Saturday, September 14, 2024

அண்ணா ..
எங்கள் அறிவுச் சுடரே
உன் ஒளியில் தான் 
நாங்கள் பயணிக்கிறோம் ..
எங்கள் 
கலங்கரை விளக்கே 
திசை தெரியாது நின்ற 
தமிழினத்தை கரை சேர்த்தது நீ
தம்பி படிக்கவா என்றாய் 
ஆளவே வந்துவிட்டோம் ..
ஒன்றியமே நம்மை எதிர்நோக்கிறது 
..
அண்ணா 
நீ..
எங்களுக்கு சுயமரியாதையை மட்டுமல்ல 
சுயமாய் எழவும் கற்றுதந்ததாய் 
உன் தமிழ் 
வீணை மீட்டிய இசை 
உன் சொற்களால் ஆடிய தாண்டவம்
ஆரியத்தை அதிரவைத்தது
திராவிட தருவே 
உன் நிழலில் தான் 
தமிழகம் இப்போதும் 
நிம்மதியாய்  நிற்கிறது 
..
"கடவுள் இல்லையென்றோ 
இருக்கிறாரென்றோ 
நான் சொல்லவில்லை அறிவோடு ஆற்றலோடு ஆபாசமற்ற கடவுள் இல்லென்று தான் கூறுகிறேன்",
எவ்வளவு தெளிவு..
ஆயுதம் கொண்டு இன்று சிலர் கலவரம் செய்ய துணியும் போதும் 
நீ கற்று தந்த அறிவாயுதம் கொண்டே வெல்கிறோம் ..
..
தமிழ்படித்தவனெல்லாம் சாமியாராய் போனான் என்றாார் பெரியார்.. அதைதான் எமக்கு
மாசுமறுவற்ற மதமில்லை, நமக்கு
இனப்பற்று மிக்க இலக்கியமில்லை நமக்கு 
அன்பு தரும்,அறிவூட்டும்
சமுதாயம் இ்ல்லை நமக்கு  மனிதர்கள் மனிததன்மையோடு வாழ சுதந்திரமில்லை என விளக்கம் தந்தாய்.. ஆட்சிகட்டிலில் ஏறியவுடன் 
தமிழ்நாடு தந்தாய் ..
நாடு கேட்கிறார் ஜாக்கிரதை என ராஜகோபால் டெல்லிக்கு சொன்னபோது 
இந்தியா நாடே அல்ல அதுவொரு துணைகண்டம் என புரியவைத்தாய் .. சுயமரியாதை திருமணத்தை தகாத உறவென உச்சநீதிமன்றம் சொன்னபோது 
அதை சட்டமாக்கி சரித்திரம் படைத்தாய் ..
..
உன் வழியில் தான் தமிழகம் செல்கிறது..திராவிட மாடல் நீ தந்தது தான் ..
திராவிட போர்வையில் ஒளிந்திருந்த மகோரா(எம்ஜிஆர்) கூட உன் நாமத்தை சொல்லிதான் பிழைக்க முடிந்தது .. உன் தமிழ் கேட்டு தமிழகம் சொக்கிநின்றது .. உன் தம்பிமார்கள் படைகஞ்சா போர்வீரர்கள் .. 
நீ மாபெரும் ஜனநாயக வாதி
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்றாய்
..
தமிழ் தேசியம் பேசி திரியும் சின்ன தம்பிகளே .. திராவிடம் என்றால்  கசக்கிறதா ..
இதோ எம் அண்ணா சொல்கிறார்

"திராவிடர் என்ற சொல் கற்பனையுமல்ல,கனவுலக கண்டுபிடிப்பும் அல்ல.
காவியத்தில் உள்ள சொல்..
வரலாற்றில் வருகிற பெயர்.
ஒரு சிறந்த இனத்தவரின் அரிய திருநாமம்.அந்தப் பெயரைத்தான் கூறுகிறோம் நாம்.
இந்தியன் என்பது போன்ற அரசியல் சூதாட்டப் பெயரையல்ல? எவ்வளவு தீர்க்கமான விளக்கம்..
..
இன்றைக்கு பாசிசத்தின் செயல்பாடுகளும், அவர்களின் தத்துபிள்ளைகளின் கூச்சல்களும் எமக்கு துருக்கிய பழமொழிதான் ஞாபகம் வருகிறது
"நரியிடமிருந்து மதத்தைக் கற்றுக் கொண்டவனுக்கு கோழியைத் திருடுவது தொண்டாகத் தோன்றும்".. ஆம் மதத்தை கையிலெடுத்து கலவரம் செய்ய முடியாத அமைதியாய் வாழும் தமிழகத்தை இரத்தபூமியாக்கி முடியாதா ..கலவர செய்து குளிர்காய முடியாதா என நினைக்கிறார்கள்  ஆனால் நாமோ அண்ணாவின் தம்பிகள் 
கலைஞரின் உடன்பிறப்புகள் அறிவாலயத்தில் வளர்ந்தவர்கள்
ஆம்
எம் அண்ணா எம்மை அறிவுக்கொண்டு வளர்த்தெடுத்தார் இப்போதும் 
சில கழிசடைகள் செய்யும் கீழ்தரமான செயல்கள் கண்டும் அமைதியாய் அறிவின் துணைக்கொண்டு வீழ்த்த நினைக்கிறோமே இதில் தான் அண்ணா வாழ்கிறார் ..
..
அண்ணா என்றால் 
தமிழ் 
அண்ணா என்றால் 
தமிழகம் 
அண்ணா என்றால் 
சுயமரியாதை
அண்ணா என்றால் 
வாசிப்பு 
அண்ணா தமிழர்களின் நாளம் 
..
வாழ்க! அண்ணாவின் புகழ் 
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment