Sunday, December 29, 2024

அதிகாரம் ஆள் பார்க்காது  வளர்த்தவனையே வெட்டி சாய்க்கும்.. அப்பன் மகன் என்ற கணக்கெல்லாம் அதிகாரத்தின் கோர முகத்திற்கு தெரியாது.. நாடகம் முடிந்தது.. இனி ராமன் தேவையில்லை..
..
நேற்று பொங்கியவர்கள் இன்று அட "சே" என்கிறார்கள்.. நாம் ஏற்கனவே உ.பி.யில் கண்டதுதான் முலாயம்சிங் என்ற கிழட்டு சிங்கத்தை ஓய்வெடுக்க சொன்னவர்தான் அகிலேஷ் அது தான் இங்கும்.. இனி ராமதாஸின் தயவு தேவையில்லை.. அன்புமணியின் பிடிக்குள் கட்சி வேண்டும்  எங்கே "அக்கா மகன்" உள்ளே புகுந்து விடுவான் என்ற அச்சம் நேற்று அவரின் பேச்சும் செயலும் காட்டியது.. மகளோ மகளின் மகனோ வாரிசாக முடியாதென சொல்லியடித்திருக்கிறார் அன்புமணி..
..
கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கும் சாதி சொந்தங்கள் மெல்ல வெளியேறலாம்.. கொஞ்சமும் பச்சைபிடிக்காத நிலைதான் ..இனி பாமக எனும் அழுகிய பழம் விற்பனைக்கு உதவாது..  அரசியல் கட்சியில் வாரிசுகள் பின் தொடர்வது ஒன்றும் புதிதல்ல.. ஆனால் அது இயல்பாக எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் .. ஆனால் பாமகவில் சௌமியா எப்படி திடீரென வந்தார் என்றெல்லாம் கேட்க கூடாது கடலூர் முகுந்தனுக்கு மறுக்கப்பட்டதில் அன்புமணி அழுத்தம் காரணமென செய்திகள் கசிகின்றன.. 
..
மொத்தத்தில் ராமதாஸ் அடங்கி ஒதுங்கி இருக்கவேண்டும்.. இனி எல்லாவற்றையும் அன்புமணியே பாரத்துக்கொள்வாரென என்ற "சமிக்ஞை" பெரிய அய்யாவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது..ராமதாஸ் எனும் "சாதிகாரன்" இனி வேண்டாம்.. அன்புமணியை பேச்சை கேட்டு பாஜகவுடனான அரசியல் உடன்பாடு காவு"வாங்க தொடங்கியிருக்கிறது ..
..
இனி வடமாவட்டங்களில் 
பாமக மெல்ல அஸ்தமனமாகும்..
வினை
..
ஆலஞ்சியார்

Saturday, December 7, 2024


ராமநாதபுர சமஸ்தானத்தின் மன்னர் சண்முக ராஜேஸ்வர சேதுபதி. மன்னர் மானியம் ஒழிக்கப்பட்ட பிறகும் மன்னராகவே இருந்தார். எப்படியெனில் சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் முதல் மூன்று தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்தார். 

மன்னராக இருந்தவர் அந்தப் பகுதியில் வெற்றி பெறுவது பெரிதல்ல, அவர் மனுத்தாக்கல் செய்வோதோடு சரி. ஓட்டுக்கேட்டு வரமாட்டார்,கையெடுத்து கும்பிடமாட்டார். ஆனாலும் 1952 சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் தொடங்கி 57,மற்றும் 62 வரை அவர்தான் எம்.எல்.ஏ,வாக வெற்றி பெறுவார். திமுக 57ல் தேர்தல் களத்தில் இறங்கிவிட்டது. இருந்தாலும் 57லிலும் 62லிலும் திமுகவுக்கு வேட்பாளர் கிடைக்கவில்லை. இருந்த பொறுப்பாளர்களும் தயங்கினர். 

1967 தேர்தல் வருகிறது ராமநாதபுரம் தவிர்த்து ஒரு பட்டியலை அண்ணா தயாரிக்கிறார். கூட்டணிக் கட்சிகளும் திமுகதான் ராமநாதபுரத்தில் போட்டியிட வேண்டும் என ஒதுங்கிக்கொண்டன. ஒரு சட்டமன்ற உறுப்பினர் சீட்டு வீணாய்ப் போனது என்றபடி அண்ணா அடுத்த வேலையை பார்த்துக்கொண்டிருந்தார். 

கலைஞர் அண்ணாவிடம் போய் அண்ணா ஏன் ராமநாதபுரத்தை வாங்கிக்கொண்டு அன்னப்போஸ்டாக விட்டுக்கொடுக்கிறீர்கள் என்று கேட்டார். 

அண்ணா சொன்னார் “ விட்டுக்கொடுக்கவில்லை தம்பி..நம்பிள்ளைகள் யாரும் அங்கு தயாரில்லை. தென்னரசே சொல்லிவிட்டார் இனி என்ன இருக்கிறது’ என்றார்.

“வேட்பாளர் பெயர் தங்கப்பன், எனக்காக அவரை அறிவியுங்கள் அண்ணா, தென்னரசுவிடம் நான் பேசிக்கொள்கிறேன்” என்று கலைஞர் சொல்லிவிட்டார். தயக்கம் கொண்ட அண்ணா கலைஞர் சொன்ன வேட்பாளர் குறித்து விசாரிக்கிறார். 

“ஓ அந்தத் தங்கப்பனா? அவர் பெயர் குதிரை வண்டி தங்கப்பன். பேருந்து நிலையத்தில் குதிரை வண்டி ஓட்டுகிறார்” என்று செய்தி வருகிறது. 

கலைஞரின் மேலிருக்கும் நம்பிக்கையில் அண்ணாவும் அறிவித்துவிடுகிறார். கூட்டணிக்கட்சிகளுக்கும் நிம்மதி. 

மன்னர் விசாரிக்கிறார். இம்முறை திமுகவே போட்டியிடுகிறது என்று தகவல் வருகிறது. வேட்பாளர் பெயரைக் கேட்டதும் வெடித்து சிரிக்கிறார். “நம்ம அரண்மனை கிழட்டுக்குதிரைகளை கொடுத்த விலைக்கு வாங்கி பிழைக்கும் தங்கப்பனா என்னை எதிர்த்து நிற்பது..’’ என்று அரண்மனைக்குள் போனவர் வெளியே வரவேயில்லை.

கலைஞர் களத்துக்குப் போனார், தங்கப்பனுடன் வீடுவீடாகச் சென்றார், வீதி வீதியாய் சென்றார். முடிவாய் ‘குதிரை வண்டி’ தங்கப்பன் ராமநாதபுர சமஸ்தானா மன்னரை வென்றார். அதன் பின்னர் மன்னர் போட்டியிடவேயில்லை.இப்படி ஜனநாயக களத்திலும் மன்னர் தோரணையில் அதிகாரத்தை கைப்பற்றியிருந்த மன்னர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மக்களாட்சியை நிறுவியது திமுக என்கிற அரசியலியக்கம்.

யார் யாரை முடிப்பது என்பது இங்கு வேலையில்லை, யார் இறுதிவரை மக்களுடன் இருப்பது என்பதே வேலைத்திட்டம். ஒரே தேர்தல் முடிவுகளில் அரசியல் ஆசையை மூட்டைகட்டியவர்களின் முடிவுகளை கண்ட இயக்கம் திமுக. மன்னாதி மன்னர்களை வீட்டுக்குக்கு.. sorry அரண்மனைக்கு அனுப்பிய கட்சி இது. 

திமுக என்கிற இயக்கம், வெற்றுச் சலசலப்புக்கு அல்ல, காடு அதிரும் வேட்டோசைக்கே அசராமல்  நிலம்பாவி நிற்கும் பெருங்களிறு!
..
வரவனை செந்தில் 
ராமதாஸும் அன்புமணியும்..
தமிழ்நாட்டரசியலில் தேவையில்லாத சுமைகள்.. தங்கள் நலம் மட்டும் பிரதானமாய் கொண்டு நடக்கும் சில்லரைகள்..
தன்னை அறிவாளியாக எண்ணிக்கொள்ளும் அபத்தங்கள்.. 
..
தலை முழுக்க சாதிவெறியும் உள்ளில் மதவெறியும் கொண்டு அரசியலில் கால்நூற்றாண்டை கடந்து தேய்ந்துக்  கொண்டிருப்பவர்கள்.. தங்கள் சமுதாய மக்கள் கல்வியறிவு பெற்றால் சாணியை எறிவார்கள் என்றெண்ணி கலவரத்தில் சீவிவிட்டு அகங்காரமாய் அமர்ந்திருப்பவர்கள்..
..
பெற்ற தாயை கூட கேவலப்படுத்த அஞ்சாத கயமை, கொஞ்சமும் கூச்சமில்லாமல் மக்களை சந்திக்கிற இழிநிலையாளர்கள்.. முப்பதாண்டுகள் கடந்தும் மக்கள் இவர்களை நம்பவில்லை காரணம் சாதியை வைத்து காசு பார்க்கும் இவர்கள் நமக்கான அரசியல்வாதிகள் அல்ல என அவர் சார்ந்த சமூக மக்களே புறக்கணிததுவிட்டார்கள்..
..
மாண்பமை முதலமைச்சர் வேலைவெட்டி இல்லாதவர் என்றதும் தன் அடியாட்களை வைத்து போராட்டம் நடத்த பார்த்து கடைசியில் பிசுபிசுத்தது.. முதலமைச்சரை இவர் ஒருமை பேசுவார் ஆனால் இவரை வேறு வேலையில்லை இவருக்கெல்லாம் பதில் சொல்ல தேவையில்லை என்ற அரசியலிலிருந்து அடியோடு துடைத்தெறிந்து விட்டார் தளபதி அவர்கள்.. யாரும் கண்டுக்கொள்ளவில்லை என்றவுடன் எதையாவது பேசி இருக்கிறேன் என காட்ட நினைத்தவரை குழியில் இறக்கிவிட்ட கதையாகும போனது..  அதானி காப்பாற்ற முயற்சி செய்தால் பாஜகவின் கரிசனம் கிடைக்குமென்ற நினைப்பில் மண் விழுந்தது.. பாசிசத்தின் பிடியில் இனி மெல்ல அரசியல் அஸ்தமித்து காண்பார்..
..
ஏற்கனவே எழு இடங்களிலும் தோற்கடித்து காட்டுகிறேன் என்று பாமகவின் வீழ்ச்சிக்கு வித்திட்டவரிடம் கவனமாக இருக்க வேண்டாமா.. எச்.ராஜாவிற்கு உள்ள புரிதல் கூட இல்லையே! .. 
More dangerous..  சாதியும் மதமும் தமிழ்நாட்டு அரசியலில் ஒரு எல்லையை தாண்டி எடுபடாது.. சிலநேரம் திருப்பி அடிக்கும்.. எழ முடியாமல் செய்துவிடும்.. அதைதான் ராமதாஸின் அவரின் உன்னை நான் சந்திக்கணுமா என்ற பேச்சு உணர்த்தியது  விரக்தியின் விளிம்பில் நின்று கதறுகிறார்.. இனி எக்காலத்திலும் இவர்களின் அரசியல் நாடகம் அரங்கேறாது..
..
ஆலஞ்சியார்


மனு ஆட்சியா .. மனுவிற்கு எதிரானதா என விவாதிக்க வேண்டியதை மடைமாற்ற நினைத்து மன்னராட்சி என உளறி கடைசியில் வாங்கிகட்டிக் கொள்ள வேண்டியாதகிவிட்டது.. பாஜக செல்லப்பிள்ளைகள் வேடம்கட்டி வந்து அரிதாரம் கலைந்து நிற்கிற சோகம்.. தமிழ்நாடு மிக தெளிவான பார்வைக்காக கொண்டது.. வரும் ஓசை கண்டே வருகிறவர் யாரென அறியும் அறிவுண்டு நமக்கு.. பல்வேறு வழிகள் ஒவ்வொன்றாய் தடைப் போட்டுக்கொண்டே இருப்போம்.. 
..
ரஜினி வைத்து சலனம் ஏற்படுத்த நினைத்து அவர் சுதாரித்த நிலையில் பாவம் சின்ன பையனை இறக்கி சினிமா சூட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.. வரும் போது கொஞ்சம் அரசியல் வரலாற்றை தெரிந்து கொண்டு வந்திருக்கலாம்.. ரெய்டுக்கு பயந்து வந்திருக்கலாம் கடந்தகால தமிழ்நாட்டின் அரசியலை , அதன் போக்கை தமிழ் மக்களின் தெளிவை அறிந்தோ எழுதிக் கொடுக்கும் நபர்களிடம் கேட்டு தெரிந்து காலடி வைத்திருக்க வேண்டும்..
..
எது ஆணவம் 200  வெற்றி பெறுவோம் என்பதா.. 75 ஆண்டுகால அரசியல் எல்லா காலமும் மக்களோடு கலந்து அவர்களின் துயரில் மகிழ்ச்சியில் பங்குகொண்டு இன்னல்படும் நேரத்தில் கரம் கோர்த்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற கல்வியொன்றே கைகொடுக்குமென அறிந்து வா..படிக்க வா எல்லாம் தருகிறேன் உன்னை புறக்கணித்தவன் முன்பாக உயர்ந்து காட்டு என திட்டங்கள் தீட்டி இன்று கல்வியில் பொருளாதாரத்தில் இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாட்டில் முதல் மாநிலமாய் உயர்த்தி காட்டியவர் 200  வெல்வோம் என்பது ஆணவம் அல்ல மக்களின் மீதான நம்பிக்கை தன் உழைப்பின் மீதான நம்பிக்கை ஒற்றுமையின் மீதான நம்பிக்கை..
..
பிறப்பால் உயர்ந்தவன்  என்பதெல்லாம் பழைய பாழ்படிந்த சிந்தை உழைப்பால், அறிவால் உயரலாம், கல்வி வெளிச்சம் காட்டும் என்பதுதான் திராவிட சித்தாந்தத்தின் மூலக்கரு .. எல்லோருக்கும் எல்லாம் இதைதான் திராவிடத் தலைவன் எங்கள் தளபதி ஸ்டாலின் M. K. Stalin  சொல்கிறார்..இதை கண்டுதான் பதறுகிறது பாசிசம்.. பல வழிகளில் லாட்டரி டிக்கெட்டையும் ப்ளாக் டிக்கெட்டையும் களம் இறக்கி வாய்க்கு வந்ததை உளறி அதை பேசு பொருளாக்கி "விகடகவி" சொல்லிக் கொண்டிருக்கிறது..  காஞ்சி தலைவனை பேச வேண்டுமே தவிர காஞ்சி பெரியவரை அல்ல புத்தகத்தில் என்ன இருக்கிறதென்றோ அம்பேத்கர் யாரை எதை,யாரை எதிர்த்தாரென்றோ அறியா பிள்ளைகளின் பிதற்றல் நூல் வெளியீடு..
 .
உலகில் எவ்வளவு மிக உயர்ந்த சோப்பை போட்டுக் குளித்தாலும் ஒரு சூத்திரன் பிராமணனாக முடியாது. வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் உடையவர்களாக இருக்க முடியாது 
என்றவர்
காஞ்சி மகா பெரியவா
(நூல் ஆதாரம்)தெய்வத்தின் குரல்.. 
நடந்தது நூல்(புத்தகம்) வெளியீடல்ல (பூ)நூல் புகழ்ச்சிக்கான ஏற்பாடு.. 
..
தேர்தலில் நின்று வென்று வந்தவர்.. மக்களால் தேர்வு செய்யபட்டவர்.. அவரை அவரின் உழைப்பை,  வந்தால் நமது கோர்க்கைகளை,தேவைகளை, 
அவர்சொல்லாமலேயே செய்வார் என்றுணர்ந்து வெற்றிபெற செய்கிறார்கள்.. திருட்டு லாட்டரிவிற்பவனும் ப்ளாக் டிக்கட்டும் சமூகநீதி பேசுவதும் அதை  ஊடகங்கள் முன்னெடுப்பதும் சகிக்கவில்லை..
"மக்களை செல் " என்ற அண்ணனின் சொல்லை மந்திரமாய் கொண்டு சுழல்பவர்கள் நாங்கள்.. சூரிய ஒளியில் "வெளிச்சம்" காண்பவர்கள்
விட்டில் பூச்சிகளுக்காக கலங்க போகிறோம்.. போய் ஓரமாய் விளையாடு..
..
ஆலஞ்சியார்

Tuesday, November 26, 2024

உதயநிதி.. 
இளைஞர் ..
எதையும் சரியாக உள்வாங்கி எதற்கும் அஞ்சாமல் செயல்படும் துணிவுமிக்கவர்.. தெளிவான அரசியல் புரிதல், களமறிந்து எதிரியை திணறவைக்கும் சொல்லாற்றல், பணிவும் பக்குவமும் நிறைந்தவராய், நொடிக்குள் திணறடிக்கும் ஆற்றல் உடையவராய் பழுத்த பழங்கள் கூட தடுமாறும் நிலையில் செவ்வனே செயல்படும் செயல்வீரர்..
..
தாத்தனின் அறிவும் அப்பனின் உழைப்பும் பேராசான் பெரியாரின் வழியொற்றி தன் அரசியல் பயணத்தை அமைத்துக் கொண்டவர்.. திராவிட கருத்தியலை சரியாக அடையாளப்படுத்தி அரசியல் செய்கிறார் .. எல்லோருக்கும் எல்லாம் என்ற அரசியலை முன்னெடுக்கும் தலைவரின் படையோட்டத்தின் தளபதியாய் சுழன்று இவர் தமிழ்நாட்டின் இன்முகமாய் மாறி வருவது மகிழ்ச்சிக்குரிய விடயம்..
..
கலைஞரைப் போல நகைச்சுவை உணர்வு.. சட்டென்று சாய்த்துவிடும் நுணுக்கம்,அக்காவிற்கு வேலையில்லை என்ற ஒரே வரியில் தமிழிசையை தரைதட்டிய விதம் கேள்வி கேட்பவரே எதிர்பாராமல் பதிலளிக்கும் உத்தி சில நேரம் செவிட்டில் அறைந்தாற்போல் நிலைகுலைய செய்கிறார்.. எதிரிகள் தலைவர் ஸ்டாலினைவிட இவரிடம் தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டிவரும்.. 
..
இளஞ்சூரியன் உதயநிதி வளமான எதிர்காலத்தின் நம்பிக்கை திராவிட இயக்கத்தின் மற்றொரு பரிணாமம்.. நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் மாபெரும் முன்னெடுப்பு.. சனாதனம் ஒழியும் வரை என் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்ற பிரகடனம் ஒன்றே போதும் யார் இவர் என்பதற்கு .. உண்மையில் பழைய கலைஞரை பார்த்த மகிழ்வு
..
உங்கள் வெற்று வார்த்தைகளும் வீண் சவால்களும் என் பயணத்தை தடுத்து நிறுத்திட முடியாது ..
இது  ஒன்றே போதும் வருங்காலம் தமிழ்நாடு சிறக்கும்  என்றும் கருப்பசிவப்பு பறக்கும்
வாழ்த்துகள் உதய்
..
ஆலஞ்சியார் 

Tuesday, November 5, 2024

அதிகாரம்..
சிலர் 
வந்தவுடன் நானே தலைவன் என்கிறார்கள்.. 
அடிப்படை புரிதல் இல்லாமல்
பதவி ஆசை திராவிடத்தை கிண்டல் செய்ய தூண்டுகிறது..
தலைவர் கலைஞரை, வசைபாடினால் 
அல்லது வசைபாடுபவனை கொண்டாடினால் கால் ஊன்றலாமென கனவு காண்கிறார்கள்..
கூட இருக்கும் கூட்டம் 
உன் உழைப்பை பார்த்து வந்ததில்லை கேளிக்கைகளில் வந்தவை.. 
சிலர் விரக்தியில் நிற்கிறார் 
பலர் அறியாமையில்.. கொள்கையோ,கோட்பாடோ 
அரசியல் அறிந்தோ இல்லை
 ..
பாசிசத்தை முதுகில் சுமந்து
"ஆபத்பாந்தவன்" வேடம் போடுகிறார்கள் நேர் நிற்க முடியாத
கோழைத்தனமானவர்கள்..
நிற்பது கூட அடுத்தவரின் ஊன்றுகோலில் ..
பலவீனமானவர்கள் தான் 
பரிந்துரைக்கு கால்கடுக்க நிற்பார்கள்..
பாவம் 
அரசு இயலும் தெரியவில்லை..
அரசியலும் தெரியவில்லை
..
அரிதாரம் பூசி 
ரட்சகன் வேடம் காட்டுபவன்.
அடித்தளமே இல்லாமல் அடுக்குமாடிக்கு ஆசைபடுகிறான்..
ஆசை வார்த்தைகளும் தன் விசிறிகளின் அறிவிலித்தனமும்  மூலதனமாய் கொண்டு ஆடுகிறான் கோணலாய்..
யதார்த்தம் என்ன வென்று அறியவில்லை..
அறியும் அறிவுமில்லை..
இவர்கள் எங்கள் எதிரிகள் அல்ல..
ஏனெனில் எங்களை எதிரியாய் நினைக்க கூட தகுதி வேண்டும்..
..
இங்கே அடிமட்ட தொண்டனுக்கு உள்ள அரசியல் தெளிவு கூட 
"தலைமை"பதவிக்கு ஆசைப்படும் 
குறைமதியாளனுக்கில்லை..
பாசிசத்தின் சூழ்ச்சி வலையில் விழுந்த மீன்.. 
கருவாட்டுக்கு கூட உதவாது..
அடுத்தவர் உழைப்பில்,
தயவில்,
திமிரில்,  
அதிகாரத்திற்கு ஆசைபட்டால் 
உள்ளதும் போகும்..
..
அரிதார திமிரில் ..
"ராஜா" வேஷம்
கலையும் போதும் தெரியும் சுயரூபம்.. 
ஏணிகள் நகர்ந்தால் விழ நேரிடும் போது அடி பலமாய் விழும்..
எழ முடியாமல் போகும்..
எங்கள் எதிரியாவதற்கு முன் 
தகுதியை வளர்த்துக்கொள்..
"கொள்ள" பேரை பார்த்துவிட்டோம்.. 
பூச்சாண்டி காட்டுவதை விடுத்து பிழைப்பை பார்.. 
ராஜாவாக முடியாது..
ஆகவே முடியாது..
..
நாங்கள் கலைஞரின் 
"பயமறியா" தம்பிகள்..
கொள்கை தெளிவும் உறுதியும் கொண்டவர்கள்..
கட்சியையோ எங்கள் தலைவரையோ சிறுமைபடுத்த நினைத்தாலே சினம் கொள்பவர்கள்.. எங்கள் பலம் 
எங்கள் நம்பிக்கையிலும்  உறுதியிலும் உழைப்பிலும்,நேர்மையிலும் இருக்கிறது.. 
பாசாங்கு செய்வோரை கண்டு "எள்ளல்" கொள்வோம் .. 
..
முதலில் ஊன்றுகோல் இல்லாமல் நடை பழகு!. 
பிறகு..
நீ .. எதிரியா என நாங்கள் முடிவு செய்கிறோம்..
 ஒரு திசைக்கே (கிழக்கு)
உம்மால் தாக்குபிடிக்க முடியாது..
எங்கள் 
"ஆறு" விசையை கண்டால் அவ்வளவுதான்..  மக்கள் முன்
"நடித்தது" போதும் நடையைகட்டு..
..
இனி உதயமாகும் இளஞ்சூரியன்
.. 
ஆலஞ்சியார்

Sunday, October 6, 2024

இன்னமும்கூட சிலர் சரியாக கணிக்க தவறுகின்றனர்.. நீங்கள் நகர்த்துகிற காய்கள் திசையறியாது நிற்கின்ற பரிதாபங்கள்.. திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறைத் தலைவன் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் அவர்களின் சிறிய அசைவுகள் உங்கள் அடித்தளத்தையே அசைத்துவிடுகிறது..  
.. 
அதிகாரம் வேண்டுமென்று தன் சகாக்களை பேச வைத்து உருட்டுகிறீர்..  செழியன்கள் வருகிறார்கள் .. ஐம்பதாண்டு வரலாற்றில் உயர்கல்வித்துறை அமைசசராக்கி வாயடைக்க வைக்கிறார்.. எதிர் முகாமில் கூட "வாழ்த்துபா" வாசிக்கிறாரகள்
உள்ஒதுக்கீட்டை எதிர்க்கிறீர்கள்.. யாருக்கு தரக்கூடாது உச்சநீதிமன்றத்தை நாடுகிறீர்களோ அந்த சமூகத்தின் பிரதிநியையை ஆதிதிராவிடர் நலத்துறையின் அமைச்சராக்கி அழகு பார்க்கிறார்.. நீங்கள் ஆட்டம் தொடங்கும் முன்பு அரண் அமைத்து "செய்வதறியாதுசெய்துவிடும்" ஆற்றல் மிகு தலைவன் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார் ..
Chief Minister of Tamil Nadu  M. K. Stalin 
..
ராஜாஜி தூக்கிக் கொண்டு வருவதிலேயே உங்கள் கால்கள் ஆட்டம்காண தொடங்கிவிட்டதை உணர்த்துகிறது.. உங்களுக்கு தெரியும் திருமா அவர்களே! 1952 ஆண்டு நடந்த சலவை தொழிலாளர்கள் மாநாட்டில் எங்கள் குழந்தைகள் நான்காவது வரையாவது படிக்க அரசு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு பதிலளித்த மூதறிஞர்..? ராஜாஜி துறை சார்ந்த கோரிக்கைகளை கேளுங்கள் சவுக்காரம் துணி துவைக்க தண்ணீர் படித்துறை வேண்டுமென கேளுங்கள் என்றவர் தான் ராஜாஜி.. 
..
மதுவிலக்கு சாத்தியமா என மனசாட்சியை கேட்டு பாருங்கள்.. மதுவிலக்கு மாநாடு  அருகில் மூன்றுநாள் வியாபாரம் ஒரே நாளில் நடந்தது.. மது  ஒழிப்பு  விழிப்புணர்வு  பிரச்சாரங்களை மதுவால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைத்து பிரச்சாரங்கள் செய்யலாம் ..
..
தி.மு.கழகம் பவளவிழா கண்டு இன்னமும் நிமிர்நடை போடுகிறதே காரணம் தெரியுமா.. வசவுகளை கடும் கண்டனங்களை தொடர் துரோகங்களை சந்தித்தும் இன்னமும் மக்கள் பணியில் மற்ற கட்சிகளுக்கு வழிகாட்டியாய் திகழ்கிறதே! ஏன் தெரியுமா.. தெளிவான கொள்கை,  தீர்க்கமான சமூகப்பார்வை, நெஞ்சுறுதியோடும் நேர்மையோடும் அரசியல் செய்தல், தொலைநோக்குப் பார்வை இவைகள்.. இன்னமும் பல நூற்றாண்டுகள் கடந்தாலும் தி.மு.கழகம் செயலாற்றும்.. 
அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றபோதே உங்கள் "சமூகநீதி"பார்வை அநீதியானது ..
..
திமுக தமிழர்களுக்கான இயக்கம்  திமுக விளிம்புநிலை மக்களுக்கானது.. எல்லோருக்கும் எல்லாம் என்ற பொது கோட்பாட்டை கொண்டது.. குறுகிய வட்டத்திற்குள் அமைத்திட முடியாது.. தி.மு.கழகம் இயங்கிக் கொண்டே இருக்கும்..
..
ஆலஞ்சியார்

Saturday, September 28, 2024

சினிமாவிலிருந்து வந்தவர் துணை முதலமைச்சராகும் போது திருமா ஏன் ஆக கூடாது.. கட்சியில் சேர்ந்த உடன் துணைப் பொதுசெயலாளரான விசிகவின் ஆதவ் அர்ஜூனா சொல்கிறார் .. வட மாவட்டங்களில் விசிக தயவில்லாமல் திமுக வெற்றிப் பெற முடியாது ..
எங்கேயோ கேட்ட குரலாக தெரிகிறதா.. இதே தொனியில் தான் பாமகவும் பேசியது இன்று தங்கள் "பெல்ட்" என்றவர்கள் நிலை ஊரறிந்தது.. 
..
சாதிய நிலைபாட்டிலிருந்து தன்னை மீட்க நினைக்கும் திருமாவிற்கு இது 'திருச்சடியை' தரும்.. கூட்டணி தர்மம் என்பதெல்லாம் ஒரு எல்லை வரைதான் தேர்தல்கால கூட்டில் எண்ணிக்கையை அதிகரிக்க பயன்படுமே தவிர கொள்கையோடு இணைந்து செயல்படுவதாக எண்ணுவதே மடத்தனம்.. விசிகவின் பொதுச் செயலாளர் விளக்கம் அளித்திருக்கிறார் அதுவும் ஆ.ராசா எதிர் குரலை தொடர்ந்து.. இதை முளையிலேயே கிள்ளியெறிந்தால் நலம்..
..
விசிகவின் அடிப்படை பலமே தங்கள் சமூக கட்டமைப்புதானே தவிர பொது சமூக நீரோட்டத்திற்கானதல்ல .. தங்கள் கொள்கை ஒடுக்கபட்டவர்களுக்காக அவர்களின் முன்னேற்றத்திற்காக தங்களின் அங்கீகாரத்திற்காகதான்.. ஆனால் அதை நீண்டகாலம் திராவிட இயக்கங்கள் செய்துக் கொண்டுதானிருக்கிறது..
..
விசிக போனால் திமுகவிற்கு இழப்பாகும் என்ற நினைப்பை தூக்கி தூர எறியுங்கள்.. இதே குரலில் ஏற்கனவே பேசிய கட்சிகள் இருக்குமிடம் தெரியவில்லை.. திமுக தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் உயர்வுக்கும் உழைப்பை பாதுகாப்பை, உறுதி செய்து பயணிக்கிறது.. திமுக கட்சி அல்ல இயக்கம் என்பதை அறிந்துணர்ந்தால் ஏன் பாசிச சித்தாந்தவாதிகள் திமுகவை மட்டும் எதிர்க்கிறார்கள் அறிந்தால் பதில் கிடைக்கும்..
..
75ஆண்டு வரலாற்றில் நிறைய பார்த்தாயிற்று ஆனாலும் எல்லாவகை சூழ்ச்சிகளையும் வீழ்த்தி தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறது.. ஏனெனில் தெளிவான பாதையில் பகுத்தறிவு துணைக்கொண்டு இந்த இயக்கம் மக்கள் பணியாற்றுகிறது..  இடைச்செருகல் (itaiccerukal) வரும் போகும் .. தி.மு.கழகத்தின் பயணம் தொய்வின்றி தொடரும்.. நிறைய எழுதலாம் எங்களுக்கு வேறு பணிகள் இருக்கிறது.. 
..
அதைப்போல மதுவிலக்கு சாத்தியமற்ற விடயம்.. மது பாவம் நரகம் தருமென நம்புகிற சமுதாய ஆட்சியாளர்கள் கூட கடை திறந்து நாளாகிவிட்டது.. கட்டுபாடுகள் விதிக்கலாம்.. ஆனால் முழுவதற்குமான தடை நடைமுறை சாத்தியமற்றது.. தனிமனித கட்டுபாடு மதுவால் வரும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு செய்யலாம் அரசியலுக்காக பேசுவதில் அர்த்தமில்லை.. திருமா பொதுவான அரசியலை முன்னெடுத்தாலும் தலித் அடையாளம் அவரை விடாது அதுவே அவரின் முகவரியாக காணப்படுகிறது.. 
..
திமுக தலைவர் முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் பலம் பலவீனம் அறிந்தவர் அவரின் காய் நகர்த்தல் நிலைகுலைய செய்துவிடும்..
..
ஆலஞ்சியார்

Monday, September 23, 2024

அறிஞர் அண்ணா திமுகவுக்கு வைத்த பெயர் DPF.. இது எப்படி DMK ஆனது? மாற்றியது யார்?

அறிஞர் அண்ணா திமுகவுக்கு ஆங்கிலத்தில் வைத்த பெயர் என்ன தெரியுமா? அந்தப் பெயர் எப்படி மாறியது என்பது தெரியுமா? இன்றைக்கு உள்ள திமுகவினருக்கே இந்த வரலாறு தெரியுமா என்பது சந்தேகம்தான்.

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வந்த அறிஞர் அண்ணா தனிக்கட்சி தொடங்க முடிவு செய்தார். அதற்கு என்ன பெயர் வைப்பது என்று பல குழப்பங்கள் இருந்தன. அவர் தனது தம்பிகளான, இரண்டாம் கட்டத் தலைவர்கள் என்று பிற்காலத்தில் திமுகவினரால் கருதப்பட்ட நெடுஞ்செழியன், மதியழகன், என்.வி நடராசன், ஈவெகி சம்பத், கலைஞர் ஆகியோரிடம் கலந்தாலோசித்தார்.

அவர்கள் கட்சிக்குப் பலவிதமான பெயர்களைச் சுட்டிக் காட்டினர். அன்று என்ன நடந்தது? திமுக என்ற பெயர் எப்படி உருவானது? அதை ஆங்கிலத்தில் டிஎம்கே எனச் சுருக்கியவர் யார் எனப் பல சந்தேகங்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான இராம அரங்கண்ணல் அவரது சுயசரிதையில் சிறப்பாக எழுதி இருக்கிறார்.

அவரது நூலில், "கட்சி ஆரம்பிக்கின்ற சூழ்நிலை வந்தாச்சு, அதுதானே உங்கள் எண்ணம்? அரங்கண்ணல், பேட் ஐ கொண்டுவா. கட்சிக்கு ஒரு பெயர் சொல்லுங்கப்பா" என்றார் அண்ணா. அங்கே அமர்ந்திருந்த வேலாயுதம் என்ன வாணன், உடனே முதல் நபராக 'தமிழ்நாடு சோஷியலிஸ்ட்கட்சி' என்று சொன்னார். அதைக் கேட்ட அறிஞர் அண்ணா 'நாம் புதியதாகக் கட்சி ஆரம்பிப்பதாக இருந்தால் அதில் திராவிடர் என்ற சொல் இருக்க வேண்டும். அது முக்கியம்' என்றார்.

அடுத்ததாக திராவிட சோசலிஸ்ட்டுக் கழக, திராவிட சமதர்மக் கழகம், திராவிட தீவிரவாதிகள் கழகம் என வரிசையாகப் பல பெயர்கள் வந்து கொட்டின. அனைத்தையும் கையிலிருந்த அட்டையில் எழுதிக் கொள்ளப்பட்டது. அடுத்ததாக தமிழ்ப் பெயர்களைத் தாண்டி ஆங்கிலத்தில் சில பெயர்கள் முன்வைக்கப்பட்டது. Dravidian Forward Block, Dravidian Progressive Association, Dravidian vanguard Party எனப் பல பெயர்கள் சூட்டிக்காட்டப்பட்டன.

உடனே அங்கே அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த அறிஞர் அண்ணா, "Dravidian Progressive Federation என்றார். அதில் Dravidian என்ற சொல்லும் இருந்தது. Federation என்று வருகிறது. அதை அப்படியே தமிழில் எழுதிப் பார்ப்போம் என்று எழுதினார்கள். திராவிடர் முன்னேற்றக் கழகம் என வந்தது. உடனே அங்கே இருந்த அனைவரும் ரொம்ப நல்லா இருக்கு என்றனர். ஒருமித்த கருத்தாக அது ஒலித்தது.

அதிலும் சின்ன திருத்தம் செய்ய ஒரு யோசனையை வைத்தார் அண்ணாதுரை. Dravidian என்பதை திராவிடர் என்று எழுதலாமா? திராவிட என்று எழுதலாமா? என்று கேட்டார் அவர். திராவிடர் என்றால் குறுகிய வட்டமாக இருக்கும் என யோசித்த மதி, "நாம் எல்லோரும் சோஷியலிஸ்ட்டுகள். பகுத்தறிவுக் கொள்கைகளை யார் ஒத்துக்கொண்டாலும் நம் கட்சியில் இருக்கலாம். பெரியாருக்கும் நமக்கும் ஒரு வித்தியாசம் வேண்டும். திராவிட என்பது நிலப்பகுதியைக் குறிக்கிறது. இதுவே பொருத்தமாக உள்ளது' என்றார்.

அங்கே அமர்ந்து இருந்த இராம அரங்கண்ணல், தன் கையில் வைத்திருந்த அட்டையில் 'திராவிட முன்னேற்றக் கழகம்' என்று முதன்முதலாக எழுதிப்பார்த்தார். இந்தப் பெயரை ஆதரவாளர்களிடம் சொல்லி ஒரு முடிவு எடுப்போம். அதுவரை இதுவே கட்சி பெயர் என்று யாரும் முடிவு செய்துவிட வேண்டாம் என்றார் அண்ணா. அதன்பின்னர் 'மாலை மணி' பத்திரிகை ஆபீசில் உள்ள ஆதரவாளர்களிடம் இந்தப் பெயரைக் காட்டி ஒப்புதல் கேட்டார் அண்ணா. அதைப் பலரும் ஏற்றனர்.

ஆரம்பக் காலத்தில் திமுக என்ற தமிழ் வார்த்தையைச் சுருக்கு DPF என்றே எழுதி வந்தார்கள். அதாவது Dravidian Progressive Federation என்பதன் சுருக்கம். இது எப்படி DMK ஆனது என்பதுதான் சுவாரஸ்யம். திமுகவை எதிர்த்து எழுதி வந்த 'தி இந்து' பத்திரிகை தான். திமுக ஆரம்பக் காலத்தில் நடத்திய டால்மியாபுரம் போராட்டம், இந்தி எதிர்ப்பு போராட்டம் என மும்முனைப் போராட்டங்களை நடத்தியது. அதைப் பற்றிய செய்தியை வெளியிட்ட இந்து, திமுகவைச் சுருக்கி ஆங்கிலத்தில் டிஎம்கே என்று எழுதியது. அது அப்படியே நீடித்து நிலைத்து நின்றுவிட்டது" என்று எழுதி இருக்கிறார் அரங்கண்ணல்.

ஒரு காலத்தில் ஆங்கில பத்திரிகை DPF என அண்ணா கட்சிக்கு வைத்த பெயரை மாற்றி DMK என்று எழுதியதால் காலப் போக்கில் இதுவே நீடித்து நிலைத்து நின்றுவிட்டது. அதனால் கட்சிக்கு ஆங்கிலத்தில் வைக்கப்பட்ட Dravidian Progressive Federation என்ற வார்த்தையும் மறைந்துவிட்டது. தமிழில் திராவிட முன்னேற்றக் கழகம் என்று எழுதுவதை அப்படியே ஆங்கிலத்தில் Dravida Munnetra Kazhagam எழுத வேண்டிய நிலை உருவானது.

Saturday, September 14, 2024

அண்ணா ..
எங்கள் அறிவுச் சுடரே
உன் ஒளியில் தான் 
நாங்கள் பயணிக்கிறோம் ..
எங்கள் 
கலங்கரை விளக்கே 
திசை தெரியாது நின்ற 
தமிழினத்தை கரை சேர்த்தது நீ
தம்பி படிக்கவா என்றாய் 
ஆளவே வந்துவிட்டோம் ..
ஒன்றியமே நம்மை எதிர்நோக்கிறது 
..
அண்ணா 
நீ..
எங்களுக்கு சுயமரியாதையை மட்டுமல்ல 
சுயமாய் எழவும் கற்றுதந்ததாய் 
உன் தமிழ் 
வீணை மீட்டிய இசை 
உன் சொற்களால் ஆடிய தாண்டவம்
ஆரியத்தை அதிரவைத்தது
திராவிட தருவே 
உன் நிழலில் தான் 
தமிழகம் இப்போதும் 
நிம்மதியாய்  நிற்கிறது 
..
"கடவுள் இல்லையென்றோ 
இருக்கிறாரென்றோ 
நான் சொல்லவில்லை அறிவோடு ஆற்றலோடு ஆபாசமற்ற கடவுள் இல்லென்று தான் கூறுகிறேன்",
எவ்வளவு தெளிவு..
ஆயுதம் கொண்டு இன்று சிலர் கலவரம் செய்ய துணியும் போதும் 
நீ கற்று தந்த அறிவாயுதம் கொண்டே வெல்கிறோம் ..
..
தமிழ்படித்தவனெல்லாம் சாமியாராய் போனான் என்றாார் பெரியார்.. அதைதான் எமக்கு
மாசுமறுவற்ற மதமில்லை, நமக்கு
இனப்பற்று மிக்க இலக்கியமில்லை நமக்கு 
அன்பு தரும்,அறிவூட்டும்
சமுதாயம் இ்ல்லை நமக்கு  மனிதர்கள் மனிததன்மையோடு வாழ சுதந்திரமில்லை என விளக்கம் தந்தாய்.. ஆட்சிகட்டிலில் ஏறியவுடன் 
தமிழ்நாடு தந்தாய் ..
நாடு கேட்கிறார் ஜாக்கிரதை என ராஜகோபால் டெல்லிக்கு சொன்னபோது 
இந்தியா நாடே அல்ல அதுவொரு துணைகண்டம் என புரியவைத்தாய் .. சுயமரியாதை திருமணத்தை தகாத உறவென உச்சநீதிமன்றம் சொன்னபோது 
அதை சட்டமாக்கி சரித்திரம் படைத்தாய் ..
..
உன் வழியில் தான் தமிழகம் செல்கிறது..திராவிட மாடல் நீ தந்தது தான் ..
திராவிட போர்வையில் ஒளிந்திருந்த மகோரா(எம்ஜிஆர்) கூட உன் நாமத்தை சொல்லிதான் பிழைக்க முடிந்தது .. உன் தமிழ் கேட்டு தமிழகம் சொக்கிநின்றது .. உன் தம்பிமார்கள் படைகஞ்சா போர்வீரர்கள் .. 
நீ மாபெரும் ஜனநாயக வாதி
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்றாய்
..
தமிழ் தேசியம் பேசி திரியும் சின்ன தம்பிகளே .. திராவிடம் என்றால்  கசக்கிறதா ..
இதோ எம் அண்ணா சொல்கிறார்

"திராவிடர் என்ற சொல் கற்பனையுமல்ல,கனவுலக கண்டுபிடிப்பும் அல்ல.
காவியத்தில் உள்ள சொல்..
வரலாற்றில் வருகிற பெயர்.
ஒரு சிறந்த இனத்தவரின் அரிய திருநாமம்.அந்தப் பெயரைத்தான் கூறுகிறோம் நாம்.
இந்தியன் என்பது போன்ற அரசியல் சூதாட்டப் பெயரையல்ல? எவ்வளவு தீர்க்கமான விளக்கம்..
..
இன்றைக்கு பாசிசத்தின் செயல்பாடுகளும், அவர்களின் தத்துபிள்ளைகளின் கூச்சல்களும் எமக்கு துருக்கிய பழமொழிதான் ஞாபகம் வருகிறது
"நரியிடமிருந்து மதத்தைக் கற்றுக் கொண்டவனுக்கு கோழியைத் திருடுவது தொண்டாகத் தோன்றும்".. ஆம் மதத்தை கையிலெடுத்து கலவரம் செய்ய முடியாத அமைதியாய் வாழும் தமிழகத்தை இரத்தபூமியாக்கி முடியாதா ..கலவர செய்து குளிர்காய முடியாதா என நினைக்கிறார்கள்  ஆனால் நாமோ அண்ணாவின் தம்பிகள் 
கலைஞரின் உடன்பிறப்புகள் அறிவாலயத்தில் வளர்ந்தவர்கள்
ஆம்
எம் அண்ணா எம்மை அறிவுக்கொண்டு வளர்த்தெடுத்தார் இப்போதும் 
சில கழிசடைகள் செய்யும் கீழ்தரமான செயல்கள் கண்டும் அமைதியாய் அறிவின் துணைக்கொண்டு வீழ்த்த நினைக்கிறோமே இதில் தான் அண்ணா வாழ்கிறார் ..
..
அண்ணா என்றால் 
தமிழ் 
அண்ணா என்றால் 
தமிழகம் 
அண்ணா என்றால் 
சுயமரியாதை
அண்ணா என்றால் 
வாசிப்பு 
அண்ணா தமிழர்களின் நாளம் 
..
வாழ்க! அண்ணாவின் புகழ் 
..
ஆலஞ்சியார்

Friday, September 13, 2024

ஒன்றிய அமைச்சரின் உடல்மொழியும், கேள்வி கேட்பவரை அற்பமான ஜீவனாக காணும் திமிரும் எல்லாம் தெரிந்தததைப்போல் பேசும் அறிவிலித்தனமும் தொடர்கிறது..
எப்போதெல்லாம் தமிழகம் வருகிறாரோ அப்போதெல்லாம் அலட்சிய மனப்பான்மையோடு அதிகாரத் தோரணையில் நடந்துக்கொள்கிறார்..
..
காரணம் அவர் மக்களை சந்திக்க போவதில்லை அதிகாரம் தேடி வரும் என்பதுதான்.  
எளிய கேள்வி கேட்டவர் தன் வியாபாரத்தில் ஏற்படும் சிக்கலை சொல்கிறார் இதில் எங்கிருந்து தவறு வந்தது மனம் வருந்தி மன்னிப்பு கேட்க இதில் என்ன அவ்வளவு தப்பை கண்டீர்கள்..
எதிர் குரலே இருக்க கூடாதென்கிறீரகளா.. எப்படி நாடாளுமன்றத்தில் "பொய்" "ஊழல்" (unparliament word)பேச கூடாத வார்த்தையாக்கி ஊழலை ஒழித்துவிட்டோம் என்கிறீரீகளே அதைப்போலவா.? 
..
கோவை சட்டமன்ற உறுப்பினர் வானதி அவர்கள் அறிக்கை அவர்களின் சுயரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.. அன்னபூர்ணா முதலாளி தவறாக பேசிட்டேன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றாராம் அப்படியே இருக்கட்டும் அதை படம்பிடித்து பொதுவெளியில் காட்டி எங்கள் எதிர்த்தால் இதுதான் கதி என எச்சரிக்கை விடுகிறீரகளா.. களம் தவறாக தேர்வு செய்துவிட்டீர்.. வட மாநிலம் அல்ல இது தமிழ்நாடு..
இன்று உலகமே உங்களின் செயலைக் கண்டது . உங்களின் தனி நிறத்தை மக்கள் அடையாளம் கண்டார்கள்.. தமிழகத்தில் கேள்வி கேட்கிற மன உறுதியை திராவிடம் விதைத்திருக்கறது ..
..
1892ல் விக்டரி மஹாலில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு பரிநதுரைப்பதற்காக நடந்த கூடடத்தால் தஞ்சை ராமசாமி அய்யங்காரிடம் கேள்வி கேட்ட அறிவும் அனுபவமும் உண்டு..  ஆனால் எளியவரின் தலையை வெட்டி சந்தையில் வைக்கும் பழைய அகங்காரச் சிந்தனைதான் 
இன்னும் தொடர்கிறது..ஆனால் அதிகாரம் கை விட்டுப்போனால் மன்னிப்பு என்கிற ஆயுதம் இருக்கிறது.. 
வல்லவனுக்காக வளைந்து கொடுக்க முடிகிற உங்களால் சிறு தொழில் முனைவோரின் குரலுக்கு செவி சாய்க்க மனமில்லை..
..
அன்னபூர்ணா "அதிபர்" ஆர்எஸ்எஸ்காரராம் இருக்கட்டும் பாதிக்கபடுகிறவன் பின்னால் நிற்பதும் குரல் கொடுப்பதைதான் எங்கள் பெருஙகிழவன் செய்தது, செய்ய பழக்கியது.. மாண்பமை அமைச்சர் அவர்களுக்கு தெரிந்தோ அல்லது தெரியாமல் நடந்திருத்தாலும்
வருத்தம் தெரிவிப்பதுதான் சரி ..
..
பாசிசத்தின் பற்கள் கொடூரமானது என்பதற்கு மற்றொரு அடையாளம் மன்னிப்பு கேட்கும் காணொளி
..
ஆலஞ்சியார்
என்ன நடக்கிறது .. 
94 வயதுவரை கிழவன் ஊட்டிய அறிவும் அவனின் உழைப்பும் வீணாகிவிடுமோ என அச்சப்பட வைக்கிறது .. கலைஞர் எனும் மகத்தான தலைவன் செதுக்கிய கொள்கைவிளக்க கோட்பாடு, செயல்கள் விவர போதாமைகளால் என்னாகுமோ என கவலை வருகிறது..
..
அரசுப் பள்ளியில் அறிவிற்கொவ்வாத செயல்கள் எப்படி அரங்கேறுகின்றன.. மெல்ல மெல்ல சிதைக்கும் வேலைகளின் பின்னில் யாரெல்லாம் இருக்கிறார்கள்.. அரசு அதிகாரிகள் யாருக்காக வேலை செய்கிறார்கள்.. இளம் மாணவர்களை மூளைச்சலவை செய்கிற செயல்களுக்கு யார் அனுமதி தந்தது.. அமைச்சருக்கு  தெரியாமல் தான் நடக்கிறதா.. எல்லாவற்றையும் முதலமைச்சர் பார்த்துதான் "திருத்த" வேண்டுமா.. உங்கள் உள் அரசியலில் கால்கள் வழுவிலக்காமல் அதில் கவனம் செலுத்துகின்ற நீங்கள் கொள்கை உறுதியோடு தன் துறை சார்ந்த விடயங்களில் அதிகம் கவனம் செலுத்த வேண்டாமா..
..
மாண்பமை அன்பில் மகேஷ் அவர்களே ..
Anbil Mahesh Poyyamozhi  உங்கள் தாத்தாவும் அப்பனும் சிந்திய வியர்வை துளிகள் கொள்கை கோட்பாட்டின் உறுதி,   கட்டுகோப்பாய் வழிநடத்திய பேராற்றல் இவையெல்லாம் கண்டு படித்தவர் உங்கள் செயல்களில் சரிவு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.. புனைவு கதைகளை அறிவு ஏற்காதவற்றை பள்ளி மாணவர்களிடத்தில் 
திணிக்கிறார்கள் .. பள்ளிக்கல்வித்துறையில் திராவிட சிந்தாந்தவாதிகளை, அறிவாளிகள் திமுக அனுதாபிகளை அழைக்க கூடாதென்பதை உறுதியாகவும்  ஆன்மீகம் என்ற பெயரில் அறிவை மழுங்கடிக்கும் சொற்பொழிவாளர்களை அதிகம் அனுமதிக்கிறார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது இதில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் 
..
மகாவிஷ்ணு போன்ற அறிவிலிகளைப் பற்றி பேச வேண்டியதில்லை.. நிறைய மகாவிஷ்ணுகளை தயார் படுத்தி வைத்திருக்கிறார்கள்.. மந்திரத்தால் நெருப்பு மழை பெய்யும் என்றவனை அங்கேயே கேள்வி கேட்க சாமானியர்கள் நிறைய வருவார்கள்,அச்சம் தவிர்த்து அறிவுசார்ந்த கருத்துக்களை சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.. ஆனாலும் துறை ரீதியான கடும் உத்தரவுகளும்,  கண்காணிப்பும் வழிகாட்டும் நெறிமுறைகளும் அவசிய தேவையாகிறது.. அறிஞர்கள் முற்போக்காளர்கள் பண்பாளர்களைக் கொண்டு இளம்தலைமுறையினரிடம் குறிப்பாக பதின் பருவத்தினரிடம் நல்ல கருத்துகளை அறிவார்ந்த விடயங்களை அறிவியல் தெளிவுகளை விளக்க வேண்டிய பெரும் பொறுப்பு இருக்கிறது.. 
..
பெருங்கிழவனும் பேராசானும் முத்தமிழறிஞரும் செதுக்கிய தமிழ்நாட்டை சிதிலமடையாமல் காக்கும் பொறுப்பு இருக்கிறது.. பதவி பகட்டிற்கில்லை.. நெஞ்சுரத்தோடும் நேர்மையோடும் கொள்கை தெளிவோடும்செயல்படுவதற்கு.. 
தங்களின் நடவடிக்கைகள் சமாதானபடுத்துகிறது.. திருப்திபடுத்த வேண்டும்..
..
சொல்ல இரண்டிருக்கிறது

ஒன்று:

கண்மூடி மௌனம் காத்தவர்கள் மத்தியில் அறிவுக்கண்ணை திறந்த ஆசிரியர் சங்கர் அவர்களுக்கு நன்றி!.. 
..
இரண்டாவது
20.08.1970 விடுதலையில் அய்யா எழுதியதை நினைவூட்டுகிறேன் 
"பள்ளிக்கூடத்தில் சிறிது நேரம் ஒதுக்கி பகுத்தறிவை சொல்லித் தர வேண்டும்"..
..
ஆலஞ்சியார்

Friday, September 6, 2024



  " அரசியல்வாதிகள் இடையில் மறைந்து விடலாம் ;ஆனால், எழுத்தாளராக- மனிதத் தன்மையுள்ளவராக- இருக்கும் முதல்வர்
மு.கருணாநிதி அவர்கள் என்ன நேர்ந்தாலும் சரித்திரத்திலிருந்து மறைய மாட்டார்கள்.

  தமிழ் உணர்ச்சிகளின் எழுச்சி உருவாய் 
மு.கருணாநிதி அவர்கள் இருக்கிறார்கள். அதே நேரத்தில் பொறுப்புகள் வரும்போது மிகவும் நேர்த்தியோடு உணர்ச்சிகளுக்கு இடம் கொடாமல் நாட்டு நலன் பேணி காத்து வருகிறார்.

  இத்தகைய அருமையான இலக்கிய ஆற்றலுக்கும் அருஞ் செயலுக்குமாகத்தான் அண்ணாமலை பல்கலைக்கழக கழகம்  அவர்களுக்கு டாக்டர் பட்டம் தந்து சிறப்பித்திருக்கிறது.

    -தமிழக ஆளுநர் மேதகு கே.கே. ஷா.

Saturday, August 17, 2024

கலைஞர் நாணயம்.. 
நா நயத்தோடு சிலம்பமாடிய
தலைவனுக்கு 
இந்திய ஒன்றியம் நாணயத்தை வழங்கி சிறப்பிக்கிறது..
ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் ஒரு ஆட்சியாளன் எப்படி செயல்பட வேண்டுமென வாழ்வின் இறுதிவரை எப்படி போராட வேண்டுமென போதித்த பெருந்தலைவன்.. 
..
அரசியலில் பொதுவாழ்வில் புதிய இலக்கணம் படைத்து புதிதாய் வருவோருக்கு பாடமாய் அமைந்து வரலாறாய் திகழும் மகத்தான மனிதன்.. எதிரிக்கும் பகைமை கொண்டு அலைந்தோர்க்கும் சேர்த்தே உழைத்தவன்.. சிலரின் வசைகளும் திசைமாறி சென்ற பறவைகளின் எச்சங்களும் இவனை அசிங்கபடுத்த நினைத்து அவமானப்பட்டு நின்றதை காலம் நமக்கு கணக்கிட்டு காட்டியது ..  இறந்து கிடந்தபோதும் கூர்வாளோடு திரிந்த பாசிசத்தை வென்றவன்.. 
..
தமிழ்நாடு கண்ட சிறந்த தலைவர்களில் "தகைசால்" தலைவன்.. 
பகையும் அஞ்சியது 
இவன் படையோட்டம் கண்டு 
புயலாய் தென்றலாய் 
ரீங்காரமிடும் குயிலாய் 
தேன்மதுரத் தமிழில் இவன் பாடியது கண்டு ஆடியது தமிழர் கூட்டம்..
பகை மறந்து ஆடிவரும் உண்டு.. 
பஞ்சமாபாதகனும் இவன் 
மகுடிக்கு மயங்கியதுண்டு..
..
பொதுவாழ்வில் இவன் ஆட்டம் கண்டு
பதறியது எதிரிகள் கூடாரம்
எந்த கல்லூரியில் படித்தான் ராமன் என்ற வீச்சில் விழுந்தது  மொத்தமும் ..
நேர் நின்றால் மயங்கிவிடுவேன்  என பாதை மாற்றியவர்கள் உண்டு 
இந்த வசீகரனை கண்டு..

பசித்தவன், பாமரன், நடுங்கியவன் ,
நாதியற்றவன், நசுக்கப்பட்டவன்,
நிலை உயர நா நயத்தோடும் நாணயத்தோடும் (honest) உழைத்தவனுக்கு இந்திய ஒன்றியம் நன்றிக்கடன் செலுத்துகிறது..
#கலைஞர்நாணயம்
#தமிழ்வெல்லும்
..
ஆலஞ்சியார்
நான்..
யார் என்பதை 
நான் தான் சொல்ல வேண்டும் 
ஊர் சொல்ல தொடங்கும் போது
அழ நேரிடும்
..
என் உயரம் எனக்கு தெரிய வேண்டும்.. 
இல்லையெனில் 
வீழ்ச்சி தொடங்கும் ..
படைவீரர்களின் கால் நரம்பை துண்டித்துவிட்டு 
"ராஜா" படையோட்டம் நடத்த முடியாது..
கூட இருந்தவர்களை ஒவ்வொன்றாய் இழந்தால் 
பலவீனப்படும்
..
குறைகள் இல்லா எதுவுமில்லை 
குறைகளை உணராதவன் 
உயர்வதில்லை 
அகந்தையும் கர்வமும் 
அழிவின் தொடக்கம்..
நீ.. 
யாரென்று நீதான் தீர்மானிக்க வேண்டும்
..
ஓடும் பாதை மட்டுமே 
கண்ணில் தெரிந்தால் 
வெற்றி எளிதாகும் 
கூட 
ஓடுகிறவனை 
பார்த்துக்கொண்டே இருந்தால் பயம் வரும்.. 
தோல்வி வரும்
நடுக்கம் வரும்..

..
அடுத்தவன் திமிரில் 
முறுக்கி திரிந்தால் 
கால் நடுங்கதான்  செய்யும் 
உன் பலமறிந்து விளையாடினால் 
"பக்கபலம்" தானாய் வரும்..
நான் யாரென்பதை 
நான் தான் தீர்மானிக்க வேண்டும்..
..
நான் யார் என்பதை 
நானே முடிவு செய்து
என்
பலமறிந்து விளையாடினால் 
ஜெயிக்கிறனோ,இல்லையோ 
ரசிக்கும்படியாக இருக்கும்..
நீயே 
ரசிக்கும்படியாக இருக்கும்
..
சூழ்ச்சிகள் புத்திசாலித்தனமில்லை 
அழுகை வீரமில்லை..
அகந்தை வாழ்வதில்லை
அடக்கம் தாழ்வதில்லை 
அன்பு  வீழ்வதில்லை 
நீ..
யாரென்று..
..
அது சரி நான் யார்..?
காலம் சொல்லும்
..
ஆலஞ்சியார் 

 


Tuesday, August 6, 2024

கலைஞர்..
என்பதாண்டு பொதுவாழ்வு..
கண்டு மிரண்டவனும் 
கண்டு படித்தவனும் உண்டு..
இவரை நினைக்காமல் 
இங்கே..
எவனுக்கும் அரசியல் இல்லை 
எதிர்த்தோ அருகாமையில் அமர்ந்தோ 
ஆரத்தழுவியோ தான் அரசியல் செய்யமுடியும்..
..
இவன் ஆடியதுதான் அரசியல் 
எவரை எங்கே நிறுத்தவேண்டும்
என்றறிந்த சூத்திரதாரி..
பகைவனுக்கும் அருளிய பேருபகாரி..
துரோகிக்கும் வாழ்வளித்த பெருந்தனக்காரன்..
அரசியலில் அறம் வளர்த்த ஞானபண்டிதன்.. 
சொல்லும் எழுத்தும் சுவைமாறாமல் எதிரியை வீழ்த்தும் 
பகைவரும் இவன் சொல்லில் மயங்கி நிற்பர்..
..
இவன் தொட்டதும் இட்டதும் தான் அரசியலின் அடிப்படை இலக்கணம்..
இவனை படிக்காமல்  இங்கே யாருக்கும் வாழ்வில்லை ..
பழக இனியவன் 
பழிதீர்க்காத பெருமைக்குரியவன் 
பக்கத்தில் போனால் போதும் மயங்கி நிற்பர் 
..
இயலாதோர்க்கும் இல்லாதோர்க்கும் எளியவர்க்கும் 
வெறுக்கபட்டவர்களுக்கும் 
வழி தெரியாதோர்க்கும் 
ஒளியேற்றிய கதிரவன்..
இவன் சொல் தமிழ்நாட்டு அரசியலதிகாரம்
இவன் செயல் தமிழ்நாட்டை வடிவமைத்தது
..
பள்ளத்தில் கிடத்தவனை 
படிகளில் ஏற்றியவன் ..
ஒடுக்கபட்டவனின் குரலாய் ஒலித்தவன் 
கல்லாமை எனும் இருளகற்றி
படி.. எல்லாம் வருமென்றவன் 
படிப்பே  வராதென்றவன் முன் 
உயரத்திற்கு வா.. 
உலகம் அண்ணாந்து பார்க்கும் என வழி திறந்தவன்..
பெண்கள் படித்தால் பாவமென்ற 
சாஸ்திரப் புரட்டை உடைத்து 
கற்க வா எல்லாம் தருகிறேன் உயர்கல்வி வரை கட்டணமில்லை என்றவன் 
..
இந்திய ஒன்றியம் இப்போது செயல்படுத்தலாமா என எண்ணுவதை  முப்பதாண்டுகளுக்கு முன்பு நடப்பிலாக்கி தமிழகத்தை தலைநிமிர செய்தவன் .. 
பொதுவாழ்வில் 
வீணர்களில் சூழ்ச்சியை வீழ்த்தி அறம் காத்த பெருவுடைச்சோழன் 
14 வயது முதல் 94 வயது வரை விடாமல் துரத்திய பாசிசவாதிகளை நெருங்கவிடாத நெருப்பாய் ஜொலித்தவன்  ..
..
உயர்நோக்கு, நற்சிந்தனை இனமானம்,மொழிப்பற்று 
ஓயாத உழைப்பு 
எதிரியை ஆடவிட்டு ரசிக்கும் பாங்கு 
எதிர்கருத்திற்கும் மதித்து ஜனநாயக விளிம்புகளில் நின்று அரசியலை போதித்த பேராசான்..
பகைமை பாராட்டியவனையும் 
புறமிருந்து குத்தியவனையும் 
மன்னித்தருளிய மானுடம்..
இவனைப் போலொருவன் பிறப்பதறிது..
..
இவன் வாழ்ந்த காலத்தில்  வாழ்ந்தோம்  
இவன் சுவாசித்த காற்றை நுகர்ந்தோம்..
என்பதே பெரும்பேறு..
எழுதி எழுதி தீர்த்தாலும் பட்டகடன் தீராது தலைவா..
இன்று நிம்மதியாய் தமிழகம் இருக்கிறது ..
பாசிசத்தின் கோரதாண்டவம் ஒன்றியத்தை கடித்து குதறும்போதும் 
நிம்மதியாய் தமிழ்நாடு..
சாதி மத ஓலமின்றி அன்பொழுக அரவணைத்து செல்கிறது .
எல்லாம் நீ போட்ட பாதை தான்
நீ செப்பனிட்டது தான்
என்றும் நன்றியோடு ..
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்
கலைஞர்..
என்பதாண்டு பொதுவாழ்வு..
கண்டு மிரண்டவனும் 
கண்டு படித்தவனும் உண்டு..
இவரை நினைக்காமல் 
இங்கே..
எவனுக்கும் அரசியல் இல்லை 
எதிர்த்தோ அருகாமையில் அமர்ந்தோ 
ஆரத்தழுவியோ தான் அரசியல் செய்யமுடியும்..
..
இவன் ஆடியதுதான் அரசியல் 
எவரை எங்கே நிறுத்தவேண்டும்
என்றறிந்த சூத்திரதாரி..
பகைவனுக்கும் அருளிய பேருபகாரி..
துரோகிக்கும் வாழ்வளித்த பெருந்தனக்காரன்..
அரசியலில் அறம் வளர்த்த ஞானபண்டிதன்.. 
சொல்லும் எழுத்தும் சுவைமாறாமல் எதிரியை வீழ்த்தும் 
பகைவரும் இவன் சொல்லில் மயங்கி நிற்பர்..
..
இவன் தொட்டதும் இட்டதும் தான் அரசியலின் அடிப்படை இலக்கணம்..
இவனை படிக்காமல்  இங்கே யாருக்கும் வாழ்வில்லை ..
பழக இனியவன் 
பழிதீர்க்காத பெருமைக்குரியவன் 
பக்கத்தில் போனால் போதும் மயங்கி நிற்பர் 
..
இயலாதோர்க்கும் இல்லாதோர்க்கும் எளியவர்க்கும் 
வெறுக்கபட்டவர்களுக்கும் 
வழி தெரியாதோர்க்கும் 
ஒளியேற்றிய கதிரவன்..
இவன் சொல் தமிழ்நாட்டு அரசியலதிகாரம்
இவன் செயல் தமிழ்நாட்டை வடிவமைத்தது
..
பள்ளத்தில் கிடத்தவனை 
படிகளில் ஏற்றியவன் ..
ஒடுக்கபட்டவனின் குரலாய் ஒலித்தவன் 
கல்லாமை எனும் இருளகற்றி
படி.. எல்லாம் வருமென்றவன் 
படிப்பே  வராதென்றவன் முன் 
உயரத்திற்கு வா.. 
உலகம் அண்ணாந்து பார்க்கும் என வழி திறந்தவன்..
பெண்கள் படித்தால் பாவமென்ற 
சாஸ்திரப் புரட்டை உடைத்து 
கற்க வா எல்லாம் தருகிறேன் உயர்கல்வி வரை கட்டணமில்லை என்றவன் 
..
இந்திய ஒன்றியம் இப்போது செயல்படுத்தலாமா என எண்ணுவதை  முப்பதாண்டுகளுக்கு முன்பு நடப்பிலாக்கி தமிழகத்தை தலைநிமிர செய்தவன் .. 
பொதுவாழ்வில் 
வீணர்களில் சூழ்ச்சியை வீழ்த்தி அறம் காத்த பெருவுடைச்சோழன் 
14 வயது முதல் 94 வயது வரை விடாமல் துரத்திய பாசிசவாதிகளை நெருங்கவிடாத நெருப்பாய் ஜொலித்தவன்  ..
..
உயர்நோக்கு, நற்சிந்தனை இனமானம்,மொழிப்பற்று 
ஓயாத உழைப்பு 
எதிரியை ஆடவிட்டு ரசிக்கும் பாங்கு 
எதிர்கருத்திற்கும் மதித்து ஜனநாயக விளிம்புகளில் நின்று அரசியலை போதித்த பேராசான்..
பகைமை பாராட்டியவனையும் 
புறமிருந்து குத்தியவனையும் 
மன்னித்தருளிய மானுடம்..
இவனைப் போலொருவன் பிறப்பதறிது..
..
இவன் வாழ்ந்த காலத்தில்  வாழ்ந்தோம்  
இவன் சுவாசித்த காற்றை நுகர்ந்தோம்..
என்பதே பெரும்பேறு..
எழுதி எழுதி தீர்த்தாலும் பட்டகடன் தீராது தலைவா..
இன்று நிம்மதியாய் தமிழகம் இருக்கிறது ..
பாசிசத்தின் கோரதாண்டவம் ஒன்றியத்தை கடித்து குதறும்போதும் 
நிம்மதியாய் தமிழ்நாடு..
சாதி மத ஓலமின்றி அன்பொழுக அரவணைத்து செல்கிறது .
எல்லாம் நீ போட்ட பாதை தான்
நீ செப்பனிட்டது தான்
என்றும் நன்றியோடு ..
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்

Thursday, August 1, 2024

ஆந்திரம் இஸ்லாமியர்களுக்கு 5% விழுக்காடு தந்தது உச்சநீதிமன்றம் செல்லாது என்றது.. தமிழ்நாடு இஸ்லாமியர்களுக்கு 3.5% விழுக்காடு தந்தது உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது..  அதிமுக வன்னியர்களுக்கு 10.5% விழுக்காடு உள் ஒதுக்கீடு தந்தது உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.. அருந்ததியர்களுக்கு 3% உள்விழுக்காடு திமுக தந்தது உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களும் பின்பற்றலாம் என தீர்ப்பை தந்திருக்கிறது.. பீகாரில் இட ஒதுக்கீட்டை 65%ஆக உயர்த்தியதை ரத்து செய்தது.. 
..
காரணம் திராவிடம் எதையும் சரியாக அலசி ஆராய்ந்து சட்டத்தின் நிறை குறைகளை ஆய்ந்து எதுவெல்லாம் சட்டத்திற்கு உட்படும் என்ற தெரிந்து வரையறுத்து சட்டவடிவை தயாராக செய்து சம்பந்தபட்ட துறையின் அனுமதியைப் பெற்று சடட்மியற்றும் அதனால் தான் கலைஞர் கொணடு வந்த சட்டங்கள் செல்லுபடியாகின்றன.. ஏனோதானோ என்று எடுத்தேன் கவிழ்த்தேன் என செயல்பட்டால் அதிமுக அவசரகதியில் கொணடுவந்த "நாடக ஒதுக்கீடு" போல் ரத்து செய்ய நேரிடும்..
..
ஆந்திராவில் 5% விழுக்காடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு இதுதான் காரணம் ஆனால் தமிழ்நாட்டில் கலைஞர் முஸ்லிம்களுக்கு தந்தபோது சிறுபான்மையினர் இஸ்லாமிய கிருஸ்துவ,ஜெயின் சமூகத்தை இணைத்து பிற்படுத்தப்பட்ட நலத்துறைக்கு பரிந்துரைக்கு அனுப்பி 8%விழுக்காடு வரை தரலாம் என்ற பரிந்துரையை பிற்படுத்தப்பட்ட நலத்துறை வழங்க இஸ்லாமியர்களுக்கு 3.5% கிருஸ்துவர்களுக்கு 3.5% ஜெயின் சமுகத்திற்கு 0.5% என ஒதுக்கினார் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் வியந்தது .. OBCஇட ஒத்க்கீட்டில் வன்னியர்களோடு இன்னும் 19 பிரிவினரை சேர்த்து வழங்கிய போது நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதை கவனிக்க வேண்டும் 13%முதல்15.5% வரை வன்னியர்கள் பயனடைந்தார்கள்..
எதையும் ஆய்ந்தறிந்து திறம்பட செய்வதில் கலைஞரை மிஞ்சிய எவரும் இல்லை.. அதனால் அவர் தொட்டதெல்லாம் வென்று நிற்கிறது .. எந்தவொரு  சமூகத்திற்கு தரும் இட ஒதுக்கீடாக இருந்தாலும் முதலில் எதிர்ப்பது பாஜக தான் நேரடியாகவே மறைமுகமாகவோ அதை எதிர்ப்பார்கள் .. முஸ்லீம்கள் உள் ஒதுக்கீட்டிற்கு ஒப்பாரியே வைத்தார்கள் அருந்ததியர் இட ஒதுக்கீட்டிற்கு சிலரை தூண்டிவிட்டும் நேரடியாகவும் எதிர்த்தவர்கள் பாஜகவினர் ஆனால் இன்று "ஜெய்சிரிராம்" புகழ் முருகன் பிரதமர் சமூகநீதி காவலர் என சொல்கிறார் சொந்த புத்தியோ நன்றியுணர்வோ இல்லாதவர் தான் சார்ந்த அருந்ததியர் இனத்தின் விடியலுக்கு காரணியாக ஆனவர் கலைஞர் என்று தெரிந்தும் அதை மறைத்து தமிழ்நாடு தந்த உள் ஒதுக்கீடென கடந்து போகிறார் ..இவர் அதிகம் விரும்பும் "மீனாட்சியே" இதை கண்டு நகைப்பாள்..
..
தலையிலும் கையில் மலத்தை அள்ளும் இவர்களுக்கு உள்ஒதுக்கீட்டை தலையில் தூக்கி ஆடுகிறேன் பள்ளத்தில் கிடப்போரை படிகளில் ஏற்றிட தொடர்ந்து பாடுபடுவோம் "பகுத்தறிவு" துணைக்கொண்டு என்ற பேரருளாளன் கலைஞரை இந்த நேரத்தில் ஆதி தமிழர் அருந்ததியர் மட்டுமல்ல அனைவரும் கொண்டாட வேண்டும்.. எத்தனை உன்னதமான சிந்தனை செயல் தமிழர்கள் நலன் ஒன்றே குறிக்கோளாய் வாழ்ந்து ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட விளிம்புநிலை மக்களின் உயர்விற்கு காலமெல்லாம் உழைத்த உன்னத தலைவர் கலைஞர் ..
..
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். என்ற குறளின் பொருளாய் விளங்கிய "பெருமானை" இந்த நேரத்தில் நினைவு கூர்வோம்.. 
..
வாழ்க! எம்மான் கலைஞர் 
வாழிய !! கலைஞர் புகழ் !!! ..
..
ஆலஞ்சியார்

Sunday, July 28, 2024

" தம்பி , ஆரியம், அனந்தாச்சாரியிடம் மட்டும் இல்லை, அம்பலவாண முதலியாரிடமும் இருக்கிறது; ஆதிசேஷ செட்டியாரிடமும் இருக்கிறது. நெய்யாடிவாக்கம் முதலியாரிடமும் இருக்கிறது. குன்னியூர் ஐயரிடமும் இருக்கிறது! விநாயகம் எடுத்துக் காட்டியபடி, உச்சிக் குடுமியும் பூணூலும் கூட ஆரியரிடம் மட்டுமல்லவே, படையாச்சிகளிடம் இருக்கிறது, நாயுடுகளிடம் இருக்கிறது; ஏன்  நாடார் சமூகத்தில் கூட பழமை விரும்பிகளிடம் இருந்திடக் காண்கிறோம். 

எனவேதான் ஆரியரை ஒழிப்பது என்பது நமது திட்டமாகாமல், ஆரியத்தை ஒழிப்பது நமது திட்டமாக இருக்கிறது. இதிலே நமக்குத் தெளிவும் நம்பிக்கையும் ஏற்படும் வகையில் பெரியார் அறிவுரை கூறியிருக்கிறார். நாம் அந்தப் பாதையில் செல்கிறோம்.
ஆரியம், ஆரியரிடம் மட்டுமல்ல, திராவிடரிடமும் புகுத்தப்பட்டிருக்கிறது; அதைப் புகுத்தி, பாதுகாத்துவரும் பணியில், ஆரியர், ஆரியக் கோலத்தில் இல்லாவிடினும்கூட ஈடுபடக் காண்கிறோம். எனவே, ஆரியம் களையப்படுவதற்கான அறிவுப் பிரச்சாரத்தைத் திறம்பட நடத்துவதுதான் முறையே தவிர அக்ரகாரத்தில் தீ மூட்டுவதல்ல என்று கூறுகிறோம்.

எனவே தம்பி! நாம் ஆரியத்தை, அறிவுச் சுடரால் அழித் தொழிக்க வேண்டும் - அந்த ஆரியம் அக்ரகாரத்தில் மட்டுமில்லை!

எட்டிப் போடா சூத்திரப் பயலே! - என்று ஐயர் பேச்சும் ஆரியம்தான்!

கிட்டே வராதே சேரிப் பயலே என்று பேசும் முதலியார் முடுக்கும் ஆரியம்தான்!

படையாச்சிக்கு இவ்வளவு உயர்வா? என்று கேட்கும் பேச்சும் ஆரியந்தான்!

மறவர் முன்பு மட்டு மரியாதையோடு நட! தேவர் வருகிறார், எழுந்து நில்! நாடார் அழைக்கிறார், ஓடிவா! செட்டியார் கேட்கிறார், தட்டாமல் கொடு! - என்று ஆரியம், பலப்பல முறைகளிலே தலைவிரித்தாடுகிறது, தம்பி, பல முறைகளில்

     -அறிஞர் அண்ணா ,( 9 - 10 - 1955 , திராவிடநாடு )


Saturday, July 27, 2024

அநாகரீகம் அதற்கு மறு பெயர் ராமதாஸ்.. 
அரசியலை பிடித்த சீழ்.. அப்பட்டமான சாதிவெறி தன் சமூக மக்களே ஏற்கவில்லையென்ற கோவம்,  எதை பேசுகிறோம் என்று தெரியாமல் தன் இயலாமையை காட்டிக் கொண்டார் .. 
அரசியல் மேடைகளில் விமர்சனம் செய்வது வேறு அதில் கூட குறைந்தபட்ச கண்ணியம் வேண்டும் .. 
..
மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் வெகுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை ஒருமையில் பேசுவதும் சாதீய வன்மத்தோடு கதைப்பது அவரின் அரசியல் வாழ்வின் முடிவை சொல்கிறது.. மாறி மாறி சவாரி செய்த குதிரையின் கால் நரம்பை அறுத்ததில் பெரும் பங்கு ஸ்டாலினுக்கு உண்டு..  நின்ற ஏழு இடங்களிலும் தனி கவனம் செலுத்தி தோற்கடித்து பாமகவின் வீழ்ச்சிக்கு வித்திட்டவர்.. அதன் பிறகு துரைமுருகன் போன்ற "சாதி"தூதுவர்களை கொண்டு எவ்வளவு முயற்சித்தும் சேரவிடாமல் தடுத்ததில் "ஸ்டாலின்"எனும் அரசியல் "தந்திரி"யின் செயல் இன்றைய கதறிலில் தெரிகிறது
..
தொடர்ந்து அன்புமணியின் உடல்மொழியும் பேச்சும் ஏதோ இவர்கள் தான் எல்லாம் தெரிந்தவர்கள் என்ற போக்கை இடதுகையால் ஒதுக்கும் ஸ்டாலின் அனுபவம் அவர்களுக்கு இயல்பாகவே கோபத்தை வரவழைக்கிறது.. மகனை,மருமகளை தோற்கடித்த செயல் தன் சமுதாய மக்கள் இத்தனை காலமாகியும் நம்ப மறுப்பதும் எதிர்காலம் இல்லாமல் போய்விடும் என்ற அச்சம் தலைக்கேறியதின் விளைவு ராமதாஸின் பேச்சில் தெரிந்தது..
..
திராவிட அரசியலை வீழ்த்துவதாக சொன்னவர்கள் வீழ்ந்த வரலாற்று தொடர்கிறது.. மதம்,சாதி,சமயம்,இவையெல்லாம் பொது அரசியல் கைக் கொடுக்காது காரணம் எல்லாவறறையும் கேட்கும் அறிவும்,அதில் ஆழ்ந்து யோசிக்கும் திறனும் சரியானதை தேர்வு செய்யும் சாமானிய அறிவும் பெற்றவர்கள் தமிழர்கள்..  ராமதாஸ் போன்ற அற்பர்களை இனங்கண்டு புறக்கணிப்பார்கள்.. சில இடங்களில் பாசம் மேலிடலாம் ஆனால் ஓட்டுமொத்தமாக தோல்வியைதான் பரிசளிப்பார்கள் 
..
தன் வளர்ச்சிக்காக சமுதாயத்தை அடகுவைத்து பணம் பதவி என அலைந்தவர் இன்று புறக்கணிக்கப்படும் போது எங்கே தன் மகனின் அரசியல் எதிர்காலமே இல்லாமல் போய்விடுமோ என்ற பதற்றமும் வயது மூப்பும் ராமதாஸின் சொல்லில் தெரிகிறது ..  திருமாவுக்கு இருந்த அரசியல் தெளிவு ராமதாஸிற்கும் அன்புமணிக்கும் இல்லை.. அது பாமகவின் அடித்தளத்தை அசைக்க தொடங்கிவிட்டது ..
..
தனியாக நிற்போமென வசனம் பேசி கடைசியில் திராவிடக்கட்சிகளிடத்தில் மண்டியிட்டதும் திமுக இனி பாமகவை அண்டவிடுவதில் என்ற உறுதிபாடும் கடைசியில் பாஜகவுடனான சேர்க்கை கரை சேரமுடியாதென்ற உண்மையும் உரைக்கிற போது உளறல் அதிகமாகிறது.. சாதி வன்மங்கொண்டு பேசியதை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது ராமதாஸின் அரசியல் வாழ்வு இனி..? 
..
பெற்ற தாயை கூட அசிங்கபடுத்தியவன் அரசியல் இருப்பதே அசிங்கம் என மக்கள் முடிவெடுத்துவிட்டதுதான் தொடர் தோல்விகள் .. ராமதாசும் அன்புமணியும் அரசியலில் இருந்து துடைத்தெறியப்பட வேண்டியவர்கள் .. காலம் மௌனமாய் பதில் சொல்லும்,செய்யும்.. 
 ..
ஆலஞ்சியார்

Sunday, July 21, 2024


தலித் அரசியல்..
நவீன தலித் போராளிகளுக்கு? பெரியாரை கொண்டாடுவதில் மிகப்பெரிய சங்கடம் தெரிகிறது.. அயோத்திதாசர் அம்பேத்கர் போன்ற "தாழ்த்தப்பட்டோரின்" குரல் எடுபடாமல்  போகும் என்ற அச்சத்தில் பெரியாரை விமர்சிக்க தொடங்கியிருக்கிறார்கள்.. உண்மையில் பெரியாரால் தான் சமூக இடைவெளி ஓரளவு குறைந்ததும் ஒடுக்கப்பட்ட சமூக மேம்பாடு கணிசமானளவு மெச்சபட்டதும் திராவிட இயக்கங்கள் அதிகாரத்தை அடைந்த பிறகுதான் என்பதை உணரவில்லை..
..
அயோத்திதாசரால் முடியாததை, எங்கள் பிள்ளைகளை நான்காவது வரையாவது படிக்க அனுமதியுங்கள் என்று கேட்டும் வெளியேற்றப்பட்ட நிகழ்வுகள் எல்லாம் இன்றைய தலைமுறை அறியாதது..  வடமாநிலங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கல்வியறிவு கிடைத்த நேரத்தில் இங்கே தமிழ்நாட்டில் திராவிடம் செயல்படுத்த தொடங்கிவிட்டது.. இவர்களுக்கு பெரியார் மீது என்ன கோபம்..? இங்கே சாதிய தலைவர்கள் தலையெடுக்க முடியாமல் அப்படி அமைப்பென்று தொடங்கினால் கூட குறுகிய வட்டத்தை தாண்டி செயல்பட முடியாமல் பெரியாரின் "கைத்தடி" தலையில் தட்டி உட்காரவைக்கிறது.. 
..
சென்னையில் பழைய ரௌடி வெட்டிக் கொல்லப்படுகிறார் ..
அது அரசியல் கொலையல்ல என்பதை காவல்துறை விசாரணையில் தெரியவருகிறது.. ரௌடிகள் அரசியல் கட்சியில் அடைக்கலமாவதும் தன் சாதியை முன்னிறுத்தி தன்னை பாதுகாத்துக் கொள்ள தடுப்பாட்டம் ஆடுவதும், தன்னை தன் சமூகத்தின் தலைவனாக காட்டி இளைஞர்களை வழிகெடுப்பதும் குறிப்பிட்ட காலளவுவரை கைகொடுக்கும் தெளிவு வருகிற போது குப்பையில் வீசிவிடும்..
பழைய பகை கருவறுக்க தொடங்கும் போது தடுத்து நிறுத்த அரசு தவறிவிட்டதாக கூப்பாடு போடுவது எந்தவகையான நியாயம்..  தலித் அரசியலை சிலர் அடிதடி கட்டப்பஞ்சாயத்து ரௌடியிசம் என குறுகிய வட்டத்திற்குள் அடைக்க நினைக்கிறார்கள்.. 
..
சென்னையில் எங்களை மீறி யாரும் ஆட்சிக்கு வரமுடியாது என்பது அரசியல் புரிதல் இல்லாமை என கடந்து போக முடியாது பாசிசத்தின் பெரும் சதியின் ஒருபகுதியாக கணக்கில் கொள்ள வேண்டும் .. ரௌடிகளுக்கு புரிகிற பாஷையில் காவல்துறை பேச தொடங்கியதும் பதறுவது வெளிப்படையாக  தெரிகிறது.. தலித் இளைஞர் கல்வி வேலைவாய்ப்பில் குறிப்பிட்ட முன்னேற்றம் அடைந்ததிருப்பது திராவிடத்தால் வந்தது என்பதை பொறுத்துக்கொள்ள முடியாத பேதைகள் எதையாவது உளறுவதை சகிக்க முடியவில்லை..
..
சாதியை கையிலெடுத்து அரசியல் செய்த ராமதாஸ்,கிருஷ்ணசாமி ஜான்பாண்டியன் போன்றவர்கள் கரையேற முடியாமல் தவிக்கிறார்களே அதற்கு காரணம் இந்தமண் பண்பட்டு தெளிவோடு இருப்பதே காரணம்.. சாதி மதம் மொழியரசியல் இங்கே எடுபடாது.. காரணம் ஒவ்வொரு ஏதோவொருவகையில் திராவிடத்தால் பலனடைந்து இருப்பதும் பெரியாரெனும் மாமனிதனின் கடுமையான உழைப்பும் அறிஞர் அண்ணா,கலைஞர் ஆட்சி ஏற்படுத்திய மாற்றங்களும் மிகப்பெரிய காரணிகள்.. நீதிக்கட்சி காலத்தலிருந்து அநீதி ஏறபட்டதாக சொல்கிறார்.. உண்மையில் நீதிக்கட்சி காலத்தில்தான் (1921) பள்ளிக்கூடங்களில் சமமாக அமரவைத்தால் மட்டுமே "பாடசாலை" தொடங்க அனுமதி என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது..
அதற்கு தனியாக அமரவைக்கிறோம் என சிலர் கேட்டபோதும் மறுத்து தாழ்த்தப்பட்ட மாணவர்களும் சமமாக அமரவைக்கும் முடிவில் உறுதியாக இருந்தது நீதிக்கட்சி..
..
இவர்கள் எதிர்க்க வேண்டியதும் கேள்விகேட்க வேண்டியதும் பார்ப்பன பாசிச சிந்தனைக்கெதிராக தானே தவிர
திராவிடத்திற்கு எதிராகல்ல.. திராவிடத்திற்கு, தந்தை பெரியாருக்கு நன்றி பாராட்டவிட்டாலும் வசவுகளை கக்காமல் இருந்தால் போதும்.. 
யாரெல்லாம் ஒடுக்கப்படுகிறார்களோ அவர்களுக்காக, அவர்கள் எந்த பிரிவினருக்கான இருந்தாலும் ஏன் பார்ப்பனர்களாக இருந்தாலும் குரல் கொடுக்கும் அதுதான் பெரியாரின் வழிவந்த  திராவிடம் செய்வது செய்துக்கொண்டிருப்பது செய்ய போவது..
..
எல்லா தலித் தலைவர்களும் பாஜகவின் செலலப்பிள்ளையாகிவிட்ட பிறகும் திருமா மட்டும் பெரியாரையும் சேர்த்துபிடித்து அரசியல் செய்கிறாரே என்ற கோபம் நவீன தலித் பிம்பங்களின் பேச்சில் தெரிகிறது.. என்னதான் கதறினாலும் உங்கள் எண்ணம் ஈடேறாது.. திமுகன்னா பயப்படுறீங்களா நாங்கள் அடிமை அல்ல
என கேட்க தெரிந்தவருக்கு பாஜகவின் சித்தாந்தப்படி  (வர்ணாசிரமம்) அடிமைகளைப் போல மோசமான நடத்தப்டடதை இன்னமும் வட மாநிலங்களில் நடத்தபடுவதை கேட்க துணிவிருக்கிறதா.. 
மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்ற கோட்பாட்டில் இயங்குகிற இயக்கத்தை கேள்வி கேட்கும் முன் மூளையில் படிந்திருந்தும் பாசிச அடிமை சிந்தனையை கழுவிவிட்டு பேசவும் 
ரௌடி கொல்லப்டடதற்கு எதற்காக குரல் கொடுக்கவேண்டும் ..  கொலை குறித்து விசாரணை நடந்துக்கொண்டிருக்கிறது.. கொலையாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு நீதிமன்ற விசாரணை சரியான பாதையில் செல்கிறது பிறகு ஏன் பதட்டம் ? .. இந்த வழக்கில் குற்றவாளிகள் தலித்களாக இருப்பதால் அந்த சமூக மக்களுக்காக எதிராக மற்றவர் பேசவில்லையே அதிலிருந்தே தெரிகிறது கொலையாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் .. 
..
முதலில்
அரசியல் பயிலுங்கள்..
..
ஆலஞ்சியார்

Saturday, July 13, 2024

ராமதாஸ் தன் மகனை, மருமகளை,நிறுத்தி தோல்விக்கண்டவர் தன் பெயர்த்தியையும் நிறுத்தி வரலாற்று சாதனை நிகழ்த்திய இருக்கலாம்.. 
"விக்கிறவாண்டியா" என "கொப்பளித்தார்" சௌமியா  இல்லை துரத்துகிற"வாண்டி" என்பதை புரிந்திருப்பார்.. 
சாதிவெறியூட்டும் செயல் தமிழகத்தில் எடுபடாது.. "ராமதாஸ் வகையாறா"வின்  எண்ணம் ஈடேறாது என்பதை மக்கள் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்..
..
தமிழக மக்கள் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்  எனும் மகத்தான தலைவனின் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்குமென நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.. நயவஞ்சகர்கள்,நம்பிக்கை துரோகிகள் சுயநலவிஷமிகள் தானெனும் கர்வம் கொண்டவர்கள்,தனக்கே எல்லாம் தெரியுமென்பவர்கள் அகந்தையில் அலைபவர்கள் இவர்களெல்லாம் எககாலத்தும் "குணம்பிடிக்க"மாட்டார்கள் என்பதை இந்த தேர்தல் களம் உணர்த்தியிருக்கிறது .. "புலிகள்ஆதரவு" என்ற பழைய பல்லவியை கையிலெடுத்து தமிழ்நாட்டை கூறுபோட நினைக்கும் கூறுகெட்டவர்களை "கட்டிவச்சகாசு"கூட கிடைக்காமல் கதறவிட்டிருக்கிறார்கள்.. தமிழ்நாடு கண்ட மாபெரும் தலைவனை "சண்டாளன்" என கொக்கரித்தவர்கள் இன்று நோட்டாவை மிஞ்சவே தடுமாறுகிறார்கள்..  
..
தமிழ் தமிழர் என கதைத்து இங்கே இலங்கை அரசியலை பேசி திரிந்தால் யாழ்பாணம் மொழியில் சொல்லவேண்டுமெனில்  "பிள்ளைப்பிடி"யனின் கதிதான் இங்கே நிகழும், காலம் வலிமையானது.. இன்றைய தமிழ்நாட்டின் வளர்ச்சியின் 80%விழுக்காடு நீங்கள் சொல்லும் சண்டாளன் சமைத்தது..அதை உண்டு உணர்ந்து,உயர்ந்துவிட்டு இன்று பாசிசத்தின் கிளிப்பேச்சை செப்புகிறீர்.. அரசியல் என்பது எதிர்கருத்தும் விமர்சனமும் கொள்கை வேறுபாடும் கொண்டதுதான்.. ஆனால் எல்லை மீறிய காழ்ப்புணர்ச்சியும் விசமேறிய வாரத்தைகளும் உங்கள் நிழல் கூட வெறுக்கும் நிலைக்கு தள்ளப்படுவீர்..
..
தமிழ்நாட்டு மக்கள் மிக நாகரீகமாக பாடமெடுக்கிறார்கள் திரும்ப திரும்ப அதே வழியில் பயணித்தால் இருக்குமிடமே தெரியாமல் அழித்துவிடுவார்கள்.. சாதி மத,மொழியரசியலில் விடுத்து நலனரசியலில் கவனம் செலுத்தினால் மட்டுமே எதிர்க்கட்சியாக வலம் வர முடியும் ..
ஏனெனில் சிலநேரம் காலம் கொடூரமாய் பழிதீர்க்கும் கரையேற முடியாமல் செய்துவிடும் .. 
..
விக்ரவாண்டியில் "சனநாயக" கடமையாற்றிய அனைவருக்கும் நன்றி 
முத்துவேல்கருணாநிதிஸ்டாலினுக்கு வாழ்த்துகள்
..
ஆலஞ்சியார்

Friday, July 12, 2024

நான் யார்..
தெரிந்தால் சொல்லுங்களேன்..
போகும் பாதையெல்லாம் 
பொய்களால் விளைந்திருக்க
போகுமிடம் தெரியாமல் 
தவிக்கிறேன்...
போய் சேர நேரமாகும் ..
அதுவரை ..
வந்ததை பற்றி தெரிந்துக்கொள்ள ஆசை..
..
நான்யாரென நானறியேன்..
நஞ்சுண்டு வந்தவனா  
நஞ்சை கக்க வந்தவனா..
வழிநெடுக வினை விதைக்க வந்தவனா..
பூச்செண்டு தொடுத்து 
மயக்கும் வித்தையறிந்தவனா..
சொல்லில் சுவை கூட்டி 
சொல்லவந்ததை உன் மூளையில் ஏற்றி 
மழுங்கடிக்க வந்தவனா..
பேராசை பிடித்து பித்தனாய்..
எல்லாம் எனக்கென்று..
எல்லாம் எனக்காதென்று..
விடாமல் பொறுக்கும் எச்சனா..
அடுத்தவர் உரிமையை அபகரித்து
அலங்கோலபடுத்தி ..
சிரித்துமகிழ்ந்து சீரழிக்க வந்தவனா..
எல்லாம் அறிவேனென்று எகத்தாளம்பேசி
ஏனெயர் சிந்தனையில் சிறுமைபட்டவனா..
நானறியேன்.. நான்யாரென்று
..
பொய்யும் புரட்டும் 
புகழ்ச்சியும் போதையும்
நீடித்திருக்காது..
வஞ்சனை கொண்ட நெஞ்சம் வாழாது..
நெஞ்சில் கசடும்.. 
நேர்மையில் பிறளும்..
அடுத்தவனை கெடுத்து வாழும் வாழ்வும்..
வக்கனையாய் சூது செய்து வீழ்த்தினாலும்
அறமே  வெல்லும் இனிதாய் இறுதியில்
பண்பில் உயர்ந்தோர் சொல்லில்
பெரியவர் தம் செயலில்
பகட்டில்லா வாழ்வில்
பக்கத்து மனிதனை நேசித்தலில்
முகம் பார்த்து.. 
குலம்பார்த்து 
ஈயாத மனதில்..
யாரென்ற அகந்தை கொள்ளாத நெஞ்சில்
வாழ்கிறேனா.. நான்..
..
இதுவரை..
சூழ்ச்சியால் யாரையும் வீழ்த்தியதில்லை 
யாசிப்பவனை .. 
முற்றத்திலிருந்து விரட்டியதில்லை..
கை கவளம் சோறாயினும் ..
பசியென்று வந்தவனுக்கு தராமல் விட்டதில்லை
அடுத்தவர் உரிமையை அபகரித்ததில்லை
பங்காளியோடு பகைமை பாராட்டியதில்லை
பக்கத்துவீட்டுகாரனின் காற்றை நான்  சுவாசித்ததில்லை 
பகட்டுகாட்டி பெருமை கொண்டதில்லை
இல்லையென்ற போதும் யாரிடமும் யாசித்ததில்லை..
பேராசை கொண்டு அலைந்ததில்லை..
புகழுக்கஞ்சி போர்வைக்குள் அடைந்ததுண்டு
அதிகம் பேசாமல் ..
தனிமையில் திரிந்ததுண்டு..
ஆன்றோர் சொல்லாயினும் அறமில்லையேல் 
சினம் கொண்டதுண்டு..
இனம் மொழி கலையென்றால் 
இருப்பதையும் இழப்பதுண்டு..

யார் நான்..
..
பிழைக்கதெரியாதவன் 
அகம்பாவத்தில் அலைகிறான் 
வாழதெரியாதவன்.. 
வக்கற்றவன்..
அதிகம் பேசும் கழனி பானை ..
திமிரால் அழிந்தவன் ..
வளைந்து நெளிந்து..
விட்டுகொடுக்க தெரியாது..
அடிப்படையையே தகர்க்கிறவன்..
புதுமை.. பேசும் பைத்தியம்..
நாத்திகன்.. 
இன்னும் இன்னும் 
நிறைய சொன்னார்கள்..
உண்மையில் நான்..
யார்..
யாமறியேன் ..
..
ஆலஞ்சியார்
"தோக்கு தூக்கியவன் தோக்கால் சாவான்" 
இதில் சாதியோ  மதமோ வருவதில்லை .. விதைத்தது தான் அறுவடை செய்ய முடியும் "அவரையை" விதைத்தால் துவரை வருமா என்ன.. கட்டபஞ்சாயத்து மிரட்டல் ஆள் பலம் இவைகளை வைத்துக் கொண்டு அரசியல் போர்வையில் ஒளிந்துக் கொண்டாலும் ஒரு நாள் காட்சிகள் மாறும்.. 
..
நாட்டாமைத்தனம், கட்ட பஞசாயத்து இவை மட்டுமே அரசியல் நுழைவதற்கான வழி/ தகுதி என சிலர் எண்ணுவதும்,  தன் சமூக மக்களை மூளைச்சலவை செய்து அவர்களுக்கு சில நன்மைகளை செய்துவிட்டு அவர்கள் "நெருப்பில்" குளிர்காய்வதும் நீண்ட நாள் பலன் தராது என்பதை காலம் நமக்கு பாடம் புகட்டிக் கொண்டே இருக்கிறது.. தமிழ்நாட்டில் மெச்சும்படியான சமூக அக்கறையுடன் கூடிய நிலை இருப்பதை சிலரால்/சிலதால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.. தனி நபர் பகை எப்படி ஒரு சமூகத்தின் மீதான கோபமாகும்.. எல்ல
 சமூகத்திலும் வெறுக்கதக்கவைகளும் வேண்டாதவைகளும் இருக்கதான் செய்யும் அதற்காக அந்தந்த சமூகங்களை குறைகூற முடியாது..
..
திராவிடம் தலித்களுக்கு எதிரானதைப் போல சித்தரிக்க முயல்கிறாரகள் .. உண்மையில் திராவிடம் தான் இன்றைய நல்ல நிலைக்கு காரணம் .. அம்பேத்கர் "தோற்ற" இடத்தில் வென்று காட்டியது திராவிட அரசியல்.. இன்னமும் வட மாநிலங்களில் தலித்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்.. இந்தியாவின் முதல் குடிமகனாக இருந்தாலும் "எல்லை"வரைதான் .. 
இங்கே தான் நாட்டிலேயே முதன்முறையாக அம்பேத்கர் சட்டக்கல்லூரி தொடங்கப்பட்டது பிறந்த மண்ணில் கூட முடியாமல் போனதை செய்து காட்டியது.. 
..
மதம்,சாதியம்,தீவிரவாதம் இவையெல்லாம் தேசியம்/போராளி,கோட்பாடு என்ற பெயரில் ஒளிந்துக் கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.. அரசியலமைப்பு தந்த,  தருகின்ற 
வரையறைக்குள் நின்று களமாடுங்கள் ,சனநாயகம் தந்திருக்கின்ற வரம்புக்குள் உங்கள் குரல்/செயல் ஓங்கி ஒலிக்கட்டும்.. முதலில் அரசியல் தெளிவும் புரிதலும் சமத்துவ மேன்மையும் வேண்டும்.. தமிழ்நாட்டில் திராவிடம் தவிர்த்த "தலித்" அரசியல் என்பது பாசிசத்தின் மற்றொரு வடிவம் அவவளவுதான்
..
ரௌடிகளுக்கு புரிகிற "பாஷையில்" சொல்வோமென ஆணையர் சொல்வதிலிருந்தே பாரபட்சமற்ற செயல்பாடு இருக்கும் என்பதை புரிந்துக்கொள்ளலாம்.. வீணாக "இரைச்சல்" போடாமல் அரசியல் செய்கிறேன் என்ற பெயரில் கண்டதையும் பேசாமல் இருந்தால் போதும்.. 
தமிழ் நாட்டில் தான் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கண்டதையும் பேச முடியும்..எதற்கும் எல்லை உண்டு அதற்குள் நின்று ஆடவும் ..
..
ஆலஞ்சியார் 
   

Tuesday, July 2, 2024

"வாள்" தூக்கி நின்னாப்பாரு!!
..
இனி ரட்சையில்லை.. Narendra Modi 
மோடி எனும் மாய பிம்பம் தகர்ந்து விழுந்ததை நாடே கண்டது.. உண்மையில் வாய்ஜாலம் நீண்டநாள் காக்காதென மோடி உணர்ந்த தருணம் .. Rahul Gandhi 
ராகுலை விளையாட்டுப் பிள்ளையென கருதி கேலிச் செய்தவர் ஆடிய ஆட்டம் கண்டு குலை நடுங்கி போய் நின்றதை வெகு மக்கள் ரசித்தார்கள்..
..
ராகுலின் உரையை நீக்கியதிலிருந்தே அவர்களின் பயம் தெரிகிறது.. இந்துக்களை புண்படுத்தியதாக சித்தரித்ததை இந்துக்களே ரசிக்கவில்லை..
பாஜகவை மோடியோ ஆர்எஸ்எஸ் மட்டுமே இந்து சமூகம் இல்லையென ஆணியடித்தார் ..அங்குதான் ராகுலின் போர்க்குணம் பெரும் பாய்ச்சல் கண்டு  சங்பரிவார்கள் அலற தொடங்கின.. biological born இல்லையென்றவரை அவர் ஆயுதம் கொண்டே சொருகிய விதம் தனக்கு ஆக்ரோஷம் மட்டுமல்ல நையாண்டியும் வருமென ராகுலின் சுவை கூடிய பேச்சு உணர்த்துகிறது.. கடவுளை கேட்டுதான் பணமதிப்பிழப்பு செய்தீர்களா என்றார்
போகிற போக்கில் சபாநாயகருக்கு குட்டு வைத்து நீதமாக நடந்துக் கொள்ளுங்கள் வளைந்து நெளியாதீர்கள் என்றது இதுவரை சபை கண்டிராத ஒன்று..
 ..
பத்து வருடங்கள் எதிர்க்கட்சியே இல்லாமல் கண்டதை உளறியும் தோன்றியதை நடத்தியும் பழகியவர் சரியான எதிரியை இப்போதுதான் பார்க்கிறார்.. நாடாளுமன்றத்திலிருந்து பாதியில் வெளியேறியது அவர் பதட்டமடைந்ததை வெளிச்சம் போட்டு காட்டியது ..  Mahua Moitra - মহুয়া মৈত্র  மஹூவாவும் ஆண்டிமுத்து ராசா
A Raja  சலங்கைக்  கட்டி ஆட நாடாளுமன்றம் எதிர்க்கட்சிகளின் "ஆட்சியில்" இருந்தது.. நான் வரகூடாதென்று நினைத்து இரண்டுமுறை தொகுதிக்கு வந்தீர்கள் உள்ளதில் 68 போனதென மஹூவா கிண்டலடித்தார் முஸ்லிம் மதரசா மட்டன் என ,M வரிசையில் பேச தெரிந்தவருக்கு மணிப்பூர் மட்டும் மறந்து போனது..
கடவுளாகவே இருந்துவிட்டு போங்கள் அதற்கான தகுதியில்லையே என ராசா சிலம்பமாட நாடாளுமன்றமே ஜனநாயமாகானது.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றியதெல்லாம் இனி நடக்காது என பிரதமர் மோடிக்கு புரிந்தது..
..
பிரதமரின் பதிலுரை  டீச்சரிடம் ஸ்கூல் பையன் "குறை"யைப்போல் இருந்தது .. 
ராகுலை குழந்தைதனமாக பேசுவதாகச் சொன்னவர் கிள்ளுறான் மாஸ்டர் என்பதைப்போல சபாநாயகரிடம் புகார் தருகிறார்.. நேற்று காப்பாற்றுங்கள் என அமித்சா கெஞ்சியதைப் போல.. உண்மையில் பிரதமர் தடுமாறுவதும் காங்கிரஸ் ஆட்சியை,குறைக்கூறி பிழைக்க நினைப்பதும் பொய்யான வாக்குறுதி தந்து எதிர்க்கட்சிகள் வெற்றிப் பெற்றதாக அதிலும் சில பெண்கள் ஏமாந்து வாக்களித்தாலும் கூறுவது அவரது அறியாமையை, பலவீனத்தை தகுதியின்மையை பொறுப்பின்மையை காட்டுகிறது .. உண்மையில் பலவீனமானவராக தெரிகிறார்
..
பாஜகவிற்கு புரிந்திருக்கிறது அதனால் தான் NDA கூட்டத்தில் ராகுலைப் போல நடந்துக்கொள்ளாதீர்கள் என்கிறார்.. 56இன்ச் என பெருமை பேசி மார்த்தட்டியவர் கூனிகுறுகி நின்றதை நாடு மெல்லிய புன்னகையில் கடந்தது..
 இனி நாடாளுமன்ற நடவடிக்கைகளில் தான்தோன்றித்தனம் இருக்காது பெரும்பான்மை இல்லாமல் இரு கட்சிகளில் தயவில் ஐந்தாண்டுகள் காலம் தள்ள வேண்டும் .. மோடியின் முகம் வாட தொடங்கியிருக்கிறது
 இனி சனநாயகம் "பூக்கும்"
..
ஆலஞ்சியார்

Saturday, June 8, 2024

Constitution of India..
மோடி தலை வணங்கினார் ..
இந்து ராஷ்ட்ரீயம் அமைப்போம் ராம ராஜ்ஜியம் என்று வெறியூட்டும் பேச்சுகளையே பேசி வந்தவர் இப்போது "அரசியலமைப்பு சட்டம்" தான் இந்தியாவின் உயிர்நாடி என தலை வணங்குகிறார்.. மோடிமீது நம்பிக்கை வரவில்லை மாறாக இயலாதவனின் "தந்திரம்" ஆக தெரிகிறது ..
..
ஆட்சி அமைக்கிறார் NDA வின் தலைவராக தேர்வு செய்யபட்டும் பாஜகவினரிடத்தில் "மலர்ச்சி" இல்லை ,மாறாக "இழவு" வீட்டின் அமைதி தெரிகிறது .. செய்வதறியாது கைகள் தானாக பிசைந்துக் கொள்கின்றன .. மதம்,ஆணவம் ,அகந்தை அடக்கபட்டிருக்கிறது.. இனி ஒவ்வொரு அடியும் அளந்து வைக்க வேண்டும்.. நிதிஷ்,நாயுடு கைகளில் கயிறு.. பொம்மையாய் மோடி .. "ஆட்டம்" ரசிக்கக்கூடிய இருக்குமா காலம் பதில் சொல்லும்..
..
இந்திய மக்களின் ஆன்மா அரசியலமைப்பில் இருக்கிறதென்பதை பத்தாண்டு காலம் மறந்து நின்றவர்..
தானே "ரட்சகன்" என்ற அகம்பாவம் புதிய இந்தியாவின் "கடவுள்" என்று பெரும் கூச்சல் இந்திய காதுகளில் சலிப்பை/சோர்வை தந்தது..ஆனால் ஆணவம் தலைக்கேறி எதிர்க்கட்சியே இல்லாத இந்தியா என்ற நிலையை அடைய எதையும் செய்ய துணிந்த மோடியின் கைகளை மக்கள் தங்கள் விரல் கொணடு கட்டியிருக்கிறார்கள்.. 
..
INDIA கூட்டணி அதிகாரம் கிடைக்காமல் போனாலும் "மகிழ்ச்சி" தெரிகிறது .. தோற்றவர்கள் ஏன் கொண்டாத்தில் ஈடுபடுகிறார்கள்
என தெரியவில்லை என்கிறார் மோடி .. இன்னமும் அவருக்கு புரியவில்லையா அல்லது புரிய்ததுபோல் நடிக்கிறாரா.. இந்தியாவில் எல்லா மதங்களும் சமமாக நடத்தப்பட வேண்டுமென உங்கள் வாயால் சொல்ல வைத்திருக்கிறார்களே அதற்காக தான் இந்த கொண்டாட்டம் .. மாட்டுக்கறியும் மத அரசியலும் செய்தவரை அரசியலமைப்பு முன் மண்டியிட வைத்ததால் இந்த கொண்டாட்டம்.. மாநிலத்திற்கு ஒரு பேச்சு, மாநிலங்களிடையே பகைமையை வளர்த்த "கயமைக்கு" கடிவாளம் போட்டிருக்கிறார்களே மக்கள் அதற்காக இந்த கொண்டாட்டம்.. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வருடம் ஒரு பிரதமர் என்றவர் பெரும்பான்மை அரசு வரவேண்டும் என்றவர் இன்று கூட்டாட்சி பற்றி பேசுகிறார்.. இதைதான் திமுக மாநிலங்களில் சுயாட்சி மத்தியிலே கூட்டாட்சி என்ற கொள்கை பிரகடனத்தை 50 ஆண்டுகளுக்கு முனபே சொன்னது.. 
..
வரும் ஆண்டுகளில் மோடி மாற்றப்படலாம் 
வேறொருவரை "ரட்சகன்" வேஷம் கட்டி நிறுத்தப்படலாம்.. ஏனெனில் தனிமனித துதி ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கு வேட்டு வைக்கும் என்பதை உணராதவர்கள் அல்ல .. பிராமணர்கள் நலனுக்கு தீங்கு வருமென்றால் தூக்கியெறிந்துவிடுவார்கள் .. 
தங்களின் "அடியாள்" விசுவாசமில்லாதவனெனில் குப்பையில் வீசவும் தயங்கமாட்டார்கள்.. மோடியின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்பதே உண்மை.. ரசிக்க இயலாத பொம்மலாட்டத்தின் காட்சிகள் இனி அரங்கேறும்.. எத்தனை இடர் வந்தாலும் இந்திய சனநாயகம் வலிமையானது தன்னை காததுக்கொள்ளும் வலிமை பெற்றது மக்கள் மிகத் தெளிவானவர்கள் வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் போனாலோ வரம்பு மீறினாலோ தூக்கியெறிய தயங்கமாட்டார்கள்..  சனநாயகம் வலிமைக் கொண்டது.. 
 ..
இனி NDA ஆட்சி 
(NDA) Naidu/Nitish Dependent Alliance 
..
ஆலஞ்சியார்

Wednesday, June 5, 2024

இந்திய சனநாயகம் வென்றது ..
பன்முகத்தன்மையை அகற்றி ஓரே தேசம், ஓரே மொழி, ஓரே கலாச்சாரமென்ற மோடியின் (பாஜக) கூற்றை புறந்தள்ளி மக்கள் தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள்.. சர்வாதிகாரத்தை நோக்கிய மோடியின் பயணத்தை, தான் "பிரம்மன்" எல்லாம் என்னால்தான் ஆனது என்ற அகந்தைக்கு மக்கள் மரண அடி கொடுத்து உலகின் மிகப் பெரிய சனநாயக நாட்டில் எவனும் எஜமானன் இல்லை எவனுக்கும் தலை வணங்கமாட்டோம் நாங்களே யாரென்று தீர்மானிப்பவர்கள் என மக்கள் உணர்த்தி ஆணவகாரர்களின் புறடியில் அடித்தமர்த்தியிருக்கிறார்கள்..
..
இங்கே பல பண்பாட்டு இழையோடும் மக்களின் இயல்பும் இணக்கமும், வேற்றுமையிலும் ஒற்றுமையாக வாழும் .. இங்கே எவ்வளவு  உயரத்தில் ஆடினாலும் சட்டென்று வீழ்த்திவிடும் வலிமை இந்திய விரல்களுக்கு உண்டு..
மதத்தை சாதியை,பிரிவினையை பேசி நீண்ட நாள் ஆட முடியாதென உணர்த்தியிருக்கிறது இந்த தேர்தல் .. பச்சையாக மத துவேஷத்தை பேசி பிறமொழிகளை இகழ்த்தி ,மொழி வெறியை ஊட்டி நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடித்து கண்ணீர்விட்டு கைகூடாதென்ற போது கடவுள் "அவதாரம்" எடுத்து அத்தனை சித்துவேலைகளையும் செய்து தானென்ற ஆணவத்தில் ஆடியவர்.. நேற்று முகம் வாடி "ராமரை" மறந்து ஜெகந்நாதனை துணைக்கழைக்கிறார்..
..
இந்திய கண்ட பிரதமரில் மிக மோசமானவர் என வரலாறு அடையாளம் கொள்ளும்.. எதையும் உருவாக்க முடியாமல் போனாலும் அழிக்காமலாவது இருந்திருக்கலாம்.. மக்கள் மூளையில் மதத்தை ஏற்றும் வித்தை தெரிந்தவர்க்கு அறிவை தரவேண்டும் அதற்கான வழிமுறைகளை செய்ய வேண்டுமென தெரியவில்லை..
56 இன்ச் மார்பு, எதிர்க்கட்சிகள் எல்லாம் ஊழல்வாதிகள், நான் மட்டுமே புனிதன், இஸ்லாமியர்கள் நிறைய குழந்தைப் பெற்றுக் கொள்கிறார்கள், மாட்டுக்கறி சாப்பிடாதே, பச்சைக் குழந்தைக்கு ஆக்ஸிஜன் இல்லையென்றாலும் பரவாயில்லை மாட்டுக்கு
 கொடு.. புல்டோசரை எப்படி பயன்படுத்த வேண்டுமென எங்களுக்குத்தான் தெரியும்  வாழும் வீட்டை இடித்து தள்ளு .. ஒரே இரவில் பண மதிப்பிழப்பு செய் மக்களை தெருவில் நிறுத்து ,கொரோனாவா கைதட்டு.. இதை தவிர வேறெதும் வளர்ச்சிக்கு வித்திட்டாரா கடவுளின் அவதாரம்.. மிக மோசமான கேவலமான பிரதமராக தொடர்ந்தார்.. தொடரலாம் ..
..
ஆனால் மக்கள் கடிவாளம் போட்டுவிட்டார்கள்.. எத்தனை காலம் இது தொடருமென தெரியாது காலம் தூக்கி எரியும் அப்போது தெரியும் .. PMCare ஊழலும் இதுவரை ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதும் விசாரிக்கப்படும்.. இனி ஊன்றுகோலோடுதான் இயங்கமுடியும்..
..
இங்கே மற்றொன்றும் சொல்ல வேண்டியிருக்கிறது.. தமிழ்நாட்டின் செங்குட்டுவன்.. ஆம் மு.க.ஸ்டாலின்.. வாய்ப்பே இல்லை கட்டம் சரியில்லை என்றார்கள்.. ஆனால் செங்குட்டுவனைப்போல சிறந்த ஆட்சியை மடடுமல்ல  சிறந்த ராஜதந்திரி என்றும் நிரூபித்திருக்கிறார் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் .. சொல்லி அடித்திருக்கிறார்.. தமிழ்நாட்டில் பாசிசத்தின் வேர்களில் வெந்நீர் ஊற்றியிருக்கிறார்..  40க்கு 40 வெற்றியை பெற்று தந்து தான் தேர்ந்த அரசியல்வாதி என்பதை தன்னை விமர்சிப்போருக்கு சொல்லியிருக்கிறார்..
..
ராகுல் மிகப்பெரிய முன்னெடுப்பு செய்து காங்கிரஸை சரியான பாதையில் நிறுத்தியிருக்கிறார்.. எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது.. பாஜகவின் எல்.கே.அத்வானி சொன்னதை நினைவுபடுத்துகிறேன்  winners comes second .. 👏
..
திரு மோடியின் முகத்தில் சிரிப்பை காணோம்.. அவருக்கே தெரியும் இருவரும் எப்படிப்பட்டவர்களென்று.. ஆனால் இங்கே எண்ணிக்கைதான் அதிகாரத்தை தீர்மானிக்கும் .. புதிய அரசுக்கு வாழ்த்துகள்..
இனி பொம்மலாட்டம்..
..
ஆலஞ்சியார்

Thursday, May 30, 2024

 "தமிழன் உறவுமுறை"
..
கோவில் கட்ட நிலம் தருகிறான் இஸ்லாமியன்.. புதுப் பள்ளிவாசல் திறந்தால் சீர் வரிசை  கொண்டு வருகிறான் இந்து என அறியப்படும் தமிழன்.. எப்படி இங்கே மட்டும் இப்படி.. மாமனாய் மச்சானாய் உறவாட முடிகிறது.. இங்கே  சாதியோ  மதமோ பெரும் தாக்கத்தை கொண்டுவராது.. காரணம் எளிது இவன் மீது திணிக்கப்பட்டதுதான் சாதியும் மதமும்.. 
..
குமரியில் தியானத்திற்கு  வருகிறார் மோடி அவர்கள்.. தன்னை இந்துத்துவவாதியாக அடையாளப்படுத்திக் கொண்டவர்
 இவர் தமிழகத்தின் வரலாற்றையோ மக்களின் பண்பாட்டையோ மொழியையோ அறியமாட்டார்.. விவேகானந்தர் குமரி பாறையில் தியானம் இருந்த போது மனோன்மணியம் சுந்தரனாய் சொன்ன வார்த்தையை நாமும் சொல்கிறோம்.. தமிழர்கள் இந்துக்கள் இல்லை (நாங்கள் இந்துக்கள் இல்லை என்றார்) ..
..
தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட "கோடபாடுகள்" மதமேறியதால் அதை கொண்டாட்டமாய் கொண்டாடும் மனநிலைக்கு தள்ளபட்டாலும் இயல்பாய் அவனின் பண்பாடு அவனை சுயம் "திரிச்சறிய" செய்கிறது.. அதனால் எல்லை மீறாமல் உறவுகளைச் சொல்லி மத வேற்றுமையை மறந்து இணைந்து நிற்கிறான்.. இங்குதான் "மதம் கொணடோர்" பதறுகிறார்கள்.. 
..
எங்கள் பெரிய தந்தை இருந்தவரை அவருக்குதான் கோவில் முதல் மரியாதை தந்தார்கள் அவரை "மதம்" கொண்டு வேறுபடுத்தி பார்க்வில்லை.. இது எல்லா இடங்களிலும் நடந்தது தான் நடப்பதுதான்.. திருமண அழைப்பிதழில் தாய்மாமன் மச்சான்,சித்தப்பா பெரியப்பா என்று அச்சிட்ட வரலாறு இரு மதத்தினரிடையே நடந்ததுதான் இப்போதும் உண்டு .. அப்படி ஒன்றுபட்டு வாழ்ந்த சமூகங்கள் இன்று "வெறியாட்டம்" கொள்கிறதோ என்ற அச்சம் எழாமல் இல்லை.. 
..
இங்கே தமிழ் மண்ணில் எத்தனை சதி செய்தாலும் உறவுமுறை மாறாது..மச்சானாய் மாமனாய் அப்பனாய் வாழும்.. சில விரும்பதகாதவைகள் கணக்கில் கொள்ள தேவையில்லை.. அவை கால விழுமங்களில் கரைந்துபோய்விடும்.. தமிழ் மண் சாதி மத கோட்பாடுகளை கடந்து மனிதத்தை, உலகுக்கு சொல்லும்.. அறிவின் நிழலில் சமுகம் மேம்படும், ஏனெனில் தமிழனின் பண்பாடும் பழக்கவழக்கமும் வழிகாட்டும் ஒளிவிளக்கு..  மொழியும் இலக்கியங்களும், வாழ்வியல் முறையும், இயற்கையானது 
..
மதங்களை கடந்த உறவுமுறையை யாராலும் எதுவும் செய்திட முடியாது.. தமிழ் மண்ணில் மதமேறியவர்களின் ஆசை நிறைவேறாது என்பதை தான் மேற்கண்ட நிகழ்வுகள் உணர்த்துகின்றன.. அண்ணன் தம்பியாய், வாழும் சமூகம் .. 
இதற்கு வேட்டுவைக்க யாராலும் இயலாது .. மகிழ்வோடு வாழ்வோம் ..
..
 மதம் = கர்வம், ஆணவம் 
மாச்சரியம்=பொறாமை ..
..
மத மாச்சரியம் கடந்து வாழ்வோம்..
..
ஆலஞ்சியார் 


Tuesday, May 7, 2024

இசையா?.. வரிகளா?.. சினிமா பாடல்களை முணுமுணுத்தவன் பாடல் வரிகளுக்கு தான் கைதட்டி நின்றான்.. இசை என்பது வரிகளை கொண்டு சேர்க்கும் படகு..
ஊஞ்சல் கட்டி ஆட இசை உதவும் பொருளுணர்ந்து சிரிக்கவும் கோபப்படவும் ,ஆர்ப்பரிக்கவும், லயிக்கவும், ஆசுவாசபடவும் இசை பெரும் பங்கை வகிக்கும்.. 
..
மொழியில்லாத இசை என்ன செய்யும்?.. அறிவை,சிந்தனையை தருமா.. எழுத்து இதயத்தை கிழித்து ஆழ பதிவிடும்.. 
"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை".. 
"முட்டா பயல எல்லாம் தாண்டவக்கோனே  காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே".. 
"போனால் போகட்டும் போடா".. 
"அந்திமழை பொழிகிறது"..
"காமன் கோவில் சிறை வாசம் 
காலை எழுந்தால் பரிகாசம்" ..  சொல்லிக் கொண்டே போகலாம்.. இசை அதற்கு கூடுதல் பலம் சேர்க்கும் பூமாலையாக்கும் 
..
கவிதைகள் தனியொருவனின் ஆக்கம்.. 
இசை பலரின் பங்களிப்பை சரியாக ஒருங்கிணைப்பதாகும்.. மொழி அறிவைத் தரும், 
இசை லயிக்க, மெய்மறக்க, கண்மூட,  மனதை இலகுவாக்க, மறக்க செய்யும், ..
இசையை சில நேரம் ரசிக்கலாம் 
மொழியோடு கூடிய இசை எப்போதும் ரசிக்கலாம்.. 
இசை ஆற்றுப்படுத்துவது 
மொழி அறிவுபடுத்துவது..
..
இசை மயக்கம் தரும்..
பாடலற்ற இசை ஒரு கட்டத்திற்கு மேல் ரசிக்க இயலாது புழுக்கம் தரும்..
எழுத்து எப்போதும் நின்று பேசும் ,அறிவைத் தரும் ..
..
ஆலஞ்சியார்


Monday, April 29, 2024

 சனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாமல் வேடபாளர்களை விலைபேசுவதும் மிரட்டுவதுமாய் தன் நம்பிக்கையை இழந்து கொண்டிருக்கிறது  பாஜக..
..
மிரட் தொடர்ந்து இந்தூர் .. காங்கிரஸ் வேட்பாளர் வாபஸ் இதில் காங்கிரஸும் பாடம் படிக்க வேண்டியிருக்கிறது.. வேட்பாளர் தேர்வில் அதீத எச்சரிக்கையோடு செயல்படவேண்டும்.. தேர்தல் தொடங்கிய போது 400 என்றவர்கள் மெல்ல உண்மை நிலை அறிந்து பதறுவதும் தன்நிலை மறந்து செயல்படுவதும் அரசியல் சூதாட்டத்தில் இறங்குவதும் அப்பட்டமான பயத்தின் வெளிபாடு..
..
இரண்டாம் கட்ட தேர்தல் முடிந்தவுடன் ஸ்டாலின் பிரதமராவார் என உள்துறை அமைச்சரே சொல்ல தொடங்கியிருப்பது கள நிஜம் பயமுறுத்தியிருக்கிறது.. எத்தனை சனநாயக வழிகளை அடைத்தாலும் புதிய வழியே உருவாக்கி சனநாயகம் மலரும் காரணம் மக்கள் சக்தி என்பது மகுடத்தை காலில் போட்டு மிதிக்கும் வலிமை கொண்டது .. விரல் கொண்டு புதிய புரட்சியை செய்யும் ஆற்றல் உண்டு .. மக்கள் மௌனமாய் அதிகார மோகத்தில் ஆடுவோரை சாய்த்து விடுவார்கள்.. 
..
எத்தனை தில்லுமுல்லு அதிகார மிரட்டல்கள், ஆட்சியாளர்களின் கோபம், அனைத்து அரசுதுறையும் வசப்படுத்தி எதிர்க்கட்சிகளை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினாலும் சனநாயகம் உயிர்த்தெழும்.. காரணம் இந்திய ஒன்றியம் சனநாயக வல்லமைக் கொண்டது .. சாமானியனே இங்கே அதிகாரம் கொண்டவன் அவனை அடித்தமர்த்த முடியாது .. பத்தாண்டுகள் தந்த வாய்ப்பை பாழாக்கிவிட்டு புதிய வேஷம் கட்டினால் நம்ப மாட்டார்கள் .. 
..
பாஜகவின் வீழ்ச்சி தொடஙகிவிட்டது.. இது அவர்களே ஏற்படுத்திக் கொண்டது .. தனிமனித துதிப்பாடல் எதிர்க்கட்சிகளை முடக்கும், மிரட்டல், சர்வாதிகாரம் தோரணையில் கதைப்பது மதத்தை கையில் எடுத்தாடியது, பிற மதத்தின் நம்பிக்கையை ஒடுக்க முயன்றது, எதை உடுத்த வேண்டும் உண்ண வேண்டும்  எழுதப்படாத சட்டமியற்றியது  என தொடர்ந்து அதிகார அச்சுறுத்தல்கள் மக்களை வேறு பாதை தேட செய்தது.. 
..
இனி சனநாயகம் மலரும்
..
ஆலஞ்சியார் 
தேர்தல் 2024 ..
மிகப் பெரிய சனநாயக நாட்டின் அதிகாரத்திற்கான போட்டி.. ஒவ்வொரு சாமானியனும் தன் வலிமையை உணர்த்துகின்ற தேர்தல்.. உங்கள் உரிமையில் தலையிடுவதல்ல நோக்கம் மாறாக சிலவற்றை ஞாபகபடுத்துவது தேவை என்பதால் இந்த பதிவு ..
..
கடந்த பத்தாண்டுகள் சனநாயக மரபுகள் மீறபட்டும் சர்வாதிகார எல்லையில் நின்று திமிரோடு தோள் உயர்த்தி இங்கே நானே யோக்கியன் என கூவும் மனிதர் மிகப் பெரிய பொய்யர்.. தன் கல்வி சான்றிதழிலேயே அவரின் முகம் நமக்கு தெரிந்துவிட்டது .. மக்களை மூளைச்சலவை செய்தால், மக்கள் மனதில் மதத்தை ஏற்றி வைத்தால், அவதார புருசரென புழுகினால் நம்பிவிடுவார்கள்  என்ற பழைய பாட்டை திரும்ப திரும்ப பாடி வரும் 
ஏமாற்றுக்காரன் ..
..
மக்கள் தரும் வரிப்பணம் சிலருக்கான தள்ளுபடியில் கரைவதும் தொடர்ந்து மக்கள் பிழியபடுவதும் உலகிலேயே இந்தியாவில் தான் பெட்ரோல் விலையில் கொள்ளை நடப்பதும் கண் கூடாக பார்க்கிறோம்.. சில முதலாளிகளுக்காக சிறு தொழில் முனைவோர் நடுரோட்டில் நிறுத்தப்பட்டு முதலாளியாக இருந்தவன் ஆட்டோ ஓட்டி குடும்பம் நடத்தும் அவலத்தை உருவாக்கியவன் நல்லவன் வேஷம் கட்டுகிறான்.. இங்கே ரௌடிகள் நல்லவனாகவும், கொள்ளையடித்தவன் பாஜகவில் சேர்ந்தால் புனிதராகவும் நொடியில் மாற்றபடும் விந்தை வேறெங்கும் கேட்டிராது, கண்டிராதது.. 
..
நமக்கானவர் யார்.. பலவேஷம்கட்டி பொய்யில் மூழ்கி பழங்கதை புரட்டைபேசி கடைசியில் சாதிமதவெறியை தூண்டும் அயோக்கியர்கள் அல்ல..மாறாக எளிமையாய் அனைத்து மக்களுக்காக பரிந்துபேசி துயர் துடைக்க ,அல்லல்படுவோர் ஆதிக்கத்தால் நசுக்கபடுவோர் விளிம்புநிலையோர், ஏழை எளியவர் வாழ்க்கை தரத்தை உயர்த்த சனநாயக மாண்புகளை மதிக்கும் நல்ல தலைவர் வேண்டும்.. நானிருக்கிறேன் என்ற நம்பிக்கையை நம்மில் விதைக்கும் நல்லவர் வேண்டும்.. 
..
பாசிசத்தின் கோரப்பிடியிலிருந்து 
தேசத்தை காக்க நம் விரல் கொண்டு போர் செய்வோம்.. பொய்யர்களை, PMCare என்ற பெயரில் நவீன கொள்ளையை, ஊழல் செய்தோரை புனிதபடுத்தி ஊழலை ஒழிக்கும் "மாமனிதரை" வீட்டுக்கு அனுப்புவோம்.. குடியரசு தலைவரையே நிற்க வைக்கும் தீண்டாமையை விரட்ட.. இந்திய ஒன்றியத்திற்கே வழிகாட்டும் உதயசூரியனுக்கு வாக்களிப்போம் 
I N D I A கூட்டணியை அரியணையேற்றுவோம்..  
..
சூன் 4ல் விடியும்..
..
ஆலஞ்சியார் 

Monday, April 15, 2024

இஃப்தார்.. Iftar..
நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இப்போதெல்லாம் தற்பெருமை பேசும் நிகழ்வாய் மாறிப்போனது.. இயலாதோர்,  பணிச்சுமையில் சமைக்க முடியாதோர்,வழிப்போக்கர், வழியில்லாதோருக்கானது  இப்போது தங்களின் பொருளாதார பலத்தை தங்கள் இறுப்பை அகந்தையை காட்ட ஒரு ஏற்பாடாக மாறிவிட்டது .. ஒவ்வொரு தங்கள் கூட்டத்தை கூட்டி நடததும் நாடகம் ரசிக்க முடியாத காட்சிகளால் இயல்பை இழக்கிறது..
 ..
அரசியல் களமாய், தங்கள் அமைப்புகளின் பலத்தை காட்டவும் நானும்/நாங்களும் இருக்கிறோம் என்பதை பறைசாற்றிய ஒரு வாய்ப்பு அது அவ்வளவுதான்..  "துதி"பாடவும், பழங்கதை பேசவும், இறுமாப்பில் தலைநிமிரவும் தங்கள் பிரசாரக் கூடமாய், தங்களை விளம்பரபடுத்திக் கொள்ளவும், பலத்தை காட்டவும் இப்போது கடும் போட்டி நிலவுகிறது.. 
..
எளியோர்க்கும்,  வழிப்போக்கர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய உணவு, புளிச்சேப்பகாரனுக்கு தரப்படுகிறது.. உண்மையில் இவர்களுக்கு "பக்தி" எல்லாம் இல்லை.. தற்பெருமை பேசவும் தங்களின் அடிவருடிகளின் புகழ்மாலையை கேட்டு ரசிக்கவும் பெருந்தொகை செலவு செய்து "புகழ்" மாலையை அணிந்துக் கொள்கிறார்கள்.. இதில் அறிஞர் பெருமக்களும் ஆன்றோரும் சேர்நது ஒத்தூதும் நிகழ்வுகள் காதுகளுக்கு எரிச்சலூட்டுகிறது..
..
எளிமையான மார்க்கம் ஆடம்பர, அடாவடிகளின் தற்சார்ப்பு குரலை ஓங்கி ஒலித்து நோன்பின் மகிமையை கேலிக்கூத்தாக்கிறது..
தொழிலதிபர்கள் அரசியல்வாதிகள், "சமூக" அமைப்புகளின் குஸ்தி சண்டை களமாக மாறிவிட்டது .. யார் பலம் பொருந்தியவர் என்பதை கணக்கீடு செய்யும் "களமாய் மாறிப்போனது ..
..
"பெருங்கூத்து"
..
ஆலஞ்சியார்



Friday, March 29, 2024

தமிழ்நாடு மக்கள் சோர்வாக இருப்பதாக பிரதம‌ர் தன் கட்சிகாரர்களிடம் சொல்கிறார்.. பாவம் பிரதமர் மோடி கலக்கமடைவது வெளிப்படையாக தெரிகின்றது  .. உண்மையில் தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் .. தமிழ்நாட்டு மக்கள் தெளிவானவர்கள் பகுத்தறிவும் திறன் கொண்டவர்கள்.. பொய்யர்களை சட்டென அடையாளம் காணும் அறிவை கொண்டவர்கள் .. ஏன் என கேள்வி கேள் என்று எங்கள் பெருங்கிழவன் பயிற்றுவித்து செனறிருக்கிறான்  மூடர்களை , வேடதாரிகளை இனங்காணும் தெளிவை பெற்றிருக்கிறோம்..
.. 
பெட்ரோல் விலை உயர்கிறதே என்றால் ஜெய் ஸ்ரீராம் சொல்லி ஓடி ஒளிந்தாலும் பிடரியில் அடித்து கேள்வி கேட்போம்.. வட மாநிலங்களுக்கும் சேர்த்தே வரி கொடுக்கும் எங்களை பார்த்து சோர்ந்து விட்டதாக சொல்வது புரிகிறது ..தமிழ்நாட்டின் வளங்களை அறிவை மனிததிறனை.  ஆற்றலை கண்டு பொறாமையோடு பார்க்கிறீர்.. இன்னும் பல பத்தாண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டைப்  போல குஜராத்தி உ.பியையோ உருவாக்க முடியாது காரணம் தமிழன் இயல்பாகவே அறிவில் சிறந்தவன் .. எதையும் எதிர்க்கொண்டு வெல்லும் ஆற்றல் கொண்டவன்.. அரசியல் அறிவுக் கொண்டவன் .. "இதனால் இதனை இவன் முடிக்கும்" என அறிந்தவன் அதனால் தான் பாசிசத்தை வளரவிடுவதில்லை..
..
மோடி அவர்களே வேறு எங்காவது வடமாநிலங்களில் வடை சுடுங்கள் இங்கே உங்கள் மகுடிக்கெல்லாம் மசியாது இந்த மண் .. உங்கள் நாடக வேசங்கள் சட்டென்று கலையும் இங்கே அரிதாரம் பூசி ராமனாக வேடங்கட்டினாலும் அந்திக்குள் வெளுத்துவிடும்.. உங்கள் பொய்கள் தோலூரிக்கப்படும்.. கடலுக்கடியில் தவமிருந்தாலும் நாடகம் என புரியும் உங்கள் மாயவித்தைகள் எடுபடாது
இங்கே நிழலையும் நிஜத்தையும் அறியும் விவேகம் உண்டு ..
..
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்  கையில் தமிழ் நாடு பாதுகாப்பாக இருக்கிறது ..அடிப்படை தேவையறிந்து கல்வி வேலைவாய்ப்பு பொருளாதார உயர்வு, என உலக பொருளாதார தன்னிறைவு நாடுகளோடு போட்டி போடும் வல்லமைப் பெற்ற தமிழ்நாடு சோர்வாக இருப்பதாக சொல்லும் போதே உங்களின் சோர்வும் பயமும் தெரிகிறது ..  திராவிடம் சிறப்பான வழிகாட்டுதலை இந்திய ஒன்றியத்திற்கு தருகிறது .. உங்கள் பொய் புரட்டு இதிகாச கதைகள், மாறுவேடம் இவையெல்லாம் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் பேரருளாளன் கலைஞரும் கட்டமைத்த தமிழ் மண்ணில் காட்டவேண்டாம் வேறு இடத்தில் நாடக வசனங்களை பேசவும் .. 
..
இது அறிவுடையோர் பூமி ..ஆழ அறிந்து தெளிவோடு சமத்துவத்தை சமூகநீதியை எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கிய அரசியலை முன்னெடுத்து செல்லும் திமுக.. தமிழர் நலன் தமிழ்நாடு முன்னேற்றம் இதில் எந்த சமரசமும் இன்றி உழைத்துக் கொண்டிருக்கும் எங்கள் முதலமைச்சர் முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் ..
பாஜக ஆளும் மாநிலங்களில் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றாத நீங்கள் இங்கே குரல் உயர்த்தி பேசுவதே தவறு ..
முடிந்தால் எப்படி ஆட்சி நடத்துவது, எப்படி எதிர்க்கட்சிகளின் குரலை கேட்பது, சனநாயக மரபுகளை பேணுவது, என தளபதி மு.க.ஸ்டாலினிடம்
பாடம் படியுங்கள் மோடி அவரகளே!.. 
தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டும் ,வெளிச்சம் தரும் உதயசூரியன் 
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்

Monday, March 18, 2024

பாஜகவும் பாமகவும் சேர்ந்ததில் வியப்பொன்றுமில்லை.. வியாபாரி நல்ல விலைக்கு விற்பதை தான் விரும்புவான் .. வெற்றி பெற முடியாது என தெளிவாகத் தெரிந்தும் மகனுக்கு குறைந்தபட்சம் மாநிலங்களவை உறுப்பினராக ஏற்பாடு செய்து விட்டு நல்லாட்சி என உளறுவதும் எப்போதும் போல் திராவிடக் கட்சிகளை குறைகூற வாய்ப்பு கிடைத்திருக்கிறது.. 
..
ராமதாஸ் எப்போதும் தன் நலம் மட்டுமே பேசும் அரசியல்வாதி.. தன் சாதியினரை தவறான பாதையில் வழிநடத்தும் பேராசைக்காரர்.. ஒவ்வொருமுறையும் சத்தியம் செய்வதும் அதை மீறுவதும் வாடிக்கையானதுதான் .. ஆரம்பகாலக் கட்டத்தில் சமூகநீதி பேசி தன் இருப்பை நிலை நிறுத்தியவர்.. உள்ளில் இருந்த சாதிய நிலைபாடு அவரையும் பாமகவையும் கரைக்க வைத்தது.. 
..
கடைசியில் மகனுக்கு மகுடம் சூட்ட முடியாமல் போனாலும் தலைப்பாகையாவது கிடைக்காதா என பிற  கட்சிகளிடத்தில் ஏறி இறங்கி நாடகம் நடத்த வேண்டிய சூழல் .. 
வட மாவட்டங்களில் பெரிதாய் வரவேண்டிய கட்சியை சுய நலத்திற்காக விலை பேசியும் வியாபாரியாகிப்போனார்..  பாமக இருக்குமிடம் தான் வெல்லும் என்ற மமதையை வீழ்த்தி காட்டுகிறேன் என சொல்லியடித்து வீழ்ச்சிக்கு வித்திட்டவர் தளபதியார் ..அன்று தொடங்கி இன்றுவரை விரக்தியில் தங்களை காத்துக் கொள்ள நல்ல வியாபாரியாய் அரசியல் செய்கிறார்.. பாஐக மூன்றாமிடத்திற்கு வர உதவலாமே தவிர அதனால் பாமகவிற்கோ வன்னிய சமூகத்திற்கோ பலனில்லை/பயனில்லை..
..
வரும் காலங்களில் பாமக லெட்டர்பேட் கட்சியாக மாறும்.. 
விதைத்ததைதானே கிடைக்கும்
..
ஆலஞ்சியார் 

Sunday, March 17, 2024

தேர்தல் 2024.. 
இந்திய ஒன்றியம் மிகப்பெரிய சனநாயக நாடென நம்பபடுகிறது ஆனால் இங்கே சாதி,மதம்,பணம், அதிகார மமதை, இவைகள் தான் தீர்மானிக்கிறது.. இதையும் மீறி சில நேரம்  சனநாயகம் மலரும்.. 
..
2024 மிக முக்கியமானது .. ஒரு பொய்யனின் காலட்சேபத்தை நம்பி, சனநாயகத்தின் தூண்கள் என இன்னமும் நாம் நம்பிக்கொண்டிருக்கிற ஊடகங்கள் 2ஜி எனும் மாய பிம்பத்தை ஊதி பெருக்கி, மிகச் சிறந்த அறிவாளியை அகற்றி ஆகச் சிறந்த அறிவிலியை அறியணையேற்றியதற்கு நாமே காரணம் .. ,"ஒரு கோமாளி அரண்மனைக்குச் சென்றால் அவன் அரசனாகி விடுவதில்லை. அரண்மனைதான் சர்க்கஸ் கூடாரமாகிவிடும்" என்ற துருக்கிய பழமொழி தான் ஞாபகம் வருகிறது .. 
..
கடந்த பத்தாண்டுகளில் அனைத்து சனநாயக மரபுகளும் மீறப்பட்டு,ஒற்றை கட்சி ஆட்சியை நோக்கி இந்தியாயென்னும்  பன்முகத்தன்மையை சிதைத்து மத துவேசங்களுக்கு நீரூற்றி மக்கள் மனதில் மெல்ல நஞ்சை கலந்து வேற்றுமையில் ஒற்றுமையை இல்லாதாக்க எண்ணும் பாசிசத்தின் பிடியிலிருந்து நாட்டை மீட்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்குண்டு.. நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் நமக்கு இன்னும் சரியான உரிமைகள் கிடைக்கவில்லையே என கோபம் இருக்கலாம், நீண்டநாள் கோரிக்கைகள் இன்னும் பரிசீலனை செய்ய படவில்லை என்ற ஆதங்கம் உண்டு ஆனாலும் காலத்தின் தேவை கருதி நம் நியாயமான கோபங்களை தள்ளி வைத்துவிட்டு இந்த சனநாயக அறப்போரில் சரியான முடிவை எடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது..
..
ராகுல் எனும் மனிதநேய தலைவன், தன் கூடவே இருந்த, இருக்கிற பாசிச கைக்கூலிகளால் வீழ்த்தப்பட்டும் மக்களை நம்பி இன்னமும் சனநாயகத்தின் வேர்களில் ஈரமிருக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையோடு மக்களை சந்திக்க பெரும் நெடும் பயணம் மேற்கொண்டு மக்களே மாபெரும் சக்திகள் என்ற நம்பிக்கையோடு சனநாயக சக்திகளோடு கைகோர்த்து வருகிறார்.. 
..
தமிழ்நாட்டிற்கு கிடைத்த விடியலைப் போல் இந்திய ஒன்றியமும் நல்லதொரு விடியலை பெற வேண்டும்,என்ற நல்ல நோக்கத்தில் 
"இந்தியா‌" அணியை உருவாக்கியதில் பெரும் பங்கு திமுகவிற்கே உண்டு .. #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்  மிகச்சிறந்த அரசியல் ஞானி,எதை எப்படி கையாள வேண்டுமென தன் ஆழ்ந்த அனுபவத்தால் சரியாக வடிவமைத்து மிகப்பெரிய சனநாயக போரை நடத்தி வென்று காட்ட எடுத்த முயற்சியின் பலன் இன்று 
"I N D I A"அணி பலம் பொருந்தியதாக பாசிச சக்திகளுக்கு எரிச்சல் ஊட்டுகிறது.. அரசின் அத்தனை துறைகளையும் ஏவி எதிர்ககட்சிளையும்,மிரட்டி பணிய வைக்க நினைத்தும் எல்லாம் கடந்து 2024 தேர்தலை சந்திக்கிறது.. நீதிமன்றம்,தேர்தல் ஆணையம் எல்லாம் மக்களின் நம்பிக்கை மெல்ல இழந்திடுமோ என் அச்சம் வந்தாலும் ஒட்டிக்கொண்டிருக்கிய நம்பிக்கைகள் துளிர்விடும் என்ற இயற்கையின் தியதி நம்மை போராட வைக்கிறது.. 
..
நாம் நம் சனநாயக கடமையை செய்வோம்.. இந்தியா தன் பன்முகத்தன்மை எப்போதும் இழக்காது மீண்டும் ஆற்றல் கொண்டது..மக்கள் தெளிவான தீர்க்கமான முடிவோடு காத்திருக்கிறார்கள்.. கோமாளியை வீட்டிற்கு அனுப்பிவிட்டு அறிவுசார் தலைவனை நாட்டின் பொறுப்பில் அமர்ந்து வார்கள்
..
அண்ணா கண்ட மாபெரும் தமிழ்க் கனவு போல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற மாபெரும் தலைவன் காணும் மாபெரும் இந்திய கனவு நிஐமாகும்..
வெல்லும் சனநாயகம்.. 
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்
பெண் குழந்தைகள் இறைவனின் ஒளி என்றார் மௌலானா ரூமி.. 
பெண் குழந்தைகள் இயற்கையின் ஒளி பேரின்பத்தின் ஒளி 
அன்பின் ஒளி 
அறிவின் ஒளி 
வாழ்வின் பெரும் வெளிச்சம் வாழ்வின் நற்செய்தி.. 
..
பத்து நாட்களாய் பேசவும், எழுதவும் அழவும், மறந்து பேரின்ப
பெருமகிழ்வில் , ஆம் என் மகளுக்கு இரண்டு பெண்குழந்தைகள் .. வாழ்வின் அதிகப்பட்ச இன்பம் எது தெரியுமா தான் பெற்றெடுத்த மகள் பெற்றெடுப்பது.. 
காலம் தந்த பரிசு
பெரும் மகிழ்வில் நான்.. நற்செய்தியை பகிர்ந்துக் கொள்வதில் பேரின்பம் கொள்கிறேன்.. 
.. 
ஆலஞ்சியார் ..
கடந்த சில நாட்களாக திமுகவிற்கு அறிவுரை சொல்லும் பதிவுகள் அதிகம் தென்படுகின்றன.. அதிக விமர்சனங்களையும் அதிக அறிவுரைகளையும் இலவசமாக பெறும் இயக்கம் திமுகதான் என்று நினைக்கிறேன்.. 
..
பொதுவான ஆதங்கங்கள் அதீத அக்கறைப்போல தோன்றினாலும், அரசியல் அறிவின் குறைபாடாகவே தெரிகிறது.. திமுக தன் செயல்பாடுகளில் எந்தளவு வெளிப்படைத்தன்மையை காட்டுகிறது அதே போல் மிகச் சரியான கையாளுதலையும் நகரத்தையும் செய்யும்.. சில நேரங்களில் அது தவிர்த்திருக்கலாமோ என் தோன்றும் ஆனால் காலம் அதை சரியென நமக்கு உணர்த்திய பாடங்கள் உண்டு.. 
.. 
திமுக இந்திய ஒன்றியத்தின் ஆக சிறந்த அரசியல் வரலாற்றை தேர்தல் கால நிகழ்வுகளை பதிவு செய்திருக்கிறது.. கட்சி எப்படி நடத்த படவேண்டும் என்ற பாடமெடுத்திருக்கிறது..  எல்லா காலகட்டத்திலும் கரைந்து போகும் என்றெண்ணியவர்களின் ஆசையில் மண் அள்ளி போட்டுயிருக்கிறது..  இந்தியாவிற்கே அரசியல் இலக்கணத்தை தந்த கட்சிக்கு நாம் பாடமெடுக்க தேவை இல்லை..
..
திமுக தனக்கான தலைவனை தயார் செய்கிற போதும், காலத்தின் வலிமை அறிந்து சிறந்த பண்பட்ட தலைவனை தரும்.. அப்படி பண்பட்ட தலைவர்களால் இயக்கம் இயங்கிக் கொண்டே இருக்கும்.. 
காலம் காத்திருந்து வலிமையான தலைவனை தந்திருக்கிறது .. பொறுமை, தெளிவு, அடர்த்தியான சூழலில் நிதானம் தவறாத செயல்பாடு எதை எப்படி எங்கனம் செய்திட வேண்டும் என்ற அறிவு இவையெல்லாம் ஐம்பத்தைந்து ஆண்டு பொதுவாழ்வு தந்திருக்கிறது.. ஏற்றதாழ்வுகளை கண்டு கலங்காது அஞ்சாமல் நடைபோடும் ஆற்றல் மிகு தலைவன்..  இந்திய ஒன்றியத்தின் அரசியல் வரலாற்றை மாற்றியமைக்க .. இனி திராவிட இயக்கத்தின் வரைவுகள் தான் மானுடத்தின் வளர்ச்சிக்கு வழிகாட்டும், பாசிசத்தின் சூழ்ச்சிகள் வீழ்த்தபட்டு புதிய வரலாறு படைக்கப்படும்.. அதை நோக்கிய பயணத்தை ஆற்றல்மிகு என் தலைவன் நடத்தி காட்டுவார்..
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்  
..
அனுபவமும், ஆற்றலும்,அரசியல் தெளிவும், நம் தலைவருக்கு உண்டு "இதனை இதனால் இவன்முடிக்கும்"என்றறிந்து வெகுமக்கள் தந்த "பொறுப்பை"உணர்ந்து பாசிசத்தின் அடி வேரை அறுக்க வந்த தலைவரின் நகர்த்தல் சரியான பாதையில் வெற்றி எனும் இலக்கை அடையும்.. அதுவரை வாய்மூடி மௌனம் காக்கவும் 
..
ஆலஞ்சியார் 

Saturday, March 9, 2024

பெண் குழந்தைகள் இறைவனின் ஒளி என்றார் மௌலானா ரூமி.. 
பெண் குழந்தைகள் இயற்கையின் ஒளி பேரின்பத்தின் ஒளி 
அன்பின் ஒளி 
அறிவின் ஒளி 
வாழ்வின் பெரும் வெளிச்சம் வாழ்வின் நற்செய்தி.. 
..
பத்து நாட்களாய் பேசவும், எழுதவும் அழவும், மறந்து பேரின்ப
பெருமகிழ்வில் , ஆம் என் மகளுக்கு இரண்டு பெண்குழந்தைகள் .. வாழ்வின் அதிகப்பட்ச இன்பம் எது தெரியுமா தான் பெற்றெடுத்த மகள் பெற்றெடுப்பது.. 
காலம் தந்த பரிசு
பெரும் மகிழ்வில் நான்.. நற்செய்தியை பகிர்ந்துக் கொள்வதில் பேரின்பம் கொள்கிறேன்.. 
.. 
ஆலஞ்சியார்.. 

Tuesday, February 20, 2024

♦️தமிழ் நாட்டில் உள்ள அரசு துறைகள் மொத்தம் 83. 

♦️அவற்றில் 48 துறைகள் #கலைஞர் உருவாக்கியது. 

♦️அதாவது, ஏறத்தாழ 60 சதவீத அரசு துறைகளை உருவாக்கியது கலைஞர். 

⭕அதே சமயம், அதிமுக உருவாக்கிய ஒரே துறை டாஸ்மாக்.

கலைஞர் உருவாக்கிய துறைகள் - 

1) Tamil Nadu Tourism Development Corporation
2) TNACTCL
3) Tamil Nadu Textbook Corporation Limited
4) Tamil Nadu Dairy Development Corporation Limited
5) Tamil Nadu Ceramics Limited
6) Tamil Nadu State Farms Corporation Limited
7) Tamil Nadu Sugarcane Farm Corporation Limited
😎 Tamil Nadu Goods Transport Corporation Limited
9) Dharmapuri District Development Corporation Limited
10) Tamil Nadu Civil Supplies Corporation
11) Tamil Nadu Spirit Corporation Limited
12) Tamil Nadu Graphite Limited
13) Cheran Engineering Corporation Limited
14) Tamil Nadu Theater Corporation Limited
15) AGROFED
16) CMRL
17) Tamil Nadu Transmission Corporation Limited
18) TNERC
19) TASCO
20) TNSAMB
21) TNFDC
22) TAHDCO
23) TAMCO
24) TUFIDCO
25) Tamil Nadu Transport Development Finance Corporation Limited
26) Tamil Nadu Power Finance and Infrastructure Development Corporation Limited
27) TNUIFSL
28) TAFCORN
29) TANTEA
30) TNBCGS
31) SIPCOT
32) SIDCO
33) ELCOT
34) TIDEL
35) TANCEM
36) TNSC
37) TWAD
38) CMDA
39) TNSCB
40) TNRDC
41) The Tamil Nadu Handicrafts Development Corporation Limited (Poompuhar)
42) Tamil Nadu Textile Corporation Limited
43) Tamil Nadu Zari Limited
44) Tamil Nadu Co-operative Textile Processing Mills Limited
45) Tamil Nadu Maritime Board
46) State Express Transport Corporation
47) Poompuhar Shipping Corporation Limited
48) Tamil Nadu State Transport Corporation Limited 

🔴இந்த நிறுவனங்களால் பயன்பெறாத தமிழ் குடும்பங்கள் இருக்க முடியாது. 

இன்று தமிழ் நாடு அரசு ஊழியர்கள் மொத்தம் 12 லட்சம் பேர். அதில் பாதிபேர் பெண்கள். அதாவது, ஒவ்வொரு 60 தமிழர்களுக்கும் ஒருவர் அரசு ஊழியராக இருக்கிறார். 

இதுதான் தமிழ் நாட்டின் வாழ்வாதாரம். இந்த தமிழ் நாடு அரசு பணிகளைத்தான் பிஜேபி கபளீகரம் செய்யத் துடிக்கிறது.

தமிழ்நாடு என்றால் #கலைஞர்
கலைஞர் என்றால் #தமிழ்நாடு

#கலைஞர்100
என்
வாழ்வியல் நெறியே..
என் வாழ்வின் ஒளியே!.. 
என் அகமே!..
என் ஜீவனின் நீரூற்றே..
..
என் 
வாழ்வின் வசந்தங்களும் 
ஒழுங்கும், உயிர்ப்பும் நீ..
காட்டாறாய் புரண்டோடியதை 
அழகிய ஓடையாய் மாற்றிய 
பேரன்பே..
ஏற்றதாழவை இன்முகத்தோடு எதிர்க்கொண்டு 
இல்லறம் சிறக்க 
வாழ்வின் புரிதலை தந்து 
மேம்பட பெரும் வெளிச்சம் தரும்
நடமாடும் பரம்பொருள் நீ..
என் வாழ்வின் தீபம் நீ..
..
புரிதலும்,பகிர்தலும் 
இல்லறத்தில் நல்லறமென வாழ்தலும் 
உறவின் பொருளாய் இருத்தலும்
நம் வாழ்வின் பேரன்பின் அடையாளம் ..
என் இணையே வாழ்க பல்லாண்டு
..
என் ஆறுமுகம் நீ..
என் ஆறாத வடு நீ..
என் இனிமை நீ.. 
என் எல்லாம் நீ..
வாழ்க! வாழ்க!! சிறந்து மகிழ்ந்து வாழ்க!!!
..



Thursday, February 8, 2024

Unfit எல் முருகன்..
டி.ஆர்.பாலு தன்னை தகுதியில்லாதவன் என சொன்னதை தான் தாழ்த்தப்பட்டவன் என்பதாலேயே சொன்னதாக முருகன் புலம்புகிறார் .. தேனி எம்பி ரவீந்திரநாத் கூட முதுகெலும்பு இல்லாதவன் என்று பேசினார் அப்போது யாரும் சாதியை தூக்கி கொண்டு வரவில்லை..
..
அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு தந்த இயக்கம் திமுக .. மலத்தை கையிலும் தலையிலும் சுமப்போருக்கான இட ஒதுக்கீட்டை தலையில் சுமந்து கொண்டாடுகிறேன் தொடர்ந்து பள்ளத்தில் கிடப்போரை படிகளில் ஏற்றிட செயல்படுவார பகுத்தறிவு துணைக்கொண்டு என மகிழ்ந்த தலைவன் கலைஞரின் இயக்கம்.. 
ஆ.ராசா மீது அவதூறு சொன்னபோது பொட்டல்காட்டில் பூத்தமலரென பனிக்குடத்தை காப்பதால் போல காத்த இயக்கம் 
இங்கே யார் எதிரி துரோகி என அறிந்து அவன் யாராக இருந்தாலும் முகத்திரையை கிழிப்பது எங்கள் சனநாயக கடமை
..
தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படுபவன் யாராக இருந்தாலும் அவன் எந்த சாதியினர் இருந்தாலும் கவலையில்லை தோலுரிப்போம் ..
பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டால் பதில் சொல்ல தெரியாமல் ஜெய்ஸ்ரீராம் என கூவுகிற உமக்கு இப்படிதான் பதிலடி கிடைக்கும் திருவள்ளுவனுக்கு காவி சாயம் பூசி திரிகிற உனக்கெல்லாம் என்ன தகுதி இருக்கிறது ..
..
தமிழ்நாடு துரோகிகளை இனங்கண்டு தூக்கியெறியும்  பதவிக்காக எங்கிருந்து யாரால் எந்த இயக்கத்தின் போனால், எப்பேர்ப்பட்ட தலைவர்களின் அரும் பணியால் சுயமரியாதையோடு திரிகிறோம்.. மிக மிக தாழ்த்தப்பட்டவனாக இந்த சமூகம் எப்படி வேட்டையாடியது தெருவிற்கு நுழைய முடியாத கொடுமைகளை தந்தது.. பெரியார் எனும் பெரும் மனிதனின் பெரும் உழைப்பால் திமிரோடு வலம் வர முடிகிறதே என்ற நன்றி உணர்வில்லாமல்  பேசி திரியும் தங்களை தகுதியில்லாத என்றழைப்பதில் என்ன தவறு 
#Unfit_L.Murugan
..
ஆலஞ்சியார்

Tuesday, February 6, 2024

மானமிகு சரண்யா தேவி..
அயலக திமுக குவைத் மகளிர் அணி செயலாளர் இன்று அயலக தமிழர் தினம் 2024 விழாவில் மாணபமை தமிழ்நாடு முதலமை‌ச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் விளையாட்டுத் துறைக்கான விருதும் 40கிராம் தங்க பதக்கமும் வழங்கப்பட்டது மகிழ்வான தருணம் .. குவைத்தில் சிறந்த துப்பாக்கி சுடும் வீராங்கனையாக வலம் வருபவர் முதல் பரிசை வென்றவர் தகுதியும் திறமையும் வாய்ந்தவருக்கு வழங்கப்பட்டிருப்பதில் பெரும் மகிழ்ச்சிக் கொள்கிறோம்..
..
நன்றாக நினைவிருக்கிறது குருதிக் கொடை நிகழ்ச்சியில் கைரளியர்கள்(மலையாளிகள்) கலந்துக்கொண்ட நிகழ்வு முடிந்து நமக்கான நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது அப்போது நண்பர் சிதம்பரம் தியாகராஜன் அழைத்துவந்து .. நான் தமிழச்சி என்று பெருமையாக சொன்னார்.. 
அப்போது அன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு விழாவை மாதாமாதம் ஒவ்வொரு அமர்வாக உலகத் தத்துவஞானி தந்தை பெரியார் நூலகம் சார்பில் நடத்திக்கொண்டிருந்த தருணம் .. அப்போது நூலகத்தின் காப்பாளர் எமது ஆசான் வளைகுடா பெரியார் செல்லபெருமாள் அவர்களிடத்தில்  அடுத்த அமர்வில் இவர் பேசட்டும் என்றேன் மகிழ்வு தெரிவித்தார் அப்படியாக தொடர்ந்த உறவு .. மேடையில் முழுவதுமாக பெண்களைக்கொண்டே ஒரு அமர்வு இப்படி எல்லா நிகழ்விலும் எங்களோடு 
 பயணித்து இன்று அயலக திமுக குவைத் மகளிர் அணிச் செயலாளராக உயர்ந்து நிற்கிறார்  ..
"நல்விதைகளை" விதைத்துக் கொண்டே இருப்போம் 
வாழ்க! திராவிடம் 
..
ஆலஞ்சியார்

Monday, January 8, 2024

திமுகவும் இஸ்லாமியர்களும்..
..
திமுக முஸ்லிம்களுக்கு எதுவுமே செய்யவில்லையென்றே வைத்துக் கொள்வோம்.. பாஜகவை காட்டி பயமுறுத்துகிறது, சிறைவாசிகளின் விடுதலை என்னானது என்ற கேள்விகளை தவிர்த்து வேறெதாவது திமுகவை வேண்டாம் என்பதற்கு காரணம் சொல்ல முடியுமா என்றால் இல்லை
..
சிறைவாசிகள் விடுதலையில் அதிமுக ஆட்சியில் எதாவது செய்ததா .. Lord ராமருக்கு இங்கு கட்டாமல் வேறெங்கு கட்டுவது என்ற ஜெயலலிதா,.. அதிமுக எதிர்த்து வாக்களித்திருந்தால் CAA சட்டமாகியிருக்காதென்ற சாதரண புரிதல் கூடவா இஸ்லாமிய சமூகத்திற்கு இல்லாமல் போனது .. இஸ்லாமியர்களுக்கு உள் ஒதுக்கீட்டை தந்த போது மதரீதியான இட ஒதுக்கீடு என விமர்சித்தவர் ஜெயலலிதா இது உச்சநீதிமன்றத்தில் நிற்காது என்று சொன்னவரும் அவர்தான்
..
உண்மையில் முஸ்லீம்கள் அரசு தரும் உதவிகளை உரிமைகளை சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்களா , அதற்காக 48 அமைப்புகள் முயற்சி செய்தார்களா, +2 ல் மதிப்பெண் 60% விழுக்காடுகளுக்கு மேல் வாங்கினால், மாநில அரசின் உதவி தொகை உண்டு 80% விழுக்காட்டிற்கு ஒன்றிய அரசின் உதவி தொகை உண்டு.. இந்த அமைப்புகளுக்கு எவ்வளவு உதவி தொகை என்றாவது தெரியுமா.. 2021/ 2022 கல்வி ஆண்டில் தகுதியுள்ள முஸ்லிம் மாணவச் செல்வங்கள் 63.5% விழுக்காடு உதவி தொகை பெறவில்லை அது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்வதுண்டா..
..
திமுக அரசு வழங்கிய சலுகைகள், உரிமைகள் போல் வேறெந்த அரசாவது செய்ததுண்டா.. அரசியல் காய்நகர்த்தல்களில் யாரோடு எப்போது கூட்டணி வேண்டுமென தீர்மானிக்கிறது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல அனைத்து சமுதாயத்திற்கும் தான் அரசு .. அயோத்திக்கு செல்லவிரும்பினால் உதவிகள் செய்யபடுமென அமைச்சர் சொன்னால் பாஜகவோடு இணைந்துவிட்டதாக சொல்பவர்கள் இஸ்லாமியர்களுக்கு அதேபோல் சலுகைகளை செய்கிற போது இநதுக்களில் பெரும்பான்மையினர் கூப்பாடு போடுவதில்லையே..
..
வேறெந்த ஆட்சியையும் விட திமுக ஆட்சிக்கு வரும் போதும் போராட்டம் கோரிக்கைகள் என எல்லோரும் தூக்கம் கலைத்து எழுகிறார்கள், இந்த அரசு செய்து தரும் என்ற நம்பிக்கையில் இப்போது கூட நீண்டநாள் சிறைவாசிகள் விடயத்தில் சட்டரீதியான நகர்வை திமுக செய்கிறது .. பாஜகவின் செயல்திட்டத்தை மிக சரியாக செய்கிற ஒரு கூட்டம் இஸ்லாமிய பொது சமுகத்தின் முன் கேவலப்பட்டு நிற்கிறது என்பது தான் உண்மை .. 
..
நிற்க..
திமுக எல்லோருக்குமான இயக்கம்,  நியாயமான கோரிக்கைகள் கேட்காமலேயே நிறைவேற்றி தரும் என்ற நம்பிக்கை முஸ்லிம்களிடத்தில் உண்டு ..  எத்தனை சூழ்ச்சி செய்தாலும் "பொய்கட்டி" ஆடினாலும், "நல்லிணக்க" நாடகம் போட்டாலும்  மதசார்பின்மை வேசம் கட்டினாலும் அரிதாரம் கலையும்.. ஏனெனில் உங்களிடம் உண்மை இல்லை ..  திமுக தவிர்த்து வேறெந்த கட்சியோடு நெருக்கம் காட்டினாலும் "விழலுக்கு இறைத்த நீர்"..
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்

Saturday, January 6, 2024

"தோழி" ..
வேலைக்கு செல்லும் மகளிருக்கான தங்கும் விடுதி ..
திராவிடத்தின் சாதனைகளில் மகத்தான ஒன்று .. வெளியூர்களில் இருந்து வந்து தங்கி பணிபுரிவோர் சந்திக்கும் பிரச்சனைகளில் தலையாயது தங்கும் விடுதிகள்..
கிடைப்பதறிது கிடைத்தாலும் பாதுகாப்பு குறைபாடுகள் வசதி குறைவு அதைவிட பெரும் செலவு இவையெல்லாம் வெளியூரிலிருந்து வந்து பணிபுரியும் மகளிருக்கே தெரியும் அவர்கள் படும் கஷ்டங்கள்..
..
மாதம் ₹300 என சொற்ப தொகையில் நவீன வசதிகளும் கூடிய தங்கும் அறைகள், குறைந்த சம்பளம் ஈட்டுவோர் பெரும்பகுதியை லேடீஸ் ஹாஸ்டலுக்கு செலவிட வேண்டியிருந்தது அதிலும் ஏகப்பட்ட அழுத்தங்கள் கட்டளைகள், நிபந்தனைகள்..  அரசின் மகிளிர் தங்கும் விடுதி பெரும் பெருட்செலவை குறைப்பதற்கு பாதுகாப்பை உறுதிசெய்கிறது..
..
கருணையுள்ள முதலமைச்சர் பெணகளுக்காக அவர்கள் வளர்ச்சி சமூகத்தில் அவர்களுக்குரிய அங்கீகாரம் கல்வி வேலைவாய்ப்பில் உறுதியான நிலை என தொடர்ந்து மகளிர் மேம்பாடொன்றே லட்சியமாக கொண்டு செயல்படுகிறார்.. கல்லூரி படித்தால் மாதாமாதம் உதவி தொகை .. குடும்ப பெண்களுக்கு உரிமை தொகை என மகளிர் மேம்பட்டிற்காக சிந்திப்பதும் செயல்வடிவம் தருவதும் "பெரியாரின்" வடிவமாய் நம் முதலமைச்சர் காட்சியளிக்கிறார்.. 
..
பெரியாரை, பேரறிஞரை, பேரறிவாளனை சரியாக உள்வாங்கி திராவிட இயக்கம் எதற்காக ,யாருக்காக தொடங்கபட்டதோ அதன் உணர்ந்து மகளிர் கல்வி தரம் உயர்ந்தால் நல்ல சமுதாயம் படைத்திடலாம் என தொடர்ந்து மகளிர்க்காக கட்டணமில்லாத பயணம் தொடங்கி கட்டணமில்லா கல்வி என தன்னம்பிக்கையோடு வாழ நல்ல சமூகத்தை உருவாக்க தொடர்நது திட்டங்கள் தீட்டி தமிழ்நாட்டை மிளிர செய்கிறார் .. 
M. K. Stalin 
Chief Minister of Tamil Nadu 
..
திமுக ஆட்சி
 #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் ஆட்சி 
மகளிர் முன்னேற்றத்திற்கான முகவரி 
"தோழி" பெயரிட்டு அழைப்பதில்லை தெரிகிறது திராவிடம்.. 
..
பாருக்குள்ள நல்ல நாடு எங்கள் தமிழ்நாடு.. 
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்