Monday, April 29, 2024

தேர்தல் 2024 ..
மிகப் பெரிய சனநாயக நாட்டின் அதிகாரத்திற்கான போட்டி.. ஒவ்வொரு சாமானியனும் தன் வலிமையை உணர்த்துகின்ற தேர்தல்.. உங்கள் உரிமையில் தலையிடுவதல்ல நோக்கம் மாறாக சிலவற்றை ஞாபகபடுத்துவது தேவை என்பதால் இந்த பதிவு ..
..
கடந்த பத்தாண்டுகள் சனநாயக மரபுகள் மீறபட்டும் சர்வாதிகார எல்லையில் நின்று திமிரோடு தோள் உயர்த்தி இங்கே நானே யோக்கியன் என கூவும் மனிதர் மிகப் பெரிய பொய்யர்.. தன் கல்வி சான்றிதழிலேயே அவரின் முகம் நமக்கு தெரிந்துவிட்டது .. மக்களை மூளைச்சலவை செய்தால், மக்கள் மனதில் மதத்தை ஏற்றி வைத்தால், அவதார புருசரென புழுகினால் நம்பிவிடுவார்கள்  என்ற பழைய பாட்டை திரும்ப திரும்ப பாடி வரும் 
ஏமாற்றுக்காரன் ..
..
மக்கள் தரும் வரிப்பணம் சிலருக்கான தள்ளுபடியில் கரைவதும் தொடர்ந்து மக்கள் பிழியபடுவதும் உலகிலேயே இந்தியாவில் தான் பெட்ரோல் விலையில் கொள்ளை நடப்பதும் கண் கூடாக பார்க்கிறோம்.. சில முதலாளிகளுக்காக சிறு தொழில் முனைவோர் நடுரோட்டில் நிறுத்தப்பட்டு முதலாளியாக இருந்தவன் ஆட்டோ ஓட்டி குடும்பம் நடத்தும் அவலத்தை உருவாக்கியவன் நல்லவன் வேஷம் கட்டுகிறான்.. இங்கே ரௌடிகள் நல்லவனாகவும், கொள்ளையடித்தவன் பாஜகவில் சேர்ந்தால் புனிதராகவும் நொடியில் மாற்றபடும் விந்தை வேறெங்கும் கேட்டிராது, கண்டிராதது.. 
..
நமக்கானவர் யார்.. பலவேஷம்கட்டி பொய்யில் மூழ்கி பழங்கதை புரட்டைபேசி கடைசியில் சாதிமதவெறியை தூண்டும் அயோக்கியர்கள் அல்ல..மாறாக எளிமையாய் அனைத்து மக்களுக்காக பரிந்துபேசி துயர் துடைக்க ,அல்லல்படுவோர் ஆதிக்கத்தால் நசுக்கபடுவோர் விளிம்புநிலையோர், ஏழை எளியவர் வாழ்க்கை தரத்தை உயர்த்த சனநாயக மாண்புகளை மதிக்கும் நல்ல தலைவர் வேண்டும்.. நானிருக்கிறேன் என்ற நம்பிக்கையை நம்மில் விதைக்கும் நல்லவர் வேண்டும்.. 
..
பாசிசத்தின் கோரப்பிடியிலிருந்து 
தேசத்தை காக்க நம் விரல் கொண்டு போர் செய்வோம்.. பொய்யர்களை, PMCare என்ற பெயரில் நவீன கொள்ளையை, ஊழல் செய்தோரை புனிதபடுத்தி ஊழலை ஒழிக்கும் "மாமனிதரை" வீட்டுக்கு அனுப்புவோம்.. குடியரசு தலைவரையே நிற்க வைக்கும் தீண்டாமையை விரட்ட.. இந்திய ஒன்றியத்திற்கே வழிகாட்டும் உதயசூரியனுக்கு வாக்களிப்போம் 
I N D I A கூட்டணியை அரியணையேற்றுவோம்..  
..
சூன் 4ல் விடியும்..
..
ஆலஞ்சியார் 

No comments:

Post a Comment