Saturday, July 27, 2024

அநாகரீகம் அதற்கு மறு பெயர் ராமதாஸ்.. 
அரசியலை பிடித்த சீழ்.. அப்பட்டமான சாதிவெறி தன் சமூக மக்களே ஏற்கவில்லையென்ற கோவம்,  எதை பேசுகிறோம் என்று தெரியாமல் தன் இயலாமையை காட்டிக் கொண்டார் .. 
அரசியல் மேடைகளில் விமர்சனம் செய்வது வேறு அதில் கூட குறைந்தபட்ச கண்ணியம் வேண்டும் .. 
..
மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் வெகுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை ஒருமையில் பேசுவதும் சாதீய வன்மத்தோடு கதைப்பது அவரின் அரசியல் வாழ்வின் முடிவை சொல்கிறது.. மாறி மாறி சவாரி செய்த குதிரையின் கால் நரம்பை அறுத்ததில் பெரும் பங்கு ஸ்டாலினுக்கு உண்டு..  நின்ற ஏழு இடங்களிலும் தனி கவனம் செலுத்தி தோற்கடித்து பாமகவின் வீழ்ச்சிக்கு வித்திட்டவர்.. அதன் பிறகு துரைமுருகன் போன்ற "சாதி"தூதுவர்களை கொண்டு எவ்வளவு முயற்சித்தும் சேரவிடாமல் தடுத்ததில் "ஸ்டாலின்"எனும் அரசியல் "தந்திரி"யின் செயல் இன்றைய கதறிலில் தெரிகிறது
..
தொடர்ந்து அன்புமணியின் உடல்மொழியும் பேச்சும் ஏதோ இவர்கள் தான் எல்லாம் தெரிந்தவர்கள் என்ற போக்கை இடதுகையால் ஒதுக்கும் ஸ்டாலின் அனுபவம் அவர்களுக்கு இயல்பாகவே கோபத்தை வரவழைக்கிறது.. மகனை,மருமகளை தோற்கடித்த செயல் தன் சமுதாய மக்கள் இத்தனை காலமாகியும் நம்ப மறுப்பதும் எதிர்காலம் இல்லாமல் போய்விடும் என்ற அச்சம் தலைக்கேறியதின் விளைவு ராமதாஸின் பேச்சில் தெரிந்தது..
..
திராவிட அரசியலை வீழ்த்துவதாக சொன்னவர்கள் வீழ்ந்த வரலாற்று தொடர்கிறது.. மதம்,சாதி,சமயம்,இவையெல்லாம் பொது அரசியல் கைக் கொடுக்காது காரணம் எல்லாவறறையும் கேட்கும் அறிவும்,அதில் ஆழ்ந்து யோசிக்கும் திறனும் சரியானதை தேர்வு செய்யும் சாமானிய அறிவும் பெற்றவர்கள் தமிழர்கள்..  ராமதாஸ் போன்ற அற்பர்களை இனங்கண்டு புறக்கணிப்பார்கள்.. சில இடங்களில் பாசம் மேலிடலாம் ஆனால் ஓட்டுமொத்தமாக தோல்வியைதான் பரிசளிப்பார்கள் 
..
தன் வளர்ச்சிக்காக சமுதாயத்தை அடகுவைத்து பணம் பதவி என அலைந்தவர் இன்று புறக்கணிக்கப்படும் போது எங்கே தன் மகனின் அரசியல் எதிர்காலமே இல்லாமல் போய்விடுமோ என்ற பதற்றமும் வயது மூப்பும் ராமதாஸின் சொல்லில் தெரிகிறது ..  திருமாவுக்கு இருந்த அரசியல் தெளிவு ராமதாஸிற்கும் அன்புமணிக்கும் இல்லை.. அது பாமகவின் அடித்தளத்தை அசைக்க தொடங்கிவிட்டது ..
..
தனியாக நிற்போமென வசனம் பேசி கடைசியில் திராவிடக்கட்சிகளிடத்தில் மண்டியிட்டதும் திமுக இனி பாமகவை அண்டவிடுவதில் என்ற உறுதிபாடும் கடைசியில் பாஜகவுடனான சேர்க்கை கரை சேரமுடியாதென்ற உண்மையும் உரைக்கிற போது உளறல் அதிகமாகிறது.. சாதி வன்மங்கொண்டு பேசியதை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது ராமதாஸின் அரசியல் வாழ்வு இனி..? 
..
பெற்ற தாயை கூட அசிங்கபடுத்தியவன் அரசியல் இருப்பதே அசிங்கம் என மக்கள் முடிவெடுத்துவிட்டதுதான் தொடர் தோல்விகள் .. ராமதாசும் அன்புமணியும் அரசியலில் இருந்து துடைத்தெறியப்பட வேண்டியவர்கள் .. காலம் மௌனமாய் பதில் சொல்லும்,செய்யும்.. 
 ..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment