Friday, December 22, 2017

தீர்ப்புக்கு பிறகு..

தீர்ப்பு எத்தனை பேரை பதறவைத்திருக்கிறது.. இதோடு முடிந்ததென்றவர்களுக்கு தெரியாது அநீதி வீழும் அறம்வெல்லும் என்று கலைஞர் கையெழுத்திட்டது.. உண்மையை மறைப்பது மண்ணுக்குள் விதையை புதைப்பதை போன்றது.. கிழித்து முளைத்து வெளிவருமென்று.. .. யாரெல்லாம் பதறுகிறார்கள் என பார்த்தால் புரியும் வக்கற்றவன் ..திமுகவின் வீழ்ச்சி சுகம் காணலாமென காத்திருந்தவன்.. இனத்தை அழிக்க வேரறுக்கமுடியாமல் மதிலாய் நிற்க திமுகவை ஒன்றுமில்லாமல் செய்ய துடிப்பவன்.. சமூகநீதிக்கெதிராவன்.. ஒடுக்கபட்டவரை மீண்டும் எழ விடாமல் அவர்மீது அமர்ந்திருப்பவன்.. மதம் சாதிவெறிப்பிடித்து அலைபவன்..இவர்களுக்கெல்லாம் திமுகவின் தோல்வி பயன்படும் அதனால் கதறுகிறார்கள்.. விஞ்ஞானபூர்வமாக குற்றம் நிகழ்த்திருக்கிறார்களென்கிறார்கள் விஞ்ஞானம் என்றாலே ஆய்ந்தறிந்து செயல்படுவதென்பது இதில் எப்படி தவறிழைக்கமுடியும்..என்கிற சிந்தனை அறியாமையில் உளலும் சாதியர்களை மூளைச்சலவை செய்பவர்களுக்கு தெரியாது.. சரியாக விசாரிக்கபடவில்லையாம்.. எழுவருடம் காத்திருந்தும் எந்த ஆதாரத்தையும் தரமுடியவில்லையென கூறிய நீதிபதி கற்பனையான வதந்திகளின் அடிப்படையில் அதிகாரிகள் அவசரகதியில் தயாரித்த குற்றபத்திரிக்கை என சாடியிருப்பதை மறந்து போகிறார்கள்.. .. பாஜக தீர்ப்பை இப்படிதான் விமர்சிப்பார்கள் அவர்களுக்கு மிகப்பெரிய பலனை தந்தது இந்த வழக்கு இன்றைக்கு பாஜக ஆட்சிக்கு வருவதற்கு பேருதவி புரிந்தது 2ஜி வழக்குதான்.. இந்த தீர்ப்பு குஜராத் தேர்தலுக்கு முன்பு வந்திருந்தால் நிலைமை வேறுமாதிரியாகியிருக்கும்.. இங்கே காம்ரேட்டுகளை குறிப்பிட்டாகவேண்டும்.. வழக்கு விசாரணையை தவறானதுபோல சித்தரிக்கமுயல்கிறார்கள் உச்சநீதிமன்றம் தவறாக வழங்கபட்ட உரிமங்களை ரத்து செய்ததிலிருந்தே ஊழல் நடந்திருப்பதாகதானே பொருள் என்கிறார்கள். முதலில் ஏன் உரிமங்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது என்பதை விளங்கிகொள்ளவில்லை.. உரிமங்களை பெற்றவர்கள் ..அலைவரிசை செயல்பாட்டை தொடங்காதது சிலர் பிற நிறுவனங்களுக்கு விற்றதும் ..சிலர் தங்களுக்கு முறையான ஆவணங்கள் வழங்க கால அவகாசம் வழங்கப்படவில்லை என்ற கோரிக்கையையும் கணக்கில் கொண்டு உரிமங்களை ரத்து செய்ததே தவிர அதில் ஊழல்நடந்ததென கூறி ரத்து செய்யவில்லை.. அதை விசாரிக்கதான் தனி விசாரணை நீதிமன்றம் அமைத்து உத்தரவிட்டது.. உரிமங்கள் பெற்றவர்களை கண்காணிப்பும் செயல்பாட்டை உறுதி செய்வது தொலைதொடர்பு அமைச்சகத்தின் பணி அல்ல அது ஒழுங்குமுறை ஆண்யத்தின் பணி (TRAI) இதில் ராசா தலையிட முடியாது .. இதுகுறித்து அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் பிரத்கேய பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார் இன்றைய பிரதமர் போல ஓடி ஒளியவில்லை.. அப்போது அவர் சொன்ன பதில்.. தனியார் நிறுவனங்கள் ஏன் வாங்கி பிறர்க்கு வீற்கிறீர்களென கேட்க முடியாது.. வியாபார நோக்கோடு மட்டுமே செயல்படும் சேவை நிறுவனங்கள் அவை.. எந்த அரசும் அவர்களை கட்டுபடுத்த முடியாது.. அரசு நிறுவனங்களாக இருந்தால் மட்டுமே கட்டுபாட்டுக்குள் வைக்கமுடியும் இந்த விதி தனியார் நிறுவனங்களுக்கு பொருந்ததாதென தெளிவாக பதில் சொன்னார். உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்திருக்கிறதா என்பதையும் விசாரித்த நிதிமன்றம் ..தவறுநடந்ததாக எங்கும் குறிப்பிடவிலலை ஏற்கனவே ராசா ABCDF.. வரிசையில் வழங்கபட்டதோடு என்து பணி முடிந்து விட்டது அவரிகள் பணத்தில் செலுத்துவதில் காலதாமதம் செய்திருந்தால் அந்த வரிசை மாறுமே தவிர.. அதற்காக B D C A .. என்று வருமே தவிர.. Z Y X W என்ற வரிசை வராதென தெளிவாக வாதத்தை எடுத்துவைத்திருக்கிறார் இதற்கு பிறகும் உரிமம் வழங்கியதை உச்தநீதிமன்றம் ரத்து செய்ததை வைத்து முறைகேடு நடத்ததாக மல்லும் கட்டும் காம்ரேட்கள்.. அதையும் சேர்த்துதான் விசாரணை நீதிமன்றம் விசாரித்தை மறந்து பேசிகிறார்கள்.. .. ஆரம்பத்தில் ஆக்ரோசமாக எதிர்த்துவிட்டோமே இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு வாழ்த்துவதென்று அவர்கள் நிலமையை புரிந்துக்கொள்ளமுடிகிறது.. காம்ரேட்டுகள் இப்போது காம்ரேட்களாக இல்லை கார்ப்பரேட்டுகளாக மாறி வெகுகாலமாகிவிட்டது.. .. கடைசியாக.. ஜெயலலிதா உயர்நீதிமன்றம் விடுவித்த சிலமணி நேரத்திற்குள்ளாகவே அதில் உள்ள தவறு சுட்டிக்காட்டபட்டதே.. 24 மணி நேரம் கடந்தும் இந்த வழக்கின் தீர்ப்பில் ஏதேனும் குறையை சொல்லமுடிந்ததா.. இதிலிருந்தே பாஜகவும் பார்பனர்களும் .. அவர்களின் அடிவருடிகளும் வயிறெரிவது தெரிகிறது.. .. #தண்ணீரை_குடியுங்கள்_தோழர்களே.. .. Aalanci Spm

No comments:

Post a Comment