Sunday, March 17, 2024

தேர்தல் 2024.. 
இந்திய ஒன்றியம் மிகப்பெரிய சனநாயக நாடென நம்பபடுகிறது ஆனால் இங்கே சாதி,மதம்,பணம், அதிகார மமதை, இவைகள் தான் தீர்மானிக்கிறது.. இதையும் மீறி சில நேரம்  சனநாயகம் மலரும்.. 
..
2024 மிக முக்கியமானது .. ஒரு பொய்யனின் காலட்சேபத்தை நம்பி, சனநாயகத்தின் தூண்கள் என இன்னமும் நாம் நம்பிக்கொண்டிருக்கிற ஊடகங்கள் 2ஜி எனும் மாய பிம்பத்தை ஊதி பெருக்கி, மிகச் சிறந்த அறிவாளியை அகற்றி ஆகச் சிறந்த அறிவிலியை அறியணையேற்றியதற்கு நாமே காரணம் .. ,"ஒரு கோமாளி அரண்மனைக்குச் சென்றால் அவன் அரசனாகி விடுவதில்லை. அரண்மனைதான் சர்க்கஸ் கூடாரமாகிவிடும்" என்ற துருக்கிய பழமொழி தான் ஞாபகம் வருகிறது .. 
..
கடந்த பத்தாண்டுகளில் அனைத்து சனநாயக மரபுகளும் மீறப்பட்டு,ஒற்றை கட்சி ஆட்சியை நோக்கி இந்தியாயென்னும்  பன்முகத்தன்மையை சிதைத்து மத துவேசங்களுக்கு நீரூற்றி மக்கள் மனதில் மெல்ல நஞ்சை கலந்து வேற்றுமையில் ஒற்றுமையை இல்லாதாக்க எண்ணும் பாசிசத்தின் பிடியிலிருந்து நாட்டை மீட்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்குண்டு.. நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் நமக்கு இன்னும் சரியான உரிமைகள் கிடைக்கவில்லையே என கோபம் இருக்கலாம், நீண்டநாள் கோரிக்கைகள் இன்னும் பரிசீலனை செய்ய படவில்லை என்ற ஆதங்கம் உண்டு ஆனாலும் காலத்தின் தேவை கருதி நம் நியாயமான கோபங்களை தள்ளி வைத்துவிட்டு இந்த சனநாயக அறப்போரில் சரியான முடிவை எடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது..
..
ராகுல் எனும் மனிதநேய தலைவன், தன் கூடவே இருந்த, இருக்கிற பாசிச கைக்கூலிகளால் வீழ்த்தப்பட்டும் மக்களை நம்பி இன்னமும் சனநாயகத்தின் வேர்களில் ஈரமிருக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையோடு மக்களை சந்திக்க பெரும் நெடும் பயணம் மேற்கொண்டு மக்களே மாபெரும் சக்திகள் என்ற நம்பிக்கையோடு சனநாயக சக்திகளோடு கைகோர்த்து வருகிறார்.. 
..
தமிழ்நாட்டிற்கு கிடைத்த விடியலைப் போல் இந்திய ஒன்றியமும் நல்லதொரு விடியலை பெற வேண்டும்,என்ற நல்ல நோக்கத்தில் 
"இந்தியா‌" அணியை உருவாக்கியதில் பெரும் பங்கு திமுகவிற்கே உண்டு .. #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்  மிகச்சிறந்த அரசியல் ஞானி,எதை எப்படி கையாள வேண்டுமென தன் ஆழ்ந்த அனுபவத்தால் சரியாக வடிவமைத்து மிகப்பெரிய சனநாயக போரை நடத்தி வென்று காட்ட எடுத்த முயற்சியின் பலன் இன்று 
"I N D I A"அணி பலம் பொருந்தியதாக பாசிச சக்திகளுக்கு எரிச்சல் ஊட்டுகிறது.. அரசின் அத்தனை துறைகளையும் ஏவி எதிர்ககட்சிளையும்,மிரட்டி பணிய வைக்க நினைத்தும் எல்லாம் கடந்து 2024 தேர்தலை சந்திக்கிறது.. நீதிமன்றம்,தேர்தல் ஆணையம் எல்லாம் மக்களின் நம்பிக்கை மெல்ல இழந்திடுமோ என் அச்சம் வந்தாலும் ஒட்டிக்கொண்டிருக்கிய நம்பிக்கைகள் துளிர்விடும் என்ற இயற்கையின் தியதி நம்மை போராட வைக்கிறது.. 
..
நாம் நம் சனநாயக கடமையை செய்வோம்.. இந்தியா தன் பன்முகத்தன்மை எப்போதும் இழக்காது மீண்டும் ஆற்றல் கொண்டது..மக்கள் தெளிவான தீர்க்கமான முடிவோடு காத்திருக்கிறார்கள்.. கோமாளியை வீட்டிற்கு அனுப்பிவிட்டு அறிவுசார் தலைவனை நாட்டின் பொறுப்பில் அமர்ந்து வார்கள்
..
அண்ணா கண்ட மாபெரும் தமிழ்க் கனவு போல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற மாபெரும் தலைவன் காணும் மாபெரும் இந்திய கனவு நிஐமாகும்..
வெல்லும் சனநாயகம்.. 
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்

No comments:

Post a Comment