Friday, December 1, 2017
விதையை தேடுகிறார்கள்
பாஜக ..
ஆர்.கே.நகருக்காக ஆள்தேடி அலைகிறது..
தமிழகத்தில் பாஜகவிற்கு குறிப்பாக பாசிச பார்பன சக்திகளுக்கு ஏற்பட்டிருக்கிற அவலநிலைக்கு காரணம் பெரியார்.. ஒரு நாட்டையே ஆள்கிற கட்சி தமிழகத்தில் ஒரு தொகுதிக்கு ஆள்தேடும் அவலம் ஏன் ஏற்பட்டது இங்கே குறிப்பாக பிராமண இயக்கமாக கருதபடும் ஆர்எஸ்எஸின் நிழல் கூட எதிர்க்கிற நிலை வந்ததே .. இங்கே சாதீய கொடுமைகள் மதவெறி செயல்கள் மட்டுபடுத்தபட்டிருக்கிறதே.. இதற்கெல்லாம் மூலகாரணி.. எம் தந்தை #பெரியார்..
..
எந்தெந்த குறுக்கு வழிகளில் உண்டே அத்தனையிலும் புகுந்து தலை நீட்டும் போதெல்லாம் சட்டென்று தலையில் கொட்டி விசத்தை கக்கவிடாமல் பார்த்துக்கொண்டிருக்கிறது தமிழகம்.. சாதி உணர்வை தூண்டி பார்த்து முடியாமல் கடைசியில் மொழி வெறி தூண்டி .. கடைசியில் நேரடியாகவே ஆள துடிப்பதை கண்டு தமிழன் சிரிக்கிறான் ..
..
திராவிடர் கழகம்
இங்கே குறிப்பிட்டாக வேண்டும் சில தவறான முடிவுகளை சிலநேரம் எடுத்தாலும் அல்லது அப்படி நமக்கு தோன்றினாலும் கடைசியில் அது சரியென்று நமக்கு காலம் உணர்த்தியிருக்கிறது..
பெரியார் மறைந்து இத்தனை காலம் பின்னிட்டும் திராவிடர் கழகம் .. இந்த பாசிச வெறியர்களை தமிழ் மண்ணில் நுழையவிடாமல்
செய்துக்கொண்டிருக்கிறது அதன் காரணகர்த்தர் ஆசிரியருக்கு எம் நன்றி.. திராவிட கழகத்தின் தலைமை பொறுப்பை ஏற்று 35 ஆண்டுகளாக சமூகநீதிக்காக .. ஏற்றதாழ்வற்ற சமூகம் வேண்டுமென்பதற்காக பணியாற்றி.. எப்போதெல்லாம் மறைமுகமாக இடஒதுக்கீடு சமூக உரிமைகளில் தலையீடு வருகிறதோ அப்போதெல்லாம் போராளியை போல களம் கண்டு தடுத்து நிறுத்தும் மாவீரராய் நம் ஆசிரியர் .. அகவை 85 ல் அடியெடுத்து வைக்கிறார்.. வாழ்த்துகள்..
..
பாஜகவின் வளர்ச்சியை தடுக்கும் கேடயமாக திராவிட இயக்கத்தின் இரட்டைக்குழலின் ஒன்றாய் நம் ஆசிரியர் தொடர்ந்து பணியாற்றுகிறார்..
நிறைய கருத்தொற்றுமையும் சில வேற்றுமையும் உண்டெனினும் ஆசிரியரின் பணி அளப்பெரியது...
இன்றைக்கு பாஜக வேட்பாளருக்காக வலைவீசுகிறதென்றால் .. அதற்கு இங்கே திராவிட இயக்கத்தின் வேரூன்றல் எந்தளவிற்கென்பதை உணரமுடிகிறது.. எத்தனை வழிகளில் வந்துநின்றாலும் திருப்பி தாக்கும் வலிமையை இம் மண் பெற்றிருக்கிறதே அதற்கெல்லாம் தி.கழகம் மிகப்பெரிய காரணம்..
..
எம்ஜிஆர் காலம் தொட்டே மறைமுக அதிகாரத்தை செலுத்தியவர்கள் இப்போது அடிமைகளை கொண்டு அதிகாரத்தை நிரம்பும் போதும் கூட நேரடி விதைப்பை இங்கே செய்ய முடியவில்லை.. விதையே கிடைக்காத நிலை தான் .. இவர்கள்தான் நல்ல விளைச்சலை தரபோகிறார்களாம்..
கழகங்கள் இல்லாத தமிழகம் என்ற காவிகள்
கட்டிவச்ச காசையேனும் காப்பாற்ற ஆள் தேடுகிறார்கள் ..
..
#திராவிடம்
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment