Sunday, December 24, 2017
இடைத்தேர்தல் எடை தேர்தலாகட்டும்
திமுகவின் வாக்குகள் எங்கே என்ற கேள்விக்கு பணம் சாப்பிட்டுவிட்டதென்ற துரைமுருகனின் கருத்தை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்..
திமுகவின் தோல்வி சரித்திரம் குறித்துகொண்டிருக்கிறது கட்டிவச்சை கூட ூெற முடியாத தோல்வி ஜீரணிக்க கஷ்டமாக இருப்பினும் இதில் பின்னில் உள்ள சகுனித்தனங்கள் விவாதிக்கபடவேண்டியவை..
ஒரு இடைத்தேர்தல் வெற்றிபெறுவோம் என்ற ஆணவத்தில் செயல்களில் விட்ட கோட்டை நம்மை பார்த்து சிரிக்கிறது.. ஜெயலலிதா இருந்த பெற்ற வாக்குகளைவிட மிக குறைவாக அதில் பகுதிகூட இல்லாமல் போனதின் பின்னில் உள்ள அரசியலை புரிந்துகொள்ள காலம் எடுக்கும்..
..
எங்கே தவறியதென்பதை அலசி ஆய்ந்திடவேண்டும்.. 1 2 4 என்ற கணக்கிலேயே பிசிறாமல் முன்னிலை வகிப்பதையும் நோக்கினால் அதன் பின்னுள்ள தகவல் தெரியும் .. பணம் பிரதானம் என்பதை மறுக்கமுடியாதென்றாலும் வாங்கியவர்கள் சரியாக பிரித்து வாக்குகளை தநிதிருக்கிறார்களா.. ஆரம்பம் முதலே இந்த ஆட்சியை அகற்ற தகுந்த நபர் யாரென்பதை தொகுதி மக்கள் உணர்ந்து வாக்களித்திருக்கிறார்களா .. திமுகவிற்கு எச்சரிக்கையை வழங்கி இனி இப்படிதான் தமிழகம் அதற்கு தகுந்தாற்ப்போல் மாற்றிக்கொள்ளுங்கள் என புரிய வைத்திருக்கிறார்களா..
எது எப்படியோ திமுகவின் தோல்வியில் நிச்சயமாக திமுகவினரின் பங்கு இருப்பதை மறைக்கவோ மறுக்கவோ முடியாது
..
திமுகவின் தோல்வியில் தெற்சீமைகாரர்களின் வாக்கு சற்குணத்தின் மருமகளுக்கு வந்ததென்பதையும் இந்தமுறை மாறியதும் ஒரு காரணம்.. ஆரம்பம் முதலே தினகரன் இந்த தேர்தல் ஆட்சிமாற்றத்திற்கான தேர்தல் என்றே பிரச்சாரம் செய்தார் அது ஒரளவு பலனை தந்திருக்கும் சில விலைபோகாதவர்களின் எண்ணத்தின் பிரதிபலிப்பாக இருக்கும் நண்பர் ஒருவர் இப்படி பதிவிட்டார் சிங்கப்பூரிலிருந்து நான் வாக்களிக்க வந்தேன் எப்போதும் வாக்குசாவடியில் திமுககாரர்கள் இருப்பார்கள் இந்தமுறை மிஸ்ஸிங் என்றார் இதற்கான விடையை தலைமைகழகம் தான் சொல்லவேண்டும்.. நிச்சயமாக திமுகவிற்கு வாக்களிப்பவர்களின் வாக்குகள் தினகரனுக்கு சென்றிருக்கிறதென்பதை மறுக்கமுடியாது.. இது செயல்தலைவர் 19டிசம்பர் அன்று மூன்றுமாதம்தான் இந்த ஆட்சியென்றார் அதை வழிமொழிந்ததைப்போல தினகரனும் என்னை வெற்றிபெற செய்தால் மூன்றுமாதத்தில் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவேன் என்றார் இருவரின் கருத்தும் ஒரே நேர்கோட்டில் பயணித்திருப்பதில் சில சூட்சமும் இருப்பதைதான் பாண்டே போன்றவர்கள் ராஜதந்திரம் என்கிறார்கள்..
எது எப்படியோ.. இந்த தோல்வியை உள்வாங்கி உண்மை நிலவரத்தை அறிந்து செயல்படாதவரை திமுகவிற்கு தோல்விதான் மிஞ்சும்..
..
தினகரனின் வெற்றி ஆட்சியை அகற்றும் என்ற குருட்டுநம்பிக்கை.
மாற வாய்ப்புகளே அதிகம்.. நடக்கலாம் அல்லது மத்தியில் ஆள்வோர் அணைத்துக்கொண்டு செயல்படலாம் ..இதெல்லாம் ராஜதந்திரமென்பது நமது இயலாமையை காட்டுகிறது..
பணம் பேசியது தேர்தல் ஆணையத்தின் தோல்வி என்றெல்லாம் சமாதானம் செய்யாமல் உள்ளபடியே களநிலமையை ஆய்ந்து .. சரியான தேர்வும் சரியான அணுகுமுறையும் வரும் காலங்களில் செய்யாவிடில் தோல்விகள் தொடர்கதையாகலாம் .. இதுதான் இந்த இடைத்தேர்தல் தரும் எசிசரிக்கை..
..
நிறைய கற்றுக்கொள்ள இந்த இடைத்தேர்தல் பயன்படட்டடும்..
தோல்வியின் பாடமே வெற்றியின் படி..
..
தினகரனுக்கு வாழ்த்துகள்..
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment