Friday, March 29, 2024

தமிழ்நாடு மக்கள் சோர்வாக இருப்பதாக பிரதம‌ர் தன் கட்சிகாரர்களிடம் சொல்கிறார்.. பாவம் பிரதமர் மோடி கலக்கமடைவது வெளிப்படையாக தெரிகின்றது  .. உண்மையில் தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் .. தமிழ்நாட்டு மக்கள் தெளிவானவர்கள் பகுத்தறிவும் திறன் கொண்டவர்கள்.. பொய்யர்களை சட்டென அடையாளம் காணும் அறிவை கொண்டவர்கள் .. ஏன் என கேள்வி கேள் என்று எங்கள் பெருங்கிழவன் பயிற்றுவித்து செனறிருக்கிறான்  மூடர்களை , வேடதாரிகளை இனங்காணும் தெளிவை பெற்றிருக்கிறோம்..
.. 
பெட்ரோல் விலை உயர்கிறதே என்றால் ஜெய் ஸ்ரீராம் சொல்லி ஓடி ஒளிந்தாலும் பிடரியில் அடித்து கேள்வி கேட்போம்.. வட மாநிலங்களுக்கும் சேர்த்தே வரி கொடுக்கும் எங்களை பார்த்து சோர்ந்து விட்டதாக சொல்வது புரிகிறது ..தமிழ்நாட்டின் வளங்களை அறிவை மனிததிறனை.  ஆற்றலை கண்டு பொறாமையோடு பார்க்கிறீர்.. இன்னும் பல பத்தாண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டைப்  போல குஜராத்தி உ.பியையோ உருவாக்க முடியாது காரணம் தமிழன் இயல்பாகவே அறிவில் சிறந்தவன் .. எதையும் எதிர்க்கொண்டு வெல்லும் ஆற்றல் கொண்டவன்.. அரசியல் அறிவுக் கொண்டவன் .. "இதனால் இதனை இவன் முடிக்கும்" என அறிந்தவன் அதனால் தான் பாசிசத்தை வளரவிடுவதில்லை..
..
மோடி அவர்களே வேறு எங்காவது வடமாநிலங்களில் வடை சுடுங்கள் இங்கே உங்கள் மகுடிக்கெல்லாம் மசியாது இந்த மண் .. உங்கள் நாடக வேசங்கள் சட்டென்று கலையும் இங்கே அரிதாரம் பூசி ராமனாக வேடங்கட்டினாலும் அந்திக்குள் வெளுத்துவிடும்.. உங்கள் பொய்கள் தோலூரிக்கப்படும்.. கடலுக்கடியில் தவமிருந்தாலும் நாடகம் என புரியும் உங்கள் மாயவித்தைகள் எடுபடாது
இங்கே நிழலையும் நிஜத்தையும் அறியும் விவேகம் உண்டு ..
..
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்  கையில் தமிழ் நாடு பாதுகாப்பாக இருக்கிறது ..அடிப்படை தேவையறிந்து கல்வி வேலைவாய்ப்பு பொருளாதார உயர்வு, என உலக பொருளாதார தன்னிறைவு நாடுகளோடு போட்டி போடும் வல்லமைப் பெற்ற தமிழ்நாடு சோர்வாக இருப்பதாக சொல்லும் போதே உங்களின் சோர்வும் பயமும் தெரிகிறது ..  திராவிடம் சிறப்பான வழிகாட்டுதலை இந்திய ஒன்றியத்திற்கு தருகிறது .. உங்கள் பொய் புரட்டு இதிகாச கதைகள், மாறுவேடம் இவையெல்லாம் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் பேரருளாளன் கலைஞரும் கட்டமைத்த தமிழ் மண்ணில் காட்டவேண்டாம் வேறு இடத்தில் நாடக வசனங்களை பேசவும் .. 
..
இது அறிவுடையோர் பூமி ..ஆழ அறிந்து தெளிவோடு சமத்துவத்தை சமூகநீதியை எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கிய அரசியலை முன்னெடுத்து செல்லும் திமுக.. தமிழர் நலன் தமிழ்நாடு முன்னேற்றம் இதில் எந்த சமரசமும் இன்றி உழைத்துக் கொண்டிருக்கும் எங்கள் முதலமைச்சர் முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் ..
பாஜக ஆளும் மாநிலங்களில் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றாத நீங்கள் இங்கே குரல் உயர்த்தி பேசுவதே தவறு ..
முடிந்தால் எப்படி ஆட்சி நடத்துவது, எப்படி எதிர்க்கட்சிகளின் குரலை கேட்பது, சனநாயக மரபுகளை பேணுவது, என தளபதி மு.க.ஸ்டாலினிடம்
பாடம் படியுங்கள் மோடி அவரகளே!.. 
தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டும் ,வெளிச்சம் தரும் உதயசூரியன் 
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்

No comments:

Post a Comment