Monday, December 11, 2017

எம்.எஸ்...

மதுரை சண்முகவடிவு சுப்புலெட்சுமி.. இப்படி சொன்னால் சிலருக்கு புரியாது எம்.எஸ்.சுப்புலெட்சுமி என்றால் எல்லோருக்கும் தெரியும்.. ஒடுக்கபட்ட சமூகத்திலிருந்து வந்து தன் இனிமையான குரலால் யாருமே தொடமுடியாத உச்சத்தை தொட்டவர்.. ஆனால் அவரின் இளமைகாலம் அவ்வளவு சுககரமாக இல்லை.. தேவதாசி குலத்தில் பிறந்தவர்.. அக்குலத்தில் பிறந்தவர்கள் கோவிலுக்கி நேர்ந்துவிட்டவர்களாக.. கோவில் அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்களுக்கு வலதுகரத்திற்கு சொந்தமானவர்களாக இருப்பார்கள்.. அதனால் அவர்கள் தங்களின் தந்தையின் பெயரை இன்ஷியலாக போட மாட்டார்கள்.. அந்த ஒடுக்கபட்ட பிரிவினருக்காக தான் முத்துலெட்சுமி ரெட்டியார் போராடினார்.. திரு.சத்யமூர்த்தியிடமே எங்கள் வீட்டு பெண்கள் தெய்வதொண்டு செய்தது போதும் இனி உங்கள் வீட்டுப்பெண்கள் தெய்வத்தொண்டை செய்ய வேண்டியதுதானே .. பெரியாரின் சொல்லை கேட்டு சட்டமன்றத்திலேயே முழங்கிய தேவதாசி ஒழிப்பை கொண்டுவந்தார்.. .. சரி விடயத்திற்கு வருவோம்.. இசைமேதை தன் குரலால் மக்களை மகிழ்வித்த எம்.எஸ் அவர்கள் தன் இளமைகாலங்களில் தன் தாய் சண்முகவடிவின் நிழலில் வளர்ந்தாலும்.. அவரை கண்காணிக்க சதாசிவ அய்யரை நியமித்தார் அவரது தந்தையென அறியபட்ட சுப்ரமணியன்.. சதாசிவத்தின் அதிகாரம் அளவிற்கு மீறிய போது சதாசிவத்தை வேண்டாமென சொல்லிவிட்டார்.. சதாசிவமோ அவரை திருமணம் செய்வதாக சொல்லி சுப்புலெட்சுமியை மணந்தார்.. அந்த காலகட்டத்தில் இசையில் பிராமண பெண்களே ஆதிக்கம் செலுத்தினார்கள்.. திருவனந்தபுரம் எம்.எல். வசந்தகுமாரி.. காஞ்சி பட்டம்மாளும் எம்.எஸ் ஸூம் மும்மூர்த்திகளென சொல்லபட்டாலும் எவருமே சுப்புலெட்சுமி அளவிற்கு குரல்வளமோ இசைஞானமோ இல்லை.. பெயரும் புகழும் வந்த போது சதாவின் ஆதிக்கம் அதிகமாகி தமிழில் பாடகூடாதென்றெல்லாம் உத்தரவிட்டதும் அதை அப்படியே ஏற்று தமிழில் பாடமாட்டேன் என்றதெல்லாம் வரலாறானது.. .. காற்றினிலே வரும் கீதம் என பாடி புகழ்பெற்றவர்..தமிழில் பாட மறுத்தார்.. ஆனந்தவிகடனிலிருந்து கல்கி வெளியேற்றபட்டபோது .. ஒரு காசு கூட தரமுடியாதென வாசன் சொல்லிவிட்டார்.. அப்போதுதான் கல்கியோடு சேர்ந்து சதாசிவம் பத்திரிக்கை ஆரம்பிக்கலாமென முடிவெடுத்தார்கள் அதற்கு பணம் தேவைபட்டது .. விருப்பமே இல்லாதவரை வற்புறுத்தி சாவித்திரி படத்தில் நாரதராக நடிக்க மறுத்தவரை.. நடிக்கவைத்தார் சதாசிவம் அதில் வந்த பணத்தை கொண்டுதான் கல்கி தொடங்கபட்டது. தன் வாழ்நாள் முழுவதும் ஒரு அடக்குமுறைக்குள்ளே வாழ்ந்த மறைந்தவர்.. அவரே விரும்பி போட்டுக்கொண்ட விலங்கு என பேராசிரியர் சிவபாலன் சொல்வார்.. அந்த இசைமாமேதையின் நினைவுநாள் இன்று 11 டிசம்பர்2004ல் மறைந்தார்.. .. குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா என பாடியவர் குறைகளையும் கடந்து இசைவானில் ஜொலித்தார்.. இசை உலகம் என்றும் நினைவு கொள்ளும்.. .. Aalanci Spm

No comments:

Post a Comment