Tuesday, December 12, 2017
சாதி மத வெறியர்கள்...
சாதி..
இதன் கட்டமைப்பிற்குள் இருக்கும் குரோத அரசியலை நாம் அதிகம் யோசிப்பதில்லை.. இதன் பின்னில் நின்றாடும் பார்பனத்தின் துவேசத்தை நாம் அதிகம் கவனிப்பதில்லை.. சாதிய நிலைபாடே வேரறுக்கப்படவேண்டும் என்பதில் பெரியார் காட்டிய முனைப்பை அவரின் வழிதோன்றல்கள் சரியாக முன்னெடுக்காததும்... வாக்கு அரசியலுக்காக அதில் தூபம் போட்டதும் சாதிவெறியர்கள் சங்கங்களை கலைத்துவிட்டு நேரடி அரசியலில் ஈடுபட்டவர்களை ஆதரித்து வளர்த்துவிட்டதும்..இன்றைய அவலங்களுக்கு காரணம்.. இதில் திமுக உட்பட திராவிட கட்சிகளின் பங்கை நான் மறைக்கவோ மறுக்கவோ முயலவில்லை...
..
எங்கு தடுக்கிவிழுந்தது என்பதை நாம் கவனிக்க தவறியபோது .. ஆரியம் சரியாக காய் நகர்த்தி மக்கள் மனதில் ஆண்டபரம்பரை என்கிற விஷ எண்ணத்தை விதைத்தது.. அது அந்தந்த வட்டாரங்களில் தங்கள் சமூகமக்களை மூளைச்சலவைக்கு உட்படுத்தி ஒருவித போதையோடே இருக்க செய்தார்கள்..
தர்மபுரி இளவரசனாகட்டும் உடுமலைப்பேட்டை சங்கராகட்டும் ..வெளியில் வராத கௌரவம் பேசும் கொலைகள் நடந்துக்கொண்டிருக்கின்றன..
இந்த தீர்ப்பு .. சாதி பேசி திரியும் மருத்துவர் வகையறாக்களுக்கும்..அவரோடு சேர்ந்து சமுதாயமென்ற பெயரில் அராஜகம் செய்வோருக்கும் ஒருபடிப்பினை..
தந்தையென்றும் பாராது ஒரு கொலைக்கெதிராக .. அது பட்டபகலில் நடுரோட்டில் மரத்தை வெட்டி சாய்ப்பதைப்போல வெட்டி வீழ்த்தியவர்களுக்கு எதிராக உறுதியோடு போராடி இருக்கிறார்..
தன் தாயென்றும் பாராது அவரின் விடுதலை எதிர்ப்பேன் என்கிற மகளின் வேதனையை நம்மால் உணரமுடிகிறது..
..
தண்டனை கிடைத்த எட்டுபேரும் உணர்ச்சிவயப்பட்டு செய்துவிட்டோம் எங்களுக்கு குறைந்தபட்ச தண்டனையை தரவேண்டுமென்றது ..இவர்களின் சாதிவெறி என்பதெல்லாம் யாரோ சிலரின் தூண்டுதலால்.. சிலரின் பதவி அரிப்பிற்காக தூண்டிவிட்டு குளிர்காய்கிறார்கள் என்பது தெரிகிறது.. மீசையை முறுக்கி ..எப்படியும் தப்பித்துவிடலாமென்று நினைத்து சாதி சங்கமும் உறவின்முறையும் வருவார்களென நம்புகிறவர்களுக்கு இது ஒரு பாடம்.. சாதிவெறி மனித குலத்திற்கு எதிரானது என்பதை புரிய வேண்டும்
..
இந்த சூழலில் கூட மரணதண்டனைக்கு எதிராகதான் பேசவேண்டும்.. வாழ்நாள் வரை சிறையிலேயே இருக்கசெய்யலாம்.. மனித உயிரை எடுக்க நாம் யார்.. மரணதண்டனை நாகரீக சமூகத்தில் தேவையில்லாதது.. தண்டனை கடுமையாக வேண்டும் என்பதில் இருவேறு கருத்தில்லை.. ஆனாலும் தூக்கிற்கெதிராக இப்போதும் பேசுவோம்..
..
தூக்கிற்கெதிராக இருந்தாலும் இந்த காட்டுமிராண்டிகள் தண்டிக்கபட்டதில் மகிழ்ச்சி..
..
இதே போல் பாரூக்கை கழுத்தறுத்து கொன்ற மதவெறிகளுக்கு தண்டனை கிடைக்கவேண்டும்.. அப்போதுதான் மதத்தை சாதியை முன்னிறுத்துவோருக்கு அச்சம் வரும்.. மதத்தையும் சாதியையும் உங்கள் வீட்டிலேயே வைத்துக்கொள்ளுங்கள்..அதுதான் நல்லது..
..
#சாதிமதவெறியை_விரட்டுவோம்
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment