ஊஞ்சல் கட்டி ஆட இசை உதவும் பொருளுணர்ந்து சிரிக்கவும் கோபப்படவும் ,ஆர்ப்பரிக்கவும், லயிக்கவும், ஆசுவாசபடவும் இசை பெரும் பங்கை வகிக்கும்..
..
மொழியில்லாத இசை என்ன செய்யும்?.. அறிவை,சிந்தனையை தருமா.. எழுத்து இதயத்தை கிழித்து ஆழ பதிவிடும்..
"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை"..
"முட்டா பயல எல்லாம் தாண்டவக்கோனே காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே"..
"போனால் போகட்டும் போடா"..
"அந்திமழை பொழிகிறது"..
"காமன் கோவில் சிறை வாசம்
காலை எழுந்தால் பரிகாசம்" .. சொல்லிக் கொண்டே போகலாம்.. இசை அதற்கு கூடுதல் பலம் சேர்க்கும் பூமாலையாக்கும்
..
கவிதைகள் தனியொருவனின் ஆக்கம்..
இசை பலரின் பங்களிப்பை சரியாக ஒருங்கிணைப்பதாகும்.. மொழி அறிவைத் தரும்,
இசை லயிக்க, மெய்மறக்க, கண்மூட, மனதை இலகுவாக்க, மறக்க செய்யும், ..
இசையை சில நேரம் ரசிக்கலாம்
மொழியோடு கூடிய இசை எப்போதும் ரசிக்கலாம்..
இசை ஆற்றுப்படுத்துவது
மொழி அறிவுபடுத்துவது..
..
இசை மயக்கம் தரும்..
பாடலற்ற இசை ஒரு கட்டத்திற்கு மேல் ரசிக்க இயலாது புழுக்கம் தரும்..
எழுத்து எப்போதும் நின்று பேசும் ,அறிவைத் தரும் ..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment