Friday, July 12, 2024

"தோக்கு தூக்கியவன் தோக்கால் சாவான்" 
இதில் சாதியோ  மதமோ வருவதில்லை .. விதைத்தது தான் அறுவடை செய்ய முடியும் "அவரையை" விதைத்தால் துவரை வருமா என்ன.. கட்டபஞ்சாயத்து மிரட்டல் ஆள் பலம் இவைகளை வைத்துக் கொண்டு அரசியல் போர்வையில் ஒளிந்துக் கொண்டாலும் ஒரு நாள் காட்சிகள் மாறும்.. 
..
நாட்டாமைத்தனம், கட்ட பஞசாயத்து இவை மட்டுமே அரசியல் நுழைவதற்கான வழி/ தகுதி என சிலர் எண்ணுவதும்,  தன் சமூக மக்களை மூளைச்சலவை செய்து அவர்களுக்கு சில நன்மைகளை செய்துவிட்டு அவர்கள் "நெருப்பில்" குளிர்காய்வதும் நீண்ட நாள் பலன் தராது என்பதை காலம் நமக்கு பாடம் புகட்டிக் கொண்டே இருக்கிறது.. தமிழ்நாட்டில் மெச்சும்படியான சமூக அக்கறையுடன் கூடிய நிலை இருப்பதை சிலரால்/சிலதால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.. தனி நபர் பகை எப்படி ஒரு சமூகத்தின் மீதான கோபமாகும்.. எல்ல
 சமூகத்திலும் வெறுக்கதக்கவைகளும் வேண்டாதவைகளும் இருக்கதான் செய்யும் அதற்காக அந்தந்த சமூகங்களை குறைகூற முடியாது..
..
திராவிடம் தலித்களுக்கு எதிரானதைப் போல சித்தரிக்க முயல்கிறாரகள் .. உண்மையில் திராவிடம் தான் இன்றைய நல்ல நிலைக்கு காரணம் .. அம்பேத்கர் "தோற்ற" இடத்தில் வென்று காட்டியது திராவிட அரசியல்.. இன்னமும் வட மாநிலங்களில் தலித்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்.. இந்தியாவின் முதல் குடிமகனாக இருந்தாலும் "எல்லை"வரைதான் .. 
இங்கே தான் நாட்டிலேயே முதன்முறையாக அம்பேத்கர் சட்டக்கல்லூரி தொடங்கப்பட்டது பிறந்த மண்ணில் கூட முடியாமல் போனதை செய்து காட்டியது.. 
..
மதம்,சாதியம்,தீவிரவாதம் இவையெல்லாம் தேசியம்/போராளி,கோட்பாடு என்ற பெயரில் ஒளிந்துக் கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.. அரசியலமைப்பு தந்த,  தருகின்ற 
வரையறைக்குள் நின்று களமாடுங்கள் ,சனநாயகம் தந்திருக்கின்ற வரம்புக்குள் உங்கள் குரல்/செயல் ஓங்கி ஒலிக்கட்டும்.. முதலில் அரசியல் தெளிவும் புரிதலும் சமத்துவ மேன்மையும் வேண்டும்.. தமிழ்நாட்டில் திராவிடம் தவிர்த்த "தலித்" அரசியல் என்பது பாசிசத்தின் மற்றொரு வடிவம் அவவளவுதான்
..
ரௌடிகளுக்கு புரிகிற "பாஷையில்" சொல்வோமென ஆணையர் சொல்வதிலிருந்தே பாரபட்சமற்ற செயல்பாடு இருக்கும் என்பதை புரிந்துக்கொள்ளலாம்.. வீணாக "இரைச்சல்" போடாமல் அரசியல் செய்கிறேன் என்ற பெயரில் கண்டதையும் பேசாமல் இருந்தால் போதும்.. 
தமிழ் நாட்டில் தான் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கண்டதையும் பேச முடியும்..எதற்கும் எல்லை உண்டு அதற்குள் நின்று ஆடவும் ..
..
ஆலஞ்சியார் 
   

No comments:

Post a Comment