Sunday, December 3, 2017

திமுக இனத்தின் காவல்

காலம் எத்தனை வேகமாய் சுழல்கிறது.. திமுகவை அதிகாரத்திற்கு வரவிடாமல் தடுக்க அனைத்து வழிகளிலும் பயணிப்பேன் என சூளுரைத்தவர்கள்.. வேறு வழியின்றி மௌனமாய் வலிய வந்து ஆதரிக்கிறார்கள்... அவர்களை கொச்சைபடுத்துவதல்ல.. அதே வேளை இவர்களின் அலப்பறைகள் சொல்லில் அடங்காவண்ணம் இருந்தது.. மற்றவர்களைப்பற்றி அதிகம் விமர்சிக்கவில்லை ஆனால் வைகோவை கடுமையாக விமர்சித்திருக்கிறேன்.. காரணம் என் இளமைகால கதாநாயகன்.. அந்த உணர்ச்சிவயபடும் பேச்சு அடுக்கடுக்காய் உலகளாவிய அரசியல் .. நாடாளுமன்றத்தின் திமுகவின் குரலாய் கம்பீரமாய் ஒலித்ததெல்லாம் நினைவிற்கு வந்தது.. 1980 இளைஞர்அணி துவக்கத்தை தொடர்ந்து நந்தவனம் அன்பகம் பழைய திமுக தலைமைகழகம் இளைஞரணிக்கு தருவதாக பேராசிரியர் சொல்லி 10 லட்சரூபாய் கொடுத்தால் இளைஞர் அணி அலுவலகமாக பயன்படுத்தலாமென்றார்.. தளபதி ஊரூராக அழைத்து வந்து கொடியேற்றினால் ₹500 பொதுகூட்டமென்றால் ₹1000 என சொல்லி துணைநின்று இளைஞரணிக்காக அன்பகம் பெற்று தந்ததில் அவர் காட்டிய ஆர்வம் இப்போதும் கண்முன் வருகிறது.. கலைஞர் அதிகம் நம்பியவர்களில் ஒருவர்.. எங்கு சறுக்கியதென்றே அறியாமல் வீழ்ந்து போனதும் கலைஞருக்கு எதிராக கூர் தீட்டியதும் நம் கோபமெல்லாம் அதிகரிக்க காரணமாகியது.. .. எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவயபடுதல் அரசியல் உகந்ததல்ல என சுயமறிய அவருக்கு 72 வயது தேவைபட்டிருக்கிறது.. திராவிட இயக்கம் குறிப்பாக திமுக ..யாராலும் ஒன்றும் செய்யமுடியாது.. காரணம் தேர்தல் அரசியல் என்பது எங்களுக்கு வழங்கபடுகிற வாய்ப்பு அதை பயன்படுத்தி இந்த சமூகத்திற்கு இனத்திற்கு மொழிக்கு எதையெல்லாம் செய்யமுடியுமோ அதை செய்யதானேயொழிய .. அரசு பதவியோ அதிகாரமோ இல்லாவிட்டாலும் இனத்திற்கான பயணம் தொய்வின்றி நடக்கும் .. மக்களுக்கான சேவையை அது செய்துகொண்டே இருக்கும் அதைவிட எம் பகைவர்களால் இனத்திற்கோ மொழிக்கோ எம்மக்களுக்கு கேடுவிளைக்குமெனில் தீட்டிய கூர்வாளைப்போல எதிரியிடமிருந்து காக்கும். .. அந்த இனத்திற்கு சில இன துரோகிகளால்.. அடிமைசாசனமெழுதி தொடைநடுங்கி நிற்கிறார்கள் சில இளைஞர்கள் அடிப்படை ஏதென்றே அறியாமல் பகைவரோடு கைகோர்த்து நிற்கிறார்கள்.. இந்நிலையில் தான் திராவிடத்தை காக்க என ஞானோதயம் பெற்று வருகிறார்.. ஆனால் காலம் அவரை கேலி செய்கிறது.. ஏனெனில் சிறந்ததொரு படைவீரனை தேர்வு செய்து இனம்காக்க #தளபதியாய் வழிநடத்த வருங்கால தலைவனாய் காலம் தீர்மானித்துவிட்டது.. ஆனாலும் வலிய வரும் கைகோர்ப்பை தட்டிவிட மனமில்லை ஆனால் தோளில் சுமக்கவும் தயாரில்லை என தளபதி சூசகமாய் சொல்லியிருக்கிறார்.. .. காலம் தந்த வாய்ப்பை அவசரகதியில் தூக்கியெறிந்தவர்கள் வலிமையிழந்து கேட்பாரற்று போவார்கள் என்பதை வைகோவின் நிலையும் அறிவிப்பு நமக்கு உணர்த்துகிறது.. இவரென்றில்லை .. வழி எதுவென்று அறியாது இனபகைவரின் சூழ்ச்சிக்கு இரையாகி தமிழ் தேசியமென உளறிவரும் சிறார்கள்.. பகைவர் நிழலில் நின்று கதைக்கிறார்கள்... பகைவர் சூது அறிந்தும் போது.. மொத்தமாய் இழந்து செய்வதறியாது போகும் நிலையில் வரும் போது புத்தி தெளியும் அப்போதும் இந்த திராவிட இயக்கம் தான் துணை நிற்கும்.. .. #திமுக_இனத்தில்_காவல்… .. Aalanci Spm

No comments:

Post a Comment