Monday, April 15, 2024

இஃப்தார்.. Iftar..
நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இப்போதெல்லாம் தற்பெருமை பேசும் நிகழ்வாய் மாறிப்போனது.. இயலாதோர்,  பணிச்சுமையில் சமைக்க முடியாதோர்,வழிப்போக்கர், வழியில்லாதோருக்கானது  இப்போது தங்களின் பொருளாதார பலத்தை தங்கள் இறுப்பை அகந்தையை காட்ட ஒரு ஏற்பாடாக மாறிவிட்டது .. ஒவ்வொரு தங்கள் கூட்டத்தை கூட்டி நடததும் நாடகம் ரசிக்க முடியாத காட்சிகளால் இயல்பை இழக்கிறது..
 ..
அரசியல் களமாய், தங்கள் அமைப்புகளின் பலத்தை காட்டவும் நானும்/நாங்களும் இருக்கிறோம் என்பதை பறைசாற்றிய ஒரு வாய்ப்பு அது அவ்வளவுதான்..  "துதி"பாடவும், பழங்கதை பேசவும், இறுமாப்பில் தலைநிமிரவும் தங்கள் பிரசாரக் கூடமாய், தங்களை விளம்பரபடுத்திக் கொள்ளவும், பலத்தை காட்டவும் இப்போது கடும் போட்டி நிலவுகிறது.. 
..
எளியோர்க்கும்,  வழிப்போக்கர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய உணவு, புளிச்சேப்பகாரனுக்கு தரப்படுகிறது.. உண்மையில் இவர்களுக்கு "பக்தி" எல்லாம் இல்லை.. தற்பெருமை பேசவும் தங்களின் அடிவருடிகளின் புகழ்மாலையை கேட்டு ரசிக்கவும் பெருந்தொகை செலவு செய்து "புகழ்" மாலையை அணிந்துக் கொள்கிறார்கள்.. இதில் அறிஞர் பெருமக்களும் ஆன்றோரும் சேர்நது ஒத்தூதும் நிகழ்வுகள் காதுகளுக்கு எரிச்சலூட்டுகிறது..
..
எளிமையான மார்க்கம் ஆடம்பர, அடாவடிகளின் தற்சார்ப்பு குரலை ஓங்கி ஒலித்து நோன்பின் மகிமையை கேலிக்கூத்தாக்கிறது..
தொழிலதிபர்கள் அரசியல்வாதிகள், "சமூக" அமைப்புகளின் குஸ்தி சண்டை களமாக மாறிவிட்டது .. யார் பலம் பொருந்தியவர் என்பதை கணக்கீடு செய்யும் "களமாய் மாறிப்போனது ..
..
"பெருங்கூத்து"
..
ஆலஞ்சியார்



No comments:

Post a Comment