Friday, December 15, 2017

திமுக

₹.k.nagar.. ஒரு இடைத்தேர்தல் இவ்வளவு முக்கியத்துவம் பெறுவதென்பது இப்போதுதான் .. ஆட்சியாளர்களை எடைபோடும் தேர்தல் என்பது போய் .. வெற்றிபெற்றே ஆகவேண்டுமென்பதற்காக விலைபேசும் நிலை வந்தது வெட்கபடவேண்டிய செயல்.. வாக்கிற்கு பணம் தருவதென்பது அப்போதெல்லாம் பண்ணையார்கள் சில ரூபாய்களை தந்து வெற்றியை தக்கவைத்த காலமுண்டு.. காமராஜர் ஆட்சியில் அண்ணாவை தோற்கடிக்க பணம் விநியோகம் செய்ததெல்லாம் பெரிய தாக்கத்தை தரவில்லை அப்போது எளியவர்களை மட்டுமே குறிவைத்து பண விநியோகம் நடக்கும் .. அதிலும் சில #கொள்கைமறவர்களை விலைபேசமுடியாது .. ஆனால் இப்போது எல்லாநிலை மக்களையும் விலைபேசும் நிலை.. அதைவிட மக்களே எதிர்பார்க்கும் அவலம்.. இது எதை நோக்கி போகிறதென்பதும் ஆபத்தான பாதையை உருவாக்கும் என்பதை எப்போது மக்கள் உணரபோகிறார்கள் ? .. .. யார் வெற்றி பெற வேண்டும்.. தினகரன் வெற்றி பெற வேண்டுமென மக்கள் விரும்புவதாகவும் ..தினகரன் வெற்றிபெற்றால் ஆட்சி கலையும் திமுக வெற்றிப்பெற்றால் ஆட்சி கலையாது ..இப்போதையை தேவை ஆட்சியை அகற்ற வேண்டும் ஆதலால் தினகரனை ஆதரிக்க வேண்டுமென செய்திகள் உலவுகிறது.. ஆரம்பம் முதலே சிலர் தினகரனை தூக்கிபிடிப்பதற்கான காரணம்.. துரோகத்தால் வளைந்து நிற்கும் பன்னீர் பழநிசாமியை.. பதவி ஏற்கிறவரை கள்ளமௌனம் காத்து பதவி வந்தவுடன் மோடியின் கையை பிடித்து தலை கவிழ்ந்து நின்ற கேவல பிறவியை இருக்குமிடம் தெரியாமல் செய்யவேண்டுமென்ற கருத்திலோ.. பதவி இருக்கிறவரை புகழ்ப்பாடி விட்டு பதவியிலிருந்து தூக்கியெறிந்துவுடன் தரம்யுத்தம் செய்ய அயோக்கியரை விரட்டவேண்டுமென்பதற்காக தான் ..ஆனால் தினகரனை தூக்கி நிறுத்தினால்/ஆதரித்தால் அவரும் மோடியின் கால்களில் விழுந்து கிடக்கும் அரியகாட்சிகளை மக்கள் பார்க்க நேரிடும்.. அதோடு இன்னும் அங்கிருக்கிற 21 ஸிலிப்பர்கள் என்ன செய்கிறார்கள்.. அவர்கள் கடைசிவரை நித்திரை கலைய மாட்டார்கள் ..அதனால் தினகரனை துணைக்கவேண்டுமென்பது வீண்.. .. ஏன் அதிமுகவை எதிர்க்கவேண்டுமென்பதற்கு இவர்கள் ஆளும் லட்சணமும்.. இவர்களை மீறி யாராரோ அரசில் .. அதன் ஆட்சி அதிகாரத்தில் தலையிடுகிறார்கள்.. கவர்னர் நேரடி ஆய்வு என அதிகாரத்தை கையிலெடுத்து அதிமுகவின் ஆள்பவர்கள் கையாளாகாதவர்கள் என வெளிப்படையாகவே அறிவித்து செயல்படுவதை தடுப்பதும்.. மிக அவசியம் அதற்கு பிரதான எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் தங்கள் எதிர்ப்பை மிக கடுமையாக காட்டவேண்டும்.. அது .. அடுத்தகட்ட நகர்விற்கு வழிவகுக்கும்.. இந்த ஆட்சியை கலைத்து ..பொதுதேர்தலை நடத்த திமுகவின் வெற்றி பாதை வகுத்து தரும்.. இன்றைய காலகட்டத்தில் திமுகவை தவிர்த்து பிற அரசியல்கட்சிகளின் செயல்பாடு அவ்வளவு திருப்திகரமாகவோ அல்லது மக்களின் ஆதரவு பெற்றதாகவோ இல்லை .. .. திமுக தவிர்க்க முடியாத சக்தி.. இன்றைய தேவையும் கூட அதனை வாக்கை திமுகவிற்கே வழங்கி வெற்றிப்பெற செய்து அவசியம்.. பொறுத்திருப்போம்.. .. Aalanci Spm

No comments:

Post a Comment