ஒன்றிய அமைச்சரின் உடல்மொழியும், கேள்வி கேட்பவரை அற்பமான ஜீவனாக காணும் திமிரும் எல்லாம் தெரிந்தததைப்போல் பேசும் அறிவிலித்தனமும் தொடர்கிறது..
எப்போதெல்லாம் தமிழகம் வருகிறாரோ அப்போதெல்லாம் அலட்சிய மனப்பான்மையோடு அதிகாரத் தோரணையில் நடந்துக்கொள்கிறார்..
..
காரணம் அவர் மக்களை சந்திக்க போவதில்லை அதிகாரம் தேடி வரும் என்பதுதான்.
எளிய கேள்வி கேட்டவர் தன் வியாபாரத்தில் ஏற்படும் சிக்கலை சொல்கிறார் இதில் எங்கிருந்து தவறு வந்தது மனம் வருந்தி மன்னிப்பு கேட்க இதில் என்ன அவ்வளவு தப்பை கண்டீர்கள்..
எதிர் குரலே இருக்க கூடாதென்கிறீரகளா.. எப்படி நாடாளுமன்றத்தில் "பொய்" "ஊழல்" (unparliament word)பேச கூடாத வார்த்தையாக்கி ஊழலை ஒழித்துவிட்டோம் என்கிறீரீகளே அதைப்போலவா.?
..
கோவை சட்டமன்ற உறுப்பினர் வானதி அவர்கள் அறிக்கை அவர்களின் சுயரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.. அன்னபூர்ணா முதலாளி தவறாக பேசிட்டேன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றாராம் அப்படியே இருக்கட்டும் அதை படம்பிடித்து பொதுவெளியில் காட்டி எங்கள் எதிர்த்தால் இதுதான் கதி என எச்சரிக்கை விடுகிறீரகளா.. களம் தவறாக தேர்வு செய்துவிட்டீர்.. வட மாநிலம் அல்ல இது தமிழ்நாடு..
இன்று உலகமே உங்களின் செயலைக் கண்டது . உங்களின் தனி நிறத்தை மக்கள் அடையாளம் கண்டார்கள்.. தமிழகத்தில் கேள்வி கேட்கிற மன உறுதியை திராவிடம் விதைத்திருக்கறது ..
..
1892ல் விக்டரி மஹாலில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு பரிநதுரைப்பதற்காக நடந்த கூடடத்தால் தஞ்சை ராமசாமி அய்யங்காரிடம் கேள்வி கேட்ட அறிவும் அனுபவமும் உண்டு.. ஆனால் எளியவரின் தலையை வெட்டி சந்தையில் வைக்கும் பழைய அகங்காரச் சிந்தனைதான்
இன்னும் தொடர்கிறது..ஆனால் அதிகாரம் கை விட்டுப்போனால் மன்னிப்பு என்கிற ஆயுதம் இருக்கிறது..
வல்லவனுக்காக வளைந்து கொடுக்க முடிகிற உங்களால் சிறு தொழில் முனைவோரின் குரலுக்கு செவி சாய்க்க மனமில்லை..
..
அன்னபூர்ணா "அதிபர்" ஆர்எஸ்எஸ்காரராம் இருக்கட்டும் பாதிக்கபடுகிறவன் பின்னால் நிற்பதும் குரல் கொடுப்பதைதான் எங்கள் பெருஙகிழவன் செய்தது, செய்ய பழக்கியது.. மாண்பமை அமைச்சர் அவர்களுக்கு தெரிந்தோ அல்லது தெரியாமல் நடந்திருத்தாலும்
வருத்தம் தெரிவிப்பதுதான் சரி ..
..
பாசிசத்தின் பற்கள் கொடூரமானது என்பதற்கு மற்றொரு அடையாளம் மன்னிப்பு கேட்கும் காணொளி
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment