Thursday, December 21, 2017

அறம் வென்றது

#மகிழ்ச்சி.. 2ஜி வழக்கு திமுக இதோ காலி என்று நேற்றுவரை அதே சுரத்தோடு பாடி கொண்டிருந்தவர்களுக்கு தெரியாமல் போனது.. ஜெயலலிதாவைப்போல ஓடியொளிந்துக்கொள்ளவில்லை நீதிபதியை மாற்ற சொல்லி மனு போடவில்லை வழக்கறிஞர் இவர் கூடாதென கோரிக்கை வைக்கவில்லை ..கோழையைப்போல வாய்தா வாங்கி இழுத்தடிக்கவில்லை .. மாறாக வழக்கை நேர்மையாக சட்டத்தின் துணைக்கொண்டு.. விரைந்து முடிக்க வேண்டுமென்று விரும்பினோம்.. எந்த நிலையிலும் யாரிடமோ உதவுங்களென யாசிக்கவில்லை .. காரணம் நம்பிக்கை தவறேதும் செய்யவில்லை என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை.. .. இங்கே மற்றொன்றை குறிப்பிட வேண்டும்.. ஜெயலலிதா தண்டிக்கபட்டு ஜாமீனில் இருந்தபோது மத்திய நிதியமைச்சர் சந்திக்கிறார்.. சட்டத்துறை அமைச்சர் சந்திக்கிறார்.. குமாரசாமியை நியமிக்கிறார்கள்.. இதெல்லாம் வரம்பு மீறிய செயலென்றோ.. குற்றவாளியை கிரிமினலை அவர் இல்லம் சென்று சந்திப்பது பதவிக்கு அழகல்ல என்றோ எந்த ஊடகமும் ..நடுநிலை நக்கிகளும் சொல்லவில்லை.. ஆனால் கனிமொழி கைதுசெய்யபட்டு திகாரில் இருந்த போது கலைஞர் சென்று பார்த்துவிட்டு வருகிறார் .. நீங்கள் ஏன் சோனியாவை சந்திக்கவில்லை என்ற போது அவருக்கு தர்மசங்கடத்தை உருவாக்க விரும்பவில்லை வழக்கை சட்டபூர்வமாக சந்திப்போமென்றார்.. இப்போது சொல்லுங்கள் எது நேர்மை. .. 2ஜி வழக்கு பதியவேண்டுமென்று நாடாளுமன்றத்தை முடக்கி ராசாவை பதவி விலகும்வரை..ரகளையில் ஈடுபட்டு .. திமுக என்றாலே ஊழல்தான் என்ற பொய்பிம்பத்தை கட்டமைத்து அதன் பலனால்தான் இன்றைக்கு பாஜக ஆட்சியில் இருப்பதை யாராலும் மறுக்கமுடியாது.. இப்போது என்ன சொல்லபோகிறார்கள்.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டாமா.. .. இந்த வழக்கை ஒருகட்சிக்கெதிரான வழக்காகவோ ஊழலுக்கெதிரானதாகவோ காணமுடியும் இதில் பின்னில் உள்ள சூட்சமம் வலியது.. பஞ்சமன் உயர்பதவியிலா என்ற எரிச்சல் மட்டுமே காரணம்.. ஒருமுறை ராசாவே சொன்னார்.. அப்போதெல்லாம் பார்பனர்கள் தான் தபால் கொடுப்பார்கள்.. இடைசாதிக்காரன் தெருவில் அங்குவந்த கடிதங்கள் மொத்தமாக கட்டி போட்டுவிடுவார்.. சேரிகளுக்கு போகவே மாட்டார்கள் தூக்கியெறிந்துவிடுவார்கள்.... அந்த கடைசாதிகாரனை அந்த துறைக்கே அமைச்சராக்கி அழகுபார்த்தவர் கலைஞர் என்றார்.. ஆம் அதுதான் காரணம்.. ஆசிர்வாதம் ஆச்சாரி போன்றவர்கள் .. ராசாவின் கீழ் நாம் வேலைசெய்வதா என்ற கோவம் தான் வழக்கானதே தவிர..எந்த முகாந்திரமும் இல்லை .. .. எதிர்த்து குரல் கொடுத்தவர்களின் குரல் நடுங்குகிறது.. திமுககாரர்கள் புத்திசாலிகள் விஞ்ஞானபூர்வமா ஜெயிப்பாய்ங்க என தங்கள் இயலாமையை வெளிபடுத்துகிறார்கள். எழுவருடம் காத்திருந்தேன் ஒரு ஆதாரமாவது தருவார்களா என்று என்கிற நீதியரசர் ஷைனியின் பதில் ஒன்றே போதும் இவர்களுக்கு.. .. ஜெயிச்சு வரும்ணும்யா இல்லையென்றால் தலித்கள் யாரையும் உன் உயரத்திற்கு வர விடமாட்டானுங்கய்யா என்று ராசாவிடம் கலைஞர் சொன்ன வாசகம் .. எந்தளவிற்கு பார்பன சதி இதில் இருக்கிறதென்பதை உணர முடிகிறது.. #கலைஞர் மொழியில் சொல்வேணிடுமெனில் #அறம்_வென்றது.. .. Aalanci Spm

No comments:

Post a Comment