அதிகாரம்..
சிலர்
வந்தவுடன் நானே தலைவன் என்கிறார்கள்..
அடிப்படை புரிதல் இல்லாமல்
பதவி ஆசை திராவிடத்தை கிண்டல் செய்ய தூண்டுகிறது..
தலைவர் கலைஞரை, வசைபாடினால்
அல்லது வசைபாடுபவனை கொண்டாடினால் கால் ஊன்றலாமென கனவு காண்கிறார்கள்..
கூட இருக்கும் கூட்டம்
உன் உழைப்பை பார்த்து வந்ததில்லை கேளிக்கைகளில் வந்தவை..
சிலர் விரக்தியில் நிற்கிறார்
பலர் அறியாமையில்.. கொள்கையோ,கோட்பாடோ
அரசியல் அறிந்தோ இல்லை
..
பாசிசத்தை முதுகில் சுமந்து
"ஆபத்பாந்தவன்" வேடம் போடுகிறார்கள் நேர் நிற்க முடியாத
கோழைத்தனமானவர்கள்..
நிற்பது கூட அடுத்தவரின் ஊன்றுகோலில் ..
பலவீனமானவர்கள் தான்
பரிந்துரைக்கு கால்கடுக்க நிற்பார்கள்..
பாவம்
அரசு இயலும் தெரியவில்லை..
அரசியலும் தெரியவில்லை
..
அரிதாரம் பூசி
ரட்சகன் வேடம் காட்டுபவன்.
அடித்தளமே இல்லாமல் அடுக்குமாடிக்கு ஆசைபடுகிறான்..
ஆசை வார்த்தைகளும் தன் விசிறிகளின் அறிவிலித்தனமும் மூலதனமாய் கொண்டு ஆடுகிறான் கோணலாய்..
யதார்த்தம் என்ன வென்று அறியவில்லை..
அறியும் அறிவுமில்லை..
இவர்கள் எங்கள் எதிரிகள் அல்ல..
ஏனெனில் எங்களை எதிரியாய் நினைக்க கூட தகுதி வேண்டும்..
..
இங்கே அடிமட்ட தொண்டனுக்கு உள்ள அரசியல் தெளிவு கூட
"தலைமை"பதவிக்கு ஆசைப்படும்
குறைமதியாளனுக்கில்லை..
பாசிசத்தின் சூழ்ச்சி வலையில் விழுந்த மீன்..
கருவாட்டுக்கு கூட உதவாது..
அடுத்தவர் உழைப்பில்,
தயவில்,
திமிரில்,
அதிகாரத்திற்கு ஆசைபட்டால்
உள்ளதும் போகும்..
..
அரிதார திமிரில் ..
"ராஜா" வேஷம்
கலையும் போதும் தெரியும் சுயரூபம்..
ஏணிகள் நகர்ந்தால் விழ நேரிடும் போது அடி பலமாய் விழும்..
எழ முடியாமல் போகும்..
எங்கள் எதிரியாவதற்கு முன்
தகுதியை வளர்த்துக்கொள்..
"கொள்ள" பேரை பார்த்துவிட்டோம்..
பூச்சாண்டி காட்டுவதை விடுத்து பிழைப்பை பார்..
ராஜாவாக முடியாது..
ஆகவே முடியாது..
..
நாங்கள் கலைஞரின்
"பயமறியா" தம்பிகள்..
கொள்கை தெளிவும் உறுதியும் கொண்டவர்கள்..
கட்சியையோ எங்கள் தலைவரையோ சிறுமைபடுத்த நினைத்தாலே சினம் கொள்பவர்கள்.. எங்கள் பலம்
எங்கள் நம்பிக்கையிலும் உறுதியிலும் உழைப்பிலும்,நேர்மையிலும் இருக்கிறது..
பாசாங்கு செய்வோரை கண்டு "எள்ளல்" கொள்வோம் ..
..
முதலில் ஊன்றுகோல் இல்லாமல் நடை பழகு!.
பிறகு..
நீ .. எதிரியா என நாங்கள் முடிவு செய்கிறோம்..
ஒரு திசைக்கே (கிழக்கு)
உம்மால் தாக்குபிடிக்க முடியாது..
எங்கள்
"ஆறு" விசையை கண்டால் அவ்வளவுதான்.. மக்கள் முன்
"நடித்தது" போதும் நடையைகட்டு..
..
இனி உதயமாகும் இளஞ்சூரியன்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment