யார் என்பதை
நான் தான் சொல்ல வேண்டும்
ஊர் சொல்ல தொடங்கும் போது
அழ நேரிடும்
..
என் உயரம் எனக்கு தெரிய வேண்டும்..
இல்லையெனில்
வீழ்ச்சி தொடங்கும் ..
படைவீரர்களின் கால் நரம்பை துண்டித்துவிட்டு
"ராஜா" படையோட்டம் நடத்த முடியாது..
கூட இருந்தவர்களை ஒவ்வொன்றாய் இழந்தால்
பலவீனப்படும்
..
குறைகள் இல்லா எதுவுமில்லை
குறைகளை உணராதவன்
உயர்வதில்லை
அகந்தையும் கர்வமும்
அழிவின் தொடக்கம்..
நீ..
யாரென்று நீதான் தீர்மானிக்க வேண்டும்
..
ஓடும் பாதை மட்டுமே
கண்ணில் தெரிந்தால்
வெற்றி எளிதாகும்
கூட
ஓடுகிறவனை
பார்த்துக்கொண்டே இருந்தால் பயம் வரும்..
தோல்வி வரும்
நடுக்கம் வரும்..
..
அடுத்தவன் திமிரில்
முறுக்கி திரிந்தால்
கால் நடுங்கதான் செய்யும்
உன் பலமறிந்து விளையாடினால்
"பக்கபலம்" தானாய் வரும்..
நான் யாரென்பதை
நான் தான் தீர்மானிக்க வேண்டும்..
..
நான் யார் என்பதை
நானே முடிவு செய்து
என்
பலமறிந்து விளையாடினால்
ஜெயிக்கிறனோ,இல்லையோ
ரசிக்கும்படியாக இருக்கும்..
நீயே
ரசிக்கும்படியாக இருக்கும்
..
சூழ்ச்சிகள் புத்திசாலித்தனமில்லை
அழுகை வீரமில்லை..
அகந்தை வாழ்வதில்லை
அடக்கம் தாழ்வதில்லை
அன்பு வீழ்வதில்லை
நீ..
யாரென்று..
..
அது சரி நான் யார்..?
காலம் சொல்லும்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment