ராமதாஸ் தன் மகனை, மருமகளை,நிறுத்தி தோல்விக்கண்டவர் தன் பெயர்த்தியையும் நிறுத்தி வரலாற்று சாதனை நிகழ்த்திய இருக்கலாம்..
"விக்கிறவாண்டியா" என "கொப்பளித்தார்" சௌமியா இல்லை துரத்துகிற"வாண்டி" என்பதை புரிந்திருப்பார்..
சாதிவெறியூட்டும் செயல் தமிழகத்தில் எடுபடாது.. "ராமதாஸ் வகையாறா"வின் எண்ணம் ஈடேறாது என்பதை மக்கள் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்..
..
தமிழக மக்கள்
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் எனும் மகத்தான தலைவனின் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்குமென நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.. நயவஞ்சகர்கள்,நம்பிக்கை துரோகிகள் சுயநலவிஷமிகள் தானெனும் கர்வம் கொண்டவர்கள்,தனக்கே எல்லாம் தெரியுமென்பவர்கள் அகந்தையில் அலைபவர்கள் இவர்களெல்லாம் எககாலத்தும் "குணம்பிடிக்க"மாட்டார்கள் என்பதை இந்த தேர்தல் களம் உணர்த்தியிருக்கிறது .. "புலிகள்ஆதரவு" என்ற பழைய பல்லவியை கையிலெடுத்து தமிழ்நாட்டை கூறுபோட நினைக்கும் கூறுகெட்டவர்களை "கட்டிவச்சகாசு"கூட கிடைக்காமல் கதறவிட்டிருக்கிறார்கள்.. தமிழ்நாடு கண்ட மாபெரும் தலைவனை "சண்டாளன்" என கொக்கரித்தவர்கள் இன்று நோட்டாவை மிஞ்சவே தடுமாறுகிறார்கள்..
..
தமிழ் தமிழர் என கதைத்து இங்கே இலங்கை அரசியலை பேசி திரிந்தால் யாழ்பாணம் மொழியில் சொல்லவேண்டுமெனில் "பிள்ளைப்பிடி"யனின் கதிதான் இங்கே நிகழும், காலம் வலிமையானது.. இன்றைய தமிழ்நாட்டின் வளர்ச்சியின் 80%விழுக்காடு நீங்கள் சொல்லும் சண்டாளன் சமைத்தது..அதை உண்டு உணர்ந்து,உயர்ந்துவிட்டு இன்று பாசிசத்தின் கிளிப்பேச்சை செப்புகிறீர்.. அரசியல் என்பது எதிர்கருத்தும் விமர்சனமும் கொள்கை வேறுபாடும் கொண்டதுதான்.. ஆனால் எல்லை மீறிய காழ்ப்புணர்ச்சியும் விசமேறிய வாரத்தைகளும் உங்கள் நிழல் கூட வெறுக்கும் நிலைக்கு தள்ளப்படுவீர்..
..
தமிழ்நாட்டு மக்கள் மிக நாகரீகமாக பாடமெடுக்கிறார்கள் திரும்ப திரும்ப அதே வழியில் பயணித்தால் இருக்குமிடமே தெரியாமல் அழித்துவிடுவார்கள்.. சாதி மத,மொழியரசியலில் விடுத்து நலனரசியலில் கவனம் செலுத்தினால் மட்டுமே எதிர்க்கட்சியாக வலம் வர முடியும் ..
ஏனெனில் சிலநேரம் காலம் கொடூரமாய் பழிதீர்க்கும் கரையேற முடியாமல் செய்துவிடும் ..
..
விக்ரவாண்டியில் "சனநாயக" கடமையாற்றிய அனைவருக்கும் நன்றி
முத்துவேல்கருணாநிதிஸ்டாலினுக்கு வாழ்த்துகள்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment