Saturday, December 2, 2017
தன்னிலை அறிதல் வேண்டும்
தன் தந்தை கருணாநிதி அதிகாரத்தால் பதவிக்கு வந்த ஸ்டாலின்.. தொண்டனாக இருந்து முதல்வரான என்னை விமர்சிக்க அருகதை இல்லை ..
எடப்பாடி பழநிசாமி..
..
திரு.ஸ்டாலினப்பற்றி விமர்சிப்பதற்கு முன் அவர் கடந்துவந்த பாதையைப்பற்றி அறிவை பிறரிடம் கேட்டோ அல்லது அதிகம் புத்தகம் படிக்கிற மாமேதையான பழநிசாமி படித்து தெரிந்தோ பேசியிருக்கலாம்.. கலைஞரால் அரசியலுக்கு வந்தாரென்பதைவிட இந்திராவால் அரசியலுக்கு வந்தார் என்பதே சரி.. படிப்படியாக உயர்ந்து இன்று திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறையை தலைமை தாங்க காலம் பணித்திருக்கிறது..
..
ஆனால் ..எடப்பாடி அவர்கள்.. தவழ்ந்து வந்து
சசிகலா காலை நக்கி முதல்வர் பதவி வாங்கியதை ஊரறியும்.. அன்றைய இக்கட்டான சூழலில் சசிகலா எடுத்த முடிவு தனக்கு சாதகமாகி முதல்வராகியது
அதற்கு கைமாறாய் வாய்ப்பு தந்தவருக்கே உலை வகைக்கிற கேடுக்கெட்டதனத்தை .. வந்த வழி மறந்து சம்பந்தமே இல்லாத பாஜகவிற்கு காவடி தூக்கி.. ஒட்டுமொத்தமாய் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி.. உட்சபட்ச
அடிமைத்தனத்தையும் மோடிக்கு காட்டி ( மோடியின் கையில் தலைகவிழ்ந்து) மானமிழந்து மரியாதையிழந்து .. விசுவாமில்லாமல்.. தன்பதவிக்காக எதையும் செய்ய துணியும் கோடாரி .. எங்களைப்பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது..
..
முதலில் யாரென்றே தெரியாத உங்களை ஜெயலலிதா வளர்த்துவிட்டதும்.. செங்கோட்டையின் சேட்டைகள் .. அவருக்கு வினையாய் போனதும் அந்த இடத்தில் கைகட்டிநின்றதால் பதவி கிட்டயதே தவிர திறமையாலோ அல்லது செய்த தொண்டாலோ அல்ல..மானமரபுகளை காக்கும் இனத்தில் பிறந்த கேடுகெட்டபிறவி.. தீட்டிய மரத்திலேயே கூர்பார்க்கும் ஈனச்செயலை செய்தவர்
யாரை விமர்சிப்பது என்று தெரிந்திருக்கவேண்டும்..
..
தளபதியை பார்த்து கலைஞரால் பதவிக்கு வந்ததாக சொல்வது வேடிக்கை.. திமுகவில் பகுதி செயல்வீரராக தொடங்கி இளைஞர் அணி .. சட்டமன்ற உறுப்பினர்.. அமைச்சர்.. துணை முதல்வர்.. கட்சி பொருளாளர்.. எதிர்க்கட்சி தலைவர்
என படிப்படியாய்.. வளர்ந்து கட்சியின் செயல்தலைவராய் .. மக்கள் மனதில் நம்பிக்கையூட்டும் எதிர்காலமாய் நிற்கிறார்.. நட்டதும் பூத்ததில்லை.. நெடுநாள் நீர்பாய்ச்சி.. வேலிகட்டி பாதுகாத்து.. வளர்ந்து பயன்தரும் மரமாய் நிற்கிறது வைரம் பாய்ந்த மரம்..
..
எடப்பாடி அவர்கள் தன்னை நிலைக்கண்ணாடியில் ஒருமுறை பார்த்துக்கொள்ளட்டும் அப்போது தெரியும் யாரென்று .. சசிகலா எடப்பாடிக்கு பதில் செங்கோட்டையனையோ, செல்லூரையோ
.. ஏன் தினகரனையோ.. அறிவித்திருந்தால் அவர்தான் முதல்வர்..
முதல்வர் பதவி யாரோ இட்ட பிச்சையென்பதை அறிதல் வேண்டும்.. தன் தகுதிக்கு மீறுயதென்பதையும் நினைவில் கொள்க..
..
#நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை...
என்ற வள்ளுவன் வாக்கை உணர்க..
நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.
..
#தன்னிலையறிதல்_நன்று..
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment