கலைஞர் நாணயம்..
நா நயத்தோடு சிலம்பமாடிய
தலைவனுக்கு
இந்திய ஒன்றியம் நாணயத்தை வழங்கி சிறப்பிக்கிறது..
ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் ஒரு ஆட்சியாளன் எப்படி செயல்பட வேண்டுமென வாழ்வின் இறுதிவரை எப்படி போராட வேண்டுமென போதித்த பெருந்தலைவன்..
..
அரசியலில் பொதுவாழ்வில் புதிய இலக்கணம் படைத்து புதிதாய் வருவோருக்கு பாடமாய் அமைந்து வரலாறாய் திகழும் மகத்தான மனிதன்.. எதிரிக்கும் பகைமை கொண்டு அலைந்தோர்க்கும் சேர்த்தே உழைத்தவன்.. சிலரின் வசைகளும் திசைமாறி சென்ற பறவைகளின் எச்சங்களும் இவனை அசிங்கபடுத்த நினைத்து அவமானப்பட்டு நின்றதை காலம் நமக்கு கணக்கிட்டு காட்டியது .. இறந்து கிடந்தபோதும் கூர்வாளோடு திரிந்த பாசிசத்தை வென்றவன்..
..
தமிழ்நாடு கண்ட சிறந்த தலைவர்களில் "தகைசால்" தலைவன்..
பகையும் அஞ்சியது
இவன் படையோட்டம் கண்டு
புயலாய் தென்றலாய்
ரீங்காரமிடும் குயிலாய்
தேன்மதுரத் தமிழில் இவன் பாடியது கண்டு ஆடியது தமிழர் கூட்டம்..
பகை மறந்து ஆடிவரும் உண்டு..
பஞ்சமாபாதகனும் இவன்
மகுடிக்கு மயங்கியதுண்டு..
..
பொதுவாழ்வில் இவன் ஆட்டம் கண்டு
பதறியது எதிரிகள் கூடாரம்
எந்த கல்லூரியில் படித்தான் ராமன் என்ற வீச்சில் விழுந்தது மொத்தமும் ..
நேர் நின்றால் மயங்கிவிடுவேன் என பாதை மாற்றியவர்கள் உண்டு
இந்த வசீகரனை கண்டு..
பசித்தவன், பாமரன், நடுங்கியவன் ,
நாதியற்றவன், நசுக்கப்பட்டவன்,
நிலை உயர நா நயத்தோடும் நாணயத்தோடும் (honest) உழைத்தவனுக்கு இந்திய ஒன்றியம் நன்றிக்கடன் செலுத்துகிறது..
#கலைஞர்நாணயம்
#தமிழ்வெல்லும்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment