Saturday, December 30, 2017
உழைப்பவர் வாருங்கள்
பிழைக்க அழைக்கவில்லை உழைக்க அழைக்கிறேன் தளபதி.ஸ்டாலின்..
எனக்கு #பேரறிஞர்_அண்ணாவின்.. வீணர்களை அழைக்கவில்லை வீரர்களை அழைக்கிறேன் என்றதுதான் நியாபகம் வந்தது..
ஆம்..
உழைக்க அழைக்கிறேன்.. மிக முக்கியமான கட்டத்தில் சொல்லபட்ட வார்த்தை/ வாசகம்
நிறைய பேர் கட்சிக்காக உழைப்பதாக சொல்லி தங்களை வளப்படுத்திக்கொண்டு ..தங்கள் பகுதியில் தங்கள் அதிகாரத்தை மீறிய எதுவும் நடைபெறாதவாறு செயல்படுகிறார்கள்.. நிச்சயமாக பேரடுத்து சொன்னால் தனி புத்தகமாகவே போடலாம்.. புதிதாய் வருகிறவர்களுக்கு நிறைய இடைஞ்சலை தருகிறார்கள்.. நல்ல நிலையில் தங்கள் வட்டாரத்தை வைத்திருப்பவர்களுக்கு தலைமைக்கு அருகில் இருப்பவர்கள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி அங்கே நுழைய முயற்சிக்கிறார்கள் .. உதாரணத்திற்கு தஞ்சையை சொல்லலாம்..
..
மறைந்த கோ.சி.மணி ஒருங்கிணைந்த மாவட்டத்தை மிக சிறப்பாக வைத்திருந்தார்.. எல்லா கிளைகழகங்களும் அவரின் தொடர்பில் இருந்தது .. எல்லாவற்றிக்கும் தன் உத்தரவிற்காக காத்திருக்க தேவையில்லை ஒன்றிய ..கிளைகழகங்கள் சிலவற்றை தாங்களே முடிவெடுத்து செய்யலாமென்று அதேவேளை அது கட்சிக்கு சிறுதும் சங்கடத்தை தந்துவிட கூடாதென்பதில் உறுதியாக இருக்கவேண்டுமென்பார்.. அதுதான் சிறந்த நிர்வாகம் ஜனநாயகம்.. என்னை மீறி சென்றுவிடுவாயா பார்ப்போமென்பதல்ல..அதிகார குவியலை திறந்து சமன்படுத்தவேண்டும் அப்போதுதான் இயக்க செயல்பாட்டில் அனைவருக்குமான உரிமை வரும்.. இன்றைய தஞ்சையை பார்க்கிற போது உண்மையிலேயே மனது வலிக்கிறது.. மணி அண்ணனுக்கு பிறகு மிக அழகாக எடுத்து சென்ற பழநிமாணிக்கம்.. எங்கு சறுக்கியதென்று தெரியாமல் ஆணவபோக்கை கொண்டிருந்ததால் தஞ்சை திமுக மெல்ல கை நழுவியது உச்சகட்ட பூசல்கள்... பாலு வரவிற்கு பிறகு..பலன் வெற்றி பெறுமென்ற தொகுதிகள் கைவிட்டது...
இது ஒரு உதாரணம் தான்.. நிறைய மாவட்டங்களில் இதே போக்கு இருக்கிறது..
வீணர்களாய் போனவர்களை விடுத்து செயல் வீரர்களை இனங்கண்டு செயல்படவிடவேண்டும் அதிகளவில் இளைஞர்களை அதிகாரமையத்திற்குள் கொண்டுவரவேண்டும்..உழைக்கிறவனை உயர்த்திபிடிக்கவேண்டும் .. உழைக்கிறவனுக்கு பொறுப்புகள் வழங்கவேண்டும்
அந்த எண்ணத்தில் தான் தளபதி உழைக்கிறவர்கள் வாருங்கள் என்கிறார்..
வரவேற்போம்..
..
நிறைய மாற்றங்களுக்கான முன்னெடுப்பாக .. முன்னெச்சரிக்கையாக இதை பார்க்கிறேன்.. கசங்காத வேட்டியோடு கழகத்தை கரைசேர்க்கலாமென எண்ணுவோர்க்கும் .. அலட்சியபோக்கை கொண்டிருப்போர்க்கும்.. வெற்றி மட்டுமே வேண்டும் வேலைக்கு வேற ஆளை பார் என்போர்க்கும்.. இனி இங்கே இடமில்லை என்பதன் சூட்சமமே தளபதியின் வரிகள்..
மெல்ல சிதைவதை யாரோ எங்கிருந்தோ குழிபறிப்பதை .. வசப்படுமென்றிருந்தவைகள் கைவிட்டுபோக காரணிகளை களையெடுக்க இனியும் மன்னிப்போ வாய்ப்போ வழங்கி நிற்க தயாரில்லை என்பதின் சுருக்கம் உழைப்பவர் வாருங்கள்..என்பதே..
..
#கதிர்மணிமட்டும் வேண்டும்
களப்பணி எவனோ பார்க்கட்டும் எனக்
கவலையற்று இருப்போர்க்கு...
கழகம் ஒன்றும் சத்திரம் சாவடியல்ல
இஃதோர் சரித்திர புத்தகம்..
என்றகலைஞரின் வரிகளை நினைவுப்படுத்துகிறேன்..
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment