இந்திய சனநாயகம் வென்றது ..
பன்முகத்தன்மையை அகற்றி ஓரே தேசம், ஓரே மொழி, ஓரே கலாச்சாரமென்ற மோடியின் (பாஜக) கூற்றை புறந்தள்ளி மக்கள் தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள்.. சர்வாதிகாரத்தை நோக்கிய மோடியின் பயணத்தை, தான் "பிரம்மன்" எல்லாம் என்னால்தான் ஆனது என்ற அகந்தைக்கு மக்கள் மரண அடி கொடுத்து உலகின் மிகப் பெரிய சனநாயக நாட்டில் எவனும் எஜமானன் இல்லை எவனுக்கும் தலை வணங்கமாட்டோம் நாங்களே யாரென்று தீர்மானிப்பவர்கள் என மக்கள் உணர்த்தி ஆணவகாரர்களின் புறடியில் அடித்தமர்த்தியிருக்கிறார்கள்..
..
இங்கே பல பண்பாட்டு இழையோடும் மக்களின் இயல்பும் இணக்கமும், வேற்றுமையிலும் ஒற்றுமையாக வாழும் .. இங்கே எவ்வளவு உயரத்தில் ஆடினாலும் சட்டென்று வீழ்த்திவிடும் வலிமை இந்திய விரல்களுக்கு உண்டு..
மதத்தை சாதியை,பிரிவினையை பேசி நீண்ட நாள் ஆட முடியாதென உணர்த்தியிருக்கிறது இந்த தேர்தல் .. பச்சையாக மத துவேஷத்தை பேசி பிறமொழிகளை இகழ்த்தி ,மொழி வெறியை ஊட்டி நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடித்து கண்ணீர்விட்டு கைகூடாதென்ற போது கடவுள் "அவதாரம்" எடுத்து அத்தனை சித்துவேலைகளையும் செய்து தானென்ற ஆணவத்தில் ஆடியவர்.. நேற்று முகம் வாடி "ராமரை" மறந்து ஜெகந்நாதனை துணைக்கழைக்கிறார்..
..
இந்திய கண்ட பிரதமரில் மிக மோசமானவர் என வரலாறு அடையாளம் கொள்ளும்.. எதையும் உருவாக்க முடியாமல் போனாலும் அழிக்காமலாவது இருந்திருக்கலாம்.. மக்கள் மூளையில் மதத்தை ஏற்றும் வித்தை தெரிந்தவர்க்கு அறிவை தரவேண்டும் அதற்கான வழிமுறைகளை செய்ய வேண்டுமென தெரியவில்லை..
56 இன்ச் மார்பு, எதிர்க்கட்சிகள் எல்லாம் ஊழல்வாதிகள், நான் மட்டுமே புனிதன், இஸ்லாமியர்கள் நிறைய குழந்தைப் பெற்றுக் கொள்கிறார்கள், மாட்டுக்கறி சாப்பிடாதே, பச்சைக் குழந்தைக்கு ஆக்ஸிஜன் இல்லையென்றாலும் பரவாயில்லை மாட்டுக்கு
கொடு.. புல்டோசரை எப்படி பயன்படுத்த வேண்டுமென எங்களுக்குத்தான் தெரியும் வாழும் வீட்டை இடித்து தள்ளு .. ஒரே இரவில் பண மதிப்பிழப்பு செய் மக்களை தெருவில் நிறுத்து ,கொரோனாவா கைதட்டு.. இதை தவிர வேறெதும் வளர்ச்சிக்கு வித்திட்டாரா கடவுளின் அவதாரம்.. மிக மோசமான கேவலமான பிரதமராக தொடர்ந்தார்.. தொடரலாம் ..
..
ஆனால் மக்கள் கடிவாளம் போட்டுவிட்டார்கள்.. எத்தனை காலம் இது தொடருமென தெரியாது காலம் தூக்கி எரியும் அப்போது தெரியும் .. PMCare ஊழலும் இதுவரை ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதும் விசாரிக்கப்படும்.. இனி ஊன்றுகோலோடுதான் இயங்கமுடியும்..
..
இங்கே மற்றொன்றும் சொல்ல வேண்டியிருக்கிறது.. தமிழ்நாட்டின் செங்குட்டுவன்.. ஆம் மு.க.ஸ்டாலின்.. வாய்ப்பே இல்லை கட்டம் சரியில்லை என்றார்கள்.. ஆனால் செங்குட்டுவனைப்போல சிறந்த ஆட்சியை மடடுமல்ல சிறந்த ராஜதந்திரி என்றும் நிரூபித்திருக்கிறார் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் .. சொல்லி அடித்திருக்கிறார்.. தமிழ்நாட்டில் பாசிசத்தின் வேர்களில் வெந்நீர் ஊற்றியிருக்கிறார்.. 40க்கு 40 வெற்றியை பெற்று தந்து தான் தேர்ந்த அரசியல்வாதி என்பதை தன்னை விமர்சிப்போருக்கு சொல்லியிருக்கிறார்..
..
ராகுல் மிகப்பெரிய முன்னெடுப்பு செய்து காங்கிரஸை சரியான பாதையில் நிறுத்தியிருக்கிறார்.. எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது.. பாஜகவின் எல்.கே.அத்வானி சொன்னதை நினைவுபடுத்துகிறேன் winners comes second .. 👏
..
திரு மோடியின் முகத்தில் சிரிப்பை காணோம்.. அவருக்கே தெரியும் இருவரும் எப்படிப்பட்டவர்களென்று.. ஆனால் இங்கே எண்ணிக்கைதான் அதிகாரத்தை தீர்மானிக்கும் .. புதிய அரசுக்கு வாழ்த்துகள்..
இனி பொம்மலாட்டம்..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment