Thursday, December 7, 2017

ஆளுநர்.. தலையீடும் தளபதி தாக்கீதும்

ஆளுநர் ஆய்வுக்கு செல்லும் மாவட்டங்கள் அனைத்திலும் திமுக சார்பில் அறவழி ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டிய நிலை உருவாகும்.. என எச்சரிக்கை தளபதி.ஸ்டாலின் .. ஆளுநரின் வேலை என்னவோ அதைமட்டுமே செய்யவேண்டும் அரசியல் சாசனம் அவரின் தலைமையில் மாநில அரசு இயங்குமென சொன்னாலும்... நிர்வாக ரீதியாக செயல்பட அவருக்கு அனுமதி அளிக்கவில்லை மக்களால் தேர்ந்தெடுக்கபட்டவர்கள் மட்டுமே நிர்வாக ரீதியான செயல்பாடுகளில் தலையிட, வழிகாட்ட ,ஏன் உத்திரவிட முடியும் அதுதான் ஜனநாயகத்தின் சிறப்பு.. இந்திய அரசியல் அதிபர் ஆட்சி முறையில் இல்லை மாறாக மக்கள் பிரதித்துவ செயல்பாட்டில் இருக்கிறது ஒற்றை நபரை தேர்வு செய்து அவரின் நியமனங்களில் ஆட்சி நடத்த முடியாது உள்ளாட்சி தொடங்கி நாடாளுமன்றம் வரை .. மக்கள் பிரதிநிதிகள் கூட்டாக ஆட்சி செய்யும் முறை மட்டுமே உண்டு.. இங்கே மத்திய அரசின் தகவல் தருபவராக.. சட்டமன்ற நிகழ்வுகளை. கண்காணித்து அவர்களின் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குதல் மட்டுமே அவரின் பணி .. நேரடியாக ஆட்சி செலுத்து அதிகாரம் அவருக்கில்லை. அதனால் தான் பேரறிஞர் அண்ணா ஆட்டுக்கு தாடி தேவையில்லையென்றார்.. .. பிரதமரின் செயல்பாட்டில் மத்திய அரசின் செயல்பாடுகளில் எப்படி ஜனாதிபதி தலையிட முடியாதோ அதைப்போல இங்கும் தலையிடுவது ஜனநாயகத்தின் மீதுவிழும் அடி.. இந்த அடிமைகள் திறமையற்றவர்களாக பதவிக்காக எதையும் தின்பவர்களாக.. எதனால் அடித்தாலும் கூட பரவாயில்லை நாங்கள் மந்திரியாக இருந்தால் போதுமென நினைக்கிற செயல்படுகிற கேடுகெட்டவர்களால் நிர்வாகத்தை கவனிக்ககூட முடியவில்லை அதைவிட தெரியவில்லை.. இதனால் ஆளுநர் ஆய்வு செய்கிறாரென சிலர் சப்பைகட்டுகிறார்கள்.. நிர்வாக சீர்கேடென்றால் ஆட்சியை அப்புறபடுத்திவிட்டு தேர்தலை நடத்த பணிக்கவேண்டுமே தவிர அதிகாரத்தை கையிலெடுக்க கூடாது.. அமைச்சர் செல்லூர் ராஜூ சொல்வதைப்போல தாய் இல்லாத பிள்ளைகளை தலையில் தட்டுவதை போல ஆகிவிட்டது.. மானம் ரோசமற்று சுரணையில்லாதவர்களாக வலம் வரும் இவர்களால் தமிழகத்தின் மானம் சந்தி சிரிக்கிறது .. .. இதோ ..குமரிக்கு சென்ற ஆளுநரை விரட்டியடிக்கிறார்கள் மக்கள்.. குமரி மக்கள் தமிழக முதல்வரால் எதுவும் ஆகாதென அறிந்து கேரள முதல்வரிடம் கோரிக்கை வைக்கிறார்கள்.. இதெல்லாம் எவ்வளவு அசிங்கம்.. துணை முதல்வர் பதவிக்காக இந்த அரசை கவிழ்க்காமல் .. இந்த இழிநிலைக்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் தர்மயுத்த பன்னீர்.. ஜெயலலிதா இறந்த போதோ தேர்தலை நோக்கி தமிழகத்தை நகர்த்தி இருந்தால் இன்று குமரியில் மக்கள் பரிதவிப்பது குறைந்திருக்கும்.. ஆட்சியாளர்களையோ ஆளுநரையோ ஏன் மமதையோடு பேசிய மத்திய அமைச்சர் நிர்மலாவையோ குமரி மக்கள் நிராகரிக்கிறார்கள் இதுதான் ஒட்டுமொத்த தமிழகத்தின் நிலை .. செயல்படாத அரசை ஆளுநர் ஆய்வு செய்து செயல்படுவதாக சொல்வது ..ஜனநாயக வரம்புமீறல்.. அதனால் தான் திமுகவின் பிரதான முழக்கமான கவர்னர் தேவையில்லை என்பது.. தொடர்ந்து ஆய்வென்ற பெயரில் ஆளுநர் செயல்படுவாரே ஆனால் அறவழிப்போராட்டம் நடத்தபடுமென மக்கள் மனதில் முதல்வராய் வீற்றிருக்கும் தமிழகத்தின் ஒரே நம்பிக்கை தளபதி சொல்லியிருக்கிறார்.. .. இதுதான் தமிழக மக்களின் எண்ணம்.. .. Aalanci Spm

No comments:

Post a Comment