Tuesday, December 5, 2017

அரசியல்பிழை ஜெ..

நினைவில்.. மறைந்த ஒருவர் எதற்காக நினைவுகூறபடுகிறார் என்பதில்தான் அவரது புகழ் அடங்கியிருக்கிறது.. எல்லோரும் ஏதோவொரு வகையில் நினைவுகூறபடவேண்டும்.. அது எதை குறிக்கிறது என்பதை வைத்துதான் வரலாறு அவரைப்பற்றி பதிவு செய்யும்.. ஒருவரின் அரசியல் வாழ்வை (பொதுவாழ்வு) தான் இந்த சமூகம் அவர் மீது கொண்டிருந்த அன்பை .. அல்லது வெறுப்பை சுட்டிகாட்டி அவர் ஆற்றிய பணிகள் நல்லவை கெடுதிகள் எதுவானாலும் வரலாற்றில் இடம் பெறும்.. இதில் பெண் ஆண் என்ற பாகுபாடில்லை.. .. நல்லவைகளை மட்டுமே பேசவேண்டுமெனில் வரலாற்றில் இட்லரும்,கோட்சேவும் ,இடிஅமீனும்.. இடம்பெற்றிருக்கமாட்டார்கள்.. நம் வீட்டில் இழவு விழுந்து விட்டதென்பதற்காக பக்கத்துவீடு எரிகிறபோது .. ஓடிசென்று அதை அணைக்கவேண்டுமே தவிர.. இல்லாமல் பிணத்தை கட்டிபிடித்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தால்.. சுடுகாட்டிற்கு எடுத்து செல்லாமல் வீடே சுடுகாடாகிவிடும்.. அந்த நிலைதான் இப்போது.. செய்யவேண்டியதை செய்யமறுத்தால் வரலாறு இப்படிதான் நம்மை எரித்துவிடும்.. .. ஜெ.ஜெயலலிதா.. ஒரு பெண் ஆளுமை .. இங்கே ஆளுமைக்கு ஆணவத்திற்கும் வேறுபாடு உணராமல் சிலர் கதைக்கிறார்கள்.. பொதுவாழ்வில் வருபவர்கள் தவறிழைப்பது .. அவரின் தவறான முடிவாலோ அல்லது தவறான வழிகாட்டுதலாலோ.. அல்லது தனக்கெல்லாம் தெரியுமென்ற மமதையாலோ ஏற்படலாம் ஆனால் அதை உணர்ந்து புதிய பாதையை வகுத்திருக்கவேண்டும்.. இந்திய பெண் ஆளுமையென இன்றைக்கும் பேசபடுகிற திருமதி இந்திரா பிரியதர்ஷினி... மிசா கால தவறை உணர்ந்தார்.. ஆம் அவசரகாலத்தில் அவர் ஆடிய திமிராட்டத்தை மக்கள் அவருக்கு தோல்வியை தந்து பரிசளித்தார்கள் .. மீண்டும் பகிரங்கமாக தவறை உணர்ந்து மக்களிடம் மன்னிப்பை கேட்டு..தேர்தலை சந்தித்தார் தவறுக்கு வருத்தியதை மக்களும் ஏற்றார்கள்.. ஆனால் ஜெயலலிதா டான்சி வழக்கில் தண்டிக்கபட்டபோது உச்சநீதிமன்றம் சொத்தை திருப்பி தருவதாக அதாவது முறைகேடாக வாங்கியதை ..தருவதாக சொல்லியதை ஏற்று விடுதலை செய்தது அப்போது மனசாட்சியோடு நடந்துக்கொள்ளுங்கள் என சொல்லியதை மறந்தார்.. இந்திய வரலாற்றிலேயே .. முதல்வராக நீதிமன்றம் சென்றவர் தண்டிக்கபட்ட குற்றவாளியானது ஜெயலலிதா மட்டும்தான்.. கொடியை இறக்கி.. பாதுகாப்பை விலக்கி தனியறையில் வைத்திருந்து சிறைக்கு அனுப்பினார் குன்ஹா.. இதெல்லாம் வரலாற்றில் தீராத களங்கத்தை ஏற்படுத்தியது யாரும் மறுக்கமுடியாது.. ஜெயலலிதா உயிரோடிருந்திருந்தால் சசிகலாவோடு சேர்ந்து சிறையில் கம்பங்களி திங்கவேண்டிவந்திருக்குமே.. .. ஒரு பெண் பொதுவாழ்விற்கு வருவதென்பது அதிலும் உயர்பதவிகளை அலங்கரிப்பதென்பது இன்றைய சூழலில் கூட .. ஆணாதிக்க அரசியலில் இயலாதென்பதால்.. ஜெயாவின் தவறுகளை பெரிதுபடுத்தாமல் இருந்தோம் ஆனாலும் எதற்கும் எல்லை உண்டென்பதை அறியாமல் போனார் இந்த பேதை.. அவரின் பலமென்பது அவரது இனமே தவிர திறமையல்ல.. காரணம்.. அடாவடி ஆணவம்.. திமிர் அடக்கியாளுதல் இவையாவும் திறமையல்ல.. தன் இளமைகாலங்களில் தனக்கேற்பட்ட துயரங்கள் ஏமாற்றங்கள் பாதிப்பு இவரை வெகுவாக அவரின் நடவடிக்கைகளில் காணபட்டது.. ஜெயலலிதா அரசியலென்பது கிழிந்த காதிகம் .. அதில் பயனில்லை இன்றைக்கு அவரின் ஆதரவாளர்களென அறியபடுகிறவர்கள்.. வரும்காலங்களில் ஒரு தேர்தல் தோல்வி போதும் இவரை வசைபாடுவார்கள்..இப்போது கட்டமைக்கபட்டிருக்க பிம்பங்கள் தகர்ந்துவிடும்.. அடிமைகள் கூடாரத்தை .. கொள்கையில்லா கோமாளிகளை.. ஆம் கட்சியை கட்டுபாட்டில் வைத்திருந்ததை தவிர வேறெதும் பிரமாதமாய் இல்லை.. .. நல்ல அரசியல் தலைமையின் கீழ் பயிற்சி பெறாததால்.. அவரால் நல்ல தலைவர்களையோ தொண்டர்களையோ உருவாக்க முடியவில்லை..தன் வாழ்நாளில் அடிமையைபோல நடத்தபட்டவர்..பின்னாளில் அடிமைகளை உருவாக்கியிருக்கிறார் அவ்வளவுதான்.. .. காலம் அரசியல் தவறாகவே இவரை கணக்கில் கொள்ளும்.. ஆம் அரசியல்பிழை.. .. #தீதும்நன்றும்_பிறர்தரவாரா.. .. Aalanci Spm

No comments:

Post a Comment