Tuesday, February 6, 2024

மானமிகு சரண்யா தேவி..
அயலக திமுக குவைத் மகளிர் அணி செயலாளர் இன்று அயலக தமிழர் தினம் 2024 விழாவில் மாணபமை தமிழ்நாடு முதலமை‌ச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் விளையாட்டுத் துறைக்கான விருதும் 40கிராம் தங்க பதக்கமும் வழங்கப்பட்டது மகிழ்வான தருணம் .. குவைத்தில் சிறந்த துப்பாக்கி சுடும் வீராங்கனையாக வலம் வருபவர் முதல் பரிசை வென்றவர் தகுதியும் திறமையும் வாய்ந்தவருக்கு வழங்கப்பட்டிருப்பதில் பெரும் மகிழ்ச்சிக் கொள்கிறோம்..
..
நன்றாக நினைவிருக்கிறது குருதிக் கொடை நிகழ்ச்சியில் கைரளியர்கள்(மலையாளிகள்) கலந்துக்கொண்ட நிகழ்வு முடிந்து நமக்கான நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது அப்போது நண்பர் சிதம்பரம் தியாகராஜன் அழைத்துவந்து .. நான் தமிழச்சி என்று பெருமையாக சொன்னார்.. 
அப்போது அன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு விழாவை மாதாமாதம் ஒவ்வொரு அமர்வாக உலகத் தத்துவஞானி தந்தை பெரியார் நூலகம் சார்பில் நடத்திக்கொண்டிருந்த தருணம் .. அப்போது நூலகத்தின் காப்பாளர் எமது ஆசான் வளைகுடா பெரியார் செல்லபெருமாள் அவர்களிடத்தில்  அடுத்த அமர்வில் இவர் பேசட்டும் என்றேன் மகிழ்வு தெரிவித்தார் அப்படியாக தொடர்ந்த உறவு .. மேடையில் முழுவதுமாக பெண்களைக்கொண்டே ஒரு அமர்வு இப்படி எல்லா நிகழ்விலும் எங்களோடு 
 பயணித்து இன்று அயலக திமுக குவைத் மகளிர் அணிச் செயலாளராக உயர்ந்து நிற்கிறார்  ..
"நல்விதைகளை" விதைத்துக் கொண்டே இருப்போம் 
வாழ்க! திராவிடம் 
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment