Thursday, December 14, 2017

முகவரி..

.. #முகவரி..சொல் என்றாய்.. .. எது முகவரி என்றேன்.. வாழுமிடமென்றார்.. நான் #வழிப்போக்கன்.. .. வந்தது தெரியும்.. வந்ததற்கான காரணமறியேன்.. வந்ததால்.. முகவரி...சரியென்றால்.. தெருவோரம் குப்பையில் கிடக்கும் மானிடனின்.. முகவரி என்ன.. யாருமறியா வேளையில்.. முளைத்த செடி .. மண்ணில் வெளிவந்தது யார் பாவம் .. படர ..முடியாமல்.. பரிதவித்து .. பிச்சை பாத்திரம்.. கையிலேந்தும்.. நிலையில் .. எங்கே.. யாரிடம் கேட்பது.. முகவரி... எது முகவரி.. எங்கு பிறந்தேன்.. எப்போது... எந்நிலையில்.. எல்லாம் சரி.. இதுதான்.. முகவரியெனில்.. ஏதுமில்லா .. மானிடனை... என்னவென்றழைப்பது.. முகவரியில்லாதவன்.. என்றா...அல்லது முகமே இல்லாதவரென்றா.. முகவரி.. இங்கே.. யாருக்குமில்லை.. வந்தாய்.. வந்ததால் முகவரியில்லை.. உன் வழிப்பயணத்தில்.. உன்... வாழ்வின் பயணத்தில் .. சிலநிமிடம்.. சில மணித்துளிகள்.. சில நாட்கள்.. கடந்து போக. முகவரியெதற்கு.. நிரந்தமானவனுக்கே.. முகவரி வேண்டும்.. நீ .. நிரந்தரமில்லாதவன்.. நிலையில்லாதவன்.. உன் வாழ்வு.. நீர்குமிழியை..போன்றது .. உனக்கெதற்கு முகவரி.. முகவரி... தெரியவேண்டுமெனில்.. உன் முகம் தெரியவேண்டும்.. முகம் தெரியவேண்டுமெனில்.. முதலில்..நீ... மானுடம் பழகு.. மனிதனை..நேசி பக்கத்தில் நிற்பவனை.. பரிவோடு..பார்.. பசியறி.. பாசம் பழகு.. இல்லாதவனுக்கு ஈகு .. முடிந்தவரை நாவடக்கு.. நல்லதை நினை.. உன்னை.. ஊரறியும்.. ஊரறிந்தால்.. நாடரறியும்.. நாடரறிந்தால்.. மக்கள் அறிவர்.. .. மக்களறிந்தால்.. உன் முகவரி.. உலகறியும்.. அந்த முகவரி.. நிலைத்திருக்கும். .. #முகவரி_தேடு .. நான் முகமே இல்லாதவன் எனக்கெதற்கு முகவரி.. .. Aalanci Spm

No comments:

Post a Comment