Monday, January 8, 2024

திமுகவும் இஸ்லாமியர்களும்..
..
திமுக முஸ்லிம்களுக்கு எதுவுமே செய்யவில்லையென்றே வைத்துக் கொள்வோம்.. பாஜகவை காட்டி பயமுறுத்துகிறது, சிறைவாசிகளின் விடுதலை என்னானது என்ற கேள்விகளை தவிர்த்து வேறெதாவது திமுகவை வேண்டாம் என்பதற்கு காரணம் சொல்ல முடியுமா என்றால் இல்லை
..
சிறைவாசிகள் விடுதலையில் அதிமுக ஆட்சியில் எதாவது செய்ததா .. Lord ராமருக்கு இங்கு கட்டாமல் வேறெங்கு கட்டுவது என்ற ஜெயலலிதா,.. அதிமுக எதிர்த்து வாக்களித்திருந்தால் CAA சட்டமாகியிருக்காதென்ற சாதரண புரிதல் கூடவா இஸ்லாமிய சமூகத்திற்கு இல்லாமல் போனது .. இஸ்லாமியர்களுக்கு உள் ஒதுக்கீட்டை தந்த போது மதரீதியான இட ஒதுக்கீடு என விமர்சித்தவர் ஜெயலலிதா இது உச்சநீதிமன்றத்தில் நிற்காது என்று சொன்னவரும் அவர்தான்
..
உண்மையில் முஸ்லீம்கள் அரசு தரும் உதவிகளை உரிமைகளை சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்களா , அதற்காக 48 அமைப்புகள் முயற்சி செய்தார்களா, +2 ல் மதிப்பெண் 60% விழுக்காடுகளுக்கு மேல் வாங்கினால், மாநில அரசின் உதவி தொகை உண்டு 80% விழுக்காட்டிற்கு ஒன்றிய அரசின் உதவி தொகை உண்டு.. இந்த அமைப்புகளுக்கு எவ்வளவு உதவி தொகை என்றாவது தெரியுமா.. 2021/ 2022 கல்வி ஆண்டில் தகுதியுள்ள முஸ்லிம் மாணவச் செல்வங்கள் 63.5% விழுக்காடு உதவி தொகை பெறவில்லை அது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்வதுண்டா..
..
திமுக அரசு வழங்கிய சலுகைகள், உரிமைகள் போல் வேறெந்த அரசாவது செய்ததுண்டா.. அரசியல் காய்நகர்த்தல்களில் யாரோடு எப்போது கூட்டணி வேண்டுமென தீர்மானிக்கிறது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல அனைத்து சமுதாயத்திற்கும் தான் அரசு .. அயோத்திக்கு செல்லவிரும்பினால் உதவிகள் செய்யபடுமென அமைச்சர் சொன்னால் பாஜகவோடு இணைந்துவிட்டதாக சொல்பவர்கள் இஸ்லாமியர்களுக்கு அதேபோல் சலுகைகளை செய்கிற போது இநதுக்களில் பெரும்பான்மையினர் கூப்பாடு போடுவதில்லையே..
..
வேறெந்த ஆட்சியையும் விட திமுக ஆட்சிக்கு வரும் போதும் போராட்டம் கோரிக்கைகள் என எல்லோரும் தூக்கம் கலைத்து எழுகிறார்கள், இந்த அரசு செய்து தரும் என்ற நம்பிக்கையில் இப்போது கூட நீண்டநாள் சிறைவாசிகள் விடயத்தில் சட்டரீதியான நகர்வை திமுக செய்கிறது .. பாஜகவின் செயல்திட்டத்தை மிக சரியாக செய்கிற ஒரு கூட்டம் இஸ்லாமிய பொது சமுகத்தின் முன் கேவலப்பட்டு நிற்கிறது என்பது தான் உண்மை .. 
..
நிற்க..
திமுக எல்லோருக்குமான இயக்கம்,  நியாயமான கோரிக்கைகள் கேட்காமலேயே நிறைவேற்றி தரும் என்ற நம்பிக்கை முஸ்லிம்களிடத்தில் உண்டு ..  எத்தனை சூழ்ச்சி செய்தாலும் "பொய்கட்டி" ஆடினாலும், "நல்லிணக்க" நாடகம் போட்டாலும்  மதசார்பின்மை வேசம் கட்டினாலும் அரிதாரம் கலையும்.. ஏனெனில் உங்களிடம் உண்மை இல்லை ..  திமுக தவிர்த்து வேறெந்த கட்சியோடு நெருக்கம் காட்டினாலும் "விழலுக்கு இறைத்த நீர்"..
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்

No comments:

Post a Comment