டி.ஆர்.பாலு தன்னை தகுதியில்லாதவன் என சொன்னதை தான் தாழ்த்தப்பட்டவன் என்பதாலேயே சொன்னதாக முருகன் புலம்புகிறார் .. தேனி எம்பி ரவீந்திரநாத் கூட முதுகெலும்பு இல்லாதவன் என்று பேசினார் அப்போது யாரும் சாதியை தூக்கி கொண்டு வரவில்லை..
..
அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு தந்த இயக்கம் திமுக .. மலத்தை கையிலும் தலையிலும் சுமப்போருக்கான இட ஒதுக்கீட்டை தலையில் சுமந்து கொண்டாடுகிறேன் தொடர்ந்து பள்ளத்தில் கிடப்போரை படிகளில் ஏற்றிட செயல்படுவார பகுத்தறிவு துணைக்கொண்டு என மகிழ்ந்த தலைவன் கலைஞரின் இயக்கம்..
ஆ.ராசா மீது அவதூறு சொன்னபோது பொட்டல்காட்டில் பூத்தமலரென பனிக்குடத்தை காப்பதால் போல காத்த இயக்கம்
இங்கே யார் எதிரி துரோகி என அறிந்து அவன் யாராக இருந்தாலும் முகத்திரையை கிழிப்பது எங்கள் சனநாயக கடமை
..
தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படுபவன் யாராக இருந்தாலும் அவன் எந்த சாதியினர் இருந்தாலும் கவலையில்லை தோலுரிப்போம் ..
பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டால் பதில் சொல்ல தெரியாமல் ஜெய்ஸ்ரீராம் என கூவுகிற உமக்கு இப்படிதான் பதிலடி கிடைக்கும் திருவள்ளுவனுக்கு காவி சாயம் பூசி திரிகிற உனக்கெல்லாம் என்ன தகுதி இருக்கிறது ..
..
தமிழ்நாடு துரோகிகளை இனங்கண்டு தூக்கியெறியும் பதவிக்காக எங்கிருந்து யாரால் எந்த இயக்கத்தின் போனால், எப்பேர்ப்பட்ட தலைவர்களின் அரும் பணியால் சுயமரியாதையோடு திரிகிறோம்.. மிக மிக தாழ்த்தப்பட்டவனாக இந்த சமூகம் எப்படி வேட்டையாடியது தெருவிற்கு நுழைய முடியாத கொடுமைகளை தந்தது.. பெரியார் எனும் பெரும் மனிதனின் பெரும் உழைப்பால் திமிரோடு வலம் வர முடிகிறதே என்ற நன்றி உணர்வில்லாமல் பேசி திரியும் தங்களை தகுதியில்லாத என்றழைப்பதில் என்ன தவறு
#Unfit_L.Murugan
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment