Saturday, December 23, 2017

ஆனந்தமைந்தோமென..ஆடுவோமே..

மனம் ஆனந்த கூத்தாடுகிறது.. ஆம்.. திராவிட இனத்தின் கூர்வாளாய் எம் இன பகைவர்களுடமிருந்து காத்துநின்ற திமுகழகத்தை வீழ்த்தவேண்டுமென்ற ஒன்றை குறிக்கோளாடு சாதூர்யமாய் திட்டம் தீட்டி எம்மை சிக்கவைத்தனர்.. கேள்விபடாத தொகை எண்ணில் எழுவதற்கு கூட சிவருக்கு தெரியாது.. மாய எண் சுதாரிப்பதற்குள் எம்மை சுற்றி வீழ்த்தியிருந்தார்கள்.. சொல்வதை கேட்க யாருமே செவிமடுக்க தயாரில்லை .. ஊடகம் காத்திருந்ததைப்போல தொடர்ந்து கூப்பாடு போட்டு பலூனை ஊதி ஊதி பெரிதாக்கியது.. கைது சிறை வழக்கு .. இதோடு முடிந்ததென்றார்கள்.. அவசரமாய் முடிவெடுக்கும் மக்களும் எம்மை அதிகாரத்திலிருந்து இறக்கினார்கள்.. எல்லா திசையிலும் அம்புகள்.. ஆனால் அப்போதும் சொன்னோம்.. அநீதி வீழும் அறம் வெல்லும்.. .. ஆண்டிமுத்து ராசா பஞ்சமன் நம்மை அதிகாரம் செலுத்துவதா பஞ்சமன் முன் கைகட்டி நிற்பதா என்ற ஒற்றை காரணத்திற்காக வழக்கை உலகமே கேள்விபடாத வகையில் பேசி திரிந்தனர்.. உச்சநீதிமன்றமும் ராசா வழங்கிய உரிமங்களை ரத்து செய்து தன் மேற்பார்வையில் ஏலம் விட்டது.. ராசா விற்றதை விட 1365 கோடிக்கு குறைவாக ஏலம் போனது..(ராசா 10772கோடி உ.நீதிமன்றம் 9407) அதாவது 1365 குறைவாக ஏலம் போனது அப்போதே ராசாவின் முடிவு சரியென்றானது .. மிக தெளிவாக ஒவ்வொரு முடிச்சையும் அவிழ்த்தார் ராசா.. பெரியாரின் பேரன் கலைஞரின் பிள்ளை .. சூழ்ச்சியாளர்கள் பின்னிய வலையை அவர்களை கொண்டே அவிழ்க்கவைத்தார்.. ஆரம்பம் முதலே குற்றம் செய்யவில்லை என்பதோடு நிறுத்தாமல் நான் செய்ததுதான் சரியென்று வாதிட்டார்..இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிற்காதென்றார் அதுதான் நடந்தது நீதியரசர் ஷைனி வதந்திகளை நம்பி வழக்கு பதிவுசெய்திருப்பதாக சொல்லி விடுதலை செய்தார்.. .. தலைவனை பார்க்க தொண்டர்கள் காத்திருப்பர்.. இங்கே தொண்டனை வரவேற்க செயல்தலைவர் காத்திருந்தார்.. எழாண்டு பழியை திமுகவை வேட்டையாடிய வீணர்களின் பழியை துடைத்து .. வானரபடைகளை வீழ்த்திய இந்திரஜித்தாய்.. வருகிறான் எம் தொண்டன் அவனை நானே வரவேற்பதுதான் முறையென்று வானூர்த்தி நிலையத்தில் காத்திருந்து பொன்னாடை போர்த்தி அகமகிழ்ந்தார்.. கட்டிபிடித்து நன்றியை .. இந்த இயக்கத்தின் மீது வந்த பழியை துடைத்தேன் என கண்களில் மகிழ்ச்சியோடு ஈரம் கசிய நிற்கிறார் ராசா.. அன்புதங்கையோ ஆரத்தழுவி கண்ணீர் மல்கி வெற்றியை தளபதியிடம் தருகிறார்.. இந்நிலையில் ஊடகங்கள் கலகம் செய்ய எண்ணி.. கழகத்தில் ஏதேனும் பதவியை எதிர்பார்க்கிறீர்களா என கேட்க.. இப்போது தந்திருக்கும் பதவியே மேலானது.. எக்காரணம் கொண்டும் மகளிர் அணி பதவி தரபோவதில்லை என்றார் கனிமொழி.. .. கேஸ் முடிச்சிடுப்பா ஜெயிட்டோம் என்ற போது அப்படியா என வாய்திறந்து கனிமொழியிடம் கேட்டார் கலைஞர் பெருமகன்.. பேராசிரியர் எங்கேயென இங்கேதான் இருங்காங்கப்பா என்ற போது பேரீசிரியரை கண்டு சிரித்த அந்த நொடி ..அப்பப்பா .. பேராசிரியர் மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்ட தருணம் .. வார்த்தைகளில் சொல்லிட முடியுமா என்ன.. காண்பவர் கண்களில் நீர் கசிகிறதே .. ஏன் இத்தனை ஆர்ப்பாட்டமென்கிறார்கள் ஏன் இப்படி கொண்டாட வேண்டும்.. எங்களின் வலி அப்படி .. பிரமாண்ட பொய்யை எங்களை சுற்றி எழுப்பி அசைய முடியாமல் வைத்திருந்ததால் .. எழும்பி வந்து ஆடுகிறோம்.. கொண்டாடுகிறோம் குற்றவாளியென்ற முத்திரையோடு வந்தவரை வரவேற்றவர்களை கண்டு பழக்கப்பட்ட கண்களுக்கு ஆனந்த களிப்பாட்டம் எரிச்சலை தந்திருக்கலாம்.. .. ஆனந்தமடைந்தோமென ஆடுவோமே.. .. Aalanci Spm

No comments:

Post a Comment