ஆந்திரம் இஸ்லாமியர்களுக்கு 5% விழுக்காடு தந்தது உச்சநீதிமன்றம் செல்லாது என்றது.. தமிழ்நாடு இஸ்லாமியர்களுக்கு 3.5% விழுக்காடு தந்தது உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.. அதிமுக வன்னியர்களுக்கு 10.5% விழுக்காடு உள் ஒதுக்கீடு தந்தது உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.. அருந்ததியர்களுக்கு 3% உள்விழுக்காடு திமுக தந்தது உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களும் பின்பற்றலாம் என தீர்ப்பை தந்திருக்கிறது.. பீகாரில் இட ஒதுக்கீட்டை 65%ஆக உயர்த்தியதை ரத்து செய்தது..
..
காரணம் திராவிடம் எதையும் சரியாக அலசி ஆராய்ந்து சட்டத்தின் நிறை குறைகளை ஆய்ந்து எதுவெல்லாம் சட்டத்திற்கு உட்படும் என்ற தெரிந்து வரையறுத்து சட்டவடிவை தயாராக செய்து சம்பந்தபட்ட துறையின் அனுமதியைப் பெற்று சடட்மியற்றும் அதனால் தான் கலைஞர் கொணடு வந்த சட்டங்கள் செல்லுபடியாகின்றன.. ஏனோதானோ என்று எடுத்தேன் கவிழ்த்தேன் என செயல்பட்டால் அதிமுக அவசரகதியில் கொணடுவந்த "நாடக ஒதுக்கீடு" போல் ரத்து செய்ய நேரிடும்..
..
ஆந்திராவில் 5% விழுக்காடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு இதுதான் காரணம் ஆனால் தமிழ்நாட்டில் கலைஞர் முஸ்லிம்களுக்கு தந்தபோது சிறுபான்மையினர் இஸ்லாமிய கிருஸ்துவ,ஜெயின் சமூகத்தை இணைத்து பிற்படுத்தப்பட்ட நலத்துறைக்கு பரிந்துரைக்கு அனுப்பி 8%விழுக்காடு வரை தரலாம் என்ற பரிந்துரையை பிற்படுத்தப்பட்ட நலத்துறை வழங்க இஸ்லாமியர்களுக்கு 3.5% கிருஸ்துவர்களுக்கு 3.5% ஜெயின் சமுகத்திற்கு 0.5% என ஒதுக்கினார் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் வியந்தது .. OBCஇட ஒத்க்கீட்டில் வன்னியர்களோடு இன்னும் 19 பிரிவினரை சேர்த்து வழங்கிய போது நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதை கவனிக்க வேண்டும் 13%முதல்15.5% வரை வன்னியர்கள் பயனடைந்தார்கள்..
எதையும் ஆய்ந்தறிந்து திறம்பட செய்வதில் கலைஞரை மிஞ்சிய எவரும் இல்லை.. அதனால் அவர் தொட்டதெல்லாம் வென்று நிற்கிறது .. எந்தவொரு சமூகத்திற்கு தரும் இட ஒதுக்கீடாக இருந்தாலும் முதலில் எதிர்ப்பது பாஜக தான் நேரடியாகவே மறைமுகமாகவோ அதை எதிர்ப்பார்கள் .. முஸ்லீம்கள் உள் ஒதுக்கீட்டிற்கு ஒப்பாரியே வைத்தார்கள் அருந்ததியர் இட ஒதுக்கீட்டிற்கு சிலரை தூண்டிவிட்டும் நேரடியாகவும் எதிர்த்தவர்கள் பாஜகவினர் ஆனால் இன்று "ஜெய்சிரிராம்" புகழ் முருகன் பிரதமர் சமூகநீதி காவலர் என சொல்கிறார் சொந்த புத்தியோ நன்றியுணர்வோ இல்லாதவர் தான் சார்ந்த அருந்ததியர் இனத்தின் விடியலுக்கு காரணியாக ஆனவர் கலைஞர் என்று தெரிந்தும் அதை மறைத்து தமிழ்நாடு தந்த உள் ஒதுக்கீடென கடந்து போகிறார் ..இவர் அதிகம் விரும்பும் "மீனாட்சியே" இதை கண்டு நகைப்பாள்..
..
தலையிலும் கையில் மலத்தை அள்ளும் இவர்களுக்கு உள்ஒதுக்கீட்டை தலையில் தூக்கி ஆடுகிறேன் பள்ளத்தில் கிடப்போரை படிகளில் ஏற்றிட தொடர்ந்து பாடுபடுவோம் "பகுத்தறிவு" துணைக்கொண்டு என்ற பேரருளாளன் கலைஞரை இந்த நேரத்தில் ஆதி தமிழர் அருந்ததியர் மட்டுமல்ல அனைவரும் கொண்டாட வேண்டும்.. எத்தனை உன்னதமான சிந்தனை செயல் தமிழர்கள் நலன் ஒன்றே குறிக்கோளாய் வாழ்ந்து ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட விளிம்புநிலை மக்களின் உயர்விற்கு காலமெல்லாம் உழைத்த உன்னத தலைவர் கலைஞர் ..
..
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். என்ற குறளின் பொருளாய் விளங்கிய "பெருமானை" இந்த நேரத்தில் நினைவு கூர்வோம்..
..
வாழ்க! எம்மான் கலைஞர்
வாழிய !! கலைஞர் புகழ் !!! ..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment