Monday, December 11, 2017
மோடி நாடகம்
குஜராத்...
தேர்தல் வெற்றியையும் தோல்வியையும் நிதானமாக எதிர்கொள்ளவேண்டும் அழுகையும், பிதற்றலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டும்
பக்கத்து நாட்டின் ஊடுறுவல் என்பதெலெலாம் இந்த நாட்டின் பிரதமருக்கு இது அழகல்ல...
சிறுப்பிள்ளைத்தனம்..
..
குஜராத் மாடலென பிற மாநில தேர்தலில் கம்பு சுத்தியவர்கள் குஜராத் ஏன் அதை பேசவில்லை.. செய்திருக்கிற சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கவேண்டியதுதானே...
பாலாறும் தேனாறும்,ஓடுவதாக மற்ற மாநில தேர்தல்களில் பேசி திரியும் நடுநிலைகள் இவ்வளவு பதறுகிறாரே ஏன் என்று எழுதவோ பேசவோ மறுப்பதேன்..
குஜராத்தில் கல்வி எத்தனை விழுக்காடு மக்கள் பெற்றிருக்கிறார்கள்..எத்தனை கிராமங்கள் இன்னமும் மின்வசதி பெறவில்லை.. வணிக நகரங்களும் தலைநகரும் மட்டுமே ஒட்டுமொத்த மாநிலத்தை பிரதிபலிக்குமா.. 21 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த பாஜக .. எதை சொல்லி வாக்கு கேட்கவேண்டும் தாங்கள் குஜராத்தை முன்மாதிரியாக கொண்டு சென்றிருக்கிறோம் .. எனவே எங்களுக்கு வாக்களியுங்கள் என கேட்பதை விடுத்து..
என்னை கொல்ல சதி.. பாகிஸ்தானோடு சேர்ந்து சதிதிட்டம் தீட்டினார் மணிசங்கர் அய்யரென சொல்வது எவ்வளவு கீழ்த்தரமான அரசியல்.ய ஒட்டுமொத்த புலனாய்வு அமைப்பும் தன் கட்டுபாட்டில் வைத்திருப்பவர்.. ஏன் காங்கிரஸ் மீதோ அல்லது மணி அய்யர் மீதோ வழக்கு தொடரவில்லை.. குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் ஊடுறுவல் என்ற குற்றசாட்டிற்கு உங்கள் தேர்தல் சண்டையில் எங்களை வம்பிழுக்காதீரென அந்த நாடு சொல்கிறது எத்தனை கேவலம்..
எல்லாம் கைவிட்டு போகும் சூழல் வந்தவுடன் அகமது படேலை முதல்வராக்க காங்கிரஸ் முயற்சிக்கிறதென மதசாயம் பூசி... கடைசியில் மஜ்ஸித்தா மந்திரா.. கோவில் வேண்டுமா பள்ளிவாசல் வேண்டுமா என பிரதமரே அதுவும் பொதுவெளியில் சொல்வது வெட்கி தலைகுனிய வேண்டும்.. நான் ஏழை தாழ்த்தபட்டவன் அதனால் எதிர்க்கிறார்கள் என்கிற மோடி ஆளும் போதுதான் தாழ்த்தபட்டவர்கள் அம்மணமாக அடித்து துன்பறுத்துவது நிகழ்கிறது..
..
இந்தியா கண்ட பிரதமர்களில் இவ்வளவு மோசமான .. எதையும் தாங்க வலுவில்லாத தோல்வி வந்தால் அதை எதிர்கொள்ள பயந்து அழுது நிற்கிற பிரதமரை நாடு கண்டதில்லை..
மாநிலத்திற்கு நல்லது செய்திருந்தால் மக்கள் வாக்களிக்க போகிறார்கள் அதைவிடுத்து தோல்வி பயத்தில் ப்ளுதூத் வைத்து மாற்ற முயற்சிக்கும் செயல் ஒன்றே இவர்களின் தோல்வி பயத்தை காட்டியிருக்கிறது..
..
ஒரு பிரதமர் ஒரு மாநில தேர்தலுக்காக எல்லாவற்றையும் மறந்து தெரு தெருவாக அலைவது .. மிகப்பெரிய தோல்வி.. வெற்றி பெற்றே தீரவேண்டுமென்பதற்காக எந்தநிலைக்கும் போவேனென நினைக்கிறார்.. அது பிரதமர் பதவிக்கு அழகல்ல.. மூன்றாம் தர அரசியல்வாி்களை போல கண்கசக்கி .. சிம்பதியை உண்டாக்கி மக்களை சலவை செய்யாமென்ற உக்தி படுகேவலம்..
..
பிஜேபி-யினரே மோடியின் பொய்களை ரசிக்கவில்லை என்பதற்கு சத்ருகன் சின்ஹா எம்.பி..கருத்தே போதும்..
மதிப்பிற்குரிய ஐயா! தேர்தலில் எப்படியாவது வெற்றியை பெற்றுவிட வேண்டும், தேர்தல் அரசியலில் வெற்றிதான் இறுதியானது, அதற்காக ஆதாரமற்ற மற்றும் நம்பமுடியாத கதைகளை சொல்லவேண்டுமா..
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரம் மற்றும் குஜராத் வளர்ச்சி மாடலை வைத்து பிரசாரம் மேற்கொள்ளலாமே. ..
மதவாத அரசியலை நிறுத்திவிட்டு
ஆரோக்கியமான அரசியலுக்கு செல்லலாம்.
என்கிறார்.. எவ்வளவு நிதர்சனம்..
..
#மோடி_அரசியல்_பெரும்தலைகுனிவு..
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment