ ... பெரியார் சொல்கிறார் எனக்கு கடவுள் மீதெல்லாம் கோபமில்லை .. இந்த சமுதாயத்தின் ஏற்றதாழ்வுகளை கலைய வேண்டும் என எண்ணினேன்.. அது ஜாதீய கட்டமைப்புக்குள் என்றார் ஜாதியை ஒழிக்கலாமென்றேன் அது மதத்திற்குள் என்றார் மதத்தை புறக்கணிப்போம் என்றேன் அது கடவுளின் செயல் என்றார்.. அதனால்தான் நான் கடவுளை எதிர்க்கிறேன் என்றார்.. இங்கே இந்துமத கடவுளை மட்டும்தானே பெரியார் எதிர்த்தார் என்கிறார்கள்.. பிற மத கடவுள்கள் மனிதர்களாக வாழ்ந்தார்கள் என்பதற்கு ஆதாரம் உண்டு இங்கே எல்லாம் கற்பனையாக பாத்திரங்கள் என்றார்... அதே நேரம் எல்லா மதத்திலும் உள்ள மூடவழக்கங்களை எதிர்த்தார் எது அறிவு ஏற்றுக்கொள்ளவில்லையோ அதை நீ ஏற்றுக்கொள்ளாதே என்றார் அது மதம் கடவுள் கற்பனை இத்யாதி... .. ஆனால் திமுக அப்படியல்ல.. தி க விலிருந்து பிரிந்துவந்த பேரறிஞர் அண்ணா ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார்.. கடவுள் மறுப்பு அல்ல திமுகவின் கொள்கை ... .. திமுக கடவுள் மறுப்பை பிரதானமாக்கி செயல்படும் இயக்கமல்ல இங்கு நாத்திகனும் உண்டு கடவுள் நம்பிக்கை உள்ளவனும்,உண்டு... காரணம் தனிநபரின் செயல்பாடுகளில் விருப்புவெறுப்புகளில் இயக்கம் தவையிடுவதில்லை.. திமுகவின் பிரதான கொள்கைகளிலிருந்து மீறாமல் இந்த சமூகத்தில் நடக்கும் ஏற்றதாழ்வுகளுக்கு எதிராக ஒரு சிலரே எல்லா வாய்ப்பையும் தட்டிப்பறிக்கிற செயல்களுக்கெதிராக ..சமூகநீதியை நல்லிணக்கத்தை கட்டிகாக்க. நாட்டின் நலன் இன,மொழி கொள்கை கோட்பாட்டிலிருந்து மாறாத சமூகத்தில் அனைவருக்குமான உரிமைகளை பெற்று தர போராடிக்கொண்டிருக்கிறது.. .. இங்கே சிலர் ஸ்டாலின் கோவிலுக்கு போகிறார் ..ராசாத்தி அம்மாள் போகிறாரென்கிறார்கள் கவிஞர் கனிமொழியே எனக்கு கடவுள் நம்பிக்கையில்லை ஆனால் என் தாயார் கடவுள் நம்பிக்கை உள்ளவரென்றார் .. திமுகவில் நிறைய #பழங்கள் உண்டு..அவர்கள் அண்ணாவை கலைஞரை ஏற்றவர்கள்.. அவர்களையே பின்தொடர்பவர்கள் கொள்கை உறுதியானவர்கள்.. திராவிட சித்தாந்தத்தை ஏற்கிறவர்கள்.. கடவுள் மறுப்பை தவிர.. .. எனக்கு கடவுள் மீதான நம்பிக்கை இல்லையென்பதற்காக அவரை ( தளபதி) போகவேண்டாமென்று சொல்ல முடியாது.. அவரின் அவரை சார்ந்தவர்களின் தனிப்பட்ட விரும்பங்களை தடைபோட முடியாது..திமுக கடவுள் மறுப்பை மட்டுமே முன்னெடுக்கிற இயக்கமல்ல.. யாரையும் கட்டுபடுத்தாத அதே வேளை திமுகவின் பிரதான கொள்கையிலிருந்து விலகி செல்வாரே ஆனால் அப்போது மிகவும் கடுமை விமர்சிப்போம்..அதில் மாற்றுகருத்தே இல்லை.. .. இனத்தின் மொழியின் மீதான தாக்குதலை தொடுக்க முடியாதவர்கள் தொடுத்து தோல்வியுற்றவர்களின் கூப்பாடு இது. தமிழர்களின் கலாச்சார பண்பாட்டை சிதைக்க எண்ணி தங்களின் தேவைகளை மட்டுமே புகுத்தும் சிலரின் கையாலாகாததனம் தான் இந்த ஏன் ஸ்டாலின் கடவுளை கும்பிடுகிறார் என்பது.. எதிரிகள் செயலற்று நிற்கும் போதுதான் தனிநபரின் செயல்பாட்டை விமர்சிப்பார்கள்.. அது இயலாமை.. கருணாநிதியோடு திமுகவின் செல்வாக்கு முடிந்தது என எண்ணிக்கொண்டிருந்தவர்களில் எண்ணங்களில் பேரிடியாக விழுந்ததுதான் திரு.ஸ்டாலின் அவர்களின் வளர்ச்சி.. அண்ணனை கொம்பு சீவினார்கள்.. அதெல்லாம் நடக்காமல் போய் கடைசியில் தனிநபர் செயல்பாடுகளை தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கதைக்கிறார்கள்.. .. திரு.ஸ்டாலின் அவர்களோடு அரசியல் செய்யுங்கள் விமர்சனம் செய்யுங்கள் எதிர்கருத்தை சொல்லுங்கள்.. கடுமையான கண்டனத்தை கூட பதிவு செய்யுங்கள் அது அவரது அரசியலாக மட்டும் இருக்கவேண்டும் .. #காலத்தின்தேர்வு_தளபதி... .. Aalanci Spm.. மீள்

Wednesday, October 25, 2017

ஸ்பெக்டரம்

2ஜி.. இந்திய நீதிமன்ற வரலாற்றில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த வழக்க ாக கருதப்பட்டது.. 1.75 லட்சம் கோடி இழப்பென்றவுடன் நாடே அதிர்ச்சியாகியது மிகைப்படுத்த தொகை என்று ஒரு சிலர் சொல்லியும் நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி அதுவும் மூன்று வருடம் கழித்து தமிழகம் தேர்தலை சந்திக்கும் நேரம் பார்த்து நாடாளுமன்றம் அமளிப்பட்டது.. உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து எங்களை கேட்காமல் சம்பந்தப்பட்டவர்களுக்கு பிணை (ஜாமீன்) வழங்ககூடாதென்றவுடன் ஆஹா பார்த்தாயா திமுகவை துடைத்தெறிந்துவிடலாமென சிலர் கங்ஙனம் கட்டி வேலை செய்தனர்.. அப்போதிலிருந்தே திமுக தரப்பு மிக அமைதியாக ஆனால் உறுதியாக இருந்தது.. நீதிமன்றத்தில் மீது நம்பிக்கை இருப்பதாக சொன்னதோடு வழக்கை அதன் போக்கிலேயே எதிர்க்கொண்டது.. .. இழப்பு அது ஊழல் அல்ல இப்போது பேசுகிற ஊடகங்கள் அப்போது எங்கே அவ்வளவு பணம் போனது .. எத்தனை கண்டெய்னர்கள் எரித்தால் கூட 21 நாட்களாகுமென்றல்லாம் கதை கட்டியது.. உண்மை நீண்டநாள் உறங்காதென்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்ததால் வாய்தா வாங்காமல் ஒவ்வொரு முறையும் நேர்நின்று வழக்கு போகும் போக்கை உன்னிப்பாக கவனித்து திரு.ராசா அவர்கள் இறுதி வாதத்தில் அதிர்ஷ்டம் இருந்தால் வெற்றி பெறட்டும் என சிபிஐ வழக்கறிஞர் சொன்னபோது.. சட்டத்தை நம்பிகிறவன் அதிர்ஷ்டத்தை அல்ல முடிந்தால் ஆதாரங்களை தாருங்களென சொன்னார் .. ஆதாரம் இதுவரை வந்தபாடில்லை.. அதற்கு பிறகு 3ஜி யிலும் 4ஜியிலும் அதைவிட இழப்பை சொன்னபோது நிதியமைச்சர் அருண்ஜெட்லி சிஏஜி அறிக்கையை அரசியலாக்காதீர்களென நாடாளுமன்றத்தில் சொல்கிறார் இதே சிஏஜி அறிக்கையை வைத்து நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல் செய்த பாஜகவினர் இப்போது அரசியலாக்காதீர்களென வசனம் பேசுகிறார்கள்.. .. ஊழல் நடைபெறவில்லை முறைகேடாக ஒதுக்கினார் ராசா என்பதற்கு முன்பு பாஜக செய்த முறையைதான் (அருண்ஷோரி) பின்பற்றியதாகவும் இது காபினெட் முடிவு தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் தமக்கில்லை என்ற பிறகு வழக்கு நிலைகுலைந்து போனது ஆவணங்களை சேர்க்கவேண்டுமென வாய்தா வாங்கிக்கொண்டிருக்கிறார் நீதிபதி ஷைனி அவர்கள்.. குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான் அவகாசம் கேட்கவேண்டுமே தவிர குற்றம் சாட்டிய அரசோ புலனாய்வுத்துறையோ .. ஏன் நீதிபதியோ கேட்க கூடாது.. நவம்பர் 7 முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதவேண்டியிருக்கிறது #நவம்பர்8 மோடியின் தான்தோன்றித்தனமான பணமதிப்பிழப்பை மக்களுக்கு நினைவூட்டும் விதமாக நாடே ஆர்பார்ட்டமென அறிவித்த நிலையில் இதில் சூது இருப்பதாக சந்த்கிக்கவேண்டியிருக்கிறது. .. திரு.ஷைனி கைகளை பிடித்து தீர்ப்பு எழுதபோகிறார்களா.. ஷைனியே எழுதுவாரா என மக்கள் மனதில் இப்போதே சந்தேகநிழலாடுகிறது.. அண்ணல் அம்பேத்கரே .. அரசியல்சாசன சட்டத்தை வடிவமைக்கும் போது எனது கைகளை கொண்டு அவர்கள் எழுதினார்கள் என்றார்.. எதுவும் நடக்கலாம் அதனால் திமுக பாதிப்படைய போவதில்லை .. நிறைய தடைகளை கடந்துதான் திராவிட இயக்கம் வளர்ந்திருக்கிறது. நீதித்துறையில் குமாரசாமிகளும் உண்டு..எனினும் நீதி வெல்லுமென்ற நம்பிக்கை நமக்கிருக்கிறது. .. #ஸ்பெக்ட்ரம்_ராசா .. Aalanci Spm

Tuesday, October 24, 2017

ஆன்மீகம்

தீக்குளிப்பு.. ஹரி ராசா சர்மா இறந்தவனின் மீது நின்று கூட கொடூர தாண்டவம் ஆடுகிறார் பகுத்தறிவு தீக்குளிப்பை தான் தந்திருக்கிறதென்கிறார்.. ஆன்மீகம் நம்பிக்கையை தருமென்று வேறு சப்பைகட்டுகிறார் இறந்தவன் கடவுள் மறுப்பாளனில்லை கந்துவட்டி வரும்போதெல்லாம் அவன் தெய்வத்தை தானே துணைக்கழைத்திருப்பான்.. இந்த நாடும் அரசும் அவன் மீது திணித்ததுதானே .. எத்தனை வரிகள் இங்கே எல்லாம் வலுத்தவனுக்கானதால் தானே இந்த விபரீதம் நடந்தது.. தென் தமிழகத்தில் கந்துவட்டி தொழிலாகவே நடக்கிறதே.. நடுத்தர குடும்ப பெண்களின் கற்பு விலைபேச படுகிறதே இதையெல்லாம் கண்டிக்காமல் தன் கீழ்த்தர அரசியலை இதில் புகுத்துகிறார்.. .. ஆன்மீகம்.. சீதையை தீக்குளிக்க சொன்னதே அங்கு தொடங்கியதானே.. இறந்தவனோடு சேர்ந்து உடன்கட்டை ஏற சொன்னதும் கந்தனையும் வள்ளலாரையும் தீக்குளிக்க சொல்லவில்லையா.. எங்காவது பகுத்தறிவாளன் தீக்குளிக்க சொல்லியிருக்கிறானா.. சட்டென்று உணர்ச்சிவயபடுபவரின் முடிவை எப்படி அறிவோடு தொடர்பு படுத்தமுடியும் அதை எப்போதுமே கண்டித்துவந்திருக்கிறோம்.. தூண்டி விட்டதில்லை. மண்டல் கமிஷன் பரிந்துரைக்காக தீக்குளிக்க வைக்க மூளைச்சலவை செய்தது யார்.. பாதிரியாரை குடும்பத்தோடு எரித்ததும்..குஜராத்தில் முஸ்லிம்களை கொன்று எரித்ததும், வயிற்றை கிழித்து சிசுவை வெளியே எடுத்து வீசியதும் இந்த ஆன்மீக வெறிதானே காரணம்.. எதிலாவது மதகலவரத்தை ஜாதி கலவரத்தை தூண்டிவிட வேண்டும் இதுதான் பாஜகவினரின் பணி.. அதனால்தான் தினம் தினம் ஏதாவது பேசி திருப்பிவிடுகிறார்கள் .. .. இதோ இப்போது கூட விடுதலைச் சிறுத்தைகளை கட்டபஞ்சாயத்து கட்சியென தனிமைப்படுத்த பார்க்கிறது பாஜக.. வி.சி தோழர்களோடு பாஜக மோதல் என செய்திகள் வருகின்றன.. இங்கே மதவெறியை தூண்டலாமென்ற நினைப்பில் மண் விழுந்ததால் காரணம் நிறைய இஸ்லாமிய அமைப்புகள் தி.க.வோடும் திராவிட இயக்கங்களோடும் இணைந்து செயலாற்றுகின்றன பெரியாரை கெட்டியாக பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.. அதனால் அவர்களின் எண்ணம் ஈடேறவில்லை என்றவுடன் சாதியை கையிலெடுக்க முனைகிறார்கள் இடைச்சாதி கடைச்சாதிக்காரனுக்கிடையே கொம்பு சீவும் வேலை நடந்துவருகிறது குறிப்பாக கடைச்சாதிக்காரன் பிரித்து வைக்கும் சதியின் தொடக்கம் தான் பட்டியிலிருந்து விலகுகிறேன் என்பதும் கட்டபஞ்சாயத்துகாரனாக மக்கள் முன் பிம்பத்தை கட்டமைப்பும் கூட.. எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.. தினம் தினம் பாஜகவினர் கலவரத்தை ஏதோவொரு வழியில் தூண்ட வாய்க்கு வந்ததை பேசி திரிகிறார்கள் கருத்தோடு மட்டுமே நாம் மோத வேண்டும் .. நாம் இவர்களை கிறுக்கனைப்போல எண்ணிக்கொண்டிருக்கிறோம்.. உண்மையில் இவர்களை போன்றவர்கள் தான் பேரழிவுக்கு காரணமாக இருந்திருக்கிறார்கள் .. #எச்சரிக்கை.. .. Aalanci Spm

Monday, October 23, 2017

ரெய்டு

ரெய்டு.. மத்தியில் ஆள்வோருக்கு .. தங்களோடு இணங்காதவர்களை மிரட்ட பயன்படுத்த பெரிதும் பயன்படுவது.. இதில் காங்கிரஸ் பாஜக என்றெல்லாம் இல்லை என்ன பாஜக எல்லோரையும் நேரடியாகவே மிரட்ட பயன்படுத்துகிறது காங்கிரஸ் கொஞ்சம் ராஜதந்திரத்தை பயன்படுத்தும் அவ்வளவுதான்.. .. காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக விலகிய மறுநாளே தளபதி வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடந்தது.. உதயநிதியின் ஹம்மர் கார் முறைகேடாக வாங்கபட்டதாக ஊடகங்கள் செய்திகூட வெளியிட்டன .. காலைநேர உடற்பயிற்சிக்காக தளபதி நடைப்பயணம் சென்றிருந்த நேரத்தில் அதிகாலையில் ரெய்டு.. வீட்டுக்கு வந்த தளபதியார் காரை வருமானவரித்துறை அலுவலகத்திற்கு கொண்டுபோய் விட சொன்னார் உங்கள் சந்தேகங்கள் தீர்ந்த பிறகு கொண்டுவந்து தந்தால் போதும் என கூறி காரை அலுவலகத்தில் விட்டுவிட்டு வந்துவிட்டார்கள்.. வேறு வழியின்றி அதிகாரிகளே காரை திருப்பி கொண்டுவந்து தந்துவிட்டு போனார்கள்... .. இப்போதெல்லாம் அரசியலுக்காக அல்ல எதிர்கருத்தை சொன்னாலே வருமானவரி சோதனை தான் .. இதனால் பெரிதாக சாதித்துவிட முடியாது மிரட்டலாம் ..அல்லது பணியவைக்கலாம் மனஉளைச்சலை தரலாம்.. அடக்கிவாசிக்க மறைமுகமாக எச்சரிக்கலாம் வேறொன்றும் செய்துவிட முடியாது .. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த ஜெயலலிதாவே 15 ஆண்டுகளுக்கு பிறகு .. வரியும் வட்டியும் அபராதமும் சேர்த்து செலுத்துவதாக சொல்லி வழக்கிலிருந்து வெளியே வரவில்லையா.. தண்டனையெல்லாம் கிடையாது.. இதெல்லாம் நாடகம் இந்த சட்டத்தால் ஒரு மசிரையும் புடுங்கமுடியாது.. அதிகபட்சமாக அபராதம் ..அவ்வளவுதான் ஏனெனில் நிறைய வழக்குகளில் வருமானவரித்துறை அபராதத்தை வாங்கிக்கொண்டு தண்டிக்காமல் விட்டிருக்கிறது.. ஆனால் சோதனை நேரத்தில் பெயரை கெடுக்க உதவும்.. 2ஜியில் கூட வளைச்சு வளைச்சு சோதனை செய்தும் ஒரு ஆதாரத்தை கூட எடுக்க முடியவில்லை.. ஆதாரங்களை எடுத்த வழக்குகளிலே கூட இதுவரை தண்டிக்கபட்டதாக அறிவில்லை.. ஆனால் அந்த நேரத்தில் பெயரை கெடுக்க முடியும் ஊடகங்கள் அதை பெரிது படுத்தும் அவ்வளவுதான்.. .. விஷால் அலுவலக ரெய்டு விஜய்க்கு முன்னறிவிப்பு..அவ்வளவுதான் மானகெட்டுப்போய் திருட்டுத்தனமா நெட்ல பார்த்ததாக சொன்னவரை வெட்கமில்லையா என கேட்டதற்கு சின்ன மிரட்டல் இதெல்லாம் ஒன்னுக்கும் உதவாது ஆனாலும் சிலர் வாய் மூட இது பெரிதும் உதவும் நமக்கேன் வம்பென சிலர் மாறி செல்ல உதவும் அதுதான் அவர்களுக்கு வேண்டும்.. .. வருமானவரித்துறை ஆளும் கட்சியின் கைப்பாவை(பொம்மை) The income tax department is the slave of governance .. Aalanci Spm

Sunday, October 22, 2017

தமிழிசையின் பகை தீர்த்தல்

அக்கா தமிழிசைக்கு நன்றி.. உள்ளுர் தொடங்கி உலகளாவிய அளவில் மோடியை வச்சு செய்றாய்ங்க.. மோடியை இந்தளவிற்கு கேவலபடுத்த காரணமான தமிழிசைக்கு என் பாராட்டுக்கள்.. .. கருத்து சுதந்திரம் எதுவென்று அறியாமல் எல்லாவற்றையும் எதிரிக்கும் அறிவிலித்தனம் இந்த நிலைக்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.. எதை தடையை வேண்டிமென தணிக்கை குழுவிற்கு சில பின்பற்றும் முறைகள் குறித்து நீண்ட விளக்கம் அளிக்கபட்டிருக்கும் தனிநபரை சாடல்.. இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுதல் செயல்படுதல் போன்ற காட்சிகள்.. வன்முறையை அதிகமாக காட்டுதல்.. குறிப்பிட்டு மதவிடயங்களை கேலி செய்தல் .. அல்லது மிகைப்படுத்தி காட்டுதல் ஒரு சாராரை குறைவாக பேசுதல் போன்ற வரையறுக்கபட்ட விடயங்கள் உண்டு .. அரசையோ அல்லது இயக்கங்களையோ (கட்சி, அமைப்புகள்) போன்றவற்றை விமர்சிக்க ஆதரித்து கருத்தை சொல்ல தடையில்லை அதில் விசரமான சொல்லாடல்கள் கூடாது அவ்வளவுதான்.. மிக மோசமான அல்லது சாரசரிக்கும் கீழான ஒரு படத்தை மிகப்பெரிய வெற்றி ஆக்கியதோடு அல்லாமல் பாஜகவை உலகளவில் அசிங்கபடுத்திய செயல் உண்மையிலேயே நாட்டிற்கு நல்லது செய்திருக்கிறார்.. .. ராகுல் ட்விட் உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.. மோடியின் முகமூடியை கிழித்து தொங்கவிட்டதைப்போல... பலநாட்கள் கட்டமைத்த போலி பிம்பம் கலைய தொடங்கியிருக்கிறது அரபு நாடுகளின் செய்திதாள்கள் ஒரு சினிமா வசனத்திற்கு இத்தனை முக்கியத்துவம் தந்ததில்லை..வடநாட்டு ஊடகங்கள் நல்ல சந்தர்பத்தை எதிர்பார்த்ததைப்போல நேற்றும் முன்தினம் விவாதித்து பாஜகவின் கொடூர முகத்தை சிறிய விமர்சனத்தை கூட ஏற்கமுடியாத பக்குவற்ற செயலை மக்களுக்கு எடுத்து சென்றன.. ஆங்கிலேயன் காலத்தில் கூட இப்படியொரு கருத்துக்கு தடை இல்லையென்று சொல்கிற நிலைக்கு வந்து நிறுத்தியிருக்கிறது. .. கோடிகளில் வியாபாரம் நடக்கிறது.. தயாரிப்பாளரை மிரட்டியும் வருமான வரித்துறை ரெய்டு வருமென விஜயை மறைமுக எச்சரித்தும் பலிக்கவில்லை.. ராகுலை தொடர்ந்து தளபதி அறிக்கை ராமநாராயணன் குடும்பத்தை வெளியே வந்து #முடியாதென சொல்ல வைத்திருக்கிறது.. ஆனாலும் இன்னமும் துள்ளிக்கொண்டிருக்கிறார் தமிழிசை.. இன்னும் கோபம் தீர்ந்தபாடில்லை.. சும்மாவா.. தன் முத்தச்சிக்கு முலைவரி விதித்தவர்களை்...,தர மறுத்து முலையறுத்த முத்தச்சிக்காக பகை தீர்க்கிறார்.. .. #மகிழ்ச்சி_தமிழிசை.. .. Aalanci Spm

Saturday, October 21, 2017

ஜோசப் விஜய்

ஜோசப் விஜய்.. சந்திரசேகர் என்ற இந்துவுக்கும் ஷோபா என்ற கிருஸ்துவருக்கும் பிறந்தவர்.. ஷோபாவை காதலித்து.. சந்திரசேரன் கிருஸ்துவராக மாறி ஷோபாவை திருமணம் முடித்தார். இரு குழந்தைகள் ஜோசப், விஜி பெண் குழந்தை சிறுவயதிலேயே இறந்து போனது .. ஜோசப்பை சினிாவிற்கு கொண்டுவந்த போது அவர் பெயரை விஜய் என மாற்றிக்கொண்டார் .. இன்று பிரபலமாக அறியபடுகிற விஜய்.. எரிச்சல் வருகிறதா அப்படியெனில் ஜோசப் விஜய் .. இதில் எங்கிருந்து அரசியல் வந்தது.. யார் யாரை திருமணம் செய்து கொண்டால் இந்த சர்மாவிற்கென்ன வந்தது.. கிருஸ்துவர் பேசலாமா என்கிறாரா.. அல்லது அறிவு கொழுந்து இல.கணேசன் இந்துக்கள் போராட்டம் நடத்துவார்கள் என்றாரே அந்த இந்துக்கள் GST யை ஏற்கிறார்களா அவர்களுக்கு பாதிப்பில்லையா.. யஷ்வந்தும் அருண்ஷோரியும்.. ஏன் பண மதிப்பிழ்ப்பை ஆதரித்தமைக்கு மன்னிப்பு கோரினாரே கமல் அவரை ஏன் விமர்சனம் செய்யவில்லை.. ஒன்று பிஜேபிக்காரர் அல்லது பார்பனன் அதனால்தானே.. சில காவிகள் எப்படி அரசு திட்டத்தை விமர்சனம் செய்யலாம் ஆலோசனை சொல்லலாமே தவிர விமர்சனம் செய்ய கூடாதென்கின்றார்கள் ஆலோசனை சொல்ல அதிகாரிகளும் அமைச்சர்களும் இருக்கிறார்கள் .. பாதிக்கப்பட்டவன் தான் விமர்சிப்பான்.. பாதிக்கப்பட்டவன் சார்பில் சினிமாவில் கதாநாயகன் பேசுகிறான்.. கோபம் வருகிறதா அப்படியெனில் GST மீதான விமர்சனம் சரியாக தானே இருக்கிறதென்றே பொருள்.. .. யார் இந்த சர்மா.. மக்களை சுரண்ட அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி வட்டிக்குவிட்டு பிழைக்க வந்தவர் தமிழகத்தின் அரசியலில் அவருக்கென்ன வேலை .. ஆரம்பத்திலேயே கிள்ளியெறிந்திருக்கவேண்டும் வளர்ந்து விசசெடியாக நிற்கிறது .. தினம் தினம் துவேஷ கருத்துக்களை சொல்லி மக்களை பிரிக்கிறது.. இந்துவா இருந்தாலென்ன முஸ்லிமாக இருந்தால் என்ன.. பாஜகவை எதிர்த்தால் தேசவிரோதி.. காலூன்றாத போதே இத்தனை அலப்பரைகள்.. தமிழகத்திலிருந்து விரட்டபடவேண்டியவர் எச்.ராசா இந்த மண்ணிற்கோ இனத்திற்கோ மொழிக்கோ சொந்தகாரர் இல்லை எங்கிருந்தோ பிழைக்க வந்தவர் இங்கேயே பிறந்து வளர்ந்த நம்மை பார்த்து தேசவிரோதியாக மதத்தின் பேரில் சாதியின் பெயரில் பிரித்து குளிர்காய நினைக்கிறவர்.. ஆட்சி அதிகாரம் அடிமைகள் தமக்கிருப்பதால் எதைவேண்டுமானாலும் பேசலாமென்று நினைக்கிறார் .. மக்களிடையே பிரிவினையை சாதிமதவெறியை ..ஏற்படுத்தி ஒற்றுமையாக வாழும் தமிழ்நாட்டு மக்களிடம் கெடுஎண்ணத்தை விதைக்கிறார்.. இங்கே இந்துவோ கிருஸ்துவரோ முஸ்லீமோ .. எல்லோரும் தமிழர்களாய் திராவிடர்களாய் வாழ்கிறார்கள்.. ஒற்றுமையை சீர்குலைக்கும் எச்.ராசா போன்ற விசகிருமிகளை விரட்டப்படவேண்டும்.. .. திருமுருகனோ தா.பாண்டியனோ மனுஷபுத்திரனோ ஜோசப் விஜயோ இவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் திராவிடர்கள் என்னதான் கத்தினாலும் ராசா வந்தேறி தான்.. .. இது வேறு களமென உணர்த்தவேண்டும்.. இனி.. #ஹரிஹரிராஜாசர்மா என்றழைப்போம் .. Aalanci Spm

Friday, October 20, 2017

விமர்சனம்..

மக்கள் கை தட்டினால் அதை நல்ல கருத்து என்று ஏற்றுக் கொள்ள முடியாது..தமிழிசை மெர்சல் படத்தில் வரும் GST தொடர்பான வசனங்களை நீக்கவேண்டும்.. பாஜக தொண்டனின் இரத்தம் பாரத ரத்தம் புகழ் பொன்னா்.. விஜய் வருமான வரிஏய்ப்பைப் பற்றி படமெடுப்பாரா எச்.ராசா.. .. ஒரு சினமா வரும் சில வசனங்களை கூட எதிர்க்கிறார்கள் அவர்களால் விமர்சனங்களை ஏற்க முடியாது ..எதிர்கருத்தை தவறென்று விவாதிக்க தெரியாது காரணம் பொய்யை ஆதாரமாக கொண்டவர்களால் உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் வராது.. மோடி பிரதமராக ஏற்று மூன்று வருடங்கள் கடந்தும் பதிரிக்கையாளர்களை சந்திக்க பயப்படுகிறார் ..நாடாளுமன்றத்தில் நேர்நின்று விவாதிக்க முடியவில்லை ஓடியொளிந்து கொள்கிறார்.. தவறை ஒப்புக்கொள்ள தைரியமில்லை.. .. கருத்து சுதந்திரம் என்ற வார்த்தையே பாஜகவிற்கு அலர்ஜி (ஒவ்வாமை) எப்போதுமே தாங்கள் சொல்வது மட்டுமே சரி எதிர்கருத்தை சொன்னால் தேசவிரோதி இதுமட்டும் தான் அவர்கள் அறிந்த ஜனநாயக நெறி.. 2ஜி பற்றி பேசிய போது விஜய் ஆக தெரிந்தவர் இப்போது ஜோசப் விஜயாக தெரிகிறார்.. ஒரு கிறுக்கன் சென்சாரில் (தணிக்கை) ஜிஹாதிகள் நுழைந்துவிட்டார்களென புலம்புகிறான்.. ஒரு படத்தை வெற்றி பெற செய்ய இது உதவுமே தவிர கருத்து வெகுமக்களை சென்றடைந்துவிட்டது.. இனி ஒப்பாரிகளுக்கு வேலையில்லை.. .. எந்தவொரு கருத்தை கண்டுக்கொள்ளாமல் விட்டால் அது பெரிய எதிர்வினையாற்றாது போய்விடும்.. உதாரணம் இருவர் திரைப்படம்.. நிறைய பேர் கலைஞரிடத்தில் வந்து படத்தை திரையிட கூடாதென சொல்லுங்கள் என்ற போது பிடித்தால் பார் இல்லையென்றால் பார்க்காதே என்றார்.. எந்த எதிர்கருத்தும் சொல்லவில்லை .. ஒருவருக்கு அவர் பார்வையில் கருத்தைச் சொல்ல உரிமை இருப்பதை அறிந்திருந்தார் அதனால் நிறைய விமர்சனங்களுக்கு அவர் பதில் கூறுவதில்லை .. இருவர் படம் படுதோல்வி.. மற்றொரு உதாரணம் ரோஜா படம் ஆரம்ப நாட்களில் தியேட்டர்களில் காலியாகவே இருந்தது இஸ்லாமிய அமைப்புகள் தடைசெய் என கூக்குரல் இட்டதிற்கு பின் அது வெற்றிபடமானது.. திரைப்படங்களின் கருத்துக்களை பொழுதுபோக்காக கண்டு ரசிக்கிறவனை எதிர்ப்புகள் சிந்திக்கவைக்கும்.. அது பராசக்தி முதலே அறிந்தது தான்.. விஜய் போன்ற பிரபலமான நடிகரின் படமென்பதால் அது வெகுமக்களிடம் சென்றடையுமென பயப்படுகிறார்கள் பாஜகவினர்.. அதற்கு முன்பே சமூக வலைத்தளங்கள் கொண்டுபோய் சேர்த்திருக்கிறது அதன் தாக்கம் தான் பாஜகவின் தோல்விகள்.. .. படம் அவ்வளவொன்று பிரமாதமில்லை ஆனால் பிரமாதமாக்க போராடுகிறார்கள் தமிழிசை வகையறாக்கள்.. ஆனால் பாருங்கள் மக்கள் செல்வாக்கு இல்லாதவர்களின் குரல் ஆனாலும் அதிகாரமிருக்கிறதென்பதால் ஆடுகிறார்கள்.. காட்சிகளை நீக்க சினிமாகாரர்கள் ஒப்புக்கொள்ளலாம்.. ஆனால் சினிமா மூலம் மட்டுமல்ல இவர்களின் எதிர்ப்பு குரல் மூலம் கூட வெகுஜனங்கள் விரைவாக சென்றடைந்திருக்கிறது. .. விமர்சிப்பவர்களை மிரட்டும் போக்கு நீண்டநாள் நிலைக்காது.. எதிர்வினையாற்ற தொடங்கினால் ஆழ புதைந்து போவீர்.. பாஜகவை தமிழகத்தில் புதைக்க தமிழிசை அக்காவே போதும்.. இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் தமிழிசை அவர்களே.. .. #வெகுவிரைவில்_புதைக்கப்படுவீர்.. .. Aalanci Spm

Thursday, October 19, 2017

வயிறு எரிவோரே..

கலைஞர் இல்லாமல் கட்சி நடத்த முடியாதா .. வயதான காலத்திலே ஏன் தொந்தரவு பண்ணுறேள்.. கலைஞர் வந்துவிட்டார் இனி வெற்றிடம் இல்லை என பத்திரிக்கையாளர் மாலன் .. நிறைய புலம்பல்கள் கேட்கிறது.. இந்த வயதிலும் உங்களை புலம்ப வைத்திருக்கிறார் பாருங்கள் அதில்தான் எங்களின் வலிமை தெரிகிறது.. .. முதலில் கலைஞரை தொந்தரவு செய்வதல்ல வயதானால் வீட்டிலேயே முடக்கிவைத்து .. அல்லது முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடும் கூட்டத்திற்கு இதெல்லாம் தெரியாது .. வாஜ்பாயை அத்வானியை புறம்தள்ளியதை போல எங்களால் முடியாது.. ஏனெனில் நாங்கள் நன்றி மறக்காத வம்சம்... கலைஞரை தொந்தரவு செய்வதல்ல.. மூத்தோரை மதித்தல் ஆலோசனை பெறுதல் எப்படி எங்ஙனம் பகை தீர்க்கவேண்டுமென கேட்டு அதன்படி செய்தல்.. அதனால்தான் அவரை பாதுகாத்து வருகிறோம்.. இன்னமும் அவர் பெயர் கேட்டால் நடுங்குகிறார்களே அப்போது தெரியவில்லையா எங்கள் இனத்தின் #பெரும்தலைவனென்று.. பகை முடிக்க எங்கள் கையிலுள்ள பேராயுதம் கலைஞர்.. .. கலைஞர் இல்லாமல் கட்சியை நடத்த முடியாதா என்போரே இதோ இப்போது கூட மாவட்ட செயலர் கூட்டம் பேராசியர் பெருந்தகை தலைமையில் நடைபெறுகிறதே.. இதோ நவம்பர் 7 முதல் எழுச்சி பயணம் துவங்குகிறார் #தளபதி அவர்கள் .. தினமும் மக்கள் பிரச்சனையை கேட்டு மக்களோடு நின்று போராடி .. களப்பணியை தானே நேர்நின்று நடத்தும் தளபதியார் .. செயல்பட்டுக் கொண்டுதானிருக்கிறது திமுக.. இப்போது கூட எதிர்க்கட்சிகள் ஆளும்கட்சியை விமர்சிப்பதை விட்டுவிட்டு தளபதியை திமுகவை விமர்சிப்பதிலிருந்தே தெரியவில்லையா .. தலைமை அவர்தானேன்று.. வீறுகொண்டு செயலாற்றுவது கண்டு பதறுகிறதே.. புரியவில்லையா.. புரிந்தும் குழப்பம் விளைவிக்க எண்ணி நீவிர் செய்யும் சூழ்ச்சி புரிகிறது.. அதனால் தான் மாலன் கலைஞர் வந்துவிட்டார் வெற்றிடமில்லை என கேலி செய்கிறாராம்.. எப்போது இருநிதது வெற்றிடம் .. அண்ணா மறைவிற்கு பிறகு கூவி பார்த்தீர் மகோராவை கொம்பு சீவியும் பார்த்தீர்.. கலைஞர் உடல் நலிவுற்ற போது முடிந்தது திமுக என்றெல்லாம் சொல்லி பார்த்தீர்.. ஒன்றும் நடக்கவில்லை காரணம் இங்கே கொள்கையால் இணைந்த கூட்டமிது.. பணத்தை பவுசை, காட்டி கூடிய கூட்டமல்ல.. மதம் சாமி ஜாதி என பொய்யான கட்டமைப்பில் உருவான இயக்கமல்ல.. அடிமட்டத்தில் நிற்பவனை .. உயர்த்தி பிடிக்க.. சமூக நீதியை சமமான நீதியை பெற்று தர சரியான அடித்தளமிட்டு .. எப்போதும் மக்கள் பணியாற்றும் இயக்கம் இது.. இதற்கு தோல்வி இல்லை.. ஏனெனில் திமுக.. இனத்திற்கான மொழிக்கான மக்களுக்கான ஜனநாயக பேரியக்கம்.. .. #எதிரிகளே_எரிகிறதா.. நாங்கள் சரியான பாதையில்.. .. Aalanci Spm

எம் இனத்தின் ஈரம்

தி இந்து தேர்தல் வந்தால் திமுக 71% வாக்குகள் பெறுமென சொல்கிறது.. இந்து ஆரம்பகாலங்களில் திராவிட எதிர்ப்பை அதிகமதிகம் பதிவு செய்திருந்தாலும் திரு.ராம் வரவிற்கு பிறகான பார்வை நிறைய மாற்றங்களை கொண்டது.. அவர் நாத்திகராக தன்னை காட்டிக்கொண்ட போதும் அதையெல்லாம் மீறி இந்த மவுண்ட்ரோட் மகாவிஷ்ணு நம்மை பார்த்து சிரித்த காலமுண்டு.. தெற்கிலிருந்து ஒரு சூரியன் நல்ல தொடக்கம் நம் எதிரியாக அறியபட்டவர்களையே நாம் பேச வைத்திருக்கிறோம்.. இது திராவிடத்தின் வெற்றி.. இனியும் நிறைய வருவார்கள். .. திரு.ஸ்டாலின் தவிர்க்கமுடியாத தடையமுடியாத பெரும் சக்தியாக வளர்ந்து வருகிறார்.. மிக நீண்ட வரலாறு கொண்டிருந்தாலும் அதிக காலம் பிடித்திருக்கிறது.. தன்னெச்சையாக சுழல.. ஆலமர நிழலில் எதுவும் வளராதெனிபதை போல கலைஞரின் நிழலில் நின்று கொண்டிருந்ததால் இவருக்கு கிடைக்கவேண்டிய அங்கீகாரங்கள் தாமதமானதே தவிர ..அது கூட சிறந்த பயிற்சிகாலமாக கருதி மக்கள் பணியாற்றினார்.. கலைஞரின் வயதும் உடல்நலிவும் அவரை ஓய்வில் நிறுத்திய போது சிலர் அவ்வளவுதான் திமுக என நினைத்தனர்.. உடனே பொதுக்குழுவை கூட்டி செயல்தலைவராக பொறுப்பேற்று இயக்க செயல்பாட்டை முன்னெடுத்தார்.. கலைஞரைப்போல இல்லை என்ற விமர்சனம் வந்தது கலைஞரைப்போல எங்கு தேடினும் கிடைக்காது கலைஞர் கலைஞர்தான் ஆனால் அவர் ஆற்றிய பணியை முன்னெடுக்க சரியான பாதையில் கொண்டுச் செல்ல சரியான நபரை இயக்கம் அடையாள காட்டியது பாருங்கள் அங்குதான் திராவிடத்தின் வேரின் ஈரம் இன்னமும் இருக்கிறதென்பதை காட்டுகிறது. .. தி மு கழகம்.. இனத்தின் மொழியின் ஈரப்பதம்.. ஆம் அளவில் சிறது குறையலாம் சிலநேரம் ஈரப்பதம் அதிகமாகலாம் ஆனால் அந்த ஈரப்பதம் இல்லாமல் போனால் வறண்டு மலடாகிப்போகும் எம் இனம்.. நிறைய முறை தோற்கடிக்கிறார்கள் அதே வேளை முன்னெப்போதுமில்லாத அளவில் வெற்றிப்பெற வைத்திருக்கிறார்கள்.. ஆம் சிலநேரம் தோல்வி வெற்றியோ ஆனால் கைவிடவில்லை.. மண்ணின் ஈரப்பதத்தைப்போல கூடுதல் குறைவு அவ்வளவுதான்..திமுக தமிழகத்தின் மைய சக்தி அதை சுற்றிதான் பிற கட்சிகள் இயங்க முடியும் இப்போது கூட ஆளும்கட்சியை சகிக்கமுடியாத போது கூட நம்மைபற்றிதான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.. முன்பு கலைஞரை மய்யபடுத்திவர்கள் இப்போது தளபதியாரை சுற்றியே அரசியல் செய்கிறார்கள்.. அவர்களும் பிழைக்கவேண்டுமே.. தன்னை சுற்றியே அரசியலை இயங்க செய்தவர் கலைஞர் .. அதையே பின் தொடர்கிறார்.. .. #இனி_தளபதி ..

Wednesday, October 18, 2017

மேதாவி..கமல்

#அரசியல்.. பண மதிப்பிழப்பிற்கு ஆதரவு தந்தமைக்கு பகிரங்க மன்னிப்பை கோருகிறார் கமல்.. இன்னும் நிறைய இருக்கிறது.. தூய்மை இந்தியா பசுவை கருணையோடு நேசிப்பவர்கள்.. எல்லாம் தெரிந்தவனை போல பேசும் முன் அதை குறித்த அறிவு அவசியம் ..அதுசரி அரசியலுக்கு வருவதற்கு அறிவெதெற்கு என்கிற நிலை.. மகோரா (எம்ஜிஆர்) வரவிற்கு பிறகு ஏற்பட்டதால்.. சாயம் பூசியவர்கள் வெளியில் நடிக்க தொடங்கிவிடுகிறார்கள்.. .. என்னவொரு அவலம்.. ஆற்றில் நுரை வருவது சோப்பு போட்டு குளிப்பதால் என்கிறவர்களை ..அமைச்சர்களாக்கியதின் விளைவு யார் வேண்டுமானாலும் வெட்கமின்றி எதுவும் பேசலாமென்ற நிலைக்கு வந்திருக்கிறது..பாஜகவினரின் ரத்தம் பாரத ரத்தமென்கிற கொடுமையெல்லாம் கேட்டு சகிக்கவேண்டியிருக்கிறது.. இதோ .. பாரத பிரதமரே.. GST குறித்து நானென்ன பொருளாதாரம் தெரிந்தவனா தனியாக முடிவெடுக்க காங்கிரஸும் கூட்டாளி என்று கதவை சாத்த பார்க்கிறார்.. காங்கிரஸ்18% விழுக்காடுக்கு மேல் போககூடாதென்றும் தேவையில்லையெனில் மாநிலங்கள் விலக்கு பெறலாம் என்ற போதுகூட குஜராத்தில் அமர்ந்துக்கொண்டு என் பிணத்தின் மீதுதான் GST குஜராத்தில் கொண்டுவர முடியுமென வசனம் பேசியது யார்..? .. தூய்மை இந்தியா என்று துடைப்பத்தை தூக்கிவந்து (show) காட்சி தந்தால் இந்தியா தூய்மையாகிவிடும் என நம்புகிற அரசியல் அறிவுதான் கமலுடையது .. களநிலவரம் அறிதல், சாமானியரை பற்றிய சிந்தனை, குழப்பில்லாத பாதை தெளிவான நோக்கம் இவையெல்லாம் வேண்டும் அடுத்தபடம் பிரச்சனை இல்லாமல் வரவேண்டுமென்பதற்காக வளைந்து நிற்பதல்ல.. கமலிடம் காண்பது .. முதிர்ச்சியின்மை மட்டுமல்ல.. மூலம் எதுவென்றும் புரியாமை.. ஒருமுறை இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் கமலிடம் அதிமேதாவித்தனத்தை திரையில் காட்டாதே என்றார்.. ஆம் மேதாவித்தனமாக காட்ட நினைத்தால் வீழ வேண்டிவரும் இது அரசியலுக்கும் பொருந்தும்.. பாமரனின் தெளிவு மேதாவிகளாக எண்ணிக்கொண்டிருப்போரிடம் இருக்காது.. .. அரசியலில் ஜனநாயகமென்பது எந்தளவிற்கு தேவையென்பதை நேருவின் பதிலே போதும்.. படிக்காதவர்களுக்கு வாக்குரிமை தராதே என்று ஆங்கிலேயன் சொன்னபோது அவர்களும் தான் என்தேசமென்றவர்.. அவர்கள்தான் சிறந்த ஜனநாயகவாதிகள்.. ஆம்.. அறியாமை அல்ல அவன் எல்லாம் அறிந்தவன் ஆனால் எல்லாமறிந்தவனைவிட நன்கு உணர்ந்தறிந்தவன்.. சாமானியனை புறம் தள்ளிய எதுவும் நிலைத்திடாது.. அவன் மௌனமாய் நகர்கிறானெனில் அதில் ஆயிரம் பொருளுண்டு .. மேதாவிகள் வேசம் கட்டுவோரே.. சாமானியரின் அறிவுமுன் நீங்களெல்லாம் சுன்னம் (0) .. மேதாவித்தனத்தை மேக்கப்போடு வைத்துக்கொள்ளுங்கள்.. நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் கமல்.. .. Aalanci Spm.

Tuesday, October 17, 2017

சாதியற்றவர்கள்

#சாதியற்றவர்கள்.. கேரள அரசு சாதி மத மறுப்பு திருமணம் செய்துக்கொண்டவர்களை சாதியற்றவர் என்ற நிலையை உருவாக்கி இடஒதுக்கீடு அளிக்கப்படும் ..நல்ல செய்தி கலப்பு திருமணம் என்பது தவறு மனிதனும் மிருகமும் திருமணம் செய்துக்கொள்ளவதில்லை .. மாறாக சாதியை மதத்தை மறுத்து பிற சாதி மத சேர்ந்தவர்களோடு வாழ்வது சாதிய கட்டமைப்பபை உடைக்கும்.. சம நீதி வெளிபடும்.. .. கேரளாவில் இதெல்லாம் சாத்தியபடும்.. அங்கே சாதி மீறல்கள் ஒரு பிரச்சனையல்ல அவர்களின் விருப்பம் தனியுரிமை அவர்களின் தனிப்பட்ட (Personal) விடயங்களில் யாரும் தலையிடுவதில்லை நிறைய மத மறுப்பு திருமணங்கள் அங்கே சாதாரணம்.. Maturity முதிர்ச்சியான போக்கு கைரளியர்களிடம் உண்டு.. கோட்டயம் மலப்புரம் பாலக்காடு என குறிப்பிட்ட மாவட்டங்களில் மதம் பெரியளவில் ஆதிக்கம் செலுத்தினாலும் அங்கும் மதத்தை மீறிய திருமணங்கள் நடந்துக்கொண்டுதானிருக்கிறது.. தமிழகத்தில் நடப்பதைப்போல சாதிய கொலைகளை (அதென்ன கௌரவகொலை- சாதிய கொலையென்றுதான் சொல்லவேண்டும்) நடப்பதில்லை அரிதாக சில வேறு சில காரணங்களுக்காக நடந்திருக்கலாம் சாதிய மறுப்பு செய்துக்கொண்டார் சாதியிலிருந்து தள்ளிவைக்கும் பழக்கமெல்லாம் அங்கே வேகாது .. சபரிமலைக்கு சென்றாரென்பதற்காக யேசுதாஸை மதத்திலிருந்து வெளியேற்றி பின் அசிங்கபட்ட சம்பவமெல்லாம் உண்டு.. .. தமிழகம் போன்ற சாதிய ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்களில் இன்னும் சிலகாலம் பிடிக்கும் ஆனால் நல்ல தொடக்கத்தை தோழர்.பிரணாயி விஜயன் துவங்கி வைத்திருக்கிறார்.. கம்யூனிஸ்ட் கட்சி இப்போதுதான் சரியான பாதையில் செல்கிறது .. அதன் தலைமையில் பார்பனர் ஆதிக்கம் அதிகமிருந்தது இப்போது அது தளர்ந்ததால் இது போன்ற முற்போக்கு கருத்துக்கள்/விடயங்கள் பேச/விவாதிக்க செயல்படுத்த முடிகிறது.. திராவிடர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ள தொடங்கியதிலிருந்தே கர்நாடகம் கேரளமென தேசியளவில் மாறுப்பட்ட கருத்தை சொல்ல தொடங்கியிருப்பது நல்ல ஜனநாயகத்தை விதைக்கிற செயல் குறிப்பாக மதவெறியை உள்ளே விடாமல் விரட்டியடிக்க .. அவர்கள் எதை கொண்டு மக்களை பிரித்தாள நினைக்கிறார்களோ அதையே இல்லாதாக்கினால் அவர்கள் தளர்ந்து போவார்கள்.. தலித்தை இடைசாதிகாரனையும் பிரித்து சாதிவெறியை ஊட்டி குளிர்காய நினைக்கும் ரத்தம் செத்த கூட்டம் தளர தொடங்கியிருக்கிறது.. சாதி சொல்லி பிரித்தர நம்மை முட்டாளாக்கியவர்கள் விரட்டியடிக்கபடவேண்டும் நல்லதொடக்கமிது.. #மகிழ்ச்சி .. #திராவிடம் .. Aalanci Spm

Monday, October 16, 2017

ஜனநாயகம்

சுயேட்ச்சைகளை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது பாஜக.. பாஜகவிற்கு ஜனநாயகத்திற்கு எப்போதுமே தொடர்பில்லை..அனைத்து சட்டங்களையும் மரபுகளையும் நெறிமுறைகளையும் மீறுவதுதான் பாஜக.. எவரும் 25 வயதை கடந்தால் இந்தியாவில் எங்குநேண்டுமானாலும் போட்டியிடலாம்.. அந்த தொகுதி சேர்ந்த 10 பேர் மனுவில் பரிந்துரைத்து கையெழுத்திட வேண்டும்.. நிறைய பேர் போட்டியிடுவார்களே என்றால் அது அவர்களின் உரிமை கட்டுபடுத்த முடியாதா என்றால் வைப்புதொகையை அதிகமாக்கலாமே தவிர போட்டியிட கூடாதென சொல்ல இங்கே யாருக்கும் உரிமையில்லை.. .. என்ன பயம் சில தொகுதிகளில் கட்டிவைத்த பணம் (டெபாசிட்) கிடைக்கவில்லை என்பதற்காக பாஜகவிட தனி நபர்கள் அதிகம் வாக்குகளை பெறுகிறார்கள் என்பதற்காக சட்டத்தை வளைக்க நினைக்கிறார்கள்.. மோடியின் சாயம் வெளுக்க தொடங்கியிருக்கிற வேளையில் எங்கெல்லாம் இவர்கள் அதிகார திமிரோடு ஆட்டமாடினார்களோ அங்கேயெல்லாம் குஜராத் உட்பட மக்கள் மௌனமாய் புரட்சி செய்துவருகிறார்கள்.. உள்ளாட்சிகளில்.. இடைதேர்தல்களில் தங்களின் கோபத்தை காட்டுகிறார்கள்.. ஊடகங்களும் கார்ப்பரேட் முதலாளிகளும் கட்டிய கோட்டை #காகிதத்தால் ஆனதென்பதை ..மக்கள் உணர தொடங்கியதின் விளைவு கண்முன் தெரிகிறது.. பணமதிப்பிழப்பு .. ஒரே இரவில் தன்னை மன்னராக எண்ணிக்கொண்டு அதிரடியாய் மக்களை தெருவில் நிறுத்திய கோமாளி அரசரின் செயல் இப்போதுதான் திருப்பி அடிக்க தொடங்கியிருக்கிறது.. மக்கள் வரிப்பணத்தை ₹25 ஆயிரத்திற்கு நிலக்கரியை வாங்கி ₹2500 விற்கும் அதுவும் தன்னை அரசனாக்கிய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு நிலை கண்டு கொதித்து போனதின் விளைவு தெரிய தொடங்கியிருக்கிறது.. எதை கேட்டாலும் திமிரோடு பதிலளிக்கும் அமைச்சர்கள் ..இனியாரும் இல்லை எம்மை எதிர்க்க என்ற அகம்பாவம் ..ஊடகங்களை விலைக்கி வாங்கிவிட்டால் போதுமென்கிற நினைப்பு இவையெல்லாம் காங்கிரஸ்காரர் கஷ்டபடாமலேயே வெற்றியை அடைய வழிவகுக்கிறது.. .. ஜனநாயகத்தை கேலிகூத்தாக்குறவரை பாஜக தனக்கு தானே குழிவெட்டிக்கொள்ளும் இது எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும்.. வெற்றி தோல்வியை தாண்டி ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களே வரலாற்றில் பேசபடுவார்கள்.. அவர்களின் கட்சியும்/இயக்கம் வேரூன்றி நிற்கும்.. .. ஜனநாயகம் மிகப்பெரிய சக்தி .. ஜனங்களே அதை தீர்மானிப்பார்கள்.. மக்களரசின் மாண்பே அதுதான் #ஜனநாயகம் .. Aalanci Spm

Sunday, October 15, 2017

சபரிமலையில் பெண்கள்

திருவாங்கூர் தேவசம்போர்டு கோபால கிருஷ்ணன்.. சபரிமலைக்கு பெண்கள் வந்தால் sex touriest spot ஆகும் என்கிறார் கூட நல்ல குடும்ப பெண்கள் வரமாட்டார்கள் .. தெய்வ நம்பிக்கை உள்ளோரை இதைவிட கேவலபடுத்த முடியாது.. சாமிகளெல்லாம் 40 நாட்கள் விரமிருந்து உணவில் கூட கட்டுப்பாடோடு இருப்பவர்களை .. பெண் பித்தர்களை போல சித்தரிக்கிறார்.. இதிலிருந்தே அவர்களின் எண்ணம் செயல் புரிகிறது.. .. ஒட்டுமொத்தமாய் பெண்களை தங்கள் வீட்டு பெண்களை போல எண்ணிவிட்டாரோ ..மன கட்டுபாடு பெண்களுக்கு இல்லையென்கிறாரா.. அல்லது ஆண்கள் சபலக்காரர்கள் என்கிறாரா.. பிற கோவில்களுக்கு பெண்கள் ஆண்களோடு செல்கிறார்களே .. அப்போதெல்லாம் நடக்காது ஆனால் சபரி பயணத்தில் அதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்.. மன உறுதியில்லாதவர்கள் பக்தர்கள்/கடவுள் நம்பிக்கையாளர்கள் என்கிறார்.. .. அறிவிற்கு இடமில்லாத போது அங்கே அறியாமையும் நம்பிக்கையின்மையும் சந்தேகமும் வந்து ஒட்டிக்கொள்ளும்.. ஒருவரின் நம்பிக்கையை இதைவிட கேவலப்படுத்த முடியாது.. உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வரும் நேரத்தில் இதுபோன்ற கருத்தை சொல்லவது நீதிமன்றத்தை கேலிக்குரியதாக ஏறக்குறைய மிரட்டுகிற செயல் இப்படிதான் தீர்ப்பு வேண்டுமென கேட்பதை போல இருக்கிறது.. சட்டம் என்ன சொல்கிறதென்பதை பார்ப்போம்.. .. கோவிலுக்கு வருகிற பெண்களை ஒழுக்கமில்லாதவர்கள் போல் சித்தரிக்க முயல்கிறார் அழுத்தமான ஆட்சேபம் வந்திருக்கவேண்டும்.. வராது .. இவர்களின் ஜகத்குரு காஞ்சி பெரியவர் .. வேலைக்கு போகிற பெண்களை விபச்சாரி என்ற போதே சுற்றிவளைத்து நகரவிடாமல் செய்திருந்தால் இன்றைக்கு கோபால கிருஷ்ணன்கள் இவ்வளவு தைரியமாக பேசியிருக்க முடியாது.. பெண்களை மட்டுமல்ல தூய்மையோடு வருகிற ஆண்களையும் கேவலப்படுத்திருக்குறார்.. .. சபரிக்கு பெண்களை அனுமதிக்கவேண்டுமென #நம்பூதிரி காலத்திலிருந்தே பேசபடுகிற விடயம்தான் இப்போதுதான் விடிவு பிறக்கும் நேரம் வந்திருக்கிறது.. கம்யூனிஸத்தை வளரவிடாமல் பார்பனர்கள் பார்த்துக்கொண்டார்களென பெரியார் சொல்வார்.. ஆம்.. இப்போதுதான் பொதுவுடமை அங்கே ஆட்சி செய்கிறது.. எல்லோரையும் அர்ச்சகராக்கி அழகுபார்த்து முன்னுதாரணமாய் திகழ்கிறது.. .. இனி.. #சபரிக்கும்_விடிவு_கிடைக்கும்.. .. Aalanci Spm

Saturday, October 14, 2017

பிரணாப்பின் வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் 2004ல் “காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் கைதான போது தான் மிகவும் கோபம் அடைந்ததாகவும், ஜனநாயக வரைமுறைகள் எல்லாம் ஹிந்து மதகுரு விஷயங்களில் மட்டும்தான் கடைபிடிக்க படுவதாகவும், இதே ஒரு முஸ்லிம் மதகுருவை முக்கியமான மதசடங்கு நடக்கும்போது கைது செய்ய முடியுமா என்று தான் அப்போது நடந்த கேபினெட் மீட்டிங்கில் கேள்வி கேட்டிருந்ததாக கூறியிருக்கிறார்.. கூடவே.. 2004ல் இவரை பிரதமர் ஆக்காமல் மன்மோகன் சிங்கை பிரதமராக்கியத்தில் இவருக்கு வருத்தம் எற்பட்டதாகவும் சொல்கிறார்.. தகவல்// su sufiyan .. பிரணாப் நினைவுகள் என்ற நூலை வெளியிட்டிருக்கிறார்.. அதில் இடம் பெற்ற வாசகங்கள்.. காங்கிரஸ் தலைவர் சோனியாவிற்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லவேண்டும்.. பிரணாப் போன்ற ஆர்எஸ்எஸ் சிலிப்பர்களை பிரதமராக்கால் இருந்ததற்கு.. ஒன்றுக்கும் உதவாத பதவிக்கு ரப்பர்ஸ்டாம்பாகவே வைத்திருந்தமைக்கு .. முஸ்லிம் மதகுருமார்களை மதசடங்குகள் நடக்கும் போது கைது செய்யமுடியுமா என கேட்பதிலிருந்தே விசத்தை கக்கியிருப்பது தெரிகிறது.. மிகபெரியளவில் அழுத்தம் தந்தும் கடைசி வரை வளரவிடாமல் செய்ததில் ஒரு காலத்தில் வருத்தமிருந்தது.. கலைஞர் போன்றோர் பின் துணைக்கிறார்களே என எண்ணியதுண்டு எப்பாப்பானாயினும் தலையை தடவ பாப்பானென்ற பாவேந்தர் வரிகள் நினைவுக்கு வந்துபோகிறது.. .. ஆரம்பம் முதலே பிரணாய் மீது நம்பிக்கையில்லாமல் இருந்தார் காங்.காரிய கமிட்டியில் எதிர்பேதுமில்லாமல் வந்துவிடுலாமென்றிருந்த நிலையில் காங்.தலைமையின் ஆலோசகராக இருந்த குஜராத் எம்பி அக்பரின் காய் நகர்த்தலை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்தவர் முகர்ஜி ஆனால் கடைசிவரை ஏற்காமல் போனதின் கோபம் தெரிகிறது... காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல நாட்டிற்கும் நல்லதை தந்திருக்கிறார்.. திரு.மன்மோகன் சிங் போன்ற மேதைகள் நாட்டிற்கு கிடைத்தார்கள் .. சோனியா பிரதமராக கூடாதென Campaign பிரச்சாரம் செய்தார்கள் sms மூலம் நாடே அல்லோலப்பட்டது இதன் பின்னில் பிரணாப்பின் கரம் இருப்பதாக அப்போது கசிய தொடங்கியது.. காரணம் சோனியாவை தவிர்த்தால் தனக்கு கிடைக்குமென முழுமையான நம்பினார் அதன் கோபம் இவரது எழுத்தில் தெரிகிறது ..ஜனாதிபதியாக இருந்தபோது அவரின் நிறம் தெரிந்தது .. இப்போது முழுமையாய் .. #காங்கிரஸில்_காவி.. .. Aalanci Spm

பதறுகிறார்கள்

ஏன் பதறுகிறார்கள் .. உண்மையைதானே சொன்னார் தமிழன் பிரசன்னா.. யார் பிராமணன்.. அடுத்த வேளை சோத்துக்கு யாசிப்பவனே பிராமணன் என்கிறதே மநு தர்மம்... அதை தான் வேறு மாதிரியாக வீட்டுக்கு வீடு யாசிப்பவனென்றார் .. அசுரனின் சொல் கிழித்திருக்கும் .. .. காஞ்சி பெரியவரின் அருளுரையை வாங்கி படிக்கலாம் .. எதற்கும் ஆசைபடாத கடவுளின் அருளை மட்டுமே நம்பி வாழ்வது தவமென்கிறாரே.. பார்பனனின் அருமைகளை தான் பிரசன்னா சொன்னார் கோபம் வருகிறதா.. பார்பான் என்றால் ஏன் பதறுகிறீர்.. ஒழுக்கமான வாழ்வியல் என்கிறாரே.. பெரியவர் அதை இல்லையென்கிறீர்களா.. திமுகவின் வாக்குவங்கி குறையும் என்கிறார் சேகர் .. பாவம் என்றைக்கு வாக்களித்து இருக்குறீர்.. .. என் சிறிய வயதில் நான் பார்த்திருக்கிறேன்.. எங்களுர் அக்ரஹாரங்கள் சூழ்ந்த ஊர்.. வட்ட வடிவிலான செம்பு கையில் தூக்கிக்கொண்டு சிறிய குச்சியால் அடித்துக்கொண்டே வருவார் பிராமணர்.. அக்ரஹாரத்து பெண்கள் அவரின் சிறிய துணி கட்டிய செம்பில் (கூஜா போன்றவடிவ பாத்திரத்தில்) பணத்தை இடுவார்கள் .. ஏதோ சொல்லிக்கொண்டே போவார்.. நீண்ட நாள் கழித்து தான் அவர் ஏழை புரோகிதரென்றும் வறுமையில் அவர் யாசிப்பதார் என்றும் அறிந்தேன்.. நிறைய முஸ்லிம் மிராசுதாரர்கள் .. அறுவடையில் அவருக்கும் நெல் அளப்பார்கள்.. பிறகு காலம் மாற இப்போதெல்லாம் அக்ரஹார சூழலே இல்லை .. ஏறக்குறைய வெளியேறி விட்டார்கள் நிறைய இஸ்லாமிய குடும்பங்கள் குடியேறிவிட்டன.. நெடுந்தெரு அக்ரஹாரத்தில் ஜாதி இந்துக்கள் குடியேறிவிட்டார்கள்.. .. இவர்களுக்கு கோபம் பிரசன்னா மீதுதான் .. அதை திசை திருப்ப திமுகவை இழுக்குகிறார் இருக்குமிடமே தெரியாமல் இருந்தவர்கள் இப்போதெல்லாம் அதிகம் கதைக்கிறார்கள் அவ்வளவும் விசமேறிய சொற்களால்.. பிராமண லட்சணத்தை தான் பிரசன்னா சொன்னாரே தவிர.. இப்போது யாரும் அப்படியில்லையென்று பதில் சொல்லியிருக்கலாம்.. அதைவிடுத்து கொரூரமான வசவுகளை கையாண்டிருக்க வேண்டாம்.. .. எத்தனை காலம் இழிவு படுத்தி வந்திருக்குறீர் .. திருப்பி தாக்கும் போது பதறுகிறீர்.. காலம் திருப்பி செய்கிறது.. .. Aalanci Spm

Friday, October 13, 2017

வெளிவரும்..திராவிட தொன்மை

#எங்கள்_பேராசான்_பெரியார் .. கல்வி.. குறித்து இப்படிதான் சொன்னார் // தமிழ்நாட்டுக்கு சரித்திரமே இல்லை இந்து தேச சரித்திரம் என்பதை எடுத்துக்கொண்டால் இராமாயண பாரதமும் அசோகன் மௌரியன் ஆட்சியும் முஸ்லிம் வெள்ளையர் ஆட்சியும் விளக்கப்படுமேயொழிய சேர சோழ பாண்டியரைப்பற்றியோ திராவிடர்கள் பற்றியோ திராவிட தமிழ் என்கிற ஆட்சி பற்றியோ காண்பது அரிதாகும் அவை எந்தவகுப்பிற்கும் பாடமாக இல்லை அப்படி எங்காவது இருந்தாலும் அது வெறும் பித்தலாட்டமாகவும் மோசடியாகவும் காணபடலாமே தவிர யோக்கியமாய் சரித்திர ஆதாரத்தோடு காணபது அரிது.. .. ஆகவே நமது பிள்ளைகள் நம்மைப்பற்றித் தெரிந்துக்கொள்ள இடமும் இல்லை.. என்றார்.. .. ஆம்.. எவ்வளவு உண்மை.. இவையெல்லாம் புனையபட்டதை நமக்கு போதித்திருக்கிறார்கள்.. உண்மை மீறி வெளிச்சத்திற்கு வரும் போது #கீழடியை .. மண்ணைக்கொண்டு மூடி விடுவார்கள்.. .. ஆம் #தஸ்யூக்கள் அதாவது திராவிடர்கள் பட்டணங்களில்ஊர்களிலும் மரத்தினால் கட்டப்பெற்ற மாடமாளிகைகளிலும் வாழ்ந்தார்கள் ரதங்கள் குதிரைகள் ஆடுமாடுகள் என வாழ்ந்தது கண்டு ஆரியர் பொறாமை கொண்டு திராவிட நகரங்களை கொள்ளையடிக்க நினைத்ததாக #யஷூர் வேதத்திலேயே உள்ளது.. .. வரலாற்றை மண் கொண்டு மூடலாம் ..புராணம் வேதமென மத நம்பிக்கையை சொல்லி மனிதர்களை கட்டுபடுத்தலாம் ஆனால் காலம் உண்மையை வெகுநாட்கள் புதைத்திருக்காது ஒரு நாள் வெளிவரும் வந்தே தீரும்.. .. மாபா.பாண்டியராஜன் தொல்பொருள் அமைச்சர் பதவியேற்கும் போதே தெரியும் கீழடியை புதைத்துவிடுவார்களென்று... மீண்டும் நாம் அதிகாரத்திற்கு வரும் போது கீழடி மட்டுமல்ல.. வரலாறறு திரிபுகளையெல்லாம் சரிச்செய்ய வேண்டும் .. தென்னக மக்களை வாழ்வியல் பண்பாட்டை கவனித்தாலே போதும் அவர்கள் மிக பெரிய நாகரீகத்திற்கு சொந்தகாரரன் என்பதும்.. கடல் அரிப்பில் சிதைந்து கடலடுக்கடியில் போனதென்ற உண்மைகளை வெளிக்கொண்டு வந்தால்..அவனின் தொன்மை கிடப்பதும் புரியும்.. நிச்சயம் ஒரு நாள் வெளிபடும் திராவிடனின் தொன்மையும்.. அவனே உலகின் மூத்தவன் என்ற வரலாறும்.. இருள் கிழித்து கதிரவனின் ஒளி வந்தே தீரும்.. .. #தமிழன்_மூத்தகுடி .. .. Aalanci Spm

Thursday, October 12, 2017

சரிநிகர்

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயை காரணம் காட்டி கோவிலுக்குள் அனுமதி மறுப்பது அரசியல்சாசன பிரிவு 14க்கு எதிரானதா..உச்சநீதிமன்றம் .. .. பெண்களை தீட்டு வந்தால் வீட்டிற்கு வெளியே நிறுத்திய நிலையிலிருந்து மாறி கோவில்களில் நுழையலாம் என்ற தீர்ப்பை வரவேற்போம்.. மாதவிடாய் என்பது இயற்கை உபாதை அவ்வளவுதான்.. அதை தீட்டாக்கும் பிராமண சூத்தரத்தைதான் ஆரம்பம் முதலே எதிர்க்கிறோம். மரணம் நிகழ்ந்த வீட்டிற்கு போனால் புறவாசல் வழியாக குளித்துவிட்டு வீட்டிற்குள் நுழையும் பழக்கம் இப்போதும் சில வீடுகளில் இருக்கிறது.. மாதவிடாய் காலத்தில் சமையல் அறைக்கு நுழைய விடமாட்டார்கள்.. இதெல்லாம் நமக்கு ஆரியன் சொல்லி தந்தவை..இப்போது அவர்களே அதை கடைப்பிடிப்பதில்லையென கூற கூடும் .. சடங்கும் சம்பரதாயங்களும் நமக்கு தான் தவிர அவர்களுகில்லை. .. அரசியல் சாசன பிரிவு 14 க்கு எதிரானது ஆனால் நுழைந்தால் மநுவிற்கு எதிரானது என்று சில அரைகுறைகள் கூச்சலிடகூடும்.. காரணம் நம்மை அப்படிதான் சிந்திக்கவிடாமலே வைத்திருக்கிறார்கள் தலித்தை தொட்டால் தீட்டு சாணாரை பார்த்தாலே தீட்டு என்றெல்லாம் சொல்லி நம் அறிவை மழுங்க செய்த கூட்டம்தான் அது அதனால் தான் பெரியார் அவனுக்கு எதிராகாதவரை நம்மை அடக்கிகொண்டே இருப்பானென்றார்.. படிப்பு எல்லாவற்றையும் மாற்றும் என நம்பினார் .. பெண்கள் கையிலிருந்து கரண்டியை பிடிங்கிக் கொண்டு புத்தகத்தை தர சொன்னார்.. .. இன்னமும் நிறைய பேர் அசிங்கமென எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.. அது வலிதரும் வேதனையென்று அறியாமல்.. முகம் சுழிக்கலாம் தெய்வ குத்தமென்கலாம் கலிகாலமென புலம்பலாம். ஆனாலும் சக மனுஷியின் இயல்பான வேதனை தரும் ஒரு நிகழ்வென அறிந்திருந்தல் வேண்டும் . .. #ஆண்களுக்கு_நிகரானவர்கள் என்ற உண்மையை உணரவேண்டும்.. .. #சரிநிகர்... .. Aalanci Spm

ஆபத்தானவர்

பிரதமர் அலுவலகத்தின் கிளை ஒன்றை சென்னை திறக்கலாம் பாமக ராமதாஸ்.. ஆம்.. .. வேலைவெட்டியில்லாதவரை பார்க்க வெட்டிபயல்கள் அடிக்கடி வாசம் செய்வார்கள் அதைபோல இருக்கிறது அடிமைகளின் படையெடுப்பு.. எனக்கு தெரிந்து இந்த வருடம் பிரதமரை அதிகமாக சந்தித்த தலைவர்..? பன்னீராகதானிருக்கும்.. முதல்வரின் கடிகத்தை கொண்டுபோய் கொடுக்க போனாராம்.. கூரியர் பையன் வேலையெல்லாம் செய்கிறார்.. எப்படியாவது அதிகாரத்திற்கு வரவேண்டுமென மொத்தத்தையும் அடகு வைத்தாவது அடைந்துவிட வேண்டுமென்ற வெறி.. தொடரோட்டம் ஓட சொல்கிறது.. மக்கள் நலனுக்கெதிராக எதில் வேண்டுமானாலும் கையெழுத்து போடுகிறேன் என்று தமிழகத்தை நிர்கதியாக்கி.. உதய் திட்டம் நீட் தேர்வென நீட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்திட்டு .. மொத்தமாய் அடகுவைத்த அயோக்கியத்தனத்தை பன்னீர் சிரித்துக்கொண்டே செய்கிறார்.. .. எனக்கும் எடப்பாடிக்கும் பிரச்சனை ஏதுமில்லை என்கிறார்.. பன்னீர்.. தானாகவே சொல்வதிலிருந்தே புகைவது தெரிகிறது.. இவர்கள் யாவரும் பதவிக்காக எதையும் செய்பவர்கள் பாஜகவின் சொல்லிற்கிணங்க இவர்கள் ஆடுவார்கள் .. தேர்தல் வரும்வரை இவர்களின் கூத்திதுதான்.. என்றைக்கு இரு சாராரும் இவர்களால் பலனில்லை என உணர்கிறார்களோ அப்போது தூக்கியெறிந்துவிடுவார்கள்.. .. தமிழகம் கண்ட அரசியல்வாதிகளில் மிகவும் ஆபத்தானவர் பன்னீர்.. தனக்காக எதையும் செய்ய துணிகிறவர் .. யாரையும் காட்டி கொடுக்கவோ செய்யவோ தயங்கமாட்டார்.. தனக்கு மகுடம் சூட்டி அழகுபார்த்த வரை ..தன்னை உயரத்திற்கு உயர்த்தி கொண்டுபோனவரையே புறமிருந்து தாக்கிய கோழை.. இவரை போன்றவர்கள் பொதுவாழ்விலிருந்தே விரட்டபடவேண்டும்.. .. ஆலஞ்சி Aalanci Spm

Wednesday, October 11, 2017

தமிழிசை பாவம்

எவ்வளவு முயன்றாலும் திமுகவால் மாற்று சக்தியாக முடியாது.. தமிழகத்திற்கு மாற்றம் தரும் சக்தியாக பாஜக இருக்கும்.. அக்கா தமிழிசை.. .. முதலில் தவழணும் எழ முயற்சி செய்யணும் தத்தி தத்தி நடக்க பழகணும் ஓட பழகணும் அப்புறம் தான் ஓட்டபந்தயத்தில கலந்துகிறதபத்தி யோசிக்கணும்.. வாய் இருக்குங்கிறதுதாலே எதையாவது பேசி வைக்கணும்னா கடைசியில #கிறுக்கச்சின்னு பேரை வச்சுருவாய்ங்க.. .. வீராப்பா பேசுறதுல தமிழிசையை அடிச்சுக்க ஆளே இல்ல .. ஆனா பாருங்க கட்டிவச்ச வாங்க வக்கில்லாம இருக்கும் போதே இவ்வளவு தெனாவட்ட பேசுதே காரணம் இல்லாமல் இல்லை மத்தியில ஆட்சியில இருக்கிற தைரியம் .. மாநிலத்தில சொல்லுற கேட்கிற நவீன அடிமைகளின் ஆட்சி .. அதனாலே பேசிகிட்டு திரியுது .. .. நிலைமை வேறு மாதிரி என்பதை அவருக்கு யாராவது சொல்லுங்கள் என்னதான் கத்தி கத்தி பேசினாலும் அவனுகளுக்கு கறிவேப்பிலைதான்.. தேவையில்லைன்னு வந்தா தூக்கியெறிந்துவிடுவார்கள்.. எவ்வளவு உயரத்திற்கு வந்தாலும் அருகில் கூட அமரவிடமாட்டாங்க.. என்னதான் அள்ளிவிட்டாலும் இங்கே யாரும் நம்பமாட்டார்கள்.. இதுல எல்லா பிரச்சனைக்கும் திமுகதான் காரணமாம். திமுகவை திட்டிக்கொண்டே இருந்தால் பதவியை தக்கவைக்கவாமென நினைக்கிறார்.. பாவம் தோன்றுகிறது.. .. எனக்கு தெரிந்து தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களாக வந்தவர்கள் ஏன் அரசியல் ஈடுபடுகிற இரண்டாம் நிலை தலைவர்கள் யாருமே இவர் அளவிற்கு கூமுட்டையாக இருந்ததில்லை .. என்ன பேசுகிறாரென்று அவர் உணர்ந்து பேசுகிறாரா என்று தெரியவில்லை வரலாறு தெரியவில்லை.. களநிலவரம் தெரியவில்லை .. எங்கேயாவது நின்று வெற்றிபெற முடியுமா ஊடகங்கள் ஆதரவிருந்தால் மட்டும் போதுமென நினைக்கிறாரா.. இன்றைக்கு சொன்னதற்கெல்லாம் தலையாட்டும் தலையாட்டி பொம்மைகள் தேர்தல் வந்தால் இருப்பதை காப்பாற்றி கொள்ள கைகழுவிவிடுவார்கள் அவர்களுக்கு தெரியும் பாஜக வேண்டாத சுமை .. தூக்கி சுமப்பதால் ஒரு ஆதாயமுமில்லை என்று அறிவார்கள்.. .. உண்மை நிலை இதுதான்.. கேரளா பேரணி போககூட 36 பேருக்கு மேல தேறல.. இதுக்கெல்லாம் பார்பனர்கள் வரமாட்டார்கள் நோகாம பதவி மட்டும் வேணும்.. இதெல்லாம் புரியாம எங்கக்கா தமிழிசை வேற திமுகவை பேசிகிட்டு திரியுது முதலில் தன் பலம் அறியவேண்டும் அதைவிட எதிரியின் பலம் அறிந்திந்திருத்தல் வேண்டும் .. பிறகுதான் களம் காணல் புரிகிறதா.. தமிழிசை .. #சொத்தகத்தரிக்காய்.. .. தோழர். ஆலஞ்சி

Tuesday, October 10, 2017

பெண் குழந்தைகள்

பெண்கள் குழந்தைகள் தினம்.. தாயென்றும் மகளென்றும் தாரமெனும் இளைப்பாறும் நிழலாய் தாங்கி நிற்கும் வலிமையாய் வாழ்வில் நீக்கமற நிறைந்திருக்கும் சர்வம் பெண்.. .. ஒருவர் வாழ்வில் எல்லாபக்கங்களிலும் அலங்கரிக்கும் ஆப்பரிக்கும் அள்ளிதரும் ஆலோசனை தரும் அன்பைதரும் ஜீவன்.. பெண் வாழ்வின் மையம்.. பெண்களைப்பற்றி எழுதும் போது நினைவில் வந்துநிற்கிறார் பெரியார்.. கடுமையாக பார்பணீயத்தை எதிர்த்த போதும் பிராமண பெண்கள் மீது சமூகம் கொண்ட பார்வையை கடுமையாக கண்டித்தவர்.. விதவைகளை விலகிவைக்கும் செயலை கண்டித்த அவர் மறுமணத்தை வெகுவாக ஆதரித்தார். பெண்கள் கல்விப்பற்றி .. உங்கள் வீட்டு ஆண் குழந்தைகளை படிக்கவைக்காவிட்டாலும் பெண்குழந்தைகளை படிக்கவையுங்கள் என்றார்.. எவ்வளவு ஆழமான சிந்தனை..கூடவே .. அதற்கான வசதி உள்ளுரில் இல்லையென்றால் வெளியூர் சென்று கூலிவேலை செய்தாவது பெண்குழந்தைகளுக்கு கல்வியை கொடுங்கள் என்றார்.. பெரியார்.. இந்த சமூகம் சீர்படவேண்டுமெனில் பெண்கள் கல்வியறிவு பெறுவது அவசியம்.. இன்றைக்கு பல்வேறு துறைகளில் பெண்கள் சிறப்பாக பங்களிக்கிறார்கள் .. ஆனாலும் பெண்கள் மீதான வன்முறை தாக்குதல் இன்னமும் தொடர்வது மிக கேவலமான ஒன்று. .. உலகளவில் கூட இன்னமும் பெண்கள் பங்களிப்பில்லாமல் எதுவும் முடியாதென்கிற நிலையில் கூட நசுக்கபடுகிறார்கள் என்பதே கவலைகுரியது.. பெண்களை இலக்கியங்களில் புகழ்ந்ததோடு சரியாகிவிட்டதாக நினைப்பதுதான் கஷ்டம்.. யதார்த்த நிலை மிகவும் கவலைக்குரியதாக அல்லது அவர்கள் உரிமைகளில் தலையிடுவதாகதான் இருக்கிறது.. பெண்களில் ஆளுமைகளே இல்லையா என கேட்டால் சொற்ப எண்ணிக்கையில் அடங்கிப்போகும்.. அரசியல் அதிகாரத்தில் இந்திரா, மம்தா,ஜெயலலிதா தோழர் பாலபாரதி அருள்மொழி... என சிலர் இருந்தாலும் நிறைய பெண் ஆளுமைகளின் திறமைகள் அங்கரீக்கபடாமலேயே இருக்கிறது.. .. ஈரானில் தூக்கிலிடப்பட்ட #ரெஹானா தன் தாய்க்கு எழுதிய கடிதத்தில் இப்படிதான் குறிப்பிட்டார் #வெறும்_கழிவாக இந்த பூமியில் விழ விரும்பவில்லை.. ஆம் பெண் வெறும் கேளிக்கையோ கழிவோ அல்ல.. அது #மா_தவம்_போற்றுவோம்_பெண்களை… ‍.. தோழர். ஆலஞ்சி

எங்கே சறுக்கியது என் இன விடுதலை

சே.குவேராவோடு ஒப்பிட்டு பிரபாகரனை முகநூலில் சிலர்.. சே குவேரா நிஜ போராளி அவனை அசிங்க படுத்தாதீர்கள் வேலுபிள்ளை பிரபாகரன் சக தோழனைக்கொன்று தனக்கென சிம்மாசனம் அமைத்தவர் ஒரேஒரு சம்பவம் என் இனபோராளி (சகதோழர்) சீறீ சபா ரத்தினத்தை கொல்ல இரண்டு பேரை தேர்வு செய்கிறார்கள்.. திரு மாத்தையா அவர்களின் ஆலோசனையோடு ஆறுபேர் சென்று சீறீயையும் அவரது துணைவியாரையும் சுட்டு கொன்றனர் தாயின் அலறல்கேட்டு சீறீயின் முன்று வயது மகள் ஓடிவருகிறாள் இரத்தவெள்ளத்தில் தாயும் தந்தையும் அழும் குழந்தைமுன் தோக்கை தூக்குகிறான் போராளி ..? அவன் மனம் தளர்கிறது தோக்கை கீழே தாழ்த்துகிறான் உடன் உத்தரவு வருகிறது 15 வருடம் கழித்து உன்னை பழிவாங்குவாள் கொன்றுவிடு .. கொன்றார்கள்.. .. உமா மகேஸ்வரனை ஏன் அமைப்பிலிருந்து வெளியேற்றினார்கள் தெரியுமா .. திருமணம் செய்துக்கொள்ள கூடாதென்ற கட்டளையை மீறினார்.. அதற்காக தான் அவரையும் கொன்றார்கள்.. பிறகு பிரபாகரன் திருமணம் செய்ததெல்லாம் சட்டவிதிகள் மாற்றபட்டதென்றார்கள்.. .. 14 வயது பால சந்திரன் சுட்டுக்கொல்லபட்டபோது அழுத தமிழினமே முன்று வயது பச்சிளம் குழந்தை கொல்லபட்டபோது மெளனம் காத்தது ஏன் ( சிறுவன் பால சந்திரன் கொலையையும் ஏற்றுக்கொள்ளதவன் நான்) சிறுவர்கள் கையில் தோக்கை தருவதையும் என்னால் ஏற்க முடியாது.. பிரபாகரன் போராளிதான் ஒரு காலகட்டம்வரை எங்கே சறுக்கியது என்று உணராததால் வீழ்ந்தார் சர்வதேச சமுகம் வேறு கண்ணோட்டத்தில் விடுதலை புலிகளை பார்க்க தொடங்கியபோதே தன்போராட்ட களத்தை யுக்தியை மாற்றி கொள்ள தவறியதே அழிவின் ஆரம்பமாகியது .. திரு.ராஜிவ் கொலைக்கு பிறகு தமிழகம் இவர்களை போராளியாகவே கருதவில்லை உறவின்முறை சொந்தங்களாக கொண்டாடியவர்களே .. விரட்டுகிற சூழல் நிழவியது .. அதுவரை அகதியென்ற சொல்லை உச்சரிக்காதவன் அப்பதுதான் வெறுக்க தொடங்கினான்.. ஆன்டனின் மறைவுக்கு பிறகு தமிழகத்தின் தவறான வழிகாட்டுதலும் ஒரு காரணமாகியது இறுதியாக ஈழ விடுதலை போராடத்தில் பிரபாகரன் ஓர் அத்தியாயம் அதுவே முடிவு அல்ல ஈழ போராட்டம் மீண்டும் உயிர் பெறும் போராளிகள் தோன்றுவார்கள் சே.குவேரா போல தன்னலமற்றவர்கள்.. .. இன்றைக்கு வாய்கிழிய பேசுகிறவர்களெல்லாம் என்பதுகளில் என்ன நடந்ததென அறிந்திராதவர்கள்.. இன்றைக்கு தாம் தான் எல்லாமென்கிற நெடுமாறனெல்லாம் என்ன செய்தார்.. ஏன் வைகோ உட்பட இன்றைக்கு பேசி திரிகிறவர்களுக்கு .. என்பது தொடக்கத்தில் அகதியாய் வந்து நின்ற உறவுகளை அரவணைத்தவன் யாரென்று கேட்டால் தெரியும் அவன் திமுககாரனாக இருப்பான்.. .. சீறியின் கொலையை பங்காளி சண்டை அளவிற்கு தரம் தாழ்த்தியதை அறியாதவர்கள்.. அதற்கு பிறகும் திமுக என்னவெல்லாம் செய்தது என்பதை மறந்தவர்கள்.. எனக்கு எழுத உரிமையிருக்கிறது.. இரவெல்லாம் கண் விழித்து கோட்டைப்பட்டிணம் கடற்கரையில் காத்து அழைத்து வந்தெல்லாம் நினைவில் வருகிறது.. மறைந்த தஞ்சை மாமணி ..கோ.சி.மணி சொன்னாரே என்பதற்காக காத்திருந்து காவல்காத்து திருப்பி அனுப்பியவர்களோடு இருந்தவன்.. இன்றைக்கு வெளிநாடு வாழ் ஈழமக்களின் பணத்திற்காக செயல்படுவோர்கள் அன்று சொந்த காசை செலவு செய்த தி.க/திமுககாரன் முன் நிற்க கூட தகுதியில்லாதவர்கள்... .. #தீதும்_நன்றும்_பிறர்தரவாரா .. .. தோழர். ஆலஞ்சி

Monday, October 9, 2017

கிறுக்கு..

தமிழிசையின் இம்சை தாங்க முடியவில்லை.. ஐந்துமுறை திமுக ஆண்டதே ஏன் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கவில்லையென கேள்வி எழுப்புகிறார். அனந்தன் தன் மகளை மருத்துவம் படிக்கவைத்தற்கு பதில் அரசியல் படிக்க அனுப்பியிருக்கலாம்.. தமிழக அரசியலே தெரியாமல் தமிழக பாஜக தலைவராக வந்திருக்கிறார்.. இந்த சாணார் இன மகள்.. .. 1970 டிசம்பரில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் புரட்சிகரமான சட்டத்தை கலைஞர் கொண்டுவந்தார் ஆனால் பார்பனர்களும் தீட்சதர்களும் உச்சநீதிமன்றம் வரை சென்றார்கள். ஆகமவிதிகளை கற்றுணர்ந்தவரே அர்ச்சகராக வேண்டுமென தடை பெற்றார்கள்.. திரும்ப திமுக ஆட்சிக்கு வந்த போது.. ஆகம விதிகளை கற்க அரசு சார்பில் வகுப்புகள் எடுக்கபட்டது.. .. 2006 ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த போது தனியாக ஒரு சட்டம் இயற்றி சைவ, வைணவ ஆகம பாடங்களில் ஓராண்டு பட்டயம் பெற்ற 207 பேர் அர்ச்சகர்களாகத் தேர்வு செய்யப்பட்டார்கள்.. இதற்கும் உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவைப் பெற்றார்கள் கடவுளுக்கு சேவை செய்ய பட்டயபடிப்பு பெற்றால் மட்டும் போதாது அதற்கு சில தகுதிகள் வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்கள் காலம்காலமாக இறைப்பணி செய்து வருகிற எங்களின் வாழ்வு பாதிக்கபடுமென்றும் இறைப்பணிக்காகவே சேவை செய்பவர்கள் நாங்கள் என சொன்னார்கள்.. பிறகு அதிகாரத்திற்கு வந்த ஜெயலலிதா வழக்கை சரியாக நடத்தாததாலும் பார்பனர்களுக்கு ஆதரவாக வழக்கை செயலிழக்க செய்தார்.. அதன் விளைவாக நமக்கு எதிராக 2015-ல் தீர்ப்பு வந்தது... அப்போதே மேல்முறையீடு செய்யவேண்டுமென திமுக வலியுறுத்தியது.. சரியான காரணங்களை நீதிமன்றத்தில் எடுத்துவைக்கவில்லையென கலைஞர் குற்றம் சாட்டினார்.. .. இதெல்லாம் தெரியாமல் தமிழிசை வாய்க்கு வந்ததை பேசுகிறார்..ஏன் திமுக 5 முறை ஆட்சியில் இருந்த போது செய்யவில்லை என்கிறார்.. .. நடப்பு அரசியலை கூட அறிந்திராதவராக இருப்பது குமரி மண்ணுக்கே கேவலம்.. சிறந்த தமிழறிவும் அரசியல் அனுபவமும் கொண்ட அனந்தனுக்கு இப்படியொரு அறிவில்லாத பிள்ளை.. தினம் தினம் எதையாவது பேசுவேண்டுமென்பதற்காக உளறகூடாது.. இது போன்ற உளறல்களை தொடர்ந்து செய்தால் மனநலம் குறைபாடுடையவராக தான எண்ண தோன்றும்.. .. #கிறுக்கு.. .. தோழர். ஆலஞ்சி

Sunday, October 8, 2017

பார்பனர்கள்

#பார்ப்பனர்கள்.. சமீபகாலமாக இவர்களின் குரல் அதிகம் ஒலிக்க தொடங்கியிருக்கிறது ஊடகங்கள் தேடி தேடி அவாள்களை நம் முன் நிறுத்துகிறது திரும்ப திரும்ப பேசுவதால் ஒரு மாற்றத்தை கொண்டுவரமுடியுமென்கிற பழைய சூத்திரம் (பார்முலா) அரங்கேறுகின்றன.. கூர்ந்து கவனித்தால் பார்பனரில்லாத எந்த விவாதமும் சமீபகாலமாக நடைபெறுவதில்லை திடீரென்று பொருளாதார நிபுணராக காட்சியளிப்பவர்கள் மறுநாள் அரசியல்விமர்சகர்களாக .. பாஜகவினராக ஆர்எஸ்எஸ் குரலை திமிரோடு எடுத்துரைப்பதை காணலாம்.. இவர்களின் கூப்பாடுகள் எந்த பலனையும் தரவில்லையென்றவுடன் நன்கறிந்த திரைமுகங்களை நம் முன் கொண்டுவருகிறார்கள்.. ரஜினி கமல் சுஹாசினி கஸ்தூரி.. தொடங்கி இப்போது சாரு வரை.. பாஜகவை சாமி கட்சி லெவலுக்கு கொண்டுபோகிற அவலமெல்லாம் அரங்கேறுகிறது.. .. திமுக ஆட்சியிலிருந்து படிப்படியாக பார்பனர்கள் அதிகாரத்திலிருந்து இறக்கப்பட்டதும் திமுகவை குறைக்கூறி .. மெல்ல எம்ஜிஆரை இறக்கியதும் அப்போதும் சிலவற்றை தவிர மற்றவைகளில் நினைத்தது நடக்காமல் போனது திரும்பவும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் அதிகாரத்தை திரும்ப அடைந்துவிடலாமென்ற எண்ணம் கடும் முயற்சி செய்தார்கள் .. ஜெயா பிராமணர் நமக்கு நல்லது நடக்குமென நினைத்ததை சசிகலா வகையறாக்கள் தவிடுபொடியாக்கினார்கள் கிட்ட நெருங்கவிடவே இல்லை.. அந்த பகையைதான் இப்போது சசி மீது காட்டுகிறார்கள்.. ஏதோ சசிகலாவை மட்டும் குற்றவாளியைப்போல சித்தரித்து ஜெயலலிதாவை உயர்த்தி பிடித்து சிறந்த நேர்மையானவரை போல காட்ட முயற்சிக்கிறார்கள் கிரிமினல் நம்பர் 1 ஜெயலலிதா தான் என்பதை வசதியாக மறந்து போவதோடு மறக்கடிக்க முயல்கிறார்கள். திராவிட ஆட்சி வந்ததிலிருந்தே இவர்களின் புலம்பல்கள் அதிகம் கேட்க தொடங்கியது அரசு அலுவல்களில் பார்பனன் ஆதிக்கம் படிப்படியாக குறைந்தது இடைசாதிகாரனும் கடைசாதிகாரனும் அலங்கரிக்க தொடங்கினான் அதை தடைய எவ்வளவு முயற்சித்து முடியாது போனது .. .. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு வந்த நல்வாய்ப்பை பயன்படுத்த எல்லாநிலையிலும் முயற்சிகள்.. மத்தியில் ஆட்சி அதிகாரமும் துணைக்கென்றவுடன் அவாள்களின் ஆட்டம் அதிகரிக்க தொடங்கியது.. அடிமைகளை வைத்து காரியம் சாதித்துக்கொண்டாலும் அது அதிக காலம் நீடிக்காதென அறிந்து .. எங்கே திராவிட முன்னேற்ற கழகம் பெரும் பலத்தோடு அதிகாரத்திற்கு வந்துவிட்டால் மீண்டும் பழைய நிலைக்கு தள்ளபடுவோமென அஞ்சி.. கொஞ்சம் கொஞ்சமாக முயற்சிக்கிறார்கள்.. ஆனால் முன்பெப்போதுமில்லாத அளவிற்கு மக்களின் கசப்புணர்வு.. ஆளும் அதிமுகவோடு மட்டுமல்ல பாஜகவோடும் இருப்பதறிந்து மெல்ல பிரபலங்களை முன்னிருத்தி முயற்சிக்கிறார்கள்.. ஊழல் ஒழிப்போ பிரதானம் என சொல்லும்போதே பாஜகவின் ஊழலும்..(அமிர்ஷா மகனுக்கு மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 16000 மடங்கு உயர்ந்திருக்கிறது) மெல்ல வெளிவருகிறது.. ஊழலுக்காக சிறைசென்ற ஜெயலலிதாவின் அரசு எனும்போதே நகைப்பிற்குள்ளாகிறது.. .. நேற்றைய சாருவின் பேட்டி ..தன் தம்பி கெட்டு குட்டிசுவரா போககூடாதென்பதில் இருந்த அக்கறை நாட்டின் மீதில்லை.. மோடியை புகழ்ந்து ஜாதிகட்சிகள் குறைகூறிக்கொண்டே அன்புமணியை ( வஞ்சிப்புகழ்ச்சி) ஆதரிப்பிலிருந்தே... திமுகவின் வெற்றியை தடுத்திட வேண்டுமென்கிற ..மக்களை திசை திருப்பிடும் உக்தியை கையிலெடுக்கிறார்.. இதுதான் பார்பான்.. தான் கெடகூடாதென்பதில் கவனமிருக்கும் அதே வேளை எதிரி வலுப்பெற்றால் அய்யகோ என்ற கூச்சல் இருக்கும்.. நிறைய பார்த்தாயிற்று.. .. எத்தனை பேர் வரிசையாக வந்தாலும் இங்கே களம் வேறு மாதிரி பதிலடி தரும்..ஆனாலும் இவர்களை இனம் காண (அடையாளம் காண)ஒரு நல்வாய்ப்பு கிடைத்திருக்கிறது.. .. #நயவஞ்சகம்.. .. தோழர். ஆலஞ்சி

Saturday, October 7, 2017

புத்தியுள்ள பிள்ளை பிழைச்சுக்கும்

அரசியலில் கமல் ஜெயிக்கவே முடியாது. ரஜினியோடு சேர்ந்தாலும் ஒன்றும் நடக்காது - சன் டிவியில் கமலின் சகோதரர் திரு.சாருஹாசன். .. சில நிஜங்கள் உறுத்தும் அவர் சொல்வதில் கமலோடுள்ள வெறுப்போ பகைமையோ தெரியவில்லை மாறாக சில உண்மைகளை உணர்ந்ததால் சொல்லியிருக்கிறார்.. பட்டவர்த்தமாக சொல்ல ஒரு துணிவு வேண்டும் அதைவிட கமலின் முகம் வெளிறிபோகுமென்ற அக்கறையும் அதில் தெரிகிறது.. யாரோ தூண்டிவிட பட்டென்று அவசரகதியில் இறங்கிவிட்டானே என்ற ஆதங்கம் வெளிபடுகிறது.. .. உண்மை அதுதான் இதை உணர்ந்தவராக ரஜினி இருந்ததால் தான் பேச்சோடு நிறுத்திக்கொள்கிறார் விமர்சன பார்வையோடு நகர்ந்துவிடுகிறார் இருப்பதை இழக்க விரும்பாததும் .. மிக மோசமான விமர்சனங்களும் பதிலடியும் எழுந்திருக்கவே முடியாதவாறு அசிங்கபடவேண்டிவருமென்று அறிந்திருந்ததால் தான் அரசியலை அறிந்தும் அறியாதவர் போல பேசி நகர்ந்துவிடுகிறார்.. கமலுக்கு தனக்கெல்லாம் தெரியுமென்ற மேதாவித்தனம் அதை அப்படி கடைசிவரை (Maintenance) பாராமரித்து..பக்குவமாக காப்பாற்றி வந்துவிட்டார் ஆனால் பாருங்கள் அதுவே அவருக்கு வினையாகிப்போகுமென அறியாமல் போவதுதான் கொடுமை.. .. மூன்று விடயங்களை சொல்லி இந்த மண்ணை ஆளமுடியாது மதம் உன்னை சறுக்கிவிடும் ஜாதி உன்னையே எரித்துவிடும்.. மற்றொன்று எல்லாம் அறிந்தவன் நான் .. அதாவது முற்போக்கு பேசி திரிபவன்.. அவனை கண்டாலே பாரமனுக்கு பிடிக்காது ஏட்டுச்சுரைக்காய் கறிக்காகாதென போய்விடுவான் அவனிடம் நம்பிக்கையை ஊட்டவேண்டும் அதற்கு நீண்ட தூரம் அரசியலில் பயணிக்கவேண்டும்.. .. எல்லாம் அறிவேனென சொல்லி வருகிறார் இன்னும் அரசியலில் பாலபாடமே படித்து முடிக்கவில்லை..எந்த நம்பிக்கையில் வருவதாக சொன்னாரோ அந்த நம்பிக்கையே காலை வாரிவிடும்... ரசிகர்களோ அல்லது முற்போக்கு பேசுபவர்களோ கடைசிவரை வரபோவதில்லை அல்லது தூண்டிவிடுபவர்கள் நம்பிக்கையளிப்பவர்கள் திடீரென காணாமல் போவர் ..திமுகவின் வெற்றியை இயன்றவரை தடுக்க இவரை பயன்படுத்த முயற்சியே தவிர அதுகூட காலங்கடந்துபோய்விட்டது .. மக்களின் எண்ணவோட்டம் #தளபதியை நோக்குவதாக அமைந்திருக்கிறது .. அதனால் தான் பங்காளிக்கு புத்தி சொல்லியிருக்கிறார்.. .. அரசியல் நீண்ட பயணம் குறிப்பிட்ட காலகெடுவிற்குள் திட்டமிட்டு படப்பிடிப்பை முடிக்க முடியாது எப்போது எங்கே எப்படி சறுக்குமென அறிந்திருக்கவேண்டும் ..அதைவிட காலசூழல் மக்களின் அப்போதைய மனநிலை.. ஆட்சியாளரின் மீதான அதிருப்தியை யாருக்கு பலனாகுமென கணித்தல் இவையெல்லாம் அரசியல் அரிசுவடிகள்.. இதை தான் பெரியவர் சாருஹாசன் சொல்லியிருக்கிறார்.. .. #புத்தியுள்ளபிள்ளை_பிழைச்சுக்கும்.. .. தோழர். ஆலஞ்சி

Friday, October 6, 2017

இப்படியொரு தலைவனைத்தான்

இப்படியொரு தலைவனைதான் தவறவிட்டீர்.. கையில் கொடுத்த பண்டத்தை தெருவில் வீசிவிட்டு பசிக்கிறதென்கிறீர்.. .. நாளெல்லாம்.. நலன் மட்டுமே நினைக்கும் நல்லவர்களை .. நாலு காசாக்காக நழுவவிட்டீர்.. .. பதவி தந்தாலும். பவுசுகாட்டாத. எதிரியும் வணங்கும் எங்கள் தளபதி.. மக்கள் குறைகளை மகேசன் மறந்தாலும் மாறாத நிலையோடு மக்களுக்காக நமக்காக.. உழைக்கும் .. மாண்பாளர் .. .. மக்கள் அழுகுரல் கேட்டால் மன்னர்கள் உறக்கத்திலிருந்தாலும் உணர்வற்றிருந்தாலும் இந்த மாமனிதன்.. முன் நின்று குறைகேட்பான். இப்படிபட்ட தலைவனைதான்.. நீர் தவறவிட்டீர்.. .. வரும் முன் காப்பவன்.. வந்தபின்னும்.. காப்பவன்.. மக்களின் தலைவன்.. காவிரிக்கரையின் அழுகுரல் கேட்டு.. கண்ணீர் துடைக்க கரம் நீட்டுகிறான்.. காசுக்கு வாங்கியவர்கள் கைகழுவிச் சென்று கண்விழிக்காமல் கிடக்கும் போதும்.. மக்கள் அழுத கண்ணை துடைப்பதற்கு மாபெரும் அறப்போரை தானே முன்னின்று... நடத்திடுகிறான்.. .. நீட் டென்று சொல்லி நம் உரிமையை பறிக்க ஆளும் அரசே அடிபணிந்த போது மக்களோடு நின்று போராடுகிறான். டெங்கு என்றவுடன் ஓடிவந்து.. நலம் விசாரிக்கிறான்.. சிறார் பெரியவர் யாராகினும் நேர்நின்று அகமகிழ்கிறான்.. .. இப்படியொரு தலைவனைதான் நீர் தவறவிட்டீர்.. கையில் கொடுத்த பண்டத்தை தெருவில் வீசிவிட்டு பசிக்கிறதென்கிறீர்.. .. தோழர். ஆலஞ்சி

மகிழ்ச்சி பெரியார் வழியில்

#மகிழ்ச்சி.. கேரள திருவாங்கூர் தேவசம் போர்டு..கேரள அறநிலையத்துறை 6 தலித் உட்பட 36 பார்பனரல்லாதோர் அர்ச்சகராக priests நியமித்திருக்கிறது கேரள இடதுசாரி அரசு .. அமிர்ஷா பாதயாத்திரைக்கு சரியான பதிலடியாக .. இதைதான் கலைஞர் அனைத்துசாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை இயற்றினார்.. நிறைய தடைகளை பார்பனர்கள் கொண்டுவந்தனர்.. இந்த இடத்தில் மட்டும்தான் மிக கடுமையாக .. வேதம் சாஸ்திரம் என சொல்லி உச்சநீதிமன்றத்தை தடுமாற செய்து .. மதவிடயங்களில் தலையிட கூடாதென்றெல்லாம் தடை வாங்கினர்.. .. நல்ல தொடக்கம் இது அதிகம் படித்தவர்கள் கொண்ட மாநிலத்தில் .. நாங்கள் திராவிடர்கள் என வெளிப்படையாக சொல்லி பாசிசவாதிகளின் சங்கை பிடித்து தள்ளும் கைரளியர்களுக்கு நன்றிகள்.. ரத்தகறையோடு தொடங்கலாமென்றிருந்த அமிர்ஷா கும்பலுக்கு செவிட்டில் அறைந்தாற்போல இது வேற நாடென்ற உண்மையை சொல்லியிருக்கிறார்கள் வரலாற்றில் மிக முக்கியமான நாளென மலையாள மனோரமா பத்திரிக்கை பாராட்டியிருக்கிறது.. இது தொடக்கம் தான் .. பாஜக ஆட்சிக்கு வந்ததில் ஒரு சௌகரியம் பிரிந்துகிடந்தவர்களை ஒருங்கிணைகிறார்கள் ஒரே நோக்கோடு ஒரு திட்டத்தோடு.. பாசிசத்தை பார்பனீயத்தை கருவருக்கவேண்டுமென்ற ஒற்றை கருத்தில் இணைகிறார்கள்.. 50 வருடங்களுக்கு முன்னரே எங்கள் பெருங்கிழவன் சொன்னதை தான் .. இதோ கலைஞர் வழியில் கேரளமும் செய்கிறது.. இது கர்நாடகம் தெலுங்கென பரவும்.. எங்கெங்கினும் எம் பெரியாரின் சிந்தனையும் செயலுமே இனி வெல்லும்... .. தொலைநோக்கு சிந்தனையை.. எல்லோரும் சமமென்ற தீர்க்கத்தை.. செப்பிய பெரியாரை இந்நாளில் மகிழ்வோடு நினைக்கிறேன்.. இந்நாட்டிற்கு பெரியார் காட்டிய சமதர்மபாதையே சரியானதாய் இருக்கும் .. மகிழ்ச்சி பெரும் மகிழ்ச்சி.. .. தோழர். ஆலஞ்சி

Thursday, October 5, 2017

திராவிட பேரினம்

தமிழர்கள் இந்தியர்கள் கிடையாது.. சுப்ரமணியசுவாமி.. தமிழர்கள் தேசிய நீரோட்டத்தில் இணைவதில்லை.. anti indian.. இப்படியெல்லாம் சொல்கிறார்கள் ஏறக்குறைய இப்போதுதான் நேர்கோட்டிற்கு வந்திருக்கிறார்கள். தமிழர்கள் தங்களை நீண்ட வரலாற்றை கொண்ட பேரினமாக கருதுகிறார்கள்.. நீங்கள் சொல்லும் இந்தியாவிற்குள் அடைத்திட முடியாது பரந்துவிரிந்து கிடக்கும் பேரினம் எங்கள் தமிழினம்.. .. இதை சொல்லகூட சுப்ரமணியன் வகையறாக்களுக்கு யோக்கிதையில்லை.. யூத வழித்தோன்றலாய் கைபர் வழியே சமவெளியைத் தேடி ஆடுமேய்க்கவந்த ஆரியர்கள் இந்திய துணைக்கண்டத்தை ஆண்ட நம்மிடம் சொல்கிறார்கள் தமிழர்கள் இந்தியர்கள் இல்லை.. உண்மையில் இந்திய துணைகண்டமே தமிழனின் பூமியாய் இருக்கவேண்டியது..இடையில் வந்தவர்களில் வழிகேட்டில் பிரிந்து கிடப்பதால் மதம் ஜாதி சொல்லி தலையென்று காலென்றும் காரணம் சொல்லி கவிழ்த்தவர்கள்.. இப்போது தமிழன் இந்தியன் இல்லையென்கிறார்கள்.. .. இந்தியாவில் வசிக்கும் பலதரப்பட்ட இனமக்களை வேறுபடுத்தி அதிலும் தங்கள் இனம் சவுரியங்களை வலியே இல்லாமல் அனுபவிக்க இவர்கள் வரைகிற திட்டமிது. தேசியநீரோட்டத்தில் தமிழர்கள் இணையவில்லையென காரணம் சொல்வார்கள்..தேசியஇனம் என்பதே ஒருவகை பொய் .. பலதரப்பட்ட இனங்களின் ஒற்றுமை.. அதாவது வேற்றுமையில் ஒற்றுமை.. ஒரு இனத்தை மட்டும் உயர்த்தி பிடிப்பதென்பது அத்தனை ரசமுள்ள விடயமில்லை மற்றொரு இனத்தின் மீது வெறுப்பும் கொள்வதும் கூட இறையாண்மையை கேள்விக்குறியாக்கும்.. சுவாமியின் கருத்தை உளறல் என கடந்துவிட முடியாது அது வேறொரு திட்டத்திற்கிற்கான காய்நகர்த்தல் .. .. தொடர்ந்து நீங்கள் கவனித்து வந்தால் பாசிசவாதிகள் ஆர்எஸ்எஸ் சிந்தாந்தம் பேசுவோர் ஆரியர் ஆரிய அடிவருடிகள் ..இவர்கள் யாவரும் இந்தியாவில் பிற மொழிபேசும் மக்களிடத்திலோ பிற இன மக்களிடத்திலோ இதுபோன்று கடும்வஞ்சகத்தை கொண்டு நடப்பதில்லை மாறாக தமிழர்களிடத்தில் மாத்திரம் பெரும்பகையோடே இருந்துவந்திருக்கிறார்கள் இப்போதுமிருக்கிறார்கள்.. காரணம் பிற இனமொழி மக்கள் அவர்களோடு ஒத்து போகிறார்கள் அல்லது கீழ்படிந்து அவர்களை தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்கள்.. அதைவிட அவர்களின் இனத்திற்கான வரலாற்றை தொலைத்திருப்பார்கள் பிறரின் கலாச்சாரத்தோடு தங்களை ஐக்கியபடுத்திருப்பார்கள்.. ஆனால்.. இதை திராவிட இன தமிழர்கள் செய்வதில்லை காரணம் இயல்பாகவே ஆரியர்களோடு பெரும்பகையோடு இருப்பதாலோ அல்லது ஆரம்பம் தொட்டே திராவிட இனத்தை அழித்தொழிக்க எண்ணும் ஆரிய சூழ்ச்சியை அறிந்ததாலோ என்னவோ குறிப்பாக தமிழர்கள் இவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை.. .. பி.வி.ஜகதீஷ் அய்யங்கார் .. கிருஷ்ணா நிதியின் தென்பகுதி காவிரியின் வடபகுதியும் கர்நாடகவும் சேர்ந்ததுதான் திராவிட நாடென சுருக்கி சொன்னார் அதாவது வரலாற்றை திரித்து புனைந்தார்.. ஆனால் வரலாற்று தொல்பொருள் ஆய்வுகளின் தமிழனின் தொன்மையை பறைசாற்ற தொடங்கியதும் .. நிறைய சங்கதி வெளியில் வர இப்போது தமிழனை தனிமைபடுத்த பெரும் முயற்சியெடுக்கிறார்கள்.. சில குறிப்புகளில் மாகாராஷ்ராவும் இணைந்ததென காணமுடிகிறது.. தாகூர் கூட திராவிட நாடென்று தான் சொல்வார் .. காரணம் ஒருங்கிணைந்த தேசத்தில் திராவிடம் தனியாகதான் தெரியும் பல்முனை பண்பாட்டில் தமிழர்களின் பண்பாடு தனித்துவமாக தெரிவதால்.. உலகின் தொன்மையான நாகரீக தோன்றல் Dramica திரிமிளம் என்றறியபட்ட திராவிடர்கள்/தமிழர்கள் தனித்துவமாக தான் தெரிவார்கள்.. .. உலகின் மூத்த நாகரீகத்தை தன்னகத்தே கொண்ட திராவிட பேரினம் தன் மூலமொழி தமிழின் வளத்தோடு இன்றும் உலகமெங்கும் பரிந்து விரிந்து ஆட்சிமொழியாகவும் அலுவல்மொழியாகவும் இருப்பதை காண சகிக்காமல் இவர் போன்றவர்களின் பிதற்றல்கள் நாள்தோறும் வரும்.. #தள்ளிக்களைவோம் ஆனால் கவனம் கொள்வோம்.. .. #வந்தேறிகள்அல்லநாங்கள்_நாட்டின்_பேரினம்… .. தோழர். ஆலஞ்சி

Wednesday, October 4, 2017

திராவிடம் குறிப்பு

காளிங்கன் எழுதுகிறார்:: திராவிட என்பது இடத்தின்/நிலத்தின் பெயரே. எந்த ஒரு மரபினத்தின் பெயரும் அல்ல. மொழிக்குடும்பத்தின் பெயருமல்ல. எனது முன்வைப்பிற்கு சான்றுகள் தருவேன். 1) காரவேளன் அத்திகும்பா கல்வெட்டு தமிழ்நாட்டை"திரமிகா/Dramica என்று குறிப்பிடுகிறான். 2) கி.பி 5நூற்றாண்டில் கங்க மன்னன் துர்வினீதன் கொங்குதேச ராசாக்கள் சரிதத்தில் "காஞ்சி உள்ளிட்ட திராவிடத்தை வென்றான்" எனக்குறிப்பிடுகிறான். 3) கி.பி. 642 காஞ்சி வந்த சீனயாத்ரீகர் இயூன்சங் அவரது குறிப்பில் காஞ்சியை சுற்றியுள்ள பகுதியை திராவிடம் என்று குறித்துள்ளார். 4) திராவிடம ்= தமிழ்நாடு; திராவிடம்; ஆந்திரம்; கர்னாடகம்; மகாராட்டிடம்;கூர்சரம் என்ற பஞ்ச திராவிட தேசங்கள். திரமிளம் = திராவிடம். செந்தமிழ் அகராதி. 5) கி.பி. 1246-1279 மூன்றாம் ராசராசன் மகன் இராசேந்திரன் "திராவிட மண்டலத்து (பல்லவநாடு) குலோத்துங்க ராசேந்திரனை வென்று (காகதீய அரசன் கனபதி வென்று) கப்பம் வாங்கினான்.(Epind volm. 27 no35. நயனப்பள்ளி கல்வெட்டு. 6) ஆந்திர தேசத்து பித்தர்புரத்தில் உள்ள மல்லப்பதேவனின் கல்வெட்டு (E.i.i V எண் 33; செ.22-4 "அபூர்வ புருஷனான குலோத்துங்கன் ஆந்திரநாடு உட்பட ஐந்து திராவிடப் பகுதிகளையும் ஐம்பது ஆண்டுகள் ஆண்டான்". 7)" பழங்கால பாரததேசத்தில் 56 தேசங்கள். பி.வி.ஜகதீஸ் அய்யங்கார் "கிருஷ்னாநதியின் தென்பகுதியும் ; காவிரியாற்றின் வடபகுதியும் ; கர்ணாடகமும் ;இணைந்த பகுதியே திராவிட நாடு." 8) "அந்நாளிலே திராவிட (அல்லது) திரமிள என்ற சொல் காஞ்சியை தலைநகராகக் கொண்ட தொண்டை மண்டலத்தையே குறித்தது"-- பல்லவ செப்பேடுகள் 30 நூலின் ஆசிரியர் குழு. 9) "நமாம யஹம் த்ராவிட வேத சாகரம்"-- திருவாய்மொழி - நாதமுனி தனியன்கள். 10) 18453-1903 சபாபதி நாவலர் எழுதிய நூலின் பெயர் "திராவிட பிரகாசிகை. 11) தாயுமான சுவாமிகள் தம் பாடலில் "வல்லான் ஒருவன் வரவுந் திராவிடத்திலே" என்கிறார். 13) கவிமணி தேசிய வினாயகம் பிள்ளை தஇமிழ் நாட்டை "திராவிட நல் திருநாடு"என்கிறார் 14) ரவீந்திரநாத் தாகூர் தமது தேசிய கீதத்தில் "திராவிடநாடு"என்கிறார். 15) வேதாந்த தேசிகர் "திராவிடோ உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி "நூல் யாத்தார். - மணி பாரி

சுஹாசினி

#மக்கள்_விரும்பினால்.. எப்போது விரும்புவார்களென அறிந்திருத்தல் நல்லது.. நான் நல்லவனென சிலர் நம்பகூடும் வேறு சிலரோ எதற்காக இவன் ..ஏதோ காரியத்திற்காக குழைகிறாரென பேசகூடும்.. எல்லோராலும் எல்லோரையும் கவர்ந்திழுக்க முடியாது ஆனால் நான் வருகிற பாதை சரியானதா .. சரியான பாதையைதான் நான் தேர்ந்தெடுத்திருக்கிறேனா. அந்த பாதையில் வழி நெடுக செடிகளை நட்டிருக்கிறேனா. அது மக்களுக்கு பயனுள்ளதா பயன் தருமா/தருகிறதா என ஒருநிமிடம் சிந்திந்து பிறகு பயணத்தை மேற்கொள்ள வேண்டும் .. யார் வேண்டுமானாலும் வரலாம் அதற்கான உரிமை அவர்களுக்குண்டு ஆனால் நினைத்தவுடன் கைக்கு பழம் வேண்டுமென்பது கடைந்தெடுந்த அயோக்கியத்தனமில்லையா.. நட்டிருக்கவேண்டும் .. நீர்பாயிச்சி அதை காத்து வளர்த்திருக்கவேண்டும்.. நட்டதும் பூக்கவேண்டுமென நினைப்பது சரிதானா.. எல்லோருக்கும் ஆசைதான்.. தகுதியில்லாதவனெல்லாம் ஆளும் தேசத்தில் கண்ட கண்ட கழிசடைகள் கூட அதிகார போதையில் திரிவதை காண சகிக்கவில்லை.. .. அது என்ன மக்கள் விரும்பினால் மக்கள் யாரை விரும்புகிறார்களென உள்ளங்கை நெல்லியாய் தெரிகிற போது .. சிலருக்கு ஆசை எப்படியேனும் தடுத்திட முடியாதா என சிலர் கொம்பு சீவ.. அதை நம்பி நட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கரைசேரமுடியாமல் அடித்து தள்ளபட்டு எங்கோ ஒதுங்கி கிடப்பார்கள் யாருமே காணமுடியாமல் ..பரிதாபகரமாய் .. வாருங்கள் மக்களை சந்தியுங்கள் மக்களோடு கலந்துரையாடுங்கள்.. அவர்களின் குறையை செவிமடுங்கள்.. அவர்களோடு சேர்ந்து போராடுங்கள் மெல்ல அவர்கள் மனதில் இடம் பெறலாம்.. இவர்களை நம்பலாமென்ற நல்லெண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்துங்கள் கவர்ச்சியோ காசோ , ஆள்பலமோ தான் சார்ந்த மதமோ சாதியோ குறிப்பிட்ட எல்லைவரை நம்மோடு வரும் அதற்கு பிறகு திடீரென திரும்பிபார்த்தால் காணமல் போய்விடுவார்கள் .. மக்களின் மனதில் விதைக்கிற நம்பிக்கையெனும் நல்விதை மட்டுமே காலம் கடந்தும் நிழல் தரும் ..அந்த நிழலில் நீவிர் அரசாளலாம்.. .. பெண்கள் வரகூடாதாயென கேட்கிறார் திருமதி சுஹாசினி.. வரலாம் வரவேண்டும் அதிகமதிகம் வரவேண்டும் அதற்கு கொஞ்சமேனும் கருணையோடு சேவை செய்யவேண்டும்.. ஆணாதிக்க சூழலில் பெண்கள் அதிகாரத்திற்கு வரவேண்டுமென்பதில் மாற்றுகருத்தே இல்லை அதற்கு புகழ் Popularity மட்டும் போதாது ஆளுமை Personality வேண்டும் அதை வளர்த்துக்கொள்ளுங்கள் மக்களோடு மக்களாக பழகுங்கள் தோழர். பாலபாரதியை போல ..தோழர்.அருள்மொழியை போல .. சேவை மனப்பான்மையோடு பணியாறறுங்கள்.. மக்கள் தாமாக முன் வந்து அதிகாரத்தை தருவார்கள்.. .. வந்ததும் கிடைக்கவேண்டுமென்றால் அது அரசியலில் முடியாது அதற்கு வேறு களம் இருக்கிறது.. சுஹாசினி.. .. தோழர். ஆலஞ்சி..

Tuesday, October 3, 2017

சிவாஜி

சிவாஜியைப் போல் ஸ்டைலாக நடக்கவும், நடிக்கவும் எந்த நடிகராலும் முடியாது எனக்கு சிவாஜிதான் இன்ஸ்பிரேஷன் அதிமேதை அமைச்சர் ஜெயக்குமார்.. .. உண்மையில் சிவாஜி நடிகன் தான் மறுக்க முடியாது சந்தர்ப்பம் அறிந்து நடிப்பதில் வல்லவர்.. இன்றைக்கு சிவாஜி சிலையில் கலைஞர் பெயர் அகற்றபட்டதை பெரிய விடயமாகவே கருதவில்லையென ராம்குமார் இப்போது பிஜேபி இருக்கிறாரென நினைக்கிறேன்.. சொல்லியிருக்கிறார் அப்பனுக்கு பிள்ளைதான்.. .. சிவாஜிக்கு செவாலியே விருது வழங்கபட்டபோது ஜெயலலிதா தலைமையில் பாராட்டுவிழா நடந்தது அப்போது பேசிய சிவாஜி .. லைட்மேன் தொடங்கி நேஷனல் அதிபர் பெருமாள் வரை நன்றி சொன்னார் தன்னை வேண்டாமென சொன்ன ஏவிஎம்.செட்டியாரை கூட நினைவுகூர்ந்தார்.. செட்டியார் கதாநாயகனை மாற்ற வேண்டும் இல்லையேல் தான் விலகி கொள்வதாக சொல்ல சிவாஜி தான் வேண்டுமென்று அடம்பிடித்த அறிஞர் அண்ணாவையும் .. பெருமாளை கொண்டு படமெடுக்க பணித்த கலைஞரையோ நன்றியோடு நினைவு கூறவில்லை.. அந்தளவு யோக்கியன் தான் சிவாஜி.. உங்களை நினைவுகூர்ந்து நன்றி சொல்லவில்லையே என்ற போது இந்த நாளையாவாது சிவாஜி மறக்காமல் இருந்தால் சரியென்று தனக்கே உரிய நகைச்சுவையோடு பதிலடி தந்தார் கலைஞர்.. .. சிவாஜி மட்டுமல்ல கலைஞரால் வாழ்ந்தவன் உயரத்திற்கு போனவன் .. நிறையபேர் ஏறிவந்தவுடன் ஏணியை எட்டி உதைத்திருக்கிறார்கள்.. ஆனால் ஏணி .. நம்பி ஏறுகிறவர்களை உயரத்திற்கு கொண்டுபோய் சேர்க்கும்.. அதுதான் #கலைஞர்.. .. அமைச்சர் ஜெயகுமார் சிவாஜியை போல சந்தர்ப்பத்திற்கு தகுந்தாற்போல மாறி பேசும் நடிக்கும் திறன் உள்ளவர்தான்.. ஜெயலலிதா கடைகண் பார்வைக்காக .. போலீஸ் வளைத்திற்குள் கயிறுக்கு அப்பால் நின்று அடங்கி கும்பிட்டு நின்ற புகைப்படம் இப்போது பார்த்தால் கூட பாவம் தோன்றும்.. பரிதாபகரமாக சசிகலாவை கும்பிட்டுநின்ற நடிப்பெல்லாம் சிவாஜியிடம் கற்றாரோ.. .. தோழர். ஆலஞ்சி