Monday, December 4, 2017

குமரி அழுகிறது..

குமரி அழுகிறது.. ஆள்வோர் குமரிக்கோட்ட கதாநாயகனுக்கு விழா எடுப்பதில் முனைப்பு காட்டுகிறார்கள்.. மத்திய அமைச்சரோ.. ஆயிரம் பேரெல்லாம் காணமல் போகவில்லை என்கிறார்.. ஒரு உயிரானாலும் அது உயிர்தானே.. செத்தவன் யார் நேக்கு வேண்டுவனில்லை என்பதால் எதத்தாளமாக பேசுகிறார் அவர் உடல்மொழி ஆணவம் அறிந்ததுதான் இது போன்ற பேரிடர் இழப்பிலேனும் கொஞ்சம் சங்கடபடுவதைபோல வேணும் நடித்திருக்கலாம்.. புயல் மழையால் அதிகம் பாதிக்காத தன் இன மக்கள் வாழும் #சுசீந்திரம் பகுதிக்கு மட்டும் சென்றார் மத்திய அமைச்சர் நிர்மலா புயல் பாதித்த பகுதிகளுக்கு .. குறிப்பாக அதிகம் பாதித்த கடற்புரத்திற்கு செல்லவில்லை .. குமரி மேற்கு பகுதிகளுக்கும் செல்லவில்லை.. .. உலகின் நான்காவது பெரிய தரைப் படை, ஏழாவது பெரிய கடல் படையையும் கொண்ட நாடு இது.. பேரிடர் மேலாண்மை நிபுணர் படை ஒன்றும் நம்மிடம் இருக்கிறது.. இக்கட்டான நேரத்தில் துரிதமாக செயல்பட்டிருக்க வேண்டாமா.. முன்கூட்டியே வானிலை அவதான மையம் ஏன் அறிவிக்கவில்லை.. ஒரு வாரத்திற்கு முன்பே சொல்லியிருந்தால் மீனவர்கள் கடலுக்கு போயிருக்க மாட்டார்களே .. இத்தனை உயிர்பலி ஆகியிருக்காதே.. என்னானார்களென்றே தெரியவில்லையே.. செத்தவனை விடுங்கய்யா உயிரோடு தவிக்கிறவனை காப்பாத்துங்கய்யா என்கிறாளே .. அவளின் வார்த்தை வலிக்கிறதே.. இதைவிட வேறெப்படி கூறமுடியும்... அரசின் அலட்சியத்தை கையைலாகாததனத்தை.. .. ஊருக்குள் நுழைந்த அமைச்சர்களை விரட்டுகிறார்கள் மக்கள்.. இவர்களால் ஒரு பலனுமில்லை..இருக்கிறவரை சுருட்டுகிற கெடுமதியாளர்கள் இவர்களால் எந்த விடயத்திலும் பயனில்லை.. அதனால்தான் இந்த வாய்சவடால் விடும் பொய்யர்களை விரட்டுகிறார்கள்.. மத்திய அரசையோ மாநில அரசையோ நம்புவதில்லை என்ற நிலைக்கு தள்ளபட்டிருக்கிறார்கள்.. வீடு இழந்து .. அடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் பள்ளிகூடங்களில் சமுதாய கூடங்களில் மக்கள்.. அவர்களின் இந்த நிலைக்கு செயல்படாத அரசும் மாற்றாந்தாய் மனபான்மையோடு செயல்படும் மத்திய அரசுமே காரணம். .. இந்த சூழலில் தளபதி பாதிக்கபட்டோரை சந்திக்கிறார்.. பெண்கள் அவரை கையை பற்றிக்கொண்டு அழுகிறார்கள்.. நம் கண்களில் நம்மையும் அறியாமல் நீர் விழுகிறது.. சொற்ப காசிற்கு ஆசைபட்டு சிலர் அதிமுகவைய அறியணை ஏற்றியதின் மிச்ச வேதனையையும் இப்போது அழுகையில் தெரிகிறது .. இந்த படம் நம்மை செவிட்டில் அறைவதை போல கேள்வி எழுப்புகிறது.. கண்ட கழிசடைகளை நம்பியதின் விளைவு மொத்த தமிழகமும் கண்ணீரில் .. கேவலமான அரசு.. கேட்பாரற்று மக்கள்.. எப்போது முடியும் இந்த நிலை.. மக்கள் இனியும் பொறுத்திருக்கவேண்டுமா.. இந்த பதவிவெறியில் அடிமைசாசனம் எழுதி தந்துவிட்டு வீழ்ந்து கிடக்கிறார்களே .. என்செய்ய..? .. குமரி மட்டுமா அழுகிறது.. .. Aalanci Spm

No comments:

Post a Comment