Wednesday, January 31, 2018
தளபதி
தளபதி..
கட்சியின் செயல்தலைவராய் நிறைய தடைகளை கடந்து நிமிர செய்யும் பணியில் தன்னை விரைந்து ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார்..
தளபதி மிளிர்கிறார்..
மிகவும் பக்குவப்பட்ட உரையாடல்களும் நடத்தையும் அவரை மேலும் மேலும் உயரத்திற்கு கொண்டுவருகிறது.. நிதானமாக செயல்படுவோர் நெடுகாலம் நிலைத்து நிற்பர்..
தளபதியாரின் சமீபத்திய நடவடிக்கைகள் கூர்ந்து கவனியுங்கள்.. மிகவும் கண்ணியமான நாகரீக அரசியலை வளர்த்தெடுக்க முற்படுகிறார்.. அரசியல் தலைமையென்பது அரவணைத்து செல்லும் பெரும்பணி என்பதை உணர்ந்து மாவட்டவாரியாக தொண்டர்கள் கருத்தறிந்து கட்சியை வடிவமைக்க.. இடையில் முளைத்த களைகளை பிடிங்கியெறிய தாமே நேர்சென்று .. யாரையும் துணைக்கழைக்காமல் தொண்டரின் நாடியை பிடித்து உணர்வதென்ற நோக்கம் நல்ல செழுமையை தரும்..
..
ஏதோ இன்றைக்கு தான் ஸ்டாலின் இந்த நல்ல போக்கை கடைப்பிடித்ததாக தோன்றும்..அவரை தொடர்ந்து கவனிக்கறவர்களுக்கு அவரின் பண்பு நன்கு விளங்கும்.. முதல்முதலில் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்றவுடன் நடந்த முதல் கூட்டம் பாபநாசத்தில் ஏற்பாடு செய்திருந்தோம்.. ஒருமரத்தை நட்டு குடைபோல் மேடை அமைத்திருந்தோம்.. பேசும் போது ஸ்டாலின் என்னை நம்பி இளைஞர்அணி பொறுப்பை தந்திருக்கிறீர்கள் இந்த மேடையை கூட ஒற்றை மர குடைப்போல் வடிவமைத்து இருக்கிறீர்கள் இங்கு பேசியவர்கள் என்னிடம் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதை சொன்னார்கள்..அவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்..உங்கள் அனைவரின் ஆதரவு இல்லாமல் என்னால் தனித்து செயல்பட முடியாது உங்கள் துணைக்கொண்டு வெற்றிகரமாக
கலைஞரும் பேராசிரியரும் என்னை நம்பி ஒப்படைத்த பொறுப்பை செய்வேன் என உறுதியளிக்கிறேன் என்றார்.. அந்த தன்மைதான் இந்தளவிற்கு உயர்த்தியிருக்கிறது.. இதோ நான்தான் தலைவன் என்றவர்கள் விலாசம் தெரியாமல் போனதற்கு இந்த எளிய பண்பில்லாமல் போனதே காரணம்..
..
எப்போதும் கூடவே இருப்பவர்கள் எதையாவது மறைக்க கூடும் மனம் கஷ்டபடுமே என பிறகு சொல்லிக்கொள்ளலாமென தவிர்க்ககூடும் .. அதனால் மூத்த செயல்பாட்டாளர்களை கூட தவிர்த்து தானே நேரடியாய் சென்று கருத்தை கேட்பதும்... நேரில் சொல்ல முடியாத விசயங்களை எழுதி பெட்டியிலே போடசொல்லி அதை மிக நாணயமான நேர்மையான தியாகராஜன் பழனிவேலை கொண்டு பதிவேற்றி முழுவதுமாக அறிந்துகொள்ளுதல் சரியான பாதை வகுக்க பெரிதும் பயன்படும்..
கடந்தால தவறகளிலிருந்தும் அல்லது பிழைகளிலிருந்து பாடம் படித்தலே..சிறந்துவிளங்க உதவும்.
தமிழகத்தின் நம்பிக்கை தளபதி அவர்கள்
எதிரிகளும் வாயடைத்து போய்நிற்கிற இவரின் நேர்மைான செயல்பாடு நல்ல எதிர்காலத்தை தரும் இந்த நேரத்தில் திராவிடம் தந்த பெருந்தகைகள்
கலைஞருக்கும் பேராசியருக்கும் நன்றிகள்..
மிகச்சரியான நபரை தேர்வு செய்து வார்த்தெடுத்து செதுக்கி ..இயக்கத்தின் நான்காம் தலைமுறை தலைவனாக்கி தந்திருக்கிறீர்..
நன்றி! நன்றி!!
..
#எம்இனத்தின்_நம்பிக்கை
..
Aalanci Spm
காதல் பேசுவோம்
#கொஞ்சம்_காதல்பேசுவோம்..
..
அவளும் நானும்..
எப்படி சொல்வேன்..
அரும்புமீசை வளரும்காலம்
காதல் அரும்பிய பொன்நேரம்....
ஆசையா.. ஈர்ப்பா..
அது காதல்தானா..
அறியாமல் அரும்பிய
மனம் கவர்ந்த மல்லி..
..
ஆற்றங்கரையில்
விரல்உரசி..
நடந்ததும்..
வரவை எண்ணி.
ஆற்றுபடுகையில்
புத்தகத்தால் முகம் மூடி
தவமிருந்த மணிதுளிகள்..
மழை நின்று
இலை சிந்தும் நீரில்
நனைந்து..
இதமாய் இதழ் பதித்த..
நான்..ரசித்த
ரசனைக்குரிய நாட்கள்..
..
முதல் காதல்..
முதல் முத்தம்..
முதல் ஸ்பரிசம்..
மறக்கமுடியாத..
காவிரிக்கரை..
அழகிய தென்னந்தோப்பு..
சிறிய குட்டை..
தாமரைக்குளம்..
அமைதியான..
அக்ரஹார கோவில் நிழல்..
சின்ன சிணுங்கல்..
பெரும் மூச்சு..
கருவிழி நாட்டியம்..
என்னை கொன்ற
கவிதையவள்
மறக்கமுடியுமா..
..
ஒற்றைவரியில்..
மனம் விரும்பிய
என் முதல்
#கவிதை ..
..
அவளும் நானும்..
..
Aalanci Spm
Tuesday, January 30, 2018
திராவிடம் தந்த திமிர்..
பொன்னரும் தமிழிசையும் ஆதங்கபட்டதாக செய்திகள் உலவுகிறது.. அவ்வளவு வெளிப்படையாக எல்லாம் பேசிவிட மாட்டார்கள்.
தொடர்ந்து இழிவு படுத்தபட்டாலும் அவர்கள் மனதுக்குள் புழுங்குவார்களே தவிர அதை வெளியில்காட்டி தங்கள் சகாக்களை கையொழிய மாட்டார்கள்..
உண்மையில் எச்.ராசாவை விட பாஜகவிற்காக நல்லமுறையில் உழைப்பவர்கள்.. சாண் ஏற நினைக்கிற போது முழம் சறுக்கும்.. அந்த வேலையை ராசா மிக கச்சிதமாகவே செய்வார்..தங்கள் பகுதிகளில் மக்கள் செல்வாக்குள்ள தலைவர்களை வளரவிடாமல் செய்வதில் பார்பனீயம் மிக கடமையோடு வேலைசெய்யும்.. நாகர்கோவிலில் இனி பொன்னருக்கு பழைய மரியாதை கிடைக்குமா என தெரியவில்லை ..
..
இந்து நாடார் இன மக்களில் ஏனெனில் கிருஸ்தவ நாடார்களில் பெரும்பாலானோர் பாஜகவை ஏறெடுத்தும் பார்பதில்லை .. இவர்கள் மதமாறிவிட்டார்களென சொல்லி மனதில் வன்மத்தை கொட்டி இந்து நாடார்களில் சிலரை பாஜக அவர்கள் பக்கம் இழுத்தது.. முன்பெல்லாம் காங்கிரஸில் இருந்தவர்கள் பாஜகவிற்கு இடம்பெயர மதம் சார்ந்த உணர்வை ஊட்டியதே மிக முக்கிய காரணம்..
பின்னர் அது தொடர்ந்து பாஜக தலைமை வரை வர காரணமாகியதும் வழக்கம் போல் பார்பனர்கள் அவர்களை இல்லாதாக்கும் அல்லது வளரவிடாமல் உயர் நல் பதவிகளுக்கு வந்துவிடாமல் பார்த்துக்கொண்டனர்..
நட்டுவைத்த வேலுக்கு கிடைத்த மரியாதை.. நாகர்கோவில் பொன்னுக்கு கிடைக்கவில்லை..
காரணம் எல்லோரும் அறிந்ததுதான் ..
..
தொடர்ந்து தமிழக பாஜகவில் ராசாவின் குறிக்கீடு அளவிற்கதிகமாக இருக்கிறது .. ஒரு கட்டத்தில் தேசிய செயலராக நியமித்து கேரள பொறுப்பை வழங்கிய பின்னரும் தமிழக அரசியலில் .. குறிப்பாக பாஜக நிர்வாகத்தில் அதீத தலையீடும்.. நாடார் இன தலைவர்களை ஒருபடி தாழே .. வைத்ததும் பொன்னரையும் தமிழிசையும் தங்கள் நட்புவட்டத்தில் பேசவைத்து அதை கசியவிட்டிருக்கிறார்கள்..
அதுதான் நானும் திராவிடன் தான் என்கிற வெளிப்படையான அறைகூவல்.. அய்யா சுப.வீ சொன்னதைப்போல பாஜகவில் யாருக்கோ சேதி சொல்லியிருக்கிறார்.. காரணம் பார்பனர்களுக்கு பிடிக்காத ஒரு சொல் உண்டெனில் அது திராவிடம் தான்... திராவிடம் என்ற பெயரை கேட்டாலே கொதிக்கிற எண்ணெய் சட்டியில் விழுந்தைப்போல துடிப்பார்கள்.. அவர்களுக்கு பிடிக்காத வார்த்தை திராவிடம்.. நூறாண்டுகளாய் அவர்களை துரத்துகிற .. வேட்டையாடுகிற தூக்கத்தில் கூட பதறவைக்கிற சொல் .. அதை கையிலெடுத்து பொன்னர் ஆடும் போதே உள்புகைந்தது வெளிவர ஆரம்பித்துவிட்டது.. ஆம் தகுதியிருந்தாலும் கீழே அழுத்தி அவர்மீதே ஏறிநின்று கோரதாண்டவம் ஆடுவதை யார்தான் பொறுப்பார்கள் ..
..
பாஜக என்பதே பார்பனர்களுக்கான கட்சி .. அது இந்துக்களுக்கானதென்று சொல்லி திரிந்தாலும் நிர்மலா சீதாராமன்களுக்கே கௌரவம் கிடைக்கும்.. இங்கே பெயருக்கு தமிழிசையை தலைவராக வைத்துவிட்டு ராசாவை கேட்டுதான்.. அல்லது சொல்படிதான் எதுவும் நடக்கும்.. தமிழக பாஜகவில் தமிழிசைப்போல கடுமையாக உழைத்தவர்கள் யாரும் இல்லையென்றே கூறவேண்டும் சமூகவலைதளங்களில் கடுமையாக தாக்குதல் நடந்தும் தொடர்ந்து செயல்பட்டு கொண்டேயிருந்தவர்.. வானதியை போல அல்லாமல் அப்பழுக்கற்றவராக வலம் வருகிறார்.. ஆனால் இவர்கள் என்னதான் கடுமையாக உழைத்தாலும் நேர்மையாக இருந்தாலும்.. பாஜகவில் இரண்டாம் நிலைதான்..
..
இன்றல்ல...,எப்போதுமே நாடார்களை பார்பனர்கள் தாழ்ந்தே பார்த்துவந்திருக்கிறார்கள்...இன்று உழைப்பால் உயரத்தை எத்தியவர்களென்றாலும் அந்த இடைவெளி தொடரதான் செய்கிறது... பனை மரத்தின் மீது இருக்கும் நபர்.. அவ்வழியே பாப்பான் சென்றால் .. மரத்தை மட்டையால் அடித்து ஒலி எழுப்பவேண்டும் கீழே நடந்து செல்கிற பாப்பான் நகர்ந்து செல்வார் .. நாடாரின் நிழல் கூட தீட்டென்று சொன்னவர்கள்... தலித் மக்களை தொட்டால்தான் தீட்டு... சாணரை பார்த்தாலே தீட்டென்றவன்... இன்றைக்கு நானும் திராவிடன் என பார்பனன் செவியருகே உரக்க சொல்கிறாரே.. மானமிகு பொன்னர் அது இந்த திராவிடம் தந்த தைரியம்
..
மானத்தோடு வாழத்தான் திராவிடம் கற்றுதந்தது...
..
Aalanci Spm
Monday, January 29, 2018
பேராயுதம்
இதுதான் திமிர்..
மதுரை ஆதீனம் என்ன சொல்லியிருக்கிறார்.. அவர் என்னிடம் வேலைகேட்டு வந்தவர்..
தினமணியில் வந்த கட்டுரை.. நான் தினமணி படிப்பதில்லை.. ஹேராம்.. படம்.. நான் பார்க்கவில்லை.. ராகவன் எழுதிய ஆண்டாள்.. அது எனக்கு தெரியாது.. ஆனால் சூத்திரன் எப்படி ஆண்டாளை பேசலாம்.. இதுதான் பார்ப்பனீயம்.. அவர்களுக்குள் காட்டி கொடுத்துக்கொள்வார்கள் ஆனால் அதை நாம் சொன்னால் பேசாதே என்பது எந்த ரகம்.. நல்லதை மட்டுமே பேசவேண்டுமென்றால் பொய் தான் அதிகம் பேசவேண்டி வரும்... தட்டில் இனிப்போடு பீ வைக்கிறீரகள் என்கிறார் ..பீ அல்ல காரம் கடும் காரம் அது மூளையை வேலை செய்ய சொல்லும் .. அறியாமல் உண்மையை உளறவைக்கும்..
எல்லாவழிகளும் அடைபடும் போது இப்படி பேசினால் தான் தப்பிக்கமுடியும்..
எஸ்.வி சேகர் நேற்றைய தினம் வச்சு செய்தார்..
..
காஞ்சி மடத்தை சேர்ந்த ஜெயேந்திரனை விமர்சிக்க கூடாதாம் கடவுளாம்.. யாருக்கு கடவுள் பாப்பானுக்கு கடவுள் என்றால் அதே பாப்பானை கொன்ற வழக்கில் கைது செய்தது ஏன்.. இன்றுவரை மேல்முறையீடு செய்யாமல் பாதிக்கபட்ட சங்கரராமன் குடும்பம் மிரட்டபட்டிருக்கிறதே இதை இந்த சேகர் பாப்பான் ஏன் கேள்விகேட்கவில்லை.. எங்க அப்பாரு தானா கழுத்தறுத்து செத்துட்டார் என்ற மகனின் கதறுலும் எனக்கிருக்கிற ஒரே மகனை இழக்கணுமா என்ற தாயின் இயலாமையும் அவர்கள் வயிறெறிந்த சாபம்...சேகர் காதுகளுக்கு கேட்கவில்லையா.. சேகர் சொன்னதைப்போல பாதிக்கபட்டவரின் சாபம் என்ன செய்துவிட்டது.. காமகளியாட்டங்களை கடவுள் பெயரில் நடத்துவதாக பாப்பன பெண்களே சொன்னபோது இந்த காமெடி பாப்பான் எங்கே .. அப்பன் ஆவியோடு பேசிக்கொண்டிருந்தாரா.. எவ்வளவு பொய்.. ஒரு பேட்டியில் தன் தந்தையின் ஆவியோடு பேசினேன் தன் மகனின் இரண்டாவது படம் பிரமாதமாக ஓடுமென ஆவி சொன்னதாக சொன்னார்.. படம் படுதோல்வி..
..
ஜீயர் சோடாபாட்டில் வீசலாமா என்றதற்கு பாவம் வீசுவேன்னு சொல்லலே என்கிறார்.. முதலில் இதில் ஒளிந்துகிடக்கும் உண்மை புரியவில்லை ..வேறு மாநிலத்தைப்போல இங்கே இடைசாதிக்காரனை கொம்பு சீவி அரிவாளெடுக்க சொல்லமுடியவில்லை தாங்களே எடுத்தால்தான் உண்டு அதுவும்.. செஞ்சுடுவேன் குரூப்போடு மோதினால் உண்மையிலேயே செஞ்சுடுவாங்கலோ என்கிற பயம்.. ஒன்றை புரிந்துக்கொள்ளவேண்டும் மத்தியில் ஆட்சியில் இருப்பதால் எதைவேண்டுமானாலும் செய்யலாமென்ற திமிர் .. அதிகாரமிக்க பதவிகளை அடையலாமே தவிர.. செல்வாக்கை பெற்றிட முடியாது.. மீண்டும் மீண்டும் இதேபோல் பேசிக்கொண்டிருந்தால் தமிழகத்தில் வேறுமாதிரியான பதிலடி கிடைக்கும்.. முட்டாளென்றதற்கே அடிமுட்டாளென சட்டென்று திருப்பி அடிக்கிற இனம்.. இங்கே எவனுக்கும் பயமுல்லை..காரணம் இங்கே பெருங்கிழவனின் சொல் இருக்கிறது.. செயல் இருக்கிறது.. மீறினால் தடி இருக்கிறது ..
..
எதையும் ஆய்ந்தறிக என்று எங்கள் பெருங்கிழவன் சொல்லிவிட்டு போயிருக்கிறான்.. நானே சொன்னாலும் உன் அறிவேற்காவிட்டால் ஏற்காதே என்று எனக்கு உலகில் எவருமே சொன்னதில்லை.. மதம் பேசியோர் வாழும் மார்க்கத்தை சொன்னோர் ஆன்றோர் அறிவில் சான்றோர் அறிவியல் சொன்னவர் .. என எவருமே,தாம் சொல்லவந்ததை மட்டுமே சரியென்றார்கள்.. இந்த ஈரோட்டு கிழவன் மட்டும் தான் .. யார் சொன்னாலும் உன் அறிவேற்காததை ஏற்காதே என்றான் அதனால்தான் காலம் கடந்தும் நிலைத்து நின்று பாசிசம் பேசுவோரை கதிகலங்க செய்கிறான்... பெரியாரின் சொல்லும் செயலுமே எமது ஆயுதங்கள்.. இந்த பொறம்போக்குகளிடமிருந்து எம்மை எந்நாளும் காத்து நிற்கும் பேராயுதங்கள்...
..
#பெரியார்
..
Aalanci Spm
Sunday, January 28, 2018
திராவிடம்
திராவிடம்..
திராவிட கட்சிகளென்ற உடனேயே திமுகவும்,அதிமுகவும் இணைத்தே பேசபடுகிறது.. முதலில் ஒன்றை புரிந்துக்கொள்ளவேண்டும்.. திராவிட சித்தாந்தத்திலிருந்து வேகமாக வெளியேறிய கட்சி அதிமுக..எம்ஜிஆர் காலத்திலேயே இந்த மண்ணில் பாசிசம் வளர ஆரம்பம் குறித்தது மகோரா(எம்ஜிஆர்) தான் ..
அதுவரை வெளிப்படையான போக்கு இருந்ததில்லை இந்துமுன்னணி இங்கே உருவாக காரணமாக இருந்தவர்.. எம்ஜிஆரை ஆர்எஸ்எஸ் தன் கட்டுபாட்டில் கொண்டுவர அதிகம் சிரமம் எடுக்கவில்லையென்றே நினைக்கிறேன்.. இஸ்லாமியருக்கு முஸ்லீம்லீக் இருக்கும் போது இந்துமுன்னணி இருக்ககூடாதாயென அப்துல் சமத் இடமே கேட்டார் .. சிறுபான்மையினரின் அமைப்பிற்கும் .. இந்துத்துவா அமைப்பிற்குமான வேறுபாடு தெரியாமல் பேசினார்.. சுதந்திரத்திற்குமுன்பே லீக் உண்டென்பதும் ..அது மதவெறியை கையிலெடுத்ததில்லை என்பதும் தெரிந்தும் ஆர்எஸ்எஸ் செயல்பாட்டிற்கான துவக்கத்தை குறித்தார்... திமுகவில் இருந்தபோது தனக்கு பதவிவேண்டுமென தொடர்ந்து தொந்தரவு செய்து கலைஞர் பொருளாளர் பதவியை தந்தபோது பேராசான் பெரியார்.. கலைஞருக்கு என்னாச்சு தெரிஞ்சே சகதியில கால வைத்துவிட்டாரே என்றார் அப்போதே எம்ஜிஆரின் சுயரூபம் அறிந்தவராக இருந்தார்..
..
அதிமுகவோடு திமுகவை இணைத்து இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளென பொதுவான கருத்தை தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.. திராவிடத்தை வீழ்த்த .. குறிப்பாக அதிகாரத்தில் திராவிடமென்ற நிலையை உடைத்தெறியவேண்டுமென்பதற்காக ஆர்எஸ்எஸால் .கொம்புசீவபட்டு கொண்டுவரபட்டவர்தான் எம்ஜிஆர் எனும் மகோரா.. சோ அந்த பணியை திறம்பட செய்தார்.. தொடர்ந்து தோல்வியிலும் திமுகவை ஒன்றும் செய்துவிட முடியவில்லை.. காரணம் கலைஞர் அவர் கட்டிகாத்த விதம் அதைவிட ஜனநாயக ரீதியிலான கட்சி அமைப்பு .. ஒருமுறை சாவும் மறுமுறை நோவும் திமுகவின் தோல்விக்கு காரணமானாலும் தொடர்ந்து இந்த சமூகத்தின் மீதான அக்கறை திமுகவை வீழ்ந்துவிடாமல் காத்தது.. நிறைய வரலாற்றுப்பிழைகளை திமுகழகம் எடுத்திருந்தாலும் அதை மக்கள் முற்றிலுமாக புறக்கணிக்காததற்கு திராவிடத்தின் வேர் பலமாக இருந்தது ஒரு காரணம்.. ஊடகத்தின் தொடர் எதிர்ப்பு தொடர்ந்து வரும் ஊழல் குற்றசாட்டுகள் .. அதில் ஒன்றில் கூட நிரூபிக்க முடியவில்லையென்றாலும்.. குற்றம் நிரூபிக்கபட்டவர்களை பரிசுத்த ஆவியைப்போல கொண்டாடுகிற பாசிச ஊடகவியலாளர்கள்.. நடுநிலையென்ற பெயரில் அதிமுகவோடு திமுகவை இணைத்தே பேசும் வழக்கத்தை மாற்றாத நேர்மையானவர்கள்..? இவைகளை/இவர்களை எல்லாம் கடந்தும் நிற்பதற்கு இந்த மண்ணின் ஈரமும்.. மக்களின் தெளிவும் மிகப்பெரிய காரணிகள்.. முதலில் இங்கே இந்து எனும் சொல்லே தவறென்று உணர தொடங்கியது பெரியாரின் பெரும்முயற்சிதான் காரணம்.. வர்ணாசிரம நிலைபாட்டை மிக தெளிவாக எடுத்துரைத்து.. இது பிராமண மதமென்ற உண்மையை மிக கவனமாக கையாண்டார் பெரியார்.. குலசாமிகளை கும்பிட்டுவந்தவன் நீ என்று அவனுக்கு சொல்லாமல் சொன்னார்.. இங்கே இந்த ஏற்றதாழ்வுதான் .. கிருஸ்துவனாக இஸ்லாமியனாக மாற்றியது .. அதோடு பூர்வகுடியானவனை .. எங்கிருந்தோ வந்தவன் ஏறிமிதிப்பதை அவனுக்கு புரியம்படியாக சொல்லி அதில் கடைசிவரை உரத்துநின்ற பெருங்கிழவன் பேராசானின் பெரும் தொண்டே இன்னமும் திராவிடம் இங்கே நிலைத்துநிற்க காரணம்..
..
திராவிடத்தை சொல்லாமல் இங்கே எதுவுமே நடக்காதென்பதின் சமீபத்திய உதாரணம் பொன்.ராதா.. ஆனால் இவர்கள் அதிமுக உட்பட தங்களை நிலைநிறுத்தலுக்காக உச்சரிப்பவர்கள்..தி.மு கழகமுமே மட்டுமே திராவிடர்களின் அரசியல் களத்திற்கான இயக்கம்.. இங்கே மற்றொன்றையும் சொல்லவேண்டும்.. ஏன் பார்பனர்கள் குறிப்பாக திமுக மீது கடும் வன்மம் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா.. இந்தியாவிலேயே முதன்முதலில் கோவில் நிர்வாகத்தை அரசே ஏற்றது திமுக ஆட்சியில்தான் அதுவரை பண்டாரங்கள் கையிலிருந்த கோவில் அரசு நிர்வாகத்திற்கு வந்தது .. அதுவரை கோவிலை வைத்து பிழைத்தது கெட்டுபோனதே என்கிற கோபம் அவர்களை தொடர்ந்து எதிரான போக்கை கொள்ளவைக்கிறது.
..
திமுக எதை செய்தாலும் அது ஆரியத்திற்கு எதிரானதாகவே அமையும்..
ஆரியத்திற்கெதிரான போரில்..
திராவிடம் என்றும் வெல்லும்..
..
Aalanci Spm
..
Friday, January 26, 2018
புறம்போக்கு
வரம்பு மீறுகிறாரா..
எது வரம்பு நீ .. எதில் நின்று ஆடுகிறாயோ அதே இடத்தில் வந்து அடித்துவிட்டு போவதென்பது எப்படி வரம்பு மீறுதல் ஆகும்.. மிக எளிமையாக கட்டுபாட்டோடு கூடிய நயமிகு சொற்களைதான் பயன்படுத்த வேண்டுமென எங்களுக்கும் தெரியும்.. தொடர்ந்து நல் தூயமொழியில்..? காரி உமிழும் போது.. துடைத்துவிட்டு போக சொல்வது சரியா..
..
தலைமைக்கென்று தகுதியில்லையா .. நாவடக்கம் தேவையில்லையா என கேட்போரே.. எத்தனை நாளைக்கு எங்களை திட்டுவீர்கள் எத்தனை காலம் பொறுப்பது.. அரசியல் விமர்சனமென்ற பெயரில் குடும்பத்தை தனிநபர் செயல்களை அரசியலோடு சேர்ந்து விமர்சிப்பதை கூட ஓரளவு பெருந்தன்மையோடு பொறுக்கலாம்.. ஆனால் கெட்டவார்த்தைகளில் தொடர்ந்து வீசும் போது அனல் சுடுகிறதே அதற்கு எதிர்வினை இல்லையா...
..
அத்தனை ஒன்றும் வரம்பு மீறிய வார்த்தையில்லையே.. களவாணி என்பதும் பொறம்போக்கு என்பதும்.. திருட்டுத்தனமாய் கொள்ளைப்புற வழியாக அரசை ஆள நினைக்கிற களவாணி கூட்டம் தானே .. சொந்தமாய் நிற்கமுடியாமல் அடுத்தவன் தோளில் சுமையாய் திரிபவர்கள் .. அடுத்தவன் உழைப்பவன் உறிஞ்சுபவர்கள்.. அடுத்தவன் உழைப்பில் பதவிசுகம் அனுபவித்துவிட்டு அவனயே திட்டுகிற கூட்டத்தை பொறம்போக்கென்று அழைக்காமல் எப்படி அழைப்பது..
..
இன்று இவ்வளவு தைரியமாய் பேசவும் எழுதவும் முடிகிறதே இது திராவிடம் வாங்கி தந்த உரிமையில்லையா .. இன்று எல்லோரும் கல்வி அறிவை பெற்றிருக்கிறோமே ..குறிப்பிட்ட சாதியினர்தான் நல்லவர் நன்றாக படிப்பாரென அச்சிட்டு பள்ளிகளில் பாடமாய் வைத்தவன் குடுமியை உலுக்கி .. எல்லோருக்கும் சமமான மரியாதையை பெற்று தந்த திராவிடத்தை என்ன செய்துவிட்டதென உன்னையே கேட்கவைத்தவனை.. அண்டிபிழைக்க வந்தவனை அவன் அடிவயிறு கலங்குவதுபோல் ஆட்டிவைக்கிறதே திராவிடம்.. இப்போதும் உன் சுயமரியாதைக்கு இழுக்கு வரும்போதெல்லாம் முன் நின்று காக்குகிறதே திராவிடம்.. தனிநபரின் செயல்கள் திராவிட கொள்கைகளாகாது.. திராவிடம் மனிதனை மனிதனாக பார்க்க சொன்னது உன்னைப்போல அவனுக்கும் உண்டு உரிமையென்றது .. ஒரே இடத்தில் குவிந்து கிடந்த அதிகாரத்தை ஒரு பிரிவினர் மட்டுமே அனுபவித்து வந்த உரிமைகளை மீட்டு எல்லோருக்கும் கிடைக்க செய்தது திராவிடம் தானே.. இன்றைக்கும் பார்பனர்கள் நடுங்குகிற ஒற்றை ஒளி பெரியார் தந்த பகுத்தறிவு தானே இத்தனைகாலம் மடையனாய் வைத்திருந்து மதம் சடங்கு புராணமென்று அவன் அறிவை மழுங்க செய்து .. வெட்டவும் குத்தவும் சோடாபாட்டில் வீசவுமென அவன் லாயக்கென்றும்.. செய்யும் தொழிலை வைத்து சாதியாய் பிரித்து குளிர்காய்ந்தவர்களை.. தலையெடுக்க முடியாமல்
பெரியாரின் கைத்தடி காலமெல்லாம் காத்து நிற்பதால் பதைபதைக்கிறார்கள் நடுங்குகிறார்கள்
திராவிடம் என்ற பெயரை கேட்டாலே பார்பனன் கோபபடுகிறானென்றால் .. சரியான பாதையை திராவிடம் வகுத்து தந்திருக்கிறது.. சில அறிவிலிகள் காசுக்கும் பதவிக்கும் ஆசைபட்டு தாயை பழிப்பவனையே கொண்டாடுகிறார்கள் எல்லா இனத்திலும் சில அழுக்குகள் சில வந்தே தீரும் அதை காலம் சுத்தம் செய்யும்..என்னதான் கூவிகூவி பாப்பானை புகழ்ந்தாலும் ..அவன் தனிமேடையில் தான் அமர்வான்.. உன்னையும் உன்மொழியையும் உன் இனத்தையும் இகழவே செய்வான்.. அந்த பொறம்போக்குகள்..
..
நீ பேசும் கசடுகளை நாங்கள் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டுமென்பது ஒருவகை அடித்தமர்த்தல்.. எதிர்வினையாற்றாமல் எவ்வளவு காலம் மௌனமாய் கடப்பது .. சிலநேரங்களில் மௌனம் .. இயலாமையென கணக்கிடபடுகிறது.. வார்த்தை தடிமன் சிலநேரம் வந்துவிழும் போது எவ்வளவு மனஅழுத்ததிலிருந்து வந்திருக்கிறதென புரிகிறது.. கழகமில்லா தமிழகம்.. அதற்கு இன்னும் சில நூற்றாண்டுகள் காத்திருக்கவேண்டும் அதற்குள் பாசிசத்தை எழவே முடியாதளவு புதைக்கப்பட்டிருக்கும்..
அதுசரி..
வந்தேறிகளை பொறம்போக்கென்றுதானே சொல்லமுடியும்..
..
#நீ_அடிச்சுவிளையாடுதல…
..
Aalanci Spm
குடியரசு
குடியரசு....
இன்றைய தினம் அண்ணல் அம்பேத்கரின் தினமாக கொண்டாடபடவேண்டும் இந்திய அரசியல் சாசனத்தை ஒழுங்குபடுத்தி வடிவமைத்து தந்தவர்..
சுதந்திர போராட்டத்தில் வெள்ளையருக்கு வெண்சாமரம் வீசியவர்கள்.. அவனை அடிதொழுதவர்கள் அதிகார மையத்தை கைப்பற்றிய பிறகும் அரசியல் சாசன சட்டத்தை வடிவமைக்க இந்த தாழ்த்தப்பட்டவர்தான் கிடைத்தார்.. ராமர்கதையை எழுத வால்மீகி .. மகாபாரதம் எழுத வியாசர் ..தேவைப்பட்டதைப்போல
..
இன்றைய தினம் பெருவாரியாக தமிழகமெங்கும் மக்கள் கலந்துக்கொள்ளாத குடியரசுதினமாக கழிந்துக்கொண்டிருக்கிறது.. சென்றவருடம் முகநூலில் தங்கள் ப்ரோபைலில் தேசிய கொடியை வரைந்தவர்களில் 90 விழுக்காடு மௌனமாய் கடந்துச்செல்கிறார்கள்.. குடிமக்களுக்கான அரசாக இல்லாமல் ஒருசில கார்ப்பரேட்களுக்கான அரசாகவும் அவர்களின் தேவைக்காக மக்களை பிழிந்தெடுக்கிற அரசாக அமைந்ததும்.. மத்திய அமைச்சர்கள் கூட மதசார்ப்பின்மைக்கு எதிராக வெளிப்படையாகவே குரல் கொடுப்பதும்.. எதிர்ப்பவர்களை மாற்றுகருத்துடையோரை
தேச விரோதிகளாக்கும் கூட்டம் .. வளர்ச்சிபாதையை விடுத்து மத சாம்ராஜ்யத்தை நிறுவ முற்படுவது பன்முக கலாச்சாரம் கொண்ட மண்ணில் எடுபடாது அது நல்ல/சிறந்த குடியரசை தராது.. பிறமொழிகளின் மீதான திணிப்பும் ..கல்வியில் மதத்தை திணிப்பதும் ஒடுக்கபட்ட மக்களை வாழ தகுதியற்றவர்கள் போல வேட்டையாடுவதும்.. இந்தியாவின் தனிதன்மையை இல்லாதாக்கும்..
கருத்து சுதந்தரத்தை மதிக்க தெரியாத .. பொய்களை கொண்டே கட்டமைத்த இதிகாசத்தை தூக்கிபிடிக்கிற நாடு முன்னேற்றமே காண இயலாது.. வளரும் நாடு பட்டியலில் சிறிய நாடுகள் நம்மை பின்தள்ளி முன்னேறும் நிலை.. நமக்கு சாதியும் மதமும் போதும் ..எதிர்ப்பவனை.. அவனுக்கு ஆதரவான குரலை கொலை செய்வதும் ..
நீதியே வீதிக்குவந்து குறைச்சொல்வதும் ஜனநாயகத்தின் பேராபத்தை உணர்த்துகிறது..
..
கோமாளிகளும் கூத்தாடிகளும் வீரவசனம் பேசவைத்து தேசபற்றை வளர்த்தெடுக்க அரும்பாடுபட்ட நிலை மிகபெரிய அவலமாய் திரும்பி தாக்குகிறது. இந்த குடியரசு தினம் தமிழர்கள் மனதில் ரணத்தை/கீறலை வரைந்திருக்கிறது... தமிழ் மொழி பலகையை கூட எடுத்து அதில் இந்தியை வரைந்து (எழுதி) ஊர்வலம் விடுகிற செயல் தமிழ்மொழி மீதான வன்செயலாக கருதவேண்டியிருக்கிறது.. களவாணி அரசை கையாலாகாத அரசை இயக்கி தாங்கள் நினைத்ததை சாதித்துக்கொள்ள நினைத்து மத்திய அரசு செயல்படுவது.. பாஜக அரசுக்கு எதிர்வினையையே தரும்.. தொடர்ந்து தமிழ் மீதும் தமிழர்மீதும் .. தமிழினத்தின் மீதான கலாச்சார தாக்குதலை தொடர்ந்து செய்வது ..
இந்தியா எனும் ஒருங்கிணைப்பை நிலைகுலைய செய்யும்..
..
ஆட்சியாளர்கள் அதை சரிசெய்ய வேண்டும் சிறிய கீறல் என விட்டால் அது மிகபெரிய அழிவைதரும்.. அதிகாரமும் பலமும் அடக்குமுறையும் நீண்டநாள் நிலைத்திருந்ததாக வரலாற்றில் எங்குமில்லை..இந்தியா நாடல்ல துணைகண்டம் பல்வேறு இனத்தின் மொழியின் வேர்களால் நிற்கிறது சில வந்தேறிகளின் கலாச்சாரத்தை தொடர்ந்து திணிக்க முற்பட்டால் அது வீங்கிவெடிக்கிற நிலையை ஏற்படுத்தும்..
அண்ணல் அம்பேத்கர் அரசியல்சாசன சட்டத்தை எழுதிமுடித்துவிட்டு சொன்னார் என் கைகளை பிடித்துக்கொண்டு சிலர் எழுதினார்கள்.. இதை கொளுத்தவேண்டுமென்றால் முதல் ஆளாக நான்தான் கொளுத்துவேன் என்றார்..
ஒருசாரராருக்கு மட்டுமே வளைந்து கொடுக்கிற சட்டமும் திட்டமும் செயலும் ஒற்றுமையை சிதைக்கும்..
..
கொஞ்சமேனும் மற்றவர்களும் வாழ வகைசெய்த
சட்டவடிவை தந்த
அண்ணல் அம்பத்கரை இந்நாளில் நினைவு கூர்வோம்..
..
குடிமக்களுக்கான அரசாய்
#ஒருகுடியரசுவேண்டும்..
..
தோழர் ஆலஞ்சி..
Aalanci Spm
Thursday, January 25, 2018
மன்னிப்பு கேள்
திராவிடப் பெருவுடையாரிடம் மன்னிப்பு கேள்..
..
தேசிய கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும் ஒன்றா என்கிற மட பயல்களே.. தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.. தேசியம் நாங்கள் இணைந்தது .. தமிழ் எங்கள் தாய்.. தமிழ் எங்களை பெற்றது..
தேசியத்தை மதிக்கிறோம்.. ஆனால் தமிழைத்தான் சுவாசிக்கிறோம் ..
..
கண்ட இடங்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்க கூடாதென திராவிடன் வேடம் கட்டிய வைணவன் சொல்கிறார்.. திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலித்தபோது என்ன செய்தார்.. கண்ட இடத்திலும் தேசிய கீதத்தை இசைக்கலாமோ.. இவர் நடித்த ஆபூர்வ ராகங்கள் படத்தில் தேசிய கீதத்தை மதிக்காதவன் தேவடியா பையா என திட்டுவார்கள்.. நாம் அப்படி திட்டமாட்டோம் .. ஏனெனில் சங்கரனை பெற்றவளும் தாய்தான் ஆனால் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும்..
..
சிலர் அறிவிலிகள் ஆரியர்கள் தமிழ் வளர்த்தார்கள் என பேசுகிறார்கள்.. தொல்காப்பியனும் வள்ளுவனும்.. ஏன் இளங்கோஅடிகளும் ஆரியர்கள் இல்லை அண்டி பிழைக்க வந்த ஆரியன் தமிழை கற்றுக்கொண்டு.. தன்னை தமிழனென அடையாளம் காட்டிக்கொண்டான்.. பேரரசர்கள் சிற்றரசர்கள் அந்தரங்கவேலை செய்து தன் நிலைநிறுப்பை தக்கவைத்தவன்.. ஒரு காலத்தில் கல்வி பார்ப்பனனுக்கே உரியது மற்றவர்களுக்கு அது கிடையாதென்கிற நிலையில் தான் பார்பனர்கள் தமிழுக்கு தொண்டாற்ற..? வந்தார்கள்.. கல்வியை எல்லோருக்குமாக செய்திருந்தால் .. உ.வே.சா இடத்தில் வேறொருவர் தமிழனின் படைப்புகளை.. தமிழின் தொன்மைகளை சிதைந்திடாமல் தொகுத்திருப்பார்.. குண்டலகேசியில் நிறைய பாடல்கள் காணாமல் போயிருக்காது..
..
தியானத்தில் இருந்தார்.. எல்லாநேரங்களில் கடவுள்வாழ்த்திற்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை.. என எஸ்.வி.சேகர்
தமிழ்த்தாய் வாழ்த்து எங்களுக்கு கடவுள் வாழ்த்தை விட மேல் .. அன்று வைரமுத்து அப்படி பேசலாமாயென வரிந்துகட்டிவந்தவர்கள் இன்று பம்முகிறார்கள்.. காஞ்சி காம கோடிகளின் திமிர்த்தனத்தை கேள்வி கேட்க அஞ்சுகிற அரசு ..அரசாணையை மீறிய விஜயேந்திரன் மீது வழக்கு தொடர்ந்திருக்கவேண்டாமா..
தமிழை நேசிக்கிறவர்கள் விஜயேந்திரன் செயலை கண்டித்து வீதியில் போராடுகிறார்கள்..ஆம் எங்கள் உணர்வோடு இணைந்தது தமிழ்.. அதை நீச மொழியென்று யார் சொன்னாலும்..ஏன் கடவுளே சொன்னலும் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும்..
இந்த(கும்பகோணம்) காஞ்சி மட பயல்களின் ஆணவத்தை இனியும் பொறுத்துக்கொள்ள தேவையில்லை .. கடவுள் பெயரைச்சொல்லி காமலீலைகள் புரியும் இவர்கள் போலிகள்.. சிலர் இதை சைவ மடம் என்கிறார்கள் அது தவறு.. இது பார்ப்பனர் மடம் .. திருப்பனந்தாலும் மதுரை ஆதின மடமும் தான் சைவ மடமே தவிர இது ஆரியர்களுக்கான மடம்.
இங்கே தீண்டாமை உண்டு இரண்டு மேடையுண்டு உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதம் .. அவன் இனத்தவனை அருகில் அமர்த்தி பேசும் மட அதிபதிகள்.. சூத்திரனை கீழே உட்கார வைத்து தாழ்ந்தவன் நீயென சொல்லும் கயமைத்தனம் ..
இவையெல்லாம் கேள்வி கேட்கவேண்டும்..
..
எச்.ராசாவின் தந்தை ஹரிஹரன் எழுதிய நூல் வெளியீட்டுவிழாவில் நடந்த அவமதிப்பிற்கு .. எப்படி வைத்தி சாஷ்டாங்கமாக வைணவன மடத்தில் காலில் விழுந்தாரோ அதைபோல .. திராவிட பெருவுடையாரிடம்.. தமிழ்த்தாய்க்கு வாழ்த்தென ..இந்தியாவிலேயே முதன்முதலில் மொழிக்கென்று தனி வாழ்த்தை அரசாணையோடு வெளியிட்டு அதை இன்றுவரை (ஆட்சிகள் மாறிடினும்) தொடர்ந்து இடம்பெற செய்த எங்கள் கம்பீர கலைஞரிடம் .. முத்தமிழறிஞரிடம்..
நேரில் வந்து மன்னிப்பை கேட்கவேண்டும்..
..
தமிழ்த்தாயை அவமதித்த விஜயேந்திரன் மன்னிப்பு கேட்காவிடில் .. வேறுமாதிரியான போராட்டம்..நடத்தப்படும் மன்னிப்பு கேட்க வைக்கபடுமென தளபதி எச்சரித்திருக்கிறார்..
..
#மன்னிப்பு_கேள்_மடமே..
..
Aalanci Spm
Tuesday, January 23, 2018
தீராத களங்கம்
ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம்..
ஜெயலலிதா.. மூன்றுமுறை முதல்வராக இருந்து அதில் இரண்டுமுறை தகுதிநீக்கம் செய்யபட்டவர்.. குற்றவாளியென நிரூபணம் செய்யபட்டு சிறை தண்டனை வகித்தவர்..
அரசியல் அமைப்பு வழங்கிய சலுகைகளால் மீண்டும் மீண்டும் முதல்வரானாலும்.. இறுதியில் குற்றவாளியென விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து இந்தியாவின் உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது.. தீர்ப்பு வருவதற்குமுன் இறந்து போனார் என்பதற்காக அவரை குற்றமற்றவர் என்று சொல்ல முடியாது.. காலம் தாழ்ந்த தீர்ப்பால் ஒரு கிரிமினல் மாநிலத்தின் முதல்வராக முடிந்தது..
நீண்டநாட்கள் இழுத்தடித்து கடைசியில் ஒன்றும் செய்யமுடியாதென்ற நிலை வந்தபிறகே.. நீதிமன்ற தீர்ப்பை எதிர்க்கொண்டார்..
..
இவருக்கு அதிமுக சார்பில் விழா எடுப்பதில் நமக்கு அக்கறையில்லை மாறாக .. ஒரு கிரிமினலுக்கு அவர் மக்களின் ஆதரவை பெற்றவர் என்பதால் நினைவு மண்டபம் என்பது ஒட்டுமொத்த ஜனநாயக மரபுகளை கேலிகூத்தாக்கும் செயல் .. உயிரோடிருந்திருந்தால் சசிகலாவோடு சேர்ந்து சிறையில் இருக்கவேண்டியிருந்திருக்கும்..
மேல்முறையீடும் தள்ளுபடியாகிய வழக்கில் சசிகலா மட்டுமல்ல ஜெயலலிதா சேர்ந்துதான் களி தின்ன வேண்டி வந்திருக்கும்.. முன்பு டான்சி வழக்கில் சொத்தை திருப்பி தருவதாக சொன்னதால் உச்சநீதிமன்றம் விடுவித்து மனசாட்சியோடு நடந்துக்கொள்ளுங்கள் என எச்சரித்தது .. சொத்து குவிப்பு மேல்முறையீட்டு குமாரசாமியை கொண்டு கள்ளகணக்கெழுதி தப்பிக்க நினைத்ததும்.. குற்றவாளியை மத்தியில் ஆளும் அரசின் பிரதான அமைச்சர் நேரில் சந்தித்ததும்.. வழக்கிலிருந்து தற்கால விடுதலை கிடைத்தது..
..
குற்றவாளிக்கு நினைவு மண்டபமா என கேட்டால்.. சசிகலாதான் ஜெயலலிதாவிற்கு தெரியாமல் கொள்ளையடித்துவிட்டாரென புதுகதை சொல்கிறார்கள்.. ஜெயலலிதாவை விசாரணை நீதிமன்றம் விடுவிக்கவில்லை மாறாக சசியை விட அதிகமாக அபராதம் விதித்தது.. சசியை விட பத்துமடங்கு அதாவது ₹100 கோடி அபராதம் விதித்து ..அதுவே .. குறைந்தபட்ச தண்டனை எனச் சொன்னது..
..
வரும் காலங்களில் .. கொள்ளையடித்தவர்கள் கொலை செய்தவர்கள்.. சந்தனமரத்தை வெட்டி கடத்தியவர்கள் சாதிமத கலவரத்தை உண்டாக்கியவர்கள் குடிசையை கொளுத்தி குளிர்காய்ந்தவர்கள்.. மக்கள் செல்வாக்கு பெற்றவரெனில்
அரசு சார்பில் நினைவு சின்னம் அமைக்கலாம்.. திருடர்கள் ஜாக்கிரதை என்று இனி மேல் போர்ட் வைப்பதற்கு பதிலாக நினைவுமண்டபம் கட்டப்பட வேண்டியவர்களென பலகை மாட்டலாம்..
..
குற்றவாளி சமாதி மெரினாவில் இருப்பதென்பது இழுக்கு அதை மத்திய அமைச்சர்கள் வந்து தரிசிப்பதும்.. அரசு அலுவலகங்களில் கிரிமனல் படத்தை மாட்டுவதும் அரசு நிகழ்ச்சிகளில் படத்தை தலைமைசெயலரே பிடித்து நிற்பதும்.. தமிழகத்தில் மட்டும்தான் முடியும்.. இதில் முக்கியமான ஒரு விடயம்.. ஜெயலலிதா வைணவராக இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் .. வேறுமாதிரியாக சித்தரிக்கபட்டிருப்பார்..
..
குற்றவாளிக்கு அரசு செலவில் மக்கள் வரிப்பணத்தில் நினைவுமண்டபமென்பது எதிர்காலத்தில் எந்த குற்றம் செய்தாலும் கவலையில்லை அரசியல்வாதியாக இருந்தால் செல்வாக்கோடு இருந்தால் போதும் அரசே விழா எடுக்கும் தவறுகள் மறைக்கப்படும் ..
குற்றவாளி என்பது மாறி தேசத்தின் தியாகி அவரென புகழவேண்டிருக்கும்..
இது கேவலமான செயல்..
உண்மையில் ஜெயலலிதா போன்றவர்களே
anti national.. தேசத்தின் அழுக்கானவர்கள்.. ஆட்சி அதிகாரத்தில் பயன்படுத்தி ஊழல் செய்து அது நிரூபணம் ஆகி தேசத்தை தலைகுனிய வைத்தவர்கள் ..
தமிழகத்தின் தீராத களங்கம்.
..
தீராத கலங்கத்தை தமிழகத்தின் மீது..
தமிழ்ச் சமூகத்தின் மீது திணிக்காதீர்கள்..
..
Aalanci Spm
Monday, January 22, 2018
நவீன ஆண்டாள்கள்
..
நவீன ஆண்டாள்கள் வாய் திறந்தால் ..
காதை பொத்திக்கொள்ளவேண்டும்.. வந்துவிழுகிறது நாற்றம்.. நித்தி கொடும்பாவி எரிதிதவர்கள் நரகத்திற்கு போக .. நரகமே,அவர்களை நோக்கி வர யாகமாம்.. பாவம் அறிவு மழுங்கி சொன்னதை செய்யும் கைபாவைகள்
..
சன்னியாசம் என்பது துறத்தல்..
சன்னியாசத்தில் ஒருவன் சொத்தையெல்லாம் தானம் செய்து விட்டு மொட்டை அடித்துக் கொண்டு வடக்கு நோக்கி எல்லாவற்றையும் துறந்து செல்ல வேண்டும் என்றும்..கிராமத்தில் ஓரிரவும் நகரத்தில் ஐந்து இரவுக்கு மேலும் தங்கக் கூடாது என்றும்; மழைக்காலத்தில் கிராமமோ, நகரமோ எங்கிருந்தாலும் நான்கு மாதம் வரை தங்கலாம்..
இதமான ஆடைகளை அணியகூடாது பழைய ஆடைகளைதான் அணிய வேண்டும் அவன் தினமும் ஒருவேளை மட்டும் அதுவும் ஏழு வீடுகளுக்குள் பிச்சை எடுத்து உண்ண வேண்டும் பிச்சை எடுக்கும் வீடுகளில் உரல், அம்மி சத்தம் நின்றபிறகு, மதியத்திற்கு மேல் சென்று, "பவதி' என்று நிதானமாக உச்சரிக்க வேண்டும். இல்லறத்தான் வீட்டிற்குள் செல்லக்கூடாது. யாராவது புகழ்ந்து பிச்சையிட்டால் அதை உண்ணக்கூடாது..துறவிகள் மூன்று மூங்கில் குச்சிகளைச் சேர்த்துக் கட்டி தண்டமாக கையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரே ஆடையை அணிய வேண்டும். நடந்தே செல்ல வேண்டும். தேன் போன்றவற்றையும் மாமிச உணவுகளையும் உண்ண கூடாது.. அதாவது..
எதிர்மறை Negative வாக வாழவேண்டும்
தன்னையே மறுப்பது என்பது, முன்பு பல காரணங்களினால் சாத்தியமாக இருந்தது. சமுதாயத்தின் அமைப்பு ஒரு காரணம்..
..
சன்யாச கொள்கை, பலவற்றை மறுத்தது. அது குடும்பத்தை மறுத்தது, அது உடலுறவை மறுத்தது, காதலை மறுத்தது.. குறிப்பாக லௌகீக வாழ்க்கை முறையை மறுத்தது..
ஆனால் நித்தியின் சீடர்கள்.. லௌகீக வாழ்க்கையோடு.. காமம்..,ஆசை.., சிற்றின்ப பெருநிலை பேரின்பத்தில் பேராசை.. எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்தவர்கள்...
..
சிறுவர்களை சன்னியாசிகளாக ஆக்க கூடாதென்றும். 18 வயது நிரம்பியிருந்தாலும் கட்டாயபடுத்தி சன்னியாசத்திற்கு கொண்டு செல்லபட்டாரா என ஈசா மையத்தில் இளம்பெண்கள் சேர்க்கபட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது... சிறுவர்களை துறவிகளாகவோ சன்னியாசிகளாகவோ அடைத்துவைப்பது கிரிமினல் குற்றம்.. அரசோ அல்லது நீதிமன்றமோ தாமாக முன்வந்து அந்த குழந்தைகளை மீட்கலாம்..
அவர்களின் பேச்சும் செயலும் மிக கேவலமான செயல்பாடுகளை கண்டு படித்ததை உணர்த்துகிறது.. இளம்வயதில் காமம் பற்றிய தவறான புரிதலும் .. துறவறம் பற்றிய போதிய அறிவில்லாமையும் தெரிகிறது..
ரஞ்சிதாவுடன் தவறான தொடர்பில் இருந்தது நித்தியானந்தா தானென்று தடயவியல் நிபுணர்கள் மூலம் உறுதி செய்யப்பட்ட பின்னரும் இளம்பெண் பக்தைகள்..? மூலமாக மோதுகிறார் என்றால் ஏதாவது முக்கியமான காரணம் இல்லாமல் இருக்காது யாரும் எதுவும் செய்துவிட முடியாது என நினைக்கிறார்கள்.. சாமியார் வேசமென்பது தவறுகளை மறைப்பதற்கும் தட்டிகேட்க முடியாமல் செய்வதற்குமென ஆகிவிட்டது..
..
சிறிய குழந்தைகளை இதுபோன்ற செயல்களில் ஈடுபடுத்துவோர் யாரென்று பார்த்தால் கடவுள் பாசம்/பயம் என காட்டி மூளைச்சலவை செய்து பெற்றோர்களை கொண்டுவந்துவிட செய்வது .. உனது குழநிதைகளில் ஒருவர் இறைப்பணிக்கானவரென நம்பவைப்பது சில ஊக்திகளை கையாண்டு ஏதோவொரு சக்தி இருப்பதாக நம்பவைத்து .. குழந்தைகளை இங்கே கொண்டுவந்து சேர்க்க செய்வது.. இச்சிறுவர்கள் .. பாலியல் ரீதியான துன்புறுத்தல்களில் ஆழ்த்தபட்டு பிறகு அதில் அடிமையாக்கி .. ஒருவித ஈர்ப்போடு செயலாற்ற செய்யும் கூட்டம் இதற்கு குறிப்பாக பெண்குழநிதைகள் அதிகமளவில் பயன்படுத்தபடுகிறார்கள்..
இவர்களையெல்லாம் மீட்டு மன அழுத்ததில் மனபிறழில் இருக்கும் இவர்களுக்கு சரியான பரிசோதனையும் சிகிக்கையும் அளித்து இயல்பு வாழ்க்கைக்கு வரவைக்கவேண்டும்..
..
இன்றைய துறவறவ வாழ்க்கையென்பது காமநெடி வீசும் களியாட்டங்கள் என்றாகிவிட்டது...
..
Aalanci Spm
Sunday, January 21, 2018
ஒருங்கிணைவோம்
திராவிடத்தையும் மதஎதிர்ப்பு உணர்வையும் அவர்களாகவே விட்டுவிடுகிறோம் என்கிற வரை போராட்டம் தொடரும்.. எச்.ராசா..
மிக்க நன்றி..
எங்கே திராவிட சிந்தனை பொய்த்துவிடுமோ என அஞ்சியவர்கள்.. இதோடு முடிந்தது என எக்காலமிட்டவர்களுக்கு உணர்வை ஊட்டியிருக்கிறீர்.. எங்கே தடம் புரளுமோ என சிலர் சந்தேக கண்ணோடு எமை பார்க்கும் வேளையில்.. மூளைக்கு வேலை தந்திருக்கிறாள் "ஆண்டாள்"..
..
மிக சாதூர்யமாக நம்மை பிரிக்க ஆரியர்கள் செய்யும் சூழ்ச்சியில் அவர்களே விழுந்ததும்.. எழுந்து வர முடியாமல் தவிப்பதும் வெளிப்படையாக தெரிகிறது... அய்யா சுப.வீ அவர்கள் சொன்னதைப்போல வைரமுத்துவிற்கெதிரான பிரச்சனை அல்ல இது .. திராவிட ஆரிய போரின் தொடர்ச்சி அவ்வளவுதான்.. கவனமாக அவர்கள் வில்லையும் அம்பையும் ஏய்கிறார்கள்.. நாம் அரிவாளோடும் வேல் கம்போடும் போருக்கு தயாரென்கிறோம் .. கலைஞர் ஒரு கவிதையிலே சொன்னதைப்போல..
மறைந்துநின்று
மானமிகு வாலியை தாக்கிய
மாண்புமிகு ராமசந்திரனை மாவீரனென மகாகவி கம்பனே ஏற்கவில்லையென்பார்..
அவர் ஒரு சொல்லாடலை உபயோகப்படுத்தியிருப்பார்.. மறைந்துநின்று தாக்குதல்.. அதாவது வில் அம்பு போன்ற ஆயுதங்கள் மறைந்துநின்று தாக்கவே பயன்படும்..நாம் வீரவசனம் பேசி .. வெட்டருவாளோடு போவோம் அது தான் இப்போது நடக்கிறது..
ஆம் நம்மை மறைந்துநின்று தாக்க தொடங்கியிருக்கிறார்கள் இப்போது அம்புகளாகவும் வில்லாகவும் .. நம்மவனையே தேர்வு செய்கிறார்கள்...
..
நிறைய ஜெகத்ரட்சகர்கள் அவர்களிடத்தில் உண்டு ..மத நம்பிக்கையென்பது வேறு அதில் தலையிடவரவில்லை ஆனால் மதத்தை வைத்து திராவிடத்தை தகர்க்க வரும் போது அவர்கள் யாராக இருந்தாலும் கேள்வி கேட்போம்.. நவீன ஆள்வாரின் அறிக்கையை குறைச் சொல்லவில்லை அதை எங்கள் முதுகின் மீது ஏறிநின்று சொல்கிறீர்கள் பாருங்கள் அதைதான் எதிர்க்கிறோம்.. செயல்த்தலைவரின் துணைவியாரின் கடவுள் பக்தி அவரது சொந்த விடயம்... ஆனால் அவரை முன்னிலைபடுத்தும் அறிக்கை அவ்வளவு ஏற்புடையதல்ல.. சொந்த காசில் குழிவெட்டிகொள்வதைப்போல என்பதை உணருங்கள் ..எதிலும் வெளிப்படையான அரசியலே சிறந்தது ..
இது வைரமுத்துவின் தனிப்பட்ட விடயமல்ல எப்போது இதை அரசியலாக்க முயன்றார்களோ எப்போது இதை திராவிட இனத்தின் மீதான கல்லெறிதல் என மொழிந்தார்களோ அப்போது இது எம் இனத்தின் மீதான தாக்குதலாய் கொள்வோம்.சாதிவெறியர்களையும் மதவெறியர்களையும் அடையாளபடுத்துவோம்..
நம் பங்காளி சண்டையை ஒதுக்கி வைத்துவிட்டு எல்லோரும் சேர்ந்து பாசிசக்திற்கெதிராக குரல் கொடுப்போம்..
..
ஆண்டாளை தாசியென்ற சொல்ல அவர்கள் அவளை வேசியாக்கி .. தொடர்ந்து பதைபதைப்போடு மலிவான அரசியலை கையிலெடுத்திருக்கும் அவாள்களுக்கும் அவர்களுக்கு துணைபோகும்.. சூத்திரனுக்கும் ஒன்றை சொல்வோம்.. எந்த போராட்டமும் நீண்டநாள் கடந்தால் அது தானாகவே பிசுபிசுத்து போகும்..
ஆனாலும் எங்களின் ஒற்றுமை சீர்குலையும் போதெல்லாம் பாசிசத்தின் குரல் எங்களை இணைக்கும் வலுசேர்க்கும்..
அதுதான் இப்போது நடக்கிறது ..
மெல்ல வருகிறார்கள்.. பெரியாரையும் திராவிடத்தையும் நினைவுகூர்ந்து இன்னும் இன்னும் திராவிடத்திற்கெதிரான போராட்டத்தை முன்னெடுங்கள் .. அப்போதுதான் எம் இனம் வீறுகொண்டு எழுச்சிபெறுவோம். நாங்கள் நேர்கோட்டில்
ஒருங்கிணைவோம்
..
Aalanci Spm
Saturday, January 20, 2018
எச்சரிக்கை
இன்னமும் நம்பிக்கை இருக்கிறது ..
..
திரு.ஸ்டாலின் செயல் தலைவராக ஏற்று ஓராண்டு நிறைவடைந்தும் இன்னமும் கட்சியின் நிர்வாகம் அவ்வளவு செம்மையாக இல்லை கட்டுபாடுடன் கூடிய கட்சி என்ற பிம்பம் சிதறுகிறது பத்திரிக்கையாளர்கள் முன்பில் பழக்கடை ஜெ.அன்பழகனும்.. பொன்முடியும் நடந்துக்கொண்ட விதம்.. ஸ்டாலின் கையை பிடித்து அழுத்தியும் சீறுகிற அன்பின் செயல் அவ்வளவு ரசகரமாக இல்லை.. ஆண்டாள் விடயத்தில் ஜெகத்ரட்சகனின் அறிக்கையில்
திருமதி.துர்கா ஸ்டாலின் கேட்டுக்கொண்டதாலேயே ஜீயர் உண்ணாவிரதத்தை முடித்ததாக வரும் செய்தி எவ்வளவு நம்பகதன்மையென்று தெரியவில்லை .. சின்ன சின்ன விடயங்களில் கூட கவனமாய் செயல்படும் திராவிட பெருந்தலைவனின் உக்தியை ..சரிவர செயல்படுத்தாமல் போவது வருத்தத்தை மட்டுமல்ல
இயலாமையையும் காட்டுகிறது..
..
89 உறுப்பினர்கள் மிகப்பெரிய எதிர்க்கட்சியின் செயல்பாட்டில் சிறிது சுனக்கம் தெரிவதாக வரும் செய்திகள் திட்டமிட்டு பரப்பபடுவதாக இருப்பினும்.. அதை கண்டுக்கொள்ளாமல் நகர்வது நல்ல பலனை தராது.. அதீதமான நேர்மை அரசியலுக்கு சரிவராது .. அப்பனை கண்டு படித்தததை ..காலாட்டிக்கொண்டே இருக்கவேண்டுமென வாழ்ந்து காட்டிய அரசியலின் நவீன அரிச்சுவடியை ஒரு முறை எடுத்து புரட்டிபாருங்கள்.. எதிர்களை நம்மை சுற்றி இயங்கவைத்து எல்லா வினைகளுக்கும் எதிர்வினையாற்றிய திராவிட பெருவுடையார் கலைஞரின் செயலை மூளையில் ஏற்றுங்கள்..
உங்கள் ஆத்திக நம்பிக்கையை மூலையில் போட்டுவிட்டு திராவிட சொன்ன சமநிலையை கையிலெடுங்கள்.. எதற்கும் ஒரு எல்லை உண்டு சிலவற்றை காலம் தீர்மானிக்கும் ஆனால் சிலவற்றை நாமே தீர்மானிக்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டால் வழி தெரியும்.. ஒவ்வொருமுறையும் வரும் நல்வாய்ப்பை தவறவிடல்.. என்பது அரசியலின் இறுதிக்கான யாத்திரையாகும்.. தானாக கனிவது சுவை கூடுதல் என்றாலும்.. சிலவற்றை அடைத்து வைத்து/ புகைப்போட்டு கனிய வைக்கவேண்டும் காலத்தின் தேவைகருதி..
இன்றைய சூழல் தமிழகத்திற்கு மட்டுமல்ல திமுகவிற்கும் நல்லதாக இல்லை.. தலைமைக்கு கட்டுபடாத யாராயினும் தூக்கியெறியுங்கள்.. இப்போதைக்கு ஒரு வெற்றி மிக மிக அவசியம் அது திமுகவின் எதிர்காலம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்.. ஆரியர்களின் செயல்கள் எதுவாயினும் அதற்கு எதிர்வினையாற்றுங்கள்..
அவர்களுக்கு திராவிடத்தின் தோல்வியென்பது திமுகவின் அழிவில் என நம்புகிறார்கள் என்பதை உணர்ந்தால் பயணத்திற்கான பாதை தெளிவாக தெரியும்..
..
திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறை தலைமை பொறுப்பை காலம் தந்திருந்திருக்கிறது.. நீண்ட கால பயிற்சியும்..நல்ல தலைமை தருமென்ற எதிர்பார்ப்பும் பொறுப்புணர்ந்து செயல்படும் ஆற்றல் உண்டென்று நம்பி .. எந்தவித
எதிர்ப்பும் இல்லாமல் கையில் கிடைத்திருக்கிறது.. கையில் கிட்டிய கனியை தவறாவிடாதீர்.. இன்னமும் நம்பிக்கை இருக்கிறது.. தவறவிடில் வேறொரு தலைமையை காலம் தேர்வு செய்யும் அந்த தலைமை .. பாசிசத்திற்கு சிம்மசொப்பனமாய் இருக்கும்..
..
மீண்டும் சொல்கிறேன்...
நம்பிக்கை பொய்த்துவிடவில்லை..
இன்னமும் உம்மீது நம்பிக்கை இருக்கிறது
தமிழகத்தின் எதிர்காலம் நீயென்று.
..
#எச்சரிக்கை..
..
Aalanci Spm
Friday, January 19, 2018
திராவிடன்டா
இந்து மதத்திற்கு ஆபத்து ஓடிவாருங்கள் என்ற போது .. ஓடிவந்தவனை பார்த்தால் தெரிந்திருக்கும் புரிந்திருக்கும்.... இந்து மதமென்பதே ஆரிய மதமென்று .. 125 ஆண்டுகளுக்கு முன்பு பிராமண மதம் என்றழைக்கப்பட்ட மதம் ஆங்கிலேயர்களால் இந்து என சூட்டபட்டதும்.. யாரெல்லாம் முகமதியன் இல்லையோ யாரெல்லாம் கிருஸ்துவன் இல்லையோ யாரெல்லாம் சீக்கியன் ஜைனம் இல்லையோ அவர்களை இந்து என அழைக்க தொடங்கியதால்.. எல்லோரும் இந்து என்ற கூட்டுக்குள் அடைபட்டுபோனார்கள்..
..
மிக இக்கட்டான காலக்கட்டத்தில் மத்தியில் ஆட்சி அதிகாரம் கையில் இருப்பதால் எதை பேசினாலும் ஊடகங்கள் அதை தலையில் தூக்கி கொண்டாடுமென அறிந்து வாயை திறந்தால் பொய் பேசி திரிகிறார்கள்.. ஆண்டாளை கையிலெடுத்து ஆடிய ஆட்டம் .. ஆட்டம் கண்டதால் அடுத்தென்ன செய்யலாமென யோசிக்க தொடங்குவார்கள்.. திராவிடத்திற்கெதிராக எத்தனை வடிவில் வந்தாலும் அதை எதிர்க்கொள்ளும் பேராற்றல் நமக்குண்டென்பதை அறிந்து கொள்ளவேண்டும்..
..
தினமொரு பொய்.. இதோ தளபதி பிரசன்னாவை ஆண்டாள் விடயமாக பேசியதற்கு கண்டித்ததாகவும் .. காலில் விழுந்து கதறி மன்னிப்பு கேட்டார் பிரசன்னா என கூசாமல் பொய் சொல்கிறார்கள்.. காலில் விழும் பழக்கம் எங்கள் இனத்திற்கே இல்லையென அறியாதவர்கள் .. இந்த ஆரிய கூட்டம் ..மதநம்பிக்கை என்ற பெயரில் இவர்கள் ஆடும் கூத்து யார் இவர்கள் என்ற உண்மையை போட்டுடைக்கிறது என் நம்பிக்கையை தகர்க்கலாமா என்று கதறுகிறார்கள்.. யார் நம்பிக்கையையும் தகர்க்கவில்லை.. மாறாக பார்பனர்கள் காலமெல்லாம் தங்களை உயர்த்திபிடித்து மற்றவனை தாழ்வாய் என்னும் நம்பிக்கையை தான் காலகாலமாய் எதிர்க்கிறோம்..
..
ஆண்டாளை இவர்கள் கையிலெடுத்ததே அதில் குறிப்பாக திமுகவை சிக்கவைக்கலாமென்றுதான்.. பதிலடிகள் வேறுவிதமாக வருமென எதிர்பார்க்கவில்லை ..
#பெரியார் சொன்னதைப்போல பாப்பானுக்கு முன்யோசனை இல்லை.வேறெதாவது சூத்தரத்தை கொண்டுவாருங்கள்..
..
Aalanci Spm
Thursday, January 18, 2018
நவீன.. ஆண்டாள்கள்
வைரமுத்துவை மிரட்டினால் மிரண்டு போவீர்கள் ..கம்பம் செல்வேந்திரன்
எங்களை ஆயுதமெடுக்க வைக்காதீர்.. மீண்டும் எங்களை குற்றபரம்பரை ஆக்காதீர்.. பாரதிராஜா
வைரமுத்து நாக்கை அறுப்பவர்களுக்கு ₹10 கோடி பரிசு.. நயினார்.. இந்துமதத்தை அவமதிப்பதை அனுமதியோம்..
..
தமிழகத்தில் ஒரு சாதி/ மத கலவரத்தை உண்டுபண்ண வேண்டுமென்ற பாஜகவின் செயல்திட்டம் நமக்கு புரியாமல் இல்லை
ஆனால் அவர்களின் செயல்திட்டங்கள் இங்கே நடந்தேற முடியாமல் தொடர்ந்து தோலுரித்துக் கொண்டிருக்கிறார்கள் எம் மக்கள் .. பெருங்கிழவனின் பெரும் தொண்டே நம்மை சிந்திக்க வைத்து எல்லாவற்றிக்கும் அறிவுக்கொண்டு பதிலடி தர நம்மால் முடிகிறது..
கடவுள் மறுப்பு பேச வந்த பெரியாரை .. பொன் முத்துராமலிங்கம் வந்தால் உயிரோடு போக முடியாதென சொன்னதாக சேகர் கூசாமல் பொய் சொல்கிறார்.. 1939 ல் மதுரை மீனாட்சி கோவில் நுழைவு போராட்டத்தை பட்டர்கள் எதிர்த்தபோது.. தாழ்த்தபட்டவர்களுக்கு ஆதரவாக நானும் வருகிறேன் முடிந்தால் தடுத்துப்பார் என்று தேவர் சொன்னதெல்லாம்
எஸ்.வி.சேகருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
வாயை திறந்தாலே பொய்
சாதிவெறியர்களை கையில் வைத்துக்கொண்டு பார்பனர்கள் ஆடுகிறார்கள்..
வைரமுத்து நாக்கை அறுப்பேனென வைணவனை சொல்லமாட்டான்.. சூத்திரனை வைத்தே சொல்ல செய்கிற சூழ்ச்சி..
உண்ணாவிரதம் இருப்பேன் .. தீக்குளிப்பேனென மிரட்டுவதும்..நமக்கு சிரிப்பை வரவழைக்கிறது.
..
கம்பம் செல்வேந்திரன் .. எச்.ராசா வடுகபட்டிக்கு வந்து .. காலில் போட்டிருக்கும் செருப்பை கையில் எடுத்துக்கொண்டு தோள் துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு அங்கம்மாளிடம் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டுமென்கிறார்..
ஆம் .. வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து மன்னிப்பு கேட்கவேண்டுமன்றதற்கு வடுகபட்டிக்கு வந்து மன்னிப்பு கேள் என கேட்க வைத்திருக்கிறது பாருங்கள் அங்குதான் பெரியார் நிற்கிறார்.. நம்மால்
அதே தொனியில் பதிலடி தரமுடிகிறது இது உத்திர பிரதேசமல்ல என புரிந்திருக்கும் அதனால் தான் ஜீயர் உண்ணாவிரதத்தை சொல்லாமல் முடித்துக்கொண்டார்.. சமீபகாலமாக அளவிற்கதிகமாக எச்சைகளின் ஊளைகள் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது.. வாயை திறந்தால் பொய் நடக்காத சம்பவத்தை நடந்ததைப்போல சொல்லி திசை திருப்ப செய்யும் செயலை தொடர்ந்து செய்துவருகிறார்கள் .. பறையனையும் பள்ளனையும் கோவிலுக்குள் அனுமதித்தால் அவர்கள் பார்பனர்கள் ஆகிவிடமுடியுமா... பாப்பான் தான் தாழ்ந்துபோவான் என பேசிவிட்டு நடமாட முடிகிறது .. இந்நேரம் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கவேண்டாமா.. பதவிக்காக எதையும் செய்யும் கேடுகெட்ட கயவர்கள் ஆட்சியென்பதால் அவர்கள் துள்ளுகிறார்கள்.. இந்த மானங்கெட்ட மடையர்களும் பேசுவதை வேடிக்கை பார்க்கிறார்கள். அளவிற்கதிமாக பேசினால் என்னவாகும் என்பதைதான் பாரதியும் செல்வேந்திரனும் சொல்லியிருக்கிறார்கள்.. தமிழர்களுக்குள் பிரிவினையை உண்டாக்கி குளிர்காய நினைக்கும் .. வைணவ வெறியர்களுக்கும் அவர்களுக்கு அடிபணிந்து போகும் அடிமுட்டாள் சூத்திரனுக்கும்.. நீண்டநாள் இப்படியே போகாது என்பதை நினைவுபடுத்துவோம்.. .
..
உண்மையில் ஐயங்காருகளுக்கு ... தமிழ் மீதெல்லாம் பாசமில்லை .. நீச பாஷை என்று சொல்லி திரிந்தவர்கள் .. ஆண்டாளை பாப்பாத்தியாக சித்தரித்தாகிவிட்டது.. அவரை தாசி என்பதா என்கிற கோவம்தான்...
இவர்கள் நந்தினிக்காக பேசமாட்டார்கள் ஆனால் சுவாதிக்காக உரக்க பேசுவார்கள்...
இதையெல்லாம் கண்டதுதான்..
இவர்கள் மொழியில் பிராமணன் மட்டுமே இந்து.. மற்றவர்களை மனிதர்களாக கூட மதிப்பதில்லை ஆனால் அவர்களுக்கு ஒன்றென்றால் .. இடைசாதிக்காரனை தூண்டிவிட்டு அதில் குளிர்காய்வது...இங்கே என்ன செய்தாலும்... சின்ன பெண்களை (நவீன ஆண்டாள்கள்) விட்டு பேசவிட்டாலும் ரசித்துவிட்டு போய்விடுகிறான் தமிழன். நான் பாப்பாத்திடா.. இடஒதுக்கீடு நாங்க கொடுத்ததுடான்னு சொல்லிட்டு சட்டென்று ஒளிந்துக்கொள்கிறார்.. இங்கே எதை பேசினாலும் நல்ல மறுபடியும் அல்லது ரசனையோடு கூடிய கேலியும் பதிலாய் வரும்..
வடக்கில் போல இங்கே எதுவும் செய்திட முடியாது
கலவரத்தை செய்யமுடியாதென தெரிந்துக்கொண்டு வாய்மூடி மௌனம் காத்தல் நலம்.. எதற்கும் எல்லையுண்டு..
பிறகு..
பொருத்தது போதும் பொங்கியெழு... என சொல்ல வேண்டிவரும்
#எச்சரிக்கை
..
Aalanci Spm
Wednesday, January 17, 2018
ஜெ.ஜெயலலிதா.. எனும் அபலை
மத்திய அரசின் கழுகு ஒன்று அந்த சமயத்தில் அப்பல்லோவில் இருந்தது. அவருக்கு வேண்டப்பட்டவருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என சிபாரிசு செய்தது. அவர் உயர்ந்த பதவிக்கு சென்றுவிட்டதால் அவர் பெயரைக் கூறவும் முடியாது; அவரைபற்றி விமர்சிக்க கூடாது.
செல்வி.ஜெயலலிதா 4ம் மாலை 5.15 மணிக்கே உயிரிழந்துவிட்டார். ஏன் இன்னும் அறிவிக்கவில்லை என அப்பல்லோ பிரதாப் ரெட்டியிடம் கேட்டதற்கு, தமிழகம் முழுவதும் அப்பல்லோவிற்கு நிறைய கிளைகள் உள்ளன. அவற்றிற்கு உரிய பாதுகாப்பு கொடுங்கள் என்றார் .. திவாகரனின் பேச்சு நிறை சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது..
..
இதிலிருந்து முதல்வர் எப்போது இறந்தார் என்று மத்திய அரசிற்கு .. மாநில அமைச்சர்களுக்கு ..மாநில அரசுத்துறை செயலர்களுக்கு தெரிந்திருக்கிறது.. அப்பலோ அதிபர் ஏன் தொடர்ந்து பொய் சொல்ல வேண்டும்.. பாதுகாப்பு பிரச்சனை என்றால்
காவல்துறையின் உதவியை நாடியிருக்கவேண்டுமே தவிர.. ஏன் மறைக்க வேண்டும்.. இதில் நிறைய உண்மைகள் மறைக்கபட்டிருக்கிறது.. நிறைய தில்லுமுல்லு நடந்திருக்கிறது அவரின் மரணத்தை தொடர்ந்து நிறைய மர்ம முடிச்சுகள் அவிழ்க்கபடாமல் இருக்கின்றன..
..
எரிகிற வீட்டில் பிடிங்குகிற வரை லாபம் என்று நடந்துக்கொண்டிருக்கிறார்கள்.. அன்று அங்கிருந்த கழுகு யாரென்று எல்லோருக்கும் தெரியும்.. அதிமுககாரனை விட அங்கேயே குடியிருந்தவர் விசாரிக்கப்படவேண்டும் ..
தனக்கு வேண்டியவரென்றால் யார் அவர்.. பாஜகவிற்கு அங்கென்ன வேலை .. இதிலிருந்தே மறைமுக ஆட்சி செய்வது யாரென்று வெளியே வர தொடங்கியிருக்கிறது.. பதவி சுகத்திற்காக எல்லாம் அறிந்திருந்தும் மறைக்கிற அயோக்கிய பன்னீர்.. தங்களின் மேம்பாட்டிற்காக மரணத்தை கூட மறைக்கிற சசிகலா வகையறா... கூடவே இருந்து அப்போலோவை இயக்கிய அப்போதைய மத்திய அமைச்சர் இவர்களை இயக்கிய பாசிச கும்பல் எல்லாரும் சேர்ந்து குற்றவாளியாகிறார்கள்..
இவர்கள் அமைத்திருக்கும் விசாரணை கமிஷனால் எந்த பயனுமில்லை.. உச்சநீதிமன்றமே பதவியில் இருக்கும் நீதிபதியை கொண்டு விசாரணைக்கு உத்தரவிடலாம் ..
..
ஜெயலலிதா கம்பீரமானவராக ஊடகங்கள் சித்தரித்தாலும்... இரும்பு பெண்மணியென
கட்டமைத்தாலும் நிஜ வாழ்வில் நிறைய ஏமாற்றங்களை சந்தித்த அபலை பெண்ணாக தெரிகிறார்.. தான் ஏமாற்றபடுவது அறிந்தும் அதை வெளிகாட்ட முடியாதவராகவே வாழ்ந்திருக்கிறார் .. அவரே ஒரு பேட்டியில் தன் வாழ்வில்
தூய்மையான அன்பை நட்பை உணர்ந்ததே ..இல்லை அப்படி ஒருவரை நான் சந்திததில்லை தன் தாயிடமிருந்து இருந்து கூட எனக்கு கிட்டவில்லை என்றார்..
எல்லோருக்கும் என்னால் பயன்பட்டிருக்கிறார்கள்..என்றார்.. ஜெயலலிதாவின் வாழ்க்கை வலிகள் நிறைந்தது அவரது அரசியலோடு எதிரான போக்கை கொண்டிருந்தாலும் அவரிடம் திமுக மட்டுமே கரிசனபார்வை கொண்டிருந்தது.. மற்றவர்கள் அவரை வைத்து பிழைத்தனர்
..
ஜெயலலிதா ஜெயராம் அவரது வாழ்வின் பெரும்பகுதி யாருக்கும் அறியாத புதிராகவே இருந்தது சினிமாவிற்கு வந்தபோது அவரது தாயார் சந்தியா அவர்கள் எப்படியேனும் தன் மகளை சினிமாவில் தான் எட்டமுடியாத (தன்னால் சாதிக்கமுடியாததை) உயரத்திற்கு கொண்டு செல்லவேண்டுமென்று தனக்கு இணக்கமான ராமசந்திரனிடம் கொண்டு சேர்த்தார் ஆரம்பகாலங்களில் சினிமாவிற்காக இணங்கினாலும் .. தன் தாயாரின் மறைவிற்கு பிறகு அவரோடான நட்பை வெறுத்து ஒதுக்கி தான் விரும்புகிறவரோடு வாழவேண்டுமென ஆசைப்பட்டார் .. ஆனால் அந்த அயோக்கிய ராமசந்திரனால் .. ஜேப்பியாரை விட்டு பாபுவிடமிருந்து பிரித்து அழைத்துவர பணித்ததும் .. ஜேப்பியார் ஒரு இரவு தன்னோடு வைத்திருந்துவிட்டு ராமசந்திரனிடம் ஒப்படைதத்தார் இதை ஜேப்பியாரே சொல்லியிருக்கிறார்..
அன்று தொடங்கியது வாழ்வில் மர்மங்கள் .. அதற்கு முன்பு அதாவது
அரசியலுக்கு வருவதற்கு முன்பு கொஞ்சம் வெளிப்படையானவராக மனதில் தோன்றியதை சொல்ல கூடியவராக இருந்தார் சோபன்பாபு காதலை கோயிங் ஸ்டெடி என துணிவோடு சொல்ல அவரில் முடிந்தது .. ஆனால் அரசியல் பிரவேசம் அதை தொடர்ந்து அவர் தனக்குள் ஏற்படுத்திக்கொண்ட கோடு .. மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி கொண்டவை அவரைப்பற்றி செய்திகளில் உண்மைத்தன்மை குறைய ஆரம்பித்தது .. அவர் தனக்குள் போட்டுக்கொண்ட கட்டுபாட்டை அவரோடு கூட இருந்தவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள் .. பெண் என்பதால் வெளிப்படையாக நடந்துக்கொள்ள முடியவில்லையென சிலர் சொல்ல அதை நம்ப தொடங்கியது கூட இருந்தவர்களுக்கு சௌகரியமாக போனது .. தன்னைச்சுற்றி என்ன நடக்கிறதென்றே தெரியாதளவிற்கு அவர் இயக்கபட்டிருக்கிறார்.. கடைசி மூச்சுவரை வெளிவராத சங்கதிகளின் நாயகியாகவே இருந்துவிட்டு போனார்.. பிரபலமான
ஒருவரின் பிறப்பும் இறப்பும் சரியாக பதிய வேண்டும்.. இறப்பில் இவ்வளவு சந்தேகங்களோடு புதைக்கபட்டிருக்கிற உண்மைகள் வெளிவந்தே தீரவேண்டும்.. அப்போலோ முதல் அடிமைகள் வரை.. கூட இருந்து இயக்கிய கழுகும் விசாரிக்கபடவேண்டியவர்கள் ..
..
இன்னும் தோண்ட தோண்ட நெடி வீசும்..
..
Aalanci Spm
Tuesday, January 16, 2018
ரௌத்திரம்
தமிழன் ரௌத்திரம் பழகுவதை நிறுத்திக் கொண்டதால் தான் இந்த நிலையில் தமிழன் உள்ளான் தோழர்.கனிமொழி...
ஆம்..
ரௌத்திரம் பழகாமல் போனோம்.. தந்தை பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்ற சொல்கிறவனிடம் ரௌத்திரம் செய்திருந்தால்...
கலைஞரைப்பற்றி கீழ்தரமாக பேசுகிறவனிடம் நம் கோபத்தை காட்டியிருந்தால் இன்று இருக்குமிடமே தெரியாமல் இருந்திருப்பார்கள்.
இன்றைக்கு கண்டவனும் நம்மை பார்த்து கேள்விகேட்கிறான். கருத்து சுதந்திரம் என்ற பேரில் எல்லாவற்றையும் அனுமதித்தது எல்லை மீறி இன்று...
இரத்தம் செத்தவனெல்லாம் நம்மை கேலி பேசுகிறான்..
..
சுயமரியாதையை இழந்துவிட்டால் வேறு எது இருந்தும் பயனில்லை.. இன்றைக்கு வைரமுத்துவை மன்னிப்பு கேள் என சொல்ல முடிகிறதே ஏன்.. வைரமுத்து தம் கொள்கையிலிருந்து கொஞ்சம் தடுமாறியதே இந்த நிலைக்கு காரணம்.. தோழர்.அருள்மொழி சொன்னதைப்போல..
அவர் சொல்ல மறந்த சொல் ஒன்று உண்டு சொல்ல மறந்த பெயர் உண்டு எம் பகைவரை குலைநடுக்கவைக்கும் சொல் திராவிடம் பெயர் பெரியார்.. இந்த இரண்டையும் மறந்தால் நமது அறிக்கைகள் கனமாக இருக்கும் எதிரியை அச்சமடைய செய்யாதென்றார்..
ஆம் .. திராவிடம் தவிர்த்த எதுவும் தமிழனை அடிமையாக்கும் என்பதை உணரவேண்டும்..
அமைதியான முறையில் சொல்லிக்கொண்டிருப்பதால் ஒன்றும் ஆகபோவதில்லை மாறாக எதிரிகள் எடுக்கும் அதே ஆயுதத்தை நாமும் எடுப்போம்..
வீதியில் இறங்கி போராடுகிறாயா ..நாமும் வைணவர்களுக்கு எதிராக வைரமுத்துவை ஆதரித்து போராட்டம் நடத்துவோம்..
..
எதற்கும் ஒர் எல்லை உண்டென கருதவேண்டும்.. ஆட்சி அதிகாரமோ ஆள்பலமோ இருந்தால் எதுவும் நடத்தலாமென்பதை புறந்தள்ளுவோம் ..
யார் இவர்கள் தமிழ் மண்ணில் தமிழனை மன்னிப்பு கேட்க சொல்ல.. இது தனியொரு வைரமுத்துவோடு முடிகிற பிரச்சனை இல்லை ஆரம்பத்திலேயே கிள்ளியெறியாவிட்டால் புரையோடிவிடும்.. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள திராணியற்று .. கடவுள் மதமென போர்க்கொடி ஏந்துவது கீழமை.. யாரையும் புண்படுத்தல்ல நோக்கமென்ற பிறகும் வாலாட்ட தொங்கினால் வாலை அறுக்கவேண்டிய கட்டாயம் வரும்..
எல்லை மீறி விமர்சிக்கிறாரென்றால் வழக்கு தொடரவேண்டியதுதானே.. வைணவர்களை தவிர ..சில இந்துத்துவ கொடிப்பிடிப்போரை தவிர யாரையும் காணோம்.. சைவ சித்தாந்திகள் எதிர்மறையாற்றுகிறார்கள்.. குறிப்பிட்ட யாரையும் குறை கூறுவதல்ல...அல்லது பாஜக மதவெறியர்களை போல பொய் சொல்லி திரியவில்லை.. மாறாக உண்மையாக ஆண்டாளை அறிந்தவர்கள் விவாதத்திற்கு வரலாமே.. விவாதம் செய்தால் இன்னும் நிறைய அசிங்கங்கள் வருமென கு.கா.மானியம் பெற்றவர்களுக்கு தெரியும்..
..
ஆண்டாள் சன்னதியில் வந்து மன்னிப்பு கேட்கவேண்டுமென்போரே.. முதலில்
கலைஞரைப் பற்றி இதுவரை பேசிய அவதூறுகளுக்காக.. இதுவரை பேசி வந்தவர்கள்..
#திராவிடப்_பெருவுடையார்_கலைஞர் முன் நின்று மன்னிப்பு கேட்கவேண்டும்.. பிறகு வைரமுத்து மன்னிப்பு குறித்து பேசலாம்..
..
இனி..
நாகரீகமாக நேர்மையான எதிர்கருத்தாளர்களை தவிர.. விமர்சனமென்ற பெயரில் தனிநபரைப் பற்றி அவதூறான செயல்களை செய்வோருக்கு அவர்கள் மொழியிலேயே/ வழியிலேயே பதிலடி தரவேண்டும்..
கொஞ்சம் ரௌத்திரம் பழகுவோம்..
#சினம்_கொள்..
..
Aalanci Spm
Monday, January 15, 2018
வாழ்க வசவாளர்கள்
வைரமுத்துவிற்கு நன்றி..
எத்தனை கொடூர முகங்கள் இங்கே உலவியதென அறிய தமிழை ஆண்டாள் பயன்பட்டிருக்கிறது.. இங்கே ஆண்டாளை பேசலாமா என சொல்லிகிறவர்கள் வைரமுத்துவோடு நிற்பதில்லை.. கூடவே திராவிடத்தை ..திமுகவை கலைஞரை திட்டுகிறார்கள் .. நல்லவன் போல் நடித்தவனெல்லாம் இப்போது வெளியே தெரிகிறான்.. ஆலகால விசத்தை கக்குகிறான்..
எது எப்படியோ இவர்களை மக்கள் முன் நிறுத்த நல்வாய்ப்பானது.. வைரமுத்துவின் தமிழை ஆண்டாள்...
..
திருப்பதி நாராயணன் என்ற கபோதி தாம்தூம் என குதிக்கிறது வனவாசத்தில் கலைஞரை திருட்டுரயிலேறி வந்தவரென எழுதியிருப்பதாக மேற்கோள்காட்டி .. கண்ணதாசன் ஆய்ந்து எழுதியதென சப்பைகட்டி எழுதியிருக்கிறார்.. முதலில் வனவாசத்தை படித்துவிட்டு வரட்டும் அதன் பிறகு நடந்ததென்ன அவர் அறிந்திருக்கவில்லை.. கண்ணதாசன் மீது மான நஷ்ட ஈடு வழக்கு சைதை கோர்ட்டில் தொடரப்பட்டு .. கண்ணதாசன் நேர்நின்று வாய்வழி வந்த செய்தியை எழுதினேன் என மன்னிப்பு கேட்டது தெரியுமா.. பிறகு மானநஷ்டஈடு வேண்டாமென கலைஞர் பெருந்தன்மையோடு நீதிபதியிடம் எழுத்து மூலம் தந்து #மன்னித்ததும் தெரியுமா.. அன்று அவருக்காக வாதாடிய கோபலகிருஷ்ணன் என்ற வழக்கறிஞர் .. பிறகு உயர்நீதிமன்ற நீதிபதியாகி ஓய்வு பெற்றவர்.. இதெல்லாம் இந்த கபோதிக்கும்... தொடர்ந்து திருட்டுரயில் என சொல்லி வருபவர்களுக்கும் தெரியாது..
..
துக்ளக் விழாவில் குருமூர்த்தி மிக முக்கியமான இரண்டு விடயங்களை பற்றி பேசினார்.. ஒன்று திராவிடர் டின்என்ஏ வில் பார்பன (இந்து) எதிர்ப்பிருக்கும்.. மற்றொன்று ரஜினியும் பாஜகவும் இணைந்தால் ஆட்சியை பிடித்துவிடலாம்..
இரண்டாவது சொன்ன விடயத்தில் நாம் கவனமாக இருக்கவேண்டும் ஏனெனில் திமுக இனி ஆட்சிக்கு வரமுடியாதென்கிறார்.. இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும் போது மிகப்பெரியளவில் மோசடிக்கு தயாராகி இருக்கிறார்களோ என சந்தேகம் வருகிறது ரஜினிக்கென்று பெரிய ஆதரவு இல்லையென்பது பாஜக இருக்கிற இடமே தெரியாத கட்சி .. எதை வைத்து இப்படி சொல்கிறாரென சந்தேகம் வருகிறது.. ஒருவேளை வாக்குபதிவு இயந்திரம் இருக்கிறதென்ற நம்பிக்கையா.. எதற்கும் கவனத்தோடு இருக்கவேண்டும்.. அவர்களே தமிழர்களை ஒட்டுமொத்த திராவிடர்களை இந்துக்கள் இல்லையென சொல்லியிருக்கிறார் அது உண்மைதானே. .திராவிடர்களின் ஆரிய எதிர்ப்பும்.. (தமிழர்களின் பார்பன எதிர்ப்பு) இயல்பாகவே இரத்தத்தில் ஊறிப்போனதுதான்
அதை குருமூர்த்திகளால் மாற்றமுடியாது ..
..
எந்தவொரு விடயமானாலும் எதிர்ப்பை சரியான ஆதாரங்களோடு மறுக்கவேண்டும் கடுமையாக விவாதம் செய்யவேண்டும் மறுத்து தி முகவையும் கலைஞரையும் வம்பிக்கிழுத்து அநாகரீகமாக பேசுவது நல்லதிற்கில்லை .. கருத்து சுதந்திரத்திற்கு திமுக மதிப்பளிக்குமென்பதால் எதையாவது பேசலாமன்றால் பதிலடி அவர்கள் பின்பற்றும் அதே பாணியில் வரும்..
கலைஞரை பழித்தவர்களை நிறைய பார்த்தாயிற்று .. உண்மை வென்றே இருக்கிறது.. நீதி நின்று கொல்லும்..
.
சிறிய எதிர்ப்பை கூட ஊடகங்கள் துணையோடு பெரிதாக்கி காட்டுகிறார்கள் ஆனால் இங்கே ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை காட்டும் என தெரியவில்லை.. பொய்களும் போக்கிரித்தனமான பேச்சுகளும் ..இவர்கள் மட்டுமே யோக்கியர்களை போல சித்தரிப்பதும்
மட்டுமே இவர்களின் பலம்.. ஆனால் தமிழகம் வேறுமாதிரியான களமென்பதை திருப்பதிகளும் மூர்த்திகளும் கவனத்தில் கொள்ளவேண்டும்.. திராவிட கொள்கையாளர்களையும் திமுகவையும்
கலைஞரையும் வசைபாடுவோருக்கு .. நேர்மையோடு நிதானத்தோடும் நாகரீகமாகவும் சொல்கிறோம்.
..
#வாழ்க_வசவாளர்கள் ..
..
Aalanci Spm
Sunday, January 14, 2018
தமிழ்ப் புத்தாண்டு
ஏன் பார்ப்பனர்களும், பாரதிய ஜனதாவும் ஏன் தமிழர் பண்பாட்டை கலாச்சாரத்தை எதிர்க்கிறார்கள் .. ஏன் பார்ப்பனர்கள் பொங்கலை கொண்டாடுவதில்லை
சற்று யோசித்தால் பிடிகிட்டும் ..இன்று அதிகாலை எனது நண்பர் மகர சங்கராந்தி வாழ்த்துகள் சொன்னார்.. இன்றைக்கு கூட காலை முகநூலை திறந்தவுடன் சங்கராந்தி வாழ்த்தை சொல்லி எம் மீது கலாச்சார திணிப்பை செய்தது..
..
தமிழகத்தை தவிர்த்து பிறமாநிலங்களில் கொண்டாடப்படும் மகா சங்கராந்தியை நம் மீது திணிக்கும் நடவடிக்கையாக தான் பொங்கலோடு சார்ந்த விழாக்களை தடைசெய்து சிதைக்க எண்ணுகிற செயலாகதான் தோன்றுகிறது ஜல்லிக்கட்டு மீதான பிடிவாத போக்கும் பொங்கல் விடுமுறையை கல்வி நிறுவனத்திற்கு வழங்காததும் கலாச்சாரத்தை அழிக்கும் செயலாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்..
இப்போது கூட கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு பொங்கல் விடுமுறை இல்லை
..
அறுவடைநாளோடு சூரியனின் கதிர்திருப்பத்தை
(Solstice) இணைத்து நம் மீதான கலாச்சாரப்போரை தொடுக்கிறார்கள்.. (சங்கராந்தி) சங்கரமண என்ற சமஸ்கிருத சொல்லிற்கு நகர தொடங்கு என பொருள் அதாவது தொடக்கம் என்றும் பொருள் கொள்ளலாம்.. அதாவது ஆண்டில் தொடக்கம்
ஆனால் அதை ஆண்டின் தொடக்கமாக ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள்.. இதிலிருந்து ஒரு உண்மையும் தெரியும் தமிழறிஞர்கள் ஏன் ஆண்டின் தொடக்கம் #தைத்திங்கள் என்றார்கள் என்பது நமக்கு விளங்கும் ..
சமஸ்கிருத ஆண்டை நம்மீது திணித்தாலும் அறிவியல் ரீதியாகவும் அவர்கள் நம்புகிற வேதங்களில் கூட வருகிற சில உண்மைகளை அவர்களால் கூட மறைக்க முடியவில்லை
..
மகா சங்கராந்தியை அவர்கள் கொண்டாடுவதிலே எங்களுக்கு சங்கடமில்லை ஆனால் இந்தியா முழுவதும் அதை திணிக்கவேண்டுமென்பதற்காக செய்யும் அழிச்சாட்டியங்களை காணும் போது கோபம் வருகிறது.. பொங்கலை சாதிமதத்தை மீறி உலகெங்கும் வாழும் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள் .. #உத்தராயன் என சூரியன் வணங்கும் விழாவாக குஜராத்தியர்களும் ராஜஸ்த்தானியர்களும் கொண்டாடிவந்தார்கள் அவர்கள் மீது சங்கராந்தியை திணித்து அவர்களின் தொன்மை கலாசாரத்தை சிதைத்ததைப்போல தமிழர்களின் பண்டிகையை / பண்பாட்டை சிதைக்க முடியாது.. காரணம் தமிழர்கள் இந்தியாவில் மட்டுமல்ல இலங்கை மலேசியா மற்றும் கீழைநாடுகளிலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள் உலகெங்கும் பரந்து..
பல்வேறு நாடுகளில் வேரூன்றி நிற்கிறான் தமிழன்.. தமிழர்கள் பொங்கலை சாதிமதங்களை கடந்து கொண்டாடுகிறார்கள்..
..
1921 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகளாரின்தலைமையில் கூடிய அறிஞர் குழு ஆய்வு செய்து தை முதல் நாளே தமிழாண்டு பிறப்பு என முடிவு செய்தது என்றும் சங்க இலக்கியங்களில் தை மாதமே புத்தாண்டு என்ற குறிப்பு உள்ளதென்றும், சித்திரையில் புத்தாண்டு பிறப்பதாகச் சொல்லப்படும் அறுபது ஆண்டு வட்டத்தில் எதுவும் தமிழ்ப்பெயர் இல்லையென்றும் கூறியதை ஏற்று
#திராவிட_பெருவுடையார்_கலைஞர் 2008 ல்
தைத்திங்களை தை முதல்நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்தார் .. பிறகு ஆட்சிக்கு வந்த ஆரிய மங்கை மீண்டும் சமஸ்கிருத ஆண்டை நம் மீது திணித்தது..
இப்போது தளபதி அவர்கள் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தை மாத முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டாக அறிவிக்கபடுமென சொல்லியிருக்கிறார்.. அப்போதே கலைஞர் பெருமகன் .. தமிழ்ப்புத்தாண்டை தை கொண்டாடவேண்டுமென அறிவித்து ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடுவதை போல விழிந்திருந்து வரவேற்று வீடுகளில் வண்ண விளக்கேற்றி கொண்டுவோம் என்றார் நாம் தான் கேட்கவில்லை..
இதோ நம் இனத்தின் பண்பாட்டை சிதைக்க என்னெல்லாம் வழிகளில் உண்டோ அதில் எல்லாம் நுழைகிறார்கள் ஆனால் அவர்கள் மறைக்க நினைத்தாலும் ஒழிக்க முயற்சித்தாலும் நடக்காது..
தமிழும் தமிழர் கலாச்சாரமும் எங்களின் இன உணர்வோடு சம்பந்தப்பட்டது..
..
கடைசி தமிழ் உணர்வாளர்கள் உள்ளவரை நீங்கள் நிறைய தண்ணீர் குடிக்கவேண்டிவரும்..
திமிறி எழுந்தால் திசை தெரியாது போவீர்..
..
#அத்துமீறினால்_அடங்கமறுத்தல்_எங்கள்இயல்பு..
..
Aalanci Spm
Saturday, January 13, 2018
ஆண்டாள்..
ஆண்டாள் சர்ச்சையில்... பெண் தான் மீண்டும் மீண்டும் பேசு பொருளாக்கப் படுகிறாள். வினையும், எதிர்வினையுமாக பெண்ணே மீண்டும் மீண்டும் இழிவு படுத்தப் படுகிறாள்.
ஆண்டாள் பேசியது காமம் அல்ல. அது ஜீவாத்மா - பரமாத்மா ஆன்ம பொருளில் வருகிற concept. இந்து ஆன்மீகத்தின் உச்சம். வழிபாட்டு தளங்களான கோவில்களில் காணக் கிடைக்கும் கலவியல் சிற்பங்களும் இதையே உணர்த்துகின்றன. அடிப்படைகள் புரிந்தவர்களுக்கு இதை விளக்க வேண்டிய அவசியம் இல்லை...
சமூக ஆர்வலர்..? #பானுகோமஸ்.
..
வைரமுத்துவின் ஆண்டாள் வேறு ஒரு தளத்திற்கு கொண்டுபோக முயற்சிக்கிறார்கள் அதாவது பெண்ணை இழிவுபடுத்திவிட்டார்
என்கிற ரீதியில் பேசுகிறார்.. ஆண்டாளுக்கு போராடுகிறவர்கள் யாரென்று முதலில் கவனிக்கவேண்டும்.. இவர்கள் யாருமே தேவதாசி முறையை ஒழிக்கவேண்டுமென சொன்னவர்கள் அல்ல அதோடு தேவதாசி முறையை கொண்டுவரவேண்டுமென சொல்பவர்கள் அது ஒழுங்குசார்ந்ததென சப்பை கட்டுபவர்கள் தெய்வப்பணியென பேசி திரிந்தவர்கள்.. குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்களே தேவதாசியாய் இருக்கவேண்டுமென சொல்லி திரிந்தவர்கள்..ஆனால் ஆண்டாளுக்காக வருவதன் நோக்கம் தெய்வபக்தியெல்லாம் இ்ல்லை ஆண்டாளை அவர்கள் பிராமணராக கருதுவதால் இந்த போராட்டங்கள் .. சொன்னவர் யாரென்று பார்த்து திராவிட இயக்கத்தை சேர்ந்தவன் கடவுள் மறுப்பாளன் என்பதால் கொந்தளிக்கிறார்கள்.. இவர்களுக்கு தமிழ்மேல் பாசமெல்லாம் இல்லை அப்படி இருந்திருந்தால்
தமிழை நீச பாஷையென்ற காஞ்சி காமகோடிக்கெதிராக போராடியிருக்கவேண்டும்.. அப்போது திகுப்பாவை நியாபகம் வரவில்லையா..
இந்து கடவுள் கிரிமினல்கள் என்று சொன்ன சங்கரராமன் கொலைவழக்கில் கைதுசெய்யபட்டு விடுதலையான ஜகத்குரு..? ஜெயேந்திரருக்கு எதிராக போராடியிருக்கவேண்டும்..
இதிலிருந்தே தெரிகிறது வர்ணாசரமம்
..
ஆண்டாள் பேசியது காமம் அல்ல என்கிறார்.. காமம் அழுக்கென்றோ கெட்டவிடயமாகமென்றோ..
தீட்டென்றோ நாம் சொன்னோமா... அல்லது வைரமுத்து சொன்னாரா..
அகம் மூழ்கி ஆழ்துளையிட்டு அரும்பி வரும் அன்பின் பெருக்கே காமம்.. அதில் மூழ்குதல் அழகு .. அதில் பரமானந்தம் அடைவது பேரழகு ..
பிறகு ஏன் கொச்சை படுத்துகிறீர்.. காமத்தை கெட்டவார்த்தையாக்கியதால் பானு கோமஸ் வகையறாக்காள் அசிங்கம் கெட்டென்கிறது.. கோவில் சிற்பங்கள் உணர்த்துவது இதுதான் என்கும் போது ஏன் வீண் பாய்ச்சல் சொன்னவனை பார்க்கிறீர்.. சொன்னதை அல்ல
..
பார்பனர்கள் தெருவில் இறங்கி போராடுகிறார்கள்.. தமிழர்களின் வாழ்வாதார பிரச்சனைக்களுக்கோ.. ஏழை பிராமணன் சங்கரராமன் கொலையுண்ட போதோ..(அப்போது திமுகதான் போராட்டம் செய்தது அதன் விளைவே ஜெயேந்திரர் கைதானார்) இந்து கடவுள்களை கிரிமினல் என ஜெயேந்திரர் சொன்னபோதோ வந்திருக்கிறார்களா.. திருப்பாவைக்காக வரவில்லை ..தமிழ் அவர்களை பொறுத்தவரை நீசபாஷை ..ஆனால் அவர்களை தேவதாசி என்பதா என வெளிவருகிறார்கள்.. மற்றவர்களை சொல்லும் போது என்னானது..?..
..
வைரமுத்துவிற்கு ஆதரவாக ஆசிரியர் தளபதி வைகோ போன்றவர்கள் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்கள் எந்த மதத்தை புண்படுத்துவதல்ல எமது கொள்கை என்கிறார் தளபதி. ஆம் அண்ணா அன்று சொன்ன அதே வாசகம் பிள்ளையாரை உடைக்கவும் மாட்டோம்
கும்பிடவும் மாட்டோம்..
ஆனால் .. எதிர்கருத்து சொல்வோரை கொல்லுகிற பாசிசவாதிகளுக்கெதிராக இருப்போம்..
இலக்கியவாதிகளுக்கு ஆதரவாக இருப்போம்.. கருத்திற்கு உடன்படவில்லையெனில் மாற்று கருத்தை சொல்லுங்கள்... யாரையும் புண்படுத்து அல்ல நோக்கமென்ற பிறகும் வரிந்து கட்டுவதை ஏற்கமுடியாது மத ஜாதி கலவரத்திற்கு வித்திடுவதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது ..
..
Aalanci Spm
Friday, January 12, 2018
உச்சநீதி..
விடுதலை இந்தியாவில் முதன்முறையாக உச்சநீதிமன்றம் அஞ்சுகிறது.. நேர்மையாக நிர்வாகமில்லை என கவலைகொள்கிறது ..மக்களின் கடைசி நம்பிக்கை என இறுமாப்பு கொண்டிருந்த நீதிபீடம் புற்று அரிக்க தொடங்கியிருக்கிறது.. ஜனநாயகத்தில் கடைசி நம்பிக்கையையும் காவிகள் ஆக்கிரமித்து இருக்கிறார்..
..
நீதியரசர்கள் நால்வர் செல்லமேஸ்வர்,குரியன் ஜோசப்,மதன் பி லோகர், ரஞ்சன் கோகாய்.. கூட்டாக
செய்தியாளர்களை சந்தித்ததும் நாடு சற்று நடுங்கிதான் போனது..
நான்கு மாதமாக தலைமை நீதியரசரிடம் சொல்லியும் பலனில்லையென்பதால் மக்களிடம் செய்தியை எத்திவைத்திருக்கிறார்கள்.. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மெல்ல படர தொடங்கிய பாசிச சிந்தனையாளர்கள்.. அதிகாரம் கைக்கு வந்தபிறகு வெளிப்படையாகவே நீதித்துறையில் தங்களின் அதிகாரத்தை செலுத்த தொடங்கினார்.. அமிர்ஷா வழக்கில் கூட நிறைய முறைகேடுகள் நடந்திருப்பதாக ஊடகங்கள் சொல்லியும்.. கவர்னர் பதவி வரை பரிசுகள் காத்திருக்கிறதென்ற புதிய நடைமுறையை தந்தார்கள்..
மரபுகள் மீறபடுவதைவிட .. அநாகரீக செயல்பாடுகளும் தவறான முன்னுதாரணங்களும் நிகழ்த்தபட்டது .. மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சி தலைவர் பதவியே இல்லாது செய்து தொடக்கம் குறித்தவர்கள் .. குற்றவாளியென தீர்ப்பு தரப்பட்ட ஜெயலலிதாவை சட்ட அமைச்சரும் நிதியமைச்சரும் சந்தித்த அவலம் கூட நடந்தது எல்லாவித தார்மீகங்களையும் உடைத்தெறிந்து தங்களுக்கான மநுநீதியை பெற எல்லாவழிகளையும் திறந்து வைத்தார்கள் .. விசாரணை முடிந்தும் ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பை தாமதபடுத்தியதும் நிறைய சந்தேகங்களை எழுப்பியது..இப்படி நிறைய ..
..
நீதிபதி கர்ணன் சொல்லிய அதே குற்றசாட்டை வேறுவிதமாக நால்வரும் சொல்லியிருக்கிறார்கள்.. ஆனால் நீதிபதிக்கு சிறைத்தண்டனை விதித்து மற்றவர்களை எச்சரிக்கை செய்தது .. அப்போது கூட சில கண்டன குரல்கள் எழுந்தன அவை சாதிய குரல்களென வாயடைத்தார்கள்.. அங்கே பிராமண ஆதிக்கம் அதிகமாக இருப்பதும் சில முடிவுகள் மநுவை சொல்லி விளக்கவதும் நாடு கண்டது தான் டைலர் வழக்கில் தூக்குதண்டனை ரத்திற்காக நள்ளிரவில் கூடிய நீதிமன்றம்.. தலைமை வழக்கறிஞர் மநுநீதியை காரணம் காட்டி திசை திருப்பினார் .. இது ஒரு சிறிய உதாரணம் தான்.. நீண்ட நாட்களாகவே உச்சநீதிமன்றத்தில் அரசியல் வெளிப்படையாகவே நடந்தேறுவதை நடுநிலையாளர்கள் மெல்ல விமர்சித்தும் அதேவேளை இன்னமும் நம்பிக்கையற்று போகவில்லை என நம்பியும் இருந்தார்கள்... இதையெல்லாம் உடைந்தெறிந்தது இன்றைய நீதியரசர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு..
நீண்டநாட்கள் உண்மையை மறைக்க முடியாதென்ற பொதுநீதி
உயர்ந்த நீதிபீடத்திற்கு தெரியாமல் போனது..
சிராபுதீன் வழக்கை விசாரித்த நீதிபதி மர்ம மரணம் குறித்த வழக்கை அரசிற்கு ஆதரவாக செயல்படும் நீதிபதிக்கு ஒதுக்கியிருப்பதை விமர்சிக்கிறார்கள்... அதோடு நீதித்துறை அரசிற்கு ஆதரவான நிலைபாடு வேண்டுமனில் ஆதரவாக செயல்படும் நீதிபதிகளுக்கு அனுப்புவதாக குற்றம் சுமத்தி நீதிபரிபாலன முறையே கேலிகூத்தாகி இருப்பதாக .. வேண்டபட்டவர்கள் நியமனம் போன்றவற்றை விமர்சித்திருக்கிறார்கள்.. நிச்சயமாக நீதித்துறை செல்லரிக்க தொடங்கியிருப்பது கவலையட வைக்கிறது..
..
இனியேனும்
நல்லதொரு தொடக்கம்.. இனியேனும் நீதியரசர்கள் அரசியல் சட்டம் என்ன சொல்கிறதோ அதை செய்யவேண்டும் மநுநீதி சொல்வதை அல்ல.. மக்களின் கடைசி நம்பிக்கையை பொய்யாக்காதீர்கள்..
..
Aalanci Spm
Thursday, January 11, 2018
வைரமுத்து..
திரு.. வைரமுத்து..
தங்களைைப்பற்றி நான் அறிந்த கொண்ட பொழுது தமிழ்சினிமாவின் மூலம்தான்.. பெரிய தாக்கத்தையெல்லாம் தரவில்லை அப்போது ..
வயல்வெளில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது காதில் வந்துவிழுந்த பொன்மாலை பொழுது .. புதியதாய் இருந்தது அது சினிமாவிற்கான இலக்கியம்..? என்பதால் கடந்து போய்விட்டேன் ..குங்குமம் என்று நினைக்கிறேன்.. #இதுவரை_நான் எழுதிய போதுதான் கவனிக்க தொடங்கினேன் .. அதில் தன்னை தமிழனாய் திராவிடனாய்.. நிறுத்த முயற்சித்ததும்... எமது திராவிடத்தின் பெருமை பேச .. பெரியாரின் நீதி பேச பகுத்தறிவு பேச ஒரு சினிமா பாடலாசிரியர் கிடைத்துவிட்டாரென்றளவில் மகிழ்ந்ததுண்டு.. ஆனால் பாருங்கள் சினிமாவிற்காக சமரசம் செய்துகொண்டீர்கள் .. அம்மி கொத்துவதையே சிறந்ததென கையாண்டீர்.. சிறந்த சிற்பியாக வரவேண்டியவர் பாவம் பிழைக்க தெரிந்தவராக வலம் வருகிறார்.. ஆனாலும் நம்மளவன் என்ற இறுமாப்பு இருந்தது..
இடையிடையே கள்ளிக்காட்டையும்
கருவாச்சியையும் தந்து நானிருக்கிறேன் என்றீர்
மகிழ்ச்சி கண்டோம்.. சிறந்த பிழைக்க தெரிந்தவரென அடிக்கடி காட்டிக்கொண்டே வந்தீர்.. ஆனாலும் தமிழால் கட்டிபோட்டதால் கடந்து போனோம்..
..
நட்டுவைத்த வேலில் பொட்டு வைத்த போதே எதையும் தின்பீர் என அறிவு சொல்லியது.. விருதுகள் பாராட்டுகள் .. இத்யாதிகளுக்காக இடுப்பு வேட்டி கழன்று விழுவது கூட தெரியாமல் அம்மணமாய் நிற்பேன் என்பது
மறவனுக்கு இழுக்கு.. தமிழனுக்கு பேரிழுக்கு.. அஞ்சாமை சொன்ன திராவிடத்தை அசிங்கபடுத்திவிடாதீர்.. கருத்தில் தவறில்லை என்கிற போது .. கண்டவனும் தலைமீது ஏறிநின்று கொட்டுவதை எப்படி ஏற்கமுடியும்.. கருப்பனென்கிறான் ஒருவன் நெருப்பைப்போல் சுட்டெரித்திருக்க வேண்டாமா
ஏன் அதற்கு உங்கள் வியாபார தமிழ் தடைபோடுகிறதா.. பதவிகள் பட்டங்கள் விருதுகள் இவையெல்லாம் நம் மானத்தின் முன் ஒன்றுமில்லாததவை..
..
உங்கள் மீது கல்லெறிகிற கபோதிகள் கூட்டம் வைத்தி மீது சிறு கண்டனத்தை கூட பதியவில்லை.. பாப்பான் மீது சிறிய கறை கூட விழாதவாறு கடந்து போகிறார்கள்.. உங்கள் பாரதிராஜாவை போல அரிவாளை எடுக்க சொல்லவில்லை தமிழ் அம்பை எடுங்கள்.. தாயை பழித்தவனை தாய் தடுத்தும் விடேன் என்ற கலைஞரின் வசனத்தை நினைவுபடுத்துகிறேன்..
எம் பேராசானை.. ஆசான் என கூறிக்கொள்கிறீர்.. இது தான் நீங்கள் கற்றதா.. உங்களின் #கள்ளமௌனம் தமிழ் இனத்தை அவமானபடுத்துகிறது..
..
இன்னும் கடுமையான வார்த்தையில் தங்களை திட்டவேண்டுமென்று கூட தோன்றுகிறது.. வைரமுத்து எதிர்ப்பை கூட பதிவு செய்யாமல் கடந்து போக நினைப்பது மானமுள்ளவரின் செயல் அல்ல.. கவிஞர் கண்ணதாசனில் வரிகளோடு முடிக்கிறேன்.. புரிந்தால் சரி..
"மானமொன்றே பெரிதெனக் கொண்டு வாழ்வது எங்கள் சமுதாயம்..
மரணபயங்கரம் நெருங்கி வந்தாலும்
மாறிவிடாது ஒருநாளும்..
..
Aalanci Spm
ஹாசிப் கான் தூரிகை
கார்ட்டூனிஸ்ட்..
கேலிசித்திரங்கள் .. திரு.ஆர்.கே. லட்சுமணன் you said it என்ற தலைப்பில் comman man கேரக்டர் (கதாபாத்திரம்) செய்யாத நையாண்டி இல்லை.. பாரதபிரதமர் தொட்டு யாரையும் விட்டுவைத்ததில்லை ஆனால் நையாண்டியும் எள்ளலும் மிகையாய் இருக்குமே தவிர யாரையும் புண்படுத்துவதாக இருக்காது.. பிரதமர் இந்திரா போன்றவர்கள் என்னை திரும்பி பார்க்கவைக்கும் லட்சுமணனின் தூரிகையென்பார்..
கார்ட்டூனிஸிட் கோபுலு (கும்பகோணம் கோபால்) செய்கிற குறும்புதனங்கள் ரசிக்கும்படியிருக்கும் அவரின் இலங்கை இன பிரச்சனையை தமிழ் சிங்களம் இரண்டையும் ரம்பம் கொண்டு அறுக்கும் கேலிசித்திரம் பிரபலம்.. ஆனந்தவிகடனில் நீண்டகாலம் பணியாற்றிய மதன் கூட கேலிசித்திரம் மூலமே பிரபலமடைந்தவர்.
நிறைய பேர்களுக்கு முன்னோடியாக இருந்த லட்சுமணன் கார்ட்டூனைப்பற்றி கூறும் போது சொல்லபடும் கருத்துக்களில் பிழை இருக்ககூடாது அதேவேளை சொல்லவந்ததையும் பொட்டில் அறைந்தாற்ப்போல் சொல்லிவிடவேண்டுமென்பார்.. முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி கூறும் போது ஆர்.கே.வின் #பொதுஜனம் common man மக்களின் குரல் என்றார்..
..
இதை ஏன் சொல்கிறேனெனில் திரு.பாலா தூரிகைகள் தொடர்ந்து திராவிட இனத்தை அதன் தலைவர்களை வன்மம் கொண்டு சித்தரிப்பார் அதில் நையாண்டி இருந்ததில்லை
மாறாக குரோதமே மேலிட்டது .. கேலிச்சித்திரங்களை எப்படி வரைய கூடாதென்பதற்கு பாலா உதாரணமாக திகழ்கிறார்.
..
சமகாலங்களில் கார்டூனிஸ்ட்களில்
பேசபடுகிறவர் ஹாசீப் கான்..
கேலி சித்திரங்களை ஹாசிப் கான் தந்திருக்கிறார்.. அனிதா மரணத்தை .., ஜெயலலிதா புதைக்கபட்டதை ரசனையோடு கூடிய கோபத்தின் வெளிபாடாய் இருந்தது..
மிக முக்கியமாக கேலுச்சித்திரங்கள் சொல்லவந்ததை பொட்டில் அடித்தாற்ப்போல சொல்ல வேண்டும் ..அது நல்ல கலைஞனுக்கு மட்டுமே வரும் ..இந்த சமூகத்தின் மீது அக்கறையும்.. இயலாமையை வெளிப்படுத்தும் பாமரனின் எண்ணமும் மிக சரியாக கையாளபட வேண்டும்..
..
ஆர்.கே... கோபுலு போன்றவர்களின் கருத்துப்படத்தில் கவனமாக திராவிட சித்தாந்தத்தை ஒதுக்கிவிடுவார்கள்.. அவர்களின் இனத்தின் மீதான மெல்லிய பாசம் அவர்களிடத்திலே வெளிபடும்.. நையாண்டி செய்து அதன் வீரியத்தை குறைப்பார்கள் .. ஆனால் தோழர்.ஹாசீப் எம் இனத்தின் மீதான அழகிய கருத்தியலை கைவிடாது வரைவார்.. அனிதாவை பெரியாரும் காமராஜரும் அண்ணலும் சேர்ந்து சுமப்பதைப் போன்ற கார்ட்டூன் என்னை நீண்ட நேரம் ஏதோ செய்தது.. நமது வலியை இதைவிட சொல்லமுடியாதென சொல்லியது.. எல்லாவிடயங்களிலும் எல்லா நேரத்திலும் எம் சிந்தனையோடு கூடிய வரைதல் எம் இனத்தை சேர்ந்தவன் என்பதை காட்டுகிறது..
எம் இனத்தின் சித்தாந்தத்தை, பண்பை கலாச்சாரத்தை அதன் உணர்வுகளுக்கு காயம் ஏற்படாதவாறு வரைவதில் சிறந்தவர்
எங்கும் வன்மமோ .. குரோதமோ தலைகாட்டாதவாறு சொல்லவந்ததை பொட்டில் அடித்தாற்ப்போல சொல்லும் கலையில் வல்லவர்..
#பெரியார் விருதிற்கு தேர்வாகி இருக்கிறார் ஹாசிப்... அவரின் வரைகலை அதற்கான தகுதியை பறைசாற்றும்.. ஹாசீப் கானுக்கு பாராட்டும் வாழ்த்தும்..
#பெரியார்_விருது..
..
Aalanci Spm
Wednesday, January 10, 2018
ஆண்டாள்
கோயிலுக்கென்று சில ஒழுங்குகள் இருந்தன. அதில் ஒன்றுதான் தேவதாசிகள் எனும் உயர்ந்த மரபு.
தினமலர் வெங்கடேஷ் ஐயங்கார்..
எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.. ஆனால் யாருக்கு பொட்டுகட்டி தேவதாசியாக ஆக்குவதென்பதை முடிவு செய்துக்கொள்வோம்.. ஏற்கனவே எங்கள் முத்தச்சி முத்துலெட்சுமி ரெட்டி .. பெரியாரிடம் கேட்டு வந்து சட்டமன்றத்தில் முழங்கியதுதான் சத்யமூர்த்தி இனத்திலிருந்து யார் வந்தாலும் சரி..
..
எதை ஒழுங்கு என்கிறார் வெங்கடேஷ்.. அப்பன் பெயரை கூட போட்டிக்கொள்ளமுடியாமல் கடைசிவரை .. எவ்வளவு உன்னத விருதுகளை அலங்கரித்தும்.. மதுரை சண்முக வடிவின் மகளாகவே வாழ்ந்து மறைந்த இசைமூதாட்டியின் வாழ்வில் ஏதேனும் மாற்றம் செய்யமுடிந்ததா..
..
தேவதாசியென பார்பன ஆண்டாளை சொல்லலாமா என கொந்தளிக்கும் ராசா .. தேவதாசி பெண்களை கேவலமாக பார்க்கிறார் என்று தானே பொருள்.. பார்பன பெண்களை இழிவு படுத்தியதாக கொந்தளிக்கிறீர்களே தெய்வதொண்டு தானே.. என்ன தவறு..?
இப்போது புரிகிறது பெரியாரின் பெருந்தொண்டு.. அன்று சத்திய மூர்த்திக்கு வந்த அதே கோபம்.. இன்று எச்சைக்கு வருகிறது..
..
புராணங்களில் சொன்னகதையெல்லாம் இலக்கியங்களான போது அதை ஆய்வு செய்கிறவன் எல்லாவற்றையும்தான் ஆய்வு செய்து சொல்வான்.. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தாக சொல்லபடும் ஆண்டாளை துளசிதாசர் வளர்த்தாரென்று சொல்வதை ஒப்புக்கொள்கிறீர்.. துளசிதாசர் தினமும் மாலை செய்து பகவானுக்கு அணிவிக்க சொன்னதாகவும் அதை அவள் அணிந்துக்கொண்டு .. கண்ணாடியில் நின்று பார்த்துவிட்டே பகவானுக்கு அணிவிப்பாள் என்கிறது.. உடனே பதினோராம் நூற்றாண்டில் தானே கண்ணாடியே கண்டுபிடிக்கபட்டதாக நாம் சொன்னால் நம்மை நாத்திகன் என்பீர்..
..
முதலில் புராணங்களை நம்பி வாழ்வதென்பது ஒருவகை அலுச்சாட்டியம் அது எதுனாலும் .. அறிவிற்கொவ்வா கதைகளை சொல்லி .. ஆன்மீகம் என்ற பெயரிலே வந்தால் அறிவுடை சமூகம் கேள்வி கேட்கும்..
..
எச்.ராசா சமூகத்தில் நடமாடும் விசகிருமி.. மதவெறி தலைக்கேறி பேசுவது எதுவென்றே தெரியாமல் கடுமையான வார்த்தைகளில் பேசுகிறார்.. வைரமுத்து இந்து இவரும் இந்து ஆண்டாளும் இந்து ஆனால் இதில் முஸ்லிம்களை இழுத்துவிடுகிறார்.. முகமது நபியை இப்படி பேசிவிட்டு நடமாடமுடியுமா என்கிறார்.. கூடவே இந்து இளிச்சவாயன் என்கிறார். ஏற்கனவே ராமகோபாலன் நபிகளை பற்றி விசம கருத்துகளை பேசியவர் தான் நடமாடிகொண்டுதானே இருக்கிறார்..
ஏன் .. தேவரினத்தை சேர்ந்தவரை வேசிமகனென பாப்பான் சொல்கிறான் என்று சொன்னால் எவ்வளவு அபத்தமோ எவ்வளவு அபத்தமும் ஆபத்தும் அதே நிலைதான் இதில் முஸ்லிம்களை உள்ளே இழுப்பது.. எச்.ராசாவின் நோக்கம் நமக்கு புரியாமல் இல்லை..
எச்.ராசா விரட்டபடவேண்டியவர்.. விசமேறிய வார்த்தைகளால் மக்களை பிரிக்க நினைக்கிற ஜந்து... மனித மாண்புகள் எதுவுமே இல்லாத கேடுகெட்ட ஒரு பிறவி.. சக மனிதனை இழிவாக பேசுகிற எல்லோரையும் கீழ்த்தரமாக எண்ணுகிற பேசுகிற ..மோசமானவன்..
இவரை எப்படி ..மதம்பிடித்த யானை என்றே அது யானைக்கு இழுக்கு.. இவர் வெறிப்பிடித்த நாய்..
#அடித்து_துரத்துங்கள்..
..
குறிப்பு..
ஆண்டாள் என்ற பாத்திரமே இல்லை நாலாயிர பிரபந்தத்தில் ஆண்டாள் பாடியதாக வரும் பாசுரங்கள் ஆண்டாள் பாடியதல்ல பெரியாள்வார் பாடியது.. சில பாசுரங்களை ஆண்டாள் பெயரில் வெளிபடுத்தினார்.. இது பார்பான் தலையில வச்ச கொண்டாடும் மூதறிஞர்..? ராஜாஜி சொன்னது.. இல்லாத கதாபாத்திரத்திற்கு இவ்வளவு அலும்பா..
..
Aalanci Spm
Tuesday, January 9, 2018
எங்கள் கிழக்கு இவன்
ஜெய் பீம்..
இந்த கோசம் இப்போது அதிகம் முன்னெடுக்கபடுகிறது பட்டியல் இனத்தவரால் நன்று .. ஆனால் வேண்டுமென்றே பெரியாரை தவிர்த்து அம்பேத்கரை முன்னெடுக்க சிலர் முயற்சிக்கிறார்கள் அது இந்த மண்ணில் எடுபடாது..
அம்பேத்கரும் பெரியாரும் சமதட்டில் என்பது கூட ஏற்க முடியாதது காரணம் .. வெகுமக்களிடம் கொண்டு சேர்க்கபடாத எந்த புரட்சியும் பலனளிக்காது.. இங்கு தான் பெரியார் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறார் .. சாமானியனிடம் அவன் சுரண்டபடுவதை .. அவனுக்கு உணர்த்தி அவன் இடுப்பு வேட்டியை இறுக கட்ட சொன்னவர்.. அவன் தோளில் துண்டணிந்தால் நீயும் அணியென்றவர்..
இங்கே சரிசமாக கருத்தை சொல்லமுடிகிறதே.. இன்னும் சொல்லப்போனால் அதிகளவில் பேச எழுத முடிகிறது இதெல்லாம் வடமாநிலங்களே நடத்திட முடியுமா அம்மணமாக்கி அடித்தே கொல்வான்.. ஏன் இந்த மாற்றத்தை அம்பேத்கரால் கொண்டுவரமுடியவில்லை..
விடை மிக எளிது அவர் படித்தவர்களுக்கு போதித்துக்கொண்டிருந்தார்.. பெரியாரோ சாமானியரிடம் சென்றார்.. இதனால் அம்பேத்கரை குறைவாகவோ தாழ்த்தியோ எடைபோடுவதாக பொருள் இல்லை .. பெரியாரை புறக்கணித்து அம்பேத்கரை முன்னெடுப்பது சரியல்ல என்பதற்காக .. அம்பேத்கரால் முடியாததை செய்தவர் பெரியார்..
அந்த பெருங்கிழவன் இல்லையென்றால் பட்டியலின மக்கள் .. நினைத்துபார்க்கவே முடியாது.. என்பதை ரஞ்சித் போன்றவர் உணரவேண்டும்.. உங்கள் படங்களில் அம்பேத்கரையே பேசுங்கள்..கவலையில்லை. காரணம் பெரியாருக்கு விளம்பரம் தேவையில்லை
..
தலித் என்ற சொல்லை கூட நாம் பயன்படுத்த கூடாது ..தலித் என்பதன் பொருள் ஏழ்மை.. அரிஜனென சொல்லவேண்டுமென காஞ்சி சங்கரராமன் புகழ் ஜெயேந்திரர் சொன்னதால் .. நாமும் தலித் என்ற சொல்லை பயன்படுத்துகிறோமே தவிர.. இல்லையெனில் பட்டியலினத்தவர் அல்லது பள்ளர் பறையரென்றே அழைக்கலாம்.. பெரியாரே பள்ளர் பறையரென அழைப்பது மேல் சூத்திரன் என்றழைப்பதை விட என்றார்..
..
பெரியார் காந்தியை எதிர்த்தார் ஆனால் ஒரு கட்டத்தில் அம்பேத்கரை தலைவரென்றார் அம்பேத்கரோ .. என் இனத்தை சேர்ந்தவனை குளித்தில் குளிக்கவோ குனிந்து அள்ளி குடிக்கவோ கூடாதென்கிறான்.. ஆனால் பெரியாரால் தமிழகம் இதெல்லாம் நடந்ததென்றார்.. காரணம் பெரியார் மக்களிடத்தில் சென்று அவன் செருப்பு வீசிய போதும் அவனோடு நின்று பேசியவர் அவனுக்கு புரிகிற மாதிரி பேசினார் அதனால் தான் இங்கே நீங்க கூறுகிற ஜெய்பீம் ஆட்களெல்லாம் சட்டையை மடித்துகட்டி மீசையை முறுக்கி பேசமுடிகிறது.. வடநாட்டில் மீசைவைத்தாலே அம்மணாக்கி அடிப்பான்.. அம்பேத்கரால் சட்டத்தை இயற்றமுடிந்தது ஆனால் மக்கள் மனதில் மாற்றத்தை கொண்டுவர முடியவில்லை..
..
பட்டியிலின தலைவர்களை திராவிடம் முன்னெடுக்கவில்லையென்பதை ஏற்க முடியாது .. அயோத்திதாசரை.. இரட்டைமலையாரை அதிகம் பேசபட, படித்தறிய உதவியது திராவிடம் தான் .. இன்றைக்கு ரஞ்சித் போன்றவர்கள் பெரியாரை வேண்டுமென்றே விலக்கி வைப்பதன் பின்னில் அப்பட்டமான ஆரியசூழ்ச்சி அடங்கியிருக்கிறது.. இதோ இசைக்கு சாதியில்லையென்கிறார்களே அவர்களுக்கெதிராக ஏன் வாய்திறக்கவில்லை..தண்டபாணி தேசிகர் பாடியதாலேயே தீட்டுபட்டதென கழுவ சொன்னவர்களுக்கு எதிராக நின்றது பெரியார்..
குடியரசு அன்று கலைஞர் எழுதியது வரலாறு..
..
இப்போது கடைச்சாதிக்கார்களை கொண்டு வலை பின்னுகிறார்கள்.. பாவம்.. அது அறுந்த வலையென்று அவாளுக்கு தெரியாமல் போனது..
சாணக்கியனின் சூழ்ச்சிகள் இங்கே எடுபடாது..
..
#பெரியார்_கிழவனல்ல_எங்கள்கிழக்குதிசை
..
Aalanci Spm
Monday, January 8, 2018
திமுக சதிகளை முறியடிக்கும்
திமுக மா.செ கூட்டத்தில் திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணனின் பேச்சு எனக்கு தஞ்சை தளகர்த்தர் கோ.சி.மணியை நினைவுபடுத்தியது..
பாலைவன ரோஜாக்கள் படத்தில் தலைவர் ஒரு வசனம் எழுதியிருப்பார். ‘ரயில் இன்ஜினையே களவாடிச் சென்றவர்களை விட்டுவிட்டு கரித்துண்டுகளை பொறுக்கியவனுக்கு தண்டனையா?’ என்று கேட்டிருப்பார். அதுபோல ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக என்ற ரயிலின் இன்ஜினையே சீர் குலைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, கரித்துண்டுகளைத் திருடிய வட்டச் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆர்.கே.நகரில் இன்ஜினையே திருடி விற்றவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறோம்..என்று கேட்டார்..
இதுதான் திமுக.. தவறை யார் தெய்தாலும் சுட்டிகாட்டும் துணிவு.. அதை தலைமையின் கவனத்திற்கு புரிகிற மாதிரி விளக்கி சொல்லும் ஆற்றல் இதுபோன்ற நிகழ்வுகள் எந்த கட்சியிலும் நடக்காது.. ஆம்.. எந்த கட்சியிலுமே பேச அனுமதிக்கவே மாட்டார்கள் ஏற்கனவே எப்படி பேசவேண்டுமென தயார்படுத்தி அனுப்புவார்கள் ..திமுக ஜனநாயக இயக்கம் என்பதற்கு இது சிறந்த எடுத்துகாட்டு..
..
விடயத்திற்கு வருவோம்.. பூண்டியின் கருத்தில் உடன்படுகிறேன் ஒட்டிமொத்த அமைப்பையே கேலிகூத்தாக்கி .. நடந்த விடயங்கள் நம்மை தலைகுனிய வைத்திருக்கிறது மாவட்ட தலைமை தார்மீக பொறுப்பேற்றிருக்கவேண்டும்.. செயல்தலைவராக பொறுப்பேற்று நடந்த முதல் இடைத்தேர்தல் என்பதையும்.. எளிதாக வெல்லகூடிய சூழ்நிலை நிலவியதை மாற்றி யாரெல்லாம் விலைபோனார்கள் .. என்பதை அடையாளம் காண வேண்டும் அதற்கான பணிகளில் தளபதி இறங்கியிருக்கிறார் என அறிந்து மகிழ்வுண்டு.. நிறைய சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும்.. கிளைக்கழக அதிகாரத்தை பூத் (வாக்குசாவடி)வாரியாக பிரித்தளிப்பது அதிகார பரவலை ஏற்படுத்தும் நல்ல முடிவும் கூட எல்லைகளை சுருக்கி பணி செய்ய சொல்வதின் மூலம் நேரடி கண்காணிப்பு இலகுவாகும்.. நல்ல முடிவை தளபதி எடுத்திருக்கிறார்..
..
கலைஞர் தலைமையில் நடக்கும் மா.செ.கூட்டத்திலும் சரி பொதுக்குழு செயற்குழுவிலும் சரி நிறைய மாற்று கருத்துகளை விவாதிக்க பேச அனுமதிக்கபட்டது.. எல்லை மீறும் போது கோ.சி.மணியை கொண்டு சரிச்செய்வார்.
அந்த நிகழ்வுகளை தான் இப்போது காண்கிறேன்.. மன்னை,வீரபாண்டியார், நெல்லிகுப்பம் கிருஷ்ணமூர்த்தி, கோ.சி.மணி போன்றோரெல்லாம் தலைமைக்கு எந்தளவிற்கு விசுவாசமாக இருந்தார்களோ அதே அளவு தவறுகளை சுட்டிகாட்டி திருந்தங்களை கொண்டுவந்திருக்கிறார்கள்.. சில முக்கிய முடிவுகள் எடுக்கும் போதெல்லாம் முக்கிய நிர்வாகிகளோடு
கலைஞர் ஆலோசித்திருக்கிறார்.. சிறந்த ஜனநாயக பாதையை நமக்கு கலைஞர் நடத்திகாட்டியிருக்கிறார்.. அதே பாதையில் நடைபோட்டால் நல்ல எதிர்காலம் நமக்கு கிடைக்கும்..
..
234 தொகுதிகளிலும் தொண்டர்களின் கருத்தை கேட்க பிப்ரவரி முதல் பயணம் மேற்கொள்ளபோவதாக தளபதி சொல்லியிருக்கிறார் நல்ல தொடக்கம் காரணம் நிர்வாகிகள் அல்ல பலம் தொண்டர்கள் .. நடந்தவைகளையும் நடப்பவைகளையும் நேரடியாக தளபதியிடம் சொல்லுங்கள்...அதுவே சிறந்ததாக அமையும் கட்சிக்கு வலுசேர்க்கும்..
..
இங்கே ஒன்றை குறிப்பிட வேண்டும்..
எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகை திமுகவை பாதிக்குமா என்று பலரும் தொலைக்காட்சிகளில் விவாதிக்கிறார்கள். எம்.ஜி.ஆர். திமுகவை விட்டுப் போய் புதுக்கட்சி ஆரம்பித்தபோது அவருக்கு பலத்த எழுச்சியும், வரவேற்பும் கிராமங்கள் தோறும் இருந்தது. அடுத்து வைகோ நம்மை விட்டுப் பிரிந்தபோதும் பலத்த அதிர்வு இருந்தது. கடைசியாக விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது வட மாவட்டங்களில் பல கிராமங்களிலும் அவருக்கு கிளைகள் தொடங்கப்பட்டு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், இப்போது ரஜினிக்கு ஊடகங்கள் மட்டுமே பிரசாரம் செய்து வருகின்றன. அவருக்கு கிராமங்களில் எந்த வரவேற்பும் இல்லை. எனவே நாம் ரஜினி பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்று தெரிவித்தார்.. இதுதான் நிதர்சனம்..
..
இல்லாதயொன்றை நமது பொது எதிரிகள் பூதாகரமாக்கி காட்டி தங்களுக்குள் மகிழ்ந்துக்கொள்கிறா்கள் ..
பாவம் உண்மை தெரியும் போது தலைகுனிந்து நிற்பர்..
#நாம்_நம்பணியை_செவ்வனே_செய்வோம்..
..
Aalanci Spm
Sunday, January 7, 2018
திமுக...
எந்த கொம்பனாலும் தொட்டுபார்க்க முடியாது தளபதி..
..
சிறிய சுணக்கமும் தோல்வியு ம் கண்டவரையும் பேசவைத்திருக்கிறது.. ரஜினி கடைசி அத்தியாயத்தை எழுதுவாராம்.. முதலில் அவரின் கொள்கையை சொல்ல சொல்லுங்கள்
பிறகு தேறுவாரா என பார்ப்போம்..
..
நிறைய பேரை கொம்பு வீசி அனுப்பி பார்த்துவிட்டீர்கள் ஆனால் பாருங்கள் எல்லா புயல்மழைக்கு தாக்குபிடிக்கிறது இந்த ஆலமரம் . எப்படியென்று அறிந்ததுண்டா.. மூட்டைப்பூச்சியைப்போல நசுக்குவேனென்ற ராஜாஜியிடமும் 6000 அடி பள்ளத்தில் புதைத்துவிடுவேன் என்ற பக்தவச்சத்தலையிடமும் கேட்டு தெரிந்துக்கொண்டிருக்கலாம்.. பாவம் பொன்னர் என்ன செய்வார் அப்பச்சியை அரை அம்மணமாகவிட்டவனிடமே சொரணையற்று காலடி கிடப்பதால் ஒன்றும் புரியவில்லை..
தோல்விகள் ஒன்றும் புதிதல்ல அது போல் வெற்றியும்.. என்று புரியவில்லை
..
எங்களை வடிவமைத்த பேராசான் பெரியாரே
ராஜாஜியோடு இணைந்து களம் கண்டு வெற்றிபெற்றவுடன் தந்த முதல் அறிக்கையில்..
நான் தோற்றுவிட்டேன் பார்பான் வெற்றிபெற்றுவிட்டான்.. இதற்குமுன்பு இரண்டுமுறை தோற்கடித்திருக்கிறேன் .. என்னிடம் பொறுப்பை ஒப்படைத்துவிடுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன்.. பார்பானை எப்படி தோற்கடிக்கவேண்டுமென எனக்கு தெரியுமென்றார்..
..
வெற்றி பெற்றவுடன் அண்ணா நேராக பெரியாரைதான் போய் பார்த்தார்..
ராஜாஜியோ என்னை ஏமாற்றிவிட்டீர்கள் என்றபோது காலமெல்லாம் எம் இனத்தை ஏமாற்றி வருகிறீர்களே நான் இரண்டு தினம் உங்களை ஏமாற்ற கூடாதா.. என்றார்.. பேரறிஞர் அண்ணா..
அப்போது பெரியார் ஒன்றை சொன்னார்..
முன்னேற்ற கழகத்திற்கு எதிர்க்கட்சிகளால் ஆபத்துவராது உட்கட்சி பூசலால் தான் வரும்..என்றார் அதைப்போலவே எம்ஜிஆரால் வந்தது.. மாணவர்களுக்கு இந்த அரசுக்கு எந்த கேடும் வராமல் பாதுகாத்துக்கொள்ளுங்கள்..
இல்லையென்றால் இந்த ஆட்சி போனால் அடியோடு நிலைமை மாறிவிடும்.. அப்புறம் மனுநீதிபடிதான் ஆட்சி நடக்கும் என்றார்..
எத்தனை தொலைநோக்கு பார்வை.. பெரியார் சொன்னதுதான் நடந்தது.. மகோரா எல்லா நீதிகளையும் மீறினார் மக்கள் கவர்ச்சியை மட்டுமே நம்பினால் போதுமென நம்பவைத்ததால் எத்தனை இழிவு அது இன்றும் தொடர்கிறதே.. ஆனாலும் பெரியாரை மறந்க ஒன்றை (எம்ஜிஆர்) மகோராவாலேயே நடத்த முடியவில்லை காரணம் அடித்தளத்தை மிகபலமான சமூக நீதியால் அமைத்திருந்தார் பெரியார்
..
வெற்றிடம் என்ற சொல்லை சமீபகாலமாக ஊடகங்களில் பேச வைக்கபடுகிறது..
மொத்த வாக்காளர்களில் .. மூன்றில் இரண்டு பங்கை அதிமுக திமுக பெறுகிறது.. இவர்களை
இல்லாதாக்க போவதாக சொல்வது அவர்களுக்கே வேடிக்கையாக தெரியவில்லை
இரு பெரும் கட்சிக்கும் படுதோல்வியையும் மிகப்பெரிய வெற்றியும் பெற்றிருக்கின்றன்..மற்றவர்கள் இரு கட்சிகளை அரவணைக்காமல் போனால் இருக்குமிடமே தெரியாமல் போனதுதான் மிச்சம்.. சாதியும் மதமும் இங்கே எடுபடாது மட்டுமல்ல இருக்கிற இடமே தெரியாமல் அழித்துவிடுமென்பதற்கு பாஜகவும் பாமகவுமெ சான்று
..
இன்றைக்கு இருந்த இடம் தெரியாதவனெல்லாம் துள்ளி குதிக்கிறான்.. திமுகவை ஒழிக்கவேண்டுமென கங்கனம் கட்டிக்கொண்டு செயல்படுகிறான்.. ஆரியர் சூழ்ச்சி இரையாகி மகோரா எனும் கெடுதி தொடங்கி வைத்த அலங்கோலங்களை எல்லாம் தனியொருவராய் நின்று இந்த தமிழ் மக்களை காத்துவந்த கலைஞர் .. உடல் நலிவுற்றவுடன் திமுகவை முடிந்தது பாரென எக்காலமிடுகிறார்கள் விவரகேடுகள்..
..
எம் பேராசானின் கைதடி கொண்டு வீறுநடை போடுவோமென அறியாமல் போன அறிவிலிக்கூட்டம்.. ஆசானை மீறிய எதுவும் இங்கே நடக்காது .. மரித்து 44 ஆண்டுகள் ஆகியும் இந்த மண்ணில் பார்பனர்கள் செயலிழந்து நிற்க செய்திருக்கிறானே பெருங்கிழவன்.. அவன் வழியொன்றே எமக்கு போதும்..
..
துவண்டு விழுகிறபோதெல்லாம் எமக்கு புத்துணர்ச்சி தருவதற்கு எம்மை யாமே புதுபித்துக்கொள்ள மாபெரும் கூட்டம் ஒன்று போதும்.. முன்பை விட வேகமான பாய்ச்சலோடு எதிரிகள் குலைநடுங்க வீறுக்கொண்டு வருவோம்.. இதோ அதற்கான ஏற்பாடுகள் தயார். ஈரோட்டு கிழவனில் சொல்படி ஆட .. ஈரோட்டிலே மண்டல மாநாடு ..மாநிலசுயாட்சி சமுக நீதி மத நல்லிணக்கம்..
எல்லாவற்றிக்கும் பதில் கிடைக்கும்.. உளறிக்கொண்டிருப்போருக்கும் உதவாகரைகளுக்கும் ..
அங்கே இறுதி அத்தியாயம் எழுதப்படும்
..
Aalanci Spm
Saturday, January 6, 2018
திராவிடம்
எத்தனை கிறுக்கர்கள்
அதிமுகவின் கடைசி அத்தியாயம் எழுதப்பட்டு வருகிறது.. திமுக கடைசி அத்தியாயத்தை நோக்கி .. நோட்டாவிடம் தோற்ற கட்சியின் நாகர்கோவில் எம்பி.
..
முஸ்லிம் பிள்ளைகள் நபிகளை கும்பிடலாம்..? ஆனால் முப்பாட்டன் முருகன் தான்..
பாஜகவை ஒருபோதும் மதவாத கட்சியென சொல்லமாட்டேன் .. சீமான்
உண்மை உழைப்பு உயர்வு..
சாதிமதமற்ற ஆன்மீக அரசியல்.. ஸ்டைல் நடிகர்
எனக்கொரு வாய்ப்பு தாருங்கள் .. மருத்துவக் கல்லூரி ஊழல் புகழ் அன்புமணி..
ஆர்.கே.நகர் மக்கள் பிச்சைக்காரர்கள் .. மக்களை காப்பாற்ற துடிக்கும் கமலஹாசன்..
..
எல்லாவற்றிக்கும் காரணம் பாஜக அதிமுக அரசை கலைத்து ஜனநாயக முறைப்படி தேர்தலை சந்திக்க வைத்திருந்தால் இவர்களின் உளறலையெல்லாம் கேட்டிருக்கமாட்டோம்.. திமுக அதிமுகவை அழித்துவிடுவதை பேசி திரியும் பொன்னர் நாகர்கோவில் பக்கம் போனால் தெரியும்.. ஒரு தோல்வி மாபெரும் இயக்கத்தை சரித்துவிடுமா என்ன.. சிறந்த ஜனநாயக கட்டமைப்போடு கூடிய இயக்கத்தை கொள்கையில் உறுதிக் கொண்ட பேரியக்கத்தை ... எங்கே என தேடும் நிலையில் உள்ள கட்சி வீழ்த்திவிடுமாம்.. போய் வேலைபாரும் பொன்னரே..
..
முஸ்லிம்கள் நபிகளை தொழுவர்.. என்கிற போதே இன்னமும் முதிர்ச்சியடையவில்லை .. அரைகுறை என தெளிவாக தெரிகிறது..
நமக்கெல்லாம் முப்பாட்டன் முருகன் என்ற போது மோகன் பகவத் கருத்தை வழிமொழிவது தெரிகிறது.. பாஜக மதவாத கட்சியல்ல என்று கூறி முழு சந்திரமுகியாய் காட்சி தருகிறார்..
எங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்பதிலிருந்தே இன்னமும் வளரவில்லையென்றே சொல்லவேண்டும்.. கைகளை தூக்கி வீர வசனம் பேசினால் போதுமா .. புரிதல் வேண்டும் தெளிவான சிந்தனை வேண்டும் பலதரப்பட்ட மக்களின் மதிப்பை பெற்றிருக்கவேண்டும்.. முருகன் முப்பாட்டனாம்.. முருகனின் அப்பன்.. சிவனும் அண்ணன் கணபதியும் .. தமிழர்கள் இல்லையே.. தமிழ்கடவுள் அல்லாதவனுக்கு பிறந்த முருகன் பாட்டான் என்றால் .. தமிழனை தமிழன்தான் ஆளவேண்டுமென்பது அடிபட்டு போகுமே... புரியவில்லையா.. தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் எங்குமே நீங்க சொன்ன கடவுள் இல்லையே.. தமிழன் இயற்கையோடு வாழ்ந்தவன் வணங்கியவன் அவ்வளவுதான் இடையில் ஆரியர் மற்றும் பிற (முகலாயர் ஆங்கிலேயர்) ..வரவிற்கு பிறகு தான் சாதி மதம்.. திராவிடத்தை எதிர்க்கிறேன் என்கிற போதே அதன் பின்னில் ஆரியம் இருப்பது பட்டவர்த்தமாக தெரிகிறது.. என்னதான் சூழ்ச்சி செய்தாலும் நீயும் அவனுக்கு தாழ்ந்தவன்தான்..
தமிழ் தமிழர் .. நாங்கள் மட்டும்தான் தமிழர் என்கிற உளறலை குறைத்துக்கொண்டால் மட்டுமே இனி வாழ்வு..
..
எனக்கொரு வாய்ப்பு தாருங்களென சாதி கொண்டையை மறைக்க முடியாமல் அன்புமணியும்.. சிஸடத்தை சரி செய்ய வருகிறேனென ஆன்மீகத்தை துணைக்கழைத்து கிறுக்கனும்.. மக்களை பிச்சைக்காரர்களென ..தாக்குதல் நடத்தி .. சினிமா வசனம் பேசும் ஞானக்கிறுக்கன் நானென்னும் கமலும்... இன்னும் எத்தனை கிறுக்கர்கள் வருவார்கள்..
அப்பப்பா..
தமிழகம் .. வருகிற போகிறவனெல்லாம் நின்று கூத்தாடும் இடமாகிப்போனது.. எழுபதுகளில் தொடங்கி வைத்த கூத்தாடி அரசியல்.. ஐம்பதாண்டு பின்னிட்டும் ஆசைக்காட்டி வருகிறது.. மக்களை பிச்சைகாரன் என்று கூட சொல்ல முடிகிறது.. ₹20 மஸ்கோத் அல்வா தந்தால் போதும் வாக்களித்து விடுவார்களென நம்பவைக்கபடுகிறது.. கண்ட களவாணிகளும் கடைவிரிக்க முடிகிறது.. இன்னும் எத்தனை திரைதுறையினர்.. நேரடியாக முதல்வர் கனவோடு வருவார்கள்..
..
சிறிய சுனக்கம் .. நிறைய கேள்விகளை கேட்கிறது.. சோம்பல் முறித்து எழுந்து நின்றால்..கண்டவுடன் கட்டிய துணியிலேயே கழிந்துவிடுவார்கள்.. பாவம் முதலில் நாவடக்க பழகுங்கள்.. ஊடகங்கள் பரபரப்பிற்காக கண்ட கழிசடைகளிடம் பேட்ட்வாங்கி போடுவதை நிறுத்துங்கள்...
சசிக்கல..
..
#நாடகத்தை_நிறுத்துங்கடே..
..
திராவிடத்தால் எழுந்தோம் ..
..
Aalanci Spm
Friday, January 5, 2018
திருமாவின் அரசியல்
என்னானது திருமாவிற்கு..
திடீரென சாதி மதமற்ற ஆன்மீகம் என்பதை வரவேற்றவர்.. கூடவே இருக்கும் ரவிக்குமாரின் மாற்று கருத்தை இப்போது மொழிகிறார்..
ரஜினி காந்த் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் R S S ஆட்சியாகவே அமையும் -- திருமாவளவன்
இது அரசியல் ஆரம்பபாடம் படிக்கும் அனைவரும் அறிந்தது தான்.. திருமாவின் அரசியல் பார்வை அடிக்கடி மாறும்தன்மை கொண்டதாக இருக்கிறது.. ஆன்மீகம் என்பது அது எந்த மதத்தை கையிலெடுத்து சொன்னாலும் அதில் கசடுகளே மிஞ்சியிருக்குமென அறியாதவரா.. தனிமனித ஒழுக்கம் சிநேகம் அன்பு .. அடுத்தவரின் மீதான பரிவு இவையெல்லாம் என்னவென்றே அறியாதவர்கள்.. தங்களின் மதம் மட்டுமே சரி தங்களின் கடவுள் மட்டுமே சரி என்பவர்கள் நிச்சயமாக நேர்மையானவர்களாக இருக்கமுடியாது.
இந்து..முஸ்லிம் கிருஸ்துவ கடவுள்களை இல்லையென்கிறார்கள் ..கிருஸ்துவர் முஸ்லிம் இநிது கடவுளைகளை ஏற்க மறுக்கிறார்.. இஸ்லாமியர் இந்து முஸ்லிம் கடவுள்களை மறுக்கிறார்.. நான் மூன்று கடவுள்களையும் மறுக்கிறேன் என்றார் பெரியார் இதுதான் தெளிவு.. ஆன்மீகம் என்பதிலிருந்தே .. தான் சார்ந்த மதத்தை முன்னெடுப்பதாகவே பொருள்..இதெல்லாம் தன்னை நாத்திகராக Atheist ஆக சொல்லிக்கொள்ளும் திருமா அறியாமல் போனதேன்..
..
ரஜினியின் வரவிற்கு பிறகு சில சஞ்சலக்காரர்கள்.. திருமா உட்பட மாற்றமென்ற சொல்லையும் .. திராவிட அரசியலுக்கு மாற்றாக புதியதொரு எழுச்சியை உருவாவதையும் போலவும் சித்தரிக்க முயல்கிறார்கள்.. கொள்கை என்ன என கேட்கதற்கே வியர்த்து தண்ணீர் குடிக்கிற ஒருவரை புனிதரைப்போல சித்தரிப்பதும்.. தொடர்ந்து மக்களை சந்தித்து தோல்விகளிலும் துவண்டுவிடாமல் கட்சி மற்றும் சமுதாயபணிகளை செய்துவரும் .. செயல்தலைவர் தளபதியின் செயல்பாடுகள் திருப்தியில்லையென்பதைப்போல ஊடகங்கள் சொல்லி திரிவதின் பின்னால் யாரெல்லாம் இருக்கிறார்கள்.. எந்த சக்தி இவர்களை இயக்குகிறதென மக்கள் அறியாமல் இல்லை..
எந்தவிதமான போராட்டத்திற்கும் வரமறுக்கும் இதோ இப்போது நடக்கும் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தைப் பற்றி கருத்து தெரிவிப்பாரா.. எதிர்கருத்தாக இருநிதாலும் சரி சொல்லவேண்டுமல்ல.. உயர்நீதிமன்றமே அவர்களின் வேலைநிறுத்தத்தை சட்டவிரோதமாக அறிவிக்க மறுத்திருக்கிறதே.. இதெல்லாம் நேரடி முதல்வர் கனவில் இருக்கும் ஆன்மீகம் ஏன் கண்டுக்கொள்ளவில்லை..
..
Hindustan times நாளிதழ்..
பாரதிய ஜனதா கட்சி பின் நாளில் ரஜினிகாந்தை தனது கட்சியின் ஒரு அங்கமாக மாற்ற ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இதே நிலைதான் ஆந்திரப் பிரதேசத்தில் சீரஞ்சிவிக்கு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சி சீரஞ்சிவியை தனது கட்சிகுள் கொண்டு வந்தது .திராவிட இயக்க அரசியல் ஊழலுக்கு வழிவகுத்தது என்று ரஜினி காந்த் நம்புவது தவறு. திராவிட இயக்க அரசியல் கட்சிகள் சமூகம் , அரசியல் , பண்பாடு ரீதியாக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை ரஜினி காந்த் உணர வேண்டும்.. என எழுதியிருக்கிறது..
..
திராவிட அரசியலை விமர்சிப்போருக்கு.. இதைவிட தெளிவாக சொல்ல தேவையில்லை..
கடைசியாக..
வெல்வதற்கே தோல்வி..
எழுவதற்கே வீழிச்சி என்றார்
சீன மெய்யியலாளர் தத்துவஞானி #கன்பூசியஸ் ..
நாம்.. வீழும்பொழுதெல்லாம்
வெகுண்டு எழுந்திருக்கிறோம்..
#வீறுக்கொண்டெழுவோம்..
..
Aalanci Spm
Thursday, January 4, 2018
விகடன் கதறல்
விடகனின் நீலிக்கண்ணீர்..
செயல்தலைவரின் செயல்படாத தருணமென சிலவற்றை சொல்லி வழக்கம் போல் தன் அரிப்பை தீர்த்துக்கொள்கிறது.. இப்படிதான்
திமுக இணைய பேராளிகளை கடும் விமர்சனம் செய்து வாங்கிகட்டிகொண்டது ..
மாவட்ட செயலர்களை கட்டுபாட்டில் வைத்திருக்கவில்லை கட்சியினரோடு தொடர்பில்லை அழகிரியை அரவணைத்து அழைத்துச்செல்லவில்லை எதிரிகளை அழிக்க தெரியவில்லை திமுக ஐ டி லிங்க் சரியில்லை..
பாவம் அந்தளவிற்கு கதறவிட்டிருக்கிறது திமுக இணையதளம் ..
..
மாவட்ட செயலர்கள் யாருமே அதிருப்தியை தெரிவிக்கவில்லை அதைவிட தளபதியை மீறி எதுவும் செய்திடவில்லை.. ஜனநாயக இயக்கத்தில் மாவட்ட கிளை கழகங்களில் உட்கட்சி விவகாரங்களில் மாற்று கருத்துவருவதும் அதே வேளை பொது செயல்பாடுகளில் ஒருங்கிணைந்து செயல்படுவதும் ஏன் விகடனுக்கு தெரியாமல் போனது.. கட்சியினரோடு தொடர்ப்பு முன் எப்போதுமில்லாது நேரடியாக தளபதியை தொடர்பு கொள்ள முடிகிறது.. முன்பெல்லாம் காத்திருந்து சொல்லபட்ட கருத்துகள் விமர்சனங்கள் நேரடியாக இணையத்திலோ தொலைபேசிவாயிலாகவோ தளபதியிடம் சொல்ல கொண்டு சேர்க்கமுடிகிறது..
..
எதிரிகளை அழிக்க தெரியவில்லை கலைஞரை போல என சொல்வதிலிருந்தே கலைஞர் எல்லாகட்சிகளையும் அழித்தவர் போன்ற தோற்றத்தை நிறுவ முயல்கிறது இந்த நூற்றாண்டு கண்ட மிக சிறந்த ஜனநாயகவாதியை கேவலபடுத்த நினைத்து கேவலப்பட்டு நிற்கிறது விகடன்..ஆம்.. எதிரிகள் கூட கலைஞரை சந்திக்கலாம் மாற்று சிந்தனையாளர்கள் கடுமையாக எதிர்ப்பவர்களை கூட அவர்களின் கருத்தை உள்வாங்கி பதிலளித்து அவர்களையும் செயல்பட விடுகிற ஒரே தலைவர் கலைஞர் தனிப்பட்ட விமர்சனங்களை கூட கண்டுக்கொள்ளாதவர்.. ஜெயலலிதாவை போல வழக்கு போட்டு அலைக்கழித்ததில்லை.. மாறாக சுதந்திரமாக செயல்படவிட்டவர் அவரை விமர்சனம் செய்யவும் தகுதி வேண்டும் அதை இழந்து நிற்கிறது.. எதிரிகளை ஏன் அழிக்கவேண்டும்.. அவர்களை மக்கள் முன் நிறுத்தி தோற்கடித்தால் போதாதா..
எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு ஜானகி அரசை கவிழிக்க முயற்சிக்கவில்லை என்ற குற்றசாட்டை இதே விகடன் முன்பு வைத்தது நியாபகம் வருகிறது.. ஜனநாயக முறையில் நேர்மையோடு களம்காண்பதும் தோல்வி வெற்றி இரண்டையும் ஒருபோல நோக்குவதுமே கலைஞர் கற்று தந்தது..
..
அழகிரியை அரவணைக்க தெரியவில்லை..
கட்சியிலிருந்து நீக்கிவைத்துவிட்டபிறகு அவரை யாரும் கண்டுக்கொள்ளவில்லை திமுகவின் மீது வன்மம் கொண்டு அலையும் ஊடகங்களை தவிர.. அவருக்கான மதிப்பும் மரியாதையும் அவர் அணிந்திருந்த கரைவேட்டிக்குதானே தவிர.. அவருக்கில்லையென சாதாரண தொண்டன் கூட அறிந்திருக்கிறான்.. அதனால்தான் அவரின் இடையூறு செய்யும் பேச்சுக்கெல்லாம் அதே பாணியில் பதிலடி தருகிறான்.. யீருமே கண்டுக்கொள்ளவில்லையென்பதால் ஏற்பட்ட விரக்தியை வெளிகாட்ட திமுக மீதும் தளபதி மீதும் புளுகி தள்ளுகிறார் அதை திமுகவை தொடர்ந்து விமர்சிக்கும் ஊடகங்கள் சொற்பநேர இன்பத்திற்காக தூக்கிவைத்து ஆடுகின்றன..அப்புறம் தூக்கி வீசி விடுகின்றன
யாரும் இருக்குமிடத்தில் இருந்தால் தான் மதிப்பு என்பது தெரியாமல் பேசிவருகிறார்.
..
விகடன் என்ன முயற்சித்தாலும் இங்கே நடக்காது.. எங்கள் செயலி.. தளபதிதான்..
..
Aalanci Spm
Tuesday, January 2, 2018
உறைபனியில் விரைத்து போவீர்
கருநாடகம் தமிழகம் தெலுங்கானை கேரளம் இன்னும் பிற பகுதி மக்கள் தங்களை அதிகாரத்திற்கு வரவோ ..உங்கள் அசுத்தமான வகுப்புவாத பிரிவினை அரசியலை செய்யவோ விடமாட்டோம்.. பிரகாஷ்ராஜ்..
..
ரஜினியிடமிருந்து மாறுபடுகிறார்.. கர்நாடகாவை கன்னடர்கள் ஆளவேண்டுமென சொன்னவர்.. இப்போது பாஜகவை நேரடியாக விமர்சிப்பதில் முனைப்பு காட்டுகிறார்..குறிப்பாக தென்னிந்தியாவை தேசிய நீரோட்டத்திலிருந்து இயல்பாக பிரிந்துநிற்பதை சொல்கிறார் என நினைக்கிறேன்.. நடிகர்கள் கருத்து சொல்வது சமீபகாலங்களில் அதிகளவு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. கமல் தொடங்கி ரஜினிவரை..அரசியலில் ஆர்வம் காட்டுவதை வரவேற்கவேண்டும் அது நல்ல அரசை நிறுவ உதவலாம் இங்கே யாரும் கருத்தை கூற விமரிசிக்க உரிமை உண்டு..
ஆனால்..
ஆட்சி அதிகாரம் முதல்வர் கனவென்று வரும்போதுதான் சில கேள்விகளை நாம் எழுப்பவேண்டிருக்கிறது.. எப்போதிலிருந்து மக்கள் மீதான அக்கறை வந்தது ஏன் இதுவரை இந்த நொடிவரை..மக்களின் பிரச்சனைகளுக்காக போராடவோ போராடுகிறவர்களை ஊக்குவிக்கவோ அல்லது எதிர்ப்பை பதிவு செய்யவோ இல்லை..
போகிற போக்கில் முதல்வராக வேண்டுமென்பது எந்தவகை நியாயம்..
ரஜினி என்றில்லை கமலோ இன்னும் வர இருக்கிற .. விஜயோ யாராக இருந்தாலும் தமிழக மக்களின் தேவைகள் அவர்களுக்கான உரிமைகள் இங்கு நிலவும் அடிப்படை ஜீவதார உரிமைகளுக்காக குரல் கொடுப்பதை யாராவது செய்திருக்கிறீர்களா..
..
அது என்ன மற்றவர்களை அயோக்கியர்கள் போலவும் தாங்கள் மட்டுமே நேர்மையானவன் காட்டுகிறீர்.. நடிகர்கள் மட்டுமே சிறந்தவர்களை போல ஏன் சுவர் எழுப்புகிறீர்கள்.. சினிமாவில் நல்லவனாக நடித்தால் நிஜத்தில் ஒழுக்கமானவன் கரைப்படியாதவன் என்கிற மாயபிம்பத்தை இன்னும் எத்தனை நாளைக்கு கட்டியெழுப்பிக்கொண்டிருப்பீர்.. சினிமா கதாநாயகனை நல்லவன் என்ற காலம் மலையேறிவிட்டது இப்போதெல்லாம் சினிமாவில் கூட ஆன்டி ஹீரோ தான் அதிகம் கவரபடுபவராக இருக்கிறார் .. சினிமாவில் புழங்காத கறுப்புபணம் உண்டா .. எத்தனை பேர் நேர்மையாக சம்பாதித்திருக்கிறீர்.. முறையாக வரி செலுத்தியிருக்கிறீர்..ஏன் எம்ஜிஆரே.. வரி ஏய்ப்பு செய்தவர்தானே.. கடைசியில் சொத்தை விற்று கட்டுவதாக நம்பவைத்தார் பிறகுதான் தெரிந்தது ஜானகிக்கு விற்று வரி கட்டியதாக செய்தி வெளியானது.. ஏமாற்றுகாரர்களின் உலகம் தானே சினிமா.. அங்கிருந்து யோக்கியம் பேச வந்திருப்பவர்கள்.. நல்ல நடிகர்கள்.. பாவம் நிழலில் நடிப்பை ரசித்தவர்கள் நிஜத்தில் வெறுப்பான் என்பதை அறிந்திருக்கவில்லை.. 70 களில் இருந்த சினிமா மோகம்.. இப்போதெல்லாம் இல்லை என்கிற உண்மை விளங்க ரஜினி போன்றவர்களுக்கு தரபோகும் தோல்வி இனி எவரும் முதல்வர் கனவோடு கோடம்பாக்கத்திலே திரிய கூடாது..
..
ஆன்மீகம்..
மதத்தின் பால் தீவிர நம்பிக்கை கொண்டவர்களை இதே இடத்தில் அழுத்தி பிடித்து நகரவிடாமல் இருக்க செய்யும் ஒரு வித்தை.. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும் இதில் சமரசமே யாருக்குமில்லை.. ஆனால் சாதி மதமற்ற என்ற சொற்சொடர் இங்கே அடிபட்டு போகிறது..மதம் தலைக்கேறாவிட்டால் ஆன்மீகம் செயலிழந்து போகும்..
மதச்சார்பின்மை இல்லை என்பதிலிருந்தே
ஆன்மீக போர்வையிலிருந்து வெளிவருகிறது மதம்..
மதம் தலைக்கேறி விஷமம்..
நேரடியாக மோத தெரியாது இவர்களால்..
அறுபதாண்டுகளாக உறைந்து கிடக்கும் திராவிடத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என பிதற்றுகிறார்கள்.. பாவம் உறைபனியில் சிக்கி மூர்ச்சையாகி போவார்கள்..
..
உறைபனியில் பிணமாவீர்..
..
Aalanci Spm
வரைகலை.. நன்றி தோழர்
Ganesh Tiger..
Monday, January 1, 2018
திராவிடம்
கருத்தரங்கம்..
திராவிட இயக்கத்தைப் பற்றி இளைய தலைமுறையினர் தெரிந்துக்கொள்வதற்காக இதுபோன்ற கருத்தரங்கள் கலந்துரையாடல்கள் தெருமுனைப் பிரச்சாரங்கள் .. திண்ணைப் பேச்சுகள் நடத்தப்படவேண்டும் .. இன்றைய தலைமுறையினரிடம் .. குறிப்பாக திராவிடம் ஏன் என்ற ஒருவகை கசப்பை விதைக்க தொடங்கியிருக்கிறார்கள்.. திராவிடம் மொழிசார்ந்ததாகவோ.. நிலம் சார்ந்தததாகவோ கணக்கிட்டு நம்மை பிரித்தாள ஆரியர்கள் திட்டமிட்டே தமிழர்கள் தமிழ் என்ற குறுகிய வட்டத்திற்குள்.. மொழிவாரியான சிந்தனைக்குள் திணித்து நம்மை சுருக்க பார்க்கிறார்கள் இதன் மூலம் .. அவர்களின் வெற்றி அல்லது பலன் அதிகரிக்கும்..
த்ராவித் என்ற சொல்லியிருந்தே திராவிடம் என்ற முழுமை வந்ததாக சொல்கிறார்கள்.. ஆரியர்களிடமிருந்து நம்மை பிரித்துக்கொள்ள ஒரு பொது சொல் தேவைபட்டது அது த்ராவத் என்ற சமஸ்கிருதத்தை நம் மீது திணித்தனர். ஆரியர்கள் தங்களை தனித்து இனம் காண பொது சொல்லை பயன்படுத்தினர்...
திராவிட மொழிகளில்.. தமிழ் தெலுங்கு மலையாளம் .. கன்னடம் துளு.. இவையாவுமே தமிழிலிருந்து பிரிந்து சென்ற மொழிகள் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.. காரணம் தமிழை ஒத்து ஒலி ஒசை ..மற்றும் மூலப்பொருள் தமிழை சார்ந்தே இருக்கும் குறிப்பாக .. மலையாளம் தெலுங்கில்.. கலந்த சமஸ்கிருத சொல்லை நீக்கிவிட்டால் அது தூய வடிவிலான தனித்தமிழ் சொற்களாக வரும். எப்படி சாதிய பிரிவினையை ஆரியர்கள் கையாண்டார்களோ அதே பாணியை தான் மொழியில் தொடங்கியிருக்கிறார்கள் அது அரசியலாக்க படுகிறது..மொழிவெறியை ஊட்டி இனத்தின் மீதான தாக்குதலை தொடுத்திருக்கும் வேளையில் இது போன்ற கருத்தரங்கள் மக்களின் அறியாமையை நீக்க பேருதவியாக இருக்கும்..
..
..
திராவிடர் என்னும் சொல், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியொன்றைத் தாய் மொழியாகக்கொண்ட மக்களைக் குறிக்கும். தற்காலத்தில் திராவிடர்கள் செறிந்து வாழும் பகுதி, தென்னிந்தியாவில்விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள பகுதியாகும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளும் திராவிடர்களின் தாயகங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது..
..
திராவிடம் ..
இன்றைக்கு குறிப்பாக பார்பனர்களால் தமிழகத்தில் கடுமையாக எதிர்க்கபடுகிற .. அல்லது அவர்களை பயம் கொள்ள செய்கிற விடயமாக இருக்கிறது .. காரணம் பார்பனர்களை குறிப்பாக அதிகாரத்திலிருந்து தூக்கியெறிந்து .. தமிழர்களின் உரிமைகளை.. மீட்டு தந்தது.. இன்றைக்கு மரியாதையோடு பேச எழத எதிர்த்து குரல் கொடுக்க முடிகிறதென்றால் அது திராவிடம் பெற்று தந்ததே.. நமக்கான உரிமைகளை போராடி பெற்று தந்தது திராவிடம்.. அது அரசியல் காரணங்களுக்காக .. சில கட்சிகள் பயன்படுத்தியிருந்தாலும் பயன்பட்டிருந்தாலும் பொதுவாக சாதித்தது மிக அதிகம் ..
மண் சார்ந்த மொழிசார்ந்த விடயங்களில் திராவிட ஒருங்கிணைப்பு அதிவேக செயல்பாட்டால் .. ஆரியர்கள் தங்களை சுருக்கி கொண்டதும்.. அடிக்கடி துள்ளி குதித்தாலும் மேலெழும்ப முடியாதவாறு ..அழுத்தி அவர்களை பிடித்திருப்பது பெரியாரும் .. அவரின் சிந்தனைகளும் தான்..
..
கிழவனின் தொலைநோக்கை எல்லாவற்றிலும் காண முடியும்.. சமூகம் சமுதாயம் கல்வி பெண்ணுரிமை சாதிய ஒழிப்பு சமதர்மம்.. அடிமைத்துவத்திலிருந்த விடுதலை.. பேசும் உரிமை..போராடும் துணிவு .. இனத்தின் மீதான தாக்குதலிருந்து பாதுகாப்பு ...சொல்லிக்கொண்டே போகலாம் இன்றைக்கும் பெரியாரின் சொல் செயல் தான் நம் பொது எதிரியிடமிருந்து காக்கிறது.. இன்றைக்கு குறிப்பாக பார்பனர்கள் திராவிடம் என்ற சொல்லை எதிர்ப்பதற்கு நம்மிடமிருந்தே அம்புகளை தயார் செய்கிறார்கள்.. பாவம் அறியவில்லை அந்த அம்புகளே அவர்களை தாக்குமென்று..
..
இக்கட்டான காலகட்டங்களில் இது போன்ற அறிவுசார் கருத்தரங்கள் புரிந்துணர்வை தரும் நம் உணர்வின் மீது தொடுக்கபடும் தாக்குதலை முறியடிக்கும்..திராவிடம் என்பது தமிழ் மொழியை மூலமாக கொண்ட இனத்தின் அடையாளம்.. தமிழ் மொழியின்,இதன் கிளை மொழிகளின் பொதுபெயர்..
பார்பனர்களை பதற செய்யும் ஒற்றைச் சொல்..
எம் இனத்தின் பெயர்..
திராவிடம்..
..
Aalanci Spm..
ஆலஞ்சியார்
Subscribe to:
Posts (Atom)