தலித் அரசியல்..
நவீன தலித் போராளிகளுக்கு? பெரியாரை கொண்டாடுவதில் மிகப்பெரிய சங்கடம் தெரிகிறது.. அயோத்திதாசர் அம்பேத்கர் போன்ற "தாழ்த்தப்பட்டோரின்" குரல் எடுபடாமல் போகும் என்ற அச்சத்தில் பெரியாரை விமர்சிக்க தொடங்கியிருக்கிறார்கள்.. உண்மையில் பெரியாரால் தான் சமூக இடைவெளி ஓரளவு குறைந்ததும் ஒடுக்கப்பட்ட சமூக மேம்பாடு கணிசமானளவு மெச்சபட்டதும் திராவிட இயக்கங்கள் அதிகாரத்தை அடைந்த பிறகுதான் என்பதை உணரவில்லை..
..
அயோத்திதாசரால் முடியாததை, எங்கள் பிள்ளைகளை நான்காவது வரையாவது படிக்க அனுமதியுங்கள் என்று கேட்டும் வெளியேற்றப்பட்ட நிகழ்வுகள் எல்லாம் இன்றைய தலைமுறை அறியாதது.. வடமாநிலங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கல்வியறிவு கிடைத்த நேரத்தில் இங்கே தமிழ்நாட்டில் திராவிடம் செயல்படுத்த தொடங்கிவிட்டது.. இவர்களுக்கு பெரியார் மீது என்ன கோபம்..? இங்கே சாதிய தலைவர்கள் தலையெடுக்க முடியாமல் அப்படி அமைப்பென்று தொடங்கினால் கூட குறுகிய வட்டத்தை தாண்டி செயல்பட முடியாமல் பெரியாரின் "கைத்தடி" தலையில் தட்டி உட்காரவைக்கிறது..
..
சென்னையில் பழைய ரௌடி வெட்டிக் கொல்லப்படுகிறார் ..
அது அரசியல் கொலையல்ல என்பதை காவல்துறை விசாரணையில் தெரியவருகிறது.. ரௌடிகள் அரசியல் கட்சியில் அடைக்கலமாவதும் தன் சாதியை முன்னிறுத்தி தன்னை பாதுகாத்துக் கொள்ள தடுப்பாட்டம் ஆடுவதும், தன்னை தன் சமூகத்தின் தலைவனாக காட்டி இளைஞர்களை வழிகெடுப்பதும் குறிப்பிட்ட காலளவுவரை கைகொடுக்கும் தெளிவு வருகிற போது குப்பையில் வீசிவிடும்..
பழைய பகை கருவறுக்க தொடங்கும் போது தடுத்து நிறுத்த அரசு தவறிவிட்டதாக கூப்பாடு போடுவது எந்தவகையான நியாயம்.. தலித் அரசியலை சிலர் அடிதடி கட்டப்பஞ்சாயத்து ரௌடியிசம் என குறுகிய வட்டத்திற்குள் அடைக்க நினைக்கிறார்கள்..
..
சென்னையில் எங்களை மீறி யாரும் ஆட்சிக்கு வரமுடியாது என்பது அரசியல் புரிதல் இல்லாமை என கடந்து போக முடியாது பாசிசத்தின் பெரும் சதியின் ஒருபகுதியாக கணக்கில் கொள்ள வேண்டும் .. ரௌடிகளுக்கு புரிகிற பாஷையில் காவல்துறை பேச தொடங்கியதும் பதறுவது வெளிப்படையாக தெரிகிறது.. தலித் இளைஞர் கல்வி வேலைவாய்ப்பில் குறிப்பிட்ட முன்னேற்றம் அடைந்ததிருப்பது திராவிடத்தால் வந்தது என்பதை பொறுத்துக்கொள்ள முடியாத பேதைகள் எதையாவது உளறுவதை சகிக்க முடியவில்லை..
..
சாதியை கையிலெடுத்து அரசியல் செய்த ராமதாஸ்,கிருஷ்ணசாமி ஜான்பாண்டியன் போன்றவர்கள் கரையேற முடியாமல் தவிக்கிறார்களே அதற்கு காரணம் இந்தமண் பண்பட்டு தெளிவோடு இருப்பதே காரணம்.. சாதி மதம் மொழியரசியல் இங்கே எடுபடாது.. காரணம் ஒவ்வொரு ஏதோவொருவகையில் திராவிடத்தால் பலனடைந்து இருப்பதும் பெரியாரெனும் மாமனிதனின் கடுமையான உழைப்பும் அறிஞர் அண்ணா,கலைஞர் ஆட்சி ஏற்படுத்திய மாற்றங்களும் மிகப்பெரிய காரணிகள்.. நீதிக்கட்சி காலத்தலிருந்து அநீதி ஏறபட்டதாக சொல்கிறார்.. உண்மையில் நீதிக்கட்சி காலத்தில்தான் (1921) பள்ளிக்கூடங்களில் சமமாக அமரவைத்தால் மட்டுமே "பாடசாலை" தொடங்க அனுமதி என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது..
அதற்கு தனியாக அமரவைக்கிறோம் என சிலர் கேட்டபோதும் மறுத்து தாழ்த்தப்பட்ட மாணவர்களும் சமமாக அமரவைக்கும் முடிவில் உறுதியாக இருந்தது நீதிக்கட்சி..
..
இவர்கள் எதிர்க்க வேண்டியதும் கேள்விகேட்க வேண்டியதும் பார்ப்பன பாசிச சிந்தனைக்கெதிராக தானே தவிர
திராவிடத்திற்கு எதிராகல்ல.. திராவிடத்திற்கு, தந்தை பெரியாருக்கு நன்றி பாராட்டவிட்டாலும் வசவுகளை கக்காமல் இருந்தால் போதும்..
யாரெல்லாம் ஒடுக்கப்படுகிறார்களோ அவர்களுக்காக, அவர்கள் எந்த பிரிவினருக்கான இருந்தாலும் ஏன் பார்ப்பனர்களாக இருந்தாலும் குரல் கொடுக்கும் அதுதான் பெரியாரின் வழிவந்த திராவிடம் செய்வது செய்துக்கொண்டிருப்பது செய்ய போவது..
..
எல்லா தலித் தலைவர்களும் பாஜகவின் செலலப்பிள்ளையாகிவிட்ட பிறகும் திருமா மட்டும் பெரியாரையும் சேர்த்துபிடித்து அரசியல் செய்கிறாரே என்ற கோபம் நவீன தலித் பிம்பங்களின் பேச்சில் தெரிகிறது.. என்னதான் கதறினாலும் உங்கள் எண்ணம் ஈடேறாது.. திமுகன்னா பயப்படுறீங்களா நாங்கள் அடிமை அல்ல
என கேட்க தெரிந்தவருக்கு பாஜகவின் சித்தாந்தப்படி (வர்ணாசிரமம்) அடிமைகளைப் போல மோசமான நடத்தப்டடதை இன்னமும் வட மாநிலங்களில் நடத்தபடுவதை கேட்க துணிவிருக்கிறதா..
மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்ற கோட்பாட்டில் இயங்குகிற இயக்கத்தை கேள்வி கேட்கும் முன் மூளையில் படிந்திருந்தும் பாசிச அடிமை சிந்தனையை கழுவிவிட்டு பேசவும்
ரௌடி கொல்லப்டடதற்கு எதற்காக குரல் கொடுக்கவேண்டும் .. கொலை குறித்து விசாரணை நடந்துக்கொண்டிருக்கிறது.. கொலையாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு நீதிமன்ற விசாரணை சரியான பாதையில் செல்கிறது பிறகு ஏன் பதட்டம் ? .. இந்த வழக்கில் குற்றவாளிகள் தலித்களாக இருப்பதால் அந்த சமூக மக்களுக்காக எதிராக மற்றவர் பேசவில்லையே அதிலிருந்தே தெரிகிறது கொலையாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் ..
..
முதலில்
அரசியல் பயிலுங்கள்..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment