என்ன நடக்கிறது ..
94 வயதுவரை கிழவன் ஊட்டிய அறிவும் அவனின் உழைப்பும் வீணாகிவிடுமோ என அச்சப்பட வைக்கிறது .. கலைஞர் எனும் மகத்தான தலைவன் செதுக்கிய கொள்கைவிளக்க கோட்பாடு, செயல்கள் விவர போதாமைகளால் என்னாகுமோ என கவலை வருகிறது..
..
அரசுப் பள்ளியில் அறிவிற்கொவ்வாத செயல்கள் எப்படி அரங்கேறுகின்றன.. மெல்ல மெல்ல சிதைக்கும் வேலைகளின் பின்னில் யாரெல்லாம் இருக்கிறார்கள்.. அரசு அதிகாரிகள் யாருக்காக வேலை செய்கிறார்கள்.. இளம் மாணவர்களை மூளைச்சலவை செய்கிற செயல்களுக்கு யார் அனுமதி தந்தது.. அமைச்சருக்கு தெரியாமல் தான் நடக்கிறதா.. எல்லாவற்றையும் முதலமைச்சர் பார்த்துதான் "திருத்த" வேண்டுமா.. உங்கள் உள் அரசியலில் கால்கள் வழுவிலக்காமல் அதில் கவனம் செலுத்துகின்ற நீங்கள் கொள்கை உறுதியோடு தன் துறை சார்ந்த விடயங்களில் அதிகம் கவனம் செலுத்த வேண்டாமா..
..
மாண்பமை அன்பில் மகேஷ் அவர்களே ..
Anbil Mahesh Poyyamozhi உங்கள் தாத்தாவும் அப்பனும் சிந்திய வியர்வை துளிகள் கொள்கை கோட்பாட்டின் உறுதி, கட்டுகோப்பாய் வழிநடத்திய பேராற்றல் இவையெல்லாம் கண்டு படித்தவர் உங்கள் செயல்களில் சரிவு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.. புனைவு கதைகளை அறிவு ஏற்காதவற்றை பள்ளி மாணவர்களிடத்தில்
திணிக்கிறார்கள் .. பள்ளிக்கல்வித்துறையில் திராவிட சிந்தாந்தவாதிகளை, அறிவாளிகள் திமுக அனுதாபிகளை அழைக்க கூடாதென்பதை உறுதியாகவும் ஆன்மீகம் என்ற பெயரில் அறிவை மழுங்கடிக்கும் சொற்பொழிவாளர்களை அதிகம் அனுமதிக்கிறார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது இதில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்
..
மகாவிஷ்ணு போன்ற அறிவிலிகளைப் பற்றி பேச வேண்டியதில்லை.. நிறைய மகாவிஷ்ணுகளை தயார் படுத்தி வைத்திருக்கிறார்கள்.. மந்திரத்தால் நெருப்பு மழை பெய்யும் என்றவனை அங்கேயே கேள்வி கேட்க சாமானியர்கள் நிறைய வருவார்கள்,அச்சம் தவிர்த்து அறிவுசார்ந்த கருத்துக்களை சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.. ஆனாலும் துறை ரீதியான கடும் உத்தரவுகளும், கண்காணிப்பும் வழிகாட்டும் நெறிமுறைகளும் அவசிய தேவையாகிறது.. அறிஞர்கள் முற்போக்காளர்கள் பண்பாளர்களைக் கொண்டு இளம்தலைமுறையினரிடம் குறிப்பாக பதின் பருவத்தினரிடம் நல்ல கருத்துகளை அறிவார்ந்த விடயங்களை அறிவியல் தெளிவுகளை விளக்க வேண்டிய பெரும் பொறுப்பு இருக்கிறது..
..
பெருங்கிழவனும் பேராசானும் முத்தமிழறிஞரும் செதுக்கிய தமிழ்நாட்டை சிதிலமடையாமல் காக்கும் பொறுப்பு இருக்கிறது.. பதவி பகட்டிற்கில்லை.. நெஞ்சுரத்தோடும் நேர்மையோடும் கொள்கை தெளிவோடும்செயல்படுவதற்கு..
தங்களின் நடவடிக்கைகள் சமாதானபடுத்துகிறது.. திருப்திபடுத்த வேண்டும்..
..
சொல்ல இரண்டிருக்கிறது
ஒன்று:
கண்மூடி மௌனம் காத்தவர்கள் மத்தியில் அறிவுக்கண்ணை திறந்த ஆசிரியர் சங்கர் அவர்களுக்கு நன்றி!..
..
இரண்டாவது
20.08.1970 விடுதலையில் அய்யா எழுதியதை நினைவூட்டுகிறேன்
"பள்ளிக்கூடத்தில் சிறிது நேரம் ஒதுக்கி பகுத்தறிவை சொல்லித் தர வேண்டும்"..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment