Tuesday, December 26, 2017

குருமூர்த்தியும் ஆண்மையற்றவர்களும்

பன்னீரும் எடப்பாடியும் ஆண்மையற்றவர்கள்.. .. தினகரன் குழுமம் ஒரு மாஃபியா சக்தி . இவர்கள் அனைவரும் தமிழ் நாட்டில் இருந்து உடனடியாக அகற்றப் பட வேண்டும் ஆடிட்டர் குருமூர்த்தி ஆர் எஸ் எஸ் கொள்கை சித்தாந்தவாதி.. அதே போல் தமிழிசையை மிக கேவலமாக சித்தருத்து பதிவிட்டிருக்கிறார்.. எஸ்.வி.சேகர்.. மிக தெளிவாக இருக்கிறார்கள்.. கருவேப்பிலையாக மட்டுமே தமிழர்களை பயன்படுத்துவது எப்போது இவர்களால் பலனில்லையென தெரிகிறதோ அப்போதே கழட்டிவிடுவதோடு கடுமையான விமர்சனம் வைப்பது.. .. முதலில் காமெடி நடிகனின் குமறல் பாஜகவின் தோல்வியை தமிழிசையின் செயல்பாடுகளோடு ஒப்பிட்டு வேறு யாராவது இருந்திருந்தால் பிரமாதமாக செயல்பட்டிருப்பதைப்போல காட்ட முயற்சிக்கிறார்.. அதைவிட மிக கேவலமாக கேலி செய்கிறார்..விமர்சனபார்வை என்பது வேறு ஆனால் இவரின் எழுத்துக்கள் தமிழிசையை கேலியாக்க முயற்சிக்கிறது...அவரின் குலத்தை இழுத்து கேவலபடுத்துவது கண்டிக்கதக்கது.. இங்கே ஒன்றை குறிப்பிட வேண்டும் சாணரர்கள் தேர்தலில் 54 வாக்குகள் பெற்ற எச்.ராசாவை கேலி செய்து விமர்சிக்கவில்லை காரணம் நூல்.. ஆனால் இங்கே தமிழிசையை அவரின் சிறிய தந்தைப்போல இல்லாவிட்டாலும் பெட்டிக்கடையாவது வைத்து பிழைக்கலாமென சொல்கிற போதே அதிலுள்ள வன்மம் நமக்கு புரியும்.. .. குருமூர்த்தி தன்னை பிதாமகன் என நினைத்துக்கொண்டு செயல்படுகிறார்.. பாஜகவில் ஆர்எஸ்எஸ்ஸில்.. பார்பனர்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கலாம் ஆனால் தமிழர்களிடையே எதிர்மறை கருத்தை தான் பெறவேண்டியிருக்கும்.. ஆண்மையற்றவர்களென சொன்னதற்கு அமைச்சர் ஒருவரே நாங்கள் காங்கேயம் காளைகள் என பதில் தருகிறார்.. காங்கேயம் காளைகள் எதற்கு பயன்படுமென அறிந்தவர்கள் சொல்லுங்கள்.. இதைவிட திராவிடம் பேசும் பதிவர்கள் .. உங்க ஆத்துல இருக்கிறவங்க சொன்னாங்களா.. என்று கேட்டது வியப்பளிக்கவில்லை மாறாக அதே அம்பை கொண்டு திருப்பி எய்துவதாகவே தோன்றியது.. எதிர்ப்புகள் பலமாக வருவதும் அவர் வீட்டுப்பெண்களை வம்பிக்கிழுத்து பதிவுகள் வருவதும் அவரை விளக்கம் கொடுக்க வைத்திருக்கிறது.. impotent என்று சொன்னதை ஆண் பெண் என சம்பந்தபடுத்தி புரிந்துக்கொண்டதாக சொல்கிறார் இதை சாதாரணமாக பயன்படுத்தலாம் என சப்பை கட்டுகிறார்.. குருமூர்த்தி ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தலாம் என்கிறார் அங்கே தனிமனிதர் விமர்சனம் செய்யமுடியாது ..அடிபலமாக விழுகிறது..பாவம் இது தமிழகம் என்பதை மறந்து போனார் .. இதை திசைமாற்ற தினகரன் குழுமம் ஒரு மாஃபியா சக்தி தமிழகத்திலிருந்தே அகற்றபடவேண்டுமென்கிறார்.. மிகவும் கடுமையான விமர்சனம் குருமூர்த்தியிடம் இருந்து வந்துள்ளதால் அடுத்த கட்ட நடவடிக்கை தீவிரமாக இருக்கும் ஏன பத்திரிகையாளர் சமூகம் அவதானிக்கிறது.. என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் Sa Sufiyan இதை இரண்டு விதமாக எடுத்துக்கொள்ளவேண்டும் எந்த நிலையிலும் தினகரன் அதிமுகவின் தலைமையை ஏற்பதை ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை .. மற்றொன்று என்ன திட்டினாலும் ஓபிஎஸ் இபிஎஸ் நமக்கு எக்காலத்திலும் அடிமையாய் இருப்பார்கள் அவர்களை வைத்தே மீதமுள்ள ஆட்சியின் ஆயுட்காலத்தை கழிக்கவேண்டும் தீர்மானித்திருப்பது தெரிகிறது.. அப்போதுதான் மீதமுள்ள உயர்பதவிகளுக்கு எல்லாம் அவர்களையே நியமிக்கமுடியும் .. .. எது எப்படியோ.. தமிழசையை மாற்ற முடிவெடுத்து ஆழம் பார்க்கிறார்களென்பதும் இரு அடிமைகளை மாற்றுவதை குருமூர்த்தி வகையறா விரும்பவில்லையென்பது .. தெரிகிறது.. பார்ப்போம் . .. Aalanci Spm

No comments:

Post a Comment