என்
வாழ்வியல் நெறியே..என் வாழ்வின் ஒளியே!..
என் அகமே!..
என் ஜீவனின் நீரூற்றே..
..
என்
வாழ்வின் வசந்தங்களும்
ஒழுங்கும், உயிர்ப்பும் நீ..
காட்டாறாய் புரண்டோடியதை
அழகிய ஓடையாய் மாற்றிய
பேரன்பே..
ஏற்றதாழவை இன்முகத்தோடு எதிர்க்கொண்டு
இல்லறம் சிறக்க
வாழ்வின் புரிதலை தந்து
மேம்பட பெரும் வெளிச்சம் தரும்
நடமாடும் பரம்பொருள் நீ..
என் வாழ்வின் தீபம் நீ..
..
புரிதலும்,பகிர்தலும்
இல்லறத்தில் நல்லறமென வாழ்தலும்
உறவின் பொருளாய் இருத்தலும்
நம் வாழ்வின் பேரன்பின் அடையாளம் ..
என் இணையே வாழ்க பல்லாண்டு
..
என் ஆறுமுகம் நீ..
என் ஆறாத வடு நீ..
என் இனிமை நீ..
என் எல்லாம் நீ..
வாழ்க! வாழ்க!! சிறந்து மகிழ்ந்து வாழ்க!!!
..
No comments:
Post a Comment