Tuesday, July 2, 2024

"வாள்" தூக்கி நின்னாப்பாரு!!
..
இனி ரட்சையில்லை.. Narendra Modi 
மோடி எனும் மாய பிம்பம் தகர்ந்து விழுந்ததை நாடே கண்டது.. உண்மையில் வாய்ஜாலம் நீண்டநாள் காக்காதென மோடி உணர்ந்த தருணம் .. Rahul Gandhi 
ராகுலை விளையாட்டுப் பிள்ளையென கருதி கேலிச் செய்தவர் ஆடிய ஆட்டம் கண்டு குலை நடுங்கி போய் நின்றதை வெகு மக்கள் ரசித்தார்கள்..
..
ராகுலின் உரையை நீக்கியதிலிருந்தே அவர்களின் பயம் தெரிகிறது.. இந்துக்களை புண்படுத்தியதாக சித்தரித்ததை இந்துக்களே ரசிக்கவில்லை..
பாஜகவை மோடியோ ஆர்எஸ்எஸ் மட்டுமே இந்து சமூகம் இல்லையென ஆணியடித்தார் ..அங்குதான் ராகுலின் போர்க்குணம் பெரும் பாய்ச்சல் கண்டு  சங்பரிவார்கள் அலற தொடங்கின.. biological born இல்லையென்றவரை அவர் ஆயுதம் கொண்டே சொருகிய விதம் தனக்கு ஆக்ரோஷம் மட்டுமல்ல நையாண்டியும் வருமென ராகுலின் சுவை கூடிய பேச்சு உணர்த்துகிறது.. கடவுளை கேட்டுதான் பணமதிப்பிழப்பு செய்தீர்களா என்றார்
போகிற போக்கில் சபாநாயகருக்கு குட்டு வைத்து நீதமாக நடந்துக் கொள்ளுங்கள் வளைந்து நெளியாதீர்கள் என்றது இதுவரை சபை கண்டிராத ஒன்று..
 ..
பத்து வருடங்கள் எதிர்க்கட்சியே இல்லாமல் கண்டதை உளறியும் தோன்றியதை நடத்தியும் பழகியவர் சரியான எதிரியை இப்போதுதான் பார்க்கிறார்.. நாடாளுமன்றத்திலிருந்து பாதியில் வெளியேறியது அவர் பதட்டமடைந்ததை வெளிச்சம் போட்டு காட்டியது ..  Mahua Moitra - মহুয়া মৈত্র  மஹூவாவும் ஆண்டிமுத்து ராசா
A Raja  சலங்கைக்  கட்டி ஆட நாடாளுமன்றம் எதிர்க்கட்சிகளின் "ஆட்சியில்" இருந்தது.. நான் வரகூடாதென்று நினைத்து இரண்டுமுறை தொகுதிக்கு வந்தீர்கள் உள்ளதில் 68 போனதென மஹூவா கிண்டலடித்தார் முஸ்லிம் மதரசா மட்டன் என ,M வரிசையில் பேச தெரிந்தவருக்கு மணிப்பூர் மட்டும் மறந்து போனது..
கடவுளாகவே இருந்துவிட்டு போங்கள் அதற்கான தகுதியில்லையே என ராசா சிலம்பமாட நாடாளுமன்றமே ஜனநாயமாகானது.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றியதெல்லாம் இனி நடக்காது என பிரதமர் மோடிக்கு புரிந்தது..
..
பிரதமரின் பதிலுரை  டீச்சரிடம் ஸ்கூல் பையன் "குறை"யைப்போல் இருந்தது .. 
ராகுலை குழந்தைதனமாக பேசுவதாகச் சொன்னவர் கிள்ளுறான் மாஸ்டர் என்பதைப்போல சபாநாயகரிடம் புகார் தருகிறார்.. நேற்று காப்பாற்றுங்கள் என அமித்சா கெஞ்சியதைப் போல.. உண்மையில் பிரதமர் தடுமாறுவதும் காங்கிரஸ் ஆட்சியை,குறைக்கூறி பிழைக்க நினைப்பதும் பொய்யான வாக்குறுதி தந்து எதிர்க்கட்சிகள் வெற்றிப் பெற்றதாக அதிலும் சில பெண்கள் ஏமாந்து வாக்களித்தாலும் கூறுவது அவரது அறியாமையை, பலவீனத்தை தகுதியின்மையை பொறுப்பின்மையை காட்டுகிறது .. உண்மையில் பலவீனமானவராக தெரிகிறார்
..
பாஜகவிற்கு புரிந்திருக்கிறது அதனால் தான் NDA கூட்டத்தில் ராகுலைப் போல நடந்துக்கொள்ளாதீர்கள் என்கிறார்.. 56இன்ச் என பெருமை பேசி மார்த்தட்டியவர் கூனிகுறுகி நின்றதை நாடு மெல்லிய புன்னகையில் கடந்தது..
 இனி நாடாளுமன்ற நடவடிக்கைகளில் தான்தோன்றித்தனம் இருக்காது பெரும்பான்மை இல்லாமல் இரு கட்சிகளில் தயவில் ஐந்தாண்டுகள் காலம் தள்ள வேண்டும் .. மோடியின் முகம் வாட தொடங்கியிருக்கிறது
 இனி சனநாயகம் "பூக்கும்"
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment