Friday, June 30, 2017
பார்பனர்..யார்
அம்பேத்கர் பெரியார் வட்டம் APSC சார்பில் தோழர் மதிமாறனுக்கு கொலை மிரட்டல் விடுத்த பார்பன கும்பலை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் சென்னை பல்கலைகழக வளாகத்தில் ஒரு பார்பன சகோதரி எப்படி நீங்கள் பாப்பாத்தி என அழைக்கலாம் என கேள்வி எழுப்பினார்.. கண்ணியமாக பதிலளித்த தோழர்களுக்கு வணங்கங்கள்..
..
முதலில் நான் பாப்பாத்தி தான் என்ற சகோதரிக்கு வாழ்த்துக்கள் பெண்கள் முழு உரிமையோடு பேசவும் செயல்படும் தான் பெரியார் ஆரம்பம் தொட்டே போராடி வந்தார்.. வேலைக்கு செல்லும் பெண்களை விபசாரிகள் என்ற சமூகத்திலிருந்து வந்து இன்று எதிர் கேள்வி கேட்கிறீர்கள் மகிழ்ச்சி.. வேலைக்கு செல்லும் பெண்களை கேவலப்படுத்தி தீட்டு வந்த பெண்கள் பெண்கள் வெளியே வருவதால் தான் லோகத்தில் பூகம்பங்கள் வருகிறதென #அருளிய மகாபெரியவரின்..? மீதான நம்பிக்கை கொண்டவர்கள் போராட்ட குணம் கொண்டிருப்பதில் எதிர்கேள்வி கேட்பதில்
பெரும் மகிழ்ச்சி..
..
விசயத்திற்கு வருவோம்..
ஏன் பார்பனன் என அழைக்க சொன்னார் பெரியார்..
பிராமணன் என நாங்கள் அழைத்தால் .. தலையில் இருந்து பிறந்தவன் (உயர்ந்தவன்) என்ற தங்களின் கோட்பாட்டை நாங்கள் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் ..நாங்கள் தான் மனிதர்கள் அனைவரும் சமமென்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் பின் எப்படி பிராமணன் என அழைப்பது..இரண்டாவதாக பார்ப்பு தொழிலை செய்யதான் இங்கே வந்தவர்கள் நீங்கள்.. "பார்த்துக்கொள்ளுதல்" அதை செய்யவேண்டிய விதத்தில் செய்து இந்த மண்ணை ஆண்டவர்களை
சரிசெய்ததால் இன்று உயரத்தில் இருந்துக்கொண்டு கதைக்கிறீர்.. சடங்கு சம்பிரதாயம் வேதம் என கதைகள் சொல்லி ஆண்ட இனத்தை அடிமைபடுத்தி வைத்திருந்தீர்கள்.. இன்று வெகுண்டெழுந்து கேள்வி கேட்பதால் ஆத்திரம் வருகிறது..
..
செய்யும் தொழிலை வைத்து சாதியை பிரித்தவர்கள் ..அதையே அடையாளமாய் வைத்து நாங்கள் விளிக்கிற போது.. கோவம் வருகிறது ஆண்டாண்டு காலமாய் அதே நடைமுறையை பின்பற்றி எம்மை அழுத்திவைத்ததின் விளைவு திருப்பி தாக்கும் போது கொஞ்சம் வீரியமாய் தோன்றும்..
..
பிராமணன் என்றால் தங்களை உயர்வானர்வர்கள் என ஏற்றுக்கொண்டதாக பொருள்.. நாங்கள் வர்ணாசிரமத்தை ஏற்றுக்கொள்ளாததாலும்.. பார்த்து வந்த தொழிலை வைத்தே எல்லோரையும் அழைக்கிற பழக்கத்தை உருவாக்கியது நீங்கள் தான் என்பதால் அதையே நாங்களும் நடைமுறைபடுத்துகிறோம்..
..
#பார்பனன்_என்றசொல்_தவறானசொல்_அல்ல
..
தோழர். ஆலஞ்சி
Saturday, June 24, 2017
மண்டல் மன்னன்
வி பி சிங்..
மண்டல் மன்னன்..
..
தையா
#ராஜவம்சத்தில் வந்த..
மக்கள் தலைவன்..
இடை ஒதுக்கீட்டை
பிற்படுத்தப்பட்டவனுக்கும்
என்றாக்கியவன்..
ஒடுக்கப்பட்டவனும்.
பிற்படுத்தப்பட்டவனும்
மறக்க கூடாத ..
முடியாத ..
மக்களின்..
மனம்கவர்ந்த..
மன்னன்
ஏழைபங்காளன்..
மண்டல்மன்னன்..
கலைஞர் நேசித்த
கலைஞரை நேசித்த
மாபெரும் தலைவன்..
மண்டலுக்கு
மகுடம் போனாலும்
மக்கள் மனதில்
நிலைத்து நின்ற
மாசற்ற தலைவன்
..
நேர்மையும்
தூய்மையும்
இவனது கேடயம்
உயர்குடியில்..?
பிறந்தாலும்
உண்மையை பேசிய
உன்னதன்..
உயர்ந்தவர்..
#பிறந்தநாள்..
வாழ்கிறான்..
என்றும்..
மக்கள்..மனதில்..
தோழர். ஆலஞ்சி..
மிசா..
25.6.1975..
#கறுப்புதினம்
இன்றைய இளைய சமூகம் அதிகம் அறிந்திராத நாள்..
அவசரநிலைபிரகடனம். எமர்ஜென்ஸி
மிசா MISA maintainence of internal security act
இந்திய சட்ட செயலாக்க பிரிவினருக்கு அதிகாரம் வழங்கி சட்டம் நிறைவேற்றப்பட்டது எந்தயொரு தனிநபரையும் கைது செய்யலாம் அவரது செயல்பாடுகளை முடக்கலாம் அவரது உடமைகளை பறிமுதல் செய்யலாம் இச்சட்டம் அதிகளவில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகாக பயன்படுத்தப்பட்டது..
..
இந்தியாவின் இரும்பு பெண்மணி என அறியப்பட்ட இந்திராகாந்தி செய்த மாபெரும் #வரலாற்றுப்பிழை..
நாடெங்கும் ஜனநாயகவாதிகள் சிறைப்பிடிக்கப்பட்டார்கள்.. கருத்து சுதந்திரம் நசுக்கப்பட்டது பத்திரிக்கைகள் சென்சார்( தணிக்கை)செய்து வெளிவந்தது..
தமிழகம் திமுக ஆட்சி அகற்றப்பட்டதும் இந்த மிசா காலத்தில் தான் ..
..
மகோரா (எம்ஜிஆர்)போன்ற ஜால்ராக்கள் இந்திராவின் நடவடிக்கையை எதிர்க்க அஞ்சி வாய்மூடியாய் இருந்தார்.
காமராஜரை கைது செய்யவேண்டுமென்ற கோரிக்ரையை நிராகரித்த கலைஞர் ஆட்சி போனாலும் பரவாயில்லையென காமராஜரை கைது செய்ய மறுத்தார்..
..
மிசாவில் திமுகவினர் அதிகளவில் சிறைச்சென்றனர்.
மாறன் தளபதி உள்ளிட்டோர் ஒருவருடம் கொடும்சிறையில்.. ஆனால் அப்போது வெளியே ம.கோ.ரா டூயிட் பாடிக்கொண்டிருந்தார்.. இவரையெல்லாம் புரட்சிதலைவனாக்கிய தமிழகம் செய்த மாபெரும் தவறு ஜனநாயகத்தின் ஆணிவேரையை அசைக்க தொடங்கியது எனலாம்..
..
மிசாவில் கூட கலைஞர் தன் எழுத்தை நிறுத்தவில்லை மாறாக உடன்பிறப்புகளுக்கு புரிகிறமாதிரிதான் எழுதிக்கொண்டிருந்தார்..
யாரெல்லாம் சிறை செல்லவில்லையென எதிர்மறையாக எழுதினார்.. படிக்கிறவர்களுக்கு கலைஞர் எழுத்தை புரிகிறவர்களுக்கு புரியும்.. மிசா இந்திய ஜனநாயகத்தில் கரும்புள்ளியாக இருந்தது..
25.6.1975 கறுப்புதினம்..
..
தோழர். ஆலஞ்சி
காதல்
#கொஞ்சம்காதல்செய்வோம்
********************************
உயிர் என்றாள்
ஊமையாய் போனேன்..
உள்ளகிடக்கையில்
உயிரெழுதி..
மெல்ல..குதறும்
பிசாசு நீயென்றேன்..
..
ஆயுதம் கொண்டுதான்
அறுத்தெடுக்க முடியுமாயென்ன..
உன் ..அழகுச்சொற்கள்
அதை..
செவ்வனேச்செய்யும்..
..
விழியோரும் கசியும்
இருதுளி நீர்கூட..
வாள் கொண்டு வீசும்
வல்லமைக்கொண்டது..
..
பக்கம் பக்கமாய்
பேசுவதை..
உன் உருட்டுவிழி
சொல்லிவிடும் ..
ஒற்றைப்பார்வையில்..
..
காதல் எல்லாம் இல்லை
உன் குரலோசையின்
மயக்கம்தான்..
தெளிந்தபாடில்லை..
காதலா..தெரியவில்லை ..
..
ஆயிரம் வார்த்தையில்
சொல்லித்தெரிவதை..
உன்..
மௌனமொழி
உணர்த்தும்..
..
உன்
சிங்காரம் பேச்சு.
சில்லென்ற
குளிர்க்காற்று..
நீண்டநேரமானால்
மூச்சடைக்கும்..
சுவாசம் போகும் ..
..
நீ..
அழகிய..பிசாசு..
ஆனாலும்..
நெஞ்சு சொல்லும்..
நீயே..என்
நிம்மதி பெருமூச்சு ..
..
#ராட்சசி ..
..
தோழர். ஆலஞ்சி
*******************
(பின்-குறிப்பு)
1989.ல் எழுதியது..
இன்றெழுதச்சொன்னால்..
கொஞ்சம் பெண்ணை மெச்சி எழுதியிருப்பேன்..
அது கானாகால தேடல்..
இளமைபருவத்தில்.(இப்போதென்ன குறைந்து விட்டது எனகேட்பது காதில் விழுகிறது)..
#சண்டைக்குவராதீர்கள்..
Friday, June 23, 2017
எச்சரிக்கை
ராஜஸ்தானில் வறுமைகோட்டிற்கு கீழே உள்ளவர்கள் வீடுகளில் நான் ஏழை நான் பரமஏழை என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருப்பது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது..
இதெல்லாம் எதிர்பார்த்ததுதான்.. பாப்பான்கள் கையில் நாடு போனால் தலித்துகள் மீதும் முஸ்லிம்கள் மீது மட்டும் தாக்குதல் நடக்கும் என நினைத்தவர்களுக்கு பாப்பானை தவிர மற்றவர்களின் மீதான நவீன தாக்குதல்கள் வரதான் செய்யும் என அறியாமல் இருந்தார்கள் ஆனால் அவர்களை பொறுத்தவரை மற்றவர்கள் தங்களை விட தாழ்ந்தவர்கள் என்ற மனபான்மையோடுதான் செயல்படுவார்கள்..
..
அரசு தன் குடிமக்களுக்கு வழங்கும் உரிமைகள் அதை சலுகைகளாக நினைக்கும் போக்கும்..ஏழைகள் என்று முத்திரை குத்தி அவர்களை மனரீதியாக அழுத்தி வைப்பதும் பாசிச போக்கை தவிர வேறென்ன.. அந்த குடும்பங்களின் குழந்தைகள் மற்றவர்கள் முன் கூனி குறுகி நிற்கும் கேடுகெட்ட நிலையை உருவாக்கியிருக்கிறது அதை அரசே செய்வது அவர்கள் மநுவின் படி கூட தர்மமாகாது.. நோக்கம் இது தான் அரசு வழங்கும் இலவசங்களை படிப்படியாக இல்லாதாக்குவதும் .. அதன் மூலம் நம்மை அரசின் திட்டங்கள் ஏழைகளுக்கு கிடைக்காமல் அதாவது அவர்களே வேண்டாமென சொல்ல வைப்பதும் தான்..
..
உண்மையில் பெரியாரை இக்கணம் நினைத்து பார்க்கிறேன்.. இந்த கிழவன் நமக்கு உரிமைகளை பெற்று தந்திருக்காவிடில் ..பாப்பான்களை.., அவர்களின் முகத்திரையை கிழித்து நம்முள் சுயமரியாதையை ஏற்படித்திருக்காவிடில்.. நம்மை நோக்கியும் அவர்களின் விச அம்புகள் பாய்ந்திருக்கும்.. இங்கே கிழவனின் கைத்தடிதான் இதுவரை நம்மை காத்துநின்றிருக்கிறது..
சமீபகாலமாக தமிழகத்தில் பாப்பான்கள் கூச்சலிட தொடங்கியிருக்கிறார்கள்.. ஊடகவிவாதம் என்ற பெயரில் நம்முள் நஞ்சை கலக்க முயற்சிக்கிறார்கள் அவர்களின் உடல்மொழியில் திமிரும் இடைமறித்து சொல்லவந்ததை சொல்லவிடாமல் செய்வதும் ஆட்சி அதிகாரம் இருக்கிறதென்ற தெனாவட்டில் துள்ளி குதிக்கிறார்கள்..இங்கே பதவி ஆசை கண்ணை மறைத்து காலடியில் விழுந்து கிடக்கும் அரசு.. போட்டி போட்டுக்கொண்டு நக்கி பிழைக்கும் ஈனத்தனம்.. இவையெல்லாம் களையப்படவேண்டும்.. இல்லையெனில் நம் நெற்றியில் சூத்திரன் என பச்சை குத்தி திரியவிடுவார்கள்.. கடுமையாக மக்கள் இந்த பாசிச ஆட்சியையும் அதற்கு துணைபோகும் கேடுக்கெட்ட கயவர்களின் ஆட்சியையும் துடைத்தெரியவேண்டும் அதற்கு ஒரே வழி பெரியாரையும் கலைஞரையும் வெகு வேகமாக மக்களிடையே குறிப்பாக இளைய தலைமுறையிடையே கொண்டு செல்லவேண்டும்..
..
இங்கேயும் இந்த இழிநிலை வராமல் தடுக்க பெரும் முயற்சியெடுக்கவேண்டும்.. காரணம் இங்குள்ள அடிமைகள் சுயமிழந்து சொரணையற்று வலியசென்று காலில் விழுந்து கிடக்கிறார்கள்.. திமுகவை வெற்றி பெற செய்திருந்தால் நிலைமையே வேறுமாதிரியாக இருந்திருக்கும்..ஆதரவு கேட்டு நம் காலில் விழுந்திருப்பார்கள்.. சிறிய தவறு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது அதை சரிசெய்ய வேண்டும்..
..
எச்சரிக்கை
#இது_சுயமரியாதை_மண்
..
தோழர். ஆலஞ்சி
Wednesday, June 21, 2017
மதமேறிய கிறுக்கன்
நாம் ஏன் வெளிநாட்டு கடவுளை வணங்கவேண்டும்..உள்நாட்டு கடவுளையே வணங்ககூடாது.. டாக்டர் கிருஷ்ணசாமி..
..
என்னா அறிவு மதவெறியர்களோடு கை கோர்த்தால் இப்படிதான் பேச வரும்.. இவர் ஏன் நாட்டுவைத்தியராக சித்தவைத்தியராக இல்லாமல்/படிக்காமல் அலோபதி படித்தார்.. ஹானிமன்(C.F.S. Hahnemann) என்ற மேலைநாட்டவர் பெயரிட்ட அலோபதி எனும் ஆங்கில மருத்துவத்தை ஏன் படித்தார்..
இவர் பயன்படுத்தும் எல்லா மருத்துவ உபகரணங்களும் மேலைநாட்டவர்கள் தந்ததுதானே..இவர் நாடி பிடித்து நோயாளிகளை பார்க்காமல் ஸ்கேன் எடுத்து பார்க்க வேண்டும்..
..
தந்தை பெரியார் சொல்வார்..சித்தவைத்தியன் காலத்தில அறுபது வயசுல அல்ப ஆயுசுல போனான் மேலைநாட்டு மருத்துவம் வந்துதான் என்ன வியாதின்னு தெரிஞ்சு வைத்தியம் பார்க்க முடிந்ததுன்னு.. கிருஷ்ணசாமி சித்தவைத்தியம் பார்க்கலாம்..
..
எந்த கடவுளையும் கும்பிடவோ மறுக்கவோ அவரவருக்கு உரிமை உண்டு இந்துக்கள் முஸ்லிம் கிருஸ்துவ கடவுளர்களையும்.. கிருஸ்துவர்கள் இந்து முஸ்லிம் கடவுளையும் ..முஸ்லிம்கள் இந்து கிருஸ்துவ கடவுளையும் மறுக்கிறார்கள்.. நான் மூவரின் கடவுளையும் மறுக்கிறேன் என்றார்..
கடவுளை வணக்கத்தை அவரவர் விருப்பத்திற்கு வைத்துக்கொள்ளவேண்டுமே தவிர குப்பனயோ சுடலைசாமியே ஏன் கும்பிடல என்று கேட்க கூடாது..அதுசரி கிருஷ்ணசாமி ..
ராமர் கிருஷ்ணன்..என்ன தமிழரின் கடவுளா..
தமிழனுக்கு எல்லா கடவுள்களும் #வந்தேறிகள் தான்..
..
முதலில் அறிவார்ந்த விடயங்களில் விவாதம் செய்யலாம் கடவுள் இருக்கிறாரா ..யார் கடவுளென..? முடிவு செய்து சுடலைமடசாமியையே கும்பிடட்டும்..
வந்தேறி சாமிகள் நமக்கெதற்கு..?
கிருஷ்ணசாமி முடிவு செய்து விட்டு பிறகு பேசட்டும்..
#மதம்_தலைக்கேறிய_பித்தன்…
..
தோழர். ஆலஞ்சி
தளபதி
ஆளுநர் அனுப்பிய கடிதத்தை படித்துகாட்டமுடியாது சபாநாயகர்..
ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவராக தகுதியில்லை எச்.ராசாசர்மா..
..
கிறுக்கன்களோடு மல்லுகட்டுவது எவ்வளவு சிரமம்..
சபாநாயகருக்கு சபையை எப்படி நடத்துவதென்று கூட தெரியவில்லை.. ஆளுநரின் ஒப்புதலோடுதான் அவரின் செயலர் கடிதம் எழுதமுடியும்..அது ஆளுநரே எழுதியதை போல்தான் என்பது கூட தெரியாமல் பேசுகிறார்.. விதிகளை முழுமையாக அறிந்தவராக சபாநாயகர் தனபால் இல்லை..
எதிர்க்கட்சி தலைவர் என்பது அமைச்சருக்கு நிகரான பதவி அவருக்கிருக்கிற அதிகார வரம்புகள் என்ன என்பதையும் அவருக்கு பதில் அளிப்பது சபாநாயகரின் கடமை என்பதையும் மறந்துபோகிறார் .. சபாநாயகரை இருக்கையில் அமர்த்த அவை முன்னவரோடு எதிர்க்கட்சி தலைவரும் தான் அழைத்தரவரவேண்டும்.. சபையின் நிகழ்வுகளை எதிர்க்கட்சி தலைவரின் ஒழுங்கிற்கேற்ப நடத்தவேண்டும்.. இந்திய அரசிலமைப்பு தந்த அதிகாரங்கள் எதிர்க்கட்சி தலைவருக்கென்ற பிரத்கேயமாக சொல்கிறது..
அமைச்சரின் அனைத்து அனுகூலங்களும் .. எதிர்க்கட்சிதலைவருக்கும் உண்டு.. எதிர்க்கட்சி தலைவரின் செயல்பாடுகள் சபையை நேர்மையாக நடத்திட உதவிடவேண்டும் அதேவேளை சபாநாயகர் நேர்மையோடும் நடுநிலையோடும் நடந்திட வேண்டும்.. இங்கே எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் செயல்பாடுகள் நேர்மையானதாக சபை நாகரீகம் கொண்டதாக இருக்கிறது ஆனால் சபாநாயகர் விதிகளை அறியாதவராக ஆளும்கட்சிக்கு அல்லது அவரின் ஆதரவாளர்களுக்கு சாதகமானவராக இருக்கிறார்..
..
ராசா சர்மா நல்ல மருத்துவரை காணவேண்டிவரும்..திரு.ஸ்டாலினை விமர்சிக்கிற அளவிற்கு இன்னும் வளரவில்லை அதற்கான தகுதி கௌஞ்சம் கூட இல்லை மன பிறழ் Mental disorder அடைந்தவரைப்போல நாளுக்குநாள் உளறல்கள் அதிகமாகி கொண்டிருக்கிறது .. தினம் தினம் ஏதாவது பேசி திரிகிறார் தமிழகம் கண்ட சிறந்த தலைவர்களில் ஒருவராக தளபதி வலம் வருகிறார்..
பெரியாரின் பெரும் சீடர் கலைஞரின் வார்ப்பாய் .. மிளிருகிறார்.. நல்ல தலைமைக்குரிய நற்பண்புகளை கொண்டவராக எல்லோரும் விரும்புகிறவராக எப்போதும் களத்தில் காண்கிற தளபதியாக இருக்கிறார்.
எதையும் தெளிவோடு அறிந்துக்கொண்டு.. நாட்டிற்கு எது தேவை என்பதில் உறுதியாய் இருப்பதால் GST போன்றவற்றில் எதிர்ப்பதும் ..பாஜகவின் பாசிச சிந்தனைக்கு சிம்மசொப்பனமாய் திகழ்வதால் தமிழிசை பொன்.ராதா எச்.ராசா சர்மா போன்றவர்கள்
எதையாவது பேசி ஸ்டாலின் வளர்ச்சியை தடுத்திட முடியுமென நினைக்கிறார்கள் காட்டாற்று வெள்ளத்தை கைகள் கொண்ட தடுத்திட முடியும்..
எதிரிகளே.. தளபதி நம்பியவர்களும் நல்லவர்களுக்கும் தென்றல்..
எம் எதிரிகளுக்கோ .. சூறாவளியுடன் கூடிய புயல்...
தூக்கியெறியபடுவீர்கள்..
..
#எச்சரிக்கை..
..
தோழர். ஆலஞ்சி
Tuesday, June 20, 2017
திராவிட அரசியல்
தமிழக அரசியலில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு
வெற்றிடமாய் போனதைப்போல ஊடகங்கள் கதையளக்க தொடங்கியிருக்கிறது.. அந்த வெற்றிடத்தை..? பாஜகவை கொண்டு நிரம்பலாமென கனவு காண்கிறார்கள்..
முதலில் அந்த வெற்றிடமென்பதே ஒருவகை மாயை..அதிமுக செயலிழந்திருக்கிறது.. அவ்வளவுதான்.. அதாவது சரியான தலைமையை இன்னும் தயார்படுத்தவில்லை அல்லது தலைமை பொறுப்பிற்கு வந்த சகிகலாவை சிறைக்கனுப்பியதால் அந்த வெற்றிட தோற்றம் பெரிதாக தெரிகிறது..
..
உண்மையில் சசிகலா செயல்பட்டுக்கொண்டே இருக்கிறார்.. மிக எளிதாக விளங்கும்..பன்னீரை தூண்டி .. வலைவிரித்து வைத்திருந்தும் எவரும் விழவில்லை.. இரு அணிகளும் இணைப்பென்று சொல்லி சொல்லி கடைசியில் அவர்களுக்கே அலுப்புவந்துவிட்டது.. சசிகலாவை விலக்கி வைக்கவேண்டுமென்ற கோரிக்கை தினகரனோடு யாரும் சேரக்கூடாதென்ற நிபந்தனைகள் எல்லாம் என்ன ஆனதென்று இருசாராருக்குமே தெரியவில்லை.. அதாவது சசிகலாவை இப்போது கூட சிறைக்குச்சென்று அமைச்சர்கள் முதல் முக்கிய தலைவர்கள் தினம் தினம் சந்தித்து வருகிறார்கள்.. சிறைச்சாலையையே அதிமுக அலுவலகமாக.. மெல்ல மாற்றியிருக்கிறார் சசிகலா..
..
சசிகலா பதுங்கியிருப்பதை பாஜக சரியாக எடைபோடவில்லை அது எதிர்மறையாற்றுமென அறிந்திருக்கவில்லை..தினகரனும் தம்பிதுரையும் சசிகலாவை சந்தித்திருக்கிறார் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிபிபதென்பதை பொதுசெயலாளரே தீர்மானிப்பார் என்கிறார் தினகரன்..சிறையில் நான்காண்டு காலம் இருக்கவேண்டி வந்தாலும் மீண்டு வரும்போது அதிமுக இவர் பக்கம்தான் செல்லும்..
வெற்றிடத்தை பாஜக நிரம்புமென நினைப்பவர்களுக்கு இது பேரிடியாகும்..
..
தமிழகத்தில் திமுகவிற்கு எதிரான அரசியலை செய்ய அதிமுகவை தவிர வேறேந்த கட்சியும் தயார்படுத்திக்கொள்ளவே இல்லை.. சிறியளவில் வளர்ந்திருக்கிற கட்சிகள் பெரும் அலையில் காணாமல் போகும்.. அதிமுகவிற்கு பெரியதொரு இழப்பு ஏற்படலாம் ஆனால் அது முடிவரையாக நிச்சயமாக இருக்காது.. நிறைய சேதாரங்களை சந்தித்தாலும் நிலைநிற்பில் தடுமாற்றத்தை தந்து மிகப்பெரிய தோல்விகளை பெற்றாலும் .. அதிமுகவின் அடித்தளம் பலமானது..
..
திமுக மற்றும் அதிமுகவிற்கு
எல்லா ஊர்களிலும்.. கிளைகளிலும் இன்னமும் அதிமுககாரர்களாகவே இருப்பவர்களும் அவர்களின் செல்வாக்கும் பாஜக போன்ற கட்சிகளுக்கில்லை.. சில இடங்களில் ஜாதிய மத ரீதியான ஆதரவிருக்குமே தவிர எல்லா இடங்களிலும் பூத்ஏஜெண்டிற்கே ஆள் தேடவேண்டிவரும்.. பாஜக பாமக தேமுதிக .. போன்ற உதிரிகள் பெரியதொரு தாக்கத்தை தந்துவிட முடியாது.. தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் கிளைகழகங்களை வைத்திருப்பவர்கள் திமுக அதிமுக தான்.. மற்றவைகள்.. அரசியலில் ஜோக்கர்கள் பலன் தருவார்கள் ஆனால் ஆட்டத்தை தனித்துநின்று ஆடமுடியாது..
..
திமுக v/s அதிமுக..
இதுதான் எப்போதும் தமிழகத்தின் நிலை..
பாஜகவோ..ரஜினியோ யாரை ஊடகங்கள் தூக்கிவைத்து ஆடினாலும் கடைசியில் கிடைப்பது ஏமாற்றமாகவே இருக்கும்..
இப்போது திமுகவின் கை ஓங்கியிருக்கிறது
#ஸ்டாலின் பலமான எதிராளி இல்லாமல் இருக்கிறார்.. காலம் தவிர்க்கமுடியாத தலைமையாக #தளபதியாரை உயர்த்திபிடித்திருக்கிறது ஆனாலும் அதிமுகவே எதிரியாகவோ செயல்படும்
மற்றவர்கள் வேறுவேலை பார்க்கலாம்..
..
#தமிழகம்_திராவிடஅரசியலையே_பேசும்..
..
தோழர். ஆலஞ்சி
Monday, June 19, 2017
பலியாடு
விமான நிலையங்களில் பேட்டி கொடுப்பதற்காகவே, ஒரு மத்திய அமைச்சரை (பொன்.ராதா)போட்டு வைத்திருக்கிறார் மோடி - தளபதி..
..
இது மிகைப்படுத்தப்பட்டதாக இல்லை இயல்பாகவே அப்படிதான் தோன்றுகிறது.
மதிப்பில்லாத மந்திரி பதவியை வைத்துக்கொண்டு பாவம் அவர் என்ன செய்வார்.. கொஞ்சமும் மக்களிடம் செல்வாக்கோ மதிப்போ இல்லாத ஏன் யாரென்றே தெரியாத நிர்மலா சீதாராமனுக்கு தனிப்பொறுப்போடு கூடிய அமைச்சர்பதவி ஆனால் பொன்னருக்கு பாவம் எதுவுமே செய்ய முடியாத யோசனை கூட தெரிவிக்க இயலாத பிரயோசனமில்லாத பதவி.. சாணார் இதற்கு மேல் ஆசைப்பட கூடாதென பார்பனர்கள் நினைத்திருக்கலாம்.. பாப்பாத்தி என்ற ஒரு தகுதியை வைத்துக்கொண்டு நிர்மலாவால் அடைய முடிவதை பொன்னர்கள் எந்தகாலத்திலும் பாஜகவில் அடையமுடியாது.. வேறு வேலையில்லாததால் இங்கே வந்து #சவுண்ட் கொடுத்துக்கொண்டே இருக்கிறார் இருப்பதை காப்பாற்றிக்கொள்ள...
..
இன்று மூன்றாண்டுகள் அதிமுக தொடர்ந்தால் திமுக காணாமல் போகுமாம்..நல்ல நகைச்சுவை ..
தமிழக அரசியல் தெரியாமல் இருக்கிறாரா என்றால் இல்லை மாறாக எஜமானர்களை அடிக்கடி குளிர்விக்க ஏதாவது பேசி தொலையவேண்டும்..
பாப்பான்களின் ராஜ குரு..பிதாமகன் ராஜாஜியே முயன்று கடைசியில் வெறுத்து போனார்.. மூட்டைபூச்சியைப்போல திமுகவை நசுக்குவேனென்றவர் அரசியலில் நசுங்கிப்போனார்
ஆறாயிரம் அடி பள்ளத்தில் புதைப்பேன் என்ற பக்தவசலமும்.. திமுகவினரை/ திமுக தோற்கடித்துகாட்டுகிறேன் என்ற கர்மவீரரையும், திமுகவை கல்லறைக்கு அனுப்புவேன் என்ற அதிமுக நிறுவனர் ம.கோ.ராவையும்.. கண்ணக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லையென்று கொக்கரித்த ஜெயலலிதையும் பார்த்துவிட்டோம்.. இவர்களின் கெண்டைக்கால் கால் உயரம் கூட பொன்னரே.. நீர் இல்லை.
முதலில் உங்கள் உயரத்தை புரிந்துக்கொண்டு கதையுங்கள்..
..
பாவம் பொன்னரையும்தமிழிசையையும் விட்டு கத்தவிடுவார்கள்.. பாவம் இவர்கள்
விதை ஏதென்றே தெரியாமல் தூவி விடுகிறார்கள் அது தங்கள் சொந்த மண்ணை கேடாக்குமென அறியாமல்.. ஆரிய கூலிகளாய் குலம் கெடுக்க வந்தவர்கள்.. பதவியும் அதிகார ஆசையும் எதை பேசுவதென்றே தெரியாமலேயே பேசவைக்கிறது..
..
பாவம்..
#பலியாடுகள்..
..
தோழர். ஆலஞ்சி
Sunday, June 18, 2017
ஜாதி வெறியர் அன்புமணி
சாதி வெறிபிடித்த கட்சி திமுக பாமக எனும் சாதீய கட்சியின் இளைஞர் அணி செயலர் அன்புமணி ராமதாஸ்..
..
இந்த குரங்கு பொம்மை என்ன விலை என்ற வடிவேலு நகைச்சுவை காட்சி நினைவுக்கு வந்துபோனது.. முழுக்கமுழுக்க சாதீய சிந்தனையில் கட்சியை வளர்க்கும் அல்லது தன் சமுதாய மக்களிடையே வெறியை தூண்டி அதை வாக்குகளாக்க நோக்கி திரியும் விசமேறிய அரசியலை செய்துக்கொண்டிருக்கும் தந்தையின் மகனாய்.. தன் அரசியல் வாழ்வை தொடங்கியவர் பிற சமூகத்தின் மீதான வன்மத்தை தொடர்ந்து அணைந்துவிடாமல் ஊதிக்கொண்டே வாழ்வில் உயரங்களை தொடலாமென கனவோடு திரிகிறவர் மற்றவர்களை பார்த்து கேட்கிறார்.. சாதிவெறிக்கொண்டு திரிகிறார்கள்..
..
இந்த நொடிவரை கூட சாதியத்திலிருந்து பிரிந்துவர மனமில்லாத.. அந்த சாதியை கொண்டே வளர்ந்தும் வளமுடனும் வாழ்கிறவர்.. வன்னியர் அடையாளத்தை தங்களின் சொந்த வளர்ச்சிக்காக திருப்பிவிட்டு குளிர்காய்கிறவர்.. தன் சமுதாய மக்களுக்கு சேவை செய்ய வந்த போது அதே வன்னிய மக்களிடையே தானோ தன் குடும்பத்தினரோ அரசு பதவிகளுக்கோ அதிகாரத்தைகளுக்கு வரமாட்டோமென்ற உறுதிமொழியை தந்து வளர்ந்தவர்கள்.. பெற்ற தாயை கொண்டே சத்தியம் செய்து.. அதைவிட ஜெயலலிதாவோடு கூட்டணி சேர்வது குறித்து எழுத்தில் எழுதுவதற்கே .. கேவலமாக வாய் கூசுமளவிற்கு பேசி.. தாயையே அசிங்கப்படுத்தியவர்கள்.. இப்போது பேசிவருதெல்லாம் அதிகாரம் கிடைக்காமல் போகிறதே என்ற ஆதங்கத்தில் எதை பேசுவதென்றெ தெரியாமல் உளறுகிறார்கள்.. வன்மத்தை /விசத்தை கக்குகிறார்கள்...
..
சாதிய அமைப்புகளின் ஆதரவுகளை அரசியல் கட்சிகள் பெறுவதும் எந்த சமுதாய மக்கள் அதிகம் வசிக்கிறார்களோ அங்கே அதே சமுதாயத்தை சேர்ந்தவர்களை நிறுத்துவதும் அவர்களுக்குரிய பிரித்தத்துவம் பெற வேண்டுமென்ற எண்ணத்திலேயே தவிர எந்த சாதியினரை தூக்கி பிடிக்கவேண்டுமென்ற எண்ணத்திலேயன்றி வேறில்லை.. ஆனால் சாதிய கட்சிகள் தங்களின் கோரிக்கைகளை நியாயமான உரிமைகளை பெற வேண்டி போராடுவதும் அதற்காக பங்களிப்பை தர தொடர்ந்து இயங்குவதும் தவிர்க்க முடியாதது.. ஆனால் பிற சாதிக்காரர்களை அடித்தமர்த்தி அவர்களை தாக்கி உயர்ந்தவன் தாழ்ந்தவனென சொல்லி அவர்கள் மீதான தாக்குதலை தங்கள்சமுதாயத்தின் இளைஞர்களை தூண்டி விட்டு குடிசைகளை கொளுத்தி சாதிவெறியோடு அப்பாவி இளைஞர்களை பலிகாட்டாவாக்கி குளிர்காய்கிற அயோக்கியர்கள் சாதிய வெறியோடு அனைத்தையும் அணுகுகிறவர்கள் மற்றவர்களை அதே கண் கொண்டு பார்ப்பது தான் கொடுமை..
..
அன்புமணி அதிகம் வன்னியர் வாழும் பகுதியிலே கூட வெற்றிபெற முடியாமல்
தங்களின் இருப்பை கூட தொலைத்துவிட்டு தங்கள் சமுதாய மக்களிடம் கூட நம்பிக்கை இழந்துவராய் வலம் வருகிறார் ..நீண்டநாட்கள் மதத்தையோ சாதியையோ சொல்லி அரசியல் செய்யமுடியாது அன்புமணி எந்தகாலத்திலும் சாதிய சிந்தனையை விட்டுவெளியே வர முடியாது .. வந்தால் யாரென்றே தெரியாமல் போவார்.. புகைந்து கொண்டே இருக்கவேண்டும் அதுவரைதான் இவர்கள் வாழ்வு .. சாதீய தீ அணைந்துபோனால் இவரையெல்லாம் யாரென்றே மக்களுக்கு தெரியாமல் போகும் ..
சாதியை தவிர்த்து இவரை அடையாளப்படுத்த முடியாது..
#சாதிவெறியர்..
..
#காமாலை_கண்களுக்கு_கண்டதெல்லாம்_மஞ்சள்..
..
தோழர். ஆலஞ்சி
Saturday, June 17, 2017
பெரியார்
மதம் இனம் மொழி ஆகியவற்றை கடந்தவராக ரஜினி இருப்பார் ஒட்டு மொத்த மக்களும் அவரை ஆதரிப்பார்கள் - திருமா
..
தீபாவும் நானும் ஒற்றுமையாக இருந்தால் அதிமுக தொண்டர்கள் எங்கள் பின்னால் வந்து விடுவார்களோ என்று சசிகலாவுக்கு பயம்....மாதவன்..
..
ஜெ. இருந்த இடத்தில் என்னை வைத்துப் பார்க்க தொண்டர்கள் ஆசைப்படுகிறார்கள். - தீபா
..
எவ்வளவு கேவலமான நிலைக்கு தமிழக அரசியல் தள்ளப்பட்டிருக்கிறது.. கட்சியே ஆரம்பிக்காதவரை ஆஹா என புகழ்வதும்.. யாரென்றே அறிந்திராத மாதவனும் தீபாவும்.. அதிமுகவிற்கு சொந்தம் கொண்டாடுவதும்..
நாங்கள் வந்தால் தொண்டர்கள் பின்னால் வந்துவிடுவார்களென சொல்வதும்..
மிகவும் அருவறுப்பாக இருக்கிறது.. தமிழகமக்களை யார் வேண்டுமானாலும் ஏமாற்றலாம் என நினைக்கிறார்கள்.. 70 களில் ஏற்பட்ட சினிமா மோகம் இன்னமும் இருப்பதாக எண்ணுகிற மக்களை ஏமாளிகளென எண்ணுகிற இவர்களின் எண்ணம் ஈடேறாது..
..
ரஜினி தமிழக மக்களுக்காக ஏதேனும் போராட்டம் நடத்தியிருக்கிறாரா.. மக்களின் பிரச்சனைகளை பற்றிய அடிப்படை அறிவு இருக்கிறதா.. மதம் இனம் கடந்தென்பதிலிருந்தே அவர் இந்துத்துவாவை தூக்கி பிடித்திருப்பது தெரியவில்லையா.. ஆரம்பத்திலேயே அறிந்திருந்ததால் தான் திமுகவோடு இணைந்து செயல்பட தயாரென்ற போதும் கூட தளபதி செவிசாய்க்கவில்லை.. காரணம் ரவிக்குமாரின்.. எண்ணம் எழுத்திற்கெதிராக ... பெரியாரிய சிந்தனைக்களுக்கெதிரான ..சமூகநீதியின் அடித்தளத்தை அசைக்கிற ரவிக்குமாரின் செயலை கண்டிக்காமல் கள்ளமௌனம் காத்தபோதே தெரியும்.. இருபுறமும் துண்டை விரிக்கும் கடைந்தெடுத்த யோக்கியதையை அறிந்ததாலும்..
ஏறி வந்தபின் எட்டி உதைக்கிற செயல்களை நிறைய கண்டதாலும் இப்போது நடிகரின் அரசியல் வரவிற்காக காத்திருக்கும் இளவுகாத்த செயலை கண்டுக்கொள்ளவில்லை..
..
ஊடகங்கள் தூக்கிப்பிடிக்கிற அளவிற்கு தகுதியானவராகவோ மக்களின் உணர்வுகளை அறிந்தவராகவோ தியாகங்கள் செய்தவராகவோ.. இல்லாத ஒருவரை பாசிச சிந்தனையில் ஊறித்திளைத்த கவர்ச்சியும் காசும் உள்ளதை தவிர வேறேதுமில்லாத ஒருவருக்காக தன் அரசியல் வாழ்வை திமுகவில் ஆரம்பித்த திருமா போன்றவர்கள் முன்னில் எடுப்பது மடத்தனமன்றி வேறிலேலை..
ஒருவேளை தலித் மக்களின் எம்ஜிஆர் ஆதரவைப்போல ரஜினி ஆதரவும் இருக்கும் என திருமா நினைத்தாரோ தெரியவில்லை..
..
தீபாவும் மாதவனும் வெற்றிடம் வெற்றிடம் என கூச்சலிடும் ஜெயாவின் மறைவிற்கான இடத்தை ரஜினியென்றில்லை பாஜகவோ அல்லது வேறு கட்சிகளோ நிரம்பமுடியாது திமுக தான் எதிரியை கூட தீர்மானிக்கிற சக்தியாக இருக்கிறது.. யாரை தேர்வு செய்யவேண்டுமென காலம் தீர்மானிக்கும்..நிச்சயாக அது ரஜினியாகவோ பாஜகவோ அல்ல.. அதிமுகவின் அதிகார மையம் செயலிழந்திருந்தாலும் அது மிகப்பெரிய தலைவரை தராமல் போனாலும் நிச்சயமாக களத்தில் நிற்கும்.. பாசிசமும் மதமும் கவர்ச்சியும் இன மொழி ஜாதி வெறியும் தமிழகத்தில் தலைதூக்க முடியாது..
காரணம் இவர்களை/இவைகளை
#கிழவனின்_கைத்தடி_தடுத்துநிறுத்தும்..
..
தோழர். ஆலஞ்சி
Friday, June 16, 2017
திருமா..
கலைஞர் ஜெயலலிதா இடத்தை ரஜினி நிரப்புவார்..திருமா..
..
நண்பர் திருமா அவர்களுக்கு ..
..
தங்களின் ஒப்பீடே தவறு.. எந்த நிலையைக்கொண்டு கலைஞரோடு ஜெயலலிதாவை ஒப்பீட்டீர்களென தெரியவில்லை.முதல்வராக ஐந்துமுறை பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டதையா அல்லது கவர்ச்சியில் உருவான கட்சியை கடைசிவரை தன் கட்டுபாட்டில் வைத்திருந்ததையா எதை சொல்கிறீர்..
..
முதலில் கலைஞரின் அரசியல்அறிவிற்கு முன் ஜெயலலிதா சூன்யமாக தெரிகிறார்.. அடாவடித்தனம் தான்தோன்றித்தனமும் .. விடாப்பிடியாக தவறை நியாயப்படுத்துவதும் தவிர அவரின் அரசியல் தொலைநோக்கென்று எதுவுமே இல்லை. திமுக எதை கொண்டுவந்தாலும் குறிப்பாக கலைஞரின் திட்டங்களை எதிர்த்ததை தவிர.. ஆனால் அவர் காலத்திலேயே அவரே சரியென சொல்லவைத்து காலம் பாடம் புகட்டியது..
காவரி நடுவர் மன்றம் வைத்த போது அதை எதிர்த்தவர்தான் கடைசியில் காவிரித்தாயானார்..
கலைஞர் கொண்டு வந்த மெட்ரோ ரயில் நாட்டிற்கு பயனில்லை என்றவர்தான் கடைசியில் தானே கொடி அசைக்க வேண்டி வந்தது..
நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.. விவசாய கடன் தள்ளுபடி .. இரண்டு ரூபாய்க்கு அரசியென்ற போது சாத்தியமில்லை என்றவர்.. ஒரு ரூபாயாக்கி காட்டியவுடன் இலவசமாக தருவேன் என்றார்..இலவசங்களை எதிர்த்தவர் கடைசியில் இலவச அறிவிப்பு செய்யவேண்டி வந்தது..
சொல்லிக்கொண்டே போகலாம்.. தமிழகம் கண்ட அனைத்து நல்லதிட்டங்களும் கலைஞரின் அறிவில் உதித்தவை.. நடந்த நல்லவையெல்லாம் கலைஞரின் செயலில் வந்தவை..
..
ஜெயலலிதாவைப்போல ஒரு அரசியல்வாதி நாடு கண்டதில்லை.. அவர் பாப்பாத்தியாக மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் சிறையிலேயே காலத்தை கழிக்க வேண்டியிருந்திருக்கும்.. நானும் ஏதாவது ஒரு திட்டம் சுயமாக சிந்தித்து செயல்படுத்திருக்கிறாரா என யோசித்து பார்க்கிறேன்.. எல்லாமே கலைஞரின் துவக்கமாகவோ அல்லது அவரின் எண்ணத்தில் உதித்து எழுத்தில் வந்ததாகவோ தானிருக்கிறது.
மலையோடு மடுவை ஒப்பீட்டிருக்கிறீர்..
..
கலைஞர் பெருமகன் #பெரியாரின்_பெரும்சீடர்..அவர் எண்ணத்தில் உதித்ததெல்லாம் பெரியார் சொன்னதும் எண்ணியதுமாகவே இருந்தது.. கலைஞரின் பிற திறமைகளை கணக்கில் கொள்ளதேவையில்லை அரசியல் ஒன்று மட்டும் போதும்..
இதுவரை தமிழகத்தில் என்றில்லை இந்தியாவிலேயே கலைஞருக்கு சமமான அரசியல்வாதி இல்லையென்றெ தோன்றுகிறது..
எல்லாவற்றிக்கும் சரியான தீர்வை தொலைநோக்கோடு.. இந்த சமூகத்தில் பரவிகிடக்கும் மூடங்களை சமூக அநீதிகளை தன் அதிகார வரம்பிற்குட்பட்டு தேசமே உற்று நோக்கும் வண்ணம் செய்திருக்கிறார்..
பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை..இந்தியாவிற்கே வழிகாட்டியது..
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் இந்தியாவே ஆச்சரியம் அடைந்தது பார்பன கூட்டம் பதறியது..
..
சொல்லபோனால் சிறந்த வழிகாட்டியாக கலைஞர் திகழ்கிறார்..
தயவு செய்து இதுபோன்ற அற்பத்தனமாக ஒப்பீட்டை செய்யாதீர்..
..
ரஜினி ..
அரசியலுக்கே வராதவரைப்பற்றி பேசுவதில்லை அது
எங்கள் நாகரீகமல்ல.. குழந்தையோடு மல்யுத்தம் செய்வதில்லை நாங்கள்.. பிழைப்பிற்காக எதையாவது பேசுகிறவர்களோடு திருமாவும் இணைவது வேதனையான விடயம்.. நடிகை கஸ்தூரியின் கருத்தைப்போல அறிவிலித்தனமாக இருக்கிறது.. உயரத்திலிருந்து சறுக்கிவிழுகிறார்.. அந்த உயரம் கூட திராவிடம் (திமுக) தந்தது..
..
தோழர். ஆலஞ்சி..
Wednesday, June 14, 2017
தளபதி(தீ...))
விவாதிக்க முடியாத பிரச்சனையை ஸ்டாலின் எழுப்பினார் சபாநாயகர் தனபால்.
விவாதிக்க முடியாத பிரச்சனையா அது .. காசு வாங்கிக்கொண்டு எடப்பாடிக்கும் பன்னீருக்கும் வாக்களித்ததாக /ஆதரவளித்ததாக அதிமுக எம்எல்ஏவே சொன்னபிறகு அதில் உண்மையிருக்கிறதா என்பது குறித்து விவாதித்து நீதிவிசாரணைக்கு பரிந்துரை செய்வது தானே சரி..
என்ன பயம்..
வெளியேற்றிவிடலாமென்ற உக்தி சரியானதல்ல.. திருப்பி அடிக்க ஆரம்பித்தால் ரணகளமாகிவிடும் எச்சரிக்கை.. அமைதியாக இருப்பதால் அல்லது வெளியேறுவதால் மீண்டும் மீண்டும் அதே வழியை பின்பற்றினால் விளைவுகளுக்கு சபாநாயகரே பொறுப்பேற்க வேண்டி வரும்..
..
கேவலமான ஆட்சி அதன் சபாநாயகர் தன் நிலை மறந்து நேர்மையின்றி செயல்படுவது சரியான நடைமுறையல்ல.. மக்கள் மன்றத்தில் மிக பெரிய வெறுப்பை ஆளும் அரசும், அமைச்சர்களும் அதிமுக உறுப்பினர்களும் பெற்றிருக்கிறார்கள்.. எதனால் மூடி மறைத்தாலும் உங்கள் யோக்கியதை நாளுக்குநாள் சிரிப்பாய்சிரிக்கிறது.. இப்போதே திருத்திக்கொள்ள முயலுங்கள் இல்லையெனில் வரலாற்றில் தடமே இல்லாமல் அதிமுகவை அழித்துவிடுவார்கள் மக்கள்.. மிக மோசமான நிர்வாகம்.. கொள்ளையடிப்பதும் அதற்கு துணைபோவதும் வெளிப்படையாகவே நடக்கிற அவலம்.. தட்டி கேட்கிறவனின் ஜனநாயக குரலை நெறிப்பது.. நிச்சயமாக நல்லதொரு விடயமாக இருக்காது .. மக்கள் முன் நாளுக்கு நாள் மதிப்பிழந்து வருகிறீர்கள்..
..
விற்பனைக்கு வந்தது எம்எல்ஏக்கள் அல்ல தமிழர்களின் மானம் ... கேடுகெட்டவர்களை தேர்தெடுத்துவிட்டு மரியாதை கெட்டு கிடக்கிறது தமிழ்சமூகம்.. நாட்டின் பிற மாநிலங்கள் முன் கூனிகுறுகி நிற்கவைத்துவிட்டு ஒன்றுமே நடக்காததுபோல வலம் வருகிறீர்களே அறிவுகெட்டவர்களே.. காலம் குறித்துவைத்துக்கொள்கிறது.. இருக்குமிடம் தெரியாமல் அழித்தொழிக்கப்படுவீர்கள் ..
..
விடுவதாயில்லை நாளையும் கூவத்தூரின் கூத்துகள் பற்றியும்.. பெண்ணையும் பொன்னையும் தந்து இவர்கள் ஆடிய கள்ள களியாட்டம் பற்றியும் சட்டமன்றத்தில் எழுப்பாமல் விடுவதாயில்லை ..
நாடும் மக்களும் உண்மை அறிந்திருந்திருக்கிறார்கள்..
..
இனி..
#அடித்தாடவேண்டும்..
..
தோழர். ஆலஞ்சி
Monday, June 12, 2017
Mla for sale
#விற்பனைக்கு..
வாக்குகள் விற்பனைக்கு என்றான பின் சில்லரையை செலவு செய்தவன் மொத்தமாய் வரும் போது வேண்டாமென்றா சொல்வான்..
விற்பனையானது தமிழனின் மானம் ..இந்த கேடுகெட்டவர்களை இன்னும் நாம் பொறுமையோடு சகித்துக்கொண்டிருக்கிறோமே..
நிச்சயமாய்..இது அமைதி தமிழகம் தான் ..
..
இங்கே இப்போது பேசபடும் மூவரின் செயல்கள் நம்பிக்கையோடு இருந்ததில்லை.. காரணம் அதிமுகவை சேர்ந்தவரல்லாத தனி கட்சியை அல்லது குழுவை நடத்திவரும் வியாபார சிந்தனையோடு அரசியல் நடத்துபவர்கள்.. ஜாதியையும் மதத்தையும் தங்களின் கவசமாக்கிக்கொண்டு கிடைத்ததுவரை தேத்திக்கொள்ளலாமென்ற குறிக்கோளோடு செயல்படுபவர்கள்.. இதில் எந்தளவு உண்மை என்பதைவிட அன்று நடந்த சம்பவங்கள் இவர்களின் நம்பகதன்மையை கேள்வியாகிறது..
..
கருணாஸின் சேவை கீழ்தரமானதாக இருந்ததாக பேசப்பட்டதும் தனியரசின் அன்றைய தினங்களின் அமைதி எப்போதுமில்லாததாய் இருந்ததும் குற்றசாட்டை மெய்பிக்கிறது.. நண்பர் அன்சாரி.. நாகையில் மக்கள் கருத்து கேட்பதென்று முடிவெடுத்து பெட்டியெல்லாம் கடைசியில் அதை திறந்து பார்க்காமலேயே ..மக்களின் கருத்தென்ன என்பதை அறியாமலேயே படிவமில்லை தீர்ந்துவிட்டதென கூறி சலசலப்பாகி..அங்கிருந்து தேரழந்தூர் சென்று திடீரென .. மாயமாகி பின் சசிகலாவை ஆதரிப்பதாக இஸ்லாமிய சமுதாயத்தின் இரு கோரிக்கைகள் வைத்திருக்கிறேன் அதை ஏற்றார்கள் அதனால் ஆதரித்தேன் என சப்பைக்கட்டி.. இருந்த மரியாதையும் இழந்து நின்ற காட்சி கண்முன் வந்து போகிறது.. என்ன கோரிக்கை அந்த கோரிக்கைகள் என்னவானதென கேட்காதீர்கள் அது அன்சாரிக்கே தெரியாது..
..
தங்கள் சமூகத்தை/சமுதாயத்தை .. தன்னை நம்பியவர்களை விற்கிற #கேடுக்கெட்டத்தனம் இது..
அதிமுககாரர்கள் விலைபோனார்கள் என்கிறபோது
எழும் தாக்கத்தை/கோவத்தை விட தங்கள் இனத்தை ஜாதியை மதத்தை சொல்லி நாங்கள் காக்க வந்த கனவான்களென பேசி திரியும் இந்த கழிசடைகளை இனம் கண்டு இவர்களை போன்றோர்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்படவேண்டும் .. இன்று மறுத்து அறிக்கைவிடுவதென்பது எல்லோரும் சொல்லும்/செய்யும் அரசியல் .. பாவம் மாட்டிக்கொண்டவர்கள் தங்களை யோக்கியசிகாமணி என சொல்வதைப்போல..
..
இந்த ஆட்சி இனியும் தொடரவேண்டுமா என்பதை முடிவு செய்யவேண்டிய காலம் நெருங்கிவிட்டது ..
..
#கழுத்தறுக்க_தயங்காதவர்கள்..
#MLA_for_Sale..
..
தோழர். ஆலஞ்சி
தளபதி..வழியில்
பொதுவாழ்விற்கு வருபவர்களின் குறைந்தபட்ச தகுதியை கூட இழந்து நிற்கிறார்.. அவரது உடல்மொழியை விடுங்கள் கோவம் வரும்போது அவர் பயன்படுத்து வார்த்தை பிரயோகங்கள்.. தரை லெவலுக்கு இருப்பது கண்டு யாம் பெருமகிழ்ச்சி அடைந்தோம்.. உயர்குடியில் பிறந்தவர்கள் நாகரீகமாக தான் பேசுவார்களென்று இவர்களாகவே கட்டமைத்த/உருவாக்கிய போலித்தனமான பிம்பம்.தகர்ந்திருக்கிறது..
நல்ல பழக்கவழக்கங்கள் வாழும் சூழலைக்கொண்டே வருகிறதே தவிர பிறப்பால் இல்லையென்பதை போட்டு உடைத்திருக்கிறார்..
..
தமிழகம் கண்ட மிக மோசமான காலத்தில் இவரை போன்றவர்கள்தான் சேவகம்..? செய்ய வருவார்கள் இந்த நிலைக்கு தமிழனின் அவசரமும் ஆழ்ந்தறிந்து செயல்படாத வேகமான விவேகமற்ற முடிவும் .. சிறிய தொகைக்கு விலைப்போன கேவலமும்..யாராண்டால் என்ன என்ற அக்கறையற்ற செயல்பாடும் காரணம்..
..
தமிழகத்தின் இன்றைய நிலைக்கு ஆளும்கட்சியை மட்டுமே குறைகூறுவதை விட தேர்ந்தெடுத்த மக்களும் காரணம்.. அதிமுகவை சிதைப்பதில் பாஜக கண்ணாக இருக்கிறது.. பன்னீரை கொம்பு சீவியது அவர் தன் பலம் அறியாது ..ஏதோ பரமலோகத்திலிருந்து வந்த யோக்கியரைப்போல சித்தரிக்கப்பட்டார்.. கடைசியில் சிறையை காட்டி அச்சமூட்டி தினகரன் வகையறாக்களையும் எடப்பாடி குழுவினரையும் வசப்படுத்தி ஏறக்குறைய மூன்றாம்தர செயல்பாட்டில் நின்றாலும்.. ஏதேதோ செய்துபார்த்தும்.. மக்கள் மனங்களில் இடம்பிடிக்க முடியவில்லை காரணம்.. எங்கள் #பெருங்கிழவன்_பெரியார் அமைத்திட்ட வழித்தடத்தில் தமிழகம் பயணிக்கிறது .. எக்காலத்திலும் பாப்பானை நம்பாதே என்று தமிழக மக்களின் மனங்களில் வரைந்து விட்டு போய்விட்டார்..
..
இன்றைய சூழலில் தமிழகம் நம்பியிருக்கிற ஒரேயொரு #நல்நம்பிக்கை.. தளபதி மட்டுமே.. எங்குகாணினும் வேறுயாருமே தெரியவில்லை.. மதம் பேசி திரிகிற மூடரும்.. ஜாதி சொல்லி வருகிற கிறுக்கன்களும் மொழியென்றும் இனமென்றும் கத்தி திரிகிற விவரகேடுகளும்.. பிரதான எதிரியாய் நின்ற மகோரா ரசிகர்களும் .. செய்வதறியாது நிற்கின்ற நிலைகண்டு மக்கள் தெளிவாய் தளபதியின் கரம் பிடிக்க தயாராகியிருக்கிறார்கள்..
மிக விரைவில் நல்லதொரு விடியலை தர..மக்கள் விரும்புகிற ஆட்சியை தர..
மக்கள் மிகவும் நேசிக்கும் தங்கள் #தலைவனின் பின்னால் அணிவகுக்கிறார்கள்.. விடியும் விடிந்தே தீருமென்ற நம்பிக்கையோடு..
..
வைகறை வெளுக்கிறது..
கீழ்வானம் சிவக்கிறது..
உதயசூரியன் மெல்லென சிரிக்கிறான்..
..
தோழர். ஆலஞ்சி
Sunday, June 11, 2017
தமிழிசை..
மாட்டுக்கறியை விட பிளாஸ்டிக் அரிசி ஒன்றும் தீங்கானதல்ல - தமிழிசை.
எவ்வளவு வன்மமான மனநிலை உள்ளவரென்பது இதிலிருந்து தெளிவாகிறது.. பெரும்பான்மையினரின் உணவை தாழ்த்தி பேசவேண்டுமென்பதற்காக பிளாஸ்டிக் (நெகிழி) அரிசியை உயர்த்தி பிடிக்கும் கொடுமை .. தமிழிசை தன் நாற்காலியை (தலைவர் பதவியை) தக்கவைத்துக்கொள்ள எதையும் செய்யகூடியவரென தெரிகிறது..
பாவம்.. கறிவேப்பிலையை போல் பார்பன கூடத்தால் தூக்கியெறிய படுவார்.
..
பாஜகவினரிடத்தில் நேர்மை இருப்பதில்லை ஆனால் இந்த விடயத்தில் காங்கிரஸை சேர்ந்தவர்களிடம் எல்லா கருத்துக்களையும் ஏற்க மறுக்கும் அல்லது மாற்றுகருத்தை சொல்லும் ஜனநாயக பண்பை காணலாம்.. பாஜகவோ ஆர்எஸ்எஸோ ஒரு விடயத்தை சொன்னால் அல்லது செய்தால் ..அது நேர்மையற்றது நம் மாநிலத்திற்கு ஏற்புடையதல்ல நம் கலாச்சாரத்திற்கு எதிரானது வெகுமக்களுக்கு விரோதமானதென்றாலும் விடாபிடியாக அதை தாங்கிப்பிடிப்பதோடு அதை நியாயப்படுத்தும் கேவலமான மனப்பான்மை பாஜகவினரிடத்திலும் ,..மோடி ரசிகர்களிடத்தும் இருக்கும்.. ஒற்றை இரவில்
பண மதிப்பிழக்க செய்த மோடியின் கிறுக்குத்தனத்தை ஆஹாவென புகழ்ந்தார்கள் கடைசியில் 56 இன்ச் அறிவிலியால் 56 லட்சம் கோடி நஷ்டமானது.. பின் விளைவுகள் எப்படியிருக்குமென அறியாமல் முன்கூட்டி திட்டமிடாமல் ஆடிய கூத்தால் வளரும் நாடுகள் பட்டியல் இருந்து வெளியேற்றப்பட்ட கொடுமை.. காங் அரசில்
பெட்ரோல் விலை சந்தையில் 90 டாலருக்குமேல் இருந்த போது கூட 70 ரூபாய்க்கு தர முடிந்ததை 48 டாலருக்கு விற்கிற போது விலையேற்றி அதாவது வரியை உயர்த்தி மக்களை பிழிந்தெடுக்கிற பாஜக அரசு
..
பாஜக அரசு வெகுமக்களுக்கான அரசல்ல.. பாப்பனர்கள் மற்றும் அவர்களுக்கு சேவகம் செய்யும் ஆபத்தானவர்களின் அல்லது அறியாமையில் ஊறியவர்களுக்காக செயல்படும் அரசு.. நெகிழியை விட ஆபத்தானவர்கள் இவர்கள்.. பயன்தருவதாக பொய்சொல்லும் கூட்டம்.. வெகு மக்களின் உணர்வுகளை மதிக்க தெரியாத.. பார்பனர்களின் நலன் அவர்களின் கொள்கைகளை தாங்கிப்பிடிக்கும் அரசும் அதன் தீங்கை உணராத தமிழிசைகளின் ஈனராகமும்.. காதை கிழிக்கிறது..
தனிமனிதனின்_வாழ்வியலையும்_கிழிக்கிறது..
..
#கேடு்கெட்டவர்கள்..
..
தோழர். ஆலஞ்சி
பேரழிவு காலம்
குடும்ப சண்டையில் நாம் தலையிட தேவையில்லை நாங்கள் தான் வாரிசு என்பதிலும் பெரிய எதிர்ப்பேதும் வராது .. ஆனால் அதைவைத்து அரசியல் செய்வது அநாகரீக செயல் ..
..
வாரிசில்லாத ஜெயாவின் சொத்துகளுக்கு இரத்தஉறவின்முறை சொந்தங்கள் ..அவகாசம் கோருவது எங்கும் நடப்பதுதான் அதில் பிரச்சனை ஏதும் வந்தால் வழக்காடுமன்றத்தை நாடலாம்.. அழைத்தார் அடித்தார்களென நாடகமாடுவதும்..பிரதமரிடம் (வேலைவெட்டியில்லாதவர்) முறையிடுவதாக சொல்வதும் கொஞ்சம் மிகை..
மறுதலித்து பேட்டி தந்த சகோதரர்.. ஜெயலலிதாவைவிட கலைஞர் சிறந்தவரென சொன்னது நிறைய பேருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும்..
..
அதிமுகவின் நிலையை பார்க்கிறபோது.. உண்மையில் சங்கடம் தோன்றவில்லை.. காரணம்..
நயவஞ்சமும் நம்பிக்கை துரோகமும்.. பதவிஆசையும் நீண்டநெடிய வரலாறை எழுதுவதில்லை வரலாற்றில் இடம்பெறும் ஆனால் அது புகழுக்குரியதாக இருந்ததில்லை.
மகோராவின் (எம்ஜிஆர்)பதவி ஆசையில் உதித்த அதிமுக ..
அவரின் அந்தரங்கத்தின் அபிலாசைகளின் கையில் சிக்கி .. தாயும் மகளும் செய்த நன்றி..? க்காக வாரிசாக்கி... கடைசியில் யாராரோ கட்சியின் வாரிசுகள் நாங்கள்தான் என சொல்ல கேட்கிற நிலைக்கு வந்திருக்கிறது.. #காலக்கொடுமை
..
தமிழகம் கண்ட அரசியல் பேரிடர் காலம்
Political calamity period என இதை கூறலாம்.. ஆட்சியாளர்கள் இல்லை யார் வழிநடத்துகிறார்கள் தெளிவில்லை.. எல்லோரும் இருக்கிற வாய்ப்பை பயன்படுத்தி எவ்வளவு சேர்க்கலாம் என்ற ஒற்றை சிந்தையில் .. ஒன்று கூடி நிற்கிறார்கள்.. நாடு என்ன ஆனால் எனக்கென்ன ..எங்களுக்கு எவ்வளவு தேறும் அது ஒன்றே இந்த கேடுகெட்டவர்களின் நினைப்பில் இருக்கிறவரை சுருட்டுவோம்..மக்களுக்கு எந்த பிரச்சனை வந்தால் நமக்கென்ன ..இதுதான் நடக்கிறது ஜெயலலிதா சொத்தும் ..கட்சியும் பசியெடுத்த குள்ளநரிக்கூட்டத்திற்கு கிடைத்த இரையாய்..குதறி வைக்கிறார்கள்..
..
இன்னமும் நிறைய காண வேண்டியிருக்கிறது..
ஆனால் ஒன்று இவர்கள் ஆட்டம் முடியும் போது பார்த்தால்..
சூறாவளியில் சிக்கிய சருகைப்போல தூக்கியெறியப் படுவார்கள்..
எதற்கும் உருப்படியில்லாதவர்கள்..
#உதவாக்கரைகள்_worthless_fellow..
..
தோழர். ஆலஞ்சி
Saturday, June 10, 2017
#நம்ப_தகுந்தவரில்லை
..
மிக சரியாக சொன்னால் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கவேண்டிய நற்செயல்
நம்ப தகுதல் (தகுதியாதல்)
..
எதிரிகளை ஏமாற்றி திசை திருப்புவதென்பது ஒருவகை வியூகம் ஆனால் கூடவே நடந்தவனை.. தன்னை முழுமையாக நம்பியவனை தலையில் தூக்கிவைத்து ஆடியவனை .. நம்பியிருந்தவனை கழுத்தறுப்பதென்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்..
..
அரசியலில் இதெல்லாம் சாதாரணம்.. கொள்கையால் சேர்ந்தவர்களை தவிர... வேறெதையோ எதிர்ப்பார்பவரிடம் இந்த நம்பகதன்மை இல்லாமல் போகும்.. என் கொள்கையில் மாற்றம் எனச்சொல்லியோ.. அல்லது அவரோடு கருத்துவேறுபாடென்று பிரியலாம் அது நேர்மையான முறையிலாக இருக்கவேண்டும்.. ஈ.வி.கி.சம்பத் காமராஜரிடம் இருந்து வெளியேறிய போது அதை காமராஜரிடமே சென்று தெரிவித்தார் அவரும் வாசல்வரை வந்து வழியனுப்பிவைத்தார்.. அது நாகரீகமான செயல்பாடு நம்பிக்கை துரோகமில்லை..
..
ஆனால் சிலர் கடைசிவரை நம்பிக்கையோடு இருப்பதுபோல காட்டிக்கொண்டுவிட்டு கழுத்தறுத்து செல்வார்கள்.. திரு.பண்ரூட்டி ராமசந்திரன்.. இவரைப்பற்றி சொல்லவேண்டுமெனில் நம்பிக்கை என்ற சொல்லின் எதிர்பதம் இவர்.. அவசரநிலைக்காலம்.. கலைஞருக்கு வாகன ஓட்டிகூட இல்லை.. பண்ரூட்டி காரை ஓட்டிக்கொண்டுவருகிறார்..கலைஞர் கைது செய்யபடலாமென செய்திவருகிறது.. திடீரென வாகனத்தை விட்டு இறங்கி போய்விட்டார்.. கலைஞரை நடுரோட்டில் விட்டு ஓடிவிட்டாரென சொல்வதுதான் சரி.. அப்போது வேறொரு காரில் வந்த கண்ணப்பன் கலைஞரின் காரையோட்டி பத்திரமாக கொண்டுவந்து சேர்த்தார். அதனால்தான் அவரை #காரோட்டி_கண்ணப்பன் என்றழைத்தார்.. பிறகு திமுக ஆட்சியிக்கு வந்தபிறகு.. காரோட்டிக்கு போக்குவரத்து துறையை ஒதுக்கினார்.. இன்னொரு நிகழ்வையும் பதிவு செய்யவேண்டும்.. நாஞ்சிலார் அதிமுகவிலிருந்து மீண்டும் திமுகவிற்கு வந்த போது #வருவாய்_தம்பி என்றார்.. அவருக்கு திமுக ஆட்சியில் வருவாய்த்துறை ஒதுக்கப்பட்டது....
அதன்பிறகு கால சூழல் மாற எத்தனையோ முறை தூது அனுப்பியும் பண்ரூட்டியை கலைஞர் சேர்த்துக்கொள்ளவில்லை..
..
ஆனால் வைகோ விடயத்தில் இதற்கு நேர்மாறாக நடந்துக்கொண்டார்.. இன்னும் சொல்லப்போனால் மிகவும் நம்பினார் கனிவோடே எப்போதும் நடந்துக்கொண்டார்.. மூன்றாவதுமுறை மாநிலங்களவைக்கு இவரை தேர்வு செய்ய கடும் எதிர்ப்பு கட்சியினரிடையே இருந்தது அது பொதுக்குழுவில் கூட எதிரொலித்தது....
ஆனாலும் கலைஞர் வைகோவிற்கு வாய்ப்பை தந்தார்..
கட்சியை உடைத்து கண்ணப்பன் உட்பட ( மற்றவர் சென்றதற்கு காரணம் தெரியும் கண்ணப்பன் சென்றதற்கு காரணம்தான்தெரியவில்லையென்பார்) 9,மாவட்டசெயலாளரோடு சென்று கட்சிக்கு உரிமை கோரிபோதும் கூட அஞ்சாமல் எதிர்க்கொண்டு.. மதிமுக ஆரம்பித்தபோது மறுபடியும் திமுக என கருத்துகூறினார் .. பொடோ சட்டத்தில் ஜெயலலிதா சிறையில் வைத்தபோது கலைஞரே நேரில் சென்று நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்து பிணையில் வர சொன்னார்.. அப்போது வைகோ சொன்ன வாசகம் என் உயிருள்ளவரை கலைஞரை எதிர்க்கமாட்டேன்.. பிறகு ஜெயாவோடு கூட்டணி அமைத்து திமுகவை வரவிடாமல் செய்யவேண்டுமென்ற சகுனித்தனம் செய்து கடைசியில் கரைந்து கரைந்து... இடம் தெரியாதநிலைக்கு வந்திருக்கிறார்..
..
என் மாணவ பருவத்தில் அன்றைய மாணவரணி செயலர் எல்.ஜி யோடு வலம் வந்த கம்பீரதலைவராக மனங்களில் குடிக்கொண்டவர்.. அப்போதே மன்னை போன்றவர்கள் இவரை சரியாக கணித்திருந்தார்கள்.. கோ.சி.மணி போன்றவர்களெல்லாம் கலைஞர் மேல் அதீத நம்பிக்கை கொண்டவராக நடிக்கிறார் என்றார்கள் அவர்கள் சொன்னதுதான் நடந்தது.. மணி அண்ணனின் சொல்லில் சொல்லவேண்டுமெனில்..
அவர் இக்கட்டான நிலையில் தஞ்சையில் கூடிய பொதுக்குழுற்கான ஏற்பாட்டின் போது எங்களிடையே பேசியவார்த்தை... நம்பதகுந்தவனில்லையென சொன்னது இப்போதும் கேட்கிறது.. ஆம்..
..
கலைஞரின் கவிதையொன்று நியாபகம் வருகிறது..
எம்ஜிஆர் மறைவையொட்டி பெரியார் நிறுவிய கலைஞர் சிலையை கடப்பாரையால் ஒரு இளைஞன் பெயர்க்கிறான்..
அப்போது கலைஞர் எழுதினார்..
"#செயல்படவிட்டோர்
சிரித்துமகிழ்ந்து நின்றாலும்
அந்த சின்னதம்பி..
முதுகில் குத்தவில்லை
நெஞ்சில்தான் குத்துகிறான்..
அதுவரை நிம்மதியெனக்கு"....
..
இவர்கள்
முதுகில் குத்தியவர்கள்..
நம்ப தகுதியில்லாதோர்..
வினைவிதைத்து வினையையே அறுப்பவர்கள்..
#தீதும்_நன்றும்_பிறர்_தரவாரா..
..
தோழர். ஆலஞ்சி
படம்.. மலேசிய விமானநிலையத்தில்
Friday, June 9, 2017
கைப்புள்ள
#ஆபத்தானவரா..
சரியாக புரிந்துக்கொள்ளப்படவில்லை.. அந்தளவிற்கு ஒர்த் (மதிப்பு) இல்லாதவர் தான் வைகோ.. ஆனால் சிலவற்றை பேசவேண்டும்.. விசா வழங்கப்பட்டிருக்கிறதே ஏன் அனுமதியில்லை என கேள்வி எழும்.. விசா வழங்கும் படிவத்திலேயே மிக தெளிவாக ஒரு வாகம் இருக்கும் அனுமதிப்பதை
Immigration குடியேற்ற அதிகாரிகள் முடிவு செய்வர்..
அதுதான் நடந்திருக்கிறது.. விசா வழங்குகிறவர்களுக்கு விசா விண்ணப்பவரைப்பற்றி தெரிந்திருக்கவேண்டியதில்லை ஆனால் குடியேற்ற அதிகாரிகள் Immigraton officers வழங்கபடுகிற பட்டியலில் வைகோவின் பெயர் இருக்கிறது.. அவ்வளவுதான்.. இதுதான் பார்வதி அம்மாள் விடயத்திலும் நடந்தது. அப்போது அரசை குறை சொன்னவர்களுக்கு இப்போது காலம் விளக்கியிருக்கிறது..
..
அது சரி வைகோ ஆபத்தானவரா. பாவம் சிறுப்பிள்ளைத்தனமானவர்.. சட்டென்று உணர்ச்சிவயப்படும் கூமூட்டை மலேசிய அரசு தீண்டதாகாதவர்/ தீவிரவாதிகள் தொடர்பு பட்டியலில் இவர் இருப்பதெல்லாம் கொஞ்சம் கூடுதலாக தெரிகிறது .. மற்றபடி வேறு காரணம் சொல்லி திருப்பி அனுப்பியிருக்கலாம்.. தமிழர்களிடையே பிரிவினையை கொண்டுவரும்படியான பேச்சு.. இளைஞர்களை வழிகெடுத்தல் .. காட்டுகத்தல் கத்தி பொது அமைதிக்கு தீங்கு விளைவித்தல் இப்படி ஏதாவது நகைச்சுவையாக சொல்லியிருக்கலாம்..
..
மலேசியா அரசு அவமான படுத்தியதாக சில குரல்கள் கேட்கிறது அந்த நாட்டின் வெளியுறவுக்கொள்கையை நாம் விமர்சிக்க முடியாது அதை அளவுகோல்தான் இலங்கைக்கும் என்பதை புரிந்துக்கொள்ள தொடங்கிவிட்டனர்.. அமைதியான ஜனநாயக பாதையில் தொடர் போராட்டங்களில் மக்களை ஒருங்கிணைத்து போராடினால்தான் எதிலும் வெற்றிபெற முடியுமென்பதை ஈழம் நமக்கு உணர்த்தியிருக்கிறது.. மீண்டும் தோக்கை நோக்கி நகர்வார்களோ என்ற அச்சம் அதற்கு இவரைப்போன்ற அரைவேக்காடுகளை பயன்படுவார்களோ என நினைத்து தடை விதித்திருக்கிறார்கள்.. ஆனால் அந்தளவிற்கு பயன்படாதவர் என அறிந்திருக்கவில்லை மலேசிய அரசாங்கம்.. ஆம் தமிழகத்திலேயே இருபத்தைந்து வருடங்களாக ஈழ ஆதரவு பேசி வந்தும் அவரால் எந்த மாற்றத்தையும் மக்களிடையே ஏற்படுத்தமுடியவில்லை என்பதும் அதைவிட இருக்கிற இடம் தெரியாமல் போனதும்.. இவரால் எந்த பயனையும் வெளிநாடுவாழ் தமிழ்சமூகம் அடையவில்லையென்பதுமே யதார்த்தம்..
..
#கைப்புள்ள..
..
தோழர். ஆலஞ்சி
Thursday, June 8, 2017
மோடி...
மத்தியில் ஆளும் பாஜக அரசு ஒருவிடயத்தில் கறாராக இருக்கிறது ஆரஎஸ்எஸ் அஜந்தாவை நடைமுறைபடுத்துவதில் வேகம் காட்டுவதென்பதே அது..
..
பாப்பனர்களுக்கான இயக்கம் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கு வழிகாட்ட முனைவதில் தான் சிக்கல் வருகிறது.. எதை உண்ண வேண்டுமென்பதில் தொடங்கி .. எதை பேசவேண்டும் எதையெல்லாம் செய்யகூடாதென அவர்களே தீர்மானிக்கிறார்கள்.. காமராஜரை என்ன காரணத்திற்காக கொலை செய்ய முயற்சித்தார்களோ அதில் கொஞ்சமும் குறைவின்றி யெச்சூரியை கொல்ல முனைத்திருக்கிறார்கள்.. அதாவது எதிராளிகளை பயமுறுத்துவதல்ல அவர்கள் நோக்கம் காரணம் பயப்படுகிற இரத்தம் செத்த வர்க்கமல்ல அறிவார்கள்.. திருப்பி அடிப்பார்கள் அதை காரணமாக வைத்து உள்நாட்டு போரை/கலவரத்தை தூண்டுதல்.. பரபரப்பாக வைத்திருத்தல்.. அதுதான் அவர்கள் எண்ணம்.. இதற்கெல்லாம் முடிவு கட்டவேண்டுமெனில் பாப்பான் தாக்கப்பட வேண்டும் அப்போதுதான் விரைந்து தீர்விற்கு வருவார்கள் .. நிறைய விடயங்களில் (சுவாதி கொலை உட்பட) பார்த்தாயிற்று.. இதை பழநிபாபா முன்பெல்லாம் கூட்டங்களில் பேசும் போது அடிக்கடி சொல்வார்.. பாப்பானை அடித்தால் உடனை தீர்வு கிடைக்குமென்பார்.. காரணம் இந்திய அரசியல் அமைப்பில் இருப்போர்கள் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்வதை கவனியுங்கள் அவை அனைத்திலும் பாப்பானே பாதிக்கப்பட்டிருப்பான்..
..
மாட்டுக்கறி விடயத்த்லும் இப்போது நடக்கிற இடைசாதி கடைசாதி காரர்களுக்கெதிரான தாக்குதல்கள்.. இன்னும் சொல்லப்போனால் நேரடியாகவே அவர்களின் வளர்ச்சியில் பொறுக்கமுடியாமல் இடஒதுக்கீட்டை செயலிழக்க செய்யும்வேலையில் தொடர்ந்து செயல்படுகிறார்கள்.. கடனை தள்ளுபடி கேட்ட விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு.. விசாரிக்க சென்ற ராகுலை கைதுசெய்திருப்பது.. சுதந்திரமாக செயல்பட முடியாமல் ஊடகங்கள் மிரட்டபடுவது.. நேர்மையற்ற தேர்தல் .. இவைதான் இவர்களின் பலமென எண்ணுகிறார்கள் ஆட்சி கையிலிருப்பதால் எதைவேண்டுமானாலும் செய்யலாமென்ற திமிர் அதிகமாய் துள்ளவைக்கிறது.. எங்கிருந்தான் என தெரியாதவனெல்லாம் சமூக ஆர்வலர் என்ற போர்வையில் கேட்க சகிக்காத அறிவுபூர்வமற்ற ஆணவ கருத்துக்களை விச வார்த்தைகளை கூச்சமேயின்றி பேசி திரிகிறார்கள்..
இதற்கெல்லாம் மக்களின் மௌனபுரட்சியே பதில் சொல்லும்..
..
அறிவுகெட்ட பிரதமரை கொண்டதால் 56 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.. அறிவார்ந்த மன்மோகனை வேண்டாமென்று வைத்ததின் விளைவு இன்று நாடு #வளராதநாடாய் போனது.. பணம் மதிப்பிழக்க செய்தபோது #மோடியின்_ரசிகர்கள் ஆஹாஓஹோ என புகழ்ந்தார்கள்.. அப்போது தவறிழைத்திருக்கிறீர் மிகப்பெரிய தாக்ரத்தை 2% வரை தருமென்றார் பொருளாதார மேதை டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள் ..அதுதான் நடந்தது
மக்களை கீழ்நோக்கி இழுக்கும்/செலுத்தும் கையாலாகாத அரசாய் .. விவேகமற்ற உருபப்படியில்லாத மதிப்பிழந்த மோடியின் அரசு
துக்ளக் அரசாய்.. மத்தில் ஆளும் அரசு.
#தூக்கியெறியபடவேண்டும்
..
தோழர். ஆலஞ்சி
Wednesday, June 7, 2017
கணிதம்..
கடைசியில் ஜோசியகாரன் லெவலுக்கு வந்துட்டாய்ங்க.. ஜோதிடம் என்பது ஒரு கணிதம்.. மிக துள்ளியமாக பிறந்த தேதியின் நிமிடத்தை சொல்லவே முடியாது.. பிரசவத்தில் குழந்தை எந்த நிமிடம் பிறந்ததென .. குறிப்பெடுக்கவெல்லாம் முடியாது இப்போதெல்லாம் சிசேரியனில் கத்தி வைக்கிற நேரத்தையா அல்லது கையில் குழந்தையை எடுக்கிற நேரத்தையா.. சுக பிரசவமெனினும் தலை வரும் நேரமா.. கால் வரும் நேரமா அல்லது கையில் தூக்கி தலைகீழாக நிறுத்தும் நேரமா..
ஜோதிடம் என்பது ஏறக்குறைய குமாரசாமி கணக்கை போன்றது .. ஜோதிடர் சொல்வதெல்லாம் நடத்திருக்கிறதா.. ஏதோ ஒருவகை பிழைப்பிற்காக நடத்தப்படும் குறுட்டுத்தனம்..
..
அதிமுகவின் இப்போதைய நிகழ்வுகள் அதிகம் பதற்றத்தை அதிமுகவை விட பாஜகவிற்கு தந்திருக்கிறது.. நான்கு வருடங்கள் அடிமாடுகளை வைத்து பிழைப்பை நடத்தலாமென்ற எண்ணத்தில் இடிவிழுந்ததை போல நடப்புகள் நொடிக்குநொடி மாறி வருகிறது. ஜனாதிபதி தேர்தலில் மாறி முடிவெடுத்தால் பாஜகவின் ஆசை நிராசையாகி போகும்.. அதனால் என்ன செய்தாலும் பொறுமை காக்கவேண்டிய சூழல்..
..
திமுக வரகூடாதென்பதிலிருந்தே பாப்பனர்களின் நோக்கம் நமக்கு புரிகிறது.. இருக்கிற காலத்திற்குள் எல்லா உயர்பதவிகளையும் நிரப்பிவிடவேண்டுமென்ற நோக்கமும் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் பிற்படுத்தப்பட்டவனின் பட்டியல்இனத்தவனின் உரிமை பேசும் நமது வாய்ப்புகள் பறிபோகும் என்ற கவலை அப்பட்டமாக தெரிகிறது..
..
அதிமுக பிரிவுகள் திமுகவிற்கு சாதகமாக போகிறதென்பதால் கூச்சல்கள் அதிகமாகிறது
ஒருவிசயம் தளபதி அவர்கள் எண்ணிக்கை விளையாட்டை இப்போது செய்ய மனமில்லாததால்தான் பேரத்திற்கு தயாராகாமல் போனார்.. நேரான மக்களின் தேர்வாக இருக்கவேண்டுமென்பதுதான் தளபதியின் விருப்பம் .. இப்படி பேசி பேசி இப்போதே கொண்டுவந்துவிடாதீர்கள்..
தளபதி மிகவும் வகையாக வலைவிரிக்கிறார்.. இந்த முறை சிறப்பான ஒரு வெற்றியை.. இதுவரை தமிழகம் கண்டிராத வெற்றியை.. எதிராளிகள் இடம்பெயர ..கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெற்றிப்படையோடு வருவதை... காணதான் போகிறீர்கள்..
..
இது ஜோதிடபொய் புரட்டு கணிதமல்ல மக்களின் உள்மனதின் எழும் நாதத்தில் ஒலிக்கொண்டு கணித்த உண்மை கணிதம்..
..
#இருக்குமிடம்தெரியாமல்போவீர்_எதிரிகளே...
தோழர். ஆலஞ்சி
Tuesday, June 6, 2017
கலைஞர்...
கலைஞர் உடல் நலிவுற்றிருந்தார்.. இப்போது விரைந்து குணமாகிவருகிறார்.. மிக நம்பிக்கையோடு மன உறுதியோடு எதிர்கொண்டு வருகிறார்.. உடல்நலத்தை காரணம் காட்டி அரசியல் செய்யவில்லை எதையும் வெளிப்படையாக செய்தது திமுக..
..
எட்டுமாதங்களாக அவரின் பெயரின் அறிக்கைகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றவில்லை. தொண்டர்களை காவடி தூக்க சொல்லவில்லை மண் சோறு சாப்பிட சொல்லி தெய்வத்தை.? ஏமாற்றவில்லை.. மொத்தமாய் மொட்டையடித்து ஊரை ஏமாற்றவில்லை..
எதையும் வெளிப்படையாக நேர்மையாக செய்திருக்கிறார் தளபதி..
..
வயதுமூப்பும் தொற்றும் செய்த தொந்தரவை மருத்துவம் கொண்டு வென்று வந்திருக்கிறார்.. மூப்பில் வரும் இயலாமையை அதன் போக்கிலே போய் .. கடந்து வந்திருப்பது பெரும் #மகிழ்ச்சி..
இதுவரை தமிழகத்தில் உடல் நோவை அரசியலாக்கி அதில் பயனடைந்திருப்பதை தான் கண்டிருப்பீர்கள்.. அதிமுகவில் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் .. தங்களுக்கு வந்த நோவை மிகப்பெரிய அரசியல் லாபத்திற்கு பயன்படுத்திருக்கிறார்கள் நேர்மையற்ற செயல்பாடுகள் ..அதுதான் அரசியலென்று கட்டமைத்து போய்விட்டார்கள்..
..
ஒரு அரசியல்வாதியின் பயணம் எப்படி இருக்கவேண்டுமென்பதை கலைஞரின் என்பதாண்டு பொதுவாழ்வு நமக்கு உணர்த்தி வந்திருக்கிறது.. எப்போது ஒளிவுமறைவற்ற #நெஞ்சுக்குநீதியை தந்திருக்கிறார்..எத்தனையோ விமர்சனங்கள் குற்றசாட்டுகள் எதிலுமே எதிரிகளால் ஆதாரங்களை தரமுடியவில்லை மாறாக எதிர் அணியினர் மீது இவர் தரும் ஆதாரங்கள் பொய்யாய் போனதே இல்லை.. ஜெயா வழக்கு உட்பட.. சட்டென்று நம்பிவிடும் தமிழனின் பலவீனத்தால் நிறைய இழந்து நிற்கிறோம்..
தமிழகமக்கள் சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரும் நிதியை தொலைத்துவிட்டுநிற்கிறார்கள்..
..
புரிந்துக்கொள்ளுங்கள் கலைஞரைப்போல ஒரு தலைவன் வேறு மாநிலத்திற்கோ அல்லது வேறு இனத்திற்கோ/ சமூகத்திற்கோ கிடைத்திருப்பானேயானால் ..அந்த சமூகம்/இனம் கலைஞரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடியிருக்கும்..
கலைஞர் அதிகாரத்தில் இருந்தபோதுதான் நீங்கள் இப்போது அனுபவிக்கிற உரிமைகள் அனைத்து கிடைத்தது.. கலைஞரைப்போல வெளிப்படையான திறந்த புத்தகமாய் வேறு தலைவரை நாடு கண்டதில்லை
..
#கலைஞர்_எம்இனம்செய்த_தவம்..
..
தோழர். ஆலஞ்சி
சிவா..
#திருச்சிசிவா..
சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்.. நண்பரின் திருமணத்தை நடத்திவைக்க பாபநாசம் வந்திருந்த போது நீண்டநேரம் விவாதிக்கின்ற சூழல் ஏற்பட்டது.. தளபதி மீது தனிபிரியம் கொண்டிருந்தார்.. திரு.வைகோவைப்பற்றி பேச்சு வந்தபோது.. அப்போது திமுகவில் இருந்தார் வைகோ மௌனமாக.. கடந்தார்.. நிறைய அர்த்தம் பொதிந்த சிரிப்பை தந்து மிகவும் எச்சரிக்கையோடு தவிர்த்தார் ஒரு கட்டத்தில் .. நான் கொஞ்சம் அதிகபிரசங்கியாக .. தஞ்சை பெரியாரென அழைக்கப்பட்ட மன்னை அவர்கள் .. அவன் நடிகன் நம்பமுடியாதவன் என்று ஒருமுறை சொன்னதை சொன்னபோது.. பெரியவருக்கு தெரியாததா நமக்கு தெரிந்துவிட போகிறதென்றார்..
..
இங்கே ஒப்பீட்டை கொண்டுவர நினைக்கிறேன்.. சிறந்த நாடாளுமன்றவாதியாக அடிக்கடி தன்னை சொல்லிக்கொள்கிற வைகோவின் நாடாளுமன்ற பேச்சுகளை சற்று கூர்ந்து கவனித்தால் .. அனைத்து வெத்துவேட்டாக தெரியும்.. தமிழகம் சிறந்த தலைவர்களை தந்திருக்கிறது.. காயிதெமில்லத், அறிஞர் அண்ணா .. தொடங்கி இரா.செழியன் மாறன்.. என சொல்லிக்கொண்டே போகலாம் அந்த வரிசையில் இடம்பெற தகுதியானவர் திருச்சி சிவா..
நிச்சயமாக அந்த வரிசையை வைகோ இன்னும் தொடவில்லை என்பதுதான் நிதர்சனம்..
..
இடைமறித்து விவாதம் செய்வதென்பதோ அல்லது உணர்ச்சிவயப்பட்டு விவாதிப்பதோ நல்ல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழகல்ல.. வேகமாக பேசுவதால் மட்டும் சாதித்துவிட முடியுமா என்றால் வைகோவே பதிலாக இருக்கிறார்.. எந்தவொரு தனிநபர் மசோதாவை இதுவரை கொண்டுவந்ததாக என் அறிவில் இல்லை.. அப்படியே கொண்டுவந்திருந்தாலும் அதில் வெற்றியை பெற்றதில்லை.. 18 ஆண்டுகள் நாடாளுமன்ற மேலவையில் இருந்தார் என்பதை தவிர.. எந்தவொரு மசோதாவின் போக்கை மாற்றியதாகவோ அல்லது தோல்வியடைய செய்ததாகவோ திருத்தங்களை கொண்டுவந்ததாகவோ தெரியவில்லை காரணம் மாறன் அந்தவேலைகளை சிறப்பாக செய்துவந்தார் அவரை மீறி செயல்படமுடியாமை ஒரு காரணமென்றாலும் எப்படி செயல்பட வேண்டுமென கலைஞர்தான் இங்கிருந்து இயக்கிக்கொண்டிருந்தார்.
..
திருச்சி சிவா மேற்சொன்ன பட்டியலில் இடம்பெற கூடிய தகுதியுடையவர்.. ஆவேசமாக பேசிதள்ளாமல் ..ஆழமாக அளவோடு .. எல்லோரையும் ஈர்க்கிற வித்தை தெரிந்தவர். மக்களவையில் திமுகவிற்கு உறுப்பினரே இல்லாத காலகட்டத்திலும் மாநிலங்களவையில் தனிநபர் தீர்மானத்தை கொண்டுவந்து சிறப்பாக பேசி அதில் உள்ள நியாயத்தை எடுத்துச்சொல்லி வெற்றிபெற செய்திருக்கிறார்... திருநங்கை மசோதா ஒன்று போதும் அதேபோல் நரிகுறவர்கள் மசோதா மீதான பேச்சும் சிறப்புவாய்ந்தது..
..
நல்ல பார்லிமென்டேரியனாக தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தியிருக்கிறார். வீணான கூச்சல் இடாமல் உணர்ச்சி வயப்பட்டு கத்தி தீர்க்காமல்.. சொல்ல வந்ததை தெளிவாக எல்லோரும் ஏற்கும்படி செய்பவர்..
நல்ல அரசியல்வாதியாய்.. எல்லோருக்கும் பிடித்தவராய் கொண்ட கொள்கையில் உறுதியும் கலைஞர் மீதும் தளபதி மீதும் பற்றும் கொண்டவர் இன மொழிக்கு ஆபத்தென்கில் பாய்ந்திடும் புலியாய்.. எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாய்.. திகழ்கிறார்..
..
நிச்சயமாக மாறனுக்கு பிறகு சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் (பார்லிமென்டேரியன்) இவர் என்பதில் மாற்றுகருத்தே இல்லை..
..
தோழர். ஆலஞ்சி
Monday, June 5, 2017
குமரியின் மகள்
நாட்டை விட்டு வெளியேறுவேன் தமிழிசை..
கிறுக்குத்தனமாக பேசிவருவது மதவாதிகளுக்கு புதிதல்ல. குமரியின் மகள் பேசும் போது நமக்கே சங்கடமாக இருக்கிறது.. நிறைய கருத்து பேதங்கள் இருந்தபோதும் குமரியின் சொல்லாடல்கள் ரசிக்கும்படியாகதானிருக்கும்..
..
வேறுவழியே இல்லை தமிழிசை தங்களை தயார்படுத்திக்கௌள்ளுங்கள் எங்கு செல்வதாக உத்தேசம்.. திராவிட நாட்டில் இடமில்லை உ.பி.வேண்டுமானால் செல்லலாம்.. அங்கும் இடம் கிடைக்காதே தமிழிசை.. வாரணாசி போன்ற புகழ்பெற்ற கோவில் நகரங்களில் .. சூத்திரர்கள் உள்ளே வர அனுமதியில்லை என்ற அறிவிப்பு பலகை வைத்திருக்கிறார்கள்.. இன்றைய விடுதலை கூட கருத்திட்டிருக்கிறது.. முன்னூறு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டிருந்த வாசகம்.. ஆங்கிலேயர் காலத்தில் அகற்றபட்டதே.. அது மீண்டும் எழுதப்பட்டிருக்கிறது..
உங்களுக்கு புரிகிற மாதிரி.. உங்கள் பாட்டிகளெல்லாம் தோளில் சீலையில்லாமல் திருவாங்கூரில் நடந்த காலத்தில் .. எழுதப்பட்டிருந்த வாசகம்.. மீண்டும் எழுதப்பட்டிருக்கிறது .. அங்கேயும் போக வழியில்லை..
..
முதலில் தன்மானத்தோடு வாழ கற்றுக்கொள்ளுங்கள்.. வாரணாசி அறிவிப்பை கண்டு கொதித்தெழந்திருக்க வேண்டாமா.. பாஜக தலைமைக்கு எடுத்து சொல்லியிருக்கவேண்டாமா.. இங்கிருந்து பக்தனாய் செல்லும் சூத்திரன்.. வெளியில் நிற்கதான் வேண்டுமா.. அதையெல்லாம் சரிசெய்ய மாட்டீர்கள்.. நாட்டைவிட்டு போய்விடுவதாக பேசி அசிங்கப்பட்டு நிற்காதீர்.. சரிசரி
போகும் போது சொல்லிவிட்டு போங்கள் ..
..
நாகரீகமாக பேசவும் தெரியவில்லை.. சுகாதாரமாக இருக்கவும் தெரியவில்லை.. பிறந்த நாளுக்கு கேக்கை பிசைந்து கொடுத்தபோதே உங்களின் தரம் மக்களிடம் வேடிக்கை பொருளாகிவிட்டது..
இனியாவது .. பேச்சை குறையுங்கள் .. பேசுவதன் பொருள் புரிந்து பேசுங்கள்.. வாய்க்குவந்ததை பேசி அவமானப்பட்டு நிற்காதீர்.. இதெல்லாம் குமரியின் மகள் .. தெருவோரம் திரிகிறவரைப்போல உளறிக்கொண்டிருக்கிறாரே என்பதற்காக..
..
அது சரி.. உங்கள் விருப்பம் விரைந்து நிறைவேறும்
உங்கள் பயணத்திற்கு எமது வாழ்த்துகள்
..
#தொலையும்..
..
தோழர். ஆலஞ்சி
காயிதெ மில்லத்
#காயிதெமில்லத்..
கண்ணியத்துக்குரியவர்... இஸ்லாமிய சமூதாயத்தின் தன்னிகரற்ற தலைவர்.. முகமதலி ஜின்னா தலைவராக இருந்த (ஒருங்கிணாந்த இந்தியாவில்) காலகட்டத்திலேயே மிக முக்கிய தலைவராக வலம் வந்தார்.. பிரிவினையின் போது இந்தியாவோடு இருப்பதென்பதில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்தவர்..1949ல் அகில என்பதை நீக்கிவிட்டு
IUML இந்திய யூனியன் முஸ்லீம் லீக்காக உருவாக்கினார் ..பின் அதன் தலைவராக திறம்பட செயல்பட்டார்..
..
1952 ல் இந்தியாவின் ஆட்சிமொழியாக இந்தியை கொண்டுவந்த போது அதை கடுமையாக எதிர்த்தவர்.. அதற்கான தகுதி இந்திக்கில்லை என வாதிட்டார்.. இவரின் பெரும் முயற்சியில் சரிசமமான வாக்குகளை சபையில் பெற முடிந்தது... 244 வாக்குகள் இந்தி வேண்டுமென்றும் 244 வாக்குகள் வேண்டாமென்றும் விழ சபாநாயகர் தனது வாக்கை ஆட்சியாளருக்கு சாதகமாக்கி .. இன்று வரை இந்தி ஆட்சிமொழியாக தொடர்கிறது..
..
தொகுதிக்கே செல்லாமல் வெற்றிப்பெற்றவர் இவர் ஒருவர்தான் .. வேட்புமனுவைதாக்கல் செய்துவிட்டு தொகுதிக்கே செல்லமாட்டார்.. என்னை அவர்களுக்கு பிடித்திருந்தால் வாக்களிப்பார்களென சொல்வார்.. மூன்றுமுறை தொடர்ந்து மஞ்சரியிலிருந்து இப்போது மலப்புரம். . வெற்றிப்பெற்றார்.. இவருக்கு பிறகு நிறைய தலைவர்களை IUML கண்டிருக்கிறது.. ஆனால் இவரைப்போல.... விடைதானில்லை..
..
காயிதெ மில்லத் மறைந்தவுடன் பெரியார் விரைந்து சென்று பார்த்து அழுகிறார்.. அதற்குள் போய்விட்டாயா தம்பி நான் போய் நீ இருக்க கூடாதா என்கிறார்.. இந்த சமுதாயத்திற்கு இனி யாரிருக்கிறார் என்கிறார்.. பெரியாரின் வார்த்தை சரியாக தானியிருந்தது.. யாரிருக்கிறார்..எத்தனை பிரிவுகள்.. பிரிவுகளுக்குள் கோஷ்டிகள் .. கோஷ்டிகளுக்குள் இழுபறிகள்.. யார் பெரியவன்.. சமுதாயத்தை கூறுப்போட்டிருக்கிறார்கள்.. இன்றுவரை சமுதாயத்தை ஒருங்கிணைத்து வழிநடத்தும் தலைவர் இல்லையென்பதே சுடுகிற உண்மை
..
தலைமைக்குரிய பண்புகள்.. நட்பையும் எதிர்ப்பையும் சரியாக காட்டுதல் மொழி ஆளுமை.. நிர்வாக திறன் .. சிறந்த நாடாளுமன்றவாதி.. சமுதாயகாவலர்.. சொல்லிக்கொண்டே போகலாம்..
ஒரே வரியில் சொல்வேண்டுமெனில் இந்தியா கண்ட சிறந்த ..நல்ல தலைவர்களில் ஒருவர்..ஆம்
#கண்ணியத்துக்குரியவர்..
..
தோழர். ஆலஞ்சி
Sunday, June 4, 2017
வைரவிழா சொல்லும் சேதி
#வைரவிழா..
நிறைய கருத்துகளை விதைத்திருக்கிறது.. பாஜக மட்டுமல்ல அதிமுகவும் பதறியதை வெளிச்சமிட்டு காட்டுகிறது.. வயதானோர்கான விழா என பொன்னர் சப்பைகட்டுகிறார்.. காங்கிரஸின் குடியரசுதலைவர் வேட்பாளரை ஆதரிக்கவேண்டுமென நாஞ்சில் சம்பத் பேசுகிறார்.. வழக்கமான நாஞ்சில் பேச்சாக இது இல்லை.. அதிமுகவின் குறிப்பிட்ட ஒருபிரிவின் குரலாக தெரிகிறது..
..
சிலர் விமர்சனங்களில் ஆசிரியருக்கு திருமாவிற்கு இடமில்லை ப.சிதம்பரம் போன்றோர் முன்னிலை படுத்தபடவில்லை என சொல்கிறார்கள்.. எல்லோரும் ஒரே பதில்தான் .. விழாவின் நோக்கம் சிதைந்துவிடாமல் ஆளும் அரசுகளுக்கு எதிரான பங்களிப்பை ஒருங்கிணைக்க செய்த முதல் முயற்சி அதில் வெற்றி கண்டிருக்கிறது.. எவ்வளவோ இடைஞ்சல் எதிர்மறை கருத்துகள் விழாவின் சிறப்பை களங்கமடைய செய்ய செய்த சூழ்ச்சிகள் அத்தனையையும் முறியடித்து சிறப்பித்திருக்கிறார் தளபதி.. இதில் மற்றொரு சேதியும் அடங்கியிருக்கிறது .. திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறையின் தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் திமுகவின் அடுத்த தலைவராக முன்னிருத்தப்பட்ட திரு.ஸ்டாலினை தேசிய அளவிலான அங்கீகாரத்தை பெறுதல் ..
..
தமிழகத்தின் பல்வேறு உதிரிக்கட்சிகளின் தலைவர்களை அழைக்கவில்லை என்பதை வேறொரு கோணத்தில் காண வேண்டியிருக்கிறது.. தேவையில்லாத சுமையை ஆரம்பத்திலிருந்தே சுமக்க வேண்டியதில்லை.. தேவைபடுமெனில் அது அப்போதைய நிலைமையை கண்டு முடிவெடுக்கலாமென்ற யுக்தியாக கருதவேண்டும்.. ஆம்.. தளபதி அவர்களை நாடு நம்ப தொடங்கியிருக்கிறது.. தமிழக வரலாற்றில் மிக சிறந்த தலைவர்கள் வரிசையை தளபதி அடைந்திருக்கிறார்.. மக்கள் விரும்புகிற தலைவராக மாற்றே இல்லாத இடத்தை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறார்.. இந்த நேரத்தில் எங்களால்தான் என #சிறுசுகள் கூச்சலிட வாய்ப்பை வழங்காமல் காயை நகர்த்துகிறார்.. மேடையில் கூட மிக சாதூர்யமாக சிலரை அமர்த்தவில்லை..
மேடையை அழகாக்கியிருக்கிறார் என்று கூட சொல்லலாம்..
..
நாகரீகமான அரசியலை எதிரிகளும் வியக்கும் அரசியலை நல்லதொரு தொடக்கத்தை.. நாடு விரும்பும்..மக்கள் விரும்புகிற புதியதொரு மாற்றத்தை திரு.ஸ்டாலின் முன்னெடுத்திருக்கிறார்
#மகிழ்ச்சி_பெரும்மகிழ்ச்சி..
..
#தளபதியின்_புதியபாதை …
..
தோழர். ஆலஞ்சி
..
Saturday, June 3, 2017
மகிழ்ச்சி
#மகிழ்ச்சி..
நடந்துமுடிந்த #வைரவிழா ஒன்றை பறைச்சாட்டியிருக்கிறது.. இந்த நாட்டை ஆளும் பாஜகவிற்கு எச்சரிக்கையை தந்ததோடு.. சிதறிக்கிடப்பதால் பலனற்று போய் பாசிசம் தலைதூக்கி நிற்கிறது அதன் கொடூரபற்களை மக்களை காவு கேட்கிறது.. அதை பிடிங்கியெறிய வேண்டுமென்பதை உணர்ந்திருக்கிறது/ உணர்த்தியும் இருக்கிறது..
..
#கலைஞர்..
தவிர்க்கமுடியாத தலைமை இந்திய அரசியல் எப்போதெல்லாம் திசைமாறி போகிறதோ அப்போதெல்லாம் சரியான திசையில் திருப்பி சரியாக செலுத்தும் #விசையாய் இருக்கிறார் ..இப்போது கூட மௌனத்தை காதல்கொண்ட வேளையிலும் அவரின் அசைவுகள் கூட அதைதான் செய்திருக்கிறது.. தேசம் மிக மோசமான காலத்தை இதுவரை சந்தித்திராத மதவெறியாட்டத்தின் உச்சத்தை .. கோமாளித்தனமான ஆட்சியை , கொடூரமாக விசவிதைகளை விதைத்திடும் அயோக்கியர்களின் கையில் நாடு இருக்கும்வேளையில் .. கலைஞரின் வைரவிழா புதியதொரு தொடக்கத்தை நாட்டின் நலன் கருதும் நோக்கத்தோடு செய்திருக்கிறது..
..
#தளபதிஸ்டாலின்..
நாடே வியந்து போற்றுகிறது.. நாட்டின் பல்வேறு மாநில தலைவர்களும் புகழ்கிறார்கள்.. சரியான நேரத்தில் கலைஞரைப்போல சரியாக முடிவெடுத்து ஒருங்கிணைத்திருக்கிறார்.. இந்த தேசம் சந்திக்கிற/சந்தித்து கொண்டிருக்கிற அவலங்களை களைய
மிக சரியான நபரை இனம் காண வேண்டிய தருணத்தை உணர்த்திருக்கிறார் அதை தேசத்தின் தலைவர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பதை இந்த விழா சொல்கிறது..
தமிழகத்தின் தவிர்க்க முடியாத, தவறவிடகூடாத சக்தியாக ஸ்டாலின் எழுந்து நிற்கிறார்.. நிச்சயம் ராகுல் சொன்னதைப்போல கலைஞரைப்போல இவரும் பேசப்படுவார் /புகழப்படுவார்..
இன்று சிலர் எரிச்சலடையலாம் அதுவே தளபதியின் வளர்ச்சிக்கு உரமாகும்..
..
எல்லோரும் விரும்பும் தலைவராக தமிழகத்தின் எதிர்பார்ப்பாக.. இந்திய தேசத்தின் ஒப்பற்ற தலைவர்கள் வரிசையில் கலைஞரைப்போல தளபதியும் முத்திரை பதிப்பார்..
தளபதி கனிந்திருக்கிறார்..
..
#தளபதி_தலைவராகிறார்..
..
தோழர். ஆலஞ்சி
Friday, June 2, 2017
தமிழர்களின் காவல் தெய்வம்
தமிழர்களின் #காவல்தெய்வம்
குடியிருக்கும் கோவில்..
ஆனந்த கூத்தில் தமிழகம்..
#ஆண்டவா என்கிறது..
மனதை ஆளவா என்கிறது..
..
எல்லோருக்கும் பிறந்தநாள் வரும்
இங்கே இவருக்கு...
பிறந்த நாள்.
தமிழர்கள் தலைநிமிர்ந்த நாள்.
தமிழ் மகுடம் சுமந்த நாள்..
..
கடைசி நிமிடம் வரை
வெறுத்து நின்றவன்..
காணொளி கண்டு
சிறுத்துப்போனான்
முகம் கறுத்துப்போனான்....
..
தமிழ் என்றால்
நாங்கள் அறிந்தது
கலைஞர்தானே..
தமிழென்றால் அழகென்பார்.
எங்கள் அழகின் அழகே
முத்துவேலர் பெற்ற மு.க.தானே..
தமிழ் நாடே
சிலிர்த்தெழும் கலைஞர்
சொல் கேட்டால்..
#உடன்பிறப்பே..
சொல்லும் ஓராயிரம்
மந்திரங்கள்..
..
கலைஞர்
தமிழன்னை தலையில்..
#வைரகீரிடம்..
..
வாழிய! வாழிய!!
வாழிய!!! பல்லாண்டு..
..
தோழர். ஆலஞ்சி
கலைஞர்..முகம் கண்டு
விழா மலரை கலைஞர் பார்வையிடும் காணொளி காட்சி.. தமிழ் நல்லுலகம் பூரித்துநிற்கிறது..
வயது மூப்பும் உடல்நலிவும் புரிகிறது ஆனால் எங்கள் கண்களில் ஆனந்த கண்ணீர்..
..
என்பதாண்டுகாலம் தமிழக நலன் மட்டுமே எண்ணத்தில் கொண்டு சொல்லால் செயலால் ஓய்வறியாது உழைத்த எம் தலைவரின் 94 ம் பிறந்தநாள் விழா.. அறுபதாண்டுகள் தொடர்ச்சியாய் சட்டமன்ற உறுப்பினராய்.. யாராலும் தொடமுடியாத சாதனை நாயகராய் .. வைரவிழா காணும் கலைஞரை.. எல்லோரும் வாழ்த்துகிறார்கள்.. சதா எதிர்த்து கொண்டிருந்தவரெல்லாம் இப்போது நல் வாழ்த்தை சொல்கிறார்கள் #மகிழ்ச்சி..
..
தேசத்தின் பல்வேறு தலைவர்கள்.. தங்களின் வாழ்த்தை மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறார்கள்..
இந்திய துணைக்கண்டமே இவரது சாதனையை எண்ணி வியக்கிறது.. எள்ளல் பேசியவன் வாய்மூடி கிடக்கிறான்.. காரணம் மிக எளிது.. விமர்சனங்களை இரும்புகரம் கொண்ட அடக்கவில்லை.. அவரவர் உரிமையதென அதன் போக்கில் விட்ட மாபெரும் தலைவர் இவர்.. அதனால்தான் சோர்ந்து விழுகிறார் எம் எதிரிகள்..
..
வீழ்த்தி விடலாம் வேரோடு என்றலைந்தவர்கள்..பாவம் வீழ்த்த நினைத்து வீழ்ந்து கிடக்கிறார்கள் எத்தனை விமர்சனம் கலைஞரின் உடல் நலம் குறித்து மூப்பென்றும் பாராது வாய்க்கு வந்ததை பேசி திரிந்த/திரியும் சிறுப்பிள்ளைகளே.. கலைஞர் யாருமே எழுத முடியாத வரலாறு.. இந்திய துணைக்கண்டம் கண்ட ஒப்பற்ற அரசியல் தலைவர்.. தமிழ் உலகம் இதுவரை கண்டிராத மாபெரும் தலைவர்..
இந்த நூற்றாண்டு கண்ட மாபெரும் எழுச்சி நாயகர்..
தமிழ் பெற்ற பேறு.. தமிழ்நாடு செய்த
#அருந்தவம்..
..
தமிழகமே வணங்கி நிற்கிறது இந்த #தமிழ்கிழவனின் முகம் கண்டு..
..
தோழர். ஆலஞ்சி
Thursday, June 1, 2017
அரசியல் கழிசடை மணியன்
தமிழருவி மணியன்..
அரசியல் கழிசடை..
வார்த்தை கொஞ்சம் தடிமனாகி போனதற்காக வருத்தமில்லை.. காரணம் எங்குமே நிலையில்லாத.. கற்ற தமிழை பேசும் திறமையை கொண்டு வயிறு வளர்க்கும் கீழ்த்தரமான பிறவி..
முதலில் எங்கிருந்தார்..
இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கி
சிண்டிகேட் காங்கிரஸ் அதாவது நிறுவன காங்கிரஸ் மா.பொ.சி.யின் தமிழரசு கழகம் பிறகு
ஜனதா கட்சி .. லோக்சக்தி ..மீண்டும்
இந்திய தேசிய காங்கிரஸ் பிறகு..காந்திய மக்கள் இயக்கம்
காந்திய மக்கள் கட்சி கடைசியாய்
மக்கள் நலக்கூட்டணி தேர்தலில் மக்கள் தந்த மரண அடியை தொடர்ந்து வீர வசனம் பேசி
அரசியலில் இருந்து விலகினார்..
இப்போது மீண்டும் சோற்றுக்கு வழியில்லாமல் போய் ரஜினியை பின் துணைப்பதாக சொல்லி
ஏதேதோ உளறிக்கொண்டியிருக்கிறார் அதில் பிரதானமாய் திராவிட கட்சிகளை ஒழிப்பேன் அது என்னால் மட்டுமே முடியும் ..
நிலையற்ற கொள்கையும், குணமும் கொண்டவரால் என்ன செய்துவிடமுடியும்..
..
காங்கிரஸில் இருந்து வெளியேறி.. பல மரகிளைகளில் தாவி கடைசியில் கலைஞரிடம் தான் வந்தார் கலைஞரின் தனக்கே உரித்தான இளகிய உள்ளம் திட்டகமிஷனில் இடம் அளித்தார்.. கடைசியில் கலைஞரை வசவு பாடிதான் இப்போது பிழைத்துக்கொண்டிருக்கிறார்.. வீட்டுவசதி வாரியம் இவருக்கு திட்டகமிஷனில் இருந்த போது வீடு ஒதுக்கியது .. காலகெடு முடிந்தவுடன் வீட்டை காலி செய்ய முறையான அறிவிப்பு தந்தும் அதை அலட்சியபடுத்தியதால் ..கடைசி கட்டத்தில் வீட்டைவிட்டு இறக்கிவிட வேண்டிய சூழல்..அதனால் கலைஞரின் மீது தீராத பகை கொண்டு திரிகிறார்..
முறைகேடாக மூன்றாண்டுகளுக்கு மேல் இருந்தும் ஆசைவிடவில்லை.. இது தான் இவரது லட்சணம் ..
..
திராவிடத்தை ஒழிப்பேன் என கூவிக்கொண்டி திரிகிற மணியனே .. முதலில் நிற்க காலில் இருக்கிறதா பார்.. கட்டை காலில் அடுத்தவன் தயவில் அரசியல் செய்கிற ..இந்த லட்சணத்தில் திராவிட கட்சிகளை என்னால் தான் ஒழிக்கமுடியுமென சொல்கிறாய் கேட்கதான் ஆளில்லை
ஆயிரம் வாக்குகள் கூட பெற முடியாதவரின் வெற்று கூச்சலென்பதை அறிவோம்..வீரவசனம் பேசி அரசியலை விட்டே போனவர் தானே ..
திராவிடத்தை ஒழிப்பேன் என்றவனெல்லாம் இருக்குமிடம் தெரியாமல் போனான்.. இருக்குமிடமே இல்லாத நீரெல்லாம்.. அரசியல்வாதியே அல்ல..
..
#வாய்சவடால்
..
தோழர். ஆலஞ்சி
கலைஞர்..
காதலி வரவிற்காக காத்து நிற்கும் காதலன் போல்..
தமிழ் கூறும் நல்லுலகு காத்திருக்கிறது..
தேனெடுத்து தினைமாவு கலந்து நீ தர வேண்டாம்.. வார்த்தை சித்தில் நம்மை வளைத்தெடுக்கவேண்டாம்..
உன் கரகரக்குலில் ஒரு வார்த்தை..
#என்உயிரினும்மேலான_உடன்பிறப்பே..
அது போதும்...
காத்திருக்கிறது மொத்த தமிழகமும்.. வாஞ்சையோடு...காதல்கொண்டு..
..
மு.க.எனும் திராவிடத்தலைவனை காண ஆவலாய்..பெருங்கூட்டம் .. என்பதாண்டுகள் நிறைய ஏற்றதாழ்வுகள் ஆனாலும் கம்பீரமாய் வலம் வந்த சூரியன்.. இந்திய அரசியல் இதுவரை கண்டிராத அரசியல் சாணக்கியம்.. எதிர்த்தவனெல்லாம்..இடறிபோனான் அல்லது இடம்மாறி போனான்.. எதிரிகளின் படையை எப்போதும் கலங்கடிக்கும் ஆற்றல்மிகு அறிவுசார் சிந்தனை .. கடைசியில் எதிர்த்தவன் கூட புகழ்ந்தே போனான் எதிர்ப்பின் வலிமை கண்டு ..
தோல்விகள் எப்போதும் கொண்ட கொள்கையில் மாற்றதை தரவில்லை மாறாக உரமேறிய தெம்பாய் எழுந்துநின்று ஆடியது..
..
எழுத்தும் சொல்லும் தமிழனின் வாழ்வில் வளமேற்றியது.. பதவியை தந்தபோது பணிக்கான வாய்ப்பாய் தமிழன் நலம் கண்டு சமூகநீதி காத்தது..
எத்தனை எத்தனை இடர்கள் .. அத்தனையையும் புன்முறுவலோடு ஏற்ற விந்தை இதுவரை யாரும் காணாதது.. அப்பப்பா எவ்வளவு துரோகிகள்.. கடைசி நிமிடம்வரை சிரித்து நின்று முகுகில் வாள் பாய்ச்சியவர்களை கூட சிறிய புன்னகையோடு மறந்து ஏற்றதை காணும் போது.. உள்ளத்தில் உயர்ந்த உள்ளம்..உறங்காதென்பதை உணர்ந்த கொண்டோம்.. பேரெடுத்து சொன்னால் பட்டியலே ஒரு புத்தகமாகும் அவ்வளவு துரோகிகள் எதிரிகளைவிட துரோகிகளின் எண்ணிக்கை எண்ணிலடங்கா.. காட்டி கொடுத்தவன் கொல்ல துணிந்தவன் .. இலைமறைவில் எதிரிக்கு ஒற்றனாய் திரிந்தவன் உதட்டில் சிரிப்பாய் உள்ளத்தில் விசமாய் ... அப்பப்பா நெஞ்சே நடுங்குகிறது.. ஆனால் அத்தனையும் மறந்து மன்னித்து பணிசெய்து கிடைப்போமென .. வாழும் வரலாறாய்.. எழந்து நிற்கிறாய் ..யாரும் தொடமுடியாத உச்சத்தில்..
..
எதிரிகள் கூட எழுந்து நின்று கை கூப்புகிறான் உன்
உயரத்தின் மகிமை கண்டு.. வா.தலைவா.. வந்து ஒரிரு வார்த்தை சொல்..அது இன்னும் சில நூற்றாண்டுகள்.. தமிழனை வாழவைக்கும்..
#உயிரினும்மேலான_உடன்பிறப்பே..
..
#இந்தியாவே_காத்திருக்கிறது_உன்_வரவிற்காக..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Posts (Atom)