மனு ஆட்சியா .. மனுவிற்கு எதிரானதா என விவாதிக்க வேண்டியதை மடைமாற்ற நினைத்து மன்னராட்சி என உளறி கடைசியில் வாங்கிகட்டிக் கொள்ள வேண்டியாதகிவிட்டது.. பாஜக செல்லப்பிள்ளைகள் வேடம்கட்டி வந்து அரிதாரம் கலைந்து நிற்கிற சோகம்.. தமிழ்நாடு மிக தெளிவான பார்வைக்காக கொண்டது.. வரும் ஓசை கண்டே வருகிறவர் யாரென அறியும் அறிவுண்டு நமக்கு.. பல்வேறு வழிகள் ஒவ்வொன்றாய் தடைப் போட்டுக்கொண்டே இருப்போம்..
..
ரஜினி வைத்து சலனம் ஏற்படுத்த நினைத்து அவர் சுதாரித்த நிலையில் பாவம் சின்ன பையனை இறக்கி சினிமா சூட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.. வரும் போது கொஞ்சம் அரசியல் வரலாற்றை தெரிந்து கொண்டு வந்திருக்கலாம்.. ரெய்டுக்கு பயந்து வந்திருக்கலாம் கடந்தகால தமிழ்நாட்டின் அரசியலை , அதன் போக்கை தமிழ் மக்களின் தெளிவை அறிந்தோ எழுதிக் கொடுக்கும் நபர்களிடம் கேட்டு தெரிந்து காலடி வைத்திருக்க வேண்டும்..
..
எது ஆணவம் 200 வெற்றி பெறுவோம் என்பதா.. 75 ஆண்டுகால அரசியல் எல்லா காலமும் மக்களோடு கலந்து அவர்களின் துயரில் மகிழ்ச்சியில் பங்குகொண்டு இன்னல்படும் நேரத்தில் கரம் கோர்த்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற கல்வியொன்றே கைகொடுக்குமென அறிந்து வா..படிக்க வா எல்லாம் தருகிறேன் உன்னை புறக்கணித்தவன் முன்பாக உயர்ந்து காட்டு என திட்டங்கள் தீட்டி இன்று கல்வியில் பொருளாதாரத்தில் இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாட்டில் முதல் மாநிலமாய் உயர்த்தி காட்டியவர் 200 வெல்வோம் என்பது ஆணவம் அல்ல மக்களின் மீதான நம்பிக்கை தன் உழைப்பின் மீதான நம்பிக்கை ஒற்றுமையின் மீதான நம்பிக்கை..
..
பிறப்பால் உயர்ந்தவன் என்பதெல்லாம் பழைய பாழ்படிந்த சிந்தை உழைப்பால், அறிவால் உயரலாம், கல்வி வெளிச்சம் காட்டும் என்பதுதான் திராவிட சித்தாந்தத்தின் மூலக்கரு .. எல்லோருக்கும் எல்லாம் இதைதான் திராவிடத் தலைவன் எங்கள் தளபதி ஸ்டாலின் M. K. Stalin சொல்கிறார்..இதை கண்டுதான் பதறுகிறது பாசிசம்.. பல வழிகளில் லாட்டரி டிக்கெட்டையும் ப்ளாக் டிக்கெட்டையும் களம் இறக்கி வாய்க்கு வந்ததை உளறி அதை பேசு பொருளாக்கி "விகடகவி" சொல்லிக் கொண்டிருக்கிறது.. காஞ்சி தலைவனை பேச வேண்டுமே தவிர காஞ்சி பெரியவரை அல்ல புத்தகத்தில் என்ன இருக்கிறதென்றோ அம்பேத்கர் யாரை எதை,யாரை எதிர்த்தாரென்றோ அறியா பிள்ளைகளின் பிதற்றல் நூல் வெளியீடு..
.
உலகில் எவ்வளவு மிக உயர்ந்த சோப்பை போட்டுக் குளித்தாலும் ஒரு சூத்திரன் பிராமணனாக முடியாது. வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் உடையவர்களாக இருக்க முடியாது
என்றவர்
காஞ்சி மகா பெரியவா
(நூல் ஆதாரம்)தெய்வத்தின் குரல்..
நடந்தது நூல்(புத்தகம்) வெளியீடல்ல (பூ)நூல் புகழ்ச்சிக்கான ஏற்பாடு..
..
தேர்தலில் நின்று வென்று வந்தவர்.. மக்களால் தேர்வு செய்யபட்டவர்.. அவரை அவரின் உழைப்பை, வந்தால் நமது கோர்க்கைகளை,தேவைகளை,
அவர்சொல்லாமலேயே செய்வார் என்றுணர்ந்து வெற்றிபெற செய்கிறார்கள்.. திருட்டு லாட்டரிவிற்பவனும் ப்ளாக் டிக்கட்டும் சமூகநீதி பேசுவதும் அதை ஊடகங்கள் முன்னெடுப்பதும் சகிக்கவில்லை..
"மக்களை செல் " என்ற அண்ணனின் சொல்லை மந்திரமாய் கொண்டு சுழல்பவர்கள் நாங்கள்.. சூரிய ஒளியில் "வெளிச்சம்" காண்பவர்கள்
விட்டில் பூச்சிகளுக்காக கலங்க போகிறோம்.. போய் ஓரமாய் விளையாடு..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment