..
நேற்று பொங்கியவர்கள் இன்று அட "சே" என்கிறார்கள்.. நாம் ஏற்கனவே உ.பி.யில் கண்டதுதான் முலாயம்சிங் என்ற கிழட்டு சிங்கத்தை ஓய்வெடுக்க சொன்னவர்தான் அகிலேஷ் அது தான் இங்கும்.. இனி ராமதாஸின் தயவு தேவையில்லை.. அன்புமணியின் பிடிக்குள் கட்சி வேண்டும் எங்கே "அக்கா மகன்" உள்ளே புகுந்து விடுவான் என்ற அச்சம் நேற்று அவரின் பேச்சும் செயலும் காட்டியது.. மகளோ மகளின் மகனோ வாரிசாக முடியாதென சொல்லியடித்திருக்கிறார் அன்புமணி..
..
கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கும் சாதி சொந்தங்கள் மெல்ல வெளியேறலாம்.. கொஞ்சமும் பச்சைபிடிக்காத நிலைதான் ..இனி பாமக எனும் அழுகிய பழம் விற்பனைக்கு உதவாது.. அரசியல் கட்சியில் வாரிசுகள் பின் தொடர்வது ஒன்றும் புதிதல்ல.. ஆனால் அது இயல்பாக எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் .. ஆனால் பாமகவில் சௌமியா எப்படி திடீரென வந்தார் என்றெல்லாம் கேட்க கூடாது கடலூர் முகுந்தனுக்கு மறுக்கப்பட்டதில் அன்புமணி அழுத்தம் காரணமென செய்திகள் கசிகின்றன..
..
மொத்தத்தில் ராமதாஸ் அடங்கி ஒதுங்கி இருக்கவேண்டும்.. இனி எல்லாவற்றையும் அன்புமணியே பாரத்துக்கொள்வாரென என்ற "சமிக்ஞை" பெரிய அய்யாவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது..ராமதாஸ் எனும் "சாதிகாரன்" இனி வேண்டாம்.. அன்புமணியை பேச்சை கேட்டு பாஜகவுடனான அரசியல் உடன்பாடு காவு"வாங்க தொடங்கியிருக்கிறது ..
..
இனி வடமாவட்டங்களில்
பாமக மெல்ல அஸ்தமனமாகும்..
வினை
..
ஆலஞ்சியார்