Monday, December 18, 2017

குஜராத் தமிழகம்

குஜராத் சொல்லும் சேதி என்ன.. எந்தவொரு தோல்வியையும் உள்வாங்கி அதை ஏற்றால் மட்டுமே அடுத்து தோல்வியை தவிர்த்து வெற்றியாக்க முடியும்.. ஆரம்பம் முதலே காங்கிரஸ் .. முன்னிலை என்றதும் அரை மணி நேரத்தில் 30 மேற்பட்ட இடங்கள் மாறி பாஜக முன்னிலை என்பதில் சிறிய சூட்சமம் அடங்கியிருக்கிறது.. ஏன் மாறாதா என்றால் மாறலாம்.. ஆனால் மக்களின் நம்பிக்கை பொய்யாக்கும் இயந்திரத்தை கொண்டு எதுவும் செய்யலாம்.., ஆமதாபாத், சூரத், ராஜ் கோட் பகுதியில் 12 முதல் 15 தொகுதிகளில் 200, 400 , 800 வாக்கு வித்தியாசத்தில் பா. ஜ க வெற்றிபெற்றிருப்பதும் ..கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது... காங்கிரஸ் இதிலிருந்து நிறைய கற்கவேண்டியிருக்கிறது.. சிறிய அலட்சியம் கூட தவறான முடிவை தந்துவிடும்.. பிரதமரின் மாநிலம் என்றவுடன் அங்கு நடக்கிற இலைமறை வேலைகளை அதிகாரிகள் கண்டுக்கொள்ளாமல் விட்டதும்.. மத்தியில் ஆட்சியிலிருப்பதால் எதையும் செய்துவிட முடியுமென்ற பயம் அதிகாரிகளைபோலவே மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது..உள் குஜராத்தில் பாஜகவை போல வேலைசெய்ய காங்கிரஸில் ஆட்கள் இல்லை.. கோவி.லெனின் சொன்னதைப்போல காங்கிரஸுக்கு இளவரசர் கிடைத்தார் தளபதிகள் இல்லை.. காங்கிரஸ் இனி நாடாளுமன்ற தேர்தலை நோக்கிய பயணத்தை தொடரவேண்டும்..,அரசியலில் மந்தமான போக்கும் கடுமையான நேர்மையும் வெற்றியை இழக்க செய்யும் ..சிலநேரங்கள் சூது அரசியலுக்கு தேவை.. சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வதைப்போல எதிரியின் அஸ்திரத்தையும் அம்பாக்கும் வித்தை வேண்டும்.. மௌனமாய் காய் நகர்தல்.. எங்கெல்லாம் எதிரிகள் பிரிந்துகிடக்கிறார்கள் என அறிதல் நலம்.. பொது எதிரியை வீழித்த தற்காலிய ஏற்பாடுகள் மிக அவசியம்..சோர்ந்து கிடந்த காங்கிரஸை எழுப்பி விரட்டி ஓடவைத்திருக்கிறார்.. நீண்டநாள் உறக்கத்திலிருந்ததால்.. சோர்வு இருக்கும் ..அதையெல்லாம் கலைந்து குதிரையை வேகமாக ஓடவைத்திருப்பதிலே வெற்றிகண்டிருக்கிறார்.. 56 இன்ச் அழுத போதே ராகுலிடம் தோற்றிருந்தார்.. முதல் கட்ட வாக்குபதிவு நடந்த இடங்களில் காங்கிரஸ் அதிகம் இடம் வெற்றிபெற்றது இரண்டாம்கட்ட தேர்தலில் பாஜக .. இதிலிருந்தும் நாம் பாடம் கற்க வேண்டியிருக்கிறது..ஒரேகட்ட தேர்தல் ஆளும் வர்க்கத்தின் திருவிளையாடல்களை தடுக்க உதவும்.. எல்லாவற்றையும் மீறி நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்திற்கு தொடக்கம் குறித்திருக்கிறது.. நிச்சயமாக இது ராகுலுக்கு புதிய தொடக்கத்தை தரும்.. .. தமிழகத்தை போல குஜராத்தும் சிறிய வேறுபாட்டில் வெற்றியை இழந்திருக்கிறது.. மக்களின் எழுச்சியை வாக்குகளாக மாற்றும் வித்தையில் எங்கு தவறென்பதை கவனம் கொள்ளவேண்டும் இது குறிப்பாக திமுகவிற்கு சிறந்த பாடம் கடந்த தேர்தலில் கூட இருந்தே குழிபறித்த செயல்களை அங்காங்கே காணமுடிந்தது.. மாவட்டங்கள் சிற்றரசர்களை போல தங்களை நினைத்துக்கொள்வதை முதலில் விடுங்கள்.. இன்னமும் மமதையோடு இருப்பீர்களேயானால் .. வெற்றி எட்டாக்கனியாகிவிடும்.. எத்தனை இடையூறுகள்..வாக்குபதிவு இயந்திரம் அதிகளவு பணபழக்கம்.. ஆளும் அரசின் தலையீடு இவையெல்லாம் மீறி வெற்றி பெற கடும் உழைப்பு வேண்டும்.. விழுக்காடு கூடுதல் என்பதை இலக்காக நிர்ணயம் செய்து பணியாற்றவேண்டும்.. நெல்லை மாவட்ட செயலர் இருசக்கர வாகனத்துல் சணல் வாங்கி கொண்டுவருகிறார்.. மதுரை மாவட்டமே தெருவோரம் உண்டு களப்பணி ஆற்றுகிறது.. ஆம் மமதையைவிடுத்து கடைக்கோடி தொண்டனில் ஒருவன் நான் .. எனக்கு மாவட்ட பொறுப்பு வழங்கபட்டிருக்கிறதென்ற நினைப்போடு பண்யாற்றவேண்டும் .. ஒவ்வொரு மாவட்ட செயலரும் இப்போதிலிருந்தே மொத்த தொகுதிகளில் பகுதிக்கு மேல் வெற்றி என்ற இலக்கோடு செயல்படவேண்டும்.. வெற்றி வெகுஅருகில் என்பதை நினவில் கொள்க.. வென்றாலும் அது நம்மால்தான் .. தோற்றாலும் அது நம்மால் தான்.. #பிறர்தரவாரா. .. திமுக நம்பிக்கையை மட்டும் விதைத்துகொண்டே இருக்கவேண்டும்.. நிச்சயம் வெற்றி வந்தே தீரும்.. .. Aalanci Spm

No comments:

Post a Comment